உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26996 topics in this forum
-
பட மூலாதாரம்,STEPHANE DE SAKUTIN/AFP படக்குறிப்பு, மிஷேல் பார்னியை (வலது) புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். கட்டுரை தகவல் எழுதியவர், பால் கிர்பி, லாரா கோஸி பதவி, பிபிசி செய்திகள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு மிஷேல் பார்னியை பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். "அனைத்து அரசியல் சக்திகளும் மதிக்கப்பட வேண்டும். அவர்களின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும்," என்று கூறிய அவர் பிரான்ஸ் ஒரு மிக முக்கியமான தருணத்தை அடைந்துவிட்டது என்றும் அதனை பணிவுடன் எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்தார். …
-
- 0 replies
- 225 views
- 1 follower
-
-
அமெரிக்க ஜோர்ஜிஜா மாநிலத்தில் உயர்தர பாடசாலையில் துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். ஒன்பது படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 வயது மாணவனே துப்பாக்கி சூடு நடத்தியதாக சொல்லப்படுகிறது. கோடைகால விடுமுறை முடிந்து இன்று தான் பல பாடசாலைகள் தொடங்கியது. பாடசாலை எப்போது தொடங்கும் என்று காத்திருந்திருக்கிறார். https://www.cnn.com/us/live-news/apalachee-high-school-shooting-georgia-09-04-24/index.html
-
-
- 9 replies
- 675 views
- 2 followers
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ஜேக் டச்சி, ஜியாத் அல்-கத்தான், எமிர் நாடர் மற்றும் மேத்யூ கேஸல் பதவி, பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன்ஸ் 4 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பாலத்தீனிய முதிர் பெண் ஆயிஷா ஷ்டய்யே, கடந்த அக்டோபரில் ஒரு நபர் தனது தலையை நோக்கி துப்பாக்கியை காட்டி, 50 ஆண்டுகளாக வசித்து வந்த தனது வீட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டியதாக கூறினார். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் தனது வீட்டிற்கு அருகாமையில் ஒரு சட்டவிரோத குடியேற்ற முகாம் நிறுவப்பட்ட பின்னர், 2021-ஆம் ஆண்டில் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்கள் அதிகரித்தது என்றும், அந்த வன்முறை செயல்பாட்டின் உச்சக்கட்டமாக தற…
-
- 1 reply
- 731 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, தென்னாப்பிரிக்க அதிபர் ரமபோசா (வலது) மற்றும் சீன அதிபர் ஜின்பிங் (2023இல் தென்னாப்பிரிக்காவின் சந்தித்த போது) கட்டுரை தகவல் எழுதியவர், ஜெர்மி ஹோவெல் பதவி, பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சீனா கடந்த இருபது ஆண்டுகளாக, ஆப்பிரிக்கா உடனான வர்த்தகத்தை பெருமளவில் அதிகரித்துள்ளது. அந்த கண்டம் முழுவதும் சாலைகள், ரயில் பாதை மற்றும் துறைமுகங்கள் கட்டுவதற்கு பில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளது. இது சீனா-ஆப்பிரிக்கா ஒத்துழைப்பு மன்றம் (FOCAC) வாயிலாக செயல்படுத்தப்பட்டது. FOCAC என்பது ஆப்பிரிக்க நாடுகளும் சீனாவும் எவ்வாறு இணைந்து செயல்படுவது என்பதைத் தீர்மானிக்க ம…
-
- 3 replies
- 653 views
- 1 follower
-
-
05 SEP, 2024 | 02:47 PM ஜேர்மனியின் மியுனிச் நகரில் உள்ள இஸ்ரேலிய துணை தூதரகத்திற்கு அருகில் சந்தேகநபர் ஒருவர் மீது ஜேர்மனி பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். இஸ்ரேலின் துணைதூதரகம் மற்றும் நாஜி அருங்காட்சியகம் ஆகியன அமைந்துள்ள பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் காயமடைந்துள்ளார் வேறு சந்தேகநபர்கள் இருப்பதாக தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிபோன்ற ஒன்றுடன் காணப்பட்ட நபர் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/192925
-
- 1 reply
- 225 views
- 1 follower
-
