உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26638 topics in this forum
-
டி.ஆர்.பாலுவின் தமிழினக் கரிசனம்! இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இருந்து வெளிவரும் வீரகேசரி நாளிதழிற்கு தமிழர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகள் தொடர்பாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அளித்துள்ள பேட்டியில், தனது கட்சித் தலைவரையும் விஞ்சும் தமிழினக் கரிசனத்தை வெளிப்படுத்தியுள்ளார். போரினால் பாதிக்கப்பட்டு, இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு இந்தியா அளித்த உதவிகள் எதுவும் அவர்களுக்கு வந்த சேரவில்லை என்ற குற்றச்சாற்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள டி.ஆர்.பாலு, “இப்பிரச்சனையை நாம் எச்சரிக்கையுடனும், பொறுப்புடனும் அணுக வேண்டு்ம். இந்தியா ஒரு காவல் அதிகாரி போல நடந்துகொள்ள முடியாது. அப்படிப்பட்டத் தலையீடு பிரச்சனைகளைக் குழப்பி, இதுவரை செய்தவற…
-
- 2 replies
- 682 views
-
-
தமிழகத்தில் பாஸிஸ ஆட்சியை கருணாநிதி நடத்தி வருகிறார். வீழ்ச்சியில் இருந்து தமிழகம் மீட்சி பெற வேண்டும்,'' என, கொடி பயணத்தின் நிறைவு நிகழ்ச்சியில், ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.ம.தி.மு.க., சார்பில் கொடி பயணம் நாமக்கல் மாவட்டத்தில் மூன்று நாட்கள் நடந்தது. இறுதி நாள் அன்று நிறைவு பொதுக்கூட்டம் ப.வேலூரில் நடந்தது.மாவட்டச் செயலாளர் குருசாமி தலைமை வகித்தார். மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல், தேர்தல் பணி துணை செயலாளர் பழனிசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:மாவட்டத்தில் நடந்த மூன்று நாள் கொடி பயணம் ம.தி.மு.க.,வுக்கு ஊக்கத்தை தந்துள்ளது. நாளுக்கு நாள் மக்கள் உள்ளத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீக…
-
- 1 reply
- 661 views
-
-
சுற்றாடல் மாசடைந்த காரணத்தினால் அர்போகன் குள மீன் இனங்கள் அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அர்போகன் குளம் பொரிபேர்க் கான்டனில் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. சுற்றாடல் மாசடைந்த காரணத்தினால் ஆயிரக் கணக்கான மீன்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் என்ன காரணத்தினால் இவ்வாறு மீன்கள் உயிரிழக்கின்றன என்பது குறித்து சரியான ஆய்வுகள் நடத்தப்படவில்லை. அருகாமையில் காணப்படும் கைத்தொழில் நிறுவனங்களின் கழிவினால் மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. http://www.coolswiss.com
-
- 1 reply
- 722 views
-
-
கே.கே. நகரைச் சேர்ந்தவர் அகல்யா (வயது 21) பெயர் மாற்றப்பட்டுள்ளது. கல்லூரி மாணவியான இவர், நேற்று முன்தினம் இரவு ராயபுரத் தைச் சேர்ந்த தனது காத லுடன் தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு இருவரும் மது அருந்தி விடிய விடிய கும்மாளம் அடித்தனர். அதிகாலை 3 மணியளவில் போதை மயக்கத்தில் தள்ளாடியபடியே இருவரும் ஓட்டலை விட்டு வெளியில் வந்தனர். தனது காரில் அகல்யாவை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார் காதலன். உஸ்மான் ரோட்டில் உள்ள பிரபல ஜவுளிக்கடை முன்பு அகல்யாவை இறக்கி விட்டார். அங்கிருந்து அவரால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. அப்படியே மயங்கி கீழே சாய்ந்தார். டி.சர்ட், குட்டைப் பாவாடை அணிந்திருந்த அகல்யா மல்லாந்து படுத்த நிலையில் மயக்கமானார். அவரது…
-
- 13 replies
- 3.7k views
-
-
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு-3 அதிமுகவினருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட். தர்மபுரி: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 அதிமுகவினருக்கும் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் தொடர்பான வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுகவினர் மாநிலம் முழுவதும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகளின் பஸ் அதிமுகவினரால் இலக்கியம்பட்டியில் தடுத்து நிறுத்தப்பட்டு எரிக்கப்பட்டது. இதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து பலியா…
