உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
குமுறத் தொடங்கியுள்ள இந்தோனேசியாவின் மவுண்ட் சினாபுங் எரிமலை இந்தோனேஷியாவின் மவுண்ட் சினாபுங் என்ற எரிமலை குமுறத் தொடங்கியுள்ளதுடன் செவ்வாயன்று 5 கிமீ (3.1 மைல்) உயரத்தில் சூடான சாம்பலை வான் நோக்கி வெளியேற்றியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட அதன் முதல் பெரிய வெடிப்பின் பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு முதல் மவுண்ட் சினாபுங்கின் குமுறல் செயல்பாடு அதிகரித்துள்ளது. அதனால் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் எரிமலை வெடிப்புக்கான எச்சரிக்கை மிக உயர்ந்த மட்டத்தில் விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை, ஆனால் ஒரு அதிகாரி முன்பு எரிமலையின் பள்ளத்திலிருந்து குறைந்தது 3 கி.மீ தூரத்திற்கு அப்பால் மக்களை வெளியேறுமாறு …
-
- 0 replies
- 408 views
-
-
ஈரான் சக்திவாய்ந்த அதிநவீன ஏவுகணையை பரிசோதித்துள்ளது ஈரான் மூன்றுநாள் ராணுவ போர் ஒத்திகை ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளது. ஈரானின் மத்திய பகுதியில் உள்ள பாலைவனத்தில் இடம்பெற்ற இந்த ஒத்திகையின்போது, சக்திவாய்ந்த அதிநவீன ஏவுகணையை ஏவி பரிசோதித்ததாகவும் இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை பரிசோதனை செய்ததனைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்திருந்த அமெரிக்கா, ஈரானை கண்காணிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/18419
-
- 0 replies
- 397 views
-
-
இன்றைய (18/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளின் பிரத்யேக நோய்களை ஒழிப்பதில் அடைந்திருக்கும் வெற்றி என்ன? தொடரும் தோல்விகள் எவை? ஆராய்கிறது சர்வதேச மாநாடு. * இந்தோனேஷியத் தலைநகர் ஜகர்தாவின் கிறித்தவ ஆளுநர் தேர்தலில் தோல்வி; சகிப்புத்தன்மைக்குப்பேர்போன நாட்டின் தலைநகரத்தேர்தல்,, மத உணர்வுகளைத் தூண்டியதா? பிபிசியின் நேரடி செய்தித்தொகுப்பு. * ஆபத்துக்கு மத்தியில் ஆரம்பக்கல்வி; பள்ளியில் படிக்க தினமும் படகில் செல்லும் உகாண்டா குழந்தைகளின் கதை ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 234 views
-
-
பிரபலங்களின் ட்விட்டர் பக்கங்கள் அரசியல்: கலைஞர் கருணாநிதி : https://twitter.com/kalaignar89 செய்தி ஆசிரியர்கள்: என் ராம் (ஹிந்து) - https://twitter.com/nramind நடிகர்கள்: சிலம்பரசன் : https://twitter.com/iam_STR மாதவன் : https://twitter.com/ActorMadhavan சரத்குமார் : https://twitter.com/realsarathkumar பார்த்தீபன் : https://twitter.com/rparthiepan அரவிந்த்சாமி : https://twitter.com/thearvindswami அதர்வா முரளி : https://twitter.com/Atharvaamurali ஜெயம் ரவி : https://twitter.com/actor_jayamravi ஜீவா : https://twitter.com/Actorjiiva தனுஷ் : https://twitter.com/dhanushkraja நடிகைகள்: ஹன்சிகா : https://twitter.com/ihansika நமீதா : https://…
-
- 0 replies
- 510 views
-
-
கொல்கத்தா: மேற்கு வங்க கல்லூரி ஒன்றில் தேர்வு எழுதிய ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவரின் மனைவியை காப்பியடிக்க விடாததால் கல்லூரி முதல்வர் உள்பட 3 ஆசிரியர்கள் தாக்கப்பட்டனர். மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்புர் மாவட்டத்தில் உள்ள இதாஹரில் செயல்பட்டு வருகிறது மேக்நாத் சாஹா கல்லூரி. அந்த கல்லூரியில் அப்பகுதியைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவரின் மனைவி தேர்வு எழுதினார். தேர்வு அறையில் அவர் காப்பியடித்துள்ளார். இதைப் பார்த்த ஆசிரியர் இது குறித்து கல்லூரி முதல்வர் ஸ்வப்னா முகர்ஜியிடம் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணின் விடைத்தாளை வாங்கிவிட்டு அனுப்புமாறு முதல்வர் தெரிவித்துள்ளார். இதையடுத்து வினாத்தாள் பறிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்ததும் 10 முதல் 12 பேர் கல்லூரிக…
