உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
உக்ரைனை சமாளிப்பது கடினம்; ரஷ்யாவை சமாளிப்பது எளிது; டிரம்ப் கருத்து உக்ரைனை சமாளிப்பது மிகவும் கடினம் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா போரில் அமைதி ஏற்படுத்துவது குறித்து பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இதில் உக்ரைனை சமாளிப்பது கடினம் என்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் அமைதியை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். போர் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், உக்ரைன் கிடைக்கும் வாய்ப்பில் வேலையை முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் “அவர்கள் உக்ரைனை தொடர்ந்து தாக்குகிறார்கள். இந்த விஷயத்தில் உக்ரைனை சமாளிப்பது எனக்கு மிகவும் கடினம் இருக்கிறது”. ரஷ்யாவிடம் அனைத்து வாய்ப்புகளும் உள்ளன, அவர்களிடம் சிறப்பான நிலைமை இருந்த போதிலும், அவர்களை …
-
- 0 replies
- 281 views
-
-
யுக்ரேன்: “மின்சாரத்தை இழந்திருந்தால், அது பேரழிவாக இருந்திருக்கும்” – ரஷ்ய கட்டுப்பாட்டில் செர்னோபில் எப்படியிருந்தது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, பொறியாளர் வலேரி செமனோவ் வடக்கு யுக்ரேனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையம், படையெடுப்பின் முதல் நாளிலேயே ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்டது. தற்போது மீண்டும் யுக்ரேன் கட்டுப்பாட்டிற்கே வந்துள்ளது. பிபிசியின் யோகிதா லிமாயே ரஷ்ய படைகள் வெளியேறிய பிறகு அணுமின் நிலையத்தின் உள்ளே சென்ற முதல் செய்தியாளர்களில் ஒருவர். பிப்ரவரி 24-ஆம் தேதி பிற்பகலில், ரஷ்ய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் செர்னோபிலை சுற்றி வளைத்து, பெலாரஷ்ய எல்லையிலிருந்து யு…
-
- 0 replies
- 281 views
- 1 follower
-
-
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை அர்த்தமற்றது – ஈரான்! இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்காவுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை “அர்த்தமற்றது” என்று ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) விவரித்துள்ளார். கடந்த மாதம் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனிக்கு அனுப்பிய கடிதத்தில், தெஹ்ரான் அணு ஆயுதங்களை வாங்குவதைத் தடுக்கும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று நம்புவதாக ட்ரம்ப் கூறியதை அடுத்து ஈரான் வெளிவிகார அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. கடந்த வாரம் தனது கருத்தை மீண்டும் வலியுறுத்திய ட்ரம்ப், ஈரான் தனது அணுசக்தி திட்டம் குறித்து நே…
-
- 1 reply
- 281 views
-
-
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேரின் மரணதண்டனை ஆயுளாகக் குறைப்பு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டைனையாகக் குறைத்து, குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோத்ரா ரயில் நிலையம் அருகே, கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி, சபர்மதி ரயிலின் எஸ்-6 பெட்டி தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் 59 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலம் முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது. இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு, கடந்த 15 ஆண்டு…
-
- 0 replies
- 281 views
-
-
ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் கொரோனா பரிசோதனை நிறைவு: 454 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் கொரோனா பரிசோதனை நிறைவடைந்த நிலையில், மொத்தம் 454 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 50இற்க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த் 2,666 பயணிகள் மற்றும் 1,045 ஊழியர்கள் என மொத்தம் 3,711 பேருடன் கடந்த 3ஆம் திகதி ஹொங்கொங்கிலிருந்து ஜப்பான் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார்னிவல் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசுக் கப்பல், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக, ஜப்பானின் யோகோஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் இருந்து கடந்த மாதம் ஹொங்கொங்கில் இறங்கிய பயணிக்கு கொரோனா வைரஸ் தொற்ற…
-
- 0 replies
- 281 views
-
-
கனடா- மார்ச் மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வார இறுதியிலும், நவம்பர் மாத முதல் வார இறுதிநாளிலும் கடிகாரம் நகர்த்தப்படுகின்றது. வசந்தகால ஆரம்பமான மார்ச் மாதத்தில் கடிகாரம் முன்நோக்கியும் முன்பனிக்காலமான நவம்பர் மாதத்தில் பின்நோக்கியும் நகர்த்தப்படுகின்றது. இதனை “spring ahead” and “fall back.” என்று கூறப்படுகின்றது. இந்த நேரமாற்றமானது பெரும்பாலான மக்களின் உடல் கடிகாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளிலும் உண்மையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றதென கூறப்படுகின்றது. ஞாயிற்றுகிழமை அதிகாலை 2-மணிக்கு இந்த பகலொளி சேமிப்பு நேரம் ஆரம்பமாகின்றது அதாவது ஒரு மணிநேர விலைமதிப்பற்ற தூக்கத்தையும் கண்களை மூடும் நேரத்தையும் மக்கள் இழக்கின்றனர். - See more at: http://www.canadamirror.com/canada…
-
- 0 replies
- 281 views
-
-
மேன்சஸ்டர் தாக்குதல் குறித்த புலனாய்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறும் போலிஸார் தாக்குதலாளியின் நடவடிக்கை குறித்து புதிய படங்களை வெளியிட்டுள்ளது குறித்த செய்திகள், சர்ச்சைக்குரிய கடாஃபி மகன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பது லிபிய அரசியலை பாதிக்குமா? இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு; மற்றும் பன்றிகளிடம் பரிசோதிக்கப்படும் ஆண்டிபயாட்டிக்ஸுக்கான மாற்று மருத்துவ வழி மனிதர்களுக்கும் பயன்தருமா? பிபிசியின் பிரத்யேக செய்தி! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 281 views
-
-
ட்ரம்பைக் கலாய்க்கிறார் ஒபாமா ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அது தொடர்பான பதற்றங்களும் அதிகரித்துள்ளன. ஆனால், ஜிம்மி கிமெல் லைவ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனாதிபதி பராக் ஒபாமா, நகைச்சுவையுடன் டொனால்ட் ட்ரம்ப் மீது கேலிகளை முன்வைத்தார். இந்தத் தேர்தல், மோசடியானதாக இடம்பெறுகிறது என, ட்ரம்ப் குற்றச்சாட்டுகளைச் சுமத்திவரும் நிலையில், அதைக் கேலி செய்யும் விதமாக, "தேர்தலை மோசடியாக மாற்றும் நடவடிக்கையிலிருந்து ஓய்வெடுத்து, இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஒபாமா கலந்துகொண்டார்" என, ஜிம்மி கிமெல் குறிப்பிட்டார். இதில், தன்னைக் கீழ்மைப்படுத்தும் டுவீட்கள் சிலவற்றை வாசித்த ஜனாதிபதி ஒபாமா, "ஐக்கிய அமெரிக்காவின் மிகவ…
-
- 0 replies
- 281 views
-
-
சவுதியில் கடும் வெப்பம் – மக்காவில் 19 வெளிநாட்டு யாத்திரீகர்கள் உயிரிழப்பு! சவுதி அரேபியாவில் நிலவும் கடும் வெப்ப அலைகாரணமாக 19 வெளிநாட்டு யாத்திரீகா்கள் உயிாிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜோர்டானை சேர்ந்த 14 யாத்ரீகர்கள் மற்றும் ஈரானை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 19 பேர் இவ்வாறு உயிரிழந்து உள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் சவுதி அரேபியாவில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதாகவும், மக்காவில் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி உள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வெப்பத் தாக்கத்தினை எதிர்கொள்ள கூடிய வகையிலான மருத்துவ குழுவினர் உள்ளிட்ட 1600 இராணுவ வீரர்களை சவுதி இராணுவம் மக்காவிற்கு அனுப்பியுள்ளது. அத்துடன், 30 வ…
