உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26644 topics in this forum
-
நாளிதழ்களில் இன்று: 'இஸ்ரோவின் ஜிசாட்-6ஏ செயற்கைகோள் இன்னும் செயலிழக்கவில்லை' பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி - ஜிசாட் 6ஏ செயலிழக்கவில்லை படத்தின் காப்புரிமைISRO கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் செயலிழக்கவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ஜிசாட் 6ஏ உடனான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு மட்டுமே இழக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தினத்…
-
- 0 replies
- 254 views
-
-
சென்ற வருட இறுதியில் உலகம் முழுவதும் இடம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டியிருந்ததாக ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் Antonio Guterres குறிப்பிட்டுள்ளார். இவரின் அறிக்கையின்படி இரண்டாம் உலக போருக்கு பின்னர் இதுவரை கண்டிராத அளவுக்கு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதில் அரைவாசிப்பேர் சிறுவர்களாகவும் போரினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். நடைபெறும் போர்களையோ அல்லது போருக்கான காரணிகளையோ சர்வதேச நாடுகளினால் தடுக்க முடியவில்லை. இடப்பெயர்வுகள் வரும் காலங்களில் இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதில் அகதிகளான 11.7 மில்லியன் மக்களில் 53 வீதமானோர் ஆப்கானிஸ்தான், சிரியா, சோமாலி நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். மூலம் : Reuters - https://fr.n…
-
- 0 replies
- 254 views
-
-
சர்ச்சைக்குரிய பொதுஜன வாக்கெடுப்பில் ஞாயிறன்று வாக்களிக்கிறது சுவிஸ் குற்றங்களை மேற்கொண்டதாக உறுதிப்படுத்தும் வெளிநாட்டுப் பிரஜைகளை, சுவிற்ஸர்லாந்திலிருந்து வெளியேற்றும் சர்ச்சைக்குரிய பொதுஜன வாக்கெடுப்பில், சுவிற்ஸர்லாந்துப் பிரஜைகள், ஞாயிற்றுக்கிழமையன்று (28) வாக்களிக்கவுள்ளனர். சுவிஸின் பெரும்பான்மைக் கட்சியான வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட சுவிஸ் மக்கள் கட்சி, சர்ச்சைக்குரிய இந்த வாக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை முழுமூச்சாக மேற்கொண்டிருந்தது. இந்தச் சட்டத்துக்கு ஆதரவு கிடைத்து, அது நிறைவேற்றப்படுமாயின், சிறிய குற்றங்களைக் கூட மேற்கொள்வோர், சுவிஸிலிருந்து வெளியேற்றப்படும் ஆபத்துக் காணப்படுகிறது. அத்தோடு, வெளிநாட்டுப் பிரஜை…
-
- 0 replies
- 254 views
-
-
இந்தியா 1947 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட போது, இடம்பெற்ற வகுப்பு கலவரங்களில் சுமார் ஐந்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இது பெரும்பாலும் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் நடந்தது. ஹைதரபாத் கலவரங்கள் -- வெளிவராத அறிக்கை ஆனால் அதற்கு ஒராண்டுக்கு பிறகு தென் இந்தியாவின் ஹைதராபாத் பகுதியில் இதே போன்று ஏற்பட்ட கலவரங்களும் படுகொலைகளும் வெளி உலகுக்கு தெரியாமல் இன்று வரை ரகசியமாகவே உள்ளது. இது நடந்தது 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில். படுகொலைகள் அந்தக் காலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் தென் இந்தியப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டனர். சிலர் இந்திய இராணுவத்தினரால் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும் அப்போது அரசால் அமைக்கப்பட்ட ஒரு விசாரணை…
-
- 0 replies
- 254 views
-
-
உலகப்பார்வை: போருக்கு பிறகு முதன்முதலாக வியட்நாம் வரும் அமெரிக்க போர்கப்பல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். வியட்நாமில் அமெரிக்க போர் கப்பல் வரலாற்று சிறப்பு நிகழ்வாக, அமெரிக்க போர் கப்பல் ’கார்ல் வின்சன்’ வியட்நாம் வந்தடையவுள்ளது. வியட்நாம் போருக்கு பிறகு முதல்ம…
-
- 0 replies
- 254 views
-
-