-
- 0 replies
- 323 views
-
-
சிரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸை இணங்க வைக்கும் முயற்சிகளில் அதிபர் ஒபாமா நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. காங்கிரஸில் அடுத்தவாரம் இதற்கான வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. ஒபாமாவின் சிரியா மீதான இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தும் அமெரிக்க புலனாய்வு விளக்கக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் சிரியாவில் சுமார் 1400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்படக் காரணமான ஸரின் நச்சுவாயுத் தாக்குதலை அரசாங்கம் நடத்தியுள்ளதாக ஒபாமா நிர்வாகம் முன்வைக்கும் குற்றச்சாட்டை நிறுவுவதற்காக இந்தப் புலனய்வு விளக்கக் கூட்டம் நடக்கவுள்ளது.கோடைகால விடுமுறையை முடித்துக்கொண்டு திரும்பியுள்ள பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள், புலனாய்வு விளக…
-
- 0 replies
- 435 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் தம் வாழும் நகரில் எவ்வளவு திருப்தியுடன் வாழ்கிறார்கள் என்று கண்டறிய, ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய கணக்கெடுப்பொன்றில், ஒஸ்லோ மூன்றாமிடத்தைத் தட்டிக்கொண்டது. ஐரோப்பிய நகர வாழ்க்கத்தரம் பற்றிய இக்கருத்துக் கணிப்பில்,ஒஸ்லோவின் 97% குடிமக்கள் நிறைவுடன் வாழ்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த வருடம் கணக்கெடுப்பில் உள்ளீர்க்கப்படாத ஒஸ்லோ, இவ்வருடம், கொபன்ஹேகன்(Copenhagen), குரோயின்கன்(Groeningen), சூரிச் (Zurich) ஆகிய நகரங்களுடன் தன் மூன்றாமிடத்தைப் பகிர்ந்துள்ளது. தமது கருத்துக்கணிப்பு, நகர்ச் சூழல்களில் நல்வாழ்க்கைத் தரத்துக்கு அடிப்படையான வளங்களை அரசாங்கங்களுக்கு ஞாபகமூட்ட உதவும் என்று தெரிவித்தார், பிராந்தியக் கொள்கைகளுக்கான ஐரோப்பிய ஆணையர் ஜொ…
-
- 0 replies
- 420 views
-
-
ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே எதிர்பாராத வகையில் போர் மூளக்கூடும்: பிரித்தானியா! ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே எதிர்பாராத வகையில் போர் மூளக்கூடும் என்று பிரித்தானிய இராணுவ தலைமைத் தளபதி நிக் கார்ட்டர் எச்சரித்துள்ளார். டைம்ஸ் வானொலிக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “ஒருவருக்கொருவர் மோதுவதையே குணமாகக் கொண்ட அரசியல்வாதிகள் எடுக்கும் முடிவுகளால், எதிரி நாடுகளுடனான பதற்றம் அதிகரிக்கவும் அந்தப் பதற்றம் தவறான கணக்கீடுகளை உருவாக்கவும் நாம் அனுமதிக்கக் கூடாது. சர்வாதிகாரப் போக்கைக் கொண்ட எதிரி நாடுகளின் தலைவர்கள், தங்கள் வெற்றிக்காக அகதிகள் பிரச்சினை, எண்ணெய் விலையேற்றம், மறைமுகப் போர்…
-
- 0 replies
- 257 views
-
-
ஹார்வே புயல்: ஹூஸ்டனில் வெள்ளப்பேரழிவில் இருந்து 2000 பேர் மீட்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionவெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மூன்றாயிரத்துக்கும் அதிகமான தேசிய மீட்புப் படையினர் உள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் கன மழையுடன் ஹார்வே புயல் புரட்டி எடுத்து வரும் நிலையில், ஹுஸ்டன் நகரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற…
-
- 0 replies
- 374 views
-
-
திபெத்தியர்களை இலக்கு வைத்து பௌத்த மதத்தை அழிக்கும் சீனா - திபெத்திய தேரர் திபெத்தியர்களின் அடையாளத்தை அழிக்கும் நோக்கில் சீனா புத்தமதத்தை அழித்ததாக திபெத்திய தேரர் லிங் ரின்போச்சே குற்றம் சுமத்தியுள்ளார். பல ஆண்டுகளாக திபெத்தியர்கள் மீது சீனா 'மனிதாபிமானமற்ற மற்றும் மிருகத்தனமான அட்டூழியங்களை' முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தலை லாமாவின் அரண்மனை, மகத்தான பல்வேறு மடங்கள் , புத்தர் சிலைகள் வரலாற்று மற்றும் ஆன்மீக மதிப்புள்ள புத்தர் சிலைகள் , இலக்கியங்கள் மற்றும் பௌத்த அடையாளங்களை சீனா அழித்துள்ளது. இன்று என் தேசம் வறுமையின் பிடியில் உள்ளது. 1000 க்…
