Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. செர்னோபில் அணு விபத்து: 30 ஆண்டுகள் நிறைவு செர்னோபில் விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் தேவாலயங்களில் மெழுகுவர்த்திகளை ஏற்றி இன்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர் செர்னோபிலில் நடந்த உலகின் மிக மோசமான அணு விபத்தின் 30-வது ஆண்டு நிறைவை குறிக்கும் நிகழ்வுகளை யுக்ரெய்ன் நடத்துகின்றது. 1986-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த அணு ஆலையின் உலை உருகி வெடித்தபோது, ஆலையின் கூரை பிடுங்கி எறியப்பட்டு மண்டலமாகக் கிளம்பிய கதிரியக்க பொருட்கள், யுக்ரெய்னின் எல்லையை கடந்து அண்டையில் உள்ள பெலாரஸிலும், வடக்கு ஐரோப்பா எங்கிலும் பரவியது. அந்த விபத்து நடந்த உடனேயே பணியாளர்களும் தீயணைப்பு வீரர்களுமாக 31 பேர் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால், அடுத்த பல மாதங்களில் அங்கிருந்து வெ…

  2. சீனாவில் நிகழ்ந்த சுரங்க விபத்து: 36 நாட்களுக்குப் பின் 4 பேர் உயிருடன் மீட்பு சீனாவில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் பூமிக்கடியில் 660 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 4 சுரங்க தொழிலாளர்கள் அதிசயமாக வகையில் 36 நாட்களுக்கு பின், உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி பின்ஙி மாகாணத்தில் இயங்கி வந்த சுண்ணாம்பு சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பணியாற்றிய 29 தொழிலாளர்களில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 11 பேர் மீட்கப்பட் டனர். எஞ்சியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது, நான்கு பேர் பூமிக்கு அடியில் 660 அடி ஆழத்தில் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு தேவையான உணவு, உடைகள் மற்றும் விளக்கு…

  3. முட்டாள்தன செல்ஃபியை தவிர்ப்பீர்: சுற்றுலா பயணிகளிடம் குரேஷியா உருக்கம் படம்:ஏபி முட்டாள்தனமான, அபாயகரமான செல்ஃபிகளை எடுக்க வேண்டாம் என சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது குரேஷியா சுற்றுலாத் துறை. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி செல்லும் நாடு குரேஷியா. அதுவும் குரேஷியாவின் மலைப்பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் மலை உச்சி, குன்று போன்ற சவாலான இடங்களில் நின்றுகொண்டு ஃபோட்டோ, செல்ஃபி எடுக்கின்றனர். அவ்வாறாக புகைப்படம் எடுக்கும்போது தவறி விழுந்து இறப்பவர்கள், காயமடைவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு…

  4. கனடாவின் பிரதமராகும் போட்டியில் மார்க் கார்னி வெற்றி! கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராவதற்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கியாளர் மார்க் கார்னி (Mark Carney) வெற்றி பெற்றுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பின்னர் இவர், கனடாவின் புதிய பிரதமராகப் பதவியேற்பார் என்று அதிகாரப்பூர்வ முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (09) தெரிவித்தன. கனடாவில் அரசியல் மற்றும் பொருளாதாரம் ஒரு கொந்தளிப்பான நேரத்தில் கார்னி பொறுப்பேற்பார். தற்சமயம் கனடா நீண்டகால நட்பு நாடான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் அமெரிக்காவுடன் வர்த்தகப் போரின் மத்தியில் உள்ளது மற்றும் விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும். 59 வயதான கார்னி, முன்னாள் நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்டை தோற்கடிக்க 86% வாக்குகளைப் பெற்றார், இத…

  5. இந்தியா பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் சேர்க்கப்படும் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்தில் குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் சிறிய படகுகள் மூலமாகவும், வேறு வழிகள் மூலமாகவும் வரும் நிலையில், அடைக்கலம் கேட்டால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவர்கள் அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் செய்ய முடியாது, திருப்பி அனுப்பப்படுவார்கள். இந்தியாவுடன் ஜார்ஜியா நாட்டையும் பட்டியலில் சேர்க்க இருக்கிறது. “சட்டவிரோாத குடியேற்றம் சட்டம் 2023” இன் படி இங்கிலாந்து நாட்டிற்குள் படகுகள் வருவதை நிறுத்த திட்டமிட்டுள்ளது. சமீப காலமாக பல்வேறு நாடுகளில் இரு…