-
- 1 reply
- 281 views
-
-
கண்கவர் வாணவேடிக்கையுடன் 2017 புத்தாண்டை வரவேற்ற ஆஸ்திரேலியா உலக நாடுகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து முதன்முதலில் புத்தாண்டை வரவேற்பது வழக்கம். அதன்படி 2017 புத்தாண்டை கண்கவர் வாணவேடிக்கையுடன் வரவேற்றுள்ளனர். 2016-ம் ஆண்டு இன்றுடன் முடிவடைகிறது. இதனால் உலக மக்கள் அனைவரும் 2017-ஐ மகிழ்ச்சியுடன் வரவேற்க தயாராக இருக்கிறார்கள். அந்தந்த நாட்டு மக்கள் அவர்களின் தலைநகரில் கண்கவர் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்பது வழக்கம். இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணியாகும்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் சரியாக நள்ளிரவு …
-
- 0 replies
- 281 views
-
-
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு: அரசு செயல்படவில்லையா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம் டைம்ஸ் ஆஃப் இந்தியா- 'தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு' படத்தின் காப்புரிமைGETTY IMAGES 2016- 17 நிதியாண்டில் தமிழகத்தின் பொ…
-
- 0 replies
- 281 views
-
-
ஆள் கடத்தல் குற்றச்சாட்டில் 9 பேர் மீது வழக்கு கனடா முழுவதும் பரந்து பட்ட “புரஜெக்ட் கார்டியன்” என்ற நடவடிக்கையில் பெண்களை கடத்தி பாலியல் ரீதியாக வியாபாரத்தில் ஈடுபடுத்திய சந்தேக நபர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மேல் 61 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஜேன் – வில்சன்(Jane & Wilson) மற்றும் கிப்பிளிங்-ரெக்ஸ்டேல்(Kipling & Rexdale) பகுதிகளில் 13 தேடுதல் நடவடிக்கைகள் இடம் பெற்றன. 15 வயது முதல் 33 வயதுவரையான பெண்களை பரிசுகள் மூலம் மயக்கி காதலர்களாக நடித்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். கனடாமுழுவதும் உள்ள பெண்களை பாடசாலை முதல் முகநூல் வரையாக பெண்களை ஏமாற்றிய இவர்கள் வருமானம் குறைந்த போது அவர்களை துன்புறுத்தியும் உள்ளனர். 18 மு…
-
- 0 replies
- 281 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் பிரிட்டனின் சர்வதேச மேம்பாட்டு செயலாளராக பென்னி மோர்டாண்ட்நியமனம் படத்தின் காப்புரிமைREUTERS Image captionபென்னி மோர்டாண்ட் பிரிட்டன் அமைச்சரவையிலிருந்து பிரீத்தி பட்டேல் ராஜினாமா…
-
- 0 replies
- 281 views
-
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சட்டப்பட்ட பேரறிவாளனின் வாக்குமூலத்தை திருத்தியதாகக் கூறிய சிபிஐ முன்னாள் அதிகாரி தியாகராஜனிடம் விசாரணை நடத்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனிடம் விசாரணை காலத்தின் பாது வாக்குமூலம் பெற்ற தியாராஜன், அந்த வாக்குமூலத்தை திருத்தியதாக சமீபத்தில் கூறியிருந்தார். இதையடுத்து வழக்குரைஞர் துரை செல்வம் இன்று தடா சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், பேரறிவாளனின் வாக்குமூலத்தில், குண்டு வெடிக்கப் பயன்படுத்தப்பட்ட பேட்டரியை ஏன் வாங்கி வரச் சொன்னார்கள் என்று தனக்கு தெரியாது என்று பேரறிவாளன் கூறினார். ஆனால், தனக்கு தெரியாது என்று பேரறிவாளன் கூறியதை தி…
-
- 0 replies
- 281 views
-
-
ஏமன் போர்: சௌதி கூட்டணியின் வான் தாக்குதலில் 29 பள்ளிக் குழந்தைகள் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS போராளிகள் வசமுள்ள ஏமனின் வடக்குப்பகுதியில் சௌதி தலைமையிலான கூட்டணி நடத்திய வான் தாக்குதலில் சிக்கி,,பேருந்தொன்றில் சென்றுகொண்டிருந்த 29 பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட டஜன்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 281 views
-
-
