உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26864 topics in this forum
-
கிழக்கு மியான்மார் பகுதியில் இன்று ரிக்டர் அளவு கோலில் 7.0 என்று பதிவான பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் மையம் தாய்லாந்து, லாவோஸ் எல்லைப்பகுதிக்கு அருகே மலைப்பகுதியில் 10கிமீ ஆழத்தில் இருந்ததாக அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இதன் தாக்கத்தினால் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் கட்டிடங்கள் குலுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1103/24/1110324071_1.htm
-
- 2 replies
- 892 views
-
-
நிலநடுக்கம், ஆழிப்பேரலை, அணுமின்சார நிலையங்களில் அணு உலைகள் வெடிப்பு என்று அடுக்கடுக்காக சோதனைகள் வந்த நிலையிலும், உழைப்புக்கும், நேர்மைக்கும் ஜப்பானியர்கள் தரும் முக்கியத்துவம் நெகிழவைக்கிறது. நாட்டுப்பற்றும் நாணயமும் வியக்கவைக்கின்றன. ஜப்பானிய அரசு தன்னாலியன்ற முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையிலும் வட கிழக்கு கடலோரப் பகுதியில் இன்னமும் வாழ்க்கை சகஜ நிலைக்குத் திரும்பவில்லை. சாலைகள் சீரமைக்கப்படாததால் தரைவழி போக்குவரத்தும், கடலில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களால் கடல் வழிப் போக்குவரத்தும், அணுக்கதிர் வீச்சால் வான் வழிப் போக்குவரத்தும் மேற்கொள்ள முடியாமல் கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இப்பகுதி இருக்கிறது. இதனால் மக்களுக்கு உணவு, எரிபொருள், மருந்து - மாத…
-
- 2 replies
- 1k views
-
-
சிரியாவில் மசூதி அருகே கூடியிருந்த அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் இரு மாதங்களாகவே அரசுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. கடந்த சில நாள்களாக இந்தப் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. தலைநகர் டமாஸ்கஸில் இருந்து தெற்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள தாரா நகரம் போராட்டத்தின் மையப்பகுதியாக விளங்குகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இங்குள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மசூதியில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடியிருக்கின்றனர். கடந்த 40 ஆண்டுகளாக சிரியாவில் நடந்துவரும் ஆசாத் குடும்பத்தினரின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வே…
-
- 14 replies
- 1.7k views
-
-
ஏமனில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்துவதற்கு அரபு நாடுகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஏமனில் அதிபர் சலேவுக்கு எதிராக கடந்த சில வாரங்களாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் சானாவில் போராட்டக்காரர்கள் கூடியிருக்கும் பல்கலைக்கழக மையச் சதுக்கத்தில் பாதுகாப்புப் படையினர் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அங்கு தொழுகை நடத்துவதற்காகக் கூடியிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 50-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து ஏமன் அரசுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில்…
-
- 0 replies
- 795 views
-
-
