உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
சென்னை: எனது மகன் மு.க.அறிவுநிதி, எங்களை கவனிப்பதில்லை என்றும் வீட்டு வாடகைக் கூட கொடுக்காமல் தவிக்க விடுவதாகவும் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மனைவி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மு.க.முத்து தனது மனைவி எம்.சிவகாமசுந்தரியுடன் தற்போது சென்னையை அடுத்த கானாத்தூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர்களின் மகன் மு.க.அறிவுநிதி சினிமாவில் பின்னணி பாடியுள்ளார். இந்த நிலையில் சிவகாமசுந்தரி தனது மகன் அறிவுநிதி மீது சென்னை காவல்துறை ஆணையாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளார் அம்மனுவில், கூறியுள்ளதாவது: ‘'என்னுடைய தந்தை பிரபல பின்னணிப்பாடகர் சிதம்பரம் எஸ்.ஜெயராமன். எனது கணவர் மு.க.முத்து. எனக்கு 65 வயது ஆகிறது. எனக்கு இரண்டு முறை தலையில்…
-
- 0 replies
- 703 views
-
-
டெல்லி: 1998ம் ஆண்டு நடந்த சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்பியான சஜ்ஜன் குமாரை விடுதலை செய்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதையடுத்து நீதிபதி மீது செருப்பு வீசப்பட்டது. 1984ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொலை செய்யப்பட்டதையடுத்து டெல்லியில் பெரும் வன்முறை நடந்தது. காங்கிரஸார் சீக்கியர்களை குறி வைத்துத் தாக்கினர். இதில் ஏராளமான சீக்கியர்கள் உயிர்ழந்தனர். அவர்களது வீடுகள் எரிக்கப்பட்டன, சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்திய நானாவதி கமிஷன் பரிந்துரை செய்ததையடுத்து 2005ம் ஆண்டு சிபிஐ விசாரணை ஆரம்பித்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் டெல்லி எம்பியான சஜ்ஜன் குமார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்…
-
- 0 replies
- 296 views
-
-
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்ட இந்தியரான சரப்ஜித் சிங் மூளைச் சாவடைந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் சென்றுள்ள அவரது சகோதரி தல்பீர் கவுர், சரப்ஜித் சிங்கிற்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆலோசனையை பெறுவதற்காக தாம் இந்தியா செல்ல இருப்பதாக சரப்ஜித் சிங்கின் வழக்கறிஞரிடம் கூறியுள்ளார் என செய்தி வெளியாகி உள்ளது. அதே சமயம் சரப்ஜித் சிங்கின் மனைவி மற்றும் 2 மகள்களும் இந்தியா திரும்ப உள்ளனரா என்பது குறித்து தகவல் இல்லை. முன்னதாக பாகிஸ்தான் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதி்க்கப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர் சரப்ஜித் சிங், கடந்த வாரம் சக கைதிகளால் பலமாக…
-
- 0 replies
- 397 views
-
-
29 ஏப்ரல் 2013 எட்டாம் வகுப்பு மாணவிகளை, பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவர்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற, பள்ளியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் நகரில், மேனிலை பள்ளி ஒன்றை நடத்தி வருபவர், ராஜேஷ் தன்காத். இவர், தன் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளை கடந்த, 11ம் தேதி, பாலியல் பலாத்காரம் செய்தார். மாணவிகள் நடந்த விவரத்தை பெற்றோரிடம் கூறப் போவதாக தெரிவித்ததை அடுத்து, அவர்களுக்கு விஷம் கொடுத்தார். விஷம் அருந்திய நிலையில், வீட்டிற்கு திரும்பிய மாணவிகள், அங்கு மயங்கி விழுந்ததை அடுத்து, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இருந்தும், சிகிச்சை பலனின்றி, இரு மாணவிகள் இறந்தனர். இறப்பதற்கு முன், மாணவிகளில் ஒருவர், நடந்த விவரங்க…
-
- 0 replies
- 626 views
-
-
28 ஏப்ரல் 2013 கர்நாடக மாநிலத்தில் 20 வயது நிரம்பிய கல்லூரி மாணவி ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்காமில் அரசு கல்லூரியில் படித்து வந்த 20 வயது மாணவி ஒருவர், கடந்த வாரம் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்புகையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். கல்லூரிக்கு சென்ற மகள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், அப்பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு காணாமல் போன பெண்ணை தேடிவந்தனர். இந்நிலையில் பெல்காமில் அருகில் உள்ள சுலேபாவி கிராமத்தில் நிர்வாண கோலத்தில் அப்பெண்ணின் உடல் கிடந்தது கண்டிபிடிக்கப்பட்டது. அவர் பலரால…
-
- 0 replies
- 527 views
-
-
