Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்திருந்த மத்திய அரசின் அறிவிக்கையை உறுதி செய்து சிறப்புத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக கடந்த 1991 ஆம் ஆண்டு விதிக்கப்பட்டுள்ள தடையை, இந்திய அரசு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நீட்டித்து வருகிறது. இதன்படி கடந்த மே மாதம் தடை நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையடுத்து, மத்திய தீர்ப்பாயம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தியது. டெல்லி உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி விக்ரம் ஜித் சென் தலைமையிலான தீர்ப்பாயம் சென்னை, உதகமண்டலம், டெல்லியில் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தியது. விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்ப…

    • 13 replies
    • 1.1k views
  2. சீமானுடன் திரையுலகினர் சந்திப்பு! வேலூர் சிறையில் தேசிய பாதுகாப்பு [^] ச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ள இயக்கநர் சீமானை தமிழ் திரையுலக இயக்குநர் [^] கள் நேற்று சந்தித்துப் பேசினர். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட சீமான், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் உள்ள சீமானை நடிகர் சத்யராஜ், இயக்குநர் சஹ்க நிர்வாகி ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தரராஜன், விக்ரமன், செல்வபாரதி, அமீர், கௌதமன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். சுமார் ஒரு மணி நேரம் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் சத்யராஜ், "நாங்கள் சீமானின…

  3. பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் 20 பேர் பலி 12 November 10 02:12 am (BST) பாகிஸ்தானின் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான கராச்சியில் அமைந்துள்ள புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீவிரவாதிகளுடன் காவல்துறையினர் கடுமையான துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆயுததாரிகள் புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்திற்குள் ஊடுறுவியதுடன், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட…

  4. மிழகம் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் மீண்டும் தாக்குதல்களை நடத்தியதுடன், அவர்களின் வலைகளையும் அறுத்து எறிந்துள்ளதால், இராமேஸ்வரம் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இந்திய மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர். இன்று (11) அதிகாலையும் இந்திய கடற்பகுதியில் வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராமேஸ்வரம் பகுதி மீனவர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். சிறீலங்கா கடற்படையினர் மீனவர்களின் வலைகளை அறுத்து எறிந்துள்ளதுடன், படகுகளையும் சேதப்படுத்தியுள்ளதாகவும், தமிழக மற்றும் மத்திய அரசுகளின் செயற்திறனற்ற தன்மைகள் ச…

  5. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும், திரைப்பட இயக்குநருமான சீமானை, தமிழ் திரைப்படத்துறையினர் சந்தித்துப் பேசினர். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட சீமான், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் உள்ள சீமானை நடிகர் சத்தியராஜ், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தரராஜ், விக்ரமன், செல்வபாரதி, அமீர், கௌதமன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். சுமார் ஒரு மணி நேரம் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் சத்தியராஜ், நண்பர் மற்றும் இன உணர்வாளர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் சீமானை சந்தித்தோம்…

  6. அடுத்தாண்டில் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகள் அந்த நாட்டு அரசிடம் ஒப்படைக்கப்படும் – ஹிலாரி கிளிண்டன் தகவல் ஆப்கானிஸ்தானின் பெரும் நிலப்பகுதி இப்போது அமெரிக்க மற்றும் நேட்டோ ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பகுதியில் பெரும்பாலானவற்றை அடுத்த ஆண்டு ஆப்கானிஸ்தான் வசம் ஒப்படைப்போம் என்று அமெரிக்க வெளிநாட்டு மந்திரி ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:- ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியிலும், தெற்கு பகுதியிலும் தலீபான்களுடன் இப்போது நடக்கும் தாக்குதல் மிக முக்கியமானது. யுத்தம் கடுமையாக இருக்கிறது. இருந்தபோதிலும், அடுத்த ஆண்டு எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பெரும்பாலான பகுதிகள் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும…

  7. ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்க அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின்போது, ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் கிலானி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒபாமாவின் இந்த அறிவிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில்," ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்ப…