-
- 0 replies
- 519 views
-
-
விஜய் டிவி ஒளிபரப்பிய ஜோடி no1 எம்மவர்களின் படைப்பு. http://www.tubetamil.com/view_video.php?viewkey=094f86b8bbcf140a3d4b&page=1&viewtype=&category=
-
- 2 replies
- 841 views
-
-
இலங்கையில் நிவாரண முகாம்களில் உள்ள தமிழர்களை மறுகுடியமர்வு செய்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தினார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது தேசிய மாநாடு கொழும்பில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் டி.கே.ரங்கராஜன் பங்கேற்று பேசியது: உலகப் பொருளாதார நெருக்கடியால் இந்தியாவும் பாதிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் இந்தப் பிரச்னையில் தலையிட்டதால் பாதிப்பு ஒரு வரையறைக்குள் இருந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்த நெருக்கடிகளிலிருந்து எந்தப் பாடங்களையும் கற்றுக்கொள்ளவில்லை. இப்போது ஆட்சியைத் தக்…
-
- 0 replies
- 401 views
-
-
போர்க்கப்பல்களை குறிவைக்கும் சீனாவின் `டொங் வெங் 21டி` ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் என்பது சாசுவதமான உண்மை. பல்குழல் எறிகணை வீச்சுப் போல் அடுக்கடுக்காக வெளிவரும் நேர்காணல்கள், அடிப்படைப் பிரச்சினையை மறைத்து விடுகின்றன. மனித உரிமை ஆணைக்குழு தெரிவிக்கும் தகவல்களின் பிரகாரம், யுத்தம் நிறைவுற்ற பின்னர் தமிழர் தாயகத்திலிருந்து 3000 பேரளவில் காணாமல் போகப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முறைப்பாடுகள் நாலாயிரத்தையும் தாண்டி விட்டன. ஒடுக்குறைகள் அதிகரிக்கும்போது அதற்கெதிராக போராட வேண்டிய சக்திகள் நேர்காணல்களுக்குப் பொழிப்புரை எழுதுவதில் காலத்தை வீணடிக்கின்றன. நம்பிக்கைத் துரோகம், தேசத் துரோகம், சமுகத் துரோகம் என்றவாறு பல்வேறு பரிமாணங்களில் மக்க…
-
- 0 replies
- 702 views
-
-
பிடல் காஸ்ரோ சொல்கிறார் பின்லாடன் அமெரிக்காவுக்காவின் முகவர் என. சரியா பிழையா? வாக்களிக்க இங்குவாக்களிக்க இங்கு http://www.winnipegfreepress.com/local/toews-message-earns-rebuke-101709493.html Fidel Castro claims al-Qaida leader Osama bin Laden is a US agent. Is he right? Yes No I think Castro is a CIA agent.
-
- 0 replies
- 604 views
-
-
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே இராஜதந்திர முறுகல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீர் பகுதியில் கடமையில் இருக்கும் ஓர் இந்திய இராணுவ அதிகாரிக்கு சீனா வீசா வழங்காமல் சீனாவிற்கு வர முடியும் என கூறியதாலேயே இந்த நெருக்கடி தோன்றியுள்ளது. காஸ்மீரில் , இந்திய கட்டுப்பாட்டில் உள்ள சில இடங்கள் சீனா தன்னுடையது என இப்போதும் கூறிவருகின்றது. ஆதலால் அந்த பகுதியில் உள்ளோர்கள் தமது நாட்டிற்கு வருவதாயின் சீனாவின் வீசா வழங்க தேவை இல்லை என்பது சீனாவின் நிலைப்பாடு ஆனால் இந்தியா இதனை எதிர்த்து வருகின்றது. . ஈழ நாதம்
-
- 5 replies
- 1.8k views
-
-
செந்தமிழன் சீமான் மீண்டும் சிறையில் அடைப்பு! திகதி:26.08.2010 தமிழின எழுச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடியும் வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மீது கருணாநிதியின் தலைமையிலான அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவிக் கைது செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சீமான் தன்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அந்த வழக்கு தற்பொழுது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தன்னை தேசியப்பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தது தவறு என்றும் தனது தரப்பு முறையீட்டினைத் தெரிவிக்க இன்று ஒரு மணியளவில் காவல் துறையினர் செந்தமிழன் சீமான் அவர்களை சென்னையில் சிங்காரவேலர் மாளிகையில்…
