Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 21 DEC, 2023 | 09:49 PM செக் குடியரசின் சென்ட்ரல் ப்ராக் நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜோன் பலாச் சதுக்கத்தில் அமைந்துள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக கட்டிடத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/172247

  2. அமெரிக்கா- தென்கொரியா இடையிலான உறவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், இரண்டு நாடுகளின் போர் ஒத்திகை, கொரியா தீபகற்பத்தில் இரு நாடுகளின் இராணுவ நடவடிக்கை ஆகியவை தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக வடகொரியா நினைக்கிறது. இதனால் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் அணுஆயுதங்களை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கி அழிக்கும் “ஹ்வாசோங்-18” ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இது மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணையாக பார்க்கப்படுகிறது. வடகொரியாவில் இருந்து அமெரிக்காவின் ஒரு பகுதியை துல்லியமாக இலக்கு நிர்ணயித்து தாக்க முடியும் எனக் கூறப்படுகிறது. அதே வேளையில் கடந்த ஆண்டில் இருந்…

  3. புதிய ஒமிக்ரோன் பிறழ்வு வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா, சீனா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் JN.1 பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மக்களுக்கான ஆபத்து தற்போது குறைவாக உள்ளதாகவும் தற்போதைய தடுப்பூசிகள் தொடர்ந்தும் பாதுகாப்பை வழங்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது. எனினும், குளிர்காலத்தில் கொரோனா மற்றும் பிற நோய் தொற்றுகள் அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/285478

  4. Published By: VISHNU 18 DEC, 2023 | 08:22 PM (நா.தனுஜா) அடுத்த தேர்தலில் தமது கட்சி ஆட்சியமைத்தால், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையுடன் தொடர்புபட்ட ஆட்சியாளர்களுக்கு எதிராக 'மக்னிற்ஸ்கி' முறையிலான தடைகளை விதிப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக கனேடிய எதிர்க்கட்சித்தலைவர் பியெர் பொலியெவ்ர் தெரிவித்துள்ளார். கனடாவின் பிரதமரைத் தெரிவுசெய்வதற்கான அடுத்த தேர்தலில் தமது கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்தால், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்துகையிலேயே கனேடிய பாராளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான கன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொலியெவ்ர் மேற்கண்டவ…

  5. பட மூலாதாரம்,NATIONAL GRID 9 மணி நேரங்களுக்கு முன்னர் ‘வைகிங் லிங்க்’ உலகின் நாடுகளுக்கு இடையே உள்ள மிக நீளமான நில மற்றும் கடல் மின் கேபிள் ஆகும். இது ‘மெகாஸ்ட்ரக்சர்’ எனப்படும் ராட்சதக் கட்டமைப்பாகும். இதன் கட்டுமானத்தில் பெரும் கைவினைத்திறன் அடங்கியுள்ளது. இது டென்மார்க்கிலிருந்து பிரிட்டன் வரை 765 கி.மீ.-க்கும் அதிகமான தூரத்திற்கு மின்சாரத்தை மேலும் கீழும் கடற்பரப்பில் கடத்திச் செல்கிறது. இது ஒரு மகத்தான பொறியியல் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இந்த இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் ‘வட கடல்’ ஆழம் குறைந்த கடல். இதனால் சேதம் அல்லது நாசவேலைகல் சுலபமாக ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இத்ற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். …

  6. Published By: DIGITAL DESK 3 20 DEC, 2023 | 09:53 AM 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதற்கு கொலராடோ (Colorado) உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதன்படி, டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பணியாற்றுவதற்கு தகுதியற்றவர் என்றும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி அன்று அமெரிக்க தலைநகர் மீது அவரது ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் அவருக்கு பங்கு இருப்பதால் காரணமாக கொலராடோவில் போட்டியிட முடியாது என்றும் நீதிமன்றம் செவ்வாயன்று தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் 3 ஆவது பிரிவின் கீழ், ஜனாதிபதி வேட்பாளரொருவர் தகுதி நீக்கம் செய்ய…

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 23 வயதான ஷிஹ் சின்-டே 1969ம் ஆண்டு கோடைகாலத்தில் அமெரிக்காவிற்கு செல்ல விமானத்தில் ஏறியபோது, அவர் முற்றிலும் வேறு உலகத்திற்கு பயணிக்க தொடங்கியிருந்தார். அவர் கரும்பு வயல்களால் சூழப்பட்ட ஒரு மீனவ கிராமத்தில் தான் வளர்ந்தார். பின்னர் தூசி நிறைந்த தெருக்கள் மற்றும் சாம்பல் நிற அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்த அரிதாகவே சொந்த கார்களை கொண்ட மக்கள் நிறைந்த தைவானின் தலைநகரான தைபேயில் உள்ள பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை மேற்கொண்டார். தற்போது அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்குச் சென்றுள்ளார். அமெரிக்கா ஒரு மனிதனை நிலவிற்கும் , போயிங் 747 விமானம் மூலம் வானிற்கும் உயர்த்துகிறது. சோவியத் யூ…

