உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26602 topics in this forum
-
தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான எழுச்சி தினம் தினம் புதிய பரபரப்புகளை உருவாக்கி வருகின்றது. மதிமுகவின் தலைவர் வைகோ, பொருளாளர் கண்ணப்பன், திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் போன்றோர் "இந்திய இறையாண்மைக்கு" எதிராக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலை உருவாகின்ற ஒவ்வொரு முறையும் அதற்கு எதிரான சக்திகளும் சுறுசுறுப்பாக செயற்படத் தொடங்கும். ராஜீவ்காந்தி கொலையில் இருந்து இந்திய ஒருமைப்பாடு வரை பேசி மக்களுக்கு பூச்சாண்டி காட்ட முற்படும். இம்முறையும் அப்படியே நடக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு உயர்ந்த ஒரு இடம் இருக்க…
-
- 0 replies
- 801 views
-
-
இரு அண்ணன் தம்பிகளுக்கு ஒரே ஒரு மனைவி http://edition.cnn.com/2008/WORLD/asiapcf/...tion/index.html
-
- 1 reply
- 2.2k views
-
-
பிரிவினைவாதத்தைத் தூண்டும்படி நாங்கள் பேசவில்லை. இலங்கையில் செத்துக் கொண்டிருக்கும் எங்கள் உறவுகளுக்காக மனிதாபிமான அடிப்படையில்தான் குரல் கொடுத்தோம். அது தவறென்றால், அந்தத் தவறை மீண்டும் மீண்டும் செய்வோம் என்று இயக்குனர் அமீர் கூறினார். ராமேஸ்வரத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக திரையுலகம் நடத்திய பேரணி மற்றும் மாநாட்டில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் விதத்தில் பேசியதாக இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் மீது வழக்குப் பதிவு செய்து நேற்றும் மாலை கைது செய்தது போலீஸ். கைதாகி சிறைக்குச் செல்லும்முன் நிருபர்களிடம் அமீர் கூறியதாவது: இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையிலோ, பிரிவினையைத் தூண்டும் விதத்திலோ நாங்கள் எதுவும் பேசவில்லை. அது எங்களுக்குத் தேவையில்…
-
- 1 reply
- 931 views
-
-
குமுதத்தின் கேலிச்சித்திரமும் தலையங்கமும், சில கட்டுரைகளும்.. அபூர்வமாக எப்போதாவது தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளிடையே எழும் ஒற்றுமையான குரல் இந்த முறை - இலங்கைத் தமிழர்களுக்காக எழுந்திருக்கிறது. சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் - தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதற்கு இருவாரக் கெடு விதிக்கப்பட்டிருப்பது & உறுதியான தீர்மானமே. ஈழப்பிரச்னையில் இதுவரை ஒதுங்கி வந்த அ.தி.மு.க.வும் கரிசனத்துடன் குரல் எழுப்பியிருக்கிறது. தமிழக காங்கிரஸும் இந்த அலையிலிருந்து தனித்து ஒதுங்கியிருக்க முடியவில்லை. திரைப்படக் கலைஞர்களும் ஒன்று சேர்ந்து ராமேஸ்வரத்தில் கண்டனப் பேரணியும் பொதுக்கூட்டமும் நடத்தித் தங்கள் எதிர்ப்பைத் தெரி…
-
- 4 replies
- 1.9k views
-
-
சினிமா டைரக்டர்கள் சீமான், அமீர் கைது செய்யப்பட்டதற்கு உதவி இயக் குனர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வடபழனி ஏ.வி.எம். ஸ்டூடியோ எதிரில் உள்ள காமராஜர் சிலை முன்பு இன்று காலை அவர்கள் திரண்டனர். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். சீமான், அமீர் கைதை எதிர்த்தும் கோஷம் எழுப்பினார்கள். மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சே கொடும்பாவியை எரிக்க முயன்றனர். போலீசார் விரைந்து வந்து கொடும்பாவியை எரிக்க விடாமல் தடுத்தனர். பின்னர் உதவி இயக்குனர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். டைக்டர்கள் சுப்பிரமணிய சிவா, ராம், ஜெகன், வேல் முருகன் உதவி இயக்குனர்கள் தாயுமானவன், மித்ரன் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அன…
