Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. முழுமையாக அணு ஆயுதங்களை கைவிடாமல், வட கொரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கப்படமாட்டாது என அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார். தென் கொரியாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். அணு திட்டங்களை கைவிட வட கொரியா ஒப்புக் கொண்டுள்ளதையும் மைக் குறிப்பிட்டார். கிம் ஜாங்-உன் அணு ஆயுதங்களை கைவிடுவதற்கான அவசரத்தை புரிந்து கொள்வார் என்று நம்புவதாக தெரிவித்த அவர், 2020ஆம் ஆண்டிற்குள் வட கொரியா மிக பெரிய அளவில் ராணுவ நடவடிக்கைகளையும், ஆயுதங்களையும் …

  2. ராணியின்... பிளாட்டினம் விழாவைக் கொண்டாட தயாராகும், மில்லியன் கணக்கான மக்கள்! பிரித்தானியா முழுவதும் திட்டமிடப்பட்ட நிகழ்வுகளுடன், நீடிக்கப்பட்ட வங்கி விடுமுறை வார இறுதியில் மில்லியன் கணக்கான மக்கள் ராணியின் பிளாட்டினம் விழாவைக் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மன்னரின் 70 ஆண்டுகால மைல்கல்லைக் கொண்டாட ஆர்வமுள்ள குடியிருப்பாளர்களிடமிருந்து பெரிய எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை உள்ளூர் சபைகள் அங்கீகரித்த பிறகு, நாடு முழுவதும் 16,000 வீதி விருந்துகள் இடம்பெறுமென மதிப்பிடப்பட்டுள்ளது. சில நிகழ்வுகள் தனியார் வீதி விருந்துகள். மற்றவை பெரிய ஜூபிலி மதிய உணவு என்று செல்லப்பெயர். மற்றும் பெரிய மதிய உணவு பொதுமக்களுக்கு திறந்திருக்கும். ஹெர் மெ…

  3. Published By: RAJEEBAN 30 APR, 2023 | 11:50 AM உக்ரைன் ஜனாதிபதி வொலெடிமிர் ஜெலென்ஸ்கி தான் எப்போதும் கைத்துப்பாக்கியொன்றை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளதுடன் உயிருடன் பிடிபடுவதை விட போராடிசாவேன் என தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகரிற்குள் நுழைந்து ஜனாதிபதியை இலக்குவைப்பதற்கு ரஸ்ய புலனாய்வாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து உக்ரைன் அதிகாரிகள் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். 2022 பெப்ரவரியில் ரஸ்ய படையினர் உக்ரைனிற்கு எதிராக போரை ஆரம்பித்த பின்னர் ரஸ்ய புலனாய்வு பிரிவினர் உக்ரைன் தலைநகரிற்குள் ஊடுருவி ஜனாதிபதி அலுவலகங்கள் அமைந்து…

  4. 2 மில்லியன் மக்களில் தொற்றியது கொரோனா வைரஸ்: பல நாடுகளில் மோசமான விளைவு! உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவியுள்ள கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து கடும் பாதிப்புக்களையே ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் பரவல் நேற்று ஒரேநாளில் மட்டும் 2 ஆயிரத்து 407 பேரை மாய்த்து அந்நாட்டை நிலைகுலைய வைத்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 2 மில்லியன் மக்களைப் பாதித்துள்ளமை இதுவரை கண்டிறியப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரேநாளில் 6 ஆயிரத்து 981 பேரின் மரணங்கள் பதிவாகியதுடன் ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 708 பேர் இதுவரையான காலப்பகுதியில் மரணித்துள்ளனர். மேலும், 4 இலட்சத்து 78 ஆயிரத்து 932 பேர் இதுவரை குணமடைந்துள்…

  5. லண்டன் சுரங்க ரயில் வெடிப்புச் சம்பவத்தை ஒரு பயங்கரவாத சம்பவமாக கருதுவதாக லண்டன் காவல் துறை தெரிவித்துள்ளது, வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனையை சீனா கண்டித்துள்ளது மற்றும் பாகிஸ்தான் இடைத்தேர்தல் குறித்த ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  6. ராக்கெட்டை விண்வெளியில் செலுத்தியது ஈரான்: செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதா? 3 சாதனங்களுடன் கூடிய ஒரு செயற்கைக்கோளை பீனிக்ஸ் என்ற புதிய ராக்கெட் மூலம் ஈரான் விண்ணில் செலுத்தி உள்ளது. டெக்ரான், விண்வெளியில் ராக்கெட் ஒன்றை செலுத்தி உள்ளதாக ஈரான் கூறுகிறது. ஆனால் அந்த ராக்கெட் சுமந்து சென்ற செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதா என தெரியவில்லை. அமெரிக்காவுடன் மோதல் போக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் 2015-ம் ஆண்டு ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுத திட்டங்களை கைவிட்டால், அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார த…