டில்லி விமான நிலையில் தரையிறங்க முயன்ற ஓமான் விமானத்தின் டயர் வெடித்ததால், விமானத்தில் இருந்து பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. ஓமான் நாட்டை சேர்ந்த விமானம் டில்லி விமான நிலையத்துக்கு வந்தது. அதில் 120 பேர் பயணித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஓடுபாதையில் தரை இறக்கும் போது விமானத்தின் டயர் பயங்கர சப்தத்துடன் வெடித்தது. சப்தம் கேட்டதும் விமானத்தில் இருந்தவர்கள் அலறி கூச்சல் எழுப்பினர். விமானி சாதுர்யமாக விமானத்தை நிறுத்தியதால் விமானத்தில் இருந்த 120 பயணிகள் உயிர் தப்பினர். அனைவரும் அவசர அவசரமாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். . - See more at: http://www.canadamirror.com/canada/39206.html#sthash.gg6xbzYH.dpuf
-
- 0 replies
- 254 views
-
-
தெளிவான செய்தியை அனுப்ப முயற்சிக்கும் அரபு நாடுகள்; முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையில் டிரம்ப் - மத்திய கிழக்கில் சூழல் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES சௌதி அரேபியாவும் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இரானுடனான மோதல் போக்கை குறைக்க வேண்டும் என விரும்புகின்றன. அமெரிக்கா - இரானுடனான உறவுகளை மேம்படுத்த புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சமாதானப்படுத்தப்படுத்த முடியும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். இரானுடனான சௌதி அரேபியாவின் உறவு பதற்றமாகவே உள்ளது. ஆனால் அரபு நாடுகள், டிரம்ப் தனது இரண்டாவது முறை பதவிக்காலத்தில் இரான் மீது சுமூகமான போக்கை கொண்டிருக்க வேண்டும் என்றும், காஸா மற்றும் லெபனானில் நடந்து வரும்…
-
- 0 replies
- 254 views
- 1 follower
-
-
கிராம மக்களுக்கு இடையில் மோதல் - 85 பேர் பலி மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பிளேட்டு மாகாணத்தில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு கிராமத்தில் கால் நடைகளை மேய்க்கும் நாடோடி பழங்குடியின இனத்தவருக்கும், அந்த பகுதியில் விவசாயம் செய்து வரும் பழங்குடி இனத்தவர்களுக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை திடீர் மோதல் ஏற்பட்டது. அங்குள்ள ஒரு நிலத்தில் கால் நடைகள் மேய்ந்தது. இதனை தட்டிக்கேட்ட உரிமையாளருக்கும் கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி கோஷ்டி மோதலாக வெடித்தது. இரு இனத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு ஒருவருக்கொருவர் கல்லால் சரமாரியாக தாக்கி கொண்டனர். சிலர் துப்பாக்கியை எடுத்து சுடவும் ஆரம்பித்தனர். இந்த மோதலில் துப்பாக்…
-
- 0 replies
- 254 views
-
-
14 FEB, 2025 | 02:31 PM பெருமளவு வெடிபொருட்கள் நிரம்பிய ஆளில்லா விமானமொன்று செர்னோபில் அணுஉலை மீது மோதியுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். செர்னோபில் அணுஉலையின் அழிக்கப்பட்ட நான்காவது உலையை பாதுகாக்கும் பாதுகாப்பு கவசத்தை வெடிமருந்துகள் நிரம்பிய ஆளில்லா விமானம் தாக்கியது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆளில்லா விமானம் தாக்குவதை காண்பிக்கும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். சிதைவுகளையும் வீடியோவில் காணமுடிகின்றது. https://www.virakesari.lk/article/206674
-
- 0 replies
- 254 views
- 1 follower
-
-
டயர் நிக்கோல்ஸ் மரணம்- பொலிஸ் அதிகாரிகள் மூவர் விடுதலை. அமெரிக்காவில் கருப்பினத்தவரான டயர் நிக்கோல்ஸ் (Tyre Nichols) என்பவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு மெம்பிஸ் நகரில் பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய டயர் நிக்கோல்ஸை பொலிஸார் அடித்து துன்புறத்தும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை குறித்த சம்பவதத்தில் படுகாயமடைந்த டயர் நிக்கோல் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தலையில் ஏற்பட்ட பலத்த அடி காரணமாகவே அவர் உயிர் இழந்துள்ளார் என அவரது …
-
- 0 replies
- 254 views
-
-