பெங்களூரில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து- ஏராளமானோர் சிக்கியுள்ளதாக அச்சம்:- பெங்களூரில் மூன்று அடுக்கு மாடிக்கட்டம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டுமானப் பணியின் விபத்து நேரிட்டதால் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்றுவருகிறது. பெங்களூருவின் வொயிட் ஃபில்ட் பகுதியில் மூன்று அடுக்கு மாடிக் கட்டடம் கட்டுமானப் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை இந்தக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் அவசர சேவைகள் பிரிவினர் மீட…
-
- 0 replies
- 281 views
-
-
கொரோனா வைரஸ் நீண்ட நாட்கள் எங்களுடனேயே இருக்கப்போகிறது;எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் நீண்ட நாட்கள் நம்முடன் இருக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நீண்ட காலத்திற்கு இந்த கிரகத்தில் இருக்கும். பெரும்பாலான நாடுகள் இன்னும் தொற்றுநோயைக் கையாள்வதற்கான ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரித்துள்ளார். கொரோனா வைரஸைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக நினைத்த சில நாடுகள் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் ஆபிரிக்காவிலும், அமெரிக்காவிலும் சிக்கலான போக்குகள் உள்ளன. பாதிப்புகள் குறைவாக இருந்தாலும், ஆபிரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐ…
-
- 0 replies
- 281 views
-
-
UPDATE ; சிரியாவில் இராணுவ பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் பலி சிரியா தலைநகர் டமாஸ்கஸில் புதன்கிழமை அதிகாலையில் இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்தினை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரு குண்டுத் தாக்குதல்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை காலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலினால் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சிரிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. சிரிய அரசு தொலைக்காட்சி மத்திய டமாஸ்கஸில் எரிந்த பேருந்தின் காட்சிகளைக் வெளிக்காட்டியுள்ளது. பொது மக்கள் வேலை மற்றும் பாடசாலைக்கு செல்லும் பரபரப்பான நேரத்தில் இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. ஒரு காலத்தில் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட புறநகர்ப் பகுதிகளை அரசுப் படைகள் கைப்பற்றிய ப…
-
- 0 replies
- 281 views
-
-
சிரியா போர்: இரு வாரங்களில் 800 பேர் பலி, ஆஸ்திரேலியாவில் அதானியின் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு மற்றும் வெனிஸ்வேலாவில் ஒரு வீட்டின் விலைக்கு நிகராக விற்கப்படும் ஒரு குவளை காஃபி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 281 views
-
-
9/11 இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பான ‘கோப்பு எண் 17’ வெளியிடும் ரகசிய தகவல்கள் 9/11 பயங்கரவாதத் தாக்குதல். | கோப்புப் படம்: ஏ.பி. 9/11 என்று அழைக்கப்படும் அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான கோப்பு எண் 17-ன் மூலம் சில ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா இந்தக் கோப்பை அமைதியாக வெளியிடப்படுவதற்கான ஆவணமாக்கியுள்ளது. இதில் பயங்கரவாதிகளுக்கு சவுதி அரேபியாவுடனான தொடர்பு அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. ‘தீவிரமான சவுதி ஆதரவு அமைப்பு’ “பயங்கரவாதிகள் அமெரிக்காவில் இருந்த காலக்கட்டத்தில் தீவிர சவுதி ஆதரவு இருந்துள்ளது. கோப்பு எண் 17-ல் கூடுதலாக விடை தெரியாத சில கேள்விகல் எழுந்துள்ளன. 9/11 பற்றி இப்படித்தான் நாங்கள் சிந்திக்கிறோ…
-
- 0 replies
- 281 views
-
-
