உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26662 topics in this forum
-
சென்னையில் இருந்து, மதுரை மற்றும் திருவனந்தபுரத்திற்கு, அதிவேக, "துரந்தோ' ரயில் சேவையை, முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார். இந்த முறை, ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக, மத்திய அரசு விழாவில் முதல்வர் பங்கேற்றது, அரசியல் வட்டாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து, கோவை, டில்லி - நிஜாமுதீன் உள்ளிட்ட பகுதிகளுக்கு, இடை நிற்காமல் செல்லும், துரந்தோ ரயில்கள், ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை சென்ட்ரலிலிருந்து, மதுரை மற்றும் திருவனந்தபுரம் இடையே, துரந்தோ ரயில் சேவை துவக்க, தெற்கு ரயில்வே முடிவெடுத்தது.இந்த ரயில் சேவையை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று மாலை, சென்னை சென்ட்ரலில் இருந்து துவக்கி வைத்தார். முதலி…
-
- 0 replies
- 565 views
-
-
நேட்டோ படையில் பெட்ரோல் டேங்க் வாகனம் ஒன்று நேற்று தலிபான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கொழுந்துவிட்டு எரிந்த வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுப்பதற்காக உள்ளூர் மக்கள் பெரும் ஆர்வம் காட்டியதால், மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ வாகனங்களின் தேவைகளுக்காக பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று ஆப்கானிஸ்தான் எல்லையில் வந்து கொண்டிருந்தபோது, தலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தி, அந்த டேங்கர் லாரியை தீவைத்து எரித்தனர். தீ பயங்கரமாக எரிந்து கொண்டிருந்தபோது, நிலைமையின் விபரீதத்தை உணராத உள்ளூர் பொதுமக்கள், அந்த லாரியில் உள்ள பெட்ரோலை கைப்பற்றுவதற்காக பிளாஸ்டிக் கேனுடன் முண்டியடித்த காட்சியை பத்திரிகையாளர் ஒருவர் படமெடுத்துள…
-
- 0 replies
- 499 views
-
-
அமெரிக்க பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான குழந்தைகள், மற்றும் ஆசிரியைகளின் பெயர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் 12 மாணவிகளும், 8 மாணவர்களும் பலியாகி உள்ளனர். இவர்கள் அனைவருமே 6 முதல் 7 வரை உள்ள பச்சிளம் பாலகர்கள் என்பதே மிகவும் அதிர்ச்சிக்குரிய செய்தியாகும். இந்த குழந்தைகளின் உடலில் இருந்து 11 குண்டுகள் வரை சுடப்பட்டு இருக்கிறது. துப்பாக்கி சூடு நடத்திய Adam Lanza என்பவனுக்கும் ஆசிரியைகளுக்கும் கடும் போராட்டமே நடந்துள்ளதாக தெரிகிறது. குழந்தைகளின் உயிர்களை காப்பதற்காக ஆசிரியைகள் நான்கு பேர் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர். ஆசிரியை விக்டோரியா என்பவர் Adam Lanza துப்பாக்கியால் சுடும்போது குழந்தைகளுக்கு முன்னாள் தான…
-
- 2 replies
- 486 views
-
-
ரஷ்யாவில் உள்ள ஒரு ஆற்றின் கீழே எரிமலை போல நெருப்புகுழம்பு எரிந்து கொண்டிருப்பதை அமெரிக்காவின் சாட்டிலைட் படம் பிடித்துள்ளது. இதனால் ரஷ்யா முழுவதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ரஷ்யாவின் Kamchatka Peninsula என்ற இடத்தில் உள்ள ஆற்றின் தண்ணீருக்கு அடியில் லாவா என்ற எரிமலையின் நெருப்புக்குழம்பு ஓடிக்கொண்டிருப்பதை அமெரிக்காவின் நாசா படம் பிடித்துள்ளது. அந்த ஆற்றின் தண்ணீர் பயங்கரமாக கொதிநிலையில் உள்ளதாகவும், அருகிலுள்ள கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், உடனே அந்த கிராமத்தில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்கவும் ரஷ்ய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. வோல்கானா என்று சொல்லப்படும் இந்த …
-
- 10 replies
- 3.7k views
-
-
