உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26857 topics in this forum
-
10 மணி நேர ரயில் பயணம் – உக்ரைன் , போலந்து செல்லும் மோடி இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுப் பயணமாக இன்று காலை டெல்லியில் இருந்து போலந்துக்கு விஜயம் செய்துள்ளார். சுமார் 45 வருடங்களுக்கு முன் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் போலந்து சென்றிருந்தார். அதன்பின் போலந்து செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார். போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு உக்ரைன செல்ல இருக்கிறார். உக்ரைனுக்கு சுமார் 10 மணி ரெயில் பயணம் மூலமாக போலந்தில் இருந்து செல்லவிருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் பிரதமர் மற்றும் அதிபரை சந்தித்து பேசும் மோடி, வர்சாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து உரையாடவுள்ளார். போலந்து- இந்தியா தூதரக உறவின் 70 ஆண்டுகள் ந…
-
-
- 2 replies
- 408 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சௌதி அரேபியாவின் முதல் மன்னர் குறைந்தது 42 மகன்களுக்கு தந்தையாக இருந்தார். இளவரசர் முகமது பின் சல்மானின் தந்தை சல்மானும் அதில் ஒருவர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனாதன் ரக்மேன் பதவி, ஒளிபரப்பாளர், எழுத்தாளர் 20 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது 21 ஆகஸ்ட் 2024 ஜனவரி 2015, சௌதி அரேபியாவின் 90 வயதான மன்னர் அப்துல்லா மருத்துவமனையில் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருந்தார். அவரது ஒன்றுவிட்ட சகோதரர் சல்மான், மன்னராகப் போகிறார். சல்மானுக்கு மிகவும் நெருக்கமான மகன், முகமது பின் சல்மான், அதிகாரத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார். இளவரசர் முகமது பின் சல்மான் '…
-
-
- 4 replies
- 475 views
- 1 follower
-
-
19 AUG, 2024 | 05:53 PM இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட சூறாவளியில் பிரித்தானியக் கொடியை ஏந்தி பயணித்த 180 அடி உயரமுடைய சொகுசு படகு ஒன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த படகில் பிரித்தானியா, நியூசிலாந்து, அமெரிக்கா , இலங்கை, அயர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 22 பேர் பயணித்துள்ளனர். இந்த விபத்தின் போது, படகில் பயணித்த நான்கு பிரித்தானியர்கள் மற்றும் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட ஏழு பேர் காணாமல் போயுள்ளனர். படகிலிருந்த பயணிகளைக் காப்பாற்றும் பணிகளில் கடலோர பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் இணைந்து செயற்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/191474
-
- 4 replies
- 607 views
- 1 follower
-
-
காசா போர் நிறுத்த முயற்சியில் முன்னேற்றம் இன்றி அமெரிக்கா திரும்புகிறார் பிளிங்கன் -இஸ்ரேலின் தாக்குதல்களில் மேலும் பல பலஸ்தீனர்கள் பலி sachinthaAugust 22, 2024 காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு தவறிய நிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் நேற்று (21) பிராந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். பரந்த அளவிலான போர் ஒன்றை தவிர்ப்பதற்கான கடைசி வாய்ப்பாக இது உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார். எனினும் காசாவில் இஸ்ரேல் நேற்றும் உக்கிர தாக்குதல்களை நடத்தியதோடு கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் முற்றுகையில் இருக்கும் அந்தப் பகுதியில் மேலும் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் முன்வைக்கப்பட்டி…
-
- 0 replies
- 505 views
-
-
