Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஒரு ஆற்றில் தன்னுடைய இரு குழந்தைகளை காரோடு மூழ்க வைத்த குற்றத்திற்காக தந்தை கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு பெப்ரவரி 11 ல் நடந்த இச்சம்பவம் இப்பொழுது நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. கிம் ஸ்மித், கிறிஸ்டோபர் தம்பதியரின் குழந்தைகள் கேப்ரியில்லா மற்றும் ரையான். இவர் இரும்பு பட்டறை தொழிலாளியாகவும், போதிய பண வசதி இல்லாதவராகவும் இருந்துள்ளார். தனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக தனது வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவர் தனது குழந்தைகளையும் காரில் அழைத்து கொண்டு ஆற்றில் காரை செலுத்தினார். குழந்தைகள் இருவரும் பின்பக்கம் வழியாக கதறிக் கொண்டு தப்பிக் முயன்றுள்ளனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் மூழ்கும் காருக்குள் சிக்கிக் கொண்டனர். காரில் மூ…

    • 0 replies
    • 501 views
  2. பாகிஸ்தான்சிறுபான்மையின நல மந்திரியாக இருந்தவர் ஷாபாஸ்பாத்தி. இன்று மதியம் அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டு அருகே மறைந்து இருந்த மர்ம மனிதன் அவர் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் ஷாபாஸ் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிர் இழந்தார். இந்த தாக்குதலில் 2 பேர் காயம் அடைந்தனர். அவரை சுட்டவன் உடனே அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அவனை பிடிக்க இஸ்லாமாபாத் முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. ஷாபாஸ் பாகிஸ்தான் மக்கள் கட்சி எம்.பி.யாக இருந்தார். கிறிஸ்…

    • 0 replies
    • 428 views
  3. ஓமனில் மன்னருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி பரவுவதை தடுக்க இராணுவ வீரர்கள் பரவலாக நிறுத்தப்பட்டுள்ளனர். எகிப்து,லிபியா போன்று ஓமனிலும் மன்னராட்சிக்கு எதிரான எதிர்ப்புணர்வு மக்களிடையே காணப்படுகிறது. சமீபத்தில் ஓமன் தலைநகர் மஸ்கட் உள்ளிட்ட இடங்களில் இலேசான அளவில் போராட்டம் வெடித்துள்ளது. இருப்பினும் மக்களிடையே கனன்றுகொண்டிருக்கும் புரட்சி நெருப்பு எந்த நேரமும் பெரிய அளவில் பற்றிக்கொள்ளலாம் என்பதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மஸ்கட் மற்றும் அருகிலுள்ள அரபு நாடுகளின் எல்லையையொட்டிய பகுதிகளில் இராணுவ வீரர்களை அதிக அளவில் நிறுத்தியுள்ளது. இராணுவ வாகனங்களில் வீரர்கள் ரோந்து சென்று நிலைமையை கண்காணிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. htt…

    • 0 replies
    • 807 views
  4. வட ஆப்பிரிக்க நாடான டுனீசியாவில், பிரதமர் முகமது கன்னவுச்சிக்கு எதிரான போராட்டம் வலுவடைந்ததை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அல் செப்சி என்பவர் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. டுனீசியாவில் தான் அரசுக்கு எதிராக முதலில் மக்கள் போராட்டம் வெடித்தது. இதையடுத்து அங்கு 20 ஆண்டுகளாக அதிபராக இருந்த ஜைன் அல் அபிதின் பென் அலி, சவுதிக்கு ஓடி விட்டார். அதையடுத்து, அவரது கூட்டாளியும் அப்போதைய பிரதமருமான முகமது கன்னவுச்சி தலைமையில் புதிய அரசு அமைந்தது. கன்னவுச்சியே புதிய பிரதமராகத் தொடர்ந்தார். ஆனால், முன்னாள் அதிபர் அலியின் கூட்டாளிகள் எவரும் புதிய அமைச்சரவையில் இடம் பெறக் கூடாது என்று, டுனீசிய மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கட…