29 ஏப்ரல் 2013 பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தற்போது வீட்டு காவலில் உள்ள நிலையில், பாகிஸ்தான் தாலிபான்கள் அவரை கடத்த திட்டமிட்டுள்ளனர். பூட்டோ கொல்லப்பட்ட வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு அவரது பண்ணை வீட்டிலேயே பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் சிறை வைக்கப்பட்டுள்ளார். விசாரணைக்காக வீட்டிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும்போது அவரை கடத்திச் செல்ல தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர் என்று அந்நாட்டு உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான செய்தி ஜியோ நியூஸ் தொலைக்காட்சி சானலில் ஒளிபரப்பானது. தாலிபான்கள் மேலும் சில தீவிரவாத குழுக்களுடன் இணைந்து முஷாரப்பை கடத்த திட்டமிட்டுள்ளனர் என்று…
-
- 0 replies
- 373 views
-
-
29 ஏப்ரல், 2013 சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் பிரதமர் வாஹில் அல் ஹல்கி அவர்களின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதலில் இருந்து அவர் தப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹல்கி அவர்களின் குறுகிய செவ்வி ஒன்றை வெளியிட்ட அரசாங்க தொலைக்காட்சி, அந்தச் செவ்வி அந்தத் தாக்குதலுக்கு பின்னர் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. அவர் உறுதியாக இருப்பதாக தென்பட்டாலும், அவர் அப்போதுதான் கலந்துகொண்ட பொருளாதாரம் குறித்த கூட்டம் ஒன்று பற்றி பேசியபோது அவர் சற்று ஆடிப்போனவராக காணப்பட்டார். சற்று முன்னதாக அந்த தாக்குதலில் அவர் எந்தவிதமான பாதிப்பும் இன்றி தப்பியுள்ளதாக தொலைக்காட்சி கூறியது, அவரது மெய்ப்பாதுகாவலர் அதில் இறந்ததாக செய்திகள் கூறுகின்றன. அந்த தாக்குதலில் பல பொ…
-
- 0 replies
- 501 views
-
-
29 ஏப்ரல், 2013 வடமேற்கு பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் பலியாகி பலர் காயமடைந்துள்ளனர். ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த அந்த குண்டுதாரி, பெஷாவர் நகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை தாண்டியவுடன் குண்டை வெடிக்கச் செய்துள்ளார். இந்தத் தாக்குதலில் உள்ளூர் பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தவர்களே பலியாகி காயமும் அடைந்துள்ளனர். அடுத்த மாதம் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் வடமேற்கு பகுதியில் குண்டுத் தாக்குதல்கள் வெகுவாக அதிகரித்துள்ளன. மதச்சார்பற்ற முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களே தமது திட்டமிட்ட இலக்கு என்று தாலிபான்கள் கூறுகிறார்கள். இப்படியான நிலைப்பாடு அப்பகுதியில் அவர்கள் தேர்தல் …
-
- 0 replies
- 296 views
-
-
பொதுபல சேனாவிற்கு நிதி உள்ளிட்ட எந்தவொரு உதவியினையும் வழங்கவில்லை என நேர்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திகளை வன்மையாக கண்டிப்பதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் இனங்களுக்கு எதிராக செயற்படும் எந்தவொரு அமைப்பிற்கும் உதவியளிக்கப்படமாட்டாது என நேர்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நோர்வே தூதுவராலயத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இலங்கை உட்பட எந்தவொரு நாட்டிலும் இன மத பேதங்களை ஏற்படுத்தவோ அல்லது அமைதியினை சீர்குலைக்கும் விதமாகவோ நோர்வே எந்தவொரு பங்களிப்பினையும் வழங்கவில்லை. அத்தடன் முஸ்லிம்களுக்கு எதிரான எந்தவொரு நிகழ்ச்சி நிரலும் தங்களிடம் கிடையாது எனினும், பொதுபல சேனாவின் உ…
-
- 0 replies
- 440 views
-
-
ஆப்ரிக்காவின் கானா நாட்டு வட பகுதியில், உடல் ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகளை பலியிடும் பழக்கம் ஒழிக்கப்படுவதாக, அந்தப்பகுதியின் உள்ளூர் தலைவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இந்த மாதிரி உடல் ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகள் தீய ஆவிகளால் பீடிக்கப்பட்டவை என்று கூறப்பட்டு, பின்னர் அவை கொல்லப்படும் இந்த நடைமுறை தடை செய்யப்படுவதாக, மேல் கிழக்குப் பிராந்தியத்தில் நடந்த ஒரு சிறப்பு வைபத்தில் உள்ளூர் தலைவர்கள் அறிவித்தனர். இது போன்ற குழந்தைகளை விஷம் கொடுத்துக் கொல்லும் வேலையைச் செய்து வந்த வயது மூத்தவர்களுக்கு புதிய பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் இனி ஊனமுற்ற குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்தும் வேலையைச் செய்வார்கள் . இது போல ஊனமுற்ற குழந்தைகளைக் கொல்லும் பழக்கம் தெற்க…
