உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26864 topics in this forum
-
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மருத்துவர் பினாயக் சென்னை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனிதநேய மருத்துவரும் மனித உரிமை போராளியுமான, மருத்துவர் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்ற டாக்டர் பினாநயக் சென் வறுமையில், ஏழ்மையில் வாடி வதங்கி மருத்துவ வசதி பெறமுடியாமல் தவித்த பாமர மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்துவந்தார். இந்த சேவைக்காக எண்ணற்ற விருதுகளும் பெற்றார். சட்டீஸ்கர் மாநிலத்தில் பகாசூர …
-
- 0 replies
- 805 views
-
-
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் நடந்த ஊழலில் கிடைத்த ரூ.60,000 கோடியில் சோனியாவிற்கு ரூ.36,000 கோடியும், கருணாநிதிக்கு ரூ.18,000 கோடியும் சென்றுள்ளது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி குற்றம் சாற்றியுள்ளார். குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு அங்கமான பாரதிய விச்சார் மன்ச் ஏற்பாடு செய்த ‘ஊழல் நெ.1 பிரச்சனையா?’ என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய சுப்ரமணிய சுவாமி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சோனியாவையும், கருணாநிதியையும் சேர்க்கவில்லையென்றால், அவர்களையும் சேர்க்குமாறு கோரி தான் வழக்குத் தொடர உத்தேசித்திருப்பதாகக் கூறியுள்ளார். தற்போது டெல்லியில் நிலவும் ஊழல் விகிதம் 35 விழுக்காடு என்றும், அந்த கணக்கின்படியே …
-
- 0 replies
- 882 views
-
-
. http://www.youtube.com/watch?v=b5_9ypC1TOU&feature=related .
-
- 7 replies
- 2.5k views
-
-
அண்மையில் சென்னையில் நடந்த போலீஸ் விருது வழங்கு விழாவில் தமிழக முதல்வர்,தமிழகத்தின் உளவுப்பிரிவுத் தலைவர் ஜாஃபர்சேட்டுக்கு சிறப்பு விருது வழங்கினார்.அது தேசிய சட்ட நாள் விருது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் செயல்படும் பன்னாட்டு நீதியரசர்கள் குழுமத்தினர்,உலக அளவில் போலீஸ் துறையில் சிறப்பாக செயல்-படுபவர்களுக்கு இந்த விருதை வழங்குகிறார்கள்.இந்த விருதை இந்தியாவிலிருந்து பெறும் காவல்துறை அதிகாரியாக ஜாஃபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அது என்ன தேசிய சட்ட நாள் விருது? சட்டம், ஒழுங்கை காப்பாற்றுவது, குற்றங்களைத் தடுப்பது,பயங்கரவாதத்துக்கு எதிராக துடிப்புடன் செயல்படுவது இப்படி பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து விருதுக் குரிய காவல்துறை அதிகாரியைத் தேர்ந்தெடுத்து இந்த விருதை வ…
-
- 0 replies
- 857 views
-
-
பெரிய ஏற்பாடுகள்,பிரமாண்ட கூட்டங்கள் இல்லாமல் திடீர் விசிட் அடித்து கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்திவிட்டார் ராகுல்.அவரது வருகையில் முக்கியமான நிகழ்வு சென்னையில் அரசியல்வாதிகளைத் தவிர்த்த மற்ற துறை முக்கியஸ்தர்களைச் சந்தித்தது.கன்னிமரா ஓட்டலில் நடந்த இந்த கலந்துரையாடல் கடைசி வரை ரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. சமூக ஆர்வலர்கள்,தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், சிந்தனையாளர்கள்,விவசாயப் பிரதிநிதிகள்,எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், திரைப்படத்துறையினர் என பல்வேறு தரப்பிலிருந்தும் ராகுலுடனான கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.ஆரம்பகட்ட செக்அப்கள் தவிர வழக்கமான பார்மாலிட்டிகள் மிஸ்ஸிங். முதலில் பேசிய சமூக ஆர்வலரும் ‘பாடம்’ ஆசிரியருமான நாராயணன், ‘‘மதுவிலக்கை நா…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழ் சினிமா உலகில் எப்படியெல்லாம் காசு பண்ணுகிறார்கள், எப்படியெல்லாம் தில்லாலங்கடியான ஏமாற்று வேலைகளைப் பண்ணுகிறார்கள் என்பதைச் சொல்லும் டாப் 5 ஃப்ராட் பட்டியல் இது.