படித்த இளைஞர்கள் தொழில் தொடங்கும் திட்டத்துக்கு ரூ. 100 கோடி: ஜெயலலிதா உத்தரவு சென்னை: படித்த இளைஞர்கள் தொழில் தொடங்கும் புதிய திட்டத்துக்கு ரூ. 100 கோடி ஒதுக்கி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக மாற்ற உதவும் நோக்குடன் 'புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம்' என்ற புதிய திட்டத்தை 2012-13 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி, படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு, தொழில் தொடங்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, நிதிநிறுவனங்களில் நிதியுதவி பெற உதவுவதுடன், பெரும் தொழில் நிறுவனங்க…
-
- 0 replies
- 249 views
-
-
இங்கிலாந்தில் உள்ள Rotherham, South Yorkshire என்ற பகுதியில் மனைவியை ஒயிட் ஸ்பிரிட் பயன்படுத்தி எரித்துக் கொன்ற வழக்கில், 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Stephen Eastwood என்ற 55 வயது மனிதர், தன்னுடைய் 50 வயது மனைவியை சிறிய அபத்தமான ஒரு காரணத்திற்காக ஒயிட் ஸ்பிரிட் பயன்படுத்தி எரிந்துக் கொன்றார். இவர் தன் மனையுடன் சென்ற கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் தன்னுடைய திருமண நாளை கொண்டாடினார். இவ்வருடம் கிறிஸ்துமஸ் நெருங்கிய வேளையில், அந்த சம்பத்தில் நடந்த ஒரு சிறிய கசப்பான நினைவால், ஆத்திரமாகி தன்னுடைய மனைவியை எரித்து கொன்றதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இரவு உடையுடன் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் உடை மீது ஒயிட் ஸ்பிரிட…
-
- 0 replies
- 478 views
-
-
பிரிட்டனில் ரகசிய ஏஜண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ரஷ்யாவை சேர்ந்தவர் விஷம் வைத்து கொல்லப்பட்ட வழக்கில் பின்னணியில் ரஷ்ய அதிபர் விளாடிமின் புதிர் இருப்பதாக எழுந்த சர்ச்சையால், ரஷ்யாவின் பரபரப்பு காணப்படுகிறது. பிரிட்டனின் ரகசிய ஏஜண்டாக பணிபுரிந்து வந்தவர் Alexander Litvinenko என்ற 43 வயது நபர், தான் தங்கியிருந்த ஓட்டலில் குடித்த தேநீரில் radioactive isotope polonium-210 என்ற வகை விஷம் கலக்கப்பட்டதால், கொலை செய்யப்பட்டதாக 2006ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தற்போது திடீர் திருப்பமாக இந்த கொலைக்கு காரணமாக ரஷ்யாவின் FSB agent Kremlin என்பவர் குற்றவாளியாக கருதப்படுவதாகவும், அவருக்கு பின்னால் ரஷ்யாவின் அதிபர் விளாடிமின் புதிர் இருக்கலாம் என்றும் பிர…
-
- 0 replies
- 564 views
-
-
பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை பெருங்குடியில் நேற்று முன்தினம் பஸ் மீது லாரி மோதியதில் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தார். இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப…
-
- 14 replies
- 1.1k views
-
-
சிரிய அதிபர் அசாத்தின் இறுதி நகர்வுகள் 10/12/2012இலன்று சிரிய அரசின் வெளியுறவுத் துறைப் பேச்சாளர் ஜிகாத் மக்திஸ்சி பதவி விலகியது சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியின் சரிவின் தொடக்கம் என்று கருதப்படுகிறது. அசாத்தின் படைகளின் இரு போர் விமானங்களை கிளர்ச்சிக்காரர்கள் சுட்டு வீழ்த்தியதும் சிரியக் கிளர்ச்சிக்காரர்களை ஐக்கிய அமெரிக்கா அங்கீகாரம் செய்தமையும் அசாத்தின் ஆட்சிக்குப் பேரிடிகளாகும். விமானப்படையும் ஏவுகணைகளும் சிரிய உள்நாட்டுப் போரின் சமநிலை கிளர்ச்சிக்காரர்களிற்குச் சாதகமாக 2012 மே மாதத்தில் இருந்து மாறிவிட்டது எனப் பல படைத்துறை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதுவரை காலமும் அல் அசாத்தின் விமானப்படைகள் போர் முனையில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால் போர் விமா…