    • 1 reply
    • 300 views
  7. ஹமாஸ் அமைப்பின் தலைவரை பயங்கரவாதி என அறிவித்தது அமெரிக்கா பாலத்தீன் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரை பயங்கரவாதி என்று அறிவித்து, அவருக்கு பல்வேறு தடைகளை விதித்துள்ளது அமெரிக்கா. ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா. இவருக்கு ஹமாஸ் இயக்கத்தின் ஆயுத குழுக்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றும், இவர் ஆயுத சண்டைக்கு ஆதரவாக இருக்கிறார் என்றும் கூறி அவரை பயங்கரவாதி என்று அறிவித்துள்ளது அமெரிக்கா. முன்பே ஹமாஸ் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அறிவித்து இருந்தன. இதனை பயனற்ற ஓர் அறிவிப்பு என ஹமாஸ் இயக்கம் வர்ணித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இஸ்ரேல்…

    • 0 replies
    • 300 views
  8. A law enforcement officer has been shot outside the Berrien County Courthouse in St. Joseph, Michigan, according to the Berrien County Sheriff's Department. Michigan State Police have secured the scene, according to a tweet from Gov. Rick Snyder. http://www.cnn.com/2016/07/11/us/michigan-courthouse-shooting/index.html

  9. இந்திய வணிகர் கிடங்கில் மீட்ட 1,500 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் - மருத்துவ உலகை புரட்டிப்போட்ட சம்பவம் கட்டுரை தகவல் எழுதியவர், எலியோனோர் ஃபிங்கெல்ஸ்டீன் பதவி, பிபிசிக்காக 40 நிமிடங்களுக்கு முன்னர் சுமார் 5 கோடி மதிப்புள்ள மனித எலும்புகளைச் சேகரித்து வைத்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ஜான் பிச்சயா ஃபெர்ரி. சமூக ஊடகங்களில் பலர் இவரைப் பின்தொடர்கின்றனர். எலும்பியல் துறைக்கு இவரது பணி புத்துயிர் அளிக்கிறது. நியூயார்க் நகரின் புரூக்ளினில் உள்ள அவரது கிடங்கிற்குச் சென்றபோது, தான் சேகரித்த எலும்புகள் மற்றும் கண்டுபிடித்த கண்கவர் பொருட்களைப் பற்றிய ஒரு பார்வையை நமக்கு அளித்தார். 'முறையாக சேகரிக்…

  10. டிரம்பின் சர்ச்சை கருத்தால் மேலும் ஓர் அமெரிக்க வெளியுறவு அதிகாரி பதவி விலகல் பகிர்க அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டாளி நாடுகளை பற்றி அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்த கருத்துகளால் விரக்தியடைந்த எஸ்தோனியாவுக்கான அமெரிக்க தூதர் பதவி விலகியுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பற்றி அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துகள்தான், பணியில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்ற முடிவை எடுக்க செய்துள்ளதாக ஜேம்ஸ்.டி.மெல்வில்லி கூறியுள்ளதாக ஃபாரின் பாலிஸி பத்திரிகை தெரிவித்திருக்கிறது. தூதரின் தனிப்பட்ட ஃபேஸ்புக் பதிவை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது. நேட்டோ கூட்டணி…

  11. பிரான்ஸ்; தொடரும் ஊடரங்கின் மத்தியில் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ள மருத்துவ மனைகள் Bharati October 21, 2020 பிரான்ஸ்; தொடரும் ஊடரங்கின் மத்தியில் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ள மருத்துவ மனைகள்2020-10-21T05:57:01+05:30கட்டுரை FacebookTwitterMore பாரிஸிலிருந்து அருண் சண்முகலிங்கம் பாரிஸ் பரிஸ் புறநகர் உள்ளடங்கிய Ile de France மாகாணமும் ஏனைய 8 மாநகரங்களும் ஊரடங்கு உத்தரவுக்கு உள்ளாகி இருக்கின்றன. பரிஸ் பரிஸ் புறநகர் பகுதிகளில் ஊரடங்கு காலகட்டத்தில் கொரோனா தொற்று தணிவடையாவிடின் உள்ளிருப்பு நடவடிக்கை அமுலுக்கு வரலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள இக்காலகட்டத்தில் இர…

