உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
புதுடெல்லி: உத்தரகாண்டில் இன்னும் 72 மணி நேரத்தில் மீட்பு பணி நிறைவடையும் என உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் மாநில அரசு தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் குறித்து அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இன்று மீட்புப் பணிகள் குறித்து, மத்திய, மாநில அரசுகள் இன்று தனித்தனியே அறிக்கை தாக்கல் செய்தன. மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், "இதுவரை 1,189 முறை மீட்பு ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து பொதுமக்களை காப்பாற்றியுள்ளது. அதேப்போல, விமானப் படைக்குச் சொந்தமான விமானம் 419 முறை விமானத்தில் பறந்து மீட்புப் பணிகளை செய்துள்ளது. அனைத்து…
-
- 0 replies
- 298 views
-
-
இலங்கை எப்படி மலேரியாவை ஜெயித்தது? ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான உலக சுகாதார அமைப்பின் கூட்டம் இலங்கையில் கடந்த செப்டம்பர் 5-ல் நடைபெற்றது. 'மலேரியா இல்லாத நாடு' என்று அது இலங்கையை அறிவித்தது. பொது சுகாதாரம் தொடர்பான இலங்கையின் பெரும் சாதனைகளில் இது ஒரு மைல்கல். வாழ்நாள் அதிகரிப்பு, சிசு மரண விகிதம், சராசரிக் குடும்பத்தின் அளவு என்ற நல்வாழ்வு தொடர்பான மற்ற குறியீடுகளிலும் இது எதிரொலிக்கிறது. தென் கிழக்கு ஆசியாவில் 11 நாடுகள் உள்ளன. இலங்கையைத் தவிர்த்து மாலத்தீவுகளும் மலேரியாவை ஒழித்துள்ளது. இது ஒன்றும் தற்செயலாக நடந்தது அல்ல. இரு நாடுகளுக்கும் மக்களின் நல்வாழ்வு பற்றிய விவகாரங்களில் தொடர்ந்து தலையிட்…
-
- 0 replies
- 298 views
-
-
ஐந்து ரஷ்ய வங்கிகள் மற்றும் மூன்று பேரின் உயர் நிகர சொத்துக்கள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், பயணத் தடையும் விதிக்கப்படுவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பிரித்தானியா அந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பிரித்தானியாவில் வைக்கப்பட்டிருக்கும் 3 பேரின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர்கள் இங்கு பயணிக்கவும் தடை விதிக்கப்படும். இங்கிலாந்தில் உள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் அவர்கள் எந்த விதமான தொடர்புக் கொள்வதற்கும் தடை செய்யப்படுகிறது. மேலும், ரஷ்ய வங்கிகளான ரோசியா, ஐஎஸ் வங்கி, ஜெனர…
-
- 0 replies
- 298 views
-
-
ரஷியாவுக்கு எதிரான தடைக்கு ஆதரவு இல்லை: இந்தியா [Friday, 2014-03-21 12:32:57] ரஷியாவுக்கு எதிராக மேலைநாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை ஆதரிக்க மாட்டோம் என்று இந்தியா அறிவித்துள்ளது. உக்ரைனில் தன்னாட்சி பகுதியான கிரீமியாவில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பு ரஷியாவுடன் அப்பகுதியை இணைப்பதற்கு 97 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்தனர். ரஷியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளை சேர்ந்த அதிகாரிக்களுக்கு எதிராக அந்நாடுகள் பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளன. ஆனால் இந்த தடைகளை ஆதரிக்க போவத்தில்லை என்று இந்தியா அறிவித்துள்ளத…
-
- 2 replies
- 298 views
-
-
இந்தியர்களையும், சீனர்களையும் தங்களுக்கு போட்டியாக அமெரிக்கர்கள் கருதவேண்டும்: ஒபாமா அறிவுரை! [sunday, 2014-04-13 20:15:34] இந்தியர்களையும், சீனர்களையும் தங்களுக்கு போட்டியாக அமெரிக்கர்கள் கருதவேண்டும்,'' என, அமெரிக்க அதிபர், ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவின், மேரிலாண்டில் நடந்த விழாவில், மாணவர்களிடையே அதிபர், ஒபாமா பேசியதாவது - நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால், ஒரே நகரத்தில் போட்டியிடாமல், உலகம் முழுவதும் போட்டியிட வேண்டும். இந்த உண்மையை இந்திய மற்றும் சீன இளைஞர்கள் உணர்ந்திருப்பதால் தான், உலக பொருளாதாரத்தில் அவர்கள் முத்திரை பதித்துள்ளனர். இந்தியர்களும், சீனர்களும் செய்வதை விட சிறப்பாக, உங்களால் செய்ய முடியும். ஆனால், முதலில் முடித்த வேலையின் சந்தோஷத்தி…