-
- 7 replies
- 1.2k views
-
-
சென்னை: மதிமுக நிர்வாகிகள் 250 பேர் அக்கட்சியிலிருந்து விலகி, இன்று அதிமுகவில் இணைந்த நிலையில், சமீபத்தில் அதிமுகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு ஜெயலலிதா இனோவா காரை பரிசாக வழங்கினார். மதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத்,அக்கட்சித்தலைவர் வைகோவுடன் ஏற்பட்ட மோதலால், கட்சியிலிருந்து ஓரம்கட்டப்பட்டார். இதனையடுத்து அவர் அக்கட்சியிலிருந்து விலகி, சமீபத்தில் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் சேர்ந்தார். அவருக்கு அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுகவுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் நாஞ்சில் சம்பத் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார். இந்நிலையில் நாஞ்சில் சம்பத் மதிமுகவில் உள்ள தன் ஆதரவாளர…
-
- 3 replies
- 760 views
-
-
டோக்கியோ: கிழக்கு சீனக் கடலில் சர்ச்சைக்குரிய தியாவ்யூ தீவுப் பகுதியில் சீனாவின் போர் விமானம் இறங்கியதைத் தொடர்ந்து ஜப்பானும் எப்.15 ரக போர் விமானங்களை அப்பகுதியில் இறக்கியிருப்பதால் பதற்றம் நிலவி வருகிறது. தியாவ்யூ தீவு, இயற்கை எரிவாயு வளம் மிக்கது. இத்தீவுக்கு சீனாவும் ஜப்பானும் உரிமை கொண்டாடி வந்தன. இந்த நிலையில் தீவை உரிமையாளரிடமிருந்து விலைபேசி தமது நாட்டுடன் இணைத்துக் கொண்டது ஜப்பான். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மேலும் அப்பகுதிக்கு தமது ரோந்து கப்பல்களையும் அனுப்பி வந்தது. தற்போதும் அப்பகுதியில் கண்காணிப்பு கப்பல்களை சீனா நிறுத்தி இருக்கிறது. இந்நிலையில் தியாவ்யூ தீவு அருகே சீனாவின் போர் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்…
-
- 0 replies
- 744 views
-
-
Embattled U.N. envoy Susan Rice is dropping out of the running to be the next secretary of state after months of criticism over her Benghazi comments, she told NBC News on Thursday. “If nominated, I am now convinced that the confirmation process would be lengthy, disruptive and costly – to you and to our most pressing national and international priorities,” Rice wrote in a letter to President Obama, saying she’s saddened by the partisan politics surrounding her prospects. “That trade-off is simply not worth it to our country...Therefore, I respectfully request that you no longer consider my candidacy at this time,” she wrote in the letter obtained by NBC News. http:…
-
- 3 replies
- 565 views
-
-
இந்திய பெருங்கடல் பகுதியில் எதிரி நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதத்தில், தென்பிராந்திய விமானப்படை பிரிவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. "சுகோய்-30' உள்ளிட்ட போர் விமானங்களை கையாளும் விதத்தில், சூலூர் விமான படை தளம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. 2016ம் ஆண்டில், இது முழு அளவில், செயல்பாட்டுக்கு வரும்,'' என, தென்பிராந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ஆர்.கே.ஜாலி தெரிவித்தார். கோவை அருகேயுள்ள சூலூர் விமானப்படை தளத்தில், ஏர்மார்ஷல் ஜாலி நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய பெருங்கடல் பகுதி, 4000 கி.மீ., நீளத்தில் மிகப்பெரிய கடற்கரையை கொண்டது. இப்பகுதியில் 97 சதவீத வர்த்தகமும் கடல் போக்குவரத்தை நம்பி உள்ளது. நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த …