-
- 0 replies
- 392 views
-
-
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம், சபோர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 போலீஸார் கொல்லப்பட்டனர். இதுகுறித்து, மாநில காவல் துறை அதிகாரி அப்துல் கனி மிர் கூறியது: ஸ்ரீநகரிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹெய்கம் அருகே வழிப்பறி நடைபெற்றதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை மாலை தொலைபேசி மூலம் புகார் வந்தது. இது தொடர்பாக சபோர்-குப்வாரா சாலையில் போலீஸார் விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அருகில் உள்ள கிராமத்தில் பதுங்கியிருந்த சிலர் திடீரென வந்த போலீஸார் மீது கண் மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர், தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிப்பதற்காக அப்பகுதியில் குவிந்தனர். எனினும், அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.இந்தத…
-
- 6 replies
- 538 views
-
-
ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் உள்ளது. இங்குதான் ராணுவத்துக்கு பயன்படும் ஏவுகணைகள், பீரங்கிகள் சோதனை செய்யப்படும். தேவைப்பட்டால் தரம் உயர்த்தவும் இங்கு ஏற்பாடு செய்யப்படும். ராணுவ ஆராய்ச்சி திட்டங்களுக்காக இந்த மையத்தின் ஒரு பகுதியில் வெடி பொருள் கிடங்கு உள்ளது. ஏவுகணை மற்றும் பீரங்கிகளை சோதிப்பதற்கு தேவையான வெடி பொருட்கள் இந்த கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை இந்த வெடி பொருள் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த வெடி பொருட்கள் பயங்கரமாக வெடித்து சிதறின. சில நிமிடங்களில் வெடி பொருள் கிடங்கு முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் 12-க்…
-
- 0 replies
- 341 views
-
-
நிலக்கரி சுரங்க ஊழலை மூடி முறைக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, நாடு முழுவதும் இரண்டு நாள் போராட்டம் நடத்தப்படும் என பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையில் 142 நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டின் போது நடந்த முறைகேட்டில் அரசுக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தெரிவித்திருந்தார். அதன்பேரில், சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக மாநில தலைநகரங்களில் மே 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என பாரதிய ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளரான பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக மாநில ஆளுநர்களிடம் மனு அளிக்க…
-
- 0 replies
- 333 views
-
-
சீன ராணுவம் ஏற்கனவே இந்திய எல்லைக்குள் 10 கி.மீ. ஊடுருவி கூடாரம் அடித்தது சிக்கலான நிலையில், மேலும் 9 கி.மீ ஊடுருவி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனப் படைகள் இந்திய எல்லையில் ஊருடுவி, லடாக் பகுதியில் 10 கிலோ மீட்டர் வந்து கூடாரம் அமைத்துள்ளதாக முதலில் தகவல் வந்தது. அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து, மேலதிக இந்திய படைகள் அனுப்பி வைக்கப்பட்டன. தங்கள் படைகள் எல்லை தாண்டவில்லை சீனா தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்நிலையில், சீனப் படைகள் எல்லையைத் தாண்டி, இந்திய பிராந்தியத்தில் 19 கிலோ மீட்டர் வரை நுழைந்து விட்டது, என்று அரசு புதிய தகவலை தெரிவித்துள்ளது. பாதுகாப்புத்துறை செயலாளர் சசிகாந்த் சர்மா தலைமையிலான மூத்த அதிகாரிக…
-
- 11 replies
- 1.5k views
-
-
ஒரு முதியவரின் புகையிலைப் பை சீனாவில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்திலிருந்து 800 பேரை காப்பாற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சிச்சுவான் மாகாணம், லுஷான் மாவட்டத்தில் உள்ள யான் நகரில் கடந்த சனிக்கிழமை கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 அலகுகளாக பதிவானது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 10,500 பேர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். அதே சமயம், சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த ஃபியூஜியாயிங் கிராமத்தைச் சேர்ந்த 800 பேர், முதியவர் ஒருவரின் புகையிலைப் பையால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லீ சியாங்கே என்ற அந்த 68 வயது முதியவர் புகையிலை போடும் பழக்கமுடையவர். அவர் தன்னுடைய புகையிலைப் பையை எப்போதும் தன்னுடைய கையில் கட்டியிருப்பது வழக்கம்.சம்ப…
