Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்ஜியாவில் போராளிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான South Ossetia வின் தலைநகரை (Tskhinvali) நோக்கி அமெரிக்கா பக்கம் சாய நினைக்கும் ஜோர்ஜிய அரசு ஆட்லறிகள்.. பல்குழல் வெடிகணைகள், விமானங்கள் மற்றும் தாங்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தியபடி இன்று நள்ளிரவில் இருந்து முன்னேறி வருகிறது. South Ossetia இல் உள்ள போராளிகளுக்கு ரஷ்சியா நேரடியாக உதவி வருவதுடன்.. ஜோர்ஜியாவை அமெரிக்கா தனது நேட்டோ உறுப்புக்குள் இணைத்துக் கொள்வதன் மூலம் ரஷ்சியாவை பலவீனப்படுத்த எண்ணி இருப்பதால்.. ஜோர்ஜியாவின் இத்தாக்குதலுக்கு அது பச்சைக் கொடி காட்டியுள்ளது. தென் Ossetia பிரதான ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து செல்ல விரும்புகிறது என்பதும்.. அதற்காக அங்கு போராளிகள் போராட்டம் நட…

    • 55 replies
    • 7.4k views
  2. இங்கிலாந்துக்கு தப்பியோடிய தாய்லாந்து மாஜி பிரதமர் ! பாங்காக்: ஒலிம்பிக் போட்டிகளைக் காண செல்வதாகக் கூறி தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவத்ரா குடும்பத்துடன் இங்கிலாந்துக்கு தப்பியோடிவிட்டார். தாய்லாந்தின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனத்தை நடத்திய வந்த ஷினாவத்ரா தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்தார். ஆனால், இவரது குடும்பத்தினர் பெரும் ஊழலில் ஈடுபட்டனர். இந் நிலையில் 2006ம் ஆண்டு குடும்பத்தோடு இவர் வெளிநாடு சென்றபோது ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து இங்கிலாந்தில் வசித்து வந்தார். ஆனால், இவர் மீதும் குடும்பத்தினர் மீதும் தாய்லாந்தில் ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை எதிர்கொள்ள குடும்பத்துடன் கடந்த சில மாதங்களுக்க…

  3. உலகெங்கும் தினமும் 7000 பெண்கள் எய்ட்ஸினால் பாதிப்புறுகின்றனர் [11 - August - 2008] உலகெங்கும் தினமும் ஏழாயிரம் பெண்கள் எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளாவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் பூர்ணிமா மாளே தெரிவிக்கையில்; எய்ட்ஸ் நோய் பரவுவதை கட்டுப்படுத்த இந்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. இந்தியாவில் குழந்தை திருமண சட்டங்களை அமுல்படுத்துவதில் சமூக அமைப்புகளும், பொதுநல ஆர்வலர்களும் அதிக தீவிரம் காட்டி வருகின்றனர். இதன்மூலம் இளம் வயதிலேயே பெண்கள் பாலியல் ரீதியான உறவுகளுக்கு ஆட்படுவதும், எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாவதும் தடுக்கப்படுகிறது. இந்தியா மட்ட…

    • 0 replies
    • 683 views
  4. ஈரோடு: உலகிலேயே மிகப் பெரிய வளையலை உருவாக்கியுள்ளதாக டைட்டன் தொழில் குழுமத்தின் நகை விற்பனைப் பிரிவான கோல்ட் பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 22 காரட்டினாலான இந்த மிகப் பெரிய தங்க வளையலை ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கோல்ட் பிளஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் எல்.ஆர். நடராஜன் அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகிலேயே மிகப் பெரிய வளையல் இதுதான். இதன் சுற்றளவு 1830 மில்லி மீட்டராகும். அகலம் 140 மில்லி மீட்டராகும். எடை 24 ஆயிரத்து 505 கிராம் ஆகும். நான்கு 22 காரட் வளையங்களில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு வளையங்களும், டாடா நிறுவனத்தின் கொள்கைகளான நம்பிக்கை - நாணயம், வாடிக்கையாளர் திருப்தி, மதிப்பு மற்றும் புதுமை ஆகியவற்றைப் பிர…

  5. துபாய்: கையில் நிறைய்யய 'டப்பு' இருக்கா... அப்ப புறப்படுங்க ஐக்கிய அரபு எம்ரேட்ஸூக்கு. அங்கேதான் உலகின் அதி சொகுசான, எக்கச்சக்க காஸ்ட்லியான சுற்றுலா வசதியை செய்து கொடுக்கிறார்கள். இந்த ஹாலிடே பேக்கஜூக்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா... ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது சுமார் 4.3 கோடி ரூபாய்!! அபுதாபியின் எமிரேட்ஸ் பேலஸ் என்ற பிரமாண்ட நட்சத்திர ஓட்டல்தான் இந்த சுற்றுலா திட்டத்தை அறிவித்துள்ளது. அப்படி என்ன இருக்கு இந்த உலக மகா டூர்ல? என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. இதோ... அபுதாபிக்கு முதல் வகுப்பு விமான டிக்கெட், எமிரேட் பேலஸ் ஏழு நட்சத்திர ஓட்டலில் சகல வசதிகளுடனும் கூடிய தங்கும் வசதி, ஸ்பா மஸாஜ் சுகம், நீங்கள் விரும்பும் உலகின் காஸ்ட்லி உ…

  6. வீரகேசரி நாளேடு - சீனாவின் பீஜிங் நகரில் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு, உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சுமார் 500,000 பூனைகள் பிடிக்கப்பட்டு கொல்லப்படுவதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி பூனைகள் சிறிதும் அசைய முடியாத நிலையில் பெருந்தொகையாக கூண்டுகளில் அடைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.

  7. டெல்லி: கச்சத்தீவை மீண்டும் திரும்பப் பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வழக்கு தொடர்ந்தார். கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகுவேன் என சமீபத்தில் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று ஜெயலலிதா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 32வது பிரிவின் கீழ், கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உரிமைகளை திரும்பப் பெறவும், இந்திய படகுகள், கச்சத்தீவில் நுழையவும், அங்கு மீன்பிடி தொழிலை மேற்கொள்ளும் உ…

  8. டெல்லி: கடவுளே இறங்கி வந்தாலும் இந்த நாட்டை அரசியல்வாதிகளிடமிருந்து காப்பாற்ற முடியாது-இம்முறை இப்படி வாய்ஸ் கொடுத்திருப்பது ரஜினிகாந்த் அல்ல, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.என். அகர்வால் மற்றும் ஜி.எஸ். சாங்வி இருவரும்தான். அரசு குடியிருப்புகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைக்கு வகைசெய்யும் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வர அரசு மறுத்துவிட்டதால் கடுப்படைந்த நீதிபதிகள் தெரிவித்த கருத்துதான் மேலே நீங்கள் படித்தது. இது மட்டுமல்ல... இது வரை எந்த வழக்கிலும் நீதிபதிகள் சொல்லாத, அரசுக்கெதிரான கடுமையான கருத்துக்களையும் இவ்விரு நீதிபதிகளும் தெரிவித்துள்ளனர். இந்த அரசின் நடவடிக்கைகள் எங…

  9. தயவு செய்து பின்வரும் இணையத் தளத்துக்குச் சென்று உங்களின் ஆதரவையும் இணையுங்கள். நன்றி. www.justiceformuttur.org

  10. பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் மீது அதிகார துஷ்பிரயோகத் தீர்மானம் கொண்டு வருவதற்குப் பதிலாக இவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது. இதன் மூலம் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரபை ஜனாதிபதி பதவியிலிருந்து கௌரவமான முறையில் வெளியேற்றுவதுடன், நவாஷ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியுடனான கூட்டணியையும் பலப்படுத்திக் கொள்ள முடியுமென பாகிஸ்தான் மக்கள் கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவலகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் கடந்த வருடம் முஷராபினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை புதிய ஜனாதிபதி முன்னில…

    • 0 replies
    • 623 views
  11. திருத்துமிடத்தில் இருந்து பெற்ற உலோகங்களைப் பயன்படுத்தி மருத்துவர் ஒருவரால் சுயமாக வடிவமைக்கப்பட்ட கருவி மூலம், சிறுநீரகம் செயலிழந்த பச்சிளம் குழந்தையொன்று காப்பாற்றப்பட்ட அதிசயம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. மில்லி கெல்லி என்ற இந்தக் குழந்தை, குடல் பகுதி உடலுக்கு வெளியே தள்ளிய நிலையில் பிறந்தது. இந்நிலையில் மேற்படி குறைபாட்டை சீர்செய்யும் முகமாக சத்திரசிகிச்சையொன்றுக்கு குழந்தை உட்பட்ட சமயம், அதன் சிறுநீரகங்கள் செயலிழக்க ஆரம்பித்தன. இத்தகைய நெருக்கடியான நிலையில் வழமையாக சிறுநீரகம் செயலிழந்த குழந்தைகளுக்கு உபயோகிக்கப்படும் செயற்கை உபகரணத்தை இக்குழந்தைக்கு பொருத்த முடியாத வகையில், குழந்தை மிகவும் சிறியதாக காணப்பட்டதால் என்ன செய்வது என மருத்துவர்கள் திண்டாடினர். …

  12. இஸ்ரேல் Ben Gurion Airport இல் இருந்து 5 பிள்ளைகளுடன் பெற்றோர் பாரிஸ் நோக்கிப் புறப்பட்டனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பெற்றோருக்கு ஒரு அறிவிப்பு. "உங்கள் பிள்ளை ஒன்று விமான நிலையத்தில் தவறவிடப்பட்டுள்ளது" என்பது தான் அந்த அறிவிப்பு. உடனடியாக விமானத்தில் இரு வேறு இடங்களில் இருந்த தாயும் தகப்பனும் பிள்ளைகளின் எண்ணிக்கையை சரி பார்த்துள்ளனர். என்ன ஆச்சரியம். 5 பிள்ளைகளில் ஒரு பிள்ளையைக் காணவில்லை. பெற்றோர் அது தமது பிள்ளை தான் என்று உறுதிப்படுத்தியதை அடுத்து... தவறவிடப்பட்ட 4 லே வயதான குட்டிப் பொண்ணு.. அடுத்த விமானத்தில் பாரிஸுக்கு பெற்றோரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பெற்றோர் மீண்டும் இஸ்ரேல் திரும்பும் போது இச்சம்பவம் குறித்து விசாரிக்கப்…

  13. சென்னை: ஓகேனக்கல் பிரச்சனையில் மெளனம் சாதிக்கும் முதல்வர் கருணாநிதியைவிட்டு காங்கிரசார் ரஜினிகாந்தை விமர்சிப்பது ஏன் என இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் திரையிடப்பட்ட குசேலன் படத்துக்கு அரசியல் காரணங்களுக்காக சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. ரஜினிகாந்த் தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததை கண்டித்து ரஜினி படம் ஓடும் தியேட்டர்களை மற்றும் அவருடைய வீட்டை முற்றுகையிடப் போவதாக இளைஞர் காங்கிரஸ் மற்றும் சில அமைப்புகள் அறிவித்திருக்கிறார்கள். ஓகேனக்கல் பிரச்சனையில் முதலமைச்சர் கருணாநிதி, கர்நாடகாவில் தேர…

  14. இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தில் நைனாதேவி இந்துக் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மக்கள் நெரிசல் காரணமாக அங்கு சிக்கி 123 பேர் உயிரிழந்துள்ளனர், என அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் அதிகமான பெண்களும்,குழந்தைகளும், உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மேலும் தெரியவருகின்றது. நிருபர்:அன்பு http://www.tamilseythi.com/world/123-dead-...2008-08-03.html

    • 8 replies
    • 1.5k views
  15. தலிபான்களிடம் இருந்து மீட்கப்பட்ட பின்னர் ஆப்கானிஸ்தானோட தனது உறவுகளை வேகமாக விரிவாக்கி வந்த இந்தியா இன்று 450 மில்லியன் அமெரிக்க வெள்ளி அபிவிருத்தி உதவியை அறிவித்துள்ளது. இதுவரை கணனி கல்வித்துறை பயிர்ச் செய்கை போன்றவற்றிக்கு பயிற்சி அளித்து உதவி செய்து வந்தது. எதிர்வரும் காலங்களில் ஆப்கானிஸ்தானிய தரைப்படைகளை பயிற்சி போன்றவற்றிற்கு விரிவாக்கமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  16. கடந்த பதின்மூன்றாம் தேதி தே.மு.தி.க. சார்பில் ராமேஸ்வரத்தில் நடந்த மீனவர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் `ஆளும் தி.மு.க.வினரை சுட்டுக் கொல்லணும்' என்று விஜயகாந்த் பேசிய பேச்சு தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. விஜயகாந்துக்கு சரியான பதிலடி கொடுக்க தி.மு.க.வினர் காத்துக் கொண்டிருக்க, அதற்குத் தோதாக வந்து வாய்த்தது, தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தினரால் சுடப்படுவதைக் கண்டித்து கலைஞர் அறிவித்த உண்ணாவிரதப் போராட்டம். தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கடந்த பத்தொன்பதாம் தேதி நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அன்பழகன், ஆற்காட்டார் உள்பட பல தி.மு.க. தலைவர்களும் விஜயகாந்தை ஒரு பிடிபிடித்து விட்டுத்தான் சிங்க…

    • 21 replies
    • 4.2k views
  17. டெல்லி: தலைநகர் டெல்லியை எதிரிகளின் ஏவுகணைத் தாக்குதலிலிருந்து காக்க வான் பாதுகாப்பு (ஆஇர் Dஎfஎன்cஎ) திட்டம் இறுதி வடிவம் பெற்றுள்ளது. விரைவில் இறுதிக்கட்ட சோதனையை முடித்த பின்னர் டெல்லியை ஏவுகணைப் பாதுகாப்பு வளையத்தின் கீழ் மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளிடம் எதிரிகளின் ஏவுகணைத் தாக்குதலிலிருந்து நகரங்களைக் காக்க வான் பாதுகாப்பு திட்டம் உள்ளது. அதன் படி நாட்டின் முக்கிய நகரங்களை ஏவுகணை பாதுகாப்பு வளையத்தின் கீழ் அந்த நாடுகள் வைத்துள்ளன. அந்த வரிசையில் விரைவில் இந்தியாவும் சேரவுள்ளது. இதற்கான திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இறுதி கட்ட சோதனையை பாதுகாப்பு மற்றும் ஆய்வுக் கழக (டி.ஆர்.டி.ஓ.) அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ளனர்.…

  18. அகமதாபாத் (ஏஜென்சி) செவ்வாய்கிழமை 29 ஜூலை 2008 குஜராத் மாநிலம் சூரத் நகரில் இன்று காலையிலிருந்து அடுத்தடுத்த பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன. குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டதன் மூலம் மிகப்பெரிய ஆபத்து தவிர்க்கபட்டுள்ளபோதிலும், இன்னும் வெறெங்கெல்லாம் குண்டுகள் வைக்கப்பட்டிருக்குமோ என்று அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். முன்னதாக சூரத் நகரிலுள்ள வராச்சா சாலை, குடியிருப்பு சங்க பகுதி மற்றும் மார்க்கெட் பகுதி ஆகிய இடங்களில், வெடிக்கும் நிலையில் இருந்த மூன்று குண்டுகள் இன்று காலையில் கண்டெடுக்கப்பட்டன. இம்மூன்று வெடிகுண்டுகளையும், நிபுணர்கள் செயலிழக்கச் செய்ததாக…

  19. அய்யங்கார் மாமி ஜெயலலிதாவுக்கு.... 28.7.08 முரசொலியில் வந்த அழகு தமிழ் கட்டுரை.. ராம பக்தை - அய்யங்கார் மாமி ஜெயலலிதாவுக்கு நாள் தவறாது கலைஞரைத் தாக்கி அறிக்கை விடாவிட்டால் பொழுதுபோகாது. 26.7.2008 அன்று ராமர் பாலம் என்ற கற்பனைக்கு ஆதரவாக விடுத்த அறிக்கையில், "தி.மு.க. தலைவர் கருணாநிதி ராமபிரான் ஒரு குடிகாரன் என்று பகிரங்கமாகக் கூறுகிறார். இந்துக்களின் வணக்கத்துக்குரிய இறைவன் பெருமாள், காமத்தில் நீந்திக் களித்தவர் என்று இப்போது கருணாநிதி கண்டுபிடித்துள்ளார்." - என்று கலைஞர் மீது பாய்ந்து பிறாண்டியிருக்கிறார். ராமர் குடித்தார் - என்று கலைஞர் தன் கருத்தாக - சொந்தக் கருத்தாக ஒருபோதும் கூறியதில்லை. ராமர் குடிப்பார் அவருக்கு …

    • 0 replies
    • 1.7k views
  20. ஒரு கண் திறந்துள்ள நிலையில் உள்ள ஷீரடி சாய்பாபாவின் சிலையைக் காண பெங்களூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பெங்களூர் கவிபுரம் குட்டஹள்ளியைச் சேர்ந்தவர் பாபு. அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஷீரடி சாய்பாபா சிலையின் மூடிய நிலையில் இருந்த வலது கண் திடீரென திறந்துகொண்டது. இதை அறிந்த பக்தர்கள் வெள்ளிக்கிழமை பாபுவின் வீட்டுக்கு சென்று அந்த சிலையைப் பார்த்து அதிசயித்துச் சென்றனர். இந்தச் செய்தி தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளியானது. இதைப் பார்த்த சாய் பக்தர்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து குறிப்பாக தும்கூர், கோலார் மாவட்டங்களில் இருந்து சனிக்கிழமை பெங்களூருக்கு வந்த வண்ணமிருந்தனர். அவர்கள் கவிபுரத்தில் உள்ள பாபுவின் வீட்டுக்குச் சென்றனர். இதனால் சனிக்கிழமை…

    • 12 replies
    • 3.5k views
  21. டெல்லி: டெல்லியிலிருந்து மும்பைக்கு பறந்து கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் கதவுகள் சரியாத பூட்டப்படாததால் அந்த விமானம் அவசரமாக மீண்டும் டெல்லியில் தரையிறங்கியது. இதையடுத்து அந்த விமானத்தின் இரு சிப்பந்திகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதில் மத்திய அமைச்சர் சரத்பவாரும் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியிலிருந்து நேற்று மாலை இந்த விமானம் மும்பை கிளம்பியது. போயிங்௭37 ரக விமானமான இந்த விமானம் 5,000 மீட்டர் உயரத்தை அடைந்த நிலையில், விமான சிப்பந்திகள் கதவு சரியாக பூட்டப்படாமல் திறந்திருப்பதைக் கண்டு அதிர்ந்தனர். அந்தக் கதவு வழியாக விமானத்திலிருந்து அழுத்தப்பட்ட காற்று வெளியேறியது மட்டுமல்லாமல், வெளியிலிருந்தும் காற்று புகுந்தது பெரும் சத்தம் கி…

  22. நெல்சன் மண்டேலாவுக்கு மகாத்மா காந்தி விருது வீரகேசரி நாளேடு 7ஃ24ஃ2008 5:39:57 Pஆ - அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது தென் ஆபிரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா டர்பனில் உள்ள மகாத்மா காந்தி அறக்கட்டளை மற்றும் சத்தியாகிரக அமைப்பே அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருதை நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கியுள்ளது. தியாகத்தாலும் பங்களிப்பாலும் உலக மக்களின் மனதில் இடம் பிடித்தார் என்றும் அவர் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் மண்டேலா கலந்து கொள்ளவில்லை. விருதை அவருக்கு பதிலாக அவரது சிறைத் தோழரும் அரசியல் ஆலோசகருமான அகமது கத்ராடா பெற்றுக் கொண்டா…

    • 20 replies
    • 2.4k views
  23. பாலஸ்தீனர்களை வெளியேற்ற எலிகளை ஆயுதமாகப் பயன்படுத்தும் இஸ்ரேல் அரசு [27 - July - 2008] எருசலேம்: எருசலேமின் பழைய நகர்ப்பகுதிகளிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றுவதற்கு எலிகளை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றது இஸ்ரேல் அரசு. எருசலேமின் பழைய நகர்ப் பகுதிகளில் தங்கியிருக்கும் பாலஸ்தீனர்களை வெளியேற்றுவதற்காக இஸ்ரேல் அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக அம்மக்களை அப்பிரதேசங்களிலிருந்து வெளியேற்ற பெருச்சாளிகளை இஸ்ரேல் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. அரேபியர்களுக்கு மேலும் துன்புறுத்தல்களை ஏற்படுத்தும் நோக்கில், யூதர்கள், பெரிய இரும்புக் கூண்டுகளில் ஏராளமான எலிகளை கொண்டு வந்து, பழைய நகரின் தெருக்களில் விட்டுவிட்டுச் செல்கின்றன…

    • 0 replies
    • 854 views
  24. Chhotu வும் அதன் எஜமானி அம்மாவான ராஜ்குமாரி தேவி (வலது) யும். சோட்டுக்கு வயது 7. அவன் ஒரு அநாதையாக வீதியில் இருந்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளான். கிழக்கு இந்திய மாநிலமான பிகார் மாநிலத்தில் வளர்ப்பு நாயான Chhotu, ஊரில் சிலரைக் கடித்து அமைதியை குலைத்ததற்காகவும் சட்டத்தை மதிக்காமல் நடந்ததற்காகவும் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், விலங்குரிமை அமைப்பினரின் உதவியுடன் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் கீழ் நீதிமன்றில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளது. Chhotu உண்மையில் பொதுமக்களை கடிக்கவில்லை என்றும்.. அது அதன் எஜமானி அம்மாவின் வீட்டுக்குள் நுழைய முனையும் கள்வர்களைத்தான் கடிக்கின்றது என்றும் கள்வர்களுக்கு உதவும் அயலவர்கள் பொறாமையில் சொல்வது போல அதற்கு விசர் பிடிக்கவில்லை…

  25. தொல்லியல்தலமான ஆதிச்சநல்லூர் கட்டுப்பாடு கேரளத்திடமா?ஆய்வறிஞர் பத்மநாபன் கடுங்கண்டனம் குமரி மாவட்டத்திலுள்ள வட்டக்கோட்,ை சிதரால் (திருச்சாரணத்துமலை), திருநந்திக்கரை, பார்த்திபசேகரபுரம் ஆகிய தொல்லியல் மையங்கள் மத்திய அரசின் தொல்லியல்துறை திருச்சூர் அலுவலகத்தின் ஆதிக்கத்திலேயே உள்ளன. நெல்லை மாவட்டத்திலுள்ள பல தொல்லியல் தலங்கள் ஏற்கனவே திருச்சூர் அலுவலகத்தின் ஆதிக்கத்திலே தான் உள்ளன. திருப்புடைமருதூர் கோயில் திருப்பணி செய்ய திருச்சூர் சென்று அனுமதி வாங்க வேண்டியுள்ளது. தொன்மை வாய்ந்த திருமலாபுரம் குடைவரைக்கோயிலில் தினசரி பூஜை நடத்த திருச்சூர் சென்று அனுமதி வாங்க வேண்டிய நிலை உள்ளது. இக்குடைவரைக் கோயிலில் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் தினமும் அபிஷேகமும், வ…

    • 1 reply
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.