Published By: DIGITAL DESK 3 22 AUG, 2024 | 10:21 AM போஸ்னியா நாட்டின் மேற்கே சன்ஸ்கி மோஸ்ட் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் பணியாளர் ஒருவர் புதன்கிழமை (21) துப்பாக்கி சூடு நடத்தியதில் பாடசாலை அதிபர், செயலாளர் மற்றும் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை உயிரிழந்தனர். துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் தன்னை தானே சுட்டுக் கொண்டுள்ளார். நெஞ்சில் காயம் பட்ட அவரை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். பாடசாலையில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் யாரும் பாடசாலைக்கு வரவில்லை. எனினும், பரீட்சை எழுதுவதற்காக சில மாணவர்கள் வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸ் திணைக்கள ப…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 21 AUG, 2024 | 03:30 PM பிரேசிலில் அமேசான் காட்டுப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதால் ரொண்டோனியா மாநிலத்திலுள்ள போர்டோ வெல்ஹோவில் சூரிய வெளிச்சத்தை கூட காணமுடியாத அளவிற்கு அடர்த்தியான புகை சூழ்ந்துள்ளது. இந்நிலையில், புகை சூழ்ந்துள்ளமையினால் 460,000 பேர் வசிக்கும் பொலிவியாவின் எல்லைக்கு அருகிலுள்ள நகரத்திலுள்ள 30 வயதுடைய ஆசிரியர் தயானே மோரேஸ், "நாங்கள் சுவாசிக்க சிரமப்படுகிறோம்" என்று கூறியுள்ளார். போர்டோ வெல்ஹோவில் செவ்வாய்க்கிழமை (20) பிஎம்2.5 எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் நுண்துகள்களின் செறிவு ஒரு கன மீட்டர் காற்றில் 56.5 மைக்ரோகிராம்களாக அதிகரித்துள்ளது. உலக சுகாதார ஸ்…
-
- 0 replies
- 418 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புதிய தொழில்நுட்பங்களின் வருகை ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் ஓர் உத்வேகத்தை அளிக்கும். கட்டுரை தகவல் எழுதியவர், ஓலெக் கார்பியாக் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொழிலாளர் சந்தை முன்னெப்போதையும்விட வேகமாக மாறி வருகிறது. இப்போது நடைமுறையில் இருக்கும் பல வேலைகள் நாளை இல்லாமல் போகலாம். உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) சமீபத்திய ஆய்வுப்படி, தொழிலாளர் சந்தையில் இரண்டு முக்கியக் காரணிகள் மாற்றங்களுக்கு வழிவகுக்கின்றன. புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பசுமைப் பொருளாதாரம் ம…
-
- 0 replies
- 387 views
- 1 follower
-
-
ஒரு நாட்டின் தலைநகரமே கடலில் மூழ்கும் பேரழிவு இந்தோனேசியா அதன் தலைநகரான ஜகார்த்தாவை கைவிட்டு, போர்னியாவை (Borneo) தலைநகராக்கும் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வருகிறது ஜாவா கடலில் ஜகார்த்தா மூழ்கும் அச்சுறுத்தல் இருப்பதாலும் அடிக்கடி இடம்பெறும் நிலநடுக்கங்கள் காரணமாகவும் தலைநகரை மாற்றும் பணிகளை இந்தோனேசியா ஆரம்பித்துள்ளது. இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ( Joko Widodo), நெரிசல், காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஜகார்த்தாவிற்கு நிலநடுக்கம் மற்றும் கடலில் மூழ்கும் அபாயங்களும் காத்திருப்பதால், விரைவில் தலைநகர் என்ற அந்தஸ்திலிருந்து ஜகார்த்தா ஓய்வுபெறும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியா 2022ஆம் ஆ…
-
-
- 4 replies
- 701 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், ஜரோஸ்லாவ் லுகிவ் & சோபியா ஃபெரீரா சாண்டோஸ் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேன் படைகள் ரஷ்ய எல்லைக்கு புகுந்து தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முதல்முறையாக அதனை ஒப்புக்கொண்டுள்ளார். "ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் (Kursk) பகுதிக்குள் தனது ராணுவம் எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தி வருகிறது” என்று அவர் கூறியுள்ளார். சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) மாலை வெளியிட்ட வீடியோவில், யுக்ரேனிய ராணுவம் ஆக்கிரமிப்பாளரின் நிலத்தில் மோதலை முன்னெடுத்து வருவதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். யுக்ரேன் செவ்வாயன்று …
-
-
- 144 replies