-
- 3 replies
- 507 views
-
-
டெல்லி: பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இடையே கருத்து வேறுபாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2ஜி விவகாரத்தில் மன்மோகன் சிங் நடந்து கொண்ட விதத்தை சோனியா ஏற்கவில்லை என்றும், அதே போல நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரின் செயல்பாடுகளையும் அவர் ஏற்கவில்லை என்றும் தெரிகிறது. ஆனால், அஸ்வனி குமாருக்கு மன்மோகன் சிங் ஆதரவாக உள்ளார். நிலக்கரி ஊழல் விவகாரத்தில் சிபிஐயின் நடவடிக்கைகளில் அஸ்வனி குமார் தலையிட்டது உறுதியாகிவிட்டது. இதனால் அவரை பதவி விலகச் செய்ய வேண்டும் என்பது காங்கிரஸ் தலைவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால், அவர் பதவி விலகினால் மத்திய அரசால் சிபிஐ தவறாக பயன…
-
- 0 replies
- 375 views
-
-
தூக்கு தண்டனை விதிப்பதால் நியாயம் கிடைத்து விடப் போவதில்லை. எனவே அதை கைவிடும்படி இந்தியாவிடம் ஜெர்மனி தெரிவித்துள்ளதாக இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் மைக்கேல் ஸ்டெயினர் கூறினார். தூக்கு தண்டனை விதிப்பதை கொள்கை அளவில் ஜெர்மனி ஏற்கவில்லை. இதுதான் எங்கள் நாட்டின் நிலைப்பாடு. இந்த நிலையை வேறு நாடுகளும் பின்பற்றுகின்றன என்பதை இந்தியாவும் அறியும். காலிஸ்தான் விடுதலை இயக்க பயங்கரவாதி தேவேந்தர் பால் சிங் புல்லர் உள்ளிட்ட எந்த தூக்கு தண்டனை கைதிகளுக்கும் இந்தியா அதை நிறைவேற்றக்கூடாது என்பதே எங்களின் நிலை. எனினும் தனிப்பட்ட முறையில் இந்தியாவிடம் இதுபோன்ற கோரிக்கை ஜெர்மனி தரப்பில் வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். http://seithy.com/breifNews.php?newsID=81363&category=…
-
- 1 reply
- 314 views
-
-
சுவிட்சர்லாந்து வங்கிகள் இனி பாதுகாத்து வருகின்ற வாடிக்கையாளர்களின் ரகசியக் கொள்கைகளை கைவிட வேண்டும் என்று நிதி ஆலோசகர் லுக் தெவெனோஸ் (Luc Thevenoz) கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், வரி ஏய்ப்புக்கு எதிராகப் பல நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற நிலையில் இனி வங்கிகள் ரகசியத்தைக் காப்பாற்றுவது இயலாத காரியம். தற்பொழுது காலச்சூழ்நிலை மாறிவிட்டதால் வங்கிகள் தாமாகவே தமது வாடிக்கையாளர் பெயர் மற்றும் வங்கியின் இருப்பு பற்றிய தகவல்களை அரசுக்கு வழங்கிவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இருபது நாடுகள் ஒரு குழுவாக இணைந்து, வரி ஏய்ப்பைத் தடுக்க வங்கியிருப்பு குறித்து பரிமாறிக் கொள்ள கூட்டம் ஒன்றை நடத்தினர். இந்தக் கூட்டம் நடந்த மறுநாள் தெவனோஸ் இன…
-
- 0 replies
- 256 views
-
-
பாகிஸ்தானில், கராச்சி நகரில் தேர்தல் கூட்டங்களின் போது நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழந்தனர். முத்தாகிதா கியுமி இயக்க கட்சியின் தேர்தல் அலுவலகத்தின் அருகே இரண்டு குண்டுகள் வெடித்தன. அதில் 2 பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர். இதே போல பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது 2 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர். கராச்சி நகரில் தொடர்ந்து 3 வது நாளாக தேர்தல் பிரச்சார கூட்டங்களின் போது குண்டு வெடிப்பு நிகழ்ந்து வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு எல்லாம் தெஹ்ரீக் ஈ தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. http://puthiyathalaimurai.tv/bomb-blast-in-pakistan-4-dead
-
- 0 replies
- 235 views
-
-
அமெரிக்காவில் பாஸ்டன் மராத்தன் போட்டியின்போது நடந்த குண்டுத்தாக்குதல் தொடர்பில் அமெரிக்க காவல்துறையினர் சந்தேகநபர் ஒருவரை இலக்குவைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். முக்கிய பல்கலைக்கழகம் ஒன்றில் போலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் பெரும் தேடுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். தொடர்புடைய விடயங்கள் துஷ்பிரயோகம், மனித உரிமை, தாக்குதல், வன்முறை பாஸ்டனிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வாட்டர்டவுன் என்ற இடத்தில் காரொன்றை விரட்டிச் சென்று தாக்குதல் நடத்தியதில் சந்தேகநபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பாஸ்டன் மராத்தன் குண்டுவெடிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள படங்களில், வெள்ளைநிற பேஸ்பால் தொப்பியொன்றை அணிந்தவாறு காணப்படும் சந்த…