-
- 0 replies
- 692 views
-
-
ம.தி.மு.க. சார்பில் "ஈழத்தில் நடப்பது என்ன?'' என்ற தலைப்பில், கடந்த 21-ந்தேதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் விளக்க கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, அவைத்தலைவர் கண்ணப் பன் எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினர். வைகோ பேசும் போது, `நாங்களும் எங்கள் தமிழர்களுக்கு ஆயுதம் கொடுப்போம். ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் வைகோ முதல் ஆளாக ஆயுதம் ஏந்தி செல் வான்' (கூட்டத்தினரை பார்த்தும் நீங்கள் ஆயுதம் ஏந்த தயாரா என்று வைகோ கேட்டார். அதற்கு கூட்டத்தினர் தயார் என்று குரல் கொடுத்தனர்) ஆயுதம் ஏந்தி போராட முடியும் என மத்திய அரசை எச்சரிக்கிறேன் என பேசினார். கண்ணப்பன் பேசும் போது, `தமிழ்நாடு தனி நாடு' என்று சொல்லக்கூடிய காலம் விரைவில் வரும் என்று பேசினா…
-
- 0 replies
- 883 views
-
-
அமெரிக்கா திவாலாகிவருகிறது என்பதை ஒரு தற்காலிக பின்னடைவாக மட்டுமே பலரும் எழுதுகின்றனர். உண்மையான பிரச்சினை என்ன, இது உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்துவது ஏன், இதனால் எத்தனை கோடி மக்கள் வாழ்விழக்கப்போகிறார்கள் என்பதையெல்லாம் ஒருங்கிணைந்த முறையில் இக்கட்டுரை விளக்குகிறது. சூதாட்ட பொருளாதரமும் அது ஏற்படுத்தும் தவிர்க்க இயலாத அழிவும்தான் இன்றைய முதலாளித்துவப் பொருளாதாரம். அதை ஆய்ந்து சொல்கிறது இந்தக் கட்டுரை. தமிழிலும், ஆங்கிலத்திலும் இத்தகைய கண்ணோட்டத்தோடு எழுதப்படும் கட்டுரைகள் அரிது என்பதால் நண்பர்கள் இக்கட்டுரையை பலருக்கும் அறிமுகப்படுத்துமாறும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறும் கோருகிறோம். தமிலிஷ் இணையத்தில் இக்கட்டுரைக்கு நீங்கள் வாக்களிப்பதன் மூலம் பலருக்கும் இக்க…
-
- 20 replies
- 3.7k views
-
-
சுவிஸில் 70,000 பேர் இணையதள பாவனைக்கு அடிமையாகியுள்ளனர் சுவிட்சர்லாந்தில் சுமார் 79,000 பேர் இணையதள பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகத் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், 110,000 இணைய பாவனைக்கு அடிமையாகக் கூடிய அபாயம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வேலை நேரங்களைத் தவிர வாரத்திற்கு 35 மணித்தியாலங்கள் இணையத்தைப் பயன்படுத்துவோர் இணையத தளத்திற்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இணையத்தை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இணைய அரட்டை மற்றும் இணைய விளையாட்டுக்கள் போன்றவைகளுக்கு அதிக அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 4 replies
- 1.1k views
-
-