- 9.4k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இதுவரை இரு தரப்புக்கும் இடையே ஒரே ஒரு உடன்படிக்கை மட்டும் எட்டப்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், டாம் பேட்மேன், ஜேம்ஸ் கிரிகோரி பதவி, பிபிசி நியூஸ் 19 ஆகஸ்ட் 2024 “காஸாவில், போர்நிறுத்தம் கொண்டுவருவதற்கும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தத்திற்கும் இதுவே சிறந்த, ஒருவேளை கடைசி வாய்ப்பாக கூட இருக்கலாம்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார். அக்டோபர் மாதம் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் பகுதிக்கு ஒன்பதாவது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார் பிளிங்கன். திங்களன்று இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக் உடனான சந்திப்பின் போது, பிளிங்கன் தன…
-
- 0 replies
- 317 views
- 1 follower
-
-
தீவிரமடைந்து வரும் மக்கள் போராட்டம்: வெனிசுலாவில் பதற்றம். வெனிசுலாவில் கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் நிக்கலோஸ் மதுரோ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வெனிசுலா தலைநகரில் அதிகளவான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது. வெனிசுலாவில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் சர்ச்சைக்குரிய வெற்றிக்கு எதிராக வெனிசுலா முழுவதும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மக்களுடன் இணைந்து போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களுடன் இணைந்…
-
- 2 replies
- 362 views
-
-
பட மூலாதாரம்,ALEX KRAUS/BLOOMBERG கட்டுரை தகவல் எழுதியவர், ஜெசிகா பார்க்கர் பதவி, பிபிசி பெர்லின் நிருபர் 44 நிமிடங்களுக்கு முன்னர் ராணுவத் தளங்களைச் சுற்றியுள்ள வேலிகளில் மர்ம துளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியின் முன்னணி ஆயுத உற்பத்தியாளரை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் கண்டறியப்பட்டுள்ளது. உயர்மட்ட `லுஃப்ட்வாஃப்’ அமைப்பின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுகிறது. இவை 1960களின் உளவு நாவலில் இருந்து எடுக்கப்பட்ட கதைக்களங்கள் அல்ல, இந்த ஆண்டு ஜெர்மனியில் நடக்கும் நிஜ சம்பவங்கள். இந்த நிகழ்வுகள் அனைத்துக்கும் ரஷ்யா மீது திட்டவட்டமாக குற்றம் சாட்ட முடியாது. ஆனா…
-
-
- 6 replies
- 796 views
- 1 follower
-
-
காசாவில் (Gaza) போலியோவை ஏற்படுத்தும் வைரஸ் இருப்பது கண்டறிப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யுனிசெஃப் (UNICEF) நிறுவனத்துடன் இணைந்து கழிவுநீர் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் இது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், கழிவுநீரில் வைரஸ் இருப்பதும், குடிநீரின் பற்றாக்குறையும் சேர்ந்து ஆயிரக்கணக்கானோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதல் இதன்படி, இஸ்ரேலின் (Israel) தாக்குதலை நிறுத்தவும், கழிவுநீர் அமைப்பை சீர் செய்யவும், இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தஞ்சம் அடைந்துள்ள நிரம்பிய முகாம்களுக்கு குடிநீரை வழங்கவும் இஸ்ரேலுக்கு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. …
-
- 1 reply
- 371 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், பில் மெக்கவுஸ்லேண்ட் பதவி, பிபிசி நிருபர், அமெரிக்கா மற்றும் கனடா 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு சில நாட்களே உள்ள நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், சாதகமான கருத்து கணிப்பு முடிவுகள் மற்றும் உற்சாகமான பேரணிகளால் நேர்மறையான சூழலில் இயங்கி வருகிறார். சாதகமான சூழல் ஒருபுறம் இருந்தாலும் இந்த ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் முன்புள்ள முக்கியப் பிரச்னைகள் என்னென்ன? இதுவரை, அவர் தன் நிலைப்பாட்டை பற்றிய ஒரு விரிவான தளத்தை வெளியிடவில்லை என்றாலும், கலிபோர்னியா செனட்டர் மற்றும் வழக்கறிஞராக அவர் இருந்த காலகட்டம், 2020ஆம் ஆண்டு அதிபர் பதவிக்கான அவ…
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
14 AUG, 2024 | 11:42 PM (நா.தனுஜா) புலம்பெயர் தமிழர்களால் கனடாவின் பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி இலங்கையிலும், கனேடியவாழ் இலங்கையர்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனவும், ஆகவே இம்முயற்சிக்கு உதவவேண்டாம் எனவும் பிரம்டன் நகர கவுன்சில் மேயர் பற்ரிக் பிரவுனிடம் இலங்கை கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பிரம்டன் நகர கவுன்சில் மேயர் பற்ரிக் பிரவுனுக்கு கனடாவின் டொரன்டோ நகரிலுள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்தின் கொன்சியூலர் நாயகம் துஷார ரொட்ரிகோ கடந்த மேமாதம் அனுப்பிவைத்துள்…
