கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
இருமை - வ.ஐ.ச.ஜெயபாலன் நான் சிறுசாய் இருக்கையில் உலகம் தட்டையாய் இருந்தது. எங்க பாட்டிக்குத் தெரிந்த ஒர் அரக்கன் ஒருமுறை உலகைப் பாயாய்ச் சுருட்டி ஒளித்து விட்டானாம். அப்போதெல்லாம் பகல்தொறும் பகல்தொறும் ஏழு வண்ணக் குதிரைத் தேரில் சூரியன் வருகிற வழி பார்த்திருந்து பாட்டி தொழுவாள் நானும் தொடர்வேன். ஒரு நாள் வகுப்பறையில் என் அழகான ஆசிரியை உலகை உருண்டையாய் வனைந்து பிரபஞ்சத்தில் பம்பரம் விட்டாள். சூரியனை தேரினால் இறக்கி பிரபஞ்சத்தின் அச்சாய் நிறுத்தினாள். பின்னர் கல்லூரியிலோ ஆசிரியர்கள் பிரபஞ்சத்துள் கோடி கோடி சூரியன் வைத்தார். இப்படியாக என் பாட்டியின் மானச உலகில் வாழ்வு மனசிலாகியது. கற்ற உலகிலோ எனது அறிவு கவசம் …
-
- 15 replies
- 2.2k views
-
-
மண்ணும் விண்ணும் மட்டுமல்ல மனசும் பூச்சூடிய ஒரு இரவின் பாடல். அதை எப்படி ஆரம்பிப்பது ? யார் எடுத்துத் தந்த அடியிலிருந்து ? இல்லை எடுத்துச் செல்லுங்கள் உங்கள் அதீத கற்பனைகளை. மதுவும் விந்தும் ஊறிய சொற்க்களை. கனவு வரை மண் தோய அவள் இட்ட அடிகளில் உள்ளதே கவிதை. அவள் பி.ஏ முடிக்கவில்லை என்றார்கள். அவள் காட்டில் என்றார்கள் மேலும் அவள் ஒரு கெரிலா போராளி என்றார்கள். நானோ அவளை கொழும்பு நகரத் தெருவில் பார்த்தேன். நான் உறைந்தது அச்சத்திலா ஆச்சரியத்திலா அல்லது அவள் மீதான மதிப்பினிலா. கோப்பிக் கடை மேசையுள் மறைத்தேன் நடுங்கும் என் கால்களை. அவள் அதே அமைதி ததும்பும் முகமும் குருத்துச் சிரிப்புமாய் முகவரி கேட்காதீர்கள் என்றாள். …
-
- 12 replies
- 2.4k views
-
-
http://vaseeharan.blogspot.com/ பல்லவி தமிழன் தமிழன் ஒருவன் தங்கத் தமிழன் ஒருவன்-எங்கள் தலைவன் தலைவன் மறவன் தமிழர் படைத்த பிரமன்- அண்ணன் பிரபா பிரபா பிரபாகரன் பிரபா பிரபா பிரபாகரன் சரணம் 1 தமிழ்த்தாய் கண்ட கனவுஇவன்-அந்தக் கனவோடு முளைத்த நனவுஇவன் அன்னை தமிழால் சிகரமிவன்-எங்கள் அன்பை மதிக்கின்ற தலைவன்இவன் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 2 பார்வையிலே தமிழ்ப்பூமியிருக்கும் பண்டார வன்னியனின் ஆசியிருக்கும் பாயும் விழிகளிலே தீயிருக்கும் படை விரட்டும் திறன் நெஞ்சிலிருக்கும் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 3 நாட்டை நம்மை நேசிப்பவன் தமிழ்விடுதலையை என்றும் யாசிப்ப…
-
- 5 replies
- 1.7k views
-
-