-
- 6 replies
- 720 views
-
-
''2050ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை 170 கோடியாகும்'' உலக மக்கள்தொகை வரும் 2050ஆம் ஆண்டில் 940 கோடியைத் தொட்டுவிடும். அப்போது இந்தியாவின் மக்கள்தொகை 170 கோடியாக அதிகரிக்கும் என அமெரிக்க மக்கள்தொகை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இப்போது உலக மக்கள்தொகை 680 கோடியாக உள்ளது. 2025ஆம் ஆண்டுவாக்கில் இந்த எண்ணிக்கை 800 கோடியைத் தொட்டுவிடும். உலக மக்கள்தொகையில் சீனா 130 கோடியுடன் முதலிடத்தை வகிக்கிறது. 2வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 120 கோடியாகும். இதே விகிதத்தில் மக்கள்தொகை வளர்ச்சி இருக்குமானால் 2050இல் உலக மக்கள்தொகை 940 கோடியாக அதிகரிக்கும். இதில் ஆசியக் கண்டத்தில் மட்டும் மக்கள்தொகை 550 கோடியாக இருக்கும். இந்திய, சீன நா…
-
- 0 replies
- 559 views
-
-
சேது சமுத்திர திட்டத்தை வீழத்தியது சாஸ்திரமா? சிறிலங்காவா? தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிக நீண்ட காலமாக வற்புறுத்தப்பட்டு, திட்டமிடப்பட்டு, செயல்பாட்டிற்கு வந்த சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது என்று தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி ஒரு அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார். தி.மு.க.தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஒரு செய்தியாளர், “சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டதா?” என்று கேள்வி கேட்க, அதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி, “சாஸ்திர, சம்பிரதாய மூட நம்பிக்கைகள் காரணமாக சேது சமுத்திரத் திட்டம் போன்ற ம…
-
- 1 reply
- 716 views
-
-
சார்,ரயில்ல விழுந்து சாகுறதுக்கு எங்கம்மா கூட்டிட்டுப் போனாங்க. அம்மாவை மட்டும் ரயில் அடிச்சுப் போட்டுருச்சு. எம்மேல அடிபடலை. தம்பிக்கு என்ன ஆச்சுனு தெரியலை. எங்கூட வந்து பாருங்க’’ஒரு நள்ளிரவில் சாலையில் தென்பட்டவர்களை ரத்தக்கறை படிந்த சட்டை சகிதம் வழிமறித்து இந்த உதவியைக் கேட்டவன் ஓர் ஒன்பது வயதுச் சிறுவன். சமீபத்தில் செங்கல்பட்டு ரயில்வே போலீஸ் வட்டாரத்தைத் திகைக்கவும் கண்கலங்கவும் வைத்துள்ள நவீன் என்ற அந்தச் சிறுவனைச் சந்தித்தோம். செங்கல்பட்டு அருகே உள்ள நத்தத்தில் நவீனின் வீடு இருக்கிறது. ஒற்றை அறை வீடு. ஒரு சாக்லெட்டை தனது மூன்றரை வயது தம்பி சுரேஷுடன் பங்கு போட்டு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான் நவீன். சுரேஷ் அடிக்கடி முனகுகிறான். பின்தலையில் தையல் தெரிகிறது.…
-
- 1 reply
- 693 views
-
-
ராஜிவ் உண்மையில் ஒரு தலைவர் அல்ல; அவரிடம் சில திட்டங்கள் இருந்தன. அவை சாதாரணமானவை தான். ராகுல், தன் தந்தையை விட அதிபுத்திசாலியாக உள்ளார்' என்று, பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங்(95) கூறியுள்ளார். இந்தியாவின் பிரபல மூத்த எழுத்தாளரான குஷ்வந்த் சிங், "அப்சொல்யூட் குஷ்வந்த்: தி லோ டவுன் ஆப் லைப், டெத் அண்டு மோஸ்ட் திங்ஸ் இன் பிட்வீன்' என்ற புத்தகம் எழுதியுள்ளார். அதில் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள், நிகழ்ச்சிகள் குறித்த தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். அதில் அவர் எழுதியிருப்பதாவது: ராகுலுக்கு என்று ஒரு தொலைநோக்கு இருக்கிறது. மாயாவதி மற்றும் சிவசேனாவின் மண்ணிலேயே அவர்களை ராகுல் எதிர்கொண்டிருக்கிறார். அமேதியில் தாழ்த்தப்பட்டோரின் வீடுகளில் தங்கி, அவர் உணவ…
-
- 7 replies
- 997 views
-
-