  8. செங்கடலில் ஹவுதி தாக்குதல்களை எதிர்கொள்ள பன்னாட்டு படை – அமெரிக்கா யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல்கள் காரணமாக பல கப்பல் நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் செங்கடலில் கப்பல் வர்த்தகத்தைப் பாதுகாக்க ஒரு பன்னாட்டுப் படையைத் தொடங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, சீஷெல்ஸ் மற்றும் பிரித்தானியா என 10 நாடுகள் இதில் இணையும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் கூறியுள்ளார். காசாவில் போர் தொடங்கியதில் இருந்து, ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் அல்லது இஸ்ரேலியர்களுடன் தொடர்புடைய கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வரு…

  9. அமெரிக்காவை எச்சரிக்கவே சக்திவாய்ந்த ஏவுகணையை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது – வடகொரியா. அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கிம் ஜொங் உன் மேற்பார்வையில் மிக சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்ததாக வடகொரியா அறிவித்துள்ளது. அமெரிக்காவில் எங்கும் சென்றடையும் திறன் கொண்ட இந்த இந்த ஏவுகணை பரிசோதனை நேற்று இடம்பெற்றதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் தெரிவித்திருந்தது. https://athavannews.com/2023/1363660

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூசிலாந்து தனது வேளாண் துறை மீத்தேன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், எலன் ரைக்கர்ஸ் பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் நியூசிலாந்தில் 1 கோடி பசுக்கள் மற்றும் 2 கோடியே 60 லட்சம் ஆடுகள் உள்ளன. புவி வெப்பமடைவதைத் தடுக்கும் நடவடிக்கைகளின் இலக்குகளை அடைய, அந்நாடு அறிவியல் மற்றும் தனித்துவமான கொள்கையைப் பயன்படுத்தி, கால்நடை வளர்ப்பு தொழிலில் இருந்து அதிக அளவிலான மீத்தேன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இளம் காளை ஒன்று பிளாஸ்டிக் டப்பாவில் இடப்பட்டுள்ள…

  11. சீனாவின் வடமேற்கு பகுதியான கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் 95 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் நிலநடுக்கத்தில் 220 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகவும் இருந்ததாகவும்10 கிமீ (ஆறு மைல்) ஆழத்தில் இருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியான கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் 95 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் நிலநடுக்கத்தில் 220 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூட…

  12. அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனை பின்னுக்குத் தள்ளி முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, அரிசோனா, விஸ்கான்சின், பென்சில்வேனியா உள்ளிட்ட பிரதான மாகாணங்களில், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை, டொனால்ட் டிரம்ப் பின்னுக்குத் தள்ளிய விடயம் கருத்துக் கணிப்பில் வெளியாகியுள்ளது. 2020 தேர்தலில் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜார்ஜியா மாகாணத்தில் ஜோபைடன் வெற்றியை தன்வசமாக்ககியிருந்தார். கருத்துக் கணிப்பு எனினும் தற்போது குறித்த மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் ஐந்து சதவீத அதிக வாக்குகளை பெறக்கூடும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்க…

    • 1 reply
    • 483 views
  13. Published By: RAJEEBAN 18 DEC, 2023 | 01:20 PM வடகுயின்ஸ்லாந்தில்பெரும் வெள்ளத்தில் சிக்குண்டுள்ள மக்கள் அவசர உதவியை கோரியுள்ளனர். குயின்ஸ்லாந்தின் தொலைதூர வடபகுதியில் சிக்குண்டுள்ள மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களிற்கான விநியோகங்கள் முடிவடையும் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளதுடன் அவசர இராணுவ தலையீட்டிற்காக காத்திருக்கின்றனர் என டக்ளஸ் சயரின் மேயர் தெரிவித்துள்ளார். குக்டவுன் முதல் இனிஸ்பெயில் வரை பல நகரங்கள் வெள்ள நீரினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பிரதான வீதிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன கெயர்ன்சின் மக்களை அவசர தேவைக்காக மாத்திரம் நீரை பயன்படுத்துமாறு அதிக…

  14. Published By: RAJEEBAN 18 DEC, 2023 | 12:15 PM வடகாசாவில் உள்ள மருத்துவமனையொன்றின் நோயாளிகளை இஸ்ரேலிய படையினர் புல்டோசர்களை பயன்படுத்தி நசுக்கிகொலை செய்தனர் என வெளியானகுற்றச்சாட்டுகள் குறித்து பாலஸ்தீன அதிகார சபை விசாரணைகளை கோரியுள்ளது. வடகாசாவில் உள்ள கமால் அட்வான் மருத்துவமனையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மருத்துவமனைக்குஅருகில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்களை இஸ்ரேலிய படையினர் புல்டோசர்களை பயன்படுத்தி அழித்தனர் இதன்போது நோயாளிகள் உட்பட பொதுமக்களை கொலை செய்தனர் என வைத்தியர்களும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் குறிப்பிட்டனர். பொதுமக்கள் வேண்டுமென்றே இலக்குவைக்கப்பட்டனர் புல்டோச…