இந்த ஃப்ராடுகளை எல்லோரும் செய்வதாக நினைக்கவேண்டாம். கோடம்பாக்கத்தில் ஒரு சிலர் மட்டுமே செய்கிற சமாச்சாரங்கள் இவை. ஃப்ராட் - 1 ‘நோகாமல் நொங்கு எடுப்பது’ போல என்பார்களே அந்த ஃபார்முலாவில் வருகிறது இந்த அசகாய ஃப்ராட்.புதுமுகங்கள் நடிக்கும் படங்களைத் தயாரிக்க ஆர்வக்கோளாறுடன் களத்தில் இறங்கும் பல அனுபவமில்லாத தயாரிப்பாளர்கள் தான் இந்த திருட்டு மனிதர்களின் இலக்கு. அப்பாவித் தயாரிப்பாளர் ஊரிலிருந்து கொண்டுவந்த பணம், மீட்டர் வட்டி, கந்துவட்டி பணத்துடன் ஆரம்பிக்கும் படம் முடியும்போது ஏகப்பட்ட பிரச்னைகளுடன் …
-
- 0 replies
- 669 views
-
-
Polish twins have different fathers http://www.ndtv.com/article/world/polish-twins-have-different-fathers-75259 இதில் ஏதும் சந்தேகமிருப்பின் விஞ்ஙான அமைச்சர் நெடுக்ஸ் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
-
- 8 replies
- 1.9k views
-
-
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நூற்றாண்டு காலமாக இந்துக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இப்பகுதியில் இருந்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் தீவிரவாதிகள் தீவிரமாக உள்ளனர். இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துதல், அவர்களை கடத்தி பிணைத்தொகை பெறுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பிணைத்தொகை தர மறுப்பவர்கள் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்படுகின்றனர். இதனால், அங்கு வாழும் இந்துக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பலுசிஸ்தான் மாகாண இந்து அமைப்பின் தலைவர் லட்சுமி சந்த் கார்ஜி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவருடன் சேர்த்து சாஜன்தாஸ், ராம்சந்த், பபோலால், வினோத்குமார் ஆகியோரும் கடத்தப்பட்டனர். எனவே, அவர்களை மீட்க வலியுறுத்தி குஸ்தா…
-
- 1 reply
- 1.1k views
-
-
. 17,368 இந்திய விவசாயிகள் 2009 ல் தற்கொலை செய்துள்ளார்கள். 2008ல் இந்தத் தொகை 16,196 ஆகும். 1997 இல் இருந்து தற்கொலைசெய்துகொண்ட இந்திய விவசாயிகளின் எண்ணிக்கை 2,16,500 ஆகும். புள்ளிவிபரங்களின் படி இந்தியாவில் 30 நிமிடங்களுக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறான். Src : The Hindu விவசாயின் மனைவி ( தற்கொலை செய்து கொண்ட கணவன் படம் பின்னால்) மகாராஸ்ரா
-
- 0 replies
- 416 views
-
-
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தையும் தாண்டி, வரும் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது விலைவாசி உயர்வாகத்தான் இருக்கும் என்கின்றனர், மக்கள். இம்மாத தொடக்கத்தில் பெட்ரோல் விலை ஏற்றத்தால் காய்கறிகளின் விலையும் கூடியது. வெங்காய விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து தாய்மார்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. கோயம்பேடு மார்க்கெட் ஆலோசகர் சவுந்தர்ராஜன், “உரவிலை ஏற்றம், அரசின் நூறு நாள் வேலைத் திட்டம், மழை மற்றும் டீசல் விலையேற்றம் போன்றவையே விலையேற்றத்தின் காரணங்கள்’’ என்கிறார். பெட்ரோல் விலை ஏற்றப்படும்போது, நாடாளுமன்றத்தில் அதுகுறித்து விவாதிக்கப்படும். தற்போது பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் எ ண்ணெய் நிறுவனங்களுக்கு அநியாயமாக தாரை வார்க்கப்பட்டது. லாபம…
-
- 0 replies
- 498 views
-
-