  12. மரக்காய்போ : வெனிசுலா சிறையில் கைதிகளுக்கிடையே உண்டான மோதலில் 16 கைதிகள் வெட்டிக் கொல்லப் பட்டுள்ளனர். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மேற்கில் உள்ளது மராகாய்போ நகர். கடந்த திங்களன்று அங்குள்ள சிறையில் உள்ள இரு வேறு கும்பல்களை சேர்ந்தவர்களிடையே மோதல் உண்டானது. மோதலைத் தொடர்ந்து உண்டான கலவரத்தில் சிறைக்கைதிகள் 15 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட கைதிகள் அனைவரும் தலைகள் வெட்டப்பட்டும், உடல்களை கூறும் போட்டும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இதே போன்று, வெனிசுலாவில் உள்ள மற்றொரு சிறையில் நடந்த மோதலில் ஒரு கைதி கொல்லப் பட்டார். வெனிசுலாவில் ஆண்டுதோறும் சிறையில் நடக்கும் கலவரங்களில் மட்டும் சுமார் 500 கைதிகள் கொல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் அங்க…

  13. திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சண்முகம் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா வரவேற்றார். விழாவில் அமைச்கர் கே.வி. ராமலிங்கம் கலந்து கொண்டு 58 பேருக்கு ரூ. 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார். இதன்பிறகு அமைச்சர் கே.வி. ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி ஆணையத்தின் இறுதி தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணைய வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல் அமைச்சர் ஜெயலலிதா கடிதம் அனுப்பினார். இதன்பிறகு மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் மத்திய …

    • 0 replies
    • 300 views
  14. புதிய வகை கொரோனா வைரஸ் ஏற்கனவே கனடாவிலும் அமெரிக்காவிலும் இருக்கலாம் என அச்சம்! by : Benitlas http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/image-4.jpg பிரித்தானியாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் ஏற்கனவே கனடாவிலும் அமெரிக்காவிலும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணர் டொக்டர் அந்தோனி ஃபாசி இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, கனடா உட்பட, இதுவரை கண்டறியப்படாத பிற நாடுகளில் இது ஏற்கனவே குறைந்த மட்டத்தில் இருப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய வைரஸ் பிரித்தானியாவில் இதற்கு முன்னர் பரவியதை விட 70 சதவீதம் வரை வேகமாக பரவக்கூடியது என்றே கூறப்பட…

  15. ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை கடுமையாக்கியது ஜப்பான்! உக்ரைன் மீதான ரஷ்யாவின் சமீபத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ரஷ்யாவிற்கு எதிரான அதன் பொருளாதாரத் தடைகளை ஜப்பான் கடுமையாக்கியுள்ளது. ஏற்றுமதி தடை பட்டியலில் ரஷ்யாவின் இராணுவத் திறனை கட்டுப்படுத்தும் பல பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ரஷ்ய அதிகாரிகள், நிறுவனங்களின் சொத்துக்களை ஜப்பான் முடக்கியது. பெப்ரவரி 3ஆம் திகதி 3 முதல் ரஷ்யாவில் உள்ள 49 நிறுவனங்களுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதை ஜப்பான் தடை செய்யும். நீர் பீரங்கி, எரிவாயு ஆய்வு கருவிகள் மற்றும் குறைக்கடத்தி கருவிகள் முதல் தடுப்பூசிகள், எக்ஸ்ரே ஆய்வு கருவிகள், வெடிபொருட்கள் மற்றும் ரோபோக்கள் வரையிலான தயாரிப்புகள் இதில் அடங்கும் என்று ஜப்பான…