-
- 2 replies
- 397 views
-
-
கவுசாம்பியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியாக ஹிந்து ரக்ஷா தள் தலைவர் பின்கி சவுத்ரி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் ஆம் ஆத்மி சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஹிந்து ரக்ஷா தள் அமைப்பின் மற்றொரு தலைவர் குப்தா, புகுந்து பிரசாந்த் பூஷன் சிஐஏ ஏஜெண்ட் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக விஷ்னு குப்தா கூறும் போது, பிரசாந்த் பூஷன் ஒரு துரோகி ,காஷ்மீரில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என்று பூஷன் கூறியது தேசிய நலனுக்கு எதிரானது. தேசிய நலனுக்கு எதிரான கருத்துகளை சொல்ல அவர்கள் அனுமதிக்கப்பட்டால் நமது நாடு உடைந்துவிடும். காஷ்மீரில் இருந்து ராணுவம் விலக்கப்படுவது காஷ்மீரை பாகிஸ்தானுக்கு விட்டுகொடுப்பது போல் ஆகும் என்று அவர் …
-
- 0 replies
- 367 views
-
-
லாஸ் வேகஸ் துப்பாக்கிதாரி வீட்டில் மேலதிக ஆயுதங்கள் கண்டுபிடிப்பு! தாக்குதலின் நோக்கத்தை ஆராய்கிறது காவல்துறை!! மீண்டும் விவாதிக்கப்படும் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடைமுறைகள்!!! முப்பதாண்டுகளுக்குப்பின் யாழ்ப்பாணம் சென்ற இந்திய அமைதிப்படையின் முன்னாள் இராணுவ உயரதிகாரி! உடன் சென்ற பிபிசியின் நேரடி செய்தித்தொகுப்பு!! மற்றும் மனிதனுக்கும் மாட்டுக்கும் இடையே மடகாஸ்கரில் நடக்கும் மல்லுக்கட்டு! காதலியை கைபிடிக்க காளையை அடக்கும் இளைஞர்கள் குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 235 views
-
-
அமெரிக்காவில் ஐ.எஸ் நடத்த இருந்த தாக்குதல் முறியடிப்பு: ஓராண்டு கழித்து வெளியாகும் செய்தி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கம் மற்றும் ரங்க ரயில் அமைப்பு மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஜிஹாதி தாக்குதல், ரகசியப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு எஃப்.பி.ஐ அதிகாரியின் உதவியுடன் முறியடிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூ…
-
- 0 replies
- 371 views
-
-
ஜிஹாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட விமானம் கடலில் விழுந்து விபத்து பிரான்ஸ் இராணுவத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்த சரக்கு விமானம் ஒன்று சற்றுமுன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்தனர். ஏனைய ஆறு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உக்ரேனியத் தயாரிப்பான இந்த ‘அண்டனோவ்’ ரக விமானம், ஐவரி கோஸ்ட் நகரின் கடற்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. கடும் மழை மற்றும் இடி-மின்னல் நிறைந்த சூழலில் தரையிறங்க முயற்சித்தபோதே விமானம் விபத்துக்குள்ளானதாக ஐவரி கோஸ்ட் இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான சில மணி நேரங்களில் விமானத்தின் சிதைவுகள் கரையொதுங்கிய…
-
- 0 replies
- 352 views
-
-
ஆப்கானியர்களுக்கு உதவுவதற்கான... உறுதிமொழியை, பிரித்தானியா வழங்கவில்லை: ஜெனரல் சர் ஜொன் மெக்கால்! நேட்டோவுடன் இணைந்து பணியாற்றிய பிறகு, தலிபான்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளான ஆப்கானியர்களுக்கு உதவுவதற்கான உறுதிமொழியை பிரித்தானியா வழங்கவில்லை என ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய பிரித்தானிய ஜெனரல் சர் ஜொன் மெக்கால் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கு வர தகுதியான நூற்றுக்கணக்கானோர் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இவர்களைக் கவனித்துக்கொள்வதற்கு நாங்கள் உறுதியளித்தோம், நீங்கள் ஒரு உறுதிமொழியைச் செய்தீர்கள், நீங்கள் அதை வழங்கவில்லை, எனவே அதை வழங்குவதற்கான ஒரு அமைப்பை உருவாக்குங்கள்’ என கூறினார். இத…