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில் அந்த நீதிமன்றில் உறுப்பினராக உள்ள மங்கோலியா(Mongolia) நாட்டிற்கு ரஷ்ய(russia) ஜனாதிபதி புடின்(Vladimir Putin) சென்றுள்ளார். ரஷ்யா - உக்ரைன் (ukraine)இடையே போர் நீடித்து வருகிறது. இப்போர் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராக நெதர்லாந்தில் (netherland)உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உக்ரைனில் இருந்து குழந்தைகளை கடத்தியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. புடின் மீது கைது பிடியாணை அந்த வழக்கில் புடின் மீது கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு புடின் பயணம் மேற்கொண்டால் அந்த நாடு புடினை கைது செய்யும் வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளது. …
-
-
- 3 replies
- 633 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ATLANTIC PRODUCTIONS/MAGELLAN படக்குறிப்பு, கடலுக்கடியில் உள்ள டைட்டானிக் கப்பலும், அதில் இருந்த டயானா சிலையும். கட்டுரை தகவல் எழுதியவர், ரெபேக்கா மோரெல் மற்றும் அலிசன் பிரான்சிஸ் பதவி, பிபிசி நியூஸ் சயின்ஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் டைட்டானிக் என்றவுடன் நினைவுக்கு வருவது கப்பலின் கூர்மையான முன் பகுதி, அதிலுள்ள உலோக பிடிமானங்களே. அந்த இடத்தில் ஜாக் ? ரோஸ் ஜோடி நிற்பது போன்ற திரைப்படக் காட்சிகள் பலரது மனதில் நீங்கா இடம் பிடித்தவை. அந்த உலோக பிடிமானங்கள் தற்போது உடைந்து கீழே விழுந்துள்ளன. புதிய ஆய்வுகள், டைட்டானிக் கப்பல் மெல்லமெல்ல சேதமடைந்ததன் விளைவுகளை வெளிப்படுத்தியுள்ளன. அதன் பிடிம…
-
- 0 replies
- 601 views
- 1 follower
-
-
வட கொரியாவில் 30 பேருக்கு மரண தண்டனை-கிம்ஜாங் உன் பிறப்பித்த உத்தரவு! வட கொரியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், கடமை தவறிய குற்றத்திற்காக 30 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூலை மாதம் பலத்த மழை காரணமாக அந்நாட்டின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதுடன், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால், 4 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன.15 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர் இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவை தடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர் என்றும் அவர்கள் கடமையை சரியாக செய்யாததால், பேரிழப்பு ஏற்பட்டு உள்ளதுடன் அவர்கள் ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈ…
-
- 2 replies
- 486 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 04 SEP, 2024 | 08:12 AM ஆங்கில கால்வாயில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் கடலோர பகுதியிலிருந்து இங்கிலாந்திற்குள் குடியேற்றவாசிகளுடன் செல்ல முயன்ற படகே கவிழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பத்துபேர் பெண்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கேப்கிரிஸ் நெஸ் என்ற பகுதியில் 50க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர். படகில் அளவுக்கதிகமானவர்கள் காணப்பட்டனர், அதன் அடிப்பகுதி வெடித்தது, ஒரு சிலரே உயிர்காக்கும் அங்கியை அணிந்திருந்த…
-
- 0 replies
- 239 views
- 1 follower
-
-
உக்ரைனின் அமைச்சரவையில் இருந்து முக்கிய அமைச்சா்கள் இராஜினாமா! உக்ரைனின் ஜெலன்ஸ்கி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து நான்கு முக்கிய அமைச்சா்கள் இராஜினாமா செய்துள்ளனர். ஐரோப்பிய விவகாரங்களுக்கான துணைப் பிரதமர் ஒல்கா ஸ்டெபானிஷினா, தொழில்துறை மூலோபாய அமைச்சா் ஒலெக்சாண்ட்ர் கமிஷின் ஆகியோரே தமது அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளனர். இதேவேளை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம், உடனடியாக அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனவும், பாராளுமன்றத்திற்கான கட்சியின் தலைவர், தற்போது இருக்கும் அமைச்சா்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மாற்றப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், ரஷியாவுக்கு எதிராக சண்டை நடைபெற்று வரும் நிலையில், இந்த இராஜினாமா விவகாரம் பல கேள்விக…