சென்னை: இலங்கை அரசுக்கு ஆயுதம், ரேடார், ராணுவப் பயிற்சி உள்ளிட்டவற்றை வழங்கி, அங்கு தமிழர்களைக் கொல்லும் இலங்கையின் இனப்படுகொலையில் இந்திய அரசும் முக்கியப் பங்குதாரராக செயல்பட்டு வருகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இலங்கை இனப் பிரச்சினையில் ஜெயலலிதா இதுவரை தமிழர்களுக்கு சாதகமாக பகிரங்கமாக பேசியதில்லை. ஆனால் முதல் முறையாக இலங்கைத் தமிழர்களைக் கொல்ல இலங்கை அரசுக்கு ஆயுதப் பயிற்சி, ரேடார் கருவிகள், ஆயுதங்களை இந்திய அரசு வழங்கி, அங்கு இனப்படுகொலையை இலங்கை அரசுடன் சேர்ந்து நடத்தி வருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இலங்கை அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து சமீபத்தில் சிபிஐ நடத்திய மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் க…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழர்களுக்கு மட்டும் ஒரு நியாயமா?-பால் தாக்கரே மும்பை: தமிழர்களின் நலன் காக்க தமிழக அரசியல் கட்சிகள் உணர்வோடு செயல்படுவதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் நாங்கள் மராத்தியர் நலன் காக்க தீவிரம் காட்டினால் எங்கள் மீது குறிவைத்து குற்றம் சாட்டுகின்றனர் என்று சிவசேனை தலைவர் பால்தாக்கரே கூறியுள்ளார். சிவசேனை கட்சி பத்திரிகையான சாம்னாவில் அவர் எழுதியுள்ள தலையங்கத்தில், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களின் நலனை காக்க வேண்டும் என்பதில் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் உணர்வோடு நடந்து கொள்கின்றன. இலங்கை தமிழர் பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற்று விடுவோம் என்று திமுக அரசு மிரட்டல் விடுத்துள்…
-
- 0 replies
- 917 views
-
-
மிக அதிகபட்ச ஊடக சுதந்திரத்தைத் தருவது, பொருளாதார சுபிட்சம் அல்ல , அமைதிதான் என்கிறது, எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பு. போரில் ஈடுபட்டிருக்காத நாடாளுமன்ற ஜனநாயகங்கள் ஊடக சுதந்திரம் என்ற இந்த விஷயத்தில் நன்றாக செயல்படுகின்றன; ஆனால், அமெரிக்கா இஸ்ரேல் உள்ளிட்ட பிற நாடுகள் பத்திரிக்கை சுதந்திரத்தைக் குறைக்க, கட்டுப்படுத்த உதவுகின்றன. இந்த அமைப்பு ஊடகச் சுதந்திரம் உள்ள நாடுகள் என்று தயாரித்த பட்டியலில், அமெரிக்கா 36வது இடத்தையே பிடிக்க முடிந்திருக்கிறது. முதல் சுமார் 20 இடங்களில் இடம்பிடித்திருப்பவை, ஐரோப்பிய நாடுகள், அதிலும் குறிப்பாக ஐஸ்லாந்து, நோர்வே மற்றும் பின்லாந்து போன்ற நோர்டிக் நாடுகள்தாம். எஸ்தோனியா, லாட்வியா, ஸ்லோவேகியா போன்ற புதிதாக ஜ…
-
- 2 replies
- 1.1k views
-
-
முதல்- அமைச்சர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதம் வருமாறு:- இலங்கைத் தமிழனுக்காக ஒரு துளி கண்ணீர் வடிக்கவும், மெல்ல உதடசைத்து ஆறுதல் கூறவும் வழியற்றுப்போய் விழியற்ற குருடர்களாய் இங்குள்ள தமிழினம் தவித்து கொண்டிருக்கிறது. எழுபது ஆண்டுக்காலமாக இலங்கை வாழ் ஈழத்தமிழர்கள், உரிமையற்றவர்களாக, உடைமைகளைப் பறி கொடுப்பவர்களாக, ஏன்; உயிரையும் கூட அர்ப்பணிப்பவர்களாக; இன்னும் சொல்லப்போனால் கற்பெனும்மான உணர்வையும் கொள்ளை கொடுப்பவர்களாக; கணவன் முன்னிலையில் அவன் கட்டிய மனைவி - கற்பிழந்தாள் - அண்ணனோ தம்பியோ கண்ணெதிரே பார்த்துக் கொண்டு அலற அலற; அவர்களின் அருமைச் சகோதரி; அக்காளோ, தங்கையோ அம்மாவோ; அதனினும் கொடுமையாக முதிர்ந்த வயதுத் தாய்க்குலமும் சிங்கள முள்ளம்பன்றிகளின் மு…
-
- 5 replies
- 1.1k views
-
-
