Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐரோப்பாவின் பொருளாதாரம்: தொடர்கிறது தற்கொலைகள் ஐரோப்பாவை தாக்கிய பொருளாதார நெருக்கடி தனது மோசமான பிரதிபலிப்புக்களை இப்போது மெல்ல மெல்ல காட்ட ஆரம்பித்துள்ளது. தனது கட்டிட நிறுவனம் வங்குரோத்து அடைந்துவிட்ட காரணத்தால் 59 வயதுடைய இத்தாலியர் ஒருவர் தனது தலையில் தானே வெடி வைத்து மரணமடைந்துள்ளார். இவர் எழுதிய கடிதத்தில் தனது தொழில் முடிவுக்கு வந்துவிட்டதால் வாழ்க்கையை முடிப்பதாக எழுதியுள்ளார். இதுபோல 78 வயது பெண்மணி ஒருவர் தனது ஓய்வூதியம் புதிய பொருளாதார மீதம்பிடிப்பால் குறைவதைத் தாங்க முடியாது தற்கொலை செய்துள்ளார். மறுபுறம் கிரேக்கத்தின் தலைநகர் எதென்சில் 77 வயதுடைய நபர் ஒருவர் பாராளுமன்றின் முன்பாக தலையில் வெடி வைத்து மரணித்துள்ளார். புதிய பொருளாதார நெரு…

    • 13 replies
    • 897 views
  2. சோமாலிலாந்து அரசு தன்னைப் பிரிட்டிஸ் ஆட்சிப் பாதுகாப்பின் கீழ் இருந்த முன்னைய சோமாலிலாந்தின்(Protectorate) வாரிசாகக் கருதுகிறது. அது 1960ம் ஆண்டில் சில நாட்கள் தன்னாட்சி பெற்ற நாடாக இருந்தது. அந்த சில நாட்களில் அது சோமாலிலாந்து என்ற பெயருடன் நிலவியது. அந்த சில நாட்களின் பிறகு அது இத்தாலி அரசின் பிடியில் இருந்த இத்தாலியன் சோமாலிலாந்துடன் இணைக்கப்பட்டு சோமாலியா குடியரசு (Somalia republic) என்ற நாடாக உருப்பெற்றது. வரலாற்று ரீதியாக சோமாலிலாந்து தன்னைப் பிரத்தியேகமான தரைப் பகுதியாகக் கருதி வந்துள்ளது. சோமாலியாவை ஆட்சி செய்த சர்வாதிகாரி சியாட் பாரே (Siad Barre) அரசு சோமாலிலாந்து மக்களை மிகவும் கொடிய விதத்தில் படுகொலை செய்தது. இது ஒரு உள்நாட்டுப் போருக்கு அடிகோலியதோடு சோமாலி…

  3. பிரான்ஸின் வடமேற்கு நகரொன்றில் அணு உலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி மக்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. நோர்மண்டியின் பென்லி நகரில் உள்ள குறித்த அணு மின் உலையின் இரு இடங்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அணு உலையை குளிர்விக்கும் திரவம் வெளியேறியதாகவும், இதனால் அயல் பிரதேசங்களுக்கு கதிர்வீச்சு தாக்கம் பரவக்கூடும் எனவும் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். எனினும் உடனடியாக நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக கூறியுள்ள அணு மின் உலை பாதுகாப்பு அதிகாரிகள், அணு உலையில் இருந்து எவ்வித கதிர்வீச்சும் வெளியேறவில்லை எனவும் இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர். அணு உலையின் குளிர்விக்கும் பகுதிக்கு கொண்ட…

  4. உகண்டாவின் கிளர்ச்சிக்குழு தலைவர் ஜோசஃப் கோனி பற்றி வெளியிடப்பட்ட Kony 2012 டாக்குமெண்டரி திரைப்படத்தின் புதிய பாகத்தை "Beyond Famous" எனும் பெயரில் Invisible Children குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமது குழுவின் நிறுவனர் ஜேசன் ருஸெலின் எந்தவொரு பங்களிப்பும் இல்லாது இம்முறை இப்புதிய பாகம் வெளியிடப்படுவதாக Invisible Children குழுவினர் தெரிவித்துள்ளனர். ஜோசஃப் கோனியின் LRA கிளர்ச்சிக்குழு பற்றிய விரிவான பார்வை, அவர்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கென இதுவரை எடுக்கப்பட்ட, இனிமேல் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்பவை குறித்து இப்புதிய வீடியோ டாக்குமெண்டரி அலசுவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். ஆபிரிக்காவின் குறிப்பிட்ட சில நாடுகளில் இயங்கிவரும் LRA கிளர்…