  6. துருக்கியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் நீக்கம் கடந்தாண்டு துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடந்து ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்ட சமீபத்திய களையெடுப்பில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடந்து ஆறு மாதங்கள் ஆகியுள்ளது காவல்துறையை சேர்ந்த உறுப்பினர்கள், சட்டத்துறை, சுகாதார அமைச்சகம் மற்றும் கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் என இந்த களையெடுப்பு பட்டியலில் அடங்குவார்கள். ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இ…

  7. தீபா­வ­ளியை முன்­னிட்டு 42 இந்­திய மீன­வர்­க­ளுக்கு விடு­தலை.! தீபா­வ­ளியை முன்­னிட்டு கைது செய்­யப்­பட்ட 42 இந்­திய மீன­வர்­களை இலங்கை அரசு விடு­விக்­கின்­றது. இந்­தியா-, இலங்கை ஆகிய இரு நாடு­க­ளுக்­கி­டையே நடை­பெற்ற சுமு­க­மான பேச்சு வார்த்­தையின் அடிப்­ப­டையில் இந்த விடு­தலை நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்­களில் இரா­மேஸ்­வரம், புதுக்­கோட்டை உள்­ளிட்ட பல பிர­தே­சங்­க­ளைச்­சேர்ந்த மீன­வர்­களை அத்துமீறி இலங்கை கடற்­ப­ரப்பில் மீன் பிடித்­த­தாக இலங்கை கடற்­ப­டை­யினர் கைதுசெய்­தனர். அவ்­வாறு கைது செய்­யப்­பட்ட மீன­வர்­கள் இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லுள்ள நல்லுறவை முன்னிட்டு எதிர்வரும் தீபா வளிக்கு முன்பத…

  8. டொமினிகன் குடியரசின்... சுற்றுச்சூழல் - இயற்கை வளத்துறை அமைச்சர், நெருங்கிய நண்பரால் சுட்டுக்கொலை! டொமினிகன் குடியரசின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர், நெருங்கிய நண்பரால் அவரது அலுவலகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 55 வயதான ஆர்லாண்டோ ஜோர்ஜ் மேரா, தாக்குதல் நடந்த நேரத்தில் ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். தாக்கியவரை மிகுவல் குரூஸ் என ஜனாதிபதியின் பேச்சாளர் அடையாளம் காட்டினார், அவரை அமைச்சரின் பால்ய நண்பர் என அவர் வர்ணித்தார். ஆர்லாண்டோ ஜோர்ஜ் மேரா மீது ஆறு முறை சுடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். தாக்குதல் நடத்தியவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான நோக…

  9. உக்ரைன் நாடாளுமன்றத்தில்... உரையாற்றும், பிரதமர் பொரிஸ்! உக்ரைன் நாடாளுமன்றத்தில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றவுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்ததற்கு பிறகு உக்ரைன் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் உலகத் தலைவர் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆவார். பதிவுசெய்யப்பட்ட உரையில், கொடுங்கோன்மைக்கு எதிரான உக்ரைனின் எதிர்ப்பைப் பாராட்டி, ரஷ்யாவிற்கு எதிரான நாட்டின் தற்போதைய பாதுகாப்பிற்கு ஆதரவாக 300 மில்லியன் பவுண்டுகள் இராணுவ உதவியை பிரதமர் அறிவிப்பார். மேலும், பிரதமர் உக்ரைனின் சிறந்த மணிநேரத்தை பாராட்டுவார் என்றும், தங்கள் நண்பர்களிடையே இருப்பதில் பிரித்தானியா பெருமிதம் கொள்கிறது என்றும் வலியுறுத்துவா…

  10. பண்டைய கால ஏரிப்படுகையின் மீது அமைந்துள்ளது காத்மாண்டு. | படம்: ராய்ட்டர்ஸ். உலகின் பிரதான பூகம்ப பகுதியாகியுள்ள இமயமலைப் பகுதியில் அடுத்த பூகம்பம் தற்போது நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்ப மையத்திலிருந்து மேற்காக ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த நிலநடுக்க ஆய்வாளர் தெரிவித்துள்ளார். தேசிய புவி-பௌதிக ஆய்வுக் கழகத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர். ஆர்.கே.சத்தா இது பற்றி கூறும் போது, “எதிர்காலத்தில் இமாலயத்தில் பூகம்பம் ஏற்பட்ட்கால் அது ஏப்ரல் 25-ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்ப மையத்துக்கு மேற்காக ஏற்பட வாய்ப்புள்ளது.” என்று கூறுகிறார். எப்படி கூற முடிகிறது? ஏப்ரல் 25-ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவு பூகம்பம் ஒரே திசை பிளவினால் ஏற்பட்டது. நிலநடுக்க மைய…