திருவாரூர்: இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழக அரசு பதவி விலக முன் வர வேண்டும் என்று மதுரை ஆதினம் கூறியுள்ளார். திருவாரூர் வந்த மதுரை ஆதினம் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுத்துள்ள நெருக்கடி சரியான முடிவாகும். 28ம் தேதி மத்திய அரசு சரியான முடிவு எடுக்காவிட்டால் தமிழக அரசு பதவி விலக வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சனையில் ஜாதி, மதம், அரசியல் பாராமல் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து போராட முன் வரவேண்டும். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவைப்படும் உணவு, உடை, மருந்துகள் அனுப்ப மத்திய அரசு விதிகளை தளர்த்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ்பாணத்தில், திரிகோணமலையில், திருச்சேரத்தில்…
-
- 0 replies
- 768 views
-
-
புதுடெல்லி, அக். 21- இலங்கை தமிழர் பிரச் சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் தி.மு.க. அமளியில் ஈடுபட்டது. பாராளுமன்றம் கூடிய தும் இன்று தி.மு.க. எம்.பி.க்கள் இலங்கை தமிழர் பிரச் சினையை அவையில் கிளப்பினார்கள். கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு இந்த பிரச்சினைப்பற்றி விவாதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். இதே போல கம்ïனிஸ்டு உறுப்பினர்கள் அணு ஒப்பந் தம் பிரச்சினைப் பற்றி விவா திக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர். இதே போல வேறு சில கட்சிகளும் பிரச்சினைகளை கிளப்பி வாக்குவாதம் செய்தனர். அனைத்து உறுப்பினர்களையும் சபா நாயகர் சோம்நாத் சட் டர்ஜி அமைதிப்படுத்த முயன்றார். அதை யாரும் கேட்கவில்லை. இதனால் கோபம் அடைந்த சபாநாயகர் "5 கட்சிகள் கேள்வி நேரத்தை ஒத்தி வை…
-
- 0 replies
- 782 views
-
-
தூத்துக்குடி: தூத்துக்குடியில் காகங்களை வேட்டையாடி, காடை பிரியாணி என்ற பெயரில் காக்கா பிரியாணி போடும் ஹோட்டல்களுக்கு சப்ளை செய்த அக்கா தம்பியை போலீஸார் கைது செய்தனர். தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரை பகுதியில் சிலர் காகங்களை வேட்டையாடி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அப்பகுதியை கண்காணித்தனர். இந்நிலையில் தெர்மல் நகர் கடற்கரைக்கு வந்த ஒரு பெண்ணும் வாலிபரும் ஏதையோ காகங்களுக்கு தூவினர். நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் அவற்றை கொத்தித் தின்றன. சிறிது நேரத்தில் அங்கேயே சுருண்டு விழுந்தன. மயங்கிய காகங்களை எடுத்து சாக்கு மூட்டையில் வைத்து கட்டினர். இதை பார்த்த போலீஸார் அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரித்த்னர். அவர்கள் இருவரும் ராமநாதப…
-
- 13 replies
- 4.9k views
-
-
ஆக்ரா: 150 அடி ஆழமுடைய போர்வெல் குழியில் விழுந்த இரண்டு வயது சோனு என்கிற சிறுவனை பத்திரமாக மீட்க கடந்த 3 நாட்களாக தீவிர முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. ஆக்ரா அருகே உள்ள ஷாம்ஷாபாத் என்ற இடத்தைச் சேர்ந்த சிறுவன் சோனு, வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தனது வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது, 150 அடி ஆழ ஆழ்குழாய் குழியில் விழுந்து விட்டான். இதையடுத்து உடனடியாக ராணுவம் வரவழைக்கப்பட்டது. சிறுவன் விழுந்துள்ள குழிக்கு அருகே மிகப் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. சிறுவனுக்கு மேலிருந்தபடி ஆக்சிஜன் அனுப்பி வருகின்றனர். டாக்டர்கள் குழு அங்கேயே முகாமிட்டு சிறுவனின் உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர். மேலிருந்தபடியே உணவும் அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் வி…