  5. டெல்லி: கடந்த 2010ம் ஆண்டில் இந்தியாவில் கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள், விவாகரத்தானவர்கள், பிரிந்து வாழ்பவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் டெல்லி கடைசி இடத்தில் உள்ளது. திருமண பதிவாளர் அலுவலகம் மத்திய சுகாதாரத் துறையிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது . அதில் கூறப்பட்டுள்ளதாவது,கடந்த 2010ம் ஆண்டில் இந்தியாவில் கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள், விவாகரத்தானவர்கள், பிரிந்து வாழ்பவர்கள் பட்டியலில் 8.8 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்திலும், 4.1 சதவீதத்தோடு டெல்லி கடைசி இடத்தில் உள்ளன. இந்த பட்டியலில் 8.2 சதவீதத்துடன் ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இரண்டாவது இடத்தில் உள்ளன. ஒடிஷா (7.2), இமாச்சலப் பிரதேசம்(7.1) மற்றும் மக…

    • 0 replies
    • 407 views
  6. இந்திய கடற்படையிடம் அணுசக்தி- நீர்மூழ்கிக் கப்பல் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வைத்திருக்கின்ற நாடுகளின் வரிசையில் இந்தியா இணைந்துகொண்டுள்ளது. சுமார் 100 கோடி டாலர்கள் பெறுமதியான இந்த ரஷ்யத் தயாரிப்புக் கப்பலை இந்தியக் கடற்படை அடுத்த 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்கியுள்ளது. முன்னதாக,சோவியத் தயாரிப்பு- நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இந்தியா 1991ம் ஆண்டுவரை பயிற்சித் தேவைகளுக்காக வைத்திருந்தது. இப்போது அணுசக்தி-நீர்மூழ்கிக் கப்பலை வைத்திருக்கின்ற சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துகொண்டுள்ளது. 8,140 தொன் எடையிலான அக்குலா II வகையைச் சேர்ந்த இந்தக் கப்பல் ரஷ்யாவில் கே-152 நேர்பா என்ற…

    • 4 replies
    • 854 views
  7. 64 கோடி டாலர் ஜாக்பொட் கிடைத்த அதிர்ஸ்டசாலிகள் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 மார்ச், 2012 - 13:06 ஜிஎம்டி அமெரிக்காவின் மிகப்பெரிய லாட்டரியில் (அதிர்ஸ்ட லாபச் சீட்டிழுப்பில்) வெற்றி பெற்றவர்களை தேடும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. 64 கோடி டாலர் பெறுமதியான இந்த லாட்டரியை மூன்று டிக்கட்டுக்கள் பகிர்ந்துகொள்கின்றன. மேரிலாந்து, கன்சாஸ் மற்றும் இலினொய்ஸ் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மூவருக்கே இந்த அதிர்ஸ்டம் கிடைத்திருக்கிறது. லாட்டரி சீட்டுகளுக்காக அமெரிக்கர்கள் 1.5 பில்லியன் லாடர்களை செலவிடுகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் எவருக்கும் ஜாக்பொட் கிடைக்காத காரணத்தால், பரிசுத் தொகை அதிகரித்து இவ்வளவு பெரிய அளவை எட்டியிருக்கிறது bbctamil …

