Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 'முட்டாள்தனமான அவசர சட்டம்'- ராகுல் விமர்சனத்தால் பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமா? டெல்லி: தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வகையிலான மத்திய அரசின் அவசர சட்டத்தை முட்டாள்தனமானது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளதால் பிரதமர் மன்மோகன்சிங் அதிர்ச்சியடைந்துள்ளார். இது தமக்கு ஏற்பட்ட அவமானம் என்று கருதுவதால் பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வகையிலான மத்திய அரசின் அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பாரதிய ஜனதா கட்சி மட்டுமின்றி ஆளும் காங்கிரஸிலும் எதிர்ப்பு எழுந்தது. அதுவும் காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்…

  2. மண்ணில் புதையுண்டவர்களை கண்டறியும் ரேடார் தொழில்நுட்பம் மண்ணில் புதையுண்டு போகும் மக்களை ரேடார் தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியலாம் என நாசா மையத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளியில் தூரத்தில் உள்ள பொருட்களை சிறிய ரேடார் சாதனத்தின் மூலம் நாசா விஞ்ஞானிகள் தெரிந்து கொள்கின்றனர். இந்நிலையில் இதே நுட்பத்தை பயன்படுத்தி எதிர்பாராத விதமாக மண்ணில் புதையுண்டு போகும் நபர்களை கண்டறியலாம் என தெரிவித்துள்ளனர். இந்தக் கருவியின் புதிய மாதிரியானது அமெரிக்காவின் உள்துறை பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து செயல்படும் விண்வெளி மைய நிறுவனத்தின் நிபுணர்களிடம் பரிசோதித்துக் காட்டப்பட்டது. பேரழிவு மற்றும் அவசரகாலங்களில் தனி …

  3. போபாலில் நடைபெற்ற பாரதிய ஜனதா ஜனதாவின் பொது கூட்டத்தில் மூத்த தலைவர் அத்வானி காலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடிய அந்த கூட்டத்தில் மோடி அத்வானியின் காலில் விழுந்தார். பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அத்வானி, கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு அதிருப்தி கடிதத்தை அனுப்பினர். கடந்த 15ந் தேதி நடைபெற்ற ராம்ஜெத் மாலனி பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற மோடியும், அத்வானியும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளாமல் சென்றனர். இதனால் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆர்.…

  4. மகளின் காதல் விவகாரத்திற்கு பயந்து தாய் தந்தையர் வீட்டை விட்டு ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டுரோட்டை சேர்ந்தவர் துரைசாமி. இவது மகள் கவிதா. இவரும் கொக்காரப்பட்டியை சேர்ந்த பிரகாஷ் என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். காதலைக் கைவிடுமாறு வலியுறுத்தினர். ஆனால் கவிதா தனது காதலைக் கைவிட மறுத்து விட்டார். அதோடு நீங்கள் எவ்வளவு எதிர்த்தாலும் பிரகாஷைத்தான் மணப்பேன். அதை யாரும் தடுக்க முடியாது என்றும் பிடிவாதமாக கூறியுள்ளார். இதனால் கடந்த 19ம் திகதி குலதெய்வம் கோவிலுக்குப் போவதாக கூறி விட்டு மனைவி விஜயாவுடன் வெள…

  5. ஹைதராபாத் இணைப்பு: அத்துமீறல்கள் குறித்து வெளிவராத அறிக்கை கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 செப்டம்பர், 2013 - 16:10 ஜிஎம்டி ஹைதரபாத் கலவரங்கள் -- வெளிவராத அறிக்கை இந்தியா 1947 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட போது, இடம்பெற்ற வகுப்பு கலவரங்களில் சுமார் ஐந்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இது பெரும்பாலும் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் நடந்தது. ஆனால் அதற்கு ஒராண்டுக்கு பிறகு தென் இந்தியாவின் ஹைதராபாத் பகுதியில் இதே போன்று ஏற்பட்ட கலவரங்களும் படுகொலைகளும் வெளி உலகுக்கு தெரியாமல் இன்று வரை ரகசியமாகவே உள்ளது. இது நடந்தது 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில். படுகொலைகள் அந்தக் காலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் தென் இந்தியப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டனர்…