தொகுதிப் பங்கீடுகள்: பல குழப்பங்களும், சில தெளிவுகளும் தமிழக தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடந்திருக்கும் நிகழ்வுகளை கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால், சிரிப்பாகவும், வேதனையாகவும், எரிச்சலாகவும் இருக்கிறது. இந்தத் தேர்தல் முறை எவ்வளவு பெரிய ஜனநாயக ஹம்பக் என்பதை அதன் நீள அகலங்களோடு படுதா விரித்துக் காட்டியிருக்கிறது. முதலில் திமுக அணியில் அது ஆரம்பித்தது. தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸுக்கு அறுபதா, அறுபத்துமூன்றா என்ற கணக்கில் தன்மானம், சுய கவுரவம் என்ற வார்த்தைகளைக் கொட்டி வெடித்தது. இதுதான் சமயம் என ஜெயலலிதாவோ காங்கிரஸோடு கூட்டணி சேர ஆட்களை அனுப்பினார். டெல்லி போன தி.மு.க பொத்திக்கொண்டு வந்து நல்லபிள்ளையாக ‘அறுபத்து மூன்று’ என்று கீச்சுக்கு…
-
- 0 replies
- 737 views
-
-
விளையாட்டுத் திடலில் மரணமடைந்த நிலையில் வன்கூவர் இளைஞன் வன்கூவரின் கம்லூப் பகுதியிலுள்ள ஆரம்பப் பாடாசலை ஒன்றின் கூடைப்பந்தாட்டத் திடலில் 20 வயதுடைய இளைஞன் ஒருவனது சடலம் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. செவ்வாயன்று மாலை 4.45 மணியளவில் பொலிசாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற பொலிசார் இந்த உடலைக் கண்டெடுத்தனர். இவர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் மரணமடைந்திருப்பதாகப் பொலிசார் கூறுகிறார்கள். கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் கூடைப்பந்தாட்டத் திடலில் விழுந்து கிடந்த இவரது உடல் அருகிலிருக்கும் மருத்துமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட இந்த நபருடன் தானும் இருந்ததாகக் கூறிப்பிடும் கொலைசெய்யப்பட்டவரது …
-
- 0 replies
- 869 views
-
-
காப்பர் அரசாங்கம் முன்வைத்த வரவுசெலவுத் திட்டத்தினை கனேடிய எதிர்க்கட்சிகள் நிராகரிப்பு கடந்த செவ்வாயன்று கனடாவின் கென்சவேட்டிவ் கட்சியினர் பாராளுமன்றில் சமர்ப்பித்த வரவுசெலவுத்திட்டத்தினை நாட்டினது எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டாக இணைந்து நிராகரித்திருக்கின்றன. புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கான வரவுசெலவுத்திட்டமிது எனக் கூறி கனேடிய நிதியமைச்சர் ஜிம் பிளகெற்றி பாராளுமன்றில் வரவுசெலவுத் திட்டத்தினைச் சமர்ப்பித்திருந்தார். ஆனால் குறிப்பிட்ட இந்த வரவுசெலவுத் திட்டமானது தங்களது எதிர்பார்ப்பு எதுவோ அதற்கு அமைவாக இல்லையெனக் கூறி லிபரல் கட்சியின் தலைவர் மிக்கெயல் இன்னெரிவ்இ புளொக் கியூபெக்கி என்ற கட்சியின் தலைவர் கில…
-
- 0 replies
- 904 views
-
-
கனேடிய மருத்துவ அணி மீண்டும் யப்பானை நோக்கிப் புறப்படுகிறது யப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு உதவும் வகையில் கனேடிய மருத்துவ அணியொன்று கடந்தவாரம் டோக்கியோவிற்குச் சென்றிருந்தது. ஆனால் அங்கு விபத்துக்குள்ளாகிய அணு உலையிலிருந்து கதிரியக்கம் வெளிப்பட்டதைத் தொடர்ந்து ஊர் திரும்பியிருந்த கனேடிய மருத்துவ அணியினர் மீண்டும் யப்பானை நோக்கிப் புறப்படுகிறார்கள். மீண்டும் யப்பானை நோக்கிப் புறப்படும் இ;ந்த மருத்துவ அணியினர் அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் நன்மைகருதி தற்காலிக மருத்துவனையொன்றை நிறுவவுள்ளதோடு மருத்துப்பொருட்கள் மற்றும் தண்ணீரைச் சுத்திகரிப்பதற்காக வழிவகைகளையும் கொண்டுசெல்கிறார்கள். இம்முறை அணுக்கத…
-
- 0 replies
- 797 views