  8. 2000 ஊழியர்களை தங்களது நிறுவனத்திலிருந்து பணிநிறுத்துவதாக பிரபல இணைய நிறுவனமான யாகூ உறுதிப்படுத்தியுள்ளது. தங்களது நிறுவனத்தை சிறியதாக, சுறுசுறுப்பானதாக,அதிக இலாபமுடையதாக, பாவனையாளர்கள் விரும்பும் விதத்தினுடையதாக, புத்தாக்க சிந்தனையுள்ளதாக மாற்றுவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த இணையத்தளமான யாகூ நிறுவனம், மின்னஞ்சல் சேவை, தேடுதல் சேவை, செய்திச் சேவை, குழுமக் கலந்துரையாடல் சேவை, விளம்பர சேவை, வீடியோ பகிரல், விளையாட்டுக்கள், சமூக இணையத்தள சேவைகள் உட்பட ஏராளமான சேவைகளை வழங்குகிறது. 1994ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட யாகூ நிறுவனம், ஓர் ஆண்டுக்கு 700 மில்லியன் மக்களை தனது தளத்திற்கு வருகைதரச் செய்கிறது. யாகூ நிறுவன…

  9. http://youtu.be/N_EkyTVgT8k

    • 0 replies
    • 454 views
  10. டெல்லியில் பாராசூட் படை, கவச வாகன படைகளை குவித்த ராணுவ தளபதி!: மத்திய அரசை மிரட்ட முயன்றாரா? டெல்லி: தனது வயது விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி 16ம் தேதி ராணுவத் தளபதி வி.கே.சிங் உச்ச நீதிமன்றத்தை அணுகிய தினத்தன்று ராணுவத்தின் இரு படைப் பிரிவுகள் டெல்லியில் குவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் 16ம் தேதி இரவில் இந்தப் படைப் பிரிவுகள் தலைநகரில் குவிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசை மிரட்டுவதற்காக வி.கே.சிங் இந்த வேலையைச் செய்தாரா என்றும் கேள்வி எழுகிறது. இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான ரிப்போர்ட்: ஹரியாணாவின் ஹிசார் பகுதியில் இருந்த மெக்கனைஸ்…

  11. அமெரிக்க ரைம்ஸ் என்னும் சஞ்சிகையில் நவநீதம்பிள்ளை வருவதற்காக எங்கள் பொன்னான வாக்கைப் போடுவோம் http://www.time.com/time/specials/packages/article/0,28804,2107952_2107953_2109999,00.htmlமேலுள்ள சுட்டியை அழுத்தி What do you think? என்னும் பகுதியைப் பாருங்கள் அங்கே Definitely No Way என்ற பகுதி இருக்கிறது இதில் Definiteiy என்ற இடத்தில உங்கள் புள்ளியைப் போடவும். உற்றார் உறவினர் நண்பர்களையும் கேடடு வாக்களிக்க வைக்கவும்.

  12. அமெரிக்க ரெக்சாஸ் மாநிலத்தில் டலஸ் என்னும் இடத்தில் அடித்த புயல்காற்றால் ரைக்ரர் ரெய்லர் பெட்டிகள் தீப்பெட்டி உருள்வதைப் போல் உருட்டிக் கொண்டு போகிறது.12000 இறாத்தல் எடை கொண்ட பெட்டியை நீண்ட தூரத்திற்கு காற்றில் கொண்டு போகின்றது. (CNN) -- Tornadoes ripped through the Dallas-Fort Worth area Tuesday, tossing tractor-trailers like toys and causing widespread damage to homes and other structures. One tornado was spotted on the ground five miles east of downtown Dallas, the National Weather Service said. All flights at Dallas-Fort Worth International Airport were grounded and passengers and airport employees were moved into shelters as the storm system spawned multiple fun…

  13. சகோதரச் சண்டைக்கு யார் காரணம்? ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம், அதை மெய்யாக்கிவிட முடியும் என்பதைத் தனது தாரக மந்தி ரமாகக் கொண்டுஇருப்பவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் அவர் கூறுவதற்குக் காரணமே, மக்களின் மறதி மீது அவருக்கு இருக்கக் கூடிய அளவுகடந்த நம்பிக்கைதான்! ஐ.நா. மனித உரிமை ஆணையம் நிறைவேற்றி யுள்ள தீர்மானத்தைப் பற்றி பேசுகையில், பழைய புழுத்துப்போன பொய்யைத் திரும்பவும் கூறி இருக்கிறார் கருணாநிதி. 'ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை நான் மனம் திறந்து பேச வேண்டுமேயானால், சகோதர யுத்தம்தான் தமிழீழம் உருவாவதைத் தடுத்துவிட்டது என்பது என்னுடைய கருத்து. யார் பெரியவர், இதை சாதிக்கிற முயற்சிகளில் வெல்லக்கூடி…