    • 0 replies
    • 263 views
  11. ஜெட் ஏர்வேஸுக்கும், தாவூத் இப்ராஹிமுக்கும் தொடர்பா? - புலனாய்வுப் பத்திரிகையாளரின் தகவல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சார்பில், அதன் தலைவர் நரேஷ் கோயல்,பத்திரிக்கையாளர் ஒருவருக்கு எதிராக ஆயிரம் கோடி ருபாய் நஷ்டஈடுகேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்குக்கு ஆளாகியுள்ள பத்திரிகையாளரின் பெயர் ஜோஸி ஜோசப். புலனாய்வு பத்திரிகையாளரான இவர், "A feast of vultures" என்ற பெயரில் ஒரு புத்தகத்தை அண்மையில் வெளியிட்டார். அதில், இந்தியாவில் பெருநிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இடையே நடக்கும் மறைமுகப் பேரங்கள் குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்து எழுதி இருந்தார். அந்த புத்தகத்தின் ஒரு பகுதியில், நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கும், ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவ…

  12. போயிங் விமான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒன்றரை லட்சம் டொலர் இழப்பீடு! கடந்த காலங்களில் போயிங் 737 மெக்ஸ் விமானங்களால் நேர்ந்த உயிரிழப்புகளுக்கு இழப்பீடுகளை வழங்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி இரண்டு வெவ்வேறு விமான விபத்துக்களின் போது உயிரிழந்த 346 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சத்து 44 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்க தயாராக இருப்பதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் தயாரிப்பில் உருவான ‘‘போயிங் 737 மெக்ஸ்’’ ரக விமானங்கள் 5 மாத இடைவெளியில் எத்தியோப்பியா மற்றும் இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின. இந்தோனேஷியாவில் நேர்ந்த விபத்தில் …

  13. நவ்ரு தடுப்பு நிலையத்தில் 2,000க்கு மேற்பட்ட துன்புறுத்தல்கள் நவ்ருவிலுள்ள அகதிகளுக்கான அவுஸ்திரேலிய தடுப்பு நிலையத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் மற்றும் முயற்சிக்கப்பட்ட தானாக தாக்கிக் கொள்ளுதல் உட்பட 2,000க்கு மேற்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகையொன்று நேற்றுப் புதன்கிழமை (10) தெரிவித்துள்ளது. மேற்கூறப்பட்ட சம்பவங்களில், அரைவாசிக்கும் மேலானவை, சிறுவர்களுடன் தொடர்புடையவை எனக் கூறப்பட்டுள்ளது. கார்டியன் அவுஸ்திரேலியாவால் பிரசுரிக்கப்பட்டுள்ள கசிந்த ஆவணங்களின் மூலம், அவுஸ்திரேலியாவினால், அயலிலுள்ள தென் பசுபிக் தீவுகளில் நடாத்தப்படும் இரண்டு அகதிகள் தடுப்பு நிலையங்களில் ஒன்றான நவ்ருவில் மேற்கொள்ளப்…

  14. பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 07/06/17 இரான் தலைநகரில் நடந்த இரண்டு தாக்குதல்களில் 12 பேர் பலியானது குறித்த கூடுதல் விவரங்கள்; கட்டார் -- சவுதி மோதலில் அமெரிக்க நிலைப்பாட்டின் பின்னணி பற்றிய அலசல்; மற்றும் இலங்கையில் முஸ்லிம் சிறுமிகளுக்கு நடக்கும் கட்டாய திருமணங்கள் தொடர்பான பிபிசியின் புலனாய்வு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  15. ட்ரம்புடனான சந்திப்பு – 25 ஆம் திகதி வியட்நாமிற்கு கிம் ஜோங் உன் விஜயம்! வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் எதிர்வரும் 25ஆம் திகதி வியட்நாமில் தரையிறங்குவார் என ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இரண்டாம் உச்சநிலை சந்திப்பை நடத்தவே அவர் வியட்நாம் செல்லவிருக்கின்றார். இரு நாட்டுத் தலைவர்களும் பெப்ரவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் வியட்நாமில் சந்தித்து பேசவுள்ளனர். இரு தலைவர்களுக்கும் இடையில் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் வரலாற்று முதல் சந்திப்பு நடைபெற்றது. இந்நிலையில் வட கொரியத் தலைவர் கிம், ஹனொய்யில் தரையிறங்கியவுடன், வியட்நாமிய அதிகாரிகளைச் சந்திப்பார் என நம்பப்படுகிறது. அதன்பின்னர் அவர் வியட்நாமிய …

