உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27025 topics in this forum
-
இங்கிலாந்து நாட்டின் Derbyshire என்ற இடத்தில் நெஞ்சை உறைய வைக்கும் ஒரு பயங்கர விபத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 42 வயது தந்தை ஒருவர் தன்னுடைய 11 வயது மகளுடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் அவருடைய மனைவி, தனது 9 வயது மகனுடன் இன்னொரு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். இருவரும் தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். முன்னாள் சென்று கொண்டிருந்த கார், திடீரென சாலையை விட்டு விலகி, ஓட்டுனரின் கட்டுப்பாடை இழந்து, அருகிலுள்ள ஆற்றில் விழுந்து கவிழ்ந்தது. பின்னால் வந்த அவருடைய மனைவியின் காரும், அதேபோல கட்டுப்பாட்டை இழந்து, அதே ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் இரண்டாவது காரில் வந்த மனைவியும், மகனும் முதல் கார…
-
- 0 replies
- 429 views
-
-
சென்னை:""என் குடும்பத்தில், சம்பந்தம் எடுத்துள்ளதால், போலீஸ் அதிகாரி சண்முகராஜேஸ்வரனுக்கு, என்ன விளைவு ஏற்படுமோ...'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார். கருணாநிதி கொள்ளு பேத்தியும், சினிமா நடிகராக இருந்த, மு.க.முத்து-சிவகாம சுந்தரியின் பேத்தியும், தொழில் அதிபர் ரங்கநாதன், தேன்மொழி மகளுமான அமுதவல்லிக்கும், திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி., சண்முகராஜேஸ்வரன் மகன் சித்தார்த்க்கும், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நேற்று திருமணம் நடந்தது. மணமக்களை வாழ்த்தி கருணாநிதி பேசியதாவது:டில்லியில், எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும், கட்சி சார்பற்று தலைவர்கள் பங்கேற்கின்றனர்; தமிழகத்தில் அந்த நிலை இல்லை.கருணாநிதி வீட்டில் அல்லது அவரது குடும்பத்தார் வீட்டில், இதுபோன்ற, சம்பந்தங்…
-
- 0 replies
- 693 views
-
-
நாக்பூர்: தமது நிறுவனங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகளை மிகக் கடுமையாக மிரட்டியுள்ளார் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கத்காரி. பாஜகவின் தலைவராக இருந்த கத்காரிக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர் மீண்டும் பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருந்த நிலையிலும் இந்த சோதனை நடைபெற்றது. இதனால் அவர் தலைவர் பதவியை இழக்க நேரிட்டது. ராஜ்நாத்சிங் மீண்டும் தலைவரானார். இந்நிலையில் டெல்லியில் இருந்து நாக்பூர் திரும்பிய கத்காரிக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய கத்காரி, பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்த அதிகாரிகள் அனைவரும் எங்கே போவார்கள்? ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, அந்த அதிகாரிகளை காப்பாற்ற காங்கிரஸ் தலைவ…
-
- 0 replies
- 481 views
-
-
சென்னை: கடலூர் மாவட்டத்தில் ராமதாஸ் நுழைய விதிக்கப்பட்ட தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு பகுதிகளில் அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். வடலூரில் கடந்தவாரம் அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதி பாமக எம்.எல்.ஏ. குரு ஆகியோர் கடலூர் மாவட்டத்துக்குள் நுழைய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமாரும் உத்தரவிட்டிருந்தார். இந்த தடை உத்தரவு 21.1.2013 முதல் 20.3.2013 வரையிலான காலத்துக்கு அமலில் இருக்கும் என்று அவர் அறிவித்து இருந்தார். இந்நிலையில் ராமதாசுக்கு தடை விதித்ததை எதிர்த்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட…
-
- 0 replies