    • 0 replies
    • 429 views
  14. பிரான்சின் ஐந்தாவது குடியரசின் பத்தாவது ஜனாதிபதித்தேர்தலின் முதற்சுற்று எதிர்வரும் 22.04.2012ல் நடைபெறுகிறது. இரண்டாவது சுற்று 6.5.2012ல் நடைபெறுகிறது. பிரான்சிலும் அரசியல் சட்டங்கள் காலத்திற்கு காலம் மாற்றப்பட்டு மெருகூட்டப்பட்டு வந்திருக்கிறது. ஐந்தாவது தடவையாக 1958ல் நடைபெற்ற இவ்வாறான மாற்றத்தின் பின் ஐந்தாவது குடியரசு என அழைக்கப்படுகிறது. திருத்தியமைக்கப்பட்ட அரசியல் சட்டத்தின் கீழ் 1965ல் முதல்முறையாக சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதியை தெரிவுசெய்யும்முறை அறிமுகமானது. ஐந்தாவது குடியரசினை உருவாக்க காரணமாக இருந்த அதிபர் சாள்துகோலே சர்வஜன வாக்கெடுப்பின் மூலமும் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதியாவார். ஏழாண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெற்று வந்த பிரான்சின் ஜன…

  15. கலாநிதி பட்டம் பெற்றதில் மோசடி; ஹங்கேரி ஜனாதிபதி ராஜினாமா ஹங்கேரி ஜனாதிபதி பால் ஸ்மித், கலாநிதி (டாக்டர்) பட்டத்திற்கான தனது ஆய்வுக்கட்டுரையில் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டதையடுத்து இன்று திங்கட்கிழமை ராஜினாமா செய்துள்ளார். 69 வயதான பால் ஸ்மித் 2010 ஆம் ஆண்டு ஹங்கேரி ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். வாள்சண்டையில் ஒலிம்பிக் சம்பியன் பெற்ற அவர் 1992 ஆம் ஆண்டு ஒலிம்பிக் வரலாறு தொடர்பாக ஆய்வுக்கட்டுரை எழுதி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டிலுள்ள சேமல்வீஸ் பல்கலைக்கழகத்திலிருந்து கலாநிதி பட்டம் பெற்றார். எனினும் மற்றொரு ஆய்வாளரின் கட்டுரையிலுள்ள பந்திகளை ஸ்மித் தனது கட்டுரையில் பயன்படுத்தியிருப்பதை அப்பல்கலைக்கழகம் கடந்தவாரம் கண்டுபிடித்தது. அதனால் கடந்த வியாழன…

    • 0 replies
    • 433 views
  16. அவுஸ்திரேலிய விமானமான காண்ட்டாஸ் விமானத்தில் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து மெல்போர்ன் நோக்கிப் பயணித்த அவுஸ்திரேலியப் பெண்மணியொருவர் உணவுப் பொட்டலத்தில் உயிர்ப்புழுக்கள் இருந்தது கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். கடந்த வியாழனன்று காண்ட்டாஸ் விமானத்தில் பயணித்த அப்பெண், இருக்கை விளக்கை ஒளிரச் செய்யாமலேயே தனக்கு அளிக்கப்பட்ட உலர்பழங்கள், பருப்புகள் கொண்ட உணவுப்பொட்டலத்தை பிரித்து உண்ணத் தொடங்கியுள்ளார். "முதலில் சுவை வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன்; உடனடியாக விளக்கை ஒளிரச் செய்து பார்த்தேன், பொட்டலம் முழுதும் லார்வா எனப்படும் கூட்டுப்புழுக்களைக் கண்டு அதிர்ந்தேன்" என்கிறார் 42 வயதான விக்டோரியா க்ளெவன் என்கிற அப்பெண்மணி "தூக்கிவாரிப் போட்டது; பேச முடியவில்லை. அதிர…