  6. திருச்சி: குஜராத் மற்றும் தமிழக மீனவர்களை பாகிஸ்தானும் இலங்கையும் கைது செய்ய பலவீனமான மத்திய அரசுதான் காரணம் என்று பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் இன்று நடைபெற்றை இளந்தாமரை மாநாட்டில் பங்கேற்ற நரேந்திர மோடி தொடக்கத்தில் சில நிமிடங்கள் தமிழில் பேசினார். தமிழ் மண்ணே வணக்கம்! பெரியோர்களே! தாய்மார்களே! வாலிப சிங்கங்களே அனைவருக்கும் வணக்கம்! தமிழ்நாடு பெருமை உடைய நாடு. கம்பன், வள்ளுவர் பிறந்த பூமி. திருச்சி தமிழ்நாட்டின் மத்தியில் இருக்கும் மாவட்டம். மலைக்கோட்டையும் காவிரியும் கலந்து இருக்கும் மாவட்டம். சோழர்களின் தலைநகரம் உறையூர் இருக்கும் திருச்சி. இந்த நகரில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் வணக்கம் என்…

  7. போபால்: காங்கிரஸை கலைக்க வேண்டும் என்று மகாத்மா காந்தியின் கனவை லோக்சபா தேர்தலில் நிறைவேற்றுவோம் என்று பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியதாவது: மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றும் வகையில் காங்கிரஸ் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிப்போம். நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவான அலையே வீசுகிறது. நிச்சயம் மத்தியில் ஆட்சி அமைப்போம்.அனைத்து கருத்து கணிப்புகளுமே பாஜக முதல்வர்களான ரமண்சிங், சிவ்ராஜ்சிங் செளகானைப் பாராட்டியே வெளியாகின்றன.மத்திய பிரதேசத்தில் 10 ஆண்டுகால அதிகாரப் பசியில் காங்கிரஸ் அலைகிறது.. அதனாலேயே மத்திய பிரதேச அரசின் வளர்…

  8. காஷ்மீரில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அதிகரித்து வரும் பதற்ற நிலையும், தாக்குதல்களும் எல்லையின் இரு புறத்திலும் கண்ணீரை அதிகரித்திருக்கிறது. எல்லைக் கோட்டால் பிரிந்திருக்கும் ஒரு குடும்பம் இரு நாடுகளின் பிரதமர்களும், ஐநா பொதுச்சபை சந்திப்பின் போது நேரடியாக சந்தித்துப் பேசவுள்ளார்கள். அதிகரித்து வரும் பதற்ற நிலை குறித்து அவர்கள் பேசக்கூடும். ஆனால், கடந்த பத்து வருடமாக இருக்கும் மோதல் நிறுத்தத்தை மீறி, இந்த வருடத்தில் அதிகரித்திருக்கும் ஷெல் தாக்குதல்களும் பதற்றமும், அங்கு எல்லையில் இருபுறமாகப் பிரிந்து கிடக்கும் உறவுகளின் சோகத்தை அதிகரிக்கச் செய்துள்ளன. அண்ணன் ஒரு புறம் தங்கை எல்லையின் மறுபுறம், கணவர் ஒருபுறம், மனைவி மறுபுறம் என்று பல கிராம மக்கள் எல்லைக் கோட்டால்…

  9. நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் 5 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டம் வரும் 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ள இன்று முற்பகல் புறப்பட்டுச் சென்றார். நாளை மறுநாள் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவர் சந்திக்கிறார்.ஒபாமாவும் மன்மோகன்சிங்கும் மேற்கொள்ளும் 3வது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது,இரு தலைவர்களும் ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்டவை குறித்து குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.ஆப்கானிஸ்தானில் அடுத்த ஆண்டு அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்ளப்படுவது குறித்தும் இருவரும் விவாதிக்க இருப்ப…

  10. போபால்: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் பணவீக்க விகிதமும் ஊழலும் அதிகரித்துவிட்டது என்று பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் சாடியுள்ளார். போபாலில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் ராஜ்நாத் பேசுகையில், நாட்டின் பிரதமராக நரேந்திர மோடியை உருவாக்க பாரதிய ஜனதா தொண்டர்கள் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். பாரதிய ஜனதா தொண்டர்களின் கடுமையான உழைப்பு மட்டும்தான் நரேந்திர மோடியை நாட்டின் பிரதமராக்கும். மத்திய பிரதேசத்தில் நல்லாட்சியை நடத்தி வருகிறார் முதல்வர் சிவ்ராஜ்சிங் செளகான். கனவில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் காங்கிரஸ் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் நாட்டில…