-
- 1 reply
- 210 views
- 1 follower
-
-
உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் இலங்கை இராணுவத்தினர் 05 பேர் கைது! ரஷ்யப் போருக்குச் சென்ற ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினர் 05 பேர் உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் உக்ரைன் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தலை துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்ய எல்லை வழியாக உக்ரைனுக்குள் நுழைந்த போது உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதேவேளை உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 5 இலங்கையர்களை விடுவிக்க தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1396119
-
- 3 replies
- 626 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,US AIR FORCE கட்டுரை தகவல் எழுதியவர், சோஃபி ஹர்டாக் பதவி, 2 மணி நேரங்களுக்கு முன்னர் 'வளிமண்டல நதிகள்' அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. அவை மேலும் வலுவடைந்து வருகின்றன. அடுத்து எவ்விடத்தைத் தாக்கும் என்று கணிக்க விஞ்ஞானிகள் வானத்தில் அவற்றைத் துரத்தி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம், ஆன்னா வில்சன் 'கல்ஃப்ஸ்ட்ரீம் IV ஜெட்' விமானத்தில் அமர்ந்து, வடக்கு பசிபிக் பெருங்கடலின் மேல் இருந்த வெள்ளை மேகங்களின் அமைதியான தோற்றத்தைக் கண்டார். வளிமண்டல விஞ்ஞானி மற்றும் தீவிர வானிலை நிபுணரான வில்சன் தனது ஹெட்ஃபோன்கள் மூலம் அவரது சக ஊழியர் `கவுண்டவுன்` எண்ணுவதைக் கேட்டார்…
-
-
- 3 replies
- 827 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,UKRAINIAN PRESIDENCY/HANDOUT படக்குறிப்பு, ஜபோரிஷியா அணு மின் நிலையத்தில் குளிரூட்டும் கோபுரம் ஒன்றில் இருந்து கரும்புகை வெளிவரும் காட்சி கட்டுரை தகவல் எழுதியவர், சோபியா ஃபெரீரா சாண்டோஸ் பதவி, பிபிசி செய்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேனில் உள்ள ஜபோரிஷியா அணு மின் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட தீ விபத்து குறித்து ரஷ்யா மற்றும் யுக்ரைன் ஆகிய இரு நாடுகளும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டியுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யப் படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள இந்த அணுமின் நிலையத்தில் அந்தப் படைகளே தீ வைத்து கொளுத்தியதாக யுக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி கூறினார். ஆனால…
-
- 3 replies
- 713 views
- 2 followers
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஆரிஃப் ஷமீம் பதவி, பிபிசி உருது மற்றும் பிபிசி பெர்ஷிய மொழிச் சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல்-இரான் இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய கிழக்குக் பகுதி கொந்தளிப்பாகவே உள்ளது. மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பெரிய மோதல் பற்றிய அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் இரான், இரண்டு நாடுகளில், எந்த நாட்டின் ராணுவம் பலம் மிக்கது என்ற கேள்வி எழுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானின் முக்கிய ராணுவ பலம், அதன் ஏவுகணைகள் இஸ்ரேல், இரான் - யார் கை ஓங்கியிருக்கிறது? ப…
-
- 1 reply
- 446 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை நம்பியுள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், டாம் பேட்மேன் பதவி, வெளியுறவு விவகாரங்கள் செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் யுக்ரேன் ஊடுருவி வரும் நிலையில், சீம் ஆற்றின் மீதுள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாலத்தை தற்போது அழித்துள்ளது. கிளஷ்கோவோ நகருக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கை, உள்ளூர் மாவட்டத்தின் ஒரு பகுதியைத் துண்டித்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனது துருப்புகளுக்கான விநியோகச் சங்கிலியாக இந்தப் பாலத்தை ரஷ்யா பயன்படுத்தி…