-
- 11 replies
- 2.7k views
-
-
பிரான்ஸ் அதிபரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருட்டு இணையதளங்களில் அத்துமீறும் நபர்கள் பிரான்ஸ் அதிபர் நிகோலா சர்கோசி அவர்களின் வங்கி கணக்கிற்குள் உட்புகுந்து சிறிது பணத்தை திருடி விட்டதாக பிரான்ஸ் அரசாங்கம் கூறியுள்ளது. இதன் மூலம் இணையம் மூலம் வங்கி பரிமாற்றம் நடைபெறுவதில் இன்னும் ஒட்டைகள் இருப்பது உறுதியாகிறது என அரசாங்கத்தின் சார்பில் பேசவல்லர் பிரான்ஸ் வானொலி ஒன்றில் கூறியுள்ளார். பணம் திருடப்பட்டது குறித்து கடந்த மாதம் நிகோலா சர்கோசி புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. எனினும் எவ்வளவு பணம் திருடப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை. தகவல் பிபிசி தமிழோசை
-
- 4 replies
- 1.2k views
-
-
பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆரியமா? - பகுதி 1 வாலாசா வல்லவன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், கி.பி.1862க்கும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் கி.பி. 1921க்கும், இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் சி.சுப்பிரமணிய பாரதி. இவர் வாழ்ந்த காலம் தீவிரமான இந்திய சுதந்திரப் போராட்டக் காலம். இக்கால கட்டத்தில் இவருடைய எழுத்தும் நடையும் சுதந்திரம், மொழி, சமூகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தன. அதனால் இவரை ‘மாபெருங்கவிஞர்’ என்றும் ‘தேசியக் கவிஞர்’ என்றும் மக்கள் அழைக்கலாயினர். இவர் எழுதிய மொழி மற்றும் சமூகத் தொடர்பான கவிதைகளிலும், கட்டுரைகளிலும், கதைகளிலும் தமிழுணர்வை விட ஆரிய உணர்வே மேலோங்கியிருப்பதை அறிய முடிகிறது. ஆகவே “பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆ…
-
- 71 replies
- 25.2k views
-
-
சென்னை: இலங்கை விவகாரத்தில் கனிமொழியைத் தொடர்ந்து இன்று திமுக ராஜ்யசபா எம்பிக்களான திருச்சி சிவா, ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து முதல்வர் கருணாநிதியிடம் கடிதங்கள் அளித்தனர். இலங்கை தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்துவதை மத்திய அரசு 2 வாரத்துக்குள் தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கைக்கு ஆயுத உதவியை உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழக எம்பிக்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்வர் என முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கெடுவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கெடு வரும் 29ம் தேதியுடன் முடிகிறது. இந் நிலையில் 29ம் தேதியிட்டு தனது ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் வழங்கினார் கனிமொழி. இந் ந…
-
- 0 replies
- 783 views
-
-
ஓஸ்லோ: இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த இருவருக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருக்கும் இந்த விருது கூட்டாக கிடைத்துள்ளது. மூலக்கூறு இயற்பியல் பிரிவில் இந்த விருது கிடைத்துள்ளது. மூலக்கூறு இயற்பியலில், அடிப்படை மூலக்கூறுகள் குறித்த ஆய்வுக்காக ஜப்பானைச் சேர்ந்த மகோடா கோபயாஷி, தோஷிடே மஸ்கவா, அமெரிக்காவைச் சேர்ந்த யோசிரோ நம்பு ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கும் விருது கிடைத்துள்ளது. பிரபஞ்சம் உருவானது தொடர்பான கருத்துக்களில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக இந்த மூவரும் தங்களது ஆய்வில் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான பல விரிவான விளக்கங்களையும் அதில் அளித்துள்ளனர். இதை அடிப்படையாக வைத்துத்தான் ஜெனீவா அருகே பிக் பாங்க் குறித்து, புரோட்ட…
-
- 17 replies
- 2.1k views
-
-
அமெரிக்க தேர்தலின் இறுதி விவாதம் (ஒபாமா vs மெக்கேய்ன்)
-
- 0 replies
- 727 views
-
-
சினிமாவை வாழவைக்கும் ஈழத் தமிழரின் பணம்! - பாரதிராஜா சென்னை: தமிழ் சினிமாவை வாழவைக்க ஈழத் தமிழன் கஷ்டப்பட்டு பணம் தருகிறான். அவனது தயர் துடைக்க குரல் கொடுக்க ராமேஸ்வரம் வரைக்கும் நடிகர்-நடிகைகளால் வர முடியாதா? என உணர்ச்சிவசப்பட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா. ராமேஸ்வரத்தில் திரையுலகம் சார்பில் நடைபெற இருக்கும் போராட்டத்தையொட்டி, திரையுலக தமிழ் இன உணர்வு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், டைரக்டர் பாரதிராஜா, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஆகிய மூவரும் தலைவர்களாக இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு சார்பில் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தரையிலும், கடலிலும், மலை…
-
- 0 replies
- 664 views
-
-
வீரகேசரி நாளேடு - 10 நிமிடத்தில் 45 "பீஸா' துண்டுகளை அநாயசமாக விழுங்கி உலக பீஸா உண்ணும் போட்டியில் அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த ஜோய் செஸ்ட்நட் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளார். மேற்படி உலகப் பிரபல பீஸா உண்ணும் போட்டியானது ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க்கிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்றது. கலிபோர்னிய மாநிலத்திலுள்ள சான் ஜோஸ் எனும் இடத்தைச் சேர்ந்த ஜோய் செஸ்ட்நட் (24 வயது) மேற்படி போட்டியில் கலந்துகொள்வதற்கு தயாராக ஒரு நாளுக்கும் அதிகமான காலம் எதுவித உணவையும் உட்கொள்ளாமல் பட்டினி கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விழுங்குவதற்கு இலகுவாக பீஸா துண்டுகளை மடித்து அவர் உண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற "ஹொட்டோக்' உணவு அருந்தும் போட்…
-
- 1 reply
- 768 views
-
-
மகாநதிக்கும் மதத்தீக்கும் நடுவே... மன்னை சமஸ் ஒருபக்கம் மகாநதியின் வெள்ளம்; மறுபக்கம் மதத்தீ இதைவிடவும் மோசமான சூழல் ஒரிசா மக்களுக்கு வரப்போவதில்லை வரவும் கூடாது! கந்தமால் மாவட்டத்தில் ஆகஸ்ட் 23 ஆம் திகதி விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் லட்சுமணாந்த சரஸ்வதி கொல்லப்பட்ட மறுநாள் மதக்கலவரம் வெடித்தது. இந்த 42 நாள்களில் அங்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தம் சொந்த மண்ணிலேயே அகதிகளாக இருக்கின்றனர். வீடுகள் சூறையாடப்பட்டு கொளுத்தப்படுகின்றன. மக்கள் ஊரைவிட்டு துரத்தப்படுகின்றனர். வெறித்தனமாக தாக்கப்படுகின்றனர். பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகின
-
- 0 replies
- 614 views
-
-
வட கொரியா அணுவாயுத திட்டம் சம்பந்தமாக அமேரிக்காவோடு செய்த உடன்படிக்கை காரணமாக பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/7665206.stm
-
- 1 reply
- 896 views
-