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹசாசின்கள் தங்கள் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் வகையில் ராணுவ, கல்வி மற்றும் மதப் பயிற்சிகளைப் பெற்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோ பதவி, பிபிசி நியூஸ் 52 நிமிடங்களுக்கு முன்னர் "முதியவர் ஒரு பெரிய பிரபுவைக் கொல்ல விரும்பும்போது, அவர் மிகவும் துணிச்சலான (...) இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை (...) அந்த பிரபு மறைந்தால், அவரைக் கொன்றவர்களுக்கு சொர்க்கம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று சொல்லி அனுப்புகிறார்." இந்த வார்த்தைகளுடன், வெனிஸ் நாட்டு ஆய்வாளர் மார்கோ போலோ தனது "புக் ஆஃப் வொண்டர்ஸ்" என்ற நூலில் பல தசாப்தங்களுக்கு முன்னர…

  16. மத்திய தரைக்கடல் விபத்துக்கள் : இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! லிபியாவின் கடலோரப் பகுதியில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 86 பேருடன் லிபியாவின் சுவாரா நகரிலிருந்து இந்தக் கப்பல் புறப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், உயரமான அலைகள் காரணமாக படகு கவிழ்ந்துள்ளதாகவும், குழந்தைகள் உட்பட 61 புலம்பெயர்ந்தோர் காணாமல் போயிருப்பதாகவும், அவர்கள் உயிரிழந்து விட்டதாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், உயிர் தப்பிய 25 பேர் லிபிய தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்…

  17. பட மூலாதாரம்,AFP 16 டிசம்பர் 2023, 12:56 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் வளைகுடா நாடுகள் வரிசையில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் எண்ணெய் வளம் மிகுந்த நாடாகப் பார்க்கப்படும் குவைத்தின் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா வயது முதிர்வு காரணமாக இன்று மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. குவைத் நாட்டை 263 ஆண்டுகளாக ஆண்டு வரும் சபா குடும்பத்தின் தொடர்ச்சியாக கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்நாட்டின் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத். இவர் யார்? அவரது வரலாறு என்ன? இங்கு விரிவாகப் பார்க்கலாம். ஷேக் நவாஃப் பிறப்பு குவைத்தில், “அமைதியான அதே நேரம் தேவ…

  18. இணையத்தில் தகவல்களை தேடுவோரின் முதன்மைத் தேர்வாக கூகுள் தேடுபொறி இருக்கிறது. எந்த விஷயமாக இருந்தாலும் கூகுளில் தேடினால் கிடைக்கும் என்று சொல்லும் அளவுக்கு கூகுள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. இவ்வாறு கூகுள் மூலம் தேடப்படும் விஷயங்களை ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்நிறுவனம் பட்டியலிடுகிறது. அவ்வகையில் 2023ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட நிகழ்வுகளை பட்டியலிட்டிருக்கிறது. செய்திகளைப் பொருத்தவரை உலகம் முழுவதும் இப்போது பேசப்படும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பான தேடல் இந்த ஆண்டு முதலிடத்தில் இருக்கிறது. டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்ய சென்ற நீர்மூழ்கிக் கலன், பெப்ரவரியில் துருக்கி மற்றும் சிரியாவில் பேரழிவுகளை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஆகிய தேடல்கள் அடுத்தடுத்த இடங்களில் உள…

  19. கட்டுரை தகவல் எழுதியவர், ஹன்னா ரிச்சி பதவி, பிபிசி நியூஸ், சிட்னி 15 டிசம்பர் 2023, 03:13 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் தனது நான்கு குழந்தைகளைக் கொன்றதற்காக 'ஆஸ்திரேலியாவின் மோசமான தாய்' என்று முத்திரை குத்தப்பட்ட ஒரு பெண்ணின் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றம் வியாழன் அன்று, கேத்லீன் ஃபோல்பிக் (Kathleen Folbigg) என்ற அந்தப் பெண் சிறையில் அடைக்கப் பயன்படுத்தப்பட்ட ஆதாரங்கள் "நம்பகமானவை அல்ல" என்று தீர்ப்பளித்தது. 56 வயதான அவர் 20 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் ஜூன் மாதம் மாநில அரசால் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். …