-
- 0 replies
- 215 views
-
-
இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை நிறுத்தம். - பிரித்தானியா! இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை பிரித்தாணியா நிறுத்தி வைத்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் உரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்பதால் பிரித்தாணியா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட உரிமங்களில் 30 உரிமங்களை இடைநிறுத்த பிரித்தாணியா முடிவு செய்துள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி அறிவித்துள்ளார். அதன்படி போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களுக்கான உதிரி பாகங்கள் தடை செய்யப்பட்ட ஆயுதங்களில் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது https://athavannews.com/2024/1397905
-
-
- 4 replies
- 480 views
- 1 follower
-
-
காசா (Gaza) பகுதியின் பல்வேறு பகுதிகளில் 3 நாட்கள் போரை இடைநிறுத்தம் செய்ய இஸ்ரேலும் (Israel) ஹமாஸும் (Hamas) ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவிலுள்ள குழந்தைகளுக்கான போலியோ (Polio) சொட்டு மருந்து வழங்குவதற்காகவே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் மிலேச்சத்தனமான தாக்குதல்களில் இதுவரை 40,000இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போர் நிறுத்தம் இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் இதற்கான ஒப்பந்தங்கள் இன்னும் கையெழுத்தாகாமல் நீடித்துக் கொண்டு இருக்கின்றன. காசாவிலுள…
-
-
- 4 replies
- 601 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அக்டோபர் 7, 2023ம் ஆண்டு பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதிகளை மீட்பதில் அரசும் பிரதமரும் தோல்வி அடைந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு கட்டுரை தகவல் எழுதியவர், டியர்பைல் ஜோர்டன், ஆலிஸ் கடி பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஹமாஸ் இயக்கத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆறு பணயக் கைதிகளின் உடல்களை இஸ்ரேல் ராணுவத்தினர் காஸாவில் இருந்து மீட்டது இஸ்ரேலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாடெங்கும் போராட்டங்களை நடத்தினார்கள். டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் இதர நகரங்களில் தங்கள் நாட்டுக் கொடிகளுடன் ஒன்று கூடிய ஆயிர…
-
- 2 replies
- 634 views
- 1 follower
-
-
01 SEP, 2024 | 10:13 AM பிதோராகர்: உத்தராகண்ட் ஓம் பர்வத மலைப் பகுதியில் முதல் முறையாக பனிக்கட்டிகள் கடந்த வாரம் முற்றிலும் மாயமானது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்தராகண்ட் மாநிலத்தில் வியாஸ் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது ஓம் பர்வத மலை. இதன் வடிவமைப்பு இந்தி எழுத்து ஓம் போல இருப்பதால் இது ஓம் பர்வத மலை என அழைக்கப்படுகிறது. இந்த மலை எப்போதும் பனி படர்ந்து காணப்படுவதால், இது பிரபல சுற்றுலாத் தளமாக விளங்கியது. இந்நிலையில் இந்த ஓம் பர்வதமலை கடந்த வாரம் பனிக்கட்டிகள் முற்றிலும் மாயமாகி வெறும் பாறைகளாக காட்சியளித்தன. இதுபோல் ஓம் பர்வத மலை பனி இல்லாமல் இருந்தது இதுவே முதல் முறை. இது இப்பகு…
-
-
- 10 replies
- 774 views
- 1 follower
-
-
சிகாகோவில் புகையிரத்தில் 4 பேர் சுட்டுக் கொலை-சந்தேக நபர் கைது! அமெரிக்காவின் சிகாகோவில் புகையிரத்தில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்றும் அந்நாட்டு பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது இதேவேளை 2024 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்காவில் 378 பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்ட…
-
- 0 replies