  8. பிணைக் கைதியாக இருக்கும் எல்லை காந்தியின் பேரனை கொலை செய்வோம் - பாகிஸ்தான் அரசுக்கு தலீபான்கள் மிரட்டல் [ பிரசுரித்த திகதி : 2010-11-10 07:28:06 AM GMT ] எல்லை காந்தியின் பேரன் தலீபான் தீவிரவாதிகளால் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டிருக்கிறார். அவரை கொலை செய்வோம் என்று தீவிரவாதிகள் பாகிஸ்தான் அரசுக்கு மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள். விடுதலைக்கு முன்பு பாகிஸ்தான் இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்தபோது, புஷ்டு இனத்தலைவரான கான்அப்துல்கபூர்கான் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினார். அவர் காந்தியின் நெருங்கிய நண்பர் ஆவார். அவர் எல்லை காந்தி என்று அழைக்கப்பட்டார். இவர் இப்போது உயிருடன் இல்லை. அவரது அண்ணன் கான் சாகிப் வடமேற்கு எல்லைப்புற மாநில முதல்…

  9. தாய் தமிழுக்கு உங்க பொன்னான வாக்குகளை அளியுங்க.. இந்தி மற்றும் இதர மொழிகளை பின்னுங்க தள்ளுங்க.. http://www.surveymonkey.com/s/8P7PZCY டிஸ்கி: வாக்குகளை செலுத்துபவர்களுக்கு இந்த தோழரின் முன்கூடிய நன்றிகள்

  10. பிரிட்டன் சிறைகளிலுள்ள வெளிநாட்டுக் கைதிகள் திருப்பி அனுப்பப்படுவர் திங்கட்கிழமை, 08 நவம்பர் 2010 18:01 பிரிட்டிஷ் சிறைகளிலுள்ள வெளிநாட்டுக் கைதிகள் எஞ்சிய தண்டனைக் காலத்தை தமது சொந்த நாடுகளில் கழிக்கக் கூடியதாக அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப் படவுள்ளனர்.இதன் மூலம் ஆயிரக்கணக்கான கைதிகள் பிரிட்டிஷ் சிறைகளிலிருந்து தமது சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். பிரிட்டிஷ் அரசாங்கம் அண்மையில் அறிமுகம் செய்த செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு அம்சமாக இந்த நடவடிக்கைப் பின்பற்றப்படவுள்ளது. இதற்கு இசைவாக பிரிட்டனில் தண்டனை விதிக்கப்படும் ஒரு கைதியை அவரின் விருப்பமின்றி சொந்த நாட்டுக்கு அனுப்பமுடியாது என்று இதுவரையயில் அமுலில் இருந்த உடன்படிக்கைகளை பிரதம மந்…

  11. கனடாவுக்கு வருவதற்கான விசாவினைப் பெறுவதற்காக போலியாகத் திருமணம் செய்து கொள்வது தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஏராளமானவர்கள் - கனடா வருவதற்காக வெளிநாட்டவரை நிறையப் பணம் கொடுத்து திருமணம் செய்து கொண்டதாக 2007ம் ஆண்டு கனடிய குடிவரவு திணைக்களத்தின் விசாரணையின் போது அம்பலமானது. கல்யாணம் ஆகி வந்தவர்களில் சிலர் விமான நிலையத்தில் இறங்கியதும் தங்கள் வழியில் சென்றதையும் அதிகாரிகள் கண்டு பிடித்திருந்தார்கள். போலித் திருமணம் தொடர்பாக கனடிய அதிகாரிகள் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த மாதம் 31ம் திகதி மொன்றியலில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் கென்னி – உரிய முறையில் திருணம் செய்தவர்களை கனடா வரவேற்கும் அத…