-
-
ரொறன்ரோ அதிகவேகமாகப் பயணித்த வாகனத்திலிருந்து குதித்தவர் உயிர் தப்பினார் செவ்வாயன்று மாலையில் ரொறன்ரோ நகரத்தின் 401ஆவது நெடுஞ்சாலையில் மணிக்கு 100 கி.மீ என்ற வேகத்தில் பயணித்தக்கொண்டிருந்த வாகனத்திலிருந்து குதித்தவர் காயங்களுடன் உயிர்தப்பினார். குறிப்பிட்ட இந்தச் சம்பவத்தின்போது காயமடைந்த இந்த 39 வயது நபர் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிசார் கூறகிறார்கள். வாகனத்தில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த இந்த நபர் கதவினைத் திறந்துகொண்டு வேகமாகப் பயணித்த வாகனத்திலிருந்து வீதியில் குதித்திருக்கிறார் எனப் பொலிசார் கூறுகிறார்கள். சம்பவ இடத்திற்கு முதலுதவிப் பணியாளர்கள் வரும்வரைக்கும் இந்த நபர் வீதிய…
-
- 1 reply
- 945 views
-
-
பீஜிங்: பீஜிங்கில் முறையற்ற வகையில் செயல்பட்டு வரும் இண்டெர்நெட் சைட்டுகளை தடைசெய்ய முடிவு செய்துள்ளது. தற்போது சீனாவில் கணக்கில்லாத அளவில் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் ரேடியோ நிறுவ னங்கள் உள்ளன. இவைகள் அந்தந்த மாகாண அரசுகளால் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் அதிகளவில் இவைகள் காணப்படுகின்றன. இதன்மூலம் நாட்டு மக்களிடையே எழுச்சியை தூண்டி விடும்வகையில் செய்திகள் பரப்பப்படுகின்றனவோ என்ற அச்சம் சீன அரசுக்கு ஏற்பட்டுள்ளது. சீனாவில் தற்போது உள்ள சட்டதிட்டத்தின் மூலம் இவற்றை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை இருப்பதால் கையை பிசைந்து கொண்டுள்ளது. குவாங்÷ஷாஹூ டெய்லி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைட்டுகள் மூலம் அதிக வருமானம் அரசுக்கு க…
-
- 0 replies
- 836 views
-
-
பெங்காசி : அமெரிக்கக் கூட்டுப் படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் கடாபியின் கடற்படைத் தளம் ஒன்று முற்றிலும் அழிக்கப்பட்டது. இந்நிலையில், "கடாபியை ஆட்சியை விட்டு இறக்குவது அமெரிக்காவின் நோக்கம் அல்ல' என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின், லிபியா மீதான "போர் விமானங்கள் பறக்க தடை' தீர்மானத்தை அமல்படுத்த, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், கனடா, கத்தார், ஐக்கிய அரபு நாடுகள், டென்மார்க், பெல்ஜியம் மற்றும் நார்வே ஆகிய நாடுகளின் கூட்டுப் படைகள், லிபிய விமானப் படைகள் மீது கடும் தாக்குதலை, கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்டு வருகின்றன. தலைநகர் டிரிபோலியின் தென்பகுதியில் உள்ள "பாப் அல் அஜிசியா' என்ற கடாபியின் ராணு…
-
- 0 replies
- 887 views
-
-
கனடாவில் மே மாதம் தேசிய பாராளுமன்ற தேர்தல் ? இன்று கனடாவில் ஆட்சியில் உள்ள பழமைவாத கட்சி தனது வருடாந்த வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து. சிறுபான்மை எண்ணிக்கையை கொண்ட ஆளும் கட்சிக்கு எந்த எதிர்க்கட்சியும் ஆதரவு தர மறுப்பதால் மீண்டும் ஒரு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மே மாதம் நடக்கலாம். Spring election likely as all three opposition parties reject Tory budget Opposition leaders have signalled they will not support the Conservative budget, making a spring election all but inevitable. The budget, tabled Tuesday by Finance Minister Jim Flaherty, had been carefully crafted to try to meet the NDP halfway in a bid to avoid a trip to the polls, but it was also …