    • 0 replies
    • 451 views
  5. வரும் ஏப்ரல் 13ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என டில்லியில் தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு மார்ச் 19ம் தேதி வெளியிடப்படும். புதுச்சேரியிலும் இதே நாளில் தேர்தல் நடைபெறும். கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 13ம் தேதியும் அசாமில் 2கட்டமாக ஏப்ரல் 4 மற்றும் 11ம் தேதிகளிலும் மேற்கு வங்கத்தில் 6 கட்டமாகவும் தேர்தல் நடைபெறும். மேற்கு வங்கத்தில் ஏப்ரல்18,ஏப்ரல் 23, ஏப்ரல் 27 மற்றும் மே 3 , மே 7 மே 10 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் சட்டசபை தேர்தலை சந்திக்கிறது. தேர்தல் நடக்கும் அனைத்து மாநிலங்களிலும் பதிவாகும் ஓட்டுக்கள் மே 13ம் தேதி எண்ணப்படுகின்றன…

    • 0 replies
    • 528 views
  6. இங்கிலாந்தில் தற்போது நாகரீகம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண் குழந்தைகளிடம் “ மேக்கப்” மோகம் பெருமளவில் வளர்ந்து வருகிறது. முக அலங்காரம், கைவிரல் நகங்களில் ஒப்பனை செய்தல், கண் புருவங்களை சீரமைத்தல், உதட்டுக்காயம் பூசுதல், உடலில் ஒளிரும் தன்மையுடைய ஆடைகளை அணிதல், தற்காலிகமாக பச்சைகுத்தி கொள்ளுதல் போன்றவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த “மேக்கப்“ மோகம் 3 வயது குழந்தைகளில் இருந்து இளம் பெண்கள் வரை பரவியுள்ளது.அவர்களுக்கு பெற்றோர் அதிக அளவு செல்லம் கொடுப்பதும் தேவைக்கு அதிகமாக பணம் கொடுப்பதுமே காரணம் என்று கூறப்படுகிறது. இளம் பெண்கள் நாகரீகத்தில் அளவு கடந்த ஆர்வம் காட்டுவதால் அழகு சாதன பொருட்கள் அங்கு வியாபாரம் அதிகரித்துள்ளது. இளம்பெண்களின் மேக்கப் மோக…

    • 0 replies
    • 676 views
  7. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் வானியல் விஞ்ஞானி கிரக் லவ்க்ளின். இவர் பூமியின் மதிப்பை கணக்கிட்டார். தற்போது அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெப்லர் என்ற சக்தி வாய்ந்த விண்வெளி ஓடத்தை விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது. அது விண்வெளியில் உள்ள அனைத்து கிரகங்களையும் படம் பிடித்து அனுப்புகிறது. இதன் மூலம் கிரகங்களின் தன்மைகள் அவை குறித்த அதிசய தகவல்கள் கிடைத்து வருகின்றன.அதன்படி பூமி மீது பறந்து கெப்லர் விண்கலம் சுமார் 2 ஆண்டுகளாக அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் பூமியின் மதிப்பை அவர் கணக்கிட்டுள்ளார். அதன்படி பூமியின் மதிப்பு ரூ. 210 ஆயிரம் லட்சம் கோடி என தெரிவித்துள்ளார். பூமியின் வயது, அதன் அளவு மற்றும் தட்டவெப்ப நிலை உள்ளிட்ட மற்ற தன்மைகளை கொண்…

    • 0 replies
    • 519 views
  8. தென்அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது. ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. ரோடுகள் சேதமடைந்துள்ளன. இந்த மழைக்கு மலை பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் லா பாஷில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 400 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன. இதனால் பலர் சேற்றுக்குள் சிக்கியுள்ளனர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். மண்ணுக்குள் புதைந்து கிடப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் லாபாஷ் நகரில் இது போன்ற கடுமையான நிலச்சரிவு இதுவரை ஏற்பட்…

    • 0 replies
    • 557 views
  9. பொதுமக்கள் மீது குண்டு வீசுவதை காரணம் காட்டி கடாபியை அகற்ற கோரும் அமெரிக்கா.. அதே குற்றம் புரிந்த கடாபியின் கூட்டை நட்பை வெளிப்படையாக இனங்காட்டிய ராஜபக்சவை மன்னிப்பது ஏன்..??! நாங்கள்.. கேணையங்கள் என்பதாலா...???! http://www.bbc.co.uk/news/world-europe-12601860 Hillary Clinton calls for Gaddafi to go Governments around the world have condemned attacks on Libyan civilians. Speaking at a UN human rights conference in Geneva, US Secretary of State Hillary Clinton said Libya's Col Muammar Gaddafi must "go now". "Gaddafi and those around him must be held accountable for these acts, which violate international legal obligations and common decency," …