-
- 22 replies
- 1.2k views
-
-
பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. இதன் எதிரொலியாகத்தான் 2ஜி அலைக்கற்றை ஜேபிசி குழப்பமும், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஸ்வனி குமாரின் தன்னிச்சையான செயல்பாடும் காங்கிரஸ் மேலிடத்துக்குத் தலைவலியை ஏற்படுத்தி வருவதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் ஆட்சியைத் தக்க வைக்க உத்திகளைக் கையாளுவதா? அல்லது கட்சிக்கு களங்கம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதா? என்ற தடுமாற்றத்தில் சோனியா காந்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது முதல் கடந்த 26-ஆம் தேதி …
-
- 0 replies
- 397 views
-
-
கர்நாடக மாநிலத்தில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரம் செய்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி, 'கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்ற பா.ஜ.க. ஆட்சி, ஊழலில் உலக சாதனை படைத்துவிட்டது' என்று குற்றம்சாட்டினார். இந்நிலையில், கர்நாடக மாநிலம், ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஷிக்கானில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து நேற்று தேர்தல் பிரசாரம் செய்த பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:- பா.ஜ.க.வைப் பற்றி விமர்சிப்பதற்கு முன்னதாக ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் மீது படிந்துள்ள கறைகளை சுத்தப்படுத்த வேண்டும். 'ஏழை மக்களோடு இருப்போம்' என்ற வாக்குறுதியுடன் மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, இதுவரை ஏழைகளின் நல்வாழ்வுக்காக எந்த நடவடிக்கை…
-
- 0 replies
- 322 views
-
-
உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அதிகம் சக்தி வாய்ந்ததாக தேர்வு செய்யப்பட்ட 27 நாடுகளின் பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது. டில்லியில் செயல்பட்டு வரும் தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் சார்பில் பாதுகாப்பு வலிமை, மக்கள்தொகை, தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்டவை அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சீனா 2வது இடத்திலும், அமெரிக்கா முதல் இடத்திலும் உள்ளன. வலிமையும், கட்டுப்பாடுகளும் நிறைந்த நகரங்களில் பீஜிங்கிற்கு அடித்தபடியாகவே டில்லி உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலிமையில் சீனா, அமெரிக்காவை மிக நெருங்கி வருவதாகவும், எதிர்காலத்தில் அமெரிக்காவையே அச்சுறுத்தும் மிகப் பெரிய சக்தி வாய்ந்த நாடாக சீன…
-
- 2 replies
- 2.2k views
-
-
போபாலில் பாரத் மிகுமின் நிலையம் சார்பில் நடத்தப்பட்டு வரும் மருத்துவமனை கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கட்டட இடிபாடுகளுக்கிடையே 20க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாரத் மிகு மின் நிலையம் (பெல்) நகர் உள்ளது. இங்கு பெல் சார்பில் கஸ்தூரிபா காந்தி என்ற பெயரில், மருத்துவமனை ஒன்றும் நடத்தப்பட்டு வருகிறது. 350 படுக்கைகள் கொண்ட அந்த மருத்துவமனையில் பெண்கள் வார்டின் ஒருபகுதி மேற்கூரை, இன்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்த 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டுள்ளனர். மேலும், குழந்தைகள் உட்பட 7 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப்…
-
- 0 replies
- 300 views
-
-
டெல்லியில் கடந்த ஆண்டு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க கடுமையான சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும், தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை தொடர்கிறது. குறிப்பாக சிறு குழந்தைகள் கூட பாலியல் சித்ரவதைகளுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் தெற்கு டெல்லியில் உள்ள பதர்பூரில் உள்ள பொது கழிவறையில் நேற்று மாலை 6 வயது சிறுமி கறுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், அந்த சிறுமியை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபரேசனுக்குப் பிறகு சிறுமியின் உடல்நிலை சீராக உள்ளது, விரைவில் அபாய கட்டத்தை தாண்டுவார் என்ற டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். மூச…
-
- 1 reply
- 456 views
-