- 206 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி குஜராத்தி சேவை பதவி, புது டெல்லி 2 செப்டெம்பர் 2024 பல நூற்றாண்டுகளாக, ‘ஸ்வஸ்திகா’ சின்னம் இந்து மதம், ஜைன மதம், மற்றும் பௌத்தத்தில் புனிதமான ஒரு குறியீடாக இருந்து வருகிறது. இது அதிர்ஷ்டம், மங்களம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. கிரகப் பிரவேசம், திருவிழாக்கள், மாங்கல்யம், சமய நிகழ்வுகள் ஆகியவற்றில் இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஆஸ்திரேலியா, கனடா, மற்றும் அமெரிக்காவில் இது ஒரு ஆத்திரமூட்டும் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. 1940-கள் வரை, மேற்கத்திய நாடுகளிலும் இந்தக் குறியீடு பரவலாகவும் பிரபலமாகவும்…
-
- 0 replies
- 313 views
- 1 follower
-
-
உக்ரைன் விமானப்படைத் தளபதி பதவியிலிருந்து நீக்கம். உக்ரைனின் விலையுயர்ந்த புதிய எப் – 16 போர் விமானம் ஒன்று அழிக்கப்பட்டது தொடர்பான விவாதத்திற்கு மத்தியில் உக்ரைன் விமானப்படை தளபதியை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பதவியில் இருந்து நீக்கம் செய்துள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் மைகோலா ஓலேஷ்சுக்கை பணிநீக்கம் செய்ததற்கான காரணத்தை ஜெலென்ஸ்கி குறிப்பிடவில்லை, ஆனால், அனைத்து வீரர்களையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதேவேளை, உக்ரைனின் விமானப்படையின் இடைக்கால தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அனடோலி கிரிவோனோஷ்கோ நியமிக்கப்பட்டுள்ளார் என இராணுவத்தின் பொது ஊழியர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.c…
-
-
- 3 replies
- 821 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கொசுக்களில் ‘EEE’ எனப்படும் அரிய, ஆனால் மிகவும் ஆபத்தான வைரஸ் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த வைரஸ் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடும். ‘ஈஸ்டர்ன் ஈக்வைன் என்செபாலிடிஸ் அல்லது ‘ட்ரிபிள் ஈ’ (Eastern Equine Encephalitis - EEE) என்று அழைக்கப்படும் இந்த வைரஸ், அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் கொசுக்கள் கடிப்பதால் பரவுகிறது. இந்த வைரஸ் அங்கு கண்டறியப்பட்டவுடன், மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள சமூகங்கள் அதிக ஆபத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் இருக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 410 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டெஸ்ஸா வோங் மற்றும் ஜோயல் குயின்டோ பதவி, பிபிசி நியூஸ், சிங்கப்பூரில் இருந்து 3 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவுக்கும், பிலிப்பைன்ஸுக்கும் இடையே ஏற்கெனவே கடல் எல்லை தொடர்பான பிரச்னை நிலவி வருகிறது. இந்த நிலையில் இரு நாடுகளும் தென்சீனக் கடலில் மற்றொரு இடம் தொடர்பாக மோதிக் கொண்டுள்ளன. சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளுமே கடலில் உள்ள பல்வேறு தீவுகள் மற்றும் பகுதிகளுக்கு உரிமை கோருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்த மோதல் அதிகரித்து வருகிறது. இரு நாட்டு கப்பல்களும் மோதிக்கொள்ளுதல், கைகலப்புகள் மற்றும் போர் மிரட்டல் குற்றச்சாட்டுகளும் அதிகரித்து வருகின்றன. …
-
- 1 reply
- 565 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 01 SEP, 2024 | 01:16 PM ஹமாஸ் அமைப்பினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட ஆறுபேரின் உடல்களை மீட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த உடல்களில் அமெரிக்க பிரஜையொருவரின் உடலும் காணப்படுவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. தாங்கள் அவர்கள் இருந்த பகுதிக்கு செல்வதற்கு சற்று முன்னதாக அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.. மீட்கப்பட்ட உடல்களில் கலிபோர்னியாவை சேர்ந்த ஹேர்ஸ் கோல்ட்பார்க் கொலின் என்பவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இவர் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி நெவா இசைநிகழ்ச்சியிலிருந்து துப்பாக்கி முனையில் கடத்தி ச…