-
- 0 replies
- 298 views
-
-
வங்கதேசம் : ஆடைத் தொழிலாளர் வேலைக்கு திரும்பினர் 2 மே, 2013 - 06:58 வங்கதேசத்தில் 8 நாட்களுக்கு முன்னதாக கட்டிடம் இடிந்ததில் 400க்கும் அதிகமானோர் இறந்துபோன சம்பவத்தை அடுத்து, அங்கு மீண்டும் துணி ஆலைகள் முதல் தடவையாக தமது பணிகளை தொடங்கியிருக்கின்றன. இடிந்துபோன கட்டிடத்தின் உரிமையாளருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், துணி ஆலைகளில் பாதுகாப்பு தரங்கள் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கோரி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று வங்கதேச பிரதமர் ஷேக் கசீனா கோரிக்கை விடுத்திருந்தார். பணியாளர் பணிக்கு திரும்பாவிட்டால், வணிக நஸ்டம் காரணமாக ஆலை உரிமையாளர்கள் ஆலைகளை மூட நேர்ந்தால், பணியாளர்கள் தமது …
-
- 0 replies
- 298 views
-
-
டெல்லி: நாங்கள்தான் காந்தியை சுட்டுக் கொன்றோம். அதேபோல கெஜ்ரிவாலையும் சுட்டுத் தள்ளுவோம் என்று பேசி வந்த ஒரு சாமியார் வேட்பாளர் டெல்லி சட்டசபைத் தேர்தலில் படு தோல்வியைத் தழுவியுள்ளார். இவருக்கு வெறும் 373 ஓட்டுக்கள்தான் கிடைத்துள்ளன. அகில இந்திய இந்து மகாசபா சார்பில் புது டெல்லி தொகுதியில் கெஜ்ரிவாலை எதிர்த்துப் போட்டியிட்டவர் சுவாமி ஓம்ஜி. இவர் யார் என்றே நிறையப் பேருக்குத் தெரியவில்லை. ஆனால் தேர்தல் பிரசாரத்தின்போது இவரது பேச்சு எல்லாமே வெறித்தனமாகவே இருந்தது. பாஜக தொப்பியைப் போட்டபடிதான் இவர் தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டார். கெஜ்ரிவாலை இவர் தேச விரோதி என்றும் பேசினார். பிரசாரத்தின்போது இந்த ஓம்ஜி பேசுகையில், பாஜகதான் எனது கட்சி. அக்கட்சிக்கு கிடைக்க வேண்டிய ஓட்…
-
- 0 replies
- 298 views
-
-
யு.எஸ்.- ஒரு சிறிய ஆளில்லாத விமானம் குறைந்த உயரத்தில் பறந்து திங்கள்கிழமை விடியலுக்கு முன் வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் மோதியுள்ளது என இரகசிய சேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் எந்த அச்சுறுத்தலையும் முன்வைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வணிகரீதியாக கிடைக்க கூடிய பெயரற்ற நான்கு சுற்றியக்கியால் தூக்கப்படுவதாகும். இது குறித்து புலன்விசாரனை இடம்பெறுகின்றதாக தெரிவிக்க பட்டுள்ளது. சம்பவம் நடந்த சமயம் அதிபார் பராக் ஒபாமா மாளிகையில் இல்லை. அதிபரும் முதல் பெண்மணி மிசேல் ஒபாமாவும் இந்தியாவில் உள்ளனர். அதிபரின் பெண் பிள்ளைகள் ஷாசா மற்றும் மலியா இருவரும் அவர்களது பேத்தியார் மரியம் றொபின்சனுடன் வெள்ளை மாளிகையில் இருந்தனர் என கூறப்படுகின்றது. அதிபரின் இந்திய பய…
-
- 0 replies
- 298 views
-
-
மியான்மரின் ரக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா ஹிந்துக்கள் கொன்று புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் பகுதியில் பிபிசி நடத்திய சிறப்புப் புலனாய்வு காஸா நிர்வாகத்தை வழிநடத்தும் தலைமையை தீர்மானிக்க பாலஸ்தீனிய அரசியல் குழுக்கள் கெய்ரோவில் இன்று முக்கிய சந்திப்பு சிஸ்ட்டீன் சேப்பல் தேவாலய ஓவியங்கள் போல, தனது வீட்டு அறைகளை அழகுபடுத்தி வரும் எழுபது வயது லண்டன் பெண்மணி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 297 views
-
-
கனடியத் தமிழர் தேசிய அவையின் இரவு விருந்து நிகழ்வில் மாண்புமிகு கிரிஸ் அலெக்சாண்டர் அவர்கள் இலங்கை பற்றி கூறுகையில்: கனடா தான் முதன் முதலாக இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டுமென வலியுறுத்தியது கனடா தான், முதன் முதலாக இலங்கையில் நடந்த பொது நலவாய நாடுகளின் மகாநாட்டை புறக்கணித்தது. அதன் பின்பு பல நாடுகள் கனடாவின் முன்மாதிரியைப் பின்பற்றி இந்தியா உட்பட அந்த மகா நாட்டை புறக்கணித்திருந்தனர். கனடாவின் தொடர்ச்சியான அழுத்தங்கள் தான் இராஜபக்க்ஷே அரசாங்கத்தை தனிமைப்படுத்த உதவியது. கனடாவின் பங்கு தமிழருக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ச்சியாகவும் மிகவும் காத்திரமானதாகவும் இருக்கும். இலங்கையில் புதிய அரசாங்கத்திடம் நாம் சமரசம் என்ற ஒன்றிற்கு முன் தமிழருக்கான …