காலநிலை மாற்ற கொள்கையின் எதிர்ப்பாளர் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் தலைமைப் பதவிக்கு தேர்வு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளுக்கு பகிரங்கமாக எதிர்ப்புக் குரல் எழுப்பிய ஒருவரை, நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் தலைமைப் பதவிக்கு அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார். எண்ணெய் வளம் மிக்க ஓக்லஹோமா மாநிலத்தின் முதன்மை அரச வழக்கறிஞரும், புதைபடிவ எரிபொருள் துறையின் நெருங்கிய கூட்டாளியாக பார்க்கப்படும் ஸ்காட் ப்ரூயிட், காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கையில் நம்பிக்கையற்றவர் ஆவார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக ஜனநாயகக் கட்சியின் நியமனத்தை ப…
-
- 0 replies
- 281 views
-
-
வாஷிங்டன் போஸ்டின் செய்தியாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்புவதாக துருக்கி அதிகாரிகள் கூறியுள்ளதால் அச்சம் எழுந்துள்ளது. சௌதி அரேபியாவைச் சேர்ந்த ஜமால், கடந்த செவ்வாய்க்கிழமை துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்துக்கு சென்றதையடுத்து காணாமல் போனார். முதல் கட்ட விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளதாக துருக்கி அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், இதனை மறுத்துள்ள சௌதி அரேபியா, அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாக கூறியுள்ளது. ஜமால் கொல்லப்பட்டிருப்பது உண்மை என்றால், அது 'மிகவும் கொடூரமான மற்றும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியாத' செயலாக இருக்கும் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கூறியுள்ள…
-
- 0 replies
- 281 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * அமெரிக்கர்களிடம் தேசிய ஒருமைப்பாட்டை கோருகிறார் டொனால்ட் ட்ரம்ப்; ஆனால், அவரது சொந்த வணிக சாம்ராஜ்ஜியத்தொடர்புகள் அமெரிக்க அதிபராக அவரது அரசியலை பாதிக்குமா? * இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பெரும்பாலான ஆயுதங்கள் ஐரோப்பியர்களால் வழங்கப்பட்டவை; போர்க்கள முன்னரங்கத்திலிருந்து பிபிசியின் புலனாய்வுத் தகவல். * பிரிட்டனின் வடகடலில் நிர்மாணிக்கப்படும் காற்றாலைப் பண்ணை விரைவில் பிரிட்டனுக்கு மின்சாரத்தை வழங்கும்; 2025 ஆம் ஆண்டில் நிலக்கரி மின்சாரத்தை ஒழிக்க நினைக்கிறது பிரிட்டன்.
-
- 0 replies
- 281 views
-
-
புதுடெல்லி, ஆம்ஆத்மி கட்சியில் தேசிய அமைப்பாளர் கெஜ்ரிவாலுக்கும், அரசியல் விவகார குழுவில் இருக்கும் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.கட்சியில் கெஜ்ரிவாலை முன்னிலைப்படுத்துவதாக இருவரும் புகார் கூறி இருந்தனர். இதனால் இன்று நடைபெறும் தேசிய செயற்குழுவில் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகியோர் நீக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் திடீரென ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை தேசிய செயற்குழுவுக்கு அனுப்பினார்.இந்த ராஜினாமாவை ஏற்பது குறித்து இன்று பிற்பகல் நடைபெறும் கட்சியின் தேசிய செயற்குழுவில்தான் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறத…
-
- 0 replies
- 281 views
-
-
ரஸ்யா இணைய தாக்குதல்களை நடத்துவதாக ஜெர்மனி குற்றச்சாட்டு ரஸ்யா இணையத் தாக்குதல்களை நடத்துவதாக ஜெர்மனி; அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ஜெர்மனியின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவு முகவர் நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. சைபர் தாக்குதல்களை நடத்தி ஜெர்மனியின் முக்கிய தகவல்களை ரஸ்யா சேகரித்துள்ளதாகவும் இந்த தாகவல்கள் சில வேளைகளில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தல்களின் போது பயன்படுத்தப்படலாம் எனவும் ஜெர்மனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ரஸ்யா இவ்வாறு சைபர் தாக்குதல்களை நடத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் ஜெர்மனியின் அரசியல் நிறுவனங்கள் மீது எவ்வித சைபர் தா…
-
- 0 replies
- 281 views
-