கார்த்திகைப் பூவோடு, தீபங்களை உன் கரங்களில் ஏந்தியவாறு வாரீரே... இன்று வருவீர்கள் நாளை வருவீர்கள் என்று பூமியின் வேரில் ஒளியின் அடியில் காத்திருக்கின்றோம் .... என்னை பெற்ற தாயே என் தோழியே,என் உறவுகளே உங்களைக் காண.. கல்லறையில் விழித்தவாறு தினமும் வானத்தைப் பார்க்கின்றேன் என் சிறகுகள் பறிக்கப்பட்டாலும், நாளை நீங்கள் சுகந்திரமாக பறப்பதை காணத்தான் காத்திருக்கின்றேன்... என் கண்களைக் கொள்ளை கொள்ளும் காட்சி ஒன்று தெரிகிறதே... என்ன அழகு என்ன அழகு ஒளி கொண்ட எங்கள் கல்லறைகளில் மேலும் தீப ஒளி ஒளிரட்டும் வாசமுள்ள கல்லறையின் மேல் மேலும் காத்திகை பூவின் நறுமணம் வீசட்டும்.... மரணங்களில் நாங்கள் வாழ்கின்றேம் ஒவ்வொரு ம…
-
- 9 replies
- 1.8k views
-
-
பூவால் குருவி நெஞ்சுக்குள் தொலையாதிருந்து ஒரு சிற்றாறாய் ஊருகின்ற என் முதல் காதல் பெட்டை ஒரு வழியாய் உன்சேதி அறிந்தேனடி. பேய்கள் கிழித்தெரிக்கும் எம்முடைய தேசத்தில் வன்னிக் கிராமத் தெருவொன்றில் வெள்ளிச் சருகை மினுங்கும் தலையும் பொன் சருகை கலையா முகமும் இன்னும் ஓயாமல் முந்தானை திருத்த எழும் கையுமாய் போனாயாம் உந்தன் பூப்படைந்த பெண்ணோடு போட்டிச் சிறு நடையில். அது என்ன போட்டி. காவலிலே உன் அன்னை தோற்றதறிவாய். அவளிடத்தில் உன்பாட்டி தோற்றதையும் நீ அறிவாய். என்றாலும் வாழ்வின் சுழற் தடத்தில் இன்று நீ அன்னை. நீ தோற்க்க வாழ்வு மேலும் ஒரு வெற்றி பெறும். ஆனாலும் நீ எனக்கு இன்னும் சிறுக்கிதான். இன்னும் விடாயும் அச்சமுமாய் மிரண்டடிக்கும் …
-
- 18 replies
- 2.9k views
-
-
வாழ்த்துகின்றோம் எம் அண்ணா! ஆழ்கடல் தன்னில் அவதரித்த முத்தே! ஈழத் தமிழரின் நிகரற்ற சொத்தே! வாழ்திடும் போதே வரலாறு தந்தவன் மானத்தோடு எம்மை தலை நிமிரச் செய்தவன்! எங்கள் மண்ணின் கிழக்குச் சூரியன் ஈழத்தாயவள் தந்த வீரத் திருமகன்! கரிகாலனே! கடும்பகை எல்லாம் வெறும் தூசென்று காட்டி நிற்கும் தீரனே! தரையோடு தொடங்கினாய் இயக்கம்! இன்று வான், தரை,கடலெங்கும் தலைவா உன் முழக்கம்! பகை வெடிக்கும் ஈழம் விரைவில் மலர்ந்து சிரிக்கும்! 'அண்ணா! உன் பெயர் சொல்ல புல்லும் கூடப் புலியென எழும்! அடிமைத் தளையை அறுக்கப் பிறந்த தலைவா! உன்னால் ஈழம் வாழும்! தமிழ் மானம் காத்த தலைவா வாழி! தமிழ் வீரம் நிலைநாட்டிய தலைவா வாழி! ஈனர் படையை எரிக்கப் பிறந்த எங…
-
- 4 replies
- 2k views
-
-
மாவீரர்கள்..........!! தமீழீழ விடிவிற்காய் நும் விடியலை துறந்து தமிழருக்காக விடியலை தேடிய உன்னதமானவர்களே! எம் உதட்டில் பூக்கும் புன்னகைமலரிற்காக உயிர்துறந்த உங்களுக்கு மலர்தூவும் நேரம் இது!! கதிரவன் ஒளிபாய்ச்ச அஞ்சும் எம் தமீழீழ மண்ணில் நஞ்சுமாலையணிந்து திக்கெட்டும் ஒளிபாய்ச்சிய துஞ்சா நெஞ்சங்களே!! பெயருக்கும், புகழிற்கும் பேராசைப்படும் இவ்வுலகில் எதையும் எதிர்பாராது பெயரதனை மறந்து தலைவனின் கரத்தை பலபடுத்த வந்தவர்களே!! உதட்டளவில் வீரத்தை உச்சரிக்கும் மனிதருள் வீரத்தை நிஜமாக்கி காட்டி மெளனமானவர்களே..!! எம் மண்ணிற்கு உயிர் தந்து உம்முயிரை மண்ணிற்கு அர்பணித்த வீரர்களே நீங்கள் வீரர்கள் அல்ல வீரபுருசர்…