-
- 0 replies
- 297 views
-
-
ஏமனின் ஹவுத்திகள் மீது ட்ரம்ப் பாரிய அளவிலான தாக்குதல்! செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமனின் ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் (Houthis) மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை (15)பாரிய அளவிலான இராணுவத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளார். இந்த தாக்குதலில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஹவுத்திகளின் முக்கிய ஆதரவாளரான ஈரானை, அந்தக் குழுவிற்கான ஆதரவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார். இதனிடையே, ஹவுத்திகளுக்கு எதிரான புதிய தாக்குதல்களானது பல நாட்கள் அல்லது வாரங்கள் நீடிக்கும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த ஜனவரியில் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து மத்திய கிழக்கில் அமெரி…
-
- 0 replies
- 297 views
-
-
ராஜஸ்தான் – மேற்கு வங்கத்தில் BJPக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்.. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மற்றும் அல்வார் பாராளுமன்ற தொகுதிகள், மண்டல்கர் சட்டமன்ற தொகுதி, மேற்கு வங்காளத்தில் உள்ள உலுபெரியா பாராளுமன்ற தொகுதி, நவுபாரா சட்டமன்ற தொகுதிகளுக்க்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றியை பெற்றுள்ளது. கடந்த 29-ம் திகதி நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன அஜ்மீர் மற்றும் அல்வார் பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ரகு ஷர்மா மற்றும் கரண் சிங் யாதவ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். மண்டல்கர் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் முன்னிலை பெற்றிருந்த…
-
- 0 replies
- 297 views
-
-
உக்ரைன் போரில் பெண் கைதிகளை ஈடுபடுத்த ரஷ்யா திட்டம்! Dec 23, 2022 06:45AM IST ஷேர் செய்ய : ரஷ்ய சிறையில் உள்ள பெண் கைதிகளை உக்ரைன் போரில் ஈடுபடுத்த ரஷ்ய அதிபர் புதின் திட்டமிட்டுள்ள தகவல் வெளிவந்துள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் நெருங்கிய நண்பராக இருப்பவர் எவ்ஜெனி பிரிகோஜின். இவர், பணத்துக்காக எந்த நாட்டுக்காக வேண்டுமென்றாலும் கூலிப்படையாகச் செயல்படும் துணை ராணுவ அமைப்பான வாக்னர் என்ற குழுமத்தின் நிறுவனராகவும் இருந்து வருகிறார். இதை தவிர, உணவு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதனால், புதினின் விருப்பத்துக்குரிய சமையற்காரராகவும் அவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் ரஷ்யாவின் ஸ்வெர்ட்லோவ்ஸ்க் பகுதியைச் சேர்ந்த, புதினின் நம்பிக்…
-
- 0 replies
- 297 views
-
-
சீனாவில் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் கொரோனா பாதிப்பு ;5,000 பேர் பலி சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சீனாவில் அனைத்து ஆஸ்பத்திரிகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. அதே போல உயிரிழப்புகளும் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மயானங்களில் ஏராளமான உடல்கள் குவிந்து கிடப்பதாகவும், இடைவிடாமல் தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் நிரம்பி வழிவது, மயானங்களில் உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீனா அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது…
-
- 0 replies
- 297 views
-
-