  10. காஷ்மீரில் பரவுகிறதா எகிப்து தீப்பொறி? திங்கள், 28 பிப்ரவரி 2011( 18:57 IST ) எகிப்து, லிபியா என்று உலகின் பல நாடுகளில் உள்ள சர்வாதிகார தலைவர்களுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் ஆட்சி தலைமையையே ஆட்டம் காண வைத்துக்கொண்டிருக்கும் நிலையில்," தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் ..."என்ற கதையாக எகிப்தில் வெடித்த புரட்சி, காஷ்மீரிலும் கலகத்தை கிளப்பி விடுமோ என்று மத்திய அரசு கிலி பிடித்துபோயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது உண்மைதான் என்பதை காஷ்மீர் தெருக்களில் சரமாரியான எண்ணிக்கையில் களமிறக்கிவிடப்பட்டுள்ள மத்திய, மாநில உளவு பிரிவினரின் எண்ணிக்கை பறைசாற்றுகிறது. வியாபாரிகளாகவும், கூலித்தொழிலாளர்களாகவும், ஏஜென்சி முகவர்க…

  11. வெடிக்கும் எரிமலைக்கு முன் நியாயங்கள் பேசுவதில் பயனில்லை.. ஆசிய – தென்னாசிய நாடுகள் நோக்கி வருகிறது புயல்... தற்போது வடக்கு ஆபிரிக்கா நாடுகளிலும், மத்திய கிழக்கிலும் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சி என்பது உலக வரலாற்றில் பதியப்பட வேண்டிய மகத்தான விடயம் என்பதை உலக அறிஞர்கள் படிப்படியாக ஒப்புக்கொள்ள ஆரம்பித்து வருகிறார்கள். நடைபெறுவது வெறும் மத்தியகிழக்கு புரட்சி அல்ல அது உலக மக்கள் புரட்சியாக மாறும் அத்தனை உட்கருக்களையும் கொண்டுள்ளது. இப்போது தமது நாட்டிலும் இந்தப் புரட்சி பரவிவிடுமோ என்ற பீதியே சகல ஆட்சியாளர் மனங்களிலும் புயலாக வீசிக் கொண்டிருக்கிறது. இன்று சீனாவில் இருந்து கிடைத்துள்ள செய்திகள் ஆசிய வட்டகைக்குள் இந்தப் புயல் புகுந்து விளையாடப் போகிறது என்பதை த…

    • 15 replies
    • 1.7k views
  12. தி.மு.க.வினருக்குத்தான் டெல்லியில் நேரம் சரியில்லை...’‘‘துணை முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் திடீரென ரத்து பண்ணிட்டார். ‘‘காங்கிரஸுக்கு எத்தனை சீட்டுகள் தரமுடியும் என்பதை நேரடியாக அகமது பட்டேல்,குலாம் நபி ஆசாத் ஆகியோரிடம் பேசி முடிவுக்கு வரலாம் என்பதுதான் ஸ்டாலினின் திட்டம். இதைத் தெரிந்து கொண்ட அகமது பட்டேல்,‘எதுவாக இருந்தாலும் ஐவர் குழுவிடம் பேசி முடி யுங்கள்’ என்று சொல்லி விட்டார். அதனால் தான் அவர் டெல்லி பயணத்தை ரத்து பண்ணிட்டார். டெல்லி போகும் துணை முதல்வர், அப்படியே திகார் சிறையில் இருக்கும் ராசாவைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வர வேண்டும் என் பது முதல்வரின் ஆசை. ஆனால் இந்த விஷயத்தில் குடும்பத்தினர் யாருக்கும் விருப்பம் இல்லை. குறிப்பாக அழகிரிக்கும், செல…

  13. வரும் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு கடைசித் தேர்தலாக இருக்க வேண்டும்.தமிழர்களை கொன்று குவித்த கோரத்திற்கு துணை நின்ற தி.மு.க.வும் ஆட்சிக்கு வரக்கூடாது’’என்று ஆவேசமாக கூறுகிறார் இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன். ‘‘சிறிய படத்தயாரிப்பாளர்களின் நிலை கவலைக் கிடமாகி விட்டது. புதுமையான படைப்புகளை கொடுக்கக் கூடியவர்கள் தயங்குகிறார்கள். மக்களும் தி.மு.க. மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்’’ என்று அடுக்கிக் கொண்டே போகிறார் மணிவண்ணன். நாமும் நமது கேள்விகளை அவரிடம் அடுக்கினோம். சளைக்காமல் அவர் அளித்த பேட்டி... இன்னும் கூட்டணி பற்றிய தெளிவான முடிவு வராத நிலையில் இப்படி ஒரு கணிப்பு தவறாகவும் போகலாம் அல்லவா? ‘‘கலைஞர் மாபெரும் சக்தி. அதை மறுக்கவில்லை. ஆனால் அவரும் அவரை ச…