  17. கூடங்குளம் அணு உலை இரண்டு மாதங்களில் இயங்கும் கூடங்குளம் அணு மின் நிலையம் இரண்டு மாத்ததுக்குள் செயல்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் தெரிவித்துள்ளார். கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கப்படுகின்றன. இதில் முதல் உலைக்கான பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தென்கோடியில் அமைக்கப்பட்டு வரும் கூடங்குளம் அணு மின் நிலையங்களை இயக்குவது மக்கள் போராட்டம் காரணமாக பல மாதங்கள் தள்ளிப்போய் உள்ளது. தமிழக அமைச்சரவை அணுமின் நிலையப் பணிகளைத் துவங்கலாம் என்று அனுமதி அளித்த அடுத்த நாளில் இருந்து அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் உள்ளிட்ட 15 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டன…

    • 2 replies
    • 566 views
  18. அமெரிக்க கல்லூரியில் 5 பேர் சுட்டுக்கொலை: மனிதன் வெறிச்செயல் April 2, 2012 அமெரிக்காவில் கல்லூரிக்குள் நுழைந்த மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் பலர் உயிரிழந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டு்ள்ள செய்தியில், அமெரிக்காவின் ஒக்லாண்ட் மாகாணத்தின் சான்பிரான்சிஸ்கோ புறநகரில் கிழக்குபகுதியில் உள்ள ஒகிகோ பல்கலை வளாகத்தில் கிறிஸ்டியன் கல்லூரி ஒன்று உள்ளது. இப்பள்ளிக்குள் திடீரென புகுந்த மர்ம மனிதன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தற்போது ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் , இன்னும் பலர் பிணைக்கைதிகளாக துப்பாக்கிமுனையில் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவி…

    • 0 replies
    • 522 views
  19. கருணையல்ல, சந்தர்ப்பவாதம்! மார்ச் 31-ம் தேதி தூக்கிலிடப்படவிருந்த பல்வந்த் சிங்கின் மரண தண்டனையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தானே நேரில் சென்று, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்து கருணை மனு கொடுத்ததால் இந்த நடவடிக்கை. மனு கொடுத்த மிகச் சில மணி நேரங்களிலேயே தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படுகின்றது என்பதைப் பார்க்கும்போது, இந்த முடிவு பல்வந்த் சிங் மீது ஏற்பட்ட பரிவினால் அல்ல. முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தது. இந்த அரசியல்தான் ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒரு வகையான மனக்கசப்பை மேலும் கூட்டுகிறது. ஒரு கொலைக் குற்றவாளியின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைப்பதில் நீதிமன்றத்தைக் காட்டிலும் கூடுதலான ஒரு சலுகை…

    • 0 replies
    • 349 views
  20. இலங்கை போர்குற்ற நாடு தான் என்று வாக்களிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து புதுக்கோட்டையில் உண்ணாவிரதம் இருந்து போராடிய , சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.முத்துக்குமரன் சாலைவிபத்தில் மரணம் புதுக்கோட்டை, ஏப்ரல் 1: புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமரன் (வயது 43) அன்னவாசல் அருகே நிகழ்ந்த சாலைவிபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.இவர் புதுக்கோட்டை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.இவர் இன்று கட்சி உறுப்பினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்காக , தனது பொலீரோ ஜீப்பில் புதுக்கோட்டையில் இருந்து வி‌ராலிமலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அன்னவாசல் அருகே சொக்கநாதன்பட்டி என்னும் இடத்தில் ஜீப்பின் டயர் வெடித்து…

  21. சைபீரிய விமான விபத்தில்.... 31 பேர் பலி. Beim Absturz einer Turboprop-Maschine in Westsibirien (Russland) sind am Montag mindestens 31 Menschen ums Leben gekommen. Insgesamt waren nach Angaben der Fluggesellschaft Utair 43 Menschen an Bord - zwölf Insassen des Flugzeugs vom Typ ATR-72 sollen das Unglück nahe der Stadt Tjumen rund 2000 Kilometer östlich von Moskau schwer verletzt überlebt haben. T- online இணையத்திலிருந்து.