திருப்பூர் வந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ராகுல்காந்திக்கு சரியான பாதுகாப்பு தர தி.மு.க. அரசு தவறிவிட்டதாக தமிழக காங்கிரஸ் தரப்பில் இருந்து மேலிடத்துக்கு புகார் சென்றுள்ளது. ராகுலின் வருகையைத் தடுக்க தி.மு.க. இப்படி தப்புக் கணக்கு போடுவதாகவும் அவர்கள் சீறிப்பாயத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்காக தமிழகம் வந்த ராகுல்காந்தி, கடந்த 23-ம் தேதி திருப்பூர் செயின்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில் எட்டாயிரம் பேருடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சுமார் ஒரு மணி நேரம் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந் துரையாடிவிட்டு ஹெலிகாப்டர் மூலம் கிளம்பினார். அப்போது, பாரதிய ஜ…
-
- 0 replies
- 289 views
-
-
தமிழக அரசின் வீட்டு வசதி வாரியம் மூலம், முறைகேடாக ஒதுக்கியுள்ள நிலம் மற்றும் வீடுகளை முதல்வர் கருணாநிதி, பொங்கல் பண்டிகைக்குள் திரும்ப பெற வேண்டும்,'' என, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ.,யின் போக்கு சரியான திசையில் செல்கிறது. முடிவில் என்ன நிகழ்கிறது என்பதை வைத்தே எதையும் சொல்ல முடியும். இதில் என்னை அரசு வக்கீலாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி, வரும் 7ம் தேதி முடிவு தெரியும். நான் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டால், சி.பி.ஐ., நடவடிக்கையை துரிதப்படுத்துவேன்.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பெறப்பட்ட தொகைகளின் முதலீடுகள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என அமெரிக்க நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்ற எனது க…
-
- 0 replies
- 491 views
-
-
$450-million (Rs.3000 – 4000 crore) Mega Undersea Power Transmission link between India and Sri Lanka "Business Standard" - ல் இன்று (29-12-2011) வந்த செய்தி http://business-standard.com/india/news/india-plans-underwater-power-line-to-sri-lanka/419973/ 285 Kilometer India-Srilanka Power link which includes submarine cables over 50 km HVDC overhead lines from Madurai to the Indian coast (near Rameshwaram) (139 km), a 400 KV HVDC cable from the Indian coast to the Sri Lankan coast (39 km), a 400 KV HVDC overhead line from the Sri Lankan coast to Anuradhapura/Puttalam (125km) via Talaimannar Jointly implemented by Power Grid Corporation of India L…
-
- 3 replies
- 692 views
-
-
தமிழகத்தில் நல்லது நடக்க வரும் தேர்தலில் அமைதி புரட்சி ஏற்பட வேண்டும் என நடிகர் சரத்குமார் கூறினார். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை வரை மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. பேரணியை கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் தொடங்கி வைத்தார். இந்த பேரணியின் நிறைவு விளக்க பொதுக்கூட்டம் பெருந்துறை பழைய பஸ்நிலையம் அருகில் நடந்தது. இதில் சரத்குமார் பேசுகையில், "பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அத்திக்கடவு-அவினாசி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற ரூ. 85 கோடி மதிப்பில் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இப்போது…
-
- 0 replies
- 795 views
-
-
http://www.youtube.com/watch?v=DoXUGzHE2Q8
-
- 1 reply
- 593 views
-
-
றோவின் புதிய தலைவராக சஞ்சீவ் திரிபாதி Monday, December 27, 2010, 17:25 இந் திய உளவு அமைப்பான “றோ”வின் தலைவராகசஞ்சீவ் திரி பாதி நியமிக்கப்படுகிறார் எனத் தெரிய வருகிறது.தற்போது அவர் றோ அமைப் பின் துணைப் பிரிவான விமா னப் போக்குவரத்து ஆய்வு மையத் தின் தலைவராக இருக்கிறார். டிசம்பர் 30 ஆம் திகதி முதல் அவர் 2 ஆண்டுகளுக்கு இப் பொறுப்பில் இருப்பார். தற்போது றோவின் தலை வராக இருப்பவர் கே.சி.வர்மா. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி தான் முடிவடைகிறது. ஆனால் அதற்கு முன்பே பதவி விலக வர்மா முடிவெடுத்துள்ளார்.இதையடுத்து அவரது இடத் திற்கு திரிபாதி கொண்டு வரப் படுகிறார். திரிபாதி வரும் 31 ஆம் திகதி யுடன் ஓய்வு பெறவிருந்தார். இந்த நிலையில் தற்போது அவ ருக்கு “…