- 287 views
-
-
மத்திய உரத்துறையில் மானியம் வழங்குவது தொடர்பான விவகாரத்தை பயன்படுத்தி உர நிறுவனங்களுக்கு லாபம் கிட்டுமாறு முறைகேடு நடத்தி மத்திய அரசுக்கு ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தமிழக முதல்வர் ஜெ., திடுக் புகார் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தி தி.மு.க.,வை சேர்ந்த மத்திய உரத்துதுறை அமைச்சர் அழகிரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெ., வுக்கு எழுதியுள்ள புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய உரத்துறையில் பெரும் முறைகேடு நடந்திருக்கிறது. உரங்களை சந்தைக்கு அனுப்புவதில் நடந்தது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா கூட அதிருப்தி தெரிவித்துள்ளார். மானியம் குறையும் என கருதி தேவையில்லாமல…
-
- 1 reply
- 364 views
-
-
புதுடில்லி: பிரதமர் மன்மோகன் சிங்கை அடிப்பேன் என்று நான் பேசவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். நான் பேசியதை சில ஊடகங்கள் தவறாக அர்த்தப்படுத்தி வெளியிட்டுள்ளன என்று அவர் குறை கூறியுள்ளார். உர விலை உயர்வு உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதமரை 10 க்கும் மேற்பட்ட முறை சந்தித்து விட்டேன். இதற்கு மேல் அவரை நான் அடிப்பேன் என்று மம்தா பேசியதாக திங்கட்கிழமை செய்தி வெளியானது. இதையடுத்து மம்தா மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை இணையமைச்சர் தீபா தாஷ்முன்ஷி வலியுறுத்தினார். இந்நிலையில் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை மம்தா விளக்கமளித்தார். அப்போது பிரதமரை அடிப்பது என்று நான் பேசவில்லை. ஊடகத்தின் ஒரு பிரிவினர் தங்களின்…
-
- 1 reply
- 430 views
-
-
இஸ்ரேலின் 19வது நாடாளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு 22ஆம் நாளிரவு முடிவடைந்துள்ளது. பொது மக்களின் கருத்துக் கணிப்பின்படி, நெத்தன்யாஹு தலைமையிலான லிகுட் கட்சியும், எமது தாயகக் கட்சியும் இணைந்த கட்சிக் கூட்டணி, 31 இடங்களைப் பெற்று அமைச்சரவையை உருவாக்கும் என தெரியவந்துள்ளது. இக்கூட்டணி அடங்குகின்ற இஸ்ரேல் ஐக்கிய வலது சாரி கூட்டணி 61 அல்லது 62 இடங்களை மட்டுமே பெறக் கூடும். ஆனால் விதியின்படி, கூட்டணி அரசை உருவாக்க குறைந்தபட்சம் 61 இடங்கள் தேவைப்படும். எனவே, நெத்தன்யாஹு அமைச்சரவையை உருவாக்குவது மிக கடினமாக இருக்குமென மதிப்பிடப்படுகிறது. http://tamil.cri.cn/121/2013/01/23/104s124801.htm Israel elections: Benjamin Netanyahu declares victory http://www.youtube.com/watch?v…
-
- 1 reply
- 533 views
-
-
சென்னை: ஏராளமான தடைகளையும், இடைஞ்சல்களையும் சந்தித்தாலும், அவற்றை தவிடுபொடியாக்கி சாதனை படைத்து வருவதாக சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில் கருணாநிதி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி நாளை தனது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில், அவருக்கு திமுக தலைவர் கருணாநிதி அனுப்பியுள்ள பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில்,"ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக இருக்கும் தாங்கள், ஏராளமான தடைகளையும், இடைஞ்சல்களையும் சந்தித்தாலும், அவற்றை தவிடுபொடியாக்கி சாதனை படைத்து வருகின்றீர்கள். தடைக் கற்களை படிக்கட்டுகளாக மாற்றியிருப்பதே மிகப்பெரிய வெற்றியாகும். இந்த அசாதாரண சூழ்நிலையில், மத்தியில், பாதுகாப்பான, நிலையான ஆட்சியை தங்களால்தான் தர ம…
-
- 7 replies
- 1.6k views
-
-