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழகத்தில் கூலிப்படைகள் உருவாக மதுவே காரணம் என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டினார்.தமிழகத்தில், பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, 2வதுநாள் விழிப்புணர்வு பிரசார நடைபயணத்தை, தூத்துக்குடிமாவட்டம் காந்திநகரில், நேற்று காலை வைகோ துவங்கினார். சொக்கன்குடியிருப்பு, வடக்குஉடைபிறப்பு,மணிநகர், நெய்யூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக, தொண்டர்களுடன் வந்த அவர், வழியில், ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் பள்ளி மாணவ,மாணவியரை சந்தித்து, மதுவின் தீமை குறித்தும், அதை ஒழிக்கவேண்டியதன் அவசியம் குறித்தும், துண்டுபிரசுரம் தந்து வலியுறுத்தினார். மதுஒழிப்பு கொள்கையில் உறுதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். உடன்குடியில் வைகோ பேசியதாவது: தி.மு.க.,- அ.தி.மு.க., அரசுகள் மது…
-
- 0 replies
- 515 views
-
-
நேற்று அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியா மாநிலத்தில் உள்ள சிசன்வில் என்ற இடத்தில் இடம்பெற்ற எரிவாயு விபத்தொன்றில் அந்த மாகாணத்தின் பெருந்தெருவான பாதை 77 இன் ஒரு பகுதி எரிந்து சாம்பராகியது. இந்த விபத்தில் நான்கு வீடுகளும் எரிந்து தரை மட்டமானபோதும் உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை. இந்தப்பாதையே பெரும்பாண்மையான போக்குவரத்துக்களிற்கு உபயோகிகப்பட்டு வந்தபோதிலும் அதிஸ்டவசமாக விபத்து நடந்த போது எந்த வாகணங்களும் அந்தப் பகுதியில் இருக்கவில்லை. சிசன்விலிற்கும் பிகாற்றோலியாவிற்கும் இடைப்பட்ட இந்த விபத்தினால், 800 அடி நீளத்திற்குப் பரவிய இத் தீ பெருவீதியின் இருமருங்குப் பாதுகாப்பு தடுப்புக்கள் மற்றும் பாதைகாட்டிகள் அனைத்தையும் உருக்கிச் சாம்பராக்கியதுடன், பெருந்தெருவில் பாரிய குழி…
-
- 0 replies
- 381 views
-
-
2030ஆம் ஆண்டளவில் சீனாவின் பொருளாதாரம் அமெரிக்காவின் பொருளாதார நிலையை விட முன்னேற்றம் காண்பதுடன், வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆசியாவின் பொருளாதார ஆதிக்கம் உயர்வடைந்து காணப்படுமென அமெரிக்காவின் புலனாய்வு பிரிவின் மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் பொருளாதார நிலை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியான நிலையிலேயே காணப்படுமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. '2030இல் சர்வதேச பொருளாதாரத்தின் போக்கு' என பெயரிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, இதற்கு முன்னர் 2008ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் 'மதிநுட்பமாக சிந்திப்பது – எதிர்காலத்தை எதிர்வுகூறுவதை தவிர்ப்பது' குறித்த வி…
-
- 2 replies
- 726 views
-
-
தென் சீனக்கடல் பகுதியில் ஜப்பான் கட்டுப்பாட்டில் உள்ள சென்காகு தீவுகள் மீது சீனா மற்றும் தைவான் ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. எண்ணெய் வளம், மீன்பிடித் தொழில் மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகளுக்காக அந்த தீவுகளை கைப்பற்றும் முயற்சியில் இந்த நாடுகள் இறங்கியுள்ளன. கடந்த சில வருடங்களாக இந்த தீவுகள் மீதான உரிமை பிரச்சினை புகைந்து வரும் நிலையில், அந்த தீவுகளை தனிநபரிடமிருந்து வாங்கிவிட்டதாக ஜப்பான் அரசு சமீபத்தில் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் சீனா இடையே பேச்சு வார்த்தையும் நடந்தன. இந்நிலையில், சீனா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஜப்பான் எல்லைப் பகுதிக்குள் பறந்து சென்றது. இது கடுமையான கண்டனத்திற்குரியது என்று ஜப்பான் பெய்ஜிங் மீது குற்றம் …