  22. பர்மாவில் நடந்துமுடிந்த இடைத் தேர்தலில் ஆங் சான் சூ சீயின் கட்சி போட்டியிட்ட 44 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளதாக பிபிசியின் பர்மிய மொழி சேவை தெரிவிக்கிறது. இடைத்தேர்தல் நடந்த 45 தொகுதிகளில் 44 தொகுதிகளில் சூ சீயின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி போட்டியிட்டது; ஒரு தொகுதியில் அக்கட்சி வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. ஆங் சான் சூசி தலைமையிலான என்எல்டி என்ற ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி இரண்டு தசாப்தங்களின் பின்னர் இப்போது தான் தேர்தலொன்றில் போட்டியிட்டுள்ளது. பர்மாவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆளும் இராணுவ- பின்புல அரசாங்கம் அண்மையில் அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர உறுதியளித்திருந்த நிலையில், உலகம் இந்தத் தேர்தலை ஒரு பரீட்சையாக பார்க்கிறது. …

  23. சோமாலியாவில் கடும் சண்டை(BBCtamil) கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 1 ஏப்ரல், 2012 - 14:54 ஜிஎம்டி சோமாலிய படையினர் ( ஆவணப்படம்) சோமாலியாவில் சோமாலிலாந்து குடியரசை சுயமாகப் பிரகடனம் செய்த படையினருக்கும், பிரிந்துபோன பிராந்தியமான கட்டுமா மாநிலத்தின் விசுவாசப் படைகளுக்கும் இடையே கடுமையான சண்டைகள் நடந்திருக்கின்றன. சர்ச்சைக்குரிய வடமேற்கு சோமாலிய பகுதியில் இரு முனைகளில் நடந்த இந்தச் சண்டைகளை ஆரம்பித்ததாக இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளனர். பல மக்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் உள்ளூர் மருத்துவமனைகள் கூறுகின்றன. இந்த வருட முற்பகுதியில் சோமாலிலாந்தில் இருந்து கட்டுமா மாநிலம் பிரிந்த பின்னர் நடக்கும் மிகவும் மோசமான…

    • 0 replies
    • 341 views
  24. சிரியாவின் எதிரணிக்குழுவுக்கு அங்கீகாரம் சிரியாவின் எதிரணிக்குழுவான சிரியாவின் தேசியக் கவுன்ஸிலை, சிரியாவின் அனைத்து மக்களின் நியாயபூர்வ பிரதிநிதிகளாக, சிரியாவில் அரசியல் மாற்றங்களை ஆதரிக்கும் நாடுகள் அங்கீகரித்திருக்கின்றன. இஸ்தான்புல்லில் நடந்த மாநாடு ஒன்றினை அடுத்து பேசிய துருக்கியின் வெளியுறவு அமைச்சரான அஃமட் டவுத்தொக்லு அவர்கள், சிரியாவில் மனித நேய உதவிகளுக்கான ஆதரவை அதிகரிப்பது என்று தாம் உடன்பாடு கண்டுள்ளதாகவும், அண்டைய நாடுகள் சிரியாவின் அகதிகளை ஏற்பார்கள் என்றும் கூறியுள்ளார். தமக்கெதிரான தாக்குதலுக்கு எதிராக தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான சிரியாவின் மக்களின் உரிமையையும் அவர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். வளைகுடா நாடுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட…

    • 1 reply
    • 345 views
  25. சாலையில் நடந்து செல்லும்போதுகூட விபத்து ஏற்பட்டு சாவு வரலாம். எதில்தான் ஆபத்து இல்லை? அணு உலையும் அப்படித்தான். அதை எதிர்த்து ஏன் உதயக்குமார் உள்ளிட்டவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்? என்பது பல்வேறு பட்ட மக்களின் கேள்வி. இந்த கேள்விக்கான பதிலை… தொடர்ந்து அணு உலைக்கெதிராக போராடிக்கொண்டிருக்கும் மக்கள் மருத்துவர் புகழேந்தியிடம் கேட்டோம். “அணு உலை பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. பாதுகாப்பாகத்தான் உள்ளது என்று மத்திய மாநில அரசுகள்…வல்லுநர் குழுக்கள்…அணுசக்தி நிர்வாகத்தினர்…எல்லோருமே சொல்லித்தான் கூடன்குளம் அணு உலையை திறந்திருக்கிறார்கள். ஆனால், அணு உலை பாதுகாப்பாக உள்ளதா? என்பதுதான் மிகப்பெரியக் கேள்விக்குறி! காரணம்…சர்வதேச அணுச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.