நோர்வே அரசாங்கத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கிவருகின்ற சிறுவர் காப்பகங்களில் 52 சிறுவர்கள் மீது மோசமான துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகத்துக்குட்பட்ட சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 42 பேர் விசாரணைக்குட்படுத்தப்பட்டு குற்றங்கள் நிருபிக்கப்பட்டு தண்டனைகளும் வழங்கப்பட்டிருப்பதாக நோர்வேயின் ஊடகமான Addresseavisen தனது இணையத்தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்தே இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெற்று வந்திருப்பதால் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நோர்வேயில் குழந்தைகள் பராமரிப்பில் பெற்றோர்கள் தவறிழைத்திருப்பதாகக் கூறிரய நோர்வே சிறுவர் காப்பகங்களால் சிறுவர்கள் பெற்றோரிடதிலிருந்து பிரிக்கப்படுகின்றனர். …
-
- 0 replies
- 475 views
-
-
'ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வது பற்றி மக்கள் கருத்து அறியப்படும்' - கமரன் பிரிட்டனின் ஆளும் கான்சர்வேட்டிவ் கட்சி அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால், பிரிட்டன் தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா அல்லது இல்லையா என்பது குறித்து ஒரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தப் போவதாக பிரதமர் டேவிட் கமரன் தெரிவித்துள்ளார் நெகிழ்வுத்தன்மையுடைய, பொருந்திப் போகக்கூடிய மேலும் வெளிப்படையான ஒரு உறைவை உருவாக்கும் வகையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சமரச பேச்சுவார்த்தைகளை நடத்தும் என்றும் அதன் முடிவுகள் 2018 இல் மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்றும் கமரன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்தும் இருக்கும் வகையிலான உறவையே தான் விரும்ப…
-
- 13 replies
- 629 views
-
-
அண்ணனை 12 வயதான தம்பியே சுட்டுக்கொண்ட சம்பவம் கனடாவின் மாண்டரியல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் மாண்ட்ரியலின் புறநகர்ப்பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தில் மாலைவேளையில் திடீரென்று தனது 16 வயது அண்ணனை, 12 வயதான தம்பி துப்பாக்கியால் சுட்டுகொன்றான். பொலிசார் துப்பாக்கிசூடு நடந்த வீட்டுக்கு விரைந்து சென்று அச்சிறுவனை கைது செய்து அவனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். பின்பு அச்சிறுவனை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அவனது பெற்றோர்களும் அந்த அறையில் இருந்தனா். அவனைப் பற்றிய தகவல்களை பொலிசார் பத்திரிகைகளுக்குத் தெரிவிக்கவில்லை. அந்த சிறுவன் குறித்து அண்டை வீட்டார் கூறுகையில், இந்தச் சிறுவா்கள் மென்மையானவர்கள், அன்போடு பழகுவார்கள், உதவி செய்யும் மனப்பான்மை நிற…
-
- 0 replies
- 290 views
-
-
விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி இன்று (23.01.2013) மாலை 4.30 மணி அளவில் இந்திய தேசிய லீக் கட்சியினர் ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமலஹாசனின் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர். http://tamil.allnews.in/news/state-news/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%…
-
- 1 reply
- 488 views
-
-
சென்னிமலை அருகே பொரையான்காடு பகுதியில் இட்லி சாப்பிட்ட ஒரே குடும்பத்தினர் 7 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே பொரையன்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (65). இவரது மனைவி லட்சுமியம்மாள் (60). இவர்கள் வழக்கம்போல செவ்வாய்க்கிழமை இரவு கிரைண்டரில் மாவு அரைத்து, இன்று காலை இட்லி அவித்தனர். பின்னர் தனது மகன்கள் கணேஷ் (48), ராஜா (35), மருமகள்கள் கவிதா (32), மற்றொரு கவிதா (28), பேத்தி தீபா (15) ஆகியோருக்கு பரிமாறினர். பின்னர் சுப்பிரமணியமும், லட்சுமியம்மாளும் இட்லியை சாப்பிட்டனர். இந்நிலையில் கணேசனுக்கு காலை திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது. பின்னர் மற்ற 6 பேருக்கும் வாந்தி பேதி ஏற்பட்டது. இதையடுத்து இவர்களது உறவினர்கள், 7 பேரையும் மீட்டு ஈரோடு அ…