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அரிசோனா மாகாணத்தில் போட்டியிடுவதாக அறிவித்து இருந்த சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி(Robert F. Kennedy) தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதற்காக ஆவணங்களை அவர் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டதாக அரிசோணா மாகாண செயலாளர் அட்ரியன் ஃபோன்டஸ் தெரிவித்துள்ளார். 11 வேட்பாளர்கள் இந்நிலையில், நேற்றிரவு நடைபெற இருந்த தேர்தல் பரப்புரையில் நாட்டு மக்களிடையே உரையாற்ற ராபர்ட் எஃப் கென்னடி முடிவு செய்திருந்தார். ராபர்ட் எஃப் கென்னடிக்கு ஆதரவு தெரிவித்து இருந்த சூப்பர் பேக் அமைப்பு ஒன்று கூறும் போது, கென்னடி மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இடையே வேலைவாய்ப்பு தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது. …
-
-
- 12 replies
- 1k views
- 2 followers
-
-
24 AUG, 2024 | 07:53 AM ஜேர்மனியின் சொலிங்ஜென் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். நகரில் பெருமளவானவர்கள் கலந்துகொண்ட திருவிழா நிகழ்வொன்றின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட நபர் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. நபர் கண்மூடித்தனமாக ஏனையவர்கள் மீது கத்திக்குத்தினை மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/191842
-
-
- 16 replies
- 1k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,EPA AND NISHANTH படக்குறிப்பு, கோலாலம்பூரில் நடக்கும் மீட்புப் பணியும்(இடது), 26 அடி பள்ளத்திற்குள் விழுந்த இந்திய பெண்ணும் (வலது) கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி என்ஜி பதவி, பிபிசி நியூஸ் 31 ஆகஸ்ட் 2024, 08:54 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் மலேசியா தலைநகரம் கோலாலம்பூரில் நடைபாதையில் திடீரென ஏற்பட்ட குழிக்குள் (sinkhole) விழுந்து காணாமல் போன இந்திய பெண்ணைத் தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எட்டாவது நாளாகத் தொடரும் தேடுதல் பணியில், இதற்கு மேல் முக்குளிக்கும் வீரர்கள்(divers) உள்ளே செல்வது "மிகவும் ஆபத்து" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவ…
-
- 0 replies
- 370 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், வில் வெர்னோன் பதவி, பிபிசி செய்திகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிரபலமான குறுஞ்செய்தி செயலியான டெலிகிராமின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ், பிரான்சில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெலிகிராம் நிறுவனம், அவரிடம் மறைத்து வைக்க எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. டெலிகிராம் செயலி மீதான விதிமுறை மீறல் குற்றச்சாட்டு தொடர்பாக வடக்கு பாரிஸ் விமான நிலையத்தில் துரோவ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெலிகிராம் செயலி குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்தவில்லை என்…
-
- 5 replies
- 796 views
- 1 follower
-
-
பொது இடங்களில் பெண்கள் பேசக்கூடாது; தலிபான்கள் கட்டுப்பாடு ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பெண்கள் பேசக்கூடாது மற்றும் முகத்தையும் உடலையும் காட்டக்கூடாது என்று தலிபான்கள் கட்டுப்பாட்டை விதித்துள்ளனர். புதிய சட்டங்கள் ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிப்பாக கடுமையாக பாதித்தது, பெண்கள் தங்கள் முகத்தையும் உடலையும் மட்டுமல்ல, தங்கள் குரலையும் வீட்டிற்கு வெளியே மறைக்க வேண்டும். இந்த சட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையும் உரிமைக் குழுக்களும் சமீபத்திய விதிகளை கடுமையாக விமர்சித்துள்ளன. அமெரிக்கப் படைகளை வெளியேற்றி ஆகஸ்ட் 2021 இல் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து , தலிபான்கள் பெண்களின் உரிமைகள் விஷயத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களில் அடைந்த முன்னேற்றத்தைப் ப…
-
- 0 replies
- 375 views
-