கணவன் - மனைவி பரஸ்பரம் துரோகமிழைத்தால் சிறை : பிரான்சில் சட்டம் _ திகதி: 02.07.2010 // தமிழீழம் கணவன் - மனைவி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் துரோகமிழைத்தால் சிறைத்தண்டனை வழங்கப்படும். பிரான்ஸ் நாட்டில்தான் இந்தப் புதிய சட்டம் தற்போது இயற்றப்பட்டுள்ளது. அதன்படி கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் நடந்து கொண்டால் இது குற்றமாகக் கருதப்படும். இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.40 லட்சம் அபராதமும் விதிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. சமீப காலமாக பிரான்ஸ்சில் மனைவிக்கு துரோகம் செய்யும் கணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்கவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்ந…
-
- 12 replies
- 1.7k views
-
-
இலங்கையில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அப்பாவி தமிழர்களை சிங்கள ராணுவம் சுட்டுக்கொல்வதை கண்டித்து இந்த திரைப்பட விழாவில் இந்திய நடிகர் நடிகைகள் கலந்து கொள்ளக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதனையும் மீறி இந்தி நடிகர் விவேக் ஓபராய், நடிகை அசின் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் விவேக் ஓபராய், நடிகை அசின் ஆகியோரை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லடம் தாசில்தார் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் அண்ணாத்துரை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்துக்கு நடிகர் விவேக் ஓபராய், நடிகை அசின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து கொண்டு வந்த…
-
- 0 replies
- 1k views
-
-
திருடாதே பாப்பா, திருடாதே' என்று மாணவர்களுக்குக் கற்றுத் தர வேண்டிய ஆசிரியர் வழிப்பறி வழக்கில் சிக்கியுள்ளார்.தமிழ்நாடு - கர்நாடகா எல்லைப் பகுதியில்உள்ள ஓசூரில் அடிக்கடி வழிப்பறிகள் நடந்து வந்தன. அதனால் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்திற்கு உரிய வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்ததில், அவர் தான் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தவர் என்பது தெரியவந்தது. அவர் பெயர் மதன்மாறன். ஓசூர் அருகே பங்களாப்பள்ளி என்ற கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் 4 ஆம் வகுப்பு ஆசிரியராக இருக்கிறார். கல்வி கற்றுத் தர வேண்டிய ஆசிரியர் களவு கற்பது தவறல்லவா என்று கேட்டால், சொகுசாக வாழ்வதற்காக வழிப்பறியில் ஈடுபட்டதாக அந்த வாலிப ஆசிரியர் கூறியுள்ளார். அவரிடமிருந்து 8 ச…
-
- 0 replies
- 530 views
-
-
நாங்க ஆடுனா மட்டும் இடிஞ்சிடுமா... கலைஞருக்கு ”கலைஞனின்“ கடிதம் அன்பான முதல்வர் அவர்களுக்கு... வணக்கமுங்க. தஞ்சாவூர்லயிருந்து பறையடிக்கிற கருப்பன் எழுதுற கடிதமுங்க இது.அய்யா எனக்கு முப்பது வயசுதான் ஆவுதுங்க.எங்க பாட்டன்,முப்பாட்டன் காலத்துலயிருந்தே பறையடிக்கறதுதாங்க எங்க தொழில். சாவு வூடு, கண்ணாலம், கோயிலு கொடை, கட்சிமீட்டிங்கு,ஊர்வலம், எல்லாத்துக்கும் பறையடிக்கிறோமுங்க. பறையடிக்கிறத மத்தவங்க கேவலமா நினைக்கிறாங்க.ஆனா, நாங்க அத கேவலமா நெனைக்கிறது இல்லீங்க.ஏன்னா,அது எங்க ரத்தத்துலயே ஊறியிருக்குங்க.அதுவுமில்லாம அது எங்களுக்கு சோறு போடுதுங்க.காலங்காலமா அந்த தொழில எங்களுக்குன்னே ஒதுக்கி குடுத்து எங்களயும் ஊரைவிட்டே ஒதுக்கியும் வச்சிட்டாங்க.இத …
-
- 0 replies
- 617 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் முன்னால் எவரேனும் நிர்வாணமாக தோன்றினால், அந்நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை பரிசாக வழங்கத் தயாரென பிரிட்டனைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் அறிவித்துள்ளார் . அல்கி டேவிட் என்பவர் பிரித்தானிய பத்திரிகையொன்று வெளியிட்ட பெரும்பணக்காரர்கள் பட்டியலில் 45 ஆவது இடத்தில் உள்ளார். அவரிடம் இருக்கும் சொத்துக்களின் பெறுமதி 1.15 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர் நிர்வாணமாக ஒபாமாவின் முன்னால் தோன்றுபவர்களுக்கு 10 லட்சம் டொலர் பரிசளிப்பதாக உறுதியளித்துள்ளார். புதிய இணையத்தளம் ஒன்றுக்கான பிரச்சாரமாக இந்த விபரீதமான பரிசுத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட தொழிலதிபரான 42 வயதான அல்கி டேவிட…
