Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பட மூலாதாரம்,SHUTTERSTOCK கட்டுரை தகவல் எழுதியவர், மெர்லின் தாமஸ் மற்றும் லார எல் கிபாலி பதவி, பிபிசி வெரிஃபை மற்றும் பிபிசி ஐ புலனாய்வுகள் 50 நிமிடங்களுக்கு முன்னர் பல மேற்கத்திய நிறுவனங்களால் கட்டப்படும் ஒரு பாலைவன நகரத்திற்காக நிலத்தை கையகப்படுத்த மக்களை கொல்லவும் செய்யலாம் என சௌதி அரேபியாவின் அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர், என்று முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார். நியோம் சுற்றுச்சூழல் திட்டத்தின் (Neom eco-project) ஒரு பகுதியான 'தி லைன்' (The Line) எனும் திட்டத்துக்கு வழிவகை செய்வதற்காக சவூதியில் உள்ள ஒரு பழங்குடியின மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக கர்னல் ரபீஹ்…

  2. 10 MAY, 2024 | 11:11 AM பிரான்ஸ் தலைநகரில் பொலிஸ் நிலையமொன்றிற்குள் நபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர். பெண் ஒருவரை தாக்கியமைக்காக கைதுசெய்ய்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கியை பறித்து துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார், இரண்டு பொலிஸார் கடும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அந்த நபர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதும் பொலிஸார் பதில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளிற்காக பிரான்ஸில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெ…

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஃபில் மெர்சர் பதவி, பிபிசி செய்திகள், சிட்னி 8 மே 2024 ஆஸ்திரேலியாவில் ஒரு பண்ணையில் வளர்ந்த லியாம் ஹால் ஒரு மெக்கானிக்காக தன் தொழிலை தொடங்கினார். எந்நேரமும் கிரீஸ் படிந்த ஆடைகளை அணிந்து கொண்டு கை, கால்களில் சிராய்ப்புகளுடன் மெக்கானிக் வேலை பார்த்து கொண்டிருந்த லியாமின் வாழ்க்கை ஒரு கட்டத்தில் தலைகீழாக மாறியது. ஆம், லியாம் ஹால் இப்போது ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனமான ’CSIRO’-வில் குவாண்டம் பயோடெக்னாலஜி பிரிவின் தலைவராக உள்ளார். தொழில் நுட்பரீதியாக அவரது செயல்பாடு பலமடங்கு மேம்பட்டது. "என் கடந்த காலம் கொஞ்சம் வித்தியாசமானது. ஆரம்பம் முதல…

  4. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன. இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. பல நாடுகளில் கொரோனா காலத்தில் இந்த தடுப்பூசி தான் போடப்பட்டது. இதற்கிடையே, அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளைவுகளும் ஏற்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிரிட்டன் நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தாக்கல் செய்த ஆவணத்தில், கோவிஷீல்ட் தடுப்பூசி மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், டிடிஎஸ் என்…

  5. அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள் தங்கள் விசாவைப் பெறுவதற்கு வைத்திருக்க வேண்டிய ‘சேமிப்புத் தொகையை’ அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் உயர்த்தியுள்ளனர். மேலும், சேமிப்பு கணக்குகள் குறித்து தவறான தகவல் தெரிவிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவிற்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த முடிவை அதிகாரிகள் எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) முதல், சர்வதேச மாணவர் ஒருவர் அவுஸ்திரேலிய விசாவிற்கு விண்ணப்பிக்க, தங்களுடைய சேமிப்புக் கணக்கில் அவுஸ்திரேலிய டொலர்கள் 29,710 இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கடந்த ஒக்டோப…

  6. பட மூலாதாரம்,SPUTNIK/SERGEI BOBYLEV/KREMLIN VIA REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பர்க் பதவி, ஆசிரியர், பிபிசி ரஷ்ய சேவை 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபர் பதவியேற்பதற்கு விளாதிமிர் புதின் கிரெம்ளின் அரண்மனை வழியாக செயின்ட் ஆண்ட்ரூ சிம்மாசன மண்டபத்திற்கு நடந்து சென்றார். அவர் அந்தப் பாதையில் கண்களைக் கட்டிக்கொண்டே நடந்திருக்கலாம். அங்கு அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டு, அடுத்த 6 ஆண்டு காலத்திற்கு ரஷ்யாவின் அதிபராகப் பதவியேற்றார். "நாம் ஒன்றுபட்ட, சிறந்த மக்கள். ஒன்றாக நாம் அனைத்து தடைகளையும் சமாளிப்போம். நமது திட்டங்களை நிறைவேற்றுவோம். ஒன்றாக வெற்றி பெறுவோம்," என…