-
- 0 replies
- 666 views
-
-
கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அந்த படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும் இந்திய தேசிய லீக் கட்சியினர் 23.01.2013 புதன்கிழமை சென்னை ஆழ்வார் பேட்டையில் கமல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக, விஸ்வரூபம் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி முஸ்லிம் அமைப்பினர் இன்று உள்துறை செயலாளரிடம் மனு அளித்தனர். இதனால் விஸ்வரூபம் படத்தை திரையிடுவதற்கு 15 நாட்களுக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். http://tamil.allnews.in/news/state-news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE…
-
- 0 replies
- 435 views
-
-
தே.மு.தி.க.வின் மத்திய சென்னை, தென் சென்னை மாவட்டம், பகுதி கழக மகளிர் அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:- மத்திய சென்னை மாவட்ட செயலாளராக கெஜலட்சுமி, துணை செயலாளர்களாக சுசிலா, லோகம்மாள், ஹேமாவதி, பி.பானுபிரியா. அண்ணாநகர் பகுதி செயலாளராக மல்லிகா, துணை செயலாளர்களாக மஞ்சுளா, மணியம்மாள், மீனா, தனலட்சுமி. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதி செயலாளராக உமா மகேஸ்வரி, துணை செயலாளர்களாக சசிகலா, கஸ்தூரி, மஞ்சுளா, லதா. வில்லிவாக்கம் பகுதி செயலாளராக சாந்தி, துணை செயலாளர்களாக விஜி, யசோதா, மணிமேகலை, காஞ்சனா. ஆயிரம்விளக்கு பகுதி செயலாளராக சல்த்மேரி, துணை செயலாளர்களாக தாட்சயணி, புவனேஸ்வரி, சரோஜா, பானுமதி. துறைமுகம் பகுதி செயலாளராக உமா மகேஸ்வரி, துணை ச…
-
- 0 replies
- 397 views
-
-
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நான்கு கால்பந்து வீரர்கள், தூங்கிக்கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து புகைப்படமும் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் பரபரப்பாக நடந்தது. இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் Anton Rodgers, 19, Lewis Dunk, 21, George Barker, 21, மற்றும் Cook, 21 ஆகிய நான்கு வீரர்கள், கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த ஒரு போட்டியில் கோப்பையை வென்ற சந்தோஷத்தை கொண்டாடுவதற்காக Brighton நகரில் உள்ள ஓட்டல் பார் ஒன்றிற்கு சென்றுள்ளார்கள். அங்கு இளம்பெண் ஒருவரை சந்தித்து அவருடன் தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்கள். பின்னர் அந்த பெண்ணுடன் நான்கு கால்பந்து வீரர்களும…
-
- 6 replies
- 1.4k views
-
-
பாரதிய ஜனதாவும் அதன் தாய் வீடான ஆர் எஸ் எஸ்ஸும் பயங்கரவாதச் செயல்களுக்குப் பயிற்சியை மேற்கொண்டதாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஷிண்டேயின் கருத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத்தும் உறுதிபடுத்தியிருந்தார். இந்நிலையில், மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் இதனை உறுதிப்படுத்தும் வகையில், “தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஷரீப்பில் நடந்த தீவிரவாத குண்டு வெடிப்பு தாக்குதல்களில், குறைந்தபட்சம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 10 பேர் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன’’ என்று தெரிவித்துள்ளார். குறிப்பா…