பிரதமர் பதவியில் இருந்து விலகியதும் பின்வரிசை உறுப்பினராக அமர்வேன் : தெரேசா மே பிரதமர் தெரேசா மே, தான் பதவியில் இருந்து விலகியதும் பின்வரிசை உறுப்பினராக பாராளுமன்றில் அமர்வேன் என இன்று தெரிவித்துள்ளார். ஜூலை மாத இறுதியில் பதவியில் இருந்து விலகியபின் நம்பர் 10 டௌனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்தில் இருந்தும் வெளியேறிவிடுவேன் என்று குறிப்பிட்டார். 2016 ஆம் ஆண்டு டேவிட் கமரன் பிரதமர் பதவியில் இருந்து விலகியதுடன் சிலநாட்களில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் விட்டு விலகினார். ரொனி பிளேயர் பிரதமர் பதவியில் இருந்து விலகிய அதே நாளிலேயே இடைத்தேர்தலையும் அறிவித்தார். 1975 இல் கொன்சர்வேற்றிவ் தலைவர் பதவியை விட்டு விலகிய ரெட் ஹீத் பின்னர் 26 ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் …
-
- 0 replies
- 254 views
-
-
மீண்டும் உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா வான்வழித்தாக்குதல்! உக்ரைன் தலைநகர் கீவ்வில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்ததைத் தொடர்ந்து குறைந்தது மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று (திங்கள்கிழமை) காலை உள்ளூர் நேரப்படி சுமார் 07:00 மணிக்கு வெடிப்புகள் நடந்ததாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றில் ஒன்று நகர மையத்திற்கு அருகில் வெடித்தது. எனினும், இந்த தாக்குதல்களின் போது ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை. தலைநகரில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 19பேர் உயிரிழந்தனர். ரஷ்ய …
-
- 1 reply
- 254 views
- 1 follower
-
-
மற்றுமொரு கோர விமான விபத்து: 12 பேர் உயிரிழப்பு. மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில், (Honduras) 18 சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த சிறிய ரக விமானமொன்று நேற்றைய தினம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை இவ்விபத்தில் ஐந்து பேர் உயிர் தப்பியுள்ளனர் எனவும் ஒருவர் மாயமாகியுள்ளார் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2025/1425697
-
- 0 replies
- 254 views
-
-
இத்தாலிய தீவிலிருந்து 500 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மீட்பு மத்திய தரைக்கடல் வழியாக இத்தாலிக்கு குடியேறியவர்களின் வருகை சமீபத்திய நாட்களில் அதிகரித்துள்ளது. இந்த சனிக்கிழமையன்று மாத்திரம் 539 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்கள் லாம்பேடுசாவுக்கு வருகை வந்துள்ளனர். இத்தாலிய கடலோர காவல் படையினரால் ஒரு மீன்பிடி படகில் நெரிசலான பயணம் கொண்டபோதே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அண்மைக் காலத்தில் இத்தாலியன் தெற்கே உள்ள தீவில் முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரிய தரையிறக்கங்களில் இதுவும் ஒன்றாகும். சனிக்கிழமை லாம்பேடுசா தீவில் தரையிறங்கியவர்கள் லிபியாவிலிருந்து மத்திய தரை கடல் மார்க்கமாக நாட்டை வந்தடைந்துள்ளனர் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இவர்களில்…
-
- 0 replies
- 254 views
-
-
யுக்ரேன் போர்: தந்திரோபாய அணு ஆயுதம் என்றால் என்ன? அதை ரஷ்யா பயன்படுத்துமா? 47 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ரஷ்ய நிலப்பரப்பை பாதுகாப்பதற்காக, தந்திரோபாய அணுக்கரு ஆயுதத்தைப் பயன்படுத்த தாம் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கூறியுள்ளார். இது, யுக்ரேன் மீது சிறியவகை அல்லது "தந்திரோபாய" அணு ஆயுதத்தை அவர் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படி செய்வது, இரண்டாம் உலக போருக்குப் பிறகு நடக்கும் மிக ஆபத்தான போர்ப்பதற்ற அதிகரிப்பாக அமைந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். தந்திரோபாய அணுக்கரு ஆயுதங்கள் என்றால் என்ன? தந…
-
- 1 reply
- 254 views
- 1 follower
-
-