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜீன் மெக்கன்சி பதவி, சியோல் செய்தியாளர் 45 நிமிடங்களுக்கு முன்னர் இளம் யுக்ரேனிய ஆயுத ஆய்வாளரான கிறிஸ்டினா கிமாச்சுக்கு ஜனவரி 2 ஆம் தேதி, கார்கிவ் நகரில் உள்ள ஒரு கட்டடத்தின் மீது வழக்கத்திற்கு மாறான தோற்றமுள்ள ஏவுகணை ஒன்று மோதியுள்ளதாக தகவல் கிடைத்தது. உடனடியாக யுக்ரேனிய ராணுவத்தில் இருக்கும் தனது நண்பர்களைத் தொடர்பு கொண்ட அவருக்கு, அடுத்த ஒரு வாரத்திற்குள் தலைநகர் கீவில் ஒரு பாதுகாப்பான இடத்தில் அந்த ஏவுகணையின் எஞ்சிய பகுதிகளை ஆய்வு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய விரல் நகத்தை விட சிறிய கணினி சில்லுகள் உட்பட அனைத்தையும் புகைப்படம் எடுத்த…

  8. Published By: RAJEEBAN 07 MAY, 2024 | 11:04 AM ஹமாஸ் அமைப்பு மூன்று கட்ட யுத்த நிறுத்தம் தொடர்பான யோசனைகளையும் கைதிகள் பணயக்கைதிகள் பரிமாற்றம் தொடர்பான யோசனைகளையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள அதேவேளை இஸ்ரேல் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளது. கத்தார் எகிப்துடன் இணைந்து மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்ட அமெரிக்கா ஹமாஸ் அமைப்பின் யோசனைகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள நேசநாடுகளுடன் இது குறித்து ஆராயவுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக 42 நாட்கள் யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என்ற யோசனையை ஏற்றுக்கொண்டுள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் தனது சிறைகளி…

  9. 06 MAY, 2024 | 11:35 AM ரஃபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. எதிர்காலத்தில் ரஃபாவில் இஸ்ரேல் தனது இராணுவநடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்த மறுநாள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உங்களின் பாதுகாப்பிற்காக சோதனைசாவடிகளிற்கு அருகில் உள்ள மனிதாபிமான பகுதிக்கு உடனடியாக செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அல்ரபாவின் அல்சவ்கா மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மட்டுப்படுத்த அளவிலான நடவடிக்க…

  10. பட மூலாதாரம்,CLIMEWORKS படக்குறிப்பு,குளிரூட்டிகள் போல தோற்றமளிக்கும் இந்த மாபெரும் மின்விசிறிகள் மூலம், க்ளைம்வொர்க் ஆண்டுக்கு 4,000 டன் கார்பனீராக்சைடை வளிமண்டலத்தில் இருந்து நீக்குகிறது. 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்க்யவிக்குக்கு வெளியே இந்த இடம் உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு திடப்படுத்தப்பட்ட எரிமலைக் குழம்பின் மேல், கப்பல் கன்டெய்னர்கள் அளவிலான பல பெரிய குளிரூட்டிகள் வைக்கப்பட்டிருப்பதை ஒருவர் காணலாம். இந்த விசித்திரமான இடம், வேற்று கிரக வாசிகளின் இடம்போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தோற்றத்தில் மட்டுமல்ல, அதன் செயல்பாட்டிற்கும் இந்த இடம் தனித்துவமானது. சுற்றுச்சூழலில் இருந்து கார்பனீராக்சைடை (கார…