    • 5 replies
    • 300 views
  16. ஹவாய்: அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கை ஒலி சோதனை பனிப்போருக்கு பிறகு, முதன்முறையாக அமெரிக்காவின் ஹவாயில், அணுஆயுத தாக்குதல் ஏற்பட்டால் மக்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் ஒலியின் சோதனை நடைபெற்றது. வாகொரியாவின் அணு ஆயுத ஏவுகணைகளின் சோதனை மற்றும் அணு ஆயுத திட்டங்கள் குறித்து தொடரும் அச்சுறுத்தல்களுக்கு இடையே இந்த மாதாந்திர சோதனை மீண்டும் தொடங்கியுள்ளது. வடகொரியா இதுவரையில் பல கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதோடு, கடந்த செப்டம்பர் மாதம், தனது ஆறாவது அணுஆயுத சோதனையையும் நிகழ்த்தியது. பசிபிக் பகுதியில் அமைந்துள்ள ஹவாய், மாதந்தோறும், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களுக்கான எச்சரிக்கை ஒலிகளின் சோதனைகளை தொடர்ந்து நட…

  17. சோம் போர் 100 ஆண்டுகள்: ஐரோப்பா முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சிகள் முதலாவது உலகப் போரின் மிக மோசமான மோதலாகக் கருதப்படும் சோம் போரின் நூற்றாண்டைக் குறிக்கும் வகையில், ஐரோப்பா முழுவதும் நினைவஞ்சலி நிகழ்ச்சிககள் நடைபெறுகின்றன. அஞ்சலி நிகழ்ச்சியில் ராணி எலிசபெத் வடக்கு பிரான்ஸில் உள்ள தீப்யல் நினைவு மண்டபத்தில், ஐரோப்பிய மற்றும் பொதுநலவாய நாடுகளின் படைவீரர்கள், வியாழக்கிழமை இரவு அஞ்சலி செலுத்தினார்கள். ஜெர்மனிக்கு எதிரான தாக்குதல் துவங்கிய நேரத்தைக் குறிக்கும் வகையில், பிரிட்டன் நாடு முழுவதும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த உள்ளது. லண்டனில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், பிரிட்டிஷ் ராணி எலிசபெத், பிரதமர் டேவிட் கேமரன் உள்ளிட்ட பல்வேறு…

  18. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் -1ஐ செயற்கைக்கோள் ஏவல் வெற்றி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி - ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் -1ஐ செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது படத்தின் காப்புரிமைISRO.GOV.IN பி.எஸ்.எல்.வி-சி41 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்ப…

  19. பள்ளிகளில் பயிலும் மாணவிகள், மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர் என பெண்களைக் குறிவைத்து மிகக் கொடூரமான தாக்குதல் நடத்தும் இயக்கம் ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே. இப்போது காபூல் விமான நிலையத்தில் நடைபெற்றிருக்கும் இரட்டைக் குண்டுவெடிப்புகளுக்குப் பொறுப்பேற்றிருக்கும் இந்த இயக்கம் மத்திய கிழக்கில் செல்வாக்குப் பெற்றிருக்கும் ஐ.எஸ். இயக்கத்தின் ஆப்கானிய கிளை. இதன் மிகச் சரியான பெயர் கோரேசன் மாகாண இஸ்லாமிக் ஸ்டேட் (Islamic State Khorasan Province) என்பதாகும். ஆப்கானிஸ்தானில் இருநது இயங்கும் மிகக் கொடூரமான பயங்கரவாத இயக்கம் இது என அறியப்படுகிறது. பள்ளிகளில் பயிலும் மாணவிகள், மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர் என பெண்களைக் குறிவைத்து மிகக் கொட…