புகலிடக் கோரிக்கையாளர்களை ஆபத்தான வழிகளில் அவுஸ்திரேலியா திருப்பி அனுப்பியுள்ளமை அம்பலமாகியுள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் வெளியிட்ட கருத்து மூலம் இந்த தகவல்கள் அம்பலமாகியுள்ளன. கடந்த ஒராண்டு காலப்பகுதியில் 12 புகலிடக் கோரிக்கையாளர் படகுகளை திருப்பி அனுப்பி வைத்ததாக ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். இதில் நான்கு படகுகள் ஒரேஞ் லைப் போட்ஸ் எனப்படும் ஆபத்தான படகுகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆபத்தான நிலைமைகளில் உயிர் காப்பதற்காக பயன்படுத்தப்படும் அவசர படகுகளைப் பயன்படுத்தி புகலிடக் கோரிக்கையாளர் கடல் வழியாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் படகுகள் இந்தோனேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை, …
-
- 0 replies
- 254 views
-
-
உக்ரைன் நாடாளுமன்றத்தில்... உரையாற்றும், பிரதமர் பொரிஸ்! உக்ரைன் நாடாளுமன்றத்தில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றவுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்ததற்கு பிறகு உக்ரைன் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் உலகத் தலைவர் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆவார். பதிவுசெய்யப்பட்ட உரையில், கொடுங்கோன்மைக்கு எதிரான உக்ரைனின் எதிர்ப்பைப் பாராட்டி, ரஷ்யாவிற்கு எதிரான நாட்டின் தற்போதைய பாதுகாப்பிற்கு ஆதரவாக 300 மில்லியன் பவுண்டுகள் இராணுவ உதவியை பிரதமர் அறிவிப்பார். மேலும், பிரதமர் உக்ரைனின் சிறந்த மணிநேரத்தை பாராட்டுவார் என்றும், தங்கள் நண்பர்களிடையே இருப்பதில் பிரித்தானியா பெருமிதம் கொள்கிறது என்றும் வலியுறுத்துவா…
-
- 1 reply
- 254 views
-
-
ஒமிக்ரோன் எதிரொலி: கடுமையான கொவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தும் பிரான்ஸ்! ஓமிக்ரோன் மாறுபாடு குறித்த கவலைகளுக்கு மத்தியில், கடுமையான கொவிட் கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி முதல், தொலைதூரத்தில் பணிபுரிவது கட்டாயமாக்கப்படும். மேலும், பொதுக் கூட்டங்களில் உள்ளரங்க நிகழ்வுகளுக்கு 2,000பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். சனிக்கிழமையன்று பிரான்ஸ் 100,000க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்ததால் இந்த செய்தி வந்துள்ளது. இதுவே பிரான்ஸில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து நாட்டில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். ஆனால், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன், புத்தாண்டை முன்னிட்டு முடக்கநிலை உத்தரவை கொண்டு …
-
- 0 replies
- 254 views
-
-
சமூக ஊடகங்களில் குரோத உணர்வுப் பிரச்சாரங்களை தடுக்க ஜெர்மன் நடவடிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சமூக ஊடகங்களில் குரோத உணர்வைத் தூண்டக்கூடிய பிரச்சாரங்களை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை ஜெர்மன் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. பொய்யான செய்திகள், சட்டவிரோதமான விடயங்கள் மற்றும் குரோத உணர்வைத் தூண்டும் பிரச்சாரங்கள் என்பனவற்றை தடுக்கும் வகையிலான சட்டங்கள் ஜெர்மனியில் அமுல்படுதுத்தப்பட உள்ளது. பிரசூரமாகும் சட்டவிரோதமான விடயங்களை உரிய நேரத்தில் கண்காணித்து அகற்றாத இணைய தளங்கள் மீது 50 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட உள்ளது. சட்டவிரோதமான விடயங்கள் பிரசூரமாகி அதனை அகற்றுவதற்கு 24 மணித்தியால கால அவகாசமே வழங்கப்பட…
-
- 0 replies
- 254 views
-
-
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக தரப்பில் திடீரென மனுத்தாக்கல் செய்யப்பட்டு தங்களையும் வாதாட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு பல முட்டுக்கட்டைகளைத் தாண்டி இறுதிக் கட்டத்தைத் தாண்டியுள்ளது. இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் சார்பாக திமுக எம்.பி. டி.எம். செல்வகணபதி ஒரு மனுவை பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதில் இந்த வ…
-
- 0 replies
- 254 views
-
-
நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் தேர்வு- 119 இடங்களை கொண்டுள்ள நியூசிலாந்து நாட்டின் பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தலில் எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை என்ற நிலையில், 3 முறை அரசு அமைத்த தேசியக்கட்சி 58 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது. இந்த தேர்தலில், கலாநிதி பரம்ஜீத் பார்மர், பிரியங்கா ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் வெற்றி பெற்று, நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மற்றொரு இந்தியர் கன்வல்ஜீத் சிங் பாக்சி ஆ…
-
- 1 reply
- 254 views
-
-
கனடாவில் இருந்து ISIS இயக்கத்தில் இணைய சிரியா செல்ல முயன்ற 10 வாலிபர்கள் கைது! [Wednesday 2015-05-20 22:00] ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். இயக்கத்தினர் தொடர்ந்து வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த இயக்கத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து வருகிறார்கள். இவர்களை தடுக்கும் நடவடிக்கையில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு உள்ளன. இந்தநிலையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைவதற்காக கனடாவில் உள்ள மான்டிரையல்ஸ் டுருடியு சர்வதேச விமானநிலையத்தில் இருந்து ஈராக் மற்றும் சிரியாவிற்கு செல்ல முயன்ற 10 வாலிபர்களை கனடா போலீசார் அதிரடியாக பிடித்து கைது செய்துள்ளனர். இதுகுறித்து ராயல் கனடா மவுண்டேட் போ…
-
- 0 replies
- 254 views
-
-
அணு ஆயுத திட்ட பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த அமெரிக்க ஜனாதிபதி உத்தரவு! பணியில் இருந்து நீக்கிய நூற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுதத் திட்டப் பணியாளர்களை, மீண்டும் பணியமர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாகக் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். அந்தவகையில் அரசின் செலவினத்தை குறைக்கும் வகையில் அண்மையில் நூற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுத திட்டப் பணியாளர்களை திடீரென கடந்த வாரம் பணியில் இருந்து நீக்கி ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். இவ்வாறு பணியிலிருந்து நிறுத்தப்பட்டோரில், 30 சதவீதத்திற்கும் அதிகமானோர், டெக்சாஸ் மாகாணத்தின் அமரில்லோ நகருக்கு அருகில் உள்ள,…
-
- 1 reply
- 254 views
- 1 follower
-
-
வங்காளதேச அரசு, ஹில்சா மீனின் இனப்பெருக்க காலத்தில் அதனை பாதுகாக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஹில்சா வங்காளதேசதத்தின் தேசிய மீன் என்பதால், இம்முறை 17 போர்க்கப்பல்கள், ட்ரோன்கள், ரோந்து படகுகள், ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பு பயணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 22 நாட்கள் கொண்ட இந்த தடைக்காலம், அக்டோபர் 4 முதல் 25 வரை கடைபிடிக்கப்படுகிறது. வங்காள விரிகுடா மற்றும் பத்மா, மேக்னா மற்றும் ஜமுனா போன்ற முக்கிய நதி அமைப்புகள் உட்பட நியமிக்கப்பட்ட இனப்பெருக்க மண்டலங்களில் உள்ள அனைத்து கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்கும் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை ஹில்சா மேலாண்மை பிரிவின் துணை இயக்குநர் ஃபிரோஸ் அஹமது, "ஹில்சா மீனின் பாதுகாப்புக்காக நாங்கள் விரிவான கண்காணிப்ப…
-
- 1 reply
- 254 views
-
-
உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி ஹரிஷ் ரவத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேர், எதிர்க்கட்சியான பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்ததால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் தங்களுக்கு போதிய பெரும்பான்மை இருப்பதாக கூறும் பா.ஜ.க. அங்கு ஆட்சியமைக்க வியூகம் வகுத்து வருகிறது.இதற்கிடையில், வரும் 28-ம் தேதி சட்டசபையில் ஆளும்கட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் அம்மாநில கவர்னர் கிருஷ்ணகாந்த் பால் கேட்டுக் கொண்டுள்ளார். பா.ஜ.க.வின் இந்த மனப்பான்மைக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்…
-
- 0 replies
- 254 views
-