-
- 2 replies
- 609 views
-
-
தயாநிதி ஏன் மறுக்கவில்லை? ஜெயலலிதா கேள்வி முதல்வரின் மனைவி தயாளு அம்மாளுக்கு ரூ.600 கோடி கொடுத்ததாக வெளியான தகவலை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஏன் மறுக்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 600 கோடி ரூபாயை கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் கொடுத்துவிட்டுத் தான் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியை பெற்றார் என்பது குறித்து பேட்டி அளித்த கருணாநிதி, இதை நம்புபவர்கள் அவர்களின் பெயர்களைப் போட்டு இந்தச் செய்தியை வெளியிட்டால் அவர்களை சட்ட ரீதியாகச் சந்திப்பதாக தன்னுடைய அறிக்கையில் கூறி இருக்கிறார். உண்மையிலேயே பணப் பரிமாற்றம் நடைபெறவில்லை என்றால் இந்த உரையாடலில் இடம்…
-
- 1 reply
- 651 views
-
-
தெலுங்கானா மாநிலம் அமைத்தால் சோனியா காலை கழுவத்தயார்:சந்திரசேகரராவ் தெலுங்கானா மாநிலம் அமைத்தால் சோனியாவின் காலைக்கூடக் கழுவத் தயார் என்று டிஆர்எஸ் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு. தெலுங்கானா மாநிலம் அமைத்தால் கட்சியைக் கலைத்து விட்டு, காங்கிரசில் சேர்ந்து சோனியாவின் காலைக் கழுவக்கூடத் தயாராக உள்ளேன் என்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். ஆந்திராவில் தனித்தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று டி.ஆர்.எஸ். கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இது தொடர்பாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த டி.ஆர்.எஸ். கட்சித் தலவர் சந்திரசேகர ராவ், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் வாக்குறுதியை ஏற்று உண்ணாவிரதத்தைக் கைவி…
-
- 3 replies
- 711 views
-
-
இரகசிய இடத்தில் விக்கிலீக்ஸ் இணையத்தள ஆவணக் காப்பகம் [27 டிசம்பர் 2010, திங்கட்கிழமை 12:00 மு.ப இலங்கை] ஸ்டாக்ஹோம், டிச. 27 பூமிக்கு அடியில், 30 மீற்றர் ஆழத்தில், "விக்கிலீக்ஸ்" இணையதளத்தின் ஆவண காப்பகம் இருக்கிறது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட பல் வேறு சர்வதேச நாடுகளின் இரகசிய ஆவணங்களை வெளி யிட்டு, உலகளவில் பெரும் பரபரப்பை கிளப்பிவரும் "விக்கி லீக்ஸ்"இணையதளம் இரகசிய இடத்தில் செயல்பட்டு வருகி றது. இந்நிலையில், அந்த இணைய தளம் வெளியிடும் தகவல் திரட்டு அடங்கிய ஆவணங் கள் பாதுகாக்கப்பட்டு வரும் இரகசிய இடம் குறித்து, தற் போது தகவல்கள் வெளியாகி யுள்ளன. சுவீடன் நாட்டிலுள்ள ஸ்டாக் ஹோம் நகரின் மையப்பகுதி யில், பயோனின் என்ற இடத்தில் இந்த இரகச…
-
- 1 reply
- 808 views
-
-
விடுமுறையை கழிக்க தீவுக்கு உல்லாச பயணம் சென்றவர்களின் படகு கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் சிலரின் கதி என்னவானதென்று தெரியவில்லை. சுனாமி நினைவு நாளில் ராமநாதபுரம் அருகே இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக் கொண்டு சென்றதே, படகு கவிழக் காரணம் எனக் கூறப்படுகிறது. ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தைச் சேர்ந்தவர் அப்துல் குத்தூஸ். ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவர், கடந்த வாரம் திருமணம் ஒன்றுக்காக தனது குடும்பத்தாருடன் பெரியபட்டினம் வந்தார். வந்த இடத்தில், உறவினர்களுடன் அருகில் உள்ள முல்லித்தீவிற்கு சுற்றுலா செல்ல தயாராகினர்.இரண்டு வேன்களில் அருகில் உள்ள முத்துப்பேட்டை கடற்கரைக்கு சென்றவர்கள், அ…
-
- 0 replies
- 595 views
-
-
இந்திய தொலைத் தொடர்பு செய்மதியுடன் ராக்கட் வெடிந்து சிதறியது. தொலைத் தொடர்பு செய்மதியொன்றை விண்ணைநோக்கி ஏவும் முயற்சியில் சென்னைக்கு அண்மையிலுள்ள ஏவுதளத்திலிருந்து ராக்கட் ஒன்று ஏவப்பட்ட 50 வினாடிகளில் வெடித்துச் சிதறியது.