-
- 0 replies
- 634 views
-
-
கொண்டா இயந்திர நிறுவனமானது 871,000 வாகனங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. வாகனங்கள் தரிக்கப்பட்டு திறப்பு எடுக்கப்பட்ட பின்பும் நகர்கின்றதன்மை காணப்படுகின்ற வாகனங்களே திரும்ப பெற்றுக்கொள்கின்ற நிலையில் உள்ளவையாகும். அத்துடன் இத்தகைய வாகனங்கள் 2003–2004, 2003–2006 காலங்களில் உற்பத்தி செய்யப்பட்வையே இவற்றின் 807,000 தொகையானவை அமெரிக்காவிலிருந்தும், 64,000 அமெரிக்காவுக்கு வெளியிலிருந்தும் எடுக்கப்படலாமென ,அந்த நிறுவனம் தீர்மானிக்கின்றது. இதற்கு திறப்பு போடப்படும் உள்பகுதியில் பாதிப்புகள் இருக்கலாமெனவும், அதனால் அத்தகைய வாகனங்கள் உருள்கின்றனவெனவும், அந்த நிறுவனமானது கூறுகின்றது. மேலும், சில கொண்டா வாகனங்கள் நிறுத்தப்பட்டு திறப்பு எடுத்தபின்பு அவ…
-
- 1 reply
- 443 views
-
-
இமெயிலைக் கண்டுபிடித்தது யார்? இதுவரை தெரியவில்லை என்றால் விடுங்கள்... இனி, தலை நிமிர்ந்து சொல்லுங்கள்... இமெயிலைக் கண்டுபிடித்தது ஒரு தமிழன் என்று. தென் தமிழகத்தின் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த அந்தக் கறுப்புத் தமிழனின் பெயர் சிவா அய்யாதுரை. இந்த ராஜபாளையத்துக் காரர் இப்போது வசிப்பது அமெரிக்காவில். 'டைம்’ பத்திரிகை இவரை 'டாக்டர் இமெயில்’ என்று அழைக்கிறது. 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’, 'வாஷிங்டன் போஸ்ட்’, 'நியூயார்க் டைம்ஸ்’ எனப் பிரபல மீடியாக்கள் 'இமெயிலைக் கண்டுபிடித்தவர்’ எனக் கொண்டாடுகின்றன. உலகின் மிகச் சிறந்த அறிவுஜீவி என போற்றப்படும் பேராசிரியர் நோம் சாம்ஸ்கி, 'டாக்டர் சிவாதான் இமெயிலைக் கண்டுபிடித்தவர்’ என்று செல்லும் இடங்களில் எல்லாம் பேசுகிறார். உலகின் பிரசித்…
-
- 3 replies
- 926 views
-
-
தேர்தலில் போட்டியிடவுள்ள ஜுலியன் அசாஞ்சே எதிர்வரும் 2013ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறும் தேர்தலில் செனட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக ஜுலியன் அசாஞ்சே அறிவித்துள்ளார். அமெரிக்க தூதரக இரகசிய செய்திகளை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் 'விக்கி லீக்ஸ்' இணையதளத்தின் உரிமையாளர் ஜுலியன் அசாஞ்சே. விக்கிலீக்ஸ் என்ற பெயரில் அவுஸ்திரேலியாவில் அரசியல் கட்சியை தொடங்கி இந்த தேர்தலில் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளார். அவுஸ்திரேலிய நாட்டு சட்டப்படி அயல் நாட்டில் வசிக்கும் வேட்பாளராக போட்டியிடப் போவதாக அவர் கூறியுள்ளார். அவுஸ்ரேலியாவில் புதிதாக அரசியல் கட்சி தொடங்க, ஒரு மாகாணத்தின் வாக்காளர் பட்டியலில் உள்ள 500 பேர் பரிந்துரை செய்ய வேண்டும்.…
-
- 1 reply
- 430 views
-
-
அகமதாபாத்: குஜராத் முதல்கட்ட சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குஜராத் சட்டசபைக்கான முதல்கட்ட தேர்தல்,15 மாவட்டங்களில் உள்ள 87 தொகுதிகளில் இன்று நடக்கிறது. முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசின் பதவிக் காலம் முடிவதையொட்டி, சட்டசபைக்கு டிசம்பர் 13, 17ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மொத்தமுள்ள 182 சட்டசபை தொகுதிகளில் 15 மாவட்டங்களில் அடங்கிய 87 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.இன்றைய தேர்தலில் 46 பெண்கள் உள்பட 846 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல்கட்ட தேர்தலில் 3.8 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்காக 45 ஆயிரம் வா…
-
- 0 replies
- 433 views
-
-