  20. டொனால்ட் ட்ரம்ப் விளாடிமிர் புட்டின் நேருக்கு நேர் சந்திப்பு! ஜி 20 மாநாட்டில் நிகழும் உரையாடல் உலகை பாதிக்குமா? புதன் கிரகத்துக்கான ஏழாண்டு பயணம் அடுத்த ஆண்டு துவங்குமென அறிவிப்பு! சூரியனுக்கு மிகஅருகிலுள்ள கிரகத்தின் புதிர்கள் புரிபடுமா? மற்றும் விமானபயணத்தை சாமானியருக்கும் சாத்தியமாக்கிய ஜம்போ ஜெட்டுகளின் விற்பனையில் பெரும் சரிவு! கேள்விக்குள்ளாகும் உலகின் பிரம்மாண்ட விமானங்களின் எதிர்காலம் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  21. ஆஸ்திரேலியாவின் கிழக்கு கரையை ஒட்டி அமைந்துள்ள கிரேட் பேரியர் ரீஃப் பவளப் பாறைகள் இயற்கைக் கட்டமைப்பை அழிவிலிருந்து பாதுகாக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் வரைந்துள்ள திட்டம் போதுமான பலன் அளிக்காது என ஆஸ்திரேலியாவின் அறிவியல் கழகம் கூறுகிறது. பவளப் பாறைகளில் ஏராளமான கடல்வாழ் பிராணிகள் வாழ்கின்றன பருவநிலை மாற்றம், கரையோரத்தில் நடக்கும் அளவுக்கதிமாக அபிவிருத்தி நடவடிக்கைகள் போன்றவற்றின் காரணமாக பவளப் பாறைகளுக்கு ஏற்படுகின்ற பெரிய பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகள் பற்றி அரசாங்கம் கொண்டுவந்துள்ள ரீஃப் 2050 லாங் டர்ம் சஸ்டெய்னபிலிட்டி பிளான் என்ற நெடுங்கால நோக்கிலான பாதுகாப்புத் திட்டம் போதிய அளவுக்கு பேசவில்லை என அக்கழகம் தெரிவிக்கிறது. பவளப்பாறைகள் சேதமடைந்து வருகின்றன…

  22. ஸ்காட்லாந்து விடுதலைக்கு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த விரும்பும் ஸ்டர்ஜன் ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து சுதந்திரம் பெற்று தனி நாடாகும் நோக்கில் புதியதொரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு அதிகாரம் பெற விரும்புவதாக ஸ்காட்லாந்து முதன்மை அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் அறிவித்திருக்கிறார். Image captionபிரிட்டிஷ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக நாடாளுமன்றம் முடிவு செய்வது ஏற்க முடியாததாக அமையும் - டேவிட் டேவிஸ் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஜக்கிய ராஜ்ஜியம் வெளியேறுவதற்கு முறையான நடவடிக்கைகளை தொடங்குகின்ற வரைவு மீது வாக்கெடுப்பு நடத்த பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தயார் செய்து வருகையில் ஸ்டர்ஜன் இவ்வாறு அறிவ…

  23. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், - தாக்குதலை அடுத்து சிரிய அதிபர் பஷார் அல் அஸதுக்கான ஆதரவை ரஷ்ய நிறுத்த வேண்டும் என ஜி ஏழு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கோரிக்கை! ஆனால் அது சாத்தியமா? -தடுப்பூசி போடலாமா? கூடாதா? தடுப்பூசி போட மறுக்கும் பெற்றோரால் ஒட்டுமொத்த குழந்தைகளும் ஆபத்துக்கு உள்ளாகும் போக்கு பற்றிய செய்தி -செல்வம் கொழிக்கும் மண்புழுக்கள்; ஆப்ரிக்க உதாரணம் குறித்த செய்தித் தொகுப்பு

  24. மலேசியாவில், மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு பரவியுள்ள கடும் புகைமண்டலம் காரணமாக அனேகமாக எல்லா பள்ளிக்கூடங்களையும் இரண்டு நாட்களுக்கு மூடிவிடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்தப் புகைமூட்டத்தால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய பாதிப்புகள் காரணமாக சிங்கப்பூரில் உள்ள பள்ளிக்கூடங்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன. இந்தோனேசியாவில் தணலாக எரிந்துகொண்டிருக்கும் காய்ந்த சருகுகளால் பரவும் தீ தான் இந்த பெரும்புகை மண்டலம் உருவாகக் காரணம். ஒவ்வொரு ஆண்டும் அண்டை நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தக்கூடிய விடயமாகவும் இது மாறியுள்ளது. இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள இந்த புகைமாசு தான் முன்னெப்போதையும் விட மிக மோசமானதாக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அனேமான இடங்களில…

  25. இன்றைய நிகழ்ச்சியில், *அலெப்போவில் கிளர்ச்சிக்காரர் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பம். ஆயிரக்கணக்கானோர் வெளியேறவுள்ளனர். * சிகிச்சைக்காக சினைப்பையை நீக்கி பத்திரமாக வைத்து மீண்டும் அதன் மூலம் குழந்தை பெற்ற பெண்ணின் கதை. * அமைதியீனத்தை தடுக்கும் ஆயுதமாக யோகாவை கையில் எடுத்துள்ள தென்னாப்பிரிக்க சிறைகள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.