அமெரிக்க தேர்தலில் தலையீடு: 13 ரஷ்யர்கள் மீது குற்றச்சாட்டு 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையில் அமெரிக்கப் புலனாய்வு துறை 13 ரஷ்யர்கள் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்துள்ளது. இவர்களில் 3 பேர் இணையம் தொடர்பில் சதி செய்ததாகவும், 5 பேர் அடையாள திருட்டில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்பது பற்றிய விசாரணை மேற்கொண்டு வருகின்ற சிறப்பு வழக்குரைஞர் ராபர்ட் முல்லரால் இந்தக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 ரஷ்ய நிறுவனங்கள் மீதும் இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 297 views
-
-
ஆஃப்கானிஸ்தான் அரசு படைகள் மற்றும் தாலிபன் அமைப்பினர் இடையே ஏற்பட்ட தற்காலிக சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது போல் தெரிகிறது. ரமலான் விழா முடிவடைந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் ஆயுதங்களை ஏந்துமாறு தங்கள் அமைப்பினருக்கு உத்தரவிட்டுள்ளதாக தாலிபன் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே, அடுத்த 10 நாட்களுக்கு இந்த சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பதாக தெரிவித்த ஆஃப்கன் அரசு, ஆனால், தேவைப்படும் சமயத்தில் பாதுகாப்பு படையினர் ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. …
-
- 0 replies
- 297 views
-
-
போர்மியூலா வன் காரோட்டத்தில் முன்னாள் உலக சம்பியனான மைக்கல் ஷூமாக்கரை கோமா நிலையிலிருந்து விழித்தெழச் செய்வதற்காக, அவரின் மனைவி தினமும் பல மணித்தியாலங்கள் அவருக்கு அருகிலிருந்து உரையாடி வருகிறார். 45 வயதான மைக்கல் ஷூமாக்கர் கடந்த டிசெம்பர் 29 ஆம் திகதி பிரான்ஸில் பனிச்சறுக்கலில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளானதிலிருந்து பிரான்ஸிலுள்ள கிறேனோபிள் வைத்தியசாலையில் செயற்கை கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை கோமாவிலிருந்து விழித்தெழச் செய்வதற்கான நடவடிக்கைகளை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக, அவரை கோமா நிலையில் வைத்திருப்பதற்கு செலுத்தப்பட்ட மருந்தின் அளவை படிப்படியாக மருத்துவர்கள் குறைத்து வருகின்றனர். கடந்த மாத இறுதியில் இந்நடவடிக்கை ஆரம்பி…
-
- 0 replies
- 297 views
-
-
இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் 3 பாலத்தீனர்கள் பலி, 250 பேர் காயம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இஸ்ரேல் எல்லையில் பாலத்தீனர்கள் புதிதாக நடத்தியுள்ள போராட்டங்களின்போது, இஸ்ரேல் படைப்பிரிவுகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டதாகவும், 250க்கும் மேலானோர் காயமடைந்ததாகவும் பாலத்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைREUTERS …
-
- 0 replies
- 297 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES/TEZUKA PRODUCTIONS CO., LTD. கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 11 மே 2024, 07:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "பள்ளி முடிந்து மாலை வீடு வந்தவுடன், கை, கால் கழுவிவிட்டு டிவியின் முன்பாக கார்ட்டூன் நெட்வொர்க் சேனலை போட்டுக்கொண்டு இமை மூடாமல் டிராகன் பால் ஸி, போகிமான் ஆகிய தொடர்களை கார்ட்டூன் நெட்வொர்க்கில் பார்க்காமல் நாள் ஓடாது. ஒருநாள், ஒரு எபிசோட் பார்க்காதபோது, பலநாள் காத்திருந்த முக்கியக் காட்சிகள் அன்றெனப் பார்த்து ஒளிபரப்பாகிவிடவே, அவற்றை அடுத்த நாள் பள்ளியில் வகுப்புத் தோழர்கள் விவரித்துப் பெருமிதம் கொள்ளும்போது மனது…
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
டெல்லி: 1998ம் ஆண்டு நடந்த சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்பியான சஜ்ஜன் குமாரை விடுதலை செய்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதையடுத்து நீதிபதி மீது செருப்பு வீசப்பட்டது. 1984ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொலை செய்யப்பட்டதையடுத்து டெல்லியில் பெரும் வன்முறை நடந்தது. காங்கிரஸார் சீக்கியர்களை குறி வைத்துத் தாக்கினர். இதில் ஏராளமான சீக்கியர்கள் உயிர்ழந்தனர். அவர்களது வீடுகள் எரிக்கப்பட்டன, சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்திய நானாவதி கமிஷன் பரிந்துரை செய்ததையடுத்து 2005ம் ஆண்டு சிபிஐ விசாரணை ஆரம்பித்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் டெல்லி எம்பியான சஜ்ஜன் குமார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்…