உலகெங்கும் மிகப் பிரபலமாக இருக்கும் மெக்கஃபே ஆண்ட்டி வைரஸ் மென்பொருள் நிறுவனத்தை துவக்கியவர் ஜான் மெக்கஃபே. அவரது மெக்கஃபே நிறுவனத்தை இண்டெல் நிறுவனம் 7.7பில்லியன் டாலர்கள் கொடுத்து விலைக்கு வாங்கியது. அத்தனைப் பெரிய பணக்காரர் இப்போது ஒரு கொலை வழக்கில் சிக்கி நாடு விட்டு நாடு ஓடியிருக்கிறார். பில்லியன் டாலர் கோடீஸ்வரர் தற்போது சில லட்சம் டாலர்களுடன் திண்டாடிக் கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் அவரது நிலையற்ற மனம். கம்பெனியை 1987ல் மெக்கஃபேயைத் துவக்கினார். அது உலகப் புகழ் பெற்றதும் தன்னுடைய பங்குகளை திடிரென்று விற்றார். 100 மில்லியன் டாலர்களுக்கு அது விற்பனையானது. அதன் பிறகு அந்த நிறுவனம் மேலும் வளர்ந்து 7.7பில்லியன் டாலர் விலைபோகும் அளவு உயர்ந்தது வேறு கதை. 100மில்லியன்…
-
- 0 replies
- 557 views
-
-
நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் ராக்கெட்டினை வடகொரியா இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. அமெரிக்காவின் எதிர்ப்பினை மீறி இரண்டாம் கிம் ஜோங் என்ற இந்த ராக்கெட்டினை வடகொரியா ஏவியுள்ளதாக கூறப்படுகிறது. வடகொரியாவின் ராணுவ அமைச்சகம் சார்பில் தெற்கு கடற்கரையில் ஒகினாவா தீவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது. http://tamil.yahoo.com/%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A9-%E0%AE%8F%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B0-015300096.html North Korea fires long-range rocket N. Korea claims success while S. Korea says it doesn't know if launch was successful http://www.cbc.ca/news/world/story/2012…
-
- 6 replies
- 631 views
-
-
அகமதாபாத்: காங்கிரசை கலைக்க வேண்டும் என்ற காந்தியின் ஆசையை ராகுல் காந்தி நிச்சயம் நிறைவேற்றுவார் என்று குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கிண்டலாக கூறியுள்ளார். குஜராத் மாநில சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகின்றது.முதல் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது.முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இறுதி கட்ட பிரசாரம் நேற்று ஓய்ந்தது. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இந்த தொகுதிகளில் பேசிய ராகுல் காந்தி,"குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒரு வியாபாரி;தவறான தகவல்களைப் பரப்பி, வளர்ச்சியடையாத குஜராத்தை, வளர்ச்சி அடைந்த மாநிலமாகக் கூறி வருகிறார். குஜராத் முன்னேறிவிட்டது என மோடி பொய் பிரசாரம் செய்து வருகிறார். உண்மையான தலைவர்கள் மக்களின் கனவைத் தங்களின் கனவாகக் கொள…
-
- 4 replies
- 941 views
-
-
பிரான்ஸ் அரசு அந்நாட்டில் அதிகரிக்கும் வறுமைக்கு பரிகாரம் காணுமுகமாக ஏழ்மையை போக்க உதவும் கொடுப்பனவுகளை பத்து வீதத்தால் உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. பிரான்சில் வாழும் 16 – 25 வயதுக்கு இடைப்பட்ட இளையோரில் நால்வருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் வறுமைக்குள் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் ஐரோப்பாவின் மற்றைய நாடுகளில் உள்ளதைப்போலவே வறுமையின் பரந்துபட்ட வளர்ச்சி பிரான்சிய சமுதாயத்திலும் பெரு வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது ஆட்சியில் இருப்பது சோசலிச அரசாங்கம் என்பதால் முன்னைய அரசாங்கங்கள் போல ஏழைகளைப் பற்றி கவலையற்ற ஆட்சி செய்யாமல் மனம் மாறியுள்ளது. பிரான்சில் எஸ்.யூ எனப்படும் பாடசாலைக்கல்வி கொடுப்பனவு கிடையாது ஆனால் சட்டத்தரணி படிக்கும் 22 வயது யுவதி ஒருவர் கூறும்போது வெறு…
-
- 1 reply
- 647 views
-