-
- 0 replies
- 345 views
-
-
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிநி, தன்னுடைய கொள்ளுப் பேத்தியும், மூத்த மகன் மு.க. முத்துவின் பேத்தியுமான அமுதவல்லியின் திருமணத்தை இன்று காலை சென்னை ஈஞ்சம்பாக்கம் கவின் சோலை யில் நடத்தி வைத்தார். மு.க.முத்து - சிவகாமசுந்தரி தம்பதியரின் மகள் வழிப் பேத்தியும், சி.கே.ரங்கநாதன் - தேன்மொழி ஆகியோரின் மகளுமான அமுதவல்லிக்கும், சண்முக ராஜேஸ்வரன் - சீ.சுமதி ஆகியோரின் மகன் சித்தார்த்துக்கும் இன்று கருணாநிதியின் தலைமையில் நடைபெற்ற திருமணத்தில் கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டு வாழ்த்தினர். கருணாநிதியின் புதல்வர்களும் அரசியலில் தி.மு.க அடுத்த வாரிசுக்கான போட்டியில் இருப்பவர்களுமான மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் மு.க.செல்வம் உள்ளிட்டோரும், பேரன்…
-
- 0 replies
- 417 views
-
-
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட ராகுல் 'நேர்மையான் அரசியல் நடத்த விரும்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல், இன்று முறைப்படி டெல்லியில் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல். "நாட்டில் சக்தி வாய்ந்த கட்சியாக காங்கிரஸ் விளங்குகிறது. அரசியலில் மாற்றத்தை கொண்டு வர இளைஞர்களை கட்சிக்குள் இணைக்க வேண்டியுள்ளது. காங்கிரசால் மட்டுமே நாட்டில் அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியும். இளைஞர்களுடன் முதிர்ந்த அரசியல் தலைவர்களையும் இணைத்து அரசியலில் மாற்றத்தை நிச்சயம் கொண்டு வருவோம். இந்த செய்தி மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிற்கும் பொருந்தும்…
-
- 0 replies
- 416 views
-
-
ஒண்டோரியோ மாகாணத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 7ல் உள்ள 24 மற்றும் 26 குறுக்கு சாலைகள் பயங்கர தீவிபத்து காரணமாக மூடப்பட்டது என காவல்துறை அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் Brock Road பகுதியின் மேற்கு பகுதியும் மூடப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். இன்று அதிகாலை 4.45 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பதை இதுவரை காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் அறிவிக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த தீவிபத்தினால், எவ்வித உயிர்ச்சேதமும் இல்லை என்பது மட்டும் ஒரு ஆறுதல் செய்தி. தீயணைப்பு துறை அதிகாரி Steve Fowlds அவர்கள் நமது செய்தியாளரிடம் தெரிவித்தபோ…
-
- 0 replies
- 440 views
-
-
இங்கிலாந்தில் காணாமல் போன இந்திய மாணவரின் உடல் கால்பந்து மைதானம் அருகேயுள்ள கால்வாயில் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பெங்களூரைச் சேர்ந்த சவுபிக் பால் என்ற அந்த மாணவர். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருள் வடிவமைப்பு துறையில் பயின்று வந்தார். கால்பந்து மைதானத்தில் உணவுப்பண்டங்கள் விற்பனை செய்வதை பகுதி நேர வேலையாகவும் சவுபிக் பால் செய்து வந்தார். இந்தநிலையில் அவர் புத்தாண்டு தினத்தன்று திடீரென்று காணாமல் போனார். காணமல் போன சவுபிக் பாலை கண்டுபிடிப்பதற்காக, ப்ரீமியர் லீக் போட்டிகளின்போது, டிஜிட்டல் போர்டுகளில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், ருல்ட் டிராஃபோர்டு நகரில் உள்ள மான்செஸ்டர் யுனைட்டெட் கால்பந்து அணியின் மைதானம் அருகே கால்வாயில் அவரது …
-
- 1 reply
- 458 views
-
-