  16. அணுகுண்டு ஏவுகணையில் மேம்பாடு ; வட கொரிய அதிபரின் சர்ச்சை புத்தாண்டு உரை அணுகுண்டுகளை தாங்கிச்செல்லும் திறன் படைத்த தொலைதூர ஏவுகணைகளை சோதிக்கும் திறனை வட கொரியா நெருங்கிவிட்டதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன் தெரிவித்துள்ளார். வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் நாட்டு மக்கள்முன் தொலைக்காட்சியில் ஆற்றிய புத்தாண்டு உரை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் மேம்பாடு இறுதி கட்டத்தில் இருப்பதாக தனது புத்தாண்டு உரையின் போது கிம் குறிப்பிட்டார். கடந்தாண்டு வட கொரியா மேற்கொண்ட ஒரு மிகப்பெரிய அணு ஆயுத பரிசோதனை உள்பட மொத்தம் இரு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. அணு ஆயுதங்களில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை வட கொரியா அடைந்துவிட்டதால் அத…

  17. ஆட்சியமைத்ததும் இலங்கை தமிழர்,தமிழக மீனவர் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை! – ராஜ்நாத்சிங் உறுதி. [Thursday, 2014-03-20 19:42:31] நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், இலங்கை தமிழர் பிரச்சினைக்கும், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும் என பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ., தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பை, கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் இன்று சென்னையில் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: தென்னிந்தியாவில் பல கட்சிகள் தேசிய ஜனநாயக முன்னணியில் சேர ஆர்வம் காட்டின. தமிழகத்தை பொறுத்த வரையில், கூட்டணி உருவாவதில் தமிழருவி மணியன் முக்கிய பங்காற்றினார். தற்போது பல்வேறு கட்சிகள் பா.ஜ.,வுடன் இணைந்துள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி…

  18. சர்வதேச கடல் எல்லை விதிமுறைகளை மீறி மீன்பிடித்த குற்றத்துக்காக, 86 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு முகமை கைது செய்தது. இவர்கள் கராச்சியில் கடந்த ஓராண்டாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களை தற்போது விடுதலை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்படும் 86 இந்திய மீனவர்களும் நாளை வாகா எல்லைக்குள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு ஓரிரு நாட்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.இது குறித்து கராச்சி போலீஸ் அதிகாரி ராஜா மும்தாஜ் கூறுகையில், 86 இந்திய மீனவர்களை இன்று விடுதலை செய்துள்ளோம். மேற்கொண்டு 363 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனர் என்று தெரிவித்தார்.முன்னதாக இம்மாதம் 6-ம் தேதி 86 இந்திய மீனவர்கள் மற்றும் ஒரு கை…

  19. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பிலிப்பைன்ஸ் அதிபர் டுதர்தேவின் அடியாளாக இருந்து, தற்போது நாட்டைவிட்டு வெளியேறிய ஒருவர் கூறும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள். * பெரும் நஷ்டத்தை சந்தித்து கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள டோஷிபா நிறுவனத்தால் அதிலிருந்து மீள முடியுமா? * சூரியமின்சார உற்பத்தியை அதிகரிக்க ஆழ்கடல் கனிமங்களை அகழ்வது அவசியம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்; சுற்றுச்சூழலை சீரழிக்கும் என்கிறார்கள் செயற்பாட்டாளர்கள்; இதில் எது சரி? ஆராய்கிறது பிபிசி.