  11. இஸ்ரேலில் அல்ஜசீராவுக்கு தடை ! இஸ்ரேலில், அல்ஜசீராவின் ஊடக பணிகளுக்கு, பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கம் தடைவிதித்துள்ளது. இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் பதிவிட்டதால் ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கத்தார் நாட்டு செய்தி நிறுவனமான அல்ஜசீராவின், ஊடக செயற்பாடுகளை, இஸ்ரேலில் முடிவுக்கு கொண்டுவருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானத்தின் படி அல்ஜசீராவின் ஒளிபரப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்புகள் வெளியான சில மணிநேரங்க…

  12. பூமி மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளனர். இதேவேளை பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை டெல்லி மெயில் அறிக்கையின்படி, இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குழுவின் தலைவர் அலெக்சாண்டர் ஃபார்ன்ஸ்வொர்த் கூறுகையில், பூமி முதலில் சூடாகவும், பின்னர் வறண்டதாகவும், இறுதியாக வாழத் தகுதியற்றதாகவும் மாறும். அதுமட்டுமன்றி வெப்பம் தாங்காமல் எரிமலைகள் வெடித்த…

  13. கனடாவின் (Canada) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைப் பாதுகாவலரும் செயற்பாட்டாளருமான ராதிகா சித்சபைசனின் ( Radhika Chitsabesan) புதிய ஆவணப்படமான ரே ஒப் ஹோப் (நம்பிக்கையின் ஒளிக்கீற்று) இன்றைய தினம் (05) ஸ்காப்ரோவில் (Scarborough) திரையிடப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு தனது ஐந்து வயதில் ராதிகா தமது குடும்பத்துடன் கனடாவுக்குத் தப்பிச் சென்றார். இந்தநிலையில் ரே ஒஃப் ஹோப், (Ray of Hope)ஆவணப்படமானது இலங்கையில் 26 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் மற்றும் தமிழ் மக்களின் இனப்படுகொலையின் தாக்கங்களையும், தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் தனிப்பட்ட கதைகளையும் அனுபவங்கள் மூலம் ஆராய்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பல கனடியர்கள், குறிப்பாக பெரிய பெருநகரங்களில் உள்ளவர்கள் ஒர…

      • Like
    • 4 replies
    • 934 views
  14. Published By: RAJEEBAN 05 MAY, 2024 | 01:45 PM காசா படுகொலைகள் குறித்த உண்மைகளை பகிரங்கப்படுத்திய பிரிட்டனை சேர்ந்த சத்திரசிகிச்சை நிபுணருக்கு பிரான்சிற்குள் நுழைவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. லண்டனிலிருந்து பிரான்சின் சார்ல்ஸ் டி கோல் விமானநிலையத்திற்கு சென்ற மருத்துவர் கசான் அபு சிட்டாவிடம் அவர் ஐரோப்பிய நாடுகளிற்கு செல்வதற்கு ஜேர்மனி தடைவிதித்துள்ளது என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்பிரலில் மருத்துவர் ஜேர்மனிக்குள் நுழைவதற்கு ஜேர்மனியின் அதிகாரிகள் தடை விதித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு எதிராக ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது என பிரான்ஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். …

  15. Published By: RAJEEBAN 05 MAY, 2024 | 11:33 AM அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்தின் வாகனத்தரிப்பிடமொன்றில் நபர் ஒருவரை தாக்கிய பதின்மவயது இளைஞனை சுட்டுக்கொன்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சமூகத்திற்கு இந்த சம்பவத்தினால் பாதிப்பு இல்லை அந்த இளைஞன் தனித்து செயற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை ஆராய்ந்துள்ள வேளை இது பயங்கரவாத சம்பவத்திற்கான அனைத்து அறிகுறிகளையும் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது என காவல்துறை அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மேற்கு அவுஸ்திரேலிய பிரதமர் ரொஜர் குக் 16 வயது இளைஞன் இணையம் மூலம் தீவிரவாத மயப்படுத்தப்பட்டமைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன …

  16. அமெரிக்காவில் புற்றுநோயாளிக்கு லாட்டரியில் ரூ.10,000 கோடி பரிசு - என்ன செய்யப் போகிறார்? பட மூலாதாரம்,OREGON LOTTERY 37 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறிய புற்றுநோயாளி ஒருவர் லாட்டரியில் பெரிய பரிசுத் தொகையை வென்றிருக்கிறார். இது அமெரிக்க வரலாற்றில் நான்காவது பெரிய லாட்டரி தொகை ஆகும். லாவோஸ் நாட்டை பூர்வீகமாக கொண்ட செங் சைஃபன், பவர்பால் லாட்டரியில் 1.3 பில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்றார். இந்திய மதிப்பில் இந்த தொகை பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும். பல இரவுகள், தலையணைக்கு அடியில் லாட்டரி காகிதங்களை வைத்துக்கொண்டு தூங்கியதாக செங் சைஃபன் கூறுகிறார். பவர்பால் லாட்டரியை வெல்வதற்கான கணக்கீடுகள் கொண்ட …

  17. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசிப்பவர் 41 வயதான செவிலியர் ஹீதர் பிரஸ்டீ. இவர் 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை அங்குள்ள நான்கு மாவட்டங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட முதியோர் மறுவாழ்வு மையங்களில் செவிலியராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில் இவர் பணியாற்றி வரும் மறுவாழ்வு மையங்களில் வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து 17க்கும் அதிகமான நோயாளிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது, அடிக்கடி முதியோர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. இறந்தவர்கள் அனைவரும் 43 முதல் 104 வயதுடைய முதியோர்கள் என்பதால் மறுவாழ்வு மையத்தில் பணியாற்றும் சக செவிலியர்கள் இதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் வந்திருக்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் செவிலியர் ஹீதர் பிரஸ்டீயி…

  18. பட மூலாதாரம்,SIKH PA படக்குறிப்பு,ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கட்டுரை தகவல் எழுதியவர், ஜெசிகா மர்பி பதவி, பிபிசி நியூஸ் 47 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியா - கனடா இடையிலான உறவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா காவல்துறை தெரிவித்துள்ளது. காலிஸ்தானுக்கு ஆதரவாகப் பல வழக்குகளில் இந்திய அரசால் தேடப்பட்டு வந்த 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 2023 ஜூன் மாதம் கனடாவின் சர்ரேயில் படுகொலை செய்யப்பட்டார். வான்கூவர் புறநகர்ப் பகுதியில் ஒரு பரபரப்பான கார் நிறுத்துமிடத்தில் முகமூடி அணிந்து, துப்பாக்கி ஏந்திய மர்ம…

  19. Published By: DIGITAL DESK 3 03 MAY, 2024 | 09:42 PM வியட்நாமில் வெப்ப அலை வீசுவதால் நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் குறைந்து இலட்சக்கணக்கான மீன்கள் இறந்துள்ளன. வியட்நாமில் டோங்னாய் மாகாணத்தில் உள்ள 300 ஹெக்டேர் பரப்பளவுள்ள சாங் மே நீர்த்தேக்கத்தில் இறந்த மீன்கள் சூழ்ந்து காணப்படுகிறுது. அதாவது, கடந்த சில நாட்களில் குறைந்தது 200 தொன் மீன்கள் இறந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கிழக்கு மற்றும் தெற்காசியாவின் ஏனைய பகுதிகளைப் போலவே வியட்நாமும் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மழை பொழிவும் குறைந்து காணப்படுகின்றது. மீன்களின் இறப்பிற்கு அதிகரித்த வெப்பநிலை மற்றும…

  20. பட மூலாதாரம்,BRITISH MUSEUM படக்குறிப்பு,குமாசியில் இப்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களில், முடிசூட்டு விழாக்களில் மன்றத்தினர் அணியும் ஒரு சடங்கு தொப்பியும் உள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ஃபேவர் நுனூ மற்றும் தாமஸ் நாடி பதவி, பிபிசி நியூஸ், குமாசி 3 மே 2024 பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கானா நாட்டிலிருந்து கொள்ளையடித்த கலைப் பொருட்கள், கானா மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அசான்டே (Asante) சாம்ராஜ்யத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கலைப் பொருட்கள் ஒருவழியாக கானாவுக்கு மீண்டும் வந்தடைந்துள்ளன. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் அவற்றை எடுத்துச் சென்…