தி.மு.க., தலைவர் கருணாநிதியின், முதல் கொள்ளு பேத்தி அமுதவல்லி திருமணம், சென்னையில் இன்று நடக்கிறது. அதில், "குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்று, குடும்ப ஒற்றுமையை, கட்சியினருக்கு பறைசாற்ற வேண்டும். திருமணத்தை புறக்கணித்தால், அவர்களிடம் பேசுவதை நிறுத்திக் கொள்வேன்' என, கருணாநிதி கட்டளையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மத்திய அமைச்சர் அழகிரி, நேற்று காலை, கோபாலபுரம் வீட்டில், கருணாநிதியை சந்தித்து பேசினார். இருவரின் சந்திப்பால், இரு வாரங்களாக, அவர்களின் மத்தியில் நிலவிய, பனிப்போர் விலகியது.இம்மாதம், 3ம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில், "தமிழ் சமுதாய மேன்மைக்காக, எனக்கு பின் ஸ்டாலின் பாடுபடுவார்' என, கருணாநிதி பேசினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகைய…
-
- 0 replies
- 613 views
-
-
புதுடில்லி:பா.ஜ. கட்சியின் தேசிய தலைவராக மீண்டும் ராஜ்நாத்சிங் நியமிக்கப்படலாம் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. இதற்கென நிதின்கட்காரி தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். நாளை ராஜ்நாத்சிங் தேர்வு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் கடந்த 2005 முதல் 2009 வரை பா.ஜ., தலைவராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.தேசிய தலைவராக மகாராஷ்டிரா மாநிலத்தைச்சேர்ந்த நிதின்கட்காரி உள்ளார்.இவரது பதவி காலம் கடந்த டிசம்பர் மாதமே நிறைடைவந்தையொட்டி, கட்சி விதிகளின்படி தேர்தல் மூலம் தலைவரை தேர்ந்தெடுக்க பா.ஜ. மேலிடம் நாளை நடக்கும் என அறிவித்தது. எனவே நிதின்கட்காரி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என செய்திகள் வெளியாயின.மேலும் சுஷ்மா சுவராஜ் ,மகே…
-
- 1 reply
- 702 views
-
-
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர், தனது 28 வயது துருக்கி காதலனுக்காக தனது வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்திருந்த சொத்து முழுவதையும் இழந்து, தற்போது தனிமையில் தவித்துக் கொண்டிருக்கின்றார். இங்கிலாந்தைச் சேர்ந்த Pat Ekins என்ற 50 வயது பெண், Marmaris என்ற இடத்தில் 28 வயது முஸ்லீம் இளைஞர் Ibrahim Halin என்பவரை சந்தித்து உள்ளார். கண்டதும் அவர் மீது காதல் கொண்ட அந்த பெண், தனது காதலருக்காக Preston, Lancashire, என்ற இடங்களில் உள்ள தனது வீடுகளை தனது குடும்பத்தினர்களுக்கு தெரியாமல் விற்பனை செய்து அதில் கிடைத்த பணத்தை தனது காதலருக்கு கொடுத்துள்ளார். மேலும் தனது வாழ்நாள் முழுவதும் அவர் சேமித்து வைத்திருந்த £70,000 பணத்தையும் காதலரிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் …
-
- 3 replies
- 568 views
-
-
:காங்கிரஸ் கட்சியும், இந்தியாவும் என் உயிர், என, காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் பேசினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், துணைத் தலைவர், ராகுல் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியும், இந்த நாட்டு மக்களும் என் உயிர். கட்சி மற்றும் நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்காக நான் பாடுபடுவேன். என் இந்த போராட்டத்திற்கு, உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும். (ராகுல் இவ்வாறு கூறியதும், சோனியா, மன்மோகன் சிங் உட்பட கூட்டத்தில் பங்கேற்ற, 1,000க்கும் மேற்பட்டவர்கள், எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்) இந்த நாட்டின் இளைஞர்கள், அரசியல் மீதும், அரசியல்வாதிகள் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த கோபத்திற்கு காரணம் என்ன தெரியுமா... அரசியல் வர்க்கத்திலிருந்து அவர்கள் நீக்கி வைக்கப்பட்டுள்ளனர். அ…
-
- 10 replies
- 620 views
-