-
- 2 replies
- 775 views
-
-
பிளாஸ்க்' வெடிகுண்டு மூலம் விமானங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அமெரிக்க விமான நிலையங்கள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. விமானத்தில் செல்லும் பயணிகள் தங்கள் கையில் பிளாஸ்க்கை எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்தி, பிளாஸ்க்குகள் குளிர் நிலையில் வெடி பொருட்களை செலுத்தி அதை வெடிக்க செய்து விமானங்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் அனைத்து விமான நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டு உள்ளன. பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்க்குகள் கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவதாக காவக்ல்துறை அதிகாரி ஒருவர் …
-
- 0 replies
- 506 views
-
-
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 45 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பஜாவோர் மாகாணம் உள்ளது. மலைகளால் சூழப்பட்ட இது தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி. அங்குள்ள ஹார் என்ற இடத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு வினியோக மையம் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை உணவு பொருள் வினியோகம் நடந்தது. அவற்றை பெறுவதற்காக ஏராளமானவர்கள் அங்கு கூடியிருந்தனர். அப்போது அங்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதி அதிர்ந்து தீப்பிடித்து எரிந்தது. அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்தபடி அங்கு மிங்கும் ஓடினார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் அங்கு கூடியிருந்த 45 பேர் உடல் சிதறி பலியானார்கள். 100 பேர் படுகாயம் அடைந்தனர். …
-
- 1 reply
- 635 views
-
-
அரச தீர்மானத்துக்கு எதிர்ப்பு- நாடாளுமன்ற மாடியிலிருந்து குடும்பஸ்தர் தற்கொலை முயற்சி(காணொளி இணைப்பு) _ வீரகேசரி இணையம் 12/25/2010 1:37:16 PM வலது குறைந்த குழந்தைகளுக்கான கொடுப்பனவை இரத்துச் செய்தல் தொடர்பில் ருமேனியாவின் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டுப் பிரஜை ஒருவர் நாடாளுமன்றத்தின் மேல் மாடியிலிருந்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இச்சம்பவம் ருமேனிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதமர் எமில் பொக் உரையாற்ற ஆரம்பித்துள்ளார். அதன்போது "பொக்இ நீங்கள் எங்களுடைய குழந்தைகளின் உரிமைகளைப் பரித்துவிட்டீர்கள்" எனக் கூறியவாறு மேலிருந்து கீழே பாய்ந்துள்ளார். அவருடைய மேற்சட்ட…
-
- 1 reply
- 473 views
-
-
. இயேசுநாதர் இயலாதவர்களிடம் கருணை கொண்டது போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி சென்னை: இயேசு கிறிஸ்து ஏழைகளிடம் - இயலாதவர்களிடம் கருணை கொண்டதுபோல, 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை, திருமண உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாய், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் போன்ற நலத் திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி ஏழை எளியோரைக் காத்துவரும் தமிழக அரசின் சார்பில் கிறிஸ்துவ மக்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: உலகெங்கும் வாழும் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவரும் டிசம்பர்த…
-
- 9 replies
- 1.4k views
-