  11. போபால்: மாநிலத்தில் நல்லாட்சி வழங்குவதைப் போல மத்தியில் நல்லாட்சியை பாரதிய ஜனதா வழங்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார். மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்ற பாரதிய ஜனதா கூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மூத்த தலைவர் அத்வானி, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் செளகான், உமாபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து அவரை பிரதமர் வேட்பாளராக அத்வானி அறிமுகப்படுத்தினார். அப்போது கூட்டம் மோடியின் பெயரை உச்சரித்து ஆர்ப்பரித்தது. பின்னர் மோடி, அத்வானி காலை தொட்டு ஆசி பெற்றார். இதைத் தொடர்ந்து பேசிய அத்வானி, இதுதான் உண்மையான மகா கும்பமேளா.. இந்த உலகி…

  12. முகம்மது நபியின் தாயின் பெயர் தெரியாததால் இந்தியரை கென்யாவில் உள்ள வெஸ்ட்கேட் மாலில் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட்கேட் ஷாப்பிங் மாலுக்குள் கடந்த சனிக்கிழமை புகுந்த அல் ஷபாப் தீவிரவாதிகள் கண்மூடித் தனமாக சுட்டதில் 2 இந்தியர்கள் உள்பட 68 பேர் பலியாகினர்.இந்நிலையில் இந்த தாக்குதலில் உயிர் பிழைத்த கிறிஸ்தவரான ஜோஷ்வா ஹகீம் கூறுகையில்,ஒரு இந்தியரை தீவிரவாதிகள் அழைத்தனர். அவரிடம் முகம்மது நபியின் தாயாரின் பெயர் என்ன என்று கேட்டனர். அவருக்கு பதில் தெரியாததால் அவரை சுட்டுக் கொன்றனர். தீவிரவாதிகள் ஸ்வஹீலி மொழியில் பேசினர். அவர்கள் முஸ்லிம்களை அடையாளம் கண்டு வெளியேறுமாறு கூறினர். என்னை அழைத்த போது என் ஐ.டி. கார்டில் இருந்த ஜ…

  13. உலகின் மிகப்பெரும் சதுப்புநிலக் காடுகளான சுந்தரவனக்காடுகளுக்கு அருகில் நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஒரு ஆலை அமைக்கப்படுவதற்கு எதிராக ஐந்து நாள் போராட்டம் ஒன்றினை நூற்றுக்கணக்கான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வங்கதேசத்தில் தொடங்கியுள்ளனர். சுந்தரவனக்காடுகளில் அனல் மின் நிலையத்திட்டத்துக்கு எதிராக நெடும்பயணம் இது தொடர்பில் தலைநகர் டாக்காவில் ஒரு பேரணியை நடத்திய அவர்கள் அதன் பின்னர், நாட்டின் தென்மேற்குப் பகுதியிலுள்ள சுந்தரவனக்காடுகளை நோக்கிய தமது நெடிய பயணத்தை தொடங்கினர். சுந்தரவனப் பகுதி யுனெஸ்கோ அமைப்பால், உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட ஒரு இடமாகும். அங்கு அமைக்கப்படவுள்ள அந்த அனல் மின் நிலையம், அந்தப் பகுதியில் சுற்றுச் சூழலை பாதிக்கும் என்று அவ…

  14. ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பினரைத் தனிமைப்படுத்தும் முயற்சியொன்றில் , சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் குழு ஒன்று, தற்கொலை குண்டுத்தாக்குதல்களுக்கெதிராக கருத்துத் தெரிவித்துள்ளது. 'தற்கொலைத் தாக்குதல்கள் இஸ்லாத்தால் அனுமதிக்கப்பட்டவை அல்ல' ஆப்கான் தலைநகர் காபூலில் நடந்த மாநாடொன்றில் பேசிய இந்த அமைப்பினர், தற்கொலைத் தாக்குதல்கள் இஸ்லாத்தால் தடை செய்யப்பட்டுள்ளன என்று கூறினர். ஆப்கானிய அரசு தாலிபான் கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை மூலமான உடன்பாடொன்றை எட்ட முயன்று கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் அரசு இது போன்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கெதிராக மத ஆணை ( பாத்வா) ஒன்றைப் பிரகடனம் செய்ய எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. http://www.bbc.co.uk/tamil/global/2013/09/1…

  15. இந்தியா 1947 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட போது, இடம்பெற்ற வகுப்பு கலவரங்களில் சுமார் ஐந்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இது பெரும்பாலும் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் நடந்தது. ஹைதரபாத் கலவரங்கள் -- வெளிவராத அறிக்கை ஆனால் அதற்கு ஒராண்டுக்கு பிறகு தென் இந்தியாவின் ஹைதராபாத் பகுதியில் இதே போன்று ஏற்பட்ட கலவரங்களும் படுகொலைகளும் வெளி உலகுக்கு தெரியாமல் இன்று வரை ரகசியமாகவே உள்ளது. இது நடந்தது 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில். படுகொலைகள் அந்தக் காலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் தென் இந்தியப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டனர். சிலர் இந்திய இராணுவத்தினரால் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும் அப்போது அரசால் அமைக்கப்பட்ட ஒரு விசாரணை…