  21. 03 MAY, 2024 | 05:18 PM காசா மோதல் குறித்த செய்திகளை செய்தியறிக்கையிடுவதில் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் வெளிப்படுத்திவரும் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பிற்காக 2024 உலக பத்திரிகை சுதந்திர விருதிற்கு பாலஸ்தீன பத்திரிகையாளர்களை யுனெஸ்கோ தெரிவு செய்துள்ளது. பெரும் ஆபத்து காணப்படுகின்ற போதிலும்தொடர்ந்து செய்தியறிக்கையிடலில் ஈடுபட்டுள்ள பாலஸ்தீன பத்திரிகையாளர்களிற்கு ஆதரைவையும் அங்கீகாரத்தையும்; வழங்குவதற்காக இந்த விருது அவர்களிற்கு வழங்கப்படுகின்றது என விருது தெரிவுக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். கடினமான ஆபத்தான சூழ்நிலைகளின் மத்தியில் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் வெளிப்படுத்தும் துணிவை யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஆட்ரிஅசோ…

  22. இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்ட துருக்கி. இஸ்ரேலுடனான தனது அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்டதாக துருக்கி அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், 54 தயாரிப்பு நிறுவனங்களின் ஏற்றுமதியை தடை செய்த துருக்கி அரசு, அடுத்தகட்ட நடவடிக்கையாக, இஸ்ரேலுடனானஅனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளது. இதுதொடர்பாக துருக்கி வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், படுகொலை, மனிதாபிமான பேரழிவு, இஸ்ரேலால் ஏற்படும் அழிவுகள் தொடர்கின்றன. மேலும், இஸ்ரேலிய அரசாங்கம் சர்வதேச போர்நிறுத்த முயற்சிகளை புறக்கணித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவியையும் தடுத்தது. இஸ்ரேலிய அரசாங்கம் காசாவ…

  23. உலக பத்திரிகை சுதந்திர தினம்: அச்சுறுத்தல்களால் சொந்த நாடுகளைவிட்டு வெளியேறிய 310 பிபிசி செய்தியாளர்கள் கூறுவது என்ன? படக்குறிப்பு,ஷாஜியா ஹயா செய்தியாளராக ஆப்கானிஸ்தான் முழுவதும் பயணித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்டீபனி ஹெகார்டி பதவி, பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் நாடுகளுக்கு வெளியே இருந்து செயல்படும் பிபிசி உலக சேவை பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட இருமடங்காகி 310 ஆக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புள்ளிவிவரங்கள் உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் முறையாக வெளியிடப்பட்டது. இந்த எண்ணிக்கை ரஷ்யா, ஆப்கானிஸ்தான் …

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES 46 நிமிடங்களுக்கு முன்னர் நவீன யுத்தத்தின் சவால்களைக் கருத்தில் கொண்டு சீனா தனது ராணுவத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் செய்யப்பட்ட மிகப்பெரிய மாற்றம் இது. பிபிசி மானிட்டரிங் செய்திப் பிரிவின்படி, ஏப்ரல் 19 அன்று சீனா ஒரு புதிய ராணுவப் பிரிவை உருவாக்குவதாக அறிவித்தது. சீனாவின் அரசாங்க செய்தி முகமை ஷின்ஹுவாவின் கூற்றுப்படி, இந்தப் புதிய ராணுவப் பிரிவுக்கு தகவல் ஆதரவுப் படை (Information Support Force) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு ராணுவப் பிரிவு ஒரு நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்பட்டதாக, அச்செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் அதிபர் ஷி ஜின்பிங்குடன் மத்திய ரா…

  25. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிலியின் அடகாமா பாலைவனத்தில் லித்தியம் பிரித்தெடுக்கப்படுகிறது. இது "லித்தியம் முக்கோணத்தில்" உள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், குளோபல் சைனா யூனிட் பதவி, பிபிசி நியூஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வடக்கு அர்ஜென்டினாவில் தான் தங்கியிருந்த விடுதிக்கு வெளியே கோபமான முழக்கங்கள் எழுப்பப்படுவதைக் கேட்டபடி நள்ளிரவில் ஐ கிங் கண் விழித்தார். அவர் ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தார். அர்ஜென்டினா தொழிலாளர்கள் வளாகத்தைச் சுற்றி வளைப்பதையும், எரியும் டயர்களால் நுழைவாயிலைத் தடுப்பதையும் அவர் கண்டார். "எனக்கு பயமாக இருந்தது. ஏனென்றால் நெருப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.