-
- 2 replies
- 597 views
- 1 follower
-
-
ரஷ்யாவில் (Russia) உக்ரைனின் (UKraine) ஊடுருவலானது, மூன்றாம் உலகப் போர் நெருங்கியுள்ளதை சுட்டிக்காட்டுவதாக ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) கூட்டாளியுமான மிகைல் ஷெரெமெட் (Mikhail Sheremet) தெரிவித்துள்ளார். அண்மையில் ரஷ்யாவிற்குள் உக்ரைன் இராணுவம் ஊடுருவியது. அவசர நிலை உக்ரைனிய படைகளின் இந்த ஊடுருவல் காரணமாக கிட்டத்தட்ட 120000 இற்கும் மேற்பட்ட மக்கள் குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன் குறித்த பகுதியில் அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், குர்ஸ்க் (Kursk) பிராந்தியத்தில் உள்ள சுட்ஜா (Sudzha) நகரை உக்ரைன் படைகள் ஆக்கிரமித்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், உக்ரைனின் இந்த…
-
-
- 7 replies
- 904 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 31 ஜூலை 2024 சர்வதேச அரசியலில் எப்போதுமே பதற்றமான பிராந்தியமான மத்திய கிழக்கில் அண்மைய நிகழ்வுகள் நிலைமை மேலும் மோசமாக்கியுள்ளன. ஒருபக்கம் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயின் ஹனியே, இரான் தலைநகர் டெஹ்ரானில் அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றொரு பக்கம் லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் ஹெஸ்பொலா தளபதியை வான்வழி தாக்குதல் மூலம் இஸ்ரேல் கொலை செய்துள்ளது. ஹெஸ்பொலா தளபதி கொல்லப்பட்டதை இஸ்ரேல் அறிவித்த சில மணி நேரத்தில் ஹமாஸ் தலைவர் கொலை செய்யப்பட்ட தகவல் வெளியானது. காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் மாதக்கணக்கில் நீளும் நிலையில் இந்த நிகழ்வுகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை மேலும் பதற்றத்தில் தள்ளியுள்ளன…
-
-
- 20 replies
- 1.3k views
- 1 follower
-
-
Taliban Parade: அமெரிக்கா முன்னாள் Airbase-ல் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகளானதை கொண்டாடும் விதமாக தாலிபன்கள் புதன் கிழமை ராணுவ அணிவகுப்பு நடத்தினர்.
-
-
- 26 replies
- 1.6k views
- 2 followers
-
-
16 AUG, 2024 | 02:24 PM தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சின்வட்டிராவின் மகள் பேடொங்டர்ன் சின்வட்டிரா அந்த நாட்டின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 37 வயதான இவர் தாய்லாந்தின் இளம் பிரதமர் என்பதுடன் இரண்டாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதமரை அரசமைப்பு நீதிமன்றம் பதவி நீக்கம் செய்துள்ளதை தொடர்ந்தே இவர் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் பியுதாய் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்சி 2023 தேர்தலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள போதிலும் ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து அரசாங்கத்தை அமைத்துள்ளது. தாய்லாந்தின் ஸ்தம்பித நிலையில் உள்ள பொருளா…
-
-
- 7 replies
- 605 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 17 AUG, 2024 | 09:48 AM சூடானில் போரால் பாதிக்கப்பட்ட தென்கிழக்கில் உள்ள ஒரு கிராமத்தில் துணை இராணுவப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னார் மாநிலத்தில் உள்ள ஜல்கினி கிராமத்தின் மீதே வியாழக்கிழமை காலை தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த கிராமம் போரினால் பாதிக்கப்பட்டு 16 மாதங்கள் கடந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் போர் நிறுத்தப் பேச்சுக்கள் இடம்பெற்று வருகிறது. சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இராணுவத்துடன் போரிட்டு வரும் துணை இராணுவ படை சென்னார் மாநிலத் தலைநகரான சின்ஜாவை ஜூன் மாதம் கைப்பற்றியது.…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-