-
- 4 replies
- 641 views
-
-
காமன்வெல்த் நாடுகள் விளையாட்டுப்போட்டி ஊழலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்குத் தொடர்புள்ளது. இது தொடர்பான தகவல் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து எனக்கு வந்துள்ளது என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்; நான் அண்மையில் அமெரிக்காவில் இருந்தபோது நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் மொத்தம் செலவிடப்பட்ட தொகையான ரூ.40,000 கோடியில் ஒப்பந்தக்காரர்கள்,ஆலோசகர்கள் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்ட ஊதியத்தொகை என்ற போர்வையில் சுமார் ரூ.1,500 கோடி இலஞ்சமாகப் பெறப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இதில் ஒரு பெருந்தொகை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திக்கு லண்டன…
-
- 4 replies
- 770 views
-
-
Hi All, For the first time in the history of the LG ICC Awards, fans will have the opportunity this year to have their say on one of the winners. Through an online voting process, supporters from across the globe will be able to celebrate the contribution of one of the game's international superstars through the presentation of a unique cricket award. In making their choice for who they believe should win the LG People's Choice Award, fans are asked to consider the player who during the voting period (24 August 2009-10 August 2010) has had an all-round impact on the sport. Not only will the winning player have shown themselves to not only be th…
-
- 1 reply
- 877 views
-
-
பாலிவுட்டின் பழைய பந்தாவெல்லாம் இப்போது போயே போச்சு. எந்த ஈகோவும் பார்க்காமல் தெலுங்கு மற்றும் தமிழில் சூப்பர் ஹிட்டாகும் படங்களை ரீமேக் செய்து சைலண்டாக பணம் பண்ணுகிறார்கள். இதனால் பாலிவுட்டின் வண்டி இப்போது தென்னிந்திய சினிமாவின் கதை, இயக்குனர்கள். இசையமைப்பாளர்கள், ஒளிபதிவாளர்கள் இல்லாமல் ஓடமாட்டேன் என்கிறது. ஹிந்தியில் சுடச்சுட இப்போது ரீமேக் ஆகிவரும் இரண்டு தென்னிந்திய ஹிட் படங்கள் காக்க காக்க மற்றும் தில்லாலங்கடி. தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன கிக் படத்தின் ரீமேக்தான் தில்லாலங்கடி. தில்லாலங்கடி வெளிவரும் முன்பே கிக் படத்தின் தெலுங்கு வெர்ஷனைப் பார்த்த பாலிவுட் படத்தயாரிப்பாளர் சஜித் நதியாவாலா அதன் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கி, ஜெயம் ரவி கேரக்டரில…
-
- 5 replies
- 1.3k views
-
-
செக்கோஸ்லாவோக்கியா நாட்டில் எலும்புகள்,மண்டை ஓடுகளால் அலங்கரிக்கப்பட்ட தேவாலயம் ஒன்றை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது. இதைக் காண்பதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். Thanks to http://www.thedipaar.com/news/news.php?id=17442
-
- 1 reply
- 479 views
-
-
இலங்கையர் உட்பட 23 மாலுமிகளை விடுவிக்க 4 மில்லியன் டொலர்களை கப்பமாக கேட்கும் சோமாலிய கடற் கொள்ளையர்கள்! திகதி:23.08.2010 இலங்கையைச்சேர்ந்தவர்கள் உட்பட 23 மாலுமிகளைக் கொண்ட எகிப்திய வணிகக் கப்பலை பிடித்துவைத்திருக்கும் சோமாலியக் கடற்கொள்ளையர்கள் கப்பலை விடுவிப்பதாயின் 4 மில்லியன் டொலரைக் கப்பமாகத் தரவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். எகிப்திய பத்திரிகையான அல் ஆரம் இதனை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது. ஆகஸ்ட் 2 இல் செங்கடலில் வைத்து சீமெந்துப் பொதிகளை ஏற்றிச் சென்ற எம்.வி.சுயஸ் என்ற சரக்குக் கப்பல் கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டது. சோமாலியாவின் வடக்குக் கரையிலுள்ள இடத்திற்குக் கடற்கொள்ளையர்கள் அந்தக் கப்பலைக் கொண்டு சென்றுள்ளனர். 11…
-
- 0 replies
- 454 views
-