  20. தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் முதலாவது ஆண்ட நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது இன ஒடுக்கு முறைக்காக பாடுபட்ட நெல்சன் மண்டேலாவை நினைவு கூரும் முகமாக பிரார்த்தனை நிகழ்வுகளும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியொன்றும் நடைபெற்றன. பிரெட்டோரியா நகரில் தேசிய விடுதலை வீரர்களுக்கான சுதந்திர பூங்கா கட்டடத்தில் நெல்சன் மண்டேலாவை நினைவு கூரும் முகமாக விசேட நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அங்கு உரையாற்றிய இனத்துவ தலைவர் ரொன் மார்ட்டின் மண்டேலாவாலேயே 25 வருட ஜனநாயகம் சாத்தியமாகியுள்ளது என்று கூறினார். மேலும் 5 மீற்றர் உயமான நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலைக்கு மலர் வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது. மடிபா (நெல்சன் மண்…

  21. தென்கொரியாவுடன் கூட்டுப்போர் ஒத்திகையை நடத்திய அமெரிக்கா. உலகின் ஆச்சரியமாக விளங்கும் ராஸ் கடல். செயற்கை வெளிச்சத்தால் மனிதர்களும் விலங்குகளும் பாதிக்கப்படுவதாக கவலை கொண்டுள்ள விஞ்ஞானிகள் உள்ளிட்ட உலகச் செய்திகளை பிபிசி தமிழின் இன்றைய சர்வதேச செய்தியறிக்கையில் காணலாம்.

  22. இந்தியாவின் புதுடெல்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை திடீரென்று பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. கணினியில் ஏற்பட்ட மின்கசிவு இந்தத் தீ விபத்துக்கு காரணமென்று சந்தேகிக்கப்படுகின்றது. இந்த தீ விபத்து ஏற்பட்ட வேளையில் பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்தில் இருக்கவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படி அலுவலகத்தின் கீழ்தளத்தில் புகை எழுந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது, அலுவலகத்திலிருந்த ஆவணங்களுக்குச் சேதம் ஏற்படவில்லை என பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/108568-2014-04-29-06-29-14.html

  23. அணு ஆயுத திட்ட பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த அமெரிக்க ஜனாதிபதி உத்தரவு! பணியில் இருந்து நீக்கிய நூற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுதத் திட்டப் பணியாளர்களை, மீண்டும் பணியமர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாகக் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். அந்தவகையில் அரசின் செலவினத்தை குறைக்கும் வகையில் அண்மையில் நூற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுத திட்டப் பணியாளர்களை திடீரென கடந்த வாரம் பணியில் இருந்து நீக்கி ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். இவ்வாறு பணியிலிருந்து நிறுத்தப்பட்டோரில், 30 சதவீதத்திற்கும் அதிகமானோர், டெக்சாஸ் மாகாணத்தின் அமரில்லோ நகருக்கு அருகில் உள்ள,…

  24. மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமசை நியமனம் செய்தது கு‌றி‌த்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் கேள்வி கேட்க முடியாது என்று மத்திய அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. மத்திய அரசின் சார்பில் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி தாக்கல் செய்து‌ள்ள பிரமாண பத்திரத்தில், மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமசை, மத்திய அரசின் அதிக அதிகாரம் கொண்ட 3 பேர் கொண்ட கமிட்டி தேர்ந்தெடுத்து‌ள்ளது எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது. இந்த கமிட்டியில் பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமை‌ச்ச‌ர் ப.சிதம்பரம், எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள் எ‌ன்று‌ம் இதில் சுஷ்மா சுவராஜ் மட்டும் தாமசின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார் எ‌ன்று‌ம் தெ…

    • 0 replies
    • 263 views
  25. டிரம்ப் அதிபராவதற்கு எதிராக அமெரிக்காவில் இரண்டாவது நாளும் போராட்டம் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலுக்கு பிறகு இரண்டாவது இரவிலும் பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. ஆனால், மக்கள் கூட்டம் குறைவாக இருந்துள்ளது. ஒபாமா உருவாக்கி இருக்கும் பலவற்றை மாற்றுவதற்கு டிரம்ப் எண்ணம் லாஸ் ஏஞ்சலஸில் போக்குவரத்தை பாதிக்க செய்து, உடமைகளை சேதப்படுத்திய சிறிய அளவிலான மக்கள் கூட்டத்தை மேயர் எரிக் கிராசியேத்தி கண்டித்திருக்கிறார். ஆனால், ஜனநாயகத்தின் அழகான வெளிப்பாடு என்று அவர் கூறியிருப்பதற்கு பல போராட்டக்காரர்களை அவர் புகழ்திருக்கிறார், முன்னதாக, டிரம்ப் அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.