  16. சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூர் கிளையின் ஏற்பாட்டில் 22-09-2013 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை "சட்டமும் நீங்களும்" இலவச கருத்தரங்கு சிங்கப்பூர் வில்கி சாலையில் அமைந்துள்ள கப்லன் உயர்கல்வி நிலையத்தில் நடைபெற்றது. சிங்கப்பூர் கலைப்பித்தர்கள் கழகத்தின் தலைவரும் வழக்கறிஞருமான நாவரசர் திரு ஆர். கலாமோகன் இக்கருத்தரங்கை நடத்தினார். முதலாளி தொழிலாளி உறவு, வர்த்தக முறைகள், சாலை விபத்து, வேலையிட விபத்து, கடன் விதிமுறைகள், உத்தரவாதக் கையெழுத்து உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை விளக்கினார். கேள்வி பதில் அங்கமும் இடம் பெற்றது. சங்கத்தின் செயலாளர் அப்துல் சுபஹான், வழக்கறிஞர் திரு கலாமோகனுக்கு பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார்.…

  17. மும்பை: மகாத்மா காந்திஜி வழியையே பாரதீய ஜனதா கட்சியும் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவரான சுப்ரமணிய சுவாமி. சமீபத்தில், நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களுக்கு கட்டணம் விதிக்கும் முறையை பா.ஜனதா நடைமுறைப்படுத்தியது. அது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அக்கட்சியின் தலைவரான சுப்ரமணிய சுவாமி, அதனை காந்தீய வழி என நியாயப்படுத்தி கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும், அது குறித்து கூறுகையில், ‘இதில் என்ன தவறு இருக்கிறது? மக்கள் கட்டணம் செலுத்தி பங்கேற்க தயாராக இருக்கிறார்கள். யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. மகாத்மா காந்தியே இந்த முறையை தான் பின்பற்றினார். அவர் கையெழுத்திடுவதிற்கு ரூ.5 கட்டணம் விதித்தார். காங்கிரஸ் கட…

  18. அவுஸ்திரேலிய கடற்பரப்புக்கு வரும் சட்டவிரோத அகதிப்படகுகள் தொடர்பிலான தகவல்கள் இனிமேல் வழங்கப்போவதில்லை என்று அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வரும் சட்டவிரோத அகதிகளை திருப்பியனுப்புவது உட்பட்ட நடவடிக்கைகளை அவுஸ்திரேலியாவின் விசேட படையினர் மேற்கொண்டு வருகின்றனர் இந்தநிலையில் அகதிகளை திருப்பியனுப்புவது உட்பட்ட விடயங்களை மனித உரிமை காப்பு அமைப்புக்கள் விமர்சனம் செய்து வருவதால் படகு அகதிகள் தொடர்பான தகவல்களை உடனடியாக வழங்குவதை தவிர்க்கவுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத படகுகளை தடுப்பது அவுஸ்திரேலிய மக்களின் நலன்களை கருத்திற்கொண்டாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்எனவே தேவையேற்படும் போது மாத்திர…

  19. கேப்டவுண்: தென்பிராந்திய நாடுகளின் வளர்ச்சிக்கு உதவியதற்காக தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நுரையீரல் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 95 வயதான தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா. மருத்துவமனையில் இருந்து சமீபத்தில் வீடு திரும்பிய நெல்சன் மண்டேலா தற்போதுஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அவரது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் உலகின் தென் பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கு உதவியதற்காக நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. நேற்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த விருது வழங்கும் விழாவில் …

  20. புதுச்சேரி: புதுச்சேரியில் கட்சிகளின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பா.ம.க.வினருக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. புதுச்சேரி அடுத்து பண்டசோழநல்லூரில் பா.ம.க. சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதனை சமூக விரோதிகள் இன்று காலை கிழித்து விட்டனர். இதனால் கொதிப்படைந்த பா.ம.க.வினர் திரண்டு கரியமாணிக்கம்- பண்டசோழநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட வைத்தனர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்லும் போது அந்த பகுதியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் வை…