-
- 7 replies
- 1.8k views
-
-
அழியா வரம் பெற்ற ஆதவன்கள் எழுதியவர்: த.சரிஷ் விடுதலை நெருப்புக்கு நெய்சேர்த்து சென்றுவிட்டது ஒரு நெருப்புக்குழந்தை...! ஈழத்தின் ஒவ்வொரு ழூலை முடுக்கிலும் விடுதலை நெருப்பை விதைத்துவிட்டு மெல்ல அணைந்துவிட்டது அந்த நெருப்பு...! இந்த நெருப்புப்பந்தின் வெளிச்சம் மெல்ல அணைந்தாலும் வெப்பம் இன்னும் அடங்கவில்லை...! தமிழீழத்தில் புறப்பெடுக்கும் கடைசிக்குழந்தையின் காலம்வரை கட்டாயம் அடங்காமல் இருக்கும் இந்த வெப்பம்...! ஒரு வழிகாட்டி புறக்கப்போகும் பிஞ்சுக்கும் பாடமாகிவிடுகிறான்...! மானிடகுலத்தின் கடைசிக்காலம்வரை செல்லும் வாழ்க்கைப்பயணத்தில் எதிர்பாராமல் இடைக்கிடையே இனம்தெரியாத இடிமின்…
-
- 3 replies
- 1.1k views
-
-
மாவீரரே!! உயிரிலும் மானம் பெரிதென இவ் உலகிற்கு உணர்த்தி நின்றார் செந் தமிழனின் வீரத்தை இந்தப் பாரிலே உயர்த்தி நின்றார்! நெஞ்சிலே நஞ்சினைத் தாங்கியே எம்மவர் மண்ணுக்கு வெளிச்சம் தந்தார் அன்னை மண்ணுக்கு தன்னலம் பாராமல் சாவையே அணைத்து வென்றார்! நல்தலைவன் வழியினில் சென்றுமே நன் நீதியைக் காட்டி நின்றார் வான் என்ன! கடல் என்ன! களத்திலும் கூட வீரத்தை காட்டி நின்றார்! வாழ்க்கையின் தத்துவம் காட்டிய வீரரே உம்மை நினைக்கவே நாளெதற்கு? மறைந்தாலும் மனதினில் நிறைந்திட்ட நீங்களே விடியலில் ஒளிர் விளக்கு! மறப்போமோ உங்களை எங்களின்வீரரே இது விடிகின்ற தருணம் அல்லோ? வீசும் காற்றது என்றுமே உரைப்பது வீரச் சோதரர் பேரை அன்றோ? மண்ணே! மானம்…
-
- 2 replies
- 982 views
-
-
கார்த்திகைப் பேரொளியில், விழியோரக் கசிவோடு மீட்பர்களே!..... நீங்கள் விதையான தாய்மடிநோக்கி உமைநாடி அணி வகுத்தோம். பார்த்தொருக்கால் விழிதிறந்து உம் பூத்தமலர் முகங்காட்டி புன்னகைத்துக் கதைபேசி கண்மணிகாள் உறங்குங்கள். நெஞ்சப் பெருவெளியில் நினைவெல்லாம் விக்கிநிற்க அஞ்சாத் தேவர்காள் அகமெல்லாம் நிறைகின்றீர்! வெஞ்சமர்க் களமாடி வேர்மடிக்குக் காப்புடுத்தி காயத்தை மறைத்து கண்மறைத்து கரைந்தோரே! காற்றின் வழி எங்கள் மூச்சின் சுழல்களுக்குள் வீச்செடுத்து உலவுகின்றீர்! உணர்கின்றோம்..... உவக்கின்றோம். கண்ணுணராப் பொருளாக எம்கடிமனதில் உறையும் காவல் தெய்வங்களே! கடுங்கோபங் கொள்ளாதீர்! கண்மீறி வழிகின்ற ஈரத்தின் உப்பினை வடிகட்டி நிறுத்த கண்ணிமைக்குத்…
-
- 4 replies
- 1.6k views
-
-