-
- 8 replies
- 1.2k views
-
-
சிரியாவிலும் போராட்டம் வெடித்தது! கடந்த மாதம் பெப்ரவரி துனிசியாவிலும் அதைத் தொடர்ந்து எகிப்திலும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கலவரம் மூண்டது. அவை முடிவுக்கு வந்த நிலையில் லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதன் பக்கத்து நாடான சிரியாவிலும் போராட்டம் வெடித்துள்ளது. அங்கு பாத் கட்சியைச் சேர்ந்த பஷார் அல்-ஆசாத் கடந்த 50 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்து வருகிறார். மேலும் அங்கு 48 ஆண்டுகளாக அவரச சட்டம் அமலில் இருந்து வருகிறது. அதனால் அதிபர் ஆசாத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் கலவர மாக மாறியுள்ளது. அங்குள்ள தேரா நகர வீதிகளில் போராட…
-
- 1 reply
- 622 views
-
-
ரஜினிக்கு ஜப்பான் பிரதமர் அழைப்பு! பூகம்பம்-சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் நாட்டுக்கு வருகைத் தரும்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, அந்த நாட்டின் பிரதமர் அழைப்பு விடுத்திருக்கிறார். சுனாமி பாதித்த ஜப்பான் மக்களுக்காக சென்னையில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் இந்த தகவலை ரஜினி வெளியிட்டார். ஜப்பானில் பூகம்பத்தாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் 'இந்தோ-ஜப்பான் சேம்பர் ஆப் காமர்ஸ்' சார்பில் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு ரஜினி பேசியதாவது: ஜப்பானிய மக்கள் எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு, உடனே திரும்ப எழுந்…
-
- 0 replies
- 515 views
-
-
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=13317:2011-03-02-09-05-41&catid=1:articles&Itemid=264
-
- 0 replies
- 554 views
-
-
பிளைக் பெரி பிளே புக் ஏப்பில் 19 இல் சந்தைக்கு வருகிறது கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்க ஆகியவற்றிலுள்ள 20,000 விற்பனை நிலையங்களில் ஏப்பிரல் 19ஆம் நாளன்று பிளைக் பெரி நிறுவனத்தின் புளே புக் என்ற சிறு கணனி விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்படுகிறது. 16 ஜி.பி, 32 ஜி.பி மற்றும் 64 ஜி.பி என வேறுபட்ட மூன்று நினைவகக் கொள்ளளவுகளில் வெளிவரும் இந்த வகைக் கணனி இணைய இணைப்பினைப் பெறுவதற்கு வை-பை வசதியினைக் கொண்டிருக்கும். 499 டொலர் தொடக்கம் 699 டொலர் வரை வேறுபட்ட விலைகளில் சந்தைக்கு வரும் இந்த உற்பத்தியினை கனடாவின் பெஸ்ட் பை மற்றும் வியுச்சர் சொப் ஆகிய விற்பனை நிலையங்களின் அனைத்துக் கிளைகளிலும் ஏப்ரல் 19 முதல் பெறமுடியும். எவ்வாறிருப்பினும் ஒன்ராரியோவினைச் சேர்ந்த வ…
-
- 1 reply
- 642 views
-
-
கழிவுகளைக் கொட்டும் இடமாக மலசலகூடத்தினைப் பயன்படுத்துவதில் கனேடியர்களே முன்னணியில் தாங்கள் வெளியே எங்கும் போடக்கூடிய பல்வேறுபட்ட கழிவுகளை மலக்குழிக்குள் போட்டுவிட்டு தண்ணியை அடித்துவிடுவதாக நான்கில் மூன்று பகுதி கனேடியர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். கனடாவில் குறிப்பாக பிரிட்டிஸ் கொலம்பியாவில் வாழும் பலர் உணவுக் கழிவுகள், தலைமுடி மற்றும் சிக்ரேட் அடிக்கட்டைகளை மலக்குழியினுள் போட்டுவிட்டு தண்ணியினை அடித்துவிடுவதை அண்மைய ஆய்வொன்று சுட்டிக்காட்டுகிறது. தாங்கள் தங்களது நாளாந்தக் கழிவுகளை மலக்குழியில் போட்டுவிட்டுத் தண்ணியை அடித்துவிடுவதை அல்பேட்டா மாகாணத்தினைச் சேர்ந்தவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். கனேடிய தண்ணீர் பாவனை தொடர்பான வருடாந்த ஆய்விலேயே இந்தத…