  14. கச்சதீவு அருகே எண்ணெய்க் கிணறுகள் தமிழக மீனவர்களுக்கு மேலும் ஆபத்து! Saturday, February 26, 2011, 7:50 கச்சதீவுக் கடல் அருகே பிரிட்டன் நிறுவனம் அமைக்கவிருக்கும் எண்ணெய்க் கிணறுகளால் தமிழக மீனவர்களுக்கு ஆபத்து மேலும் அதிகரித்துள்ளதோடு, மன்னார் வளைகுடாவில் உள்ள அரிய கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தல் [More...] ஏற்பட்டுள்ளது என மீனவ அமைப்பினர் மற்றும் சூழல் ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தமிழகத்துக்கு நேர் கிழக்கே உள்ள மன்னார் வளைகுடாப் பகுதி யுனெஸ்கோ அமைப்பால் கடல்சார் தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டு, உயிர்க்கோள் காப்பகமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அரிய வகை பவளப் பாறை கள், கடல் தாவரங்கள், கடல் ப_, டொல்பின், கடல் அட்டை, கடல் ஆமை ÷பான்…

  15. டிஸ்கவரி விண்கலம் தனது கடைசிப் பயணமாக நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 6 வீரர்களுடன் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து 11 நாள் பயணமாக சென்றது. அமெரிக்க விண்வெளி நிலையமாகன நாசா தனது டிஸ்கவரி எனும் விண்கலத்தினை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இதுவரை 38 முறை அனுப்பி பல்வேறுநாட்டு விண்வெளி வீரர்களை தாங்கி அனுப்பி வைத்தது. தற்போது கடைசியாக நேற்று 6 விண்வெளி வீரர்களுடன் டிஸ்கவரி விண்கலம் நேற்று புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து மாலை 4.50 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சீறிப்பாய்ந்தது. இது டிஸ்கவரி விண்கலத்தின் கடைசிப் பயணமாகும். 352 நாட்கள் விண்வெளியில் வலம் வந்துள்ளது. 246 விண்வெளி வீரர்கள் டிஸ்கவரி விண்‌கலத்தில் …

  16. ஜூலியன் அசாஞ்சேவை சுவீடனுக்கு நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவு வீரகேசரி இணையம் 2/25/2011 10:13:41 AM அமெரிக்க இராஜதந்திர தகவல்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் இணையத்தள ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சேவை சுவீடனுக்கு நாடு கடத்தும்படி பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அசாஞ்சேக்கு எதிராக சுவீடன் நாட்டு நீதிமன்றத்தில் இரண்டு பாலியல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. சுவீடனின் வேண்டுகோளின் பேரில் பிரிட்டனில் வைத்து அசாஞ்சே கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை சுவீடனுக்கு நாடு கடத்தும்படி பிரித்தானிய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதாக அசாஞ்சே அறிவித்துள்ளார். மேற்படி மனுவான…

  17. சில வருடங்களுக்கு முன் நோர்வே நாட்டில் அகதி அந்தஸ்த்து கோரி தஞ்சமடைந்த ஈழத்தமிழர் அவர் தாய்நாட்டில் வாழ்ந்த போது புரிந்த கொலைக் குற்றங்களுக்காக அவர் மீது நோர்வே அரசு கொலைவழக்கு பதிவு செய்துள்ளது. இச் செய்தியை நோர்வே நாட்டின் பிரபல ஊடகங்கள் இன்று வெளியிட்டபோது வேலதிக விசாரணைகளின்போது குறித்த நபர் 3 கொலைக்குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஆனாலும் அவரால் கொலைசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 வரை இருக்கலாம் என நம்பப்படுவதாகவும் அறிவித்திருக்கின்றன. கொலைகளை ஒத்துக்கொண்டதின்பேரில் இப்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மேற்படி நபர் தான் விடுதலைப்புலிகளின் கட்டளையின் பேரிலேயே அக்கொலைகளைச் செய்ததாகத் தெரிவித்துள்ளார். அவரின் இக்கூற்றை அரசு நம்பவில்லை என…