-
- 0 replies
- 264 views
-
-
இரட்டை குடியுரிமை சர்ச்சை: ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் தகுதி நீக்கம் பகிர்க படத்தின் காப்புரிமைEPA Image captionநீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மிகவும் மதிக்கிறேன்: பர்னபி ஜாய்ஸ் இரட்டை குடியுரிமை வைத்திருந்த ஆஸ்திரேலியாவின் துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ் உள்பட நான்கு பிற அரசியல்வாதிகள் தவறாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் விளைவாக ஜாய்ஸ் உள்பட மூன்று பேர் தாங்களது தற்போதைய பதவிகளிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்படுகிறார்கள். மற்ற இருவரும் ஜூலை மாதமே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர். ஆஸ்திரேலியாவின் அரசிய…
-
- 0 replies
- 364 views
-
-
நேட்டோ அமைப்பில், இணைய உள்ளதாக.... ஃபின்லாந்து- சுவீடன் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு! உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் விளைவாக வரும் ஒரு வரலாற்று மாற்றத்தில் நேட்டோ உறுப்புரிமைக்கு விண்ணப்பிப்பதாக சுவீடன் மற்றும் ஃபின்லாந்து உறுதிப்படுத்தியுள்ளன. ஸ்வீடனில், ஆளும் சமூக ஜனநாயகக் கட்சியினர் மேற்கத்திய பாதுகாப்புக் கூட்டணியில் சேர்வதை ஆதரிப்பதாகக் கூறியதால், இது நாடு விண்ணப்பிக்க வழி வகுத்தது. ஃபின்லாந்தும் நேட்டோவில் சேர்வதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்தது. சுவீடன் இரண்டாம் உலகப் போரில் நடுநிலை வகித்தது மற்றும் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இராணுவக் கூட்டணிகளில் சேருவதைத் தவிர்த்தது. பின்லாந்து ரஷ்யாவுடன்…
-
- 12 replies
- 919 views
-
-
வங்கதேசம்: விடுதலைக்குப் பின்னும் இந்திரா உதவியது எப்படி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இந்திரா காந்தியின் நூற்றாண்டு இம்மாதம் அனுசரிக்கப்படுகிறது. வங்கதேச விடுதலையில் ஆற்றிய அளப்பரிய பங்கை கூறுவது இப்போது முக்கியமானது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇந்திரா காந்தி விளம்பரம் பாகிஸ்தானில் இருந்து பிரிவதற்கான வங்கதேசத்தின் விடுதலையை இந்திரா ஆத…
-
- 0 replies
- 502 views
-
-
சிம்பாப்வே ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் சீனா? சிஎன்என்– சீனாவிற்கு சிம்பாப்வேயின் இராணுவதளபதியொருவர் விஜயம் மேற்கொள்வதை உலகநாடுகள் ஓருபோதும் வழமைக்கு மாறான விடயமாக பார்க்கப்போவதில்லை. ஜிம்பாப்வேயில் அதிகம் முதலீடு செய்துள்ள நாடு சீனா என்பதுடன் ரொபேர்ட்முகாபே அரசாங்கத்தின் நெருங்கிய சகாவாகவும் சீனா காணப்படுகின்றது. ஆனால் சீனாவிற்கு விஜயம் மேற்கொண்ட சிம்பாப்வேயின் இராணுவதளபதி கொன்சன்டினோ சிவெங்கா அந்த நாட்டின் பல அதிகாரிகளை சந்தித்து விட்டு நாடு திரும்பிய பின்னரே சிம்பாவேயில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது- அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக சிம்பாப்வே இராணுவதளபதியின் சீனா விஜயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் முகாபேயை …
-
- 0 replies
- 426 views
-
-