-
- 0 replies
- 681 views
-
-
லிபியா மீதான தாக்குதல் ஓர் 'தார்மீகக் கடமை' என்கிறார் மைக்கீ லிபிய வான்பரப்பு விமானப் பறப்புக்குத் தடைசெய்யப்பட்ட பிராந்தியம் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் செயலாற்றவேண்டியது நாங்கள் கட்டாயம் செய்யவேண்டிய சரியானதொரு பணியே என கனேடியப் பாதுகாப்பு அமைச்சர் பெற்றர் மைக்கீ திங்களன்று மக்களவையில் தெரிவித்திருக்கிறார். லிபியா நோக்கிய தங்களது முதலாவது நடவடிக்கைக்காக கனடாவின் சி.எவ் 18 வகையினைச் சேர்ந்த தாக்குதல் விமானங்கள் புறப்பட்டுச்சென்ற சில மணிநேரங்களின் பின்னர் கனடாவின் மக்களவையில் இடம்பெற்ற லிபியா மீதான படை நடவடிக்கை தொடர்பான விவாதத்தினை அமைச்சர் மைக் கீ தலைமையேற்று நடாத்தியிருந்தார்கள். 'இந்த விடயத்தில் தலையிடவேண்டிய ந…
-
- 0 replies
- 602 views
-
-
1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள். 2) குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://avargal-unmaigal.blogspot.com/2011/02/blog-post_05.html பார்க்கவும். 3) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியு…
-
- 0 replies
- 1.4k views
-
-
குண்டுவீச்சில் இருந்து தப்பிக்க லிபியா அதிபர் கடாபி பாதாள அறையில் பதுங்கல் [ செவ்வாய்க்கிழமை, 22 மார்ச் 2011, 11:18.32 மு.ப GMT ] லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் கடாபி பதவி விலக வலியுறுத்தி பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை அடக்க கடாபி தனது ராணுவத்தை ஏவி விட்டு ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறார். எனவே, ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானத்தின்படி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு மற்றும் இத்தாலி நாடுகளின் கூட்டுப்படை லிபியாவின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதிபர் கடாபியின் ராணுவ நிலைகள் மீது போர் விமானங்கள் குண்டு வீசி வருகின்றன. ஏவுகணை தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் நள்ளி ரவு தலைநகர் திர…
-
- 0 replies
- 843 views
-
-
3ம் நாளாக லிபியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா தலைமையிலான மேற்குநாடுகளின் விமானங்களில் ஒன்று லிபியாவில் வீழ்ந்து நொருங்கியுள்ளது. இது அமெரிக்காவின் தாக்குதல் விமானமான F-15E ஆகும். இதன் விமானிகளில் ஒருவர் மீட்கப்பட்டுள்ள அதேவேளை மற்றவரை மீட்கும் பணிகள் தொடர்வதாக அமெரிக்க பெண்டகன் அறியத்தந்துள்ளது. வழமை போல அது தொழில்நுட்பக் கோளாறால் விழுந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. http://www.reuters.com/article/2011/03/22/us-libya-idUSTRE7270JP20110322?feedType=RSS&feedName=topNews&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+reuters%2FtopNews+%28News+%2F+US+%2F+Top+News%29 F-15 E
-
- 2 replies
- 902 views
-
-