  18. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியலில் கல கலப்பூட்ட இதோ அடுத்த பஃபூனாக நடிகர் விஜய் 'என்ட்ரி' கொடுத்துவிட்டார். "திரையில்தான் நான் கதாநாயகன்... நிஜத்தில் பஃபூன்!" என்று சொல்வதுபோன்று நடிகர் விஜயின் முதல் பொதுக் கூட்ட நிகழ்ச்சி அரங்கேறி இருக்கிறது. திரையில் ஹீரோவாக நடித்து ஓரளவுக்கு ரசிகர்கள் கூட்டமும் சேர்ந்துவிட்டால், நமது வெள்ளித்திரை நாயகர்கள் எல்லோருக்கும் கோட்டையில் உள்ள முதல்வர் நாற்காலி கனவு வந்துவிடுகிறது. அந்த அளவிற்கு தமிழக முதல்வர் நாற்காலியை கைப்பற்றுவதை மலிவாக எடை போட்டு வைத்திருக்கிறார்கள் நம் அவதார நாயகர்கள். திரையில் வெற்றிக்கொடி நாட்டிய எம்.ஜி. ராமச்சந்திரன், அரசியலிலும் சாதித்தார் என்றால் அது, இப்போதைய நாயகர…

    • 0 replies
    • 1.4k views
  19. மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் அரசு எதிர்ப்பலையால் பீதியடைந்துள்ள சவூதி மன்னர் அப்துல்லா தன்னாட்டு அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். மொராக்கோவில் சிகிச்சை பெற்று வந்த சவூதி மன்னர் அப்துல்லா நாடுதிரும்பிய வேளையிலேயே இதனை அறிவித்தளை விடுத்துள்ளார். 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இதில் அரசு ஊழியர்களின் சம்பளம் 15 சதவீத உயர்வு, அவர்களுக்கான வீட்டுக் கடன், சமூகப் பாதுகாப்பு, வெளிநாடுகளில் படிக்கும் சவூதி அரேபிய மாணவர்களின் கல்விக் கட்டண உதவி, வேலையில்லாத இளைஞர்களுக்கு நிதியுதவி மற்றும் இலக்கியச் சங்கங்களுக்கு நிதியுதவி ஆகியவை அடங்கும். இவை தவிர வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் சி…

  20. விடுதலைப் புலிகளின் தாயார் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தியை இழிவுபடுத்தியதைக் கண்டித்து இலங்கைத் துணைத் தூதரக அலுவலகத்தை மூடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார். இது அவர் வெளியிட்ட அறிக்கை: பார்வதி அம்மையாரின் உடல் தகனக்கிரியை நடைபெற்ற இடத்தில் சிங்கள இராணுவம் புகுந்து சிதையை அலங்கோலப்படுத்தியும், மூன்று நாய்களை சுட்டுக்கொன்று வந்து அந்த சிதையில் வைத்தும் இழிவான செயலில் ஈடுபட்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பகைவர்களாயினும் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது நாகரிக மக்களின் கடமை. ஆனால் இலங்கையில் சிங்கள ராணுவத்தினர் மாவீரர்களின் நினைவிடங்களை இடித்துத் தள்ளி அட்டூழ…

  21. லண்டன், பிப்.24: பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை ஸ்வீடனுக்கு நாடுகடத்தலாம் என பிரிட்டிஷ் நீதிபதி தெரிவித்தார். 2 பெண்கள் கூறிய பாலியல் கூற்றச்சாட்டுகள் நாடுகடத்தக்கூடிய அளவிலான குற்றச்சாட்டுகள்தான் என்றும், ஸ்வீடன் கைது வாரண்ட் முறையாக பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி ஹெளவார்ட் ரிடில் கூறினார். எனினும் இந்த தீர்ப்பு குறித்து அப்பீல் செய்ய அசாஞ்சே வழக்கறிஞர்களுக்கு ஒருவாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு நடைபெறுவதையொட்டி நீதிமன்றத்துக்கு அசாஞ்சே வந்திருந்தார். http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%…