பிரிட்டன் மக்கள்தொகையில் இந்தியர்கள், பாகிஸ்தானியர், வங்கதேசத்தவர் உள்ளிட்ட ஆசிய நாட்டவர், ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் பகுதி நாடுகளைச் சேர்ந்த கறுப்பு இனத்தவர் அதிகரித்து வருகின்றனர். இப்போது பிரிட்டன் மக்கள் தொகையில் 14 சதவீதமாக அதாவது 80 லட்சமாக உள்ள இவர்கள், 2050-ம் ஆண்டில் 30 சதவீதமாக அதிகரிப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இருந்ததைவிட ஆசியர்களும், கறுப்பு இனத்தவரும் இரு மடங்காக அதிகரித்துள்ளனர். அதேநேரத்தில் இந்தியர்கள் தவிர பிற ஆசிய ஆப்பிரிக்க நாட்டவரின், வேலையின்மை தேசிய சராசரியைவிட இரு மடங்கு அதிகரித்துள்ளது. வெள்ளை இனத்தவருடன் ஒப்பிடும்போது ஆசிய, ஆப்பிரிக்க மாணவர்கள் பள்ளி யில் இருந்து இடைநின்று விடுவது அதிகம் http://tamil.thehindu.com…
-
- 0 replies
- 349 views
-
-
கனேடிய பழங்குடியின மாணவர்கள் மீதான... துன்புறுத்தல்கள்: மன்னிப்பு கோரினார், போப் ஃபிரான்சிஸ்! கனடாவில் கத்தோலிக்க தேவாலயங்கள் நடத்திய பாடசாலைகளில் கடந்த 1970ஆம் ஆண்டு வரை பழங்குடியின மாணவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதற்காக போப் ஃபிரான்சிஸ் மன்னிப்பு கோரினார். ஆறு நாட்கள் பயணமாக கனடா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப், நேற்று (திங்கட்கிழமை) முதல் நிகழ்வாக அல்பர்டாவில் எட்மான்டனின் தெற்கு பகுதியில் மிகவும் பாழடைந்த நிலையில் அமைந்திருக்கும் கத்தோலிக்க தேவாலய பாடசாலையில் குழுமியிருந்த பூர்வகுடி மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடையே உரையாற்றினார். இதன்போதே அவர் மன்னிப்பு கோரினார். இதன்போது உரையாற்றிய அவர், ‘பூர்வகுடி மக்களுக்கு ஏராளமா…
-
- 0 replies
- 174 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். குவைத் வேலை வேண்டாம்: பிலிப்பைன்ஸ் படத்தின் காப்புரிமைEPA குவைத்தில் பிலிப்பைன்ஸ் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்படுவது குறித்து, மரணம் குறித்தும் வந்த செய்திகளையடுத்து, குவைத்திற்கு தங்கள் ந…
-
- 0 replies
- 388 views
-
-
ஓமார் காடரைக் கனடாவுக்குத் திருப்பி அனுப்பவேண்டுமென போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி தெரிவித்தார். [ யார் இந்த ஓமார் காடர் : இவர் ஒரு கனேடியர். சிறு வயதில் ஆப்கானிஸ்தான் சென்றார். இவரின் தந்தையர் ஒரு அல்-கைய்டா தலைவர். பின்னர் இவர் கிரனைட் வீசி ஒரு அமெரிக்க இராணுவ வீரரை கொலை செய்தவர் என குற்றம் சாட்டப்பட்டு கியூபாவில் உள்ள சிறையில் ஏழு வருடங்களுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டுள்ளார். ஒபாமா இந்த சிறையை மூட வேண்டும் என்பதால் இவர் மீது வழக்கு நடக்கின்றது. இவர் வழக்கின் தீர்ப்பின் படி கனடா வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் இங்கு ஒருவித எதிர்ப்பு இதற்கு உள்ளது. ] குவன்ரானமோ பேயில் உள்ள இராணுவ நீதிம…
-
- 0 replies
- 627 views
-
-
இலங்கைத்தீவை இனி ஒருபோதும் ஒன்றாக்க முடியாது.- சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யுூ ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 25 யுூன் 2006 ஸ ஜ ஞானேஸ்வரன் ஸ இலங்கைத்தீவை இனி ஒருபோதும் ஒன்றாக்க முடியாது. அந்த ஆட்சியமைப்பை மாற்றும்படி அல்லது நெகிழ்ச்சித்தன்மையைக் கைக்கொள்ளும்படி அல்லது பிரித்து வழங்கும்படி யாராவது அவர்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும் - என சிங்கப்பூரின் சிற்பியான லீ குவான் யுூ தெரிவித்துள்ளார். லீ குவான் யுூ பற்றி வெளியிடப்பட்டுள்ள லீ குவான் யுூ என்ற மனிதரும் அவரது எண்ணங்களும் என்ற நு}லிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “லீ குவான் யுூ என்ற மனிதரும் அவரது எண்ணங்களும்” என்பது சிங்கப்புூரில் அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு நு}லின் தலைப்பாகும். "ஸ்றெய்ற் ரைம்ஸ்" சஞ்சிகையைச் சேர்…
-
- 22 replies
- 3.5k views
-
-
முன்னாள் உளவாளி கொலை முயற்சி குறித்து இன்று நள்ளிரவுக்குள் பதிலளிக்க பிரிட்டன் கெடு; வடகொரியா மீதான தடைகளை சில ஆசிய நிறுவனங்கள் மீறியதாக குற்றச்சாட்டு; உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 303 views
-