    • 0 replies
    • 477 views
  12. ஐ.நா. மன்ற பாதுகாப்புக் கவுன்சி்ல் சீரமைக்கப்படும்போது, அதில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்துள்ளார். தனது மூன்று நாள் இந்தியப் பயணத்தின் நிறைவாக, இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். மிகச்சில உலகத் தலைவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் அந்தக் கெளரவத்தை, மன்மோகன் சிங் அரசு ஒபாமாவுக்கு வழங்கியுள்ளது. ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நாடுகளில், சீனா தவிர்த்து, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளும் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், அமெரிக்கா இதுவரை தயக்கம் காட்டி வந்தது. ஒபாமா தனது பயணத்தின…

  13. Started by akootha,

    பர்மாவில் இரு தசாப்தங்களுக்குப் பிறது முதல் தடவையாக பொதுத் தேர்தல் நடந்தது. இராணுவ ஆட்சியாளர்களுடன் தொடர்புடைய பெரிய இரு கட்சிகள் தான் இதில் பெரும்பாலான வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. எதிர்க்கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இதில் பங்கேற்பதில் பெரும் தடைகளை எதிர்கொள்கிறார்கள். வாக்கு மோசடிகள் குறித்தும் அவர்கள் புகார் செய்துள்ளனர். இந்த தேர்தலை புறக்கணிக்கின்ற முக்கிய எதிர்க்கட்சியான, ஆங் சான் சூ சி தலைமையிலான ஜனநாயகத்துக்கான முன்னணி, மக்களை வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுள்ளது. பல வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு மிகவும் சொற்பமாகவே இருந்ததாக பர்மாவின் பெரிய நகரான ரங்கூனில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. ரங்கூனுக்கு அருகே தளமமைத்துள்ள படைகளின் ஒ…

  14. இலங்கை தமிழர் முகாமில் தீ :120 வீடுகள் எரிந்து நாசம் திருவில்லிபுத்தூர் அருகே இலங்கைத் தமிழர் முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 120 குடிசைகள் எரிந்து நாசமாயின. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மொட்டமலையில் இலங்கைத் தமிழர் முகாம் உள்ளது. இங்கு 258 பேர் வசிக்கின்றனர். இந்த முகாமில் மயூன்ராஜ் என்பவரது வீட்டில் நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் திடீர் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பலத்த காற்று வீசியதால் மளமளவென பரவிய தீ அடுத்தடுத்த வீடுகளில் பற்றி எரிந்தது. இதுகுறித்து திருவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையம், 108 ஆம்புலன்ஸ் சேவை பிரிவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் அனைத்து வீடுகளும் முற்றிலும் எரிந…

  15. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை சந்தித்து பேசினார். காலை 10 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை அரை மணி நேரம் நீடித்தது. முதல்வருடன் நடந்த சந்திப்பிற்கு பின் சிதம்பரம் அளித்த பேட்டி: இலங்கை அதிபர் ராஜபக்ஷே டில்லி வந்திருந்த போது, அவரோடு பேசிய செய்திகளை முதல்வருடன் பரிமாறிக் கொண்டேன். இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் 50 ஆயிரம் பேருக்கு வீடுகட்டி தரும் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று இலங்கை அதிபரிடம் நாங்கள் வற்புறுத்தியுள்ளோம். மழைக்காலம் முடிந்த பிறகு, வீடு கட்டும் பணிகள் துவங்கும் என்று அதிபர் ராஜபக்ஷே வாக்குறுதி அளித்தது குறித்தும், பொதுவான விஷயங்கள் குறித்தும் முதல்வருடன் பேசினேன். …

  16. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, மூன்று நாள் இந்தியப் பயணமாக, சனிக்கிழமை மதியம் மும்பை வந்தடைந்தார். விமான நிலையத்தில் மகாராஷ்டிர மாநில முதல்வர் அசோக் சவாண் உள்ளிட்டோர் அவரை வரவேற்றார்கள். பலத்த பாதுகாப்பு வலயத்துக்கு மத்தியில் தரையிறங்கிய அவர், கடந்த 2008-ஆம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தாஜ் ஹோட்டலுக்குச் சென்றார். தனது மனைவி மிஷெல்லுடன், தாஜ் ஹோட்டல் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்திய ஒபாமா, பின்னர் அங்கிருந்த விருந்தினர்களுக்கான புத்தகத்தில் தனது கருத்துக்களை எழுதி கையெழுத்திட்டார். பின்னர், தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்,பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய ஒபாமா, மும்பை மக்கள் ச…