டெல்லியில் லேசான நிலநடுக்கம் March 21, 2011 டெல்லியில் இன்று பிற்பகல் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டர் அளவில் 5.7-ஆக பதிவாகி இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியாவில் டெல்லி, நொய்டா, காஷ்மீர் மாநிலம், உள்ளிட்ட சில பகுதிகளில் உணரப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 3 வினாடிகள் வரை நிலநடுக்கம் நீடித்தது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. http://www.alaikal.com/news/?p=61998 5.8 magnitude earthquake jolts Delhi Tremors were reported on Monday afternoon from parts of Delhi, especially from Patparganj in the east. A resident cal…
-
- 1 reply
- 497 views
-
-
விரட்டப்பட்டோரே, துரத்தப்பட்டோரே வருக, வருக-வைகோவுக்கு கருணாநிதி மறைமுக அழைப்ப செவ்வாய்க்கிழமை, மார்ச் 22, 2011, 8:41[iST] A A A Free Newsletter Sign up Ads by Google Call Sri Lanka 1p/min VectoneMobile.co.uk/FreeSim Call for only 1p/min and get Free texts to Sri Lanka every day! சென்னை: விடுபட்டோர்- விரட்டப்பட்டோர்- துரத்தப்பட்டோர்- விலை போகாது வெங்குருதி தனிற் கமழ்ந்த எங்கள் வீர மூச்சு- தமிழ் மூச்சு எனத் தடந்தோள் தட்டி வந்திடுவீர் வாகை சூட என்று கண் மூடி தவம் இருக்கும் துறவிகளைப்போல்- தூய ஞானிகளைப்போல் -நான் தவம் இருக்கின்றேன்- என் உயிரினும் இனியோரே! இன்ப முடிவினை எல்லோரும் சேர்ந்து சுவைப்போம்! வருக! வருக! வரிப்புலி வரிசையே வருக என்று முதல்வர் கர…
-
- 5 replies
- 1.1k views
-
-
சக.. அப்பாவி மனித உயிர்களின் நூற்றுக்கணக்கான அழிவுக்கும்.. பொருள் சொத்தழிவு என்று பேரழிவுகளுக்கும்... மனிதரில் இன்னொரு தரப்பு செய்யும் செலவை பாருங்கள்.. அதுவும் பிரிட்டன் போன்ற பொருளாதார வளர்ச்சி (கடந்த காலாண்டில்) பூச்சியத்துக்கு கீழே நிற்கும் நாடுகள்.. பொதுமக்கள் மீது பல பொருண்மிய அழுத்தங்களை திணிக்கும் நேரத்தில் குண்டுகளுக்கு கொட்டும் செலவோ மிகப் பெரியது. ஒரு தடவை ஒரு Tornado போர் விமானத்தை லிபியா மீது செலுத்த ஆகும் எரிபொருள் செலவு மட்டும் 30,000 பவுன்கள். ஒரு cruise ஏவுகணையின் விலை 500,000 பவுன்கள். இதுவரை 150 ஏவுகணைகளை அமெரிக்காவும் பிரிட்டனும் லிபியா மீது ஏவியுள்ளன. ஒரு Tornado சுட்டு வீழ்த்தப்பட்டால் அதை பிரதியீடு செய்ய ஆகும் செலவு 50 மில்லியன் …
-
- 7 replies
- 1.8k views
-
-
எகிப்திய தலைநகரில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது கல்வீச்சு: ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது எகிப்திய தலைநகர் கெய்ரோவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளளது. கெய்ரோவில் அரபு லீக் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் பான் கீ மூன் பங்குபற்றினார். அங்கிருந்து தஹ்ரிர் சதுக்கத்தை நோக்கிச் செல்ல அவர் வெளியே வந்தபோது, லிபியாவில் ஐ.நா. ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் கூட்டுப்படைகளின் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களால் பான் கீ மூன் மீது கற்கள்வீசப்பட்டன. பான் கீ மூனுக்கு எதிரனா கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். எனினும் இதனால் ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அவர் மீண்டும் அரபு லீக் தலைமையக கட்டிடத்திற்க…
-
- 5 replies
- 701 views
-