    • 0 replies
    • 420 views
  22. குடியரசா? “குடி’ மக்கள் அரசா? குடியரசு நாள் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது; “குடியரசு தினம் என்பது நாட்டுமக்கள் அனைவருக்கும் சட்டப்பூர்வமான உரிமைகள் வழங்கப்பட்ட நாள்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். குடிமக்கள் உரிமை பெற்ற நாள் என்று கூறலாம். ஆனால், இப்போது “குடிமக்கள்’ என்பது அந்தப் பொருளில் வழங்கப்படவில்லை; “குடிக்கும் மக்கள்’ என்பதே நடைமுறை வழக்காகிவிட்டது. அந்த அளவுக்குக் குடிக்கும் மக்கள்தொகை நாளுக்குநாள் பெருகிக் கொண்டிருக்கிறது; மக்கள்தொகைப் பெருக்கத்தைவிடவும் இது போட்டி போட்டுக்கொண்டு பெருகுவது சமுதாய அவலம். காந்திஜியின் அகிம்சை வழியில் நாடு விடுதலை பெற்றதாகக் கூறப்படுகிறது. அது உண்மையானால் அவர் விரும்பிய தீண்டாமை ஒழிப்பும், மதுவிலக்கும் இதுவரை …

  23. மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் பேரன் வருண்காந்தி. இவர் மறைந்த சஞ்சய்காந்தி-மேனகாகாந்தியின் ஒரே மகன். பாரதீய ஜனதா கட்சியின் இளம் எம்.பி.யான வருண்காந்தி உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர். பாரதீய ஜனதாவில் தேசிய செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். 30 வயதாகும் வருண்காந்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகள் யாமினிராய் சவுத்திரி. கொல்கத்தாவைச் சேர்ந்தவர். வருண்-யாமினி திருமணம் வருகிற மார்ச் மாதம் 6-ந்தேதி உத்தரபிரதேச மாநிலம் காசியில் (வாரணாசி) உள்ள காசி காமகோடீஸ்வரர் கோவிலில் நடக்கிறது. காஞ்சி சங்கராச்சாரியார் தலைமையில் இந்து முறைப்படி திருமண சடங்குகள் நடைபெறுகிறது. திருமண விழாவை எளிமையாக நடத்த மேனகாகாந்தி விரும்புவதா…

  24. அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி கடந்த வாரம் திடீரென கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்து இறங்கினார். பிறகு அவர் ஒரு காரில் ஏறி சென்று விட்டார். அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக இருந்தது.கடந்த ஒரு வாரமாக ராகுல்காந்தி பற்றி எந்த தகவல்களும் வெளியிடப் படவில்லை. தனிப்பட்ட பயணத்தில் அவர் உள்ளதாக மட்டும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 5 நாட்கள் அவர் தன் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள மலை பிரதேசங்களில் அவர் அரசியல் தொல்லை, பத்திரிகையாளர்கள் பரபரப்பு எதுவும் இல்லாமல் சுற்றி வந்தார்.நெவர்லேண்ட் ரிசார்ட் என்ற ஓட்டலில் தங்…

  25. பார்வதிப்பிள்ளை மரணத்திற்கு தமிழகத்தில் உள்ள பெரும் தலைவர்களான மு.கருணாநிதி, செல்வி. ஜெயலலிதா, கேப்டன் பிரபாகரன் மன்னிக்க கேப்டன் விஜயகாந்த் ஆகிய மூவரும் வாயே திறந்ததாக தெரியவில்லை. பட்டுக்கோட்டையில் தமிழீழமே தமிழருக்கு தீர்வென பிரகடனப்படுத்தியவன் நானே என்று நமது கலைஞர் அடிக்கடி மார்தட்டுவார்… இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழம் அமைக்கிறேன் என்று தேர்தலுக்காக வீரமுழக்கமிட்டார் நமது அன்னை பராசக்தி ஜெயலலிதா.. ஈழத் தமிழனுக்காக கேப்டன் வந்துவிட்டார் என்று முழங்கினார்கள் அவருடைய கட்சித் தொண்டர்கள். இந்த மூன்று பேரும் பார்வதி அம்மா மரணித்தபோது அவருக்கு மரியாதைக்காகவேனும் ஓர் அஞ்சலி செலுத்தவி;லை.. இந்தத் தலைவர்களுடைய பணத்தில் வரும் தொலைக்காட்சிகளின் மட்டைகளை …

    • 0 replies
    • 750 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.