-
- 0 replies
- 297 views
-
-
ஜப்பான் பிறப்பு விகிதம் இந்த ஆண்டு மிகவும் குறைந்து காணப்படுகிறது. மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் ஒன்றான ஜப்பானில் அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 8 லட்சத்து 64 ஆயிரமாகும். 1899ஆம் ஆண்டு முதலான கணக்கெடுப்பில் இதுவே குறைந்தபட்சமாகும். கடந்த ஆண்டை விட 54 ஆயிரம் குழந்தைகள் இந்த ஆண்டில் குறைந்துள்ளனர். இதே போல் கடந்த ஓராண்டில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் மக்கள் தொகையில் கணிசமான அளவுக்கு சரிவு காணப்படுகிறது. https://www.polimernews.com/dnews/94517/ஜப்பானில்-பிறப்பு-விகிதம்குறைவு--மரண-விகிதம்அதிகரிப்பு
-
- 0 replies
- 297 views
-
-
லட்சகணக்கான முஸ்லிம்கள் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்களா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். சீனாவில் முஸ்லிம்கள் சீனாவில் உள்ள சின்ஜியாங் பகுதியில் லட்சகணக்கான முஸ்லிம்களை தடுத்து வைத்து இருப்பதாக உலாவும் செய்தி அப்பட்டமான பொய் என…
-
- 0 replies
- 297 views
-
-
அவுஸ்திரேலியா, அந்தமானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி உருவாக வாய்ப்பு! [ வெள்ளிக்கிழமை, 01 மே 2015, 10:12.46 AM GMT ] பபுவா நியூகினியா அந்தமானில் இன்று இரண்டு இடங்களில் நடந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து 135 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இன்று இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல், அவுஸ்திரேலியாவின் பபுவா நியூகினியாவில் 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கோகோபோவில் இருந்த 110 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள மையப்பகுதியை சுற்றிய 300 கி.மீ. தூரத்திற்குள் சுனாமி …
-
- 0 replies
- 297 views
-
-
அமெரிக்காவை எதிர்க்க அவுஸ்திரேலியாவுடன் கை கோர்த்த கனடா! ஆர்க்டிக் பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் விதமாக கனடா அரசு பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அவுஸ்திரேலிய அரசிடம் ரேடார் தொழில் நுட்ப சாதனங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குறித்த திட்டத்தின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலியாவுடன் இணைந்து இராணுவ ரேடார் தொழில் நுட்ப அமைப்பை உருவாக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்க்டிக் பகுதிகளில் அமெரிக்க அரசு தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் நிலையில், கனடா அரசு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425726
-
- 0 replies
- 297 views
-
-
செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழிப் பயணமாகச் செல்ல, உலகெங்கிலிருந்தும் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக, இந்தத் திட்டத்தின் பின்னால் இருப்பவர்கள் கூறுகிறார்கள். சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாயில் ஒரு நிரந்திர தளத்தை அமைக்க 'மார்ஸ் ஒன்' எனப்படும் அந்தத் திட்டக் குழுவினர் எண்ணியுள்ளனர். மிகவும் ஆபத்தான, ஏழு மாதப் பயணத்தை விண்வெளியாளர்களால் எதிர்கொள்ள முடியும் என்றால், செவ்வாய் கிரகத்தில் இந்த நிரந்தரத் தளம் அமைக்கப்படும் . திட்டம் உள்ளது, தொழில்நுட்பம் தேவை செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் க்யூரியாசிட்டி விண்கலன். இந்தத் திட்டத்தின் பின்னணியில் இருக்கும் டச்சு பொறியாளர் ஒருவர், 2023 ஆம் ஆண்டு சுமார் நாற்…
-
- 0 replies
- 297 views
-