  20. இந்திய கப்பல் மீதும் ஏவுகணை தாக்குதல்... செங்கடலில் 'ஹவுதி' தொடர் அராஜகம்! இந்தியாவிலிருந்து ஜெட் விமான எரிபொருளை ஏற்றிக்கொண்டு, செங்கடல் வழியாகச் சென்று கொண்டிருந்த கப்பல் மீது யேமன் கிளா்ச்சியாளா்கள் படையான ஹவுதி அமைப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கடல் பகுதியில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வரும் கப்பல்களை தாக்கி அழிப்போம் என்று ஏமன் கிளர்ச்சிப்படையான ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதைத்தொடர்ந்து …

  21. Published By: NANTHINI 14 DEC, 2023 | 01:59 PM பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது கல்லறை அமைக்கப்பட வேண்டிய இடம் எது என்பதை அறிவிக்கும் விதமாக, "ரோம் நகரில் உள்ள சான்டா மரியா மேகியோர் பசிலிக்காவில் எனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன்" என நேற்று (13) மெக்சிகோ ஒளிபரப்பான டெலிவிசாவின் N+ ஸ்ட்ரீமிங் சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். வத்திக்கான் அதிகாரபூர்வ ஊடக தகவலின்படி, இதுவரை பரிசுத்த பாப்பரசர் பதவி வகித்த 7 பேரின் கல்லறைகள் வத்திக்கான் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிலேயே கட்டப்பட்டுள்ளன. ஆனால், அங்கு தனக்கான கல்லறை அமைக்கப்பட விரும்பாமல், சான்டா மரியா மேகியார் (santa maria maggiore) …

  22. பட மூலாதாரம்,EUROPEAN SPACE AGENCY படக்குறிப்பு, ஐரோப்பிய ஒன்றியம் 2026இல் இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. அவை மனித நடவடிக்கைகளால் ஏற்படும் கரிம உமிழ்வை அடையாளம் காட்டும் என்று நம்பப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், நவீன் சிங் கட்கா பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி உலக சேவை 13 டிசம்பர் 2023 துபாயில் நடந்த COP28 காலநிலை உச்சிமாநாட்டில் பங்கேற்பாளர்கள் புதைபடிம எரிபொருள் தொழில்நுட்பங்களை படிப்படியாக வெளியேற்றுவது பற்றி வாதிடுவதால், வாக்குறுதிகளுக்கும் உண்மைக்கும் இடையே எப்போதும் இடைவெளி இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இவ்வாறு, நாடுகள் தங்கள் கடமை…

  23. கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி ரஷ்யர் ஒருவர் விமானத்தில் பயணித்த சம்பவமானது சமூக ஊடகங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸுக்கு விமானத்தில் பயணித்த சம்பவம் தொடர்பிலேயே அதிகாரிகளால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. டென்மார்க்கில் இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மீறினார் என்பது தொடர்பில் எதுவும் நிலைவில் இல்லை என்றே குறித்த நபர் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். வழக்கு பதிவு இந்த நிலையில் அவர் மீது பெடரல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 46 வயதான குறித்த நபர் கடந்…

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சரப்ஜித் சிங் தலிவால் பதவி, பிபிசி நிருபர் 13 டிசம்பர் 2023, 05:29 GMT படிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து கனடாவுக்கு வரும் மாணவர்களுக்கு அந்நாடு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள், மாணவர்கள் கனடாவுக்கு செல்வதை அதிக செலவானதாகவும் கடினமாகவும் மாற்றும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். புதிய விதிகளின்படி, கனடா அரசாங்கம் ஜி.ஐ.சி. (GIC - உத்தரவாத முதலீட்டுச் சான்றிதழ்) தொகையை இரட்டிப்பாக்கியுள்ளது. மேலும், பணி அனுமதியிலும் (Work permit) பல மாற்றங்களை செய்துள்ளது. பிற நாடுகளில் இருந்து கனடாவுக்குச் செல்லும் மாணவர்கள் தங்கள் பொருளாதார தகுதிய…

  25. பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா மீது இஸ்ரேல் நடத்திய கண்மூடித்தனமான குண்டுவெடிப்பால் சர்வதேச ஆதரவை இழக்கத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். செவ்வாயன்று நிதி திரட்டும் நிகழ்வில் அவரது பேச்சு, இஸ்ரேல் தலைமை மீதான அவரது வலுவான விமர்சனத்தை வெளிப்படுத்தியது. அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல்களை ஆரம்பித்ததில் இருந்து இஸ்ரேலுக்கு அசைக்க முடியாத ஆதரவை ஜோ பைடன் வழங்கியுள்ளார். அமெரிக்க ஆதரவை இஸ்ரேல் நம்பலாம் என்று அவர் மீண்டும் வலியுறுத்திய அதே வேளையில், அவர் அதன் அரசாங்கத்திற்கு நேரடி எச்சரிக்கையை விடுத்தார். "இஸ்ரேலின் பாதுகாப்பு அமெரிக்காவிடம் இருந்திருக்கலாம். ஆனால்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.