  21. 30 மாடிக்கட்டிடம் கட்ட எத்தனை நாள் ஆகும் என உங்களிடம் கேட்டால் குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் என்று தானே சொல்வீர்கள். இல்லையில்லை, பதினைந்தே நாளில் கட்டி முடித்து விடலாம் எனச் சொன்னால் நம்புவீர்களா..? அதெப்படிச் சாத்தியம் என்று தானே கூறுவீர்கள். ஆனால், அதையும் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள் சீனக் கட்டிடத் தொழிலாளர்கள். வழக்கமாக இவ்வளவு பெரிய கட்டிடம் கட்டுவதென்றால் அஸ்திவாரம் தோண்டவே பல மாதங்கள் ஆகும். ஆனால், பதினைந்தே நாளில் முழுக் கட்டிடத்தையும் கட்டி நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துப் போயிருக்கிறார்கள் சீனர்கள். ஹூனான் புரோவின்ஸ் என்ற கட்டுமான நிறுவனம் தான் இந்த 30 மாடிக் கட்டிடத்தை 15 நாளில் கட்டிக் கொடுத்துள்ளாது. மொத்தம் 200 தொழிலாளர்கள் இந்தக் கட்டிடப் பணியில…

  22. ஜம்மு காஷ்மீர் மாநில அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங், பணம் கொடுக்கப்பட்டது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அது ஆட்சியைக் கவிழ்க்க கொடுக்கப்படவில்லை. மாறாக சமூக நலத்திற்காக கொடுக்கப்பட்ட பணம் என்றும் அவர் விளக்கியுள்ளார். ராணுவத்தின் ரகசிய நிதியிலிருந்து இது கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். தவறான நோக்கத்திற்கு இது பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். சமூக நலத் திட்டங்களுக்காக மட்டுமே இந்த நிதியிலிருந்து பணம் செலவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியின் டெல்லி கூட்டம் ஒன்றில் நான் கலந்து கொண்டதால் என் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தப் பிரச்சினை கிளப்ப்பட்டுள்ள…

  23. டெல்லி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் அதிர்வுகள் உணரப்பட்டது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளது. பலுசிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மாலை 5.05 மணிக்கு டெல்லியில் அதிர்வுகள் ஏற்பட்டது. இதனால் டெல்லியில் உள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இந்த அதிர்வால் மக்கள் பீதி அடைந்தனர். மேலும் பலுசிஸ்தானில் பொருட் சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. மிகப் பெரிய நிலநடுக்கமாக இருப்பதால் பெருமளவில் சேதம் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நிலத்துக்கடியில் 22 கி.மீ. ஆழத்தில் இந்தநிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது…

  24. மும்பை: மும்பையில் 40 வயது விதவைப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஒன்பது பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள நான்கு குற்றவாளிகளைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மராட்டிய மாநிலம் சதாராவை சேர்ந்த 40 வயது விதவைப் பெண் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு பிழைப்பு தேடி தனது 2 குழந்தைகளுடன் மும்பை வந்தார். மும்பையில், காகிதம், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்தார் அப்பெண். அப்போது, அப்பெண்ணிற்கு முலுண்டு அமர்நகரை சேர்ந்த டெம்போ டிரைவர் ஒருவருடன் ஏற்பட்ட அறிமுகத்தைத் தொடர்ந்து, அப்பெண் தன் இரு குழந்தைகளுடன் தினமும் இரவில் அவரது டெம்போவிலேயே உறங்கி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முந்தினம் வழக்கம்போல டெம்போவில் குழந்தைகளுடன் தூங்கிக்கொ…

  25. சுவிட்சர்லாந்தில் இத்தாலி மொழி பேசும் திசினோ மாநிலத்தில் பெண்கள் முகத்தை மூடி புர்கா அணிவதற்கு தடை விதிக்கப்பட உள்ளது. இதற்கென அம்மாநிலத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் புர்கா அணிவதற்கு தடைவிதிக்க வேண்டும் என 65 வீத மக்கள் வாக்களித்துள்ளனர். இதற்கு முஸ்லீம் அமைப்புக்களும் சர்வதேச மன்னிப்பு சபையும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குற்றத்தை புரிவோரும் புர்கா அணிந்து சென்று குற்றங்களை புரியலாம் என்றும் பொது இடங்களில் புர்கா அணிய தடைவிதிக்க வேண்டும் என்றும் அம்மாநில மக்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே பிரான்ஸ் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் புர்கா அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது சுவிட்சர்லாந்தின் 26 மாநிலங்களில் ஒன்றான திசினோ மாநிலம் புர்கா அணிவதற்கான தடை சட்டத்தை கொண்டுவர உள்ளது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.