கனவான உறக்கங்கள் கலைவதெப்போ? எழுதுங்கள் எம் இதயதாபம் எங்கும் எரிகிறது விடுதலையின் தீபம் எம் இனத்திற்கு யாரிட்டார் சாபம் நாம் ஏதிலிகளாய் அலையும் காலம் நீல வானத்தில் நிர்மலமாய் அமைதி அங்கு கானங்கள் பாடுது பார் குருவி இச் சிலுவைகளோ அடையாளச் சுருதி இங்கு சிந்துதுபார் செந்தமிழன் குருதி எம் காதாரம் ரீங்காரம் பாடும் சில் வண்டுகளின் ஓங்கார ஓசை அங்கு தூரத்தில் கேட்கும் வெடியோசை எம் துடிக்கின்ற வீரத்தின் பாசை தணலாகக் கொதிக்கிறது நிலவும் தீக் கனலாகச் சுடுகிறது தென்றல் அதி காலையிலே சிந்தும் பனித் தூறல் எம் கல்லறைக்கு அதிகாலை பூசை எம் கனவான உறக்கங்கள் கூட விரைவில் கலைந்து விடும் செய்திவரும் காலை இது கணநேரம் ஓய்வெடுக்கும் வேளை ஈழ…
-
- 2 replies
- 1.3k views
-
-
-------------------------------------- மீன்பாடும் தேன்நாடு வங்கக்கடலுக்கோ வெண்பட்டு மணல்விரிப்பு மலையகத்து அருவிகட்கோ பச்சை வயல்விரிப்பு பாடும்மீன் தாலாட்டும் பௌர்ணமி நிலாவுக்கு ஒயிலாக முகம்பார்க்க ஒய்யாரமாய்த் தூங்க மட்டு நகரில் வாவியிலே நீர்விரிப்பு. எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் அனுபவிக்க சொந்தங்கள் இங்கே துயரம் சுமக்கிறது. காலமெல்லாம் இங்கே கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும் தெம்மாங்குபாட திசைகாணும் தாய் எருமை. திசைதோறும் புற்கள் முலைதொட்ட பூமியிலே கன்றை நினைந்து கழிந்தபால் கோலமிடும். காடெல்லாம் முல்லை கமழும் வசந்தத்தில் வயல்புறங்கள் தோறும் வட்டக்களரி எழும். வட்டக்களரியிலே வடமோடிக் கூத்தாடும் இளவட்டக்கண்கள் தென்றல்…
-
- 8 replies
- 2.2k views
-
-
அன்னையின் வீடு வ.ஐ.ச.ஜெயபாலன் இது ஓர் அதிஸ்டம் இல்லாத போராளியின் கவிதை மேலும் சரியாகச் சொல்வதெனில் ஒரு போர்க் குணமுள்ள கவிஞனின் மரண வாக்குமூலம் போன்ற அதிஸ்டமில்லாத கவிதை இது. எரிகிற அன்னை வீடில் நின்று என்னை வசைப்பாடிகிற சகோதரரே நான் எதிர்பார்ததில்லையே ஒரு துண்டு நிலத்தை செப்புச் சல்லியை ஒரு வாக்கை அல்லது ஆதரவான உங்கள் பாராட்டுதலை. என் பிள்ளைகளின் உணவை உண்டும் என் மனைவியின் தண்ணிரை அருந்தியும் பாடுகிறேன் நான். அன்னைவீட்டுக் கூரை எரிகிறது என் சகோதரர்களோ பாகப் பிரிவினைச் சண்டையில். தண்ணீர் ஊற்றுவதானால் அவன் பக்கத்துக் கூரையில் ஊற்றாதே …
-
- 4 replies
- 1.2k views
-
-
அழகு ரோஜாவே!! ரோஜாச்செடி போலவேதான் உறவுகள் என்றெண்ணி உறவுகளை விலத்தியிருந்த என் வாழ்வில் நுழைந்தாய் முட்களற்று வாசனை நிரம்பிய அழகு ரோஜாவாக... உனை கண்டநாள்முதல் நான் ஆனந்தம்கொண்டு தினமும் அலங்கரித்து மனம் மிகமலர்ந்தேன் அன்பே ரோஜா உன்னை கையில்பற்றி துடியிடை தொட பலர் ஆசைபட சிலர் சொந்தமாக்கி முத்தமிட துடித்திட நான் மட்டும் உனை என் கண்களுக்குள் பொத்தி வைத்து அந்த முட்கள் நிரம்பிய ரோஜாப்பூவாகவே பார்த்தேன் ஏனெனில் நீயும் ஒருநாளில் உதிர்ந்துவிடுவாயோ என்று ஆனால்.. நீயோ உதிர்ந்திடாத ரோஜா என் வாழ்வின் ஆயுள்ரோஜா நிம்மதியை தந்திடும் ரோஜா அன்பான அழகான ரோஜா என்று நன்குணர்ந்தேன் நான் போலியான உறவு…