  17. அண்மையில் கனடாவில் பதினொரு மில்லியன் டாலர்கள் அதிர்ட்ட இலாப சீட்டை வெற்றிகொண்ட தம்பதியினர் தமது வெற்றித்தொகையின் பெரும்பகுதியை சமூக நல நிறுவனங்கள், வைத்தியசாலைகளிற்கு அன்பளிப்பு செய்து உள்ளார்கள். தமக்கென ஆபத்திற்கு மட்டும் சிறுதொகையை வைத்துக்கொண்டு மிகுதிப்பணத்தை சமூக மேம்பாட்டிற்கு கொடுத்த இவர்கள் நமக்கும் ஓர் முன் உதாரணம். http://www.youtube.com/watch?v=ixHfW5LwFHY இந்நேரம் எனக்கு ஓர் பாடல் வரிகள் நினைவில் வருகின்றது: கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன்.. கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்.. வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு! ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி.. வித…

  18. உலகளாவிய முக்கியமானவர்களின் பட்டியல் : சோனியா, மன்மோகன் சிங் போன்றவர்களுக்கு இடம் லண்டனில் இருந்து வெளிவரும் போர்பஸ் பத்திரிகை ஆண்டுதோறும் உலகளாவிய முக்கியமானவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான 68 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், ரட்டன் டாடா, முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல் போன்றவர்கள் இடம் பெற்றுள்ளனர். முதல் இடத்தை சீன பிரதமர் ஹு ஜிண்டாவும், 2-வது இடத்தை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் பெற்றனர். There are 6.8 billion people on the planet. These are the 68 who matter: http://www.forbes.com/wealth/powerful-people/list பலம் வாய்ந்த பெண்கள் http…

    • 3 replies
    • 1.6k views
  19. ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல் வரிசையில் தற்போது இடத்தில், கார்கில் போர் வீரர்களுக்காக கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பு திட்டத்திலும் முறைகேடு என காங்கிரஸ் அரசு மீதான ஊழல் புகார்கள் விஸ்வரூபம் எடுத்து நாட்டையே உலுக்கியுள்ளது. கார்கில் போரில் தாய் நாட்டிற்காக தீரமுடன் போரிட்டு உயிரிழந்த நமது இராணுவ வீரர்களின் விதவை மனைவிகளுக்காகவும், போரில் வீரசாகசம் புரிந்து வெற்றியுடன் திரும்பிய வீரர்களுக்காகவும் குடியிருப்பு கட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது. இத்ற்காக மும்பையின் மிக முக்கியமான பகுதியான் கொலாபா என்ற இடத்தில் அமைந்திருக்கும் இராணுவ நிலம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு 6 அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட முடிவுசெய்யப்பட்டு, அந்த இடம் ஆதர்ஷ் கூட்டுறவு வீட்…

  20. ஒபாமாவின் விஜயத்தையொட்டி அவருக்கான பிரத்தியேக காரும் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படவுள்ளது. அதிநவீன 'கெடிலாக் வன்' (Cadillac-one) எனப்படும் இக்காரானது சுமார் 7000 கிலோகிராம் நிறை கொண்டது. இக்காரானது இரசாயன, உயிரியல் மற்றும் வெடிகுண்டுத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கக்கூடியது. அமெரிக்காவின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த கார் இது. துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கமுடியாத வெளிப்பரப்பு மற்றும் 5 அங்குல தடிமன் கொண்ட கண்ணாடிகள், காருக்குள் இருந்தபடியே வெள்ளை மாளிகையுடன் தொடர்பு கொள்ளக் கூடிய வசதி , காருக்குள் இருந்தபடி அணுஆயுத தாக்குதலுக்கு உத்தரவிடும் வசதி என்பன இதன் மேலதிக சிறப்பம்சங்களாகும். மேலும் அமெரிக்காவில் இருந்து 40 வ…

    • 0 replies
    • 425 views
  21. போபால் நச்சு வாயுக் கசிவு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை, அமெரிக்க ஜனாதிபதி பறாக் ஒபாமாவைக் கேட்டுள்ளது. எதிர்வரும் வாரம், அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ள நிலையில், இந்தக் கோரிக்கையை சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ளது. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறிய நச்சு வாயு காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தும் பாதிக்கப்பட்டும் உள்ளார்கள். அமெரிக்காவின் ய+னியன் கார்பைட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வொறன் அன்டர்சன், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளவில்லையென சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவிக்கிறது. யூனியன் கார்பைட் நிறுவனத்தைக் கொள்வனவு செய்துள்ள ட…

    • 0 replies
    • 462 views
  22. ஒரு வாய்ப்பு தாருங்கள்: காஷ்மீர் மக்களிடம் சோனியா வேண்டுகோள் காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த ஒரு வாய்ப்புத் தாருங்கள் என்று காங்கிரஸ் தலைவரும் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்தார். தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் வேதனையளிக்கக் கூடியவை. மாநிலத்தில் இப்போது புதிய சூழல் நிலவுகிறது. வாழ்ந்து சாதிக்க வேண்டிய இளம் வயதினர், தவறான வழிகாட்டுதலால் பரிதாபமாக தங்கள் உயிரை இழக்க நேரிடுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள சோகத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன். காஷ்மீர் மக்களுக்க…

  23. 31ம் திகதி காலை பதினொரு மணி அளவில் அருந்ததி ராயின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அருந்ததிராய் வெளியிட்டுள்ள அறிக்கை – தமிழில் ஜீரிஎன் 02 November 10 07:52 am (BST) 31ம் திகதி காலை பதினொரு மணி அளவில் 100க்கும் அதிகமான காடையர்கள் எனது வீட்டுக்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தினர். காஷ்மீர் தொடர்பாக நான் கொண்டிருக்கின்ற கருத்துக்களை எதிர்த்து கோசங்களை எழுப்பியபடி எனக்குப் பாடம் படிப்பிக்கப் போவதாகவும் அவர்கள் அச்சுறுத்தினர். NDTV, TimesNow மற்றும் News24 ஆகிய ஊடகங்களின் நகரும் ஒளி ஒலிபரப்பு நிலையங்கள் (Out side Broad casting Vans) ஏற்கனவே வந்து இச்செயலை நேரடியாக ஒளிபரப்பக் காத்திருந்தன. வந்திருந்த கலகக் காரர்களில் பெரும்பாலான…

  24. தென்னாப்பிரிக்காவுக்கு தமிழர்கள் சென்று குடியேறி 150 ஆண்டுகள் நிறைவடைவதை மிகப்பெரிய விழாவாக கொண்டாட அந்நாட்டு தமிழர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். அந்த கொண்டாட்டங்களில் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேகப் ஜூமா கலந்துகொள்ள இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள்இ தென் ஆப்ரிக்காவில் உள்ள கரும்புத் தோட்டங்களில் கூலிகளாக வேலை செய்வதற்கெனத் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உள்ளிட்ட பல இந்தியர்களை அங்கு கொண்டுசென்றனர். 1860 ஆம் ஆண்டு துவங்கி 1911 வரை இப்படி கொண்டு செல்லப்பட்டவர்கள் அங்கேயே தங்கிவிட்டனர். இன்றைய நிலையில் தமிழ்இ மலையாளம்இ தெலுங்கு மற்றும் இந்தி ஆகியவற்றைத் தாய்மொழியாகக் கொண்ட சுமார் பதினான்கு லட்சம் இந்திய வம்சாவளியினர் தென் ஆ…

    • 5 replies
    • 872 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.