-
- 10 replies
- 3.6k views
-
-
அன்றாட நிகழ்வுகள் என்னை அழ வைத்துக் கொண்டிருக்கின்றன. கூண்டோடு மாண்டு போவதாய் கனவு கண்டேன்; அது கொஞ்சம் பலித்தது போலும். அடுப்படியில் அம்மாவும், அரை உடலாய் அப்பாவும், அக்காவை காணவில்லை, அண்ணனாக யாருமில்லை. ஆனாலும் நான் தனியாகி விட்டேனா? - அதுவுமில்லை! ஊரில் என்னைப் போல் பல்லாயிரம் பேர் உண்டாம். எண்ணைக் கொள்ளைக்காக என்னை, மண்ணைத் தின்னச் செய்தார்கள் இந்த மாயாவிகள். உயிரியல் ஆயுதம் மறைத்து வைத்தோம் எனக் கூறி என் உடன் பிறப்புகளை அனுதினமும் உயிரோடு புதைத்து விட்டார்கள் இந்த கொடுங்கோலர்கள். பழமொழிகள் பலவற்றை உண்மை என்றிருந்தேன். "அழுத பிள்ளைக்கு பால்" என்றான். நான் அழாமலே அன்று என் தாய் தந்தாள். இன்று நான் அழுகின்றேன். இந்த அன்னியர…
-
- 0 replies
- 808 views
-
-
நீ என்னைத் தேடி வருகிறாய் நான் நீயாக மாறி என்னைத் தேடுகிறேன் * நடைபயிலும் குழந்தையாய் வருகிறாய் தாயாய் என் கவனம் எல்லாம் உன் மேல் * நீ எங்கெல்லாம் என்னைத் தேடுகிறாய் என்பதை ரசிப்பதற்காகவே நான் தொலைந்து போகலாம் * நீ வந்தவுடன் கை கொடுப்பதா கன்னம் கொடுப்பதா என்ற குளப்பத்தை சாதுரியாமாய் தீர்த்து வைத்தாய் கைகூப்பி வணக்கம் சொல்லி * உன் தாவணிக்கு எப்போது என் தாயின் கைவிரல்கள் முளைத்தது தடவியதும் குழந்தையாய் உறங்கி விட்டேனே -யாழ்_அகத்தியன்
-
- 1 reply
- 965 views
-
-
கார்த்திகைப் பூச்சுமந்து கல்லறை நோக்கி நடப்போம் ஈழ காவியம் எழுத தம் உயிர் தந்த கண்மணிகள் நினைவு சுமந்து போரியல் வரலாற்றில் புதிய சரிதம் எழுதி பூமிப் பந்தில் தமிழீpழம் வரைய புயலெனக் களமாடி மண்ணுள் புதைந்த மா வீரர்களே! உங்கள் மலரடி தொழுதோம் இக் கார்;த்திகை நாளிலே
-
- 1 reply
- 908 views
-
-
கவலை --------- ஆட்டின் மரணம் பற்றி அப்பாவின் துக்கம் கவிதையாய் வழிந்தது முன்னொரு நாள் தோட்டத்துச் செடிகளை மேய்ந்தது பற்றி அம்மாவுக்கு கோபம் தாயைப் பிரிந்த குட்டிகள் கதறிச் சோர்ந்து போயின கூரிய நகத்தை தீட்டிய சிங்கம் குட்டிகளைப்பார்த்து சிரித்துக் கொண்டது என்ன உலகம் இதுவென்று மரத்துக் காகம் முணுமுணுத்துக் கொண்டது
-
- 3 replies
- 1.7k views
-
-
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஆண்டு இங்கு எட்டாச்சு...!! எப்போ நீ பிறப்பே என்று தான் இங்கு ஒரே பேச்சு...!! இதயத்து அறைகளிலே இளம்பிஞ்சே உன்முகம் தான்... என் கந்தகக் கருப்பையில் ஃபீனிக்ஸாய் எழுவாயா??? விரதமும் வேண்டுதலும் - உன் வரவைச் சொல்லலையே...!! வாடகைத்தாய் வாங்கக்கூட காசுபணம் எனக்கிலையே...!! சோதனைக்குழாய் முறைக்கும் - முதல் சோதனையிங்கு பணத்திலாமே?? சொச்ச ரொக்கமில்லையினா சோதனைக்குழாயும் கிடைக்காதாமே??!! உன் பிஞ்சுவிரல் ஸ்பரிசத்துக்காய் என் உயிரே தவிக்குதிங்கே...!! நஞ்சுரைக்கும் வல்லூறால் - என் நெஞ்சு மருகி விம்முதிங்கே...!! ஆண்டுபல போனாலும் - உன் வரவு கனவில் தான் நிஜமாச்சு...!! 'ம்மா'-னு நீ…
-
- 9 replies
- 3.4k views
-
-
உனக்காக காத்திருக்கையில் என்னைக் கடப்பவர்கள் மட்டும் ராசியானவர்கள் உன் முகத்தை அவர்களில் தேடுகிறேனே * அந்த சூரியனுக்கு யார் என்னைக் காட்டிக்கொடுத்தது பாருங்கள் நிலாவுக்காக காத்திருக்கிறேன் என்ற கோவத்தில் என்னை கறுப்பாக்கி கொண்டிருக்கிறது * உனக்காய் காத்திருந்த இடத்தில் கொஞ்ச நேரம் நி ன் று பார் உன்னைப் பெற என்னை நான் இழந்த வலி புரியும் * தாமதமாய் வருவதையே பழக்கமாய் கொண்டவள் நீ தெரிந்தும் உனக்காய் காத்திருக்க பழக்கப்பட்டவன் நான் * " நிலா" என்று யார் உனக்கு பெயர் வைத்தது உனக்காய் என்னை தேய வைத்துக் கொண்டிருக்கிறாய் -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 1.3k views
-
-
கடற்புறம் காலமகள் மணலெடுத்து கோலமிட்ட கடற்புறத்தில் ஏழை மகள் ஒருத்தி. முன்னே கடல் விரியும் முது கடலின் பின்னாடி விண்ணோ தொடரும் விண்ணுக்கும் அப்பாலே விழி தொடர நிற்கின்றாள். தாழை மர வேலி, தள்ளி ஒரு சிறு குடிசை; சிறுகுடிசைக்குள்ளே தூங்கும் சிறு குழந்தை ஆழ்க்கடலில் ஆடுகின்ற தோணியிலே தாழம்பூ வாசம் தரைக் காற்று சுமந்து வரும். காற்று பெருங்காற்று காற்றோடு கும்மிருட்டு. கும்மிருட்டே குலைநடுங்கி கோசமிட்ட கடல் பெருக்கு. கல்லுவைத்த கோவிலெல்லாம் கைகூப்பி வரம் இரந்த அந்த இரவு அதற்குள் மறக்காது. திரை கடலை வென்று வந்தும் திரவியங்கள் கொண்டு வந்தும் இந்த சிறு குடிசை, இரண்டு பிடி சோறு, தோணி உடையான் தரும்பிச்சை என்கி…
-
- 14 replies
- 2.5k views
-
-
2003 ம் ஆண்டு மாவீரர் நினைவாக வடித்த கண்ணீர் இன்றும் கார்த்திகை மாதத்து ஓளிக்கீற்றுக்கள் உலகெல்லாம் ஒரு தரம் எம் தேசம் நோக்கும் அற்புத நாள் தமிழீழ தீபம் அணையாமல் எரிந்திட தம்மை அழித்து அத்தீபத்தை ஏற்றிய உத்தம புருசர்களின் உன்னத நினைவுநாள் அடக்கி அடக்கியே சிங்களம் எம்மை அடிமைகளாக்கியபோது விலங்குடைத்து எம்மினத்தை விடுதலையாக்கிய வீரப்புருசர்களின் நினைவுநாள் சிங்களச் சீற்றர்களின் உறக்கம் கலைத்த உன்னத புருசர்களின் உத்தம நாள் புதியதோர் பரணி படைத்த புலித்தெய்வங்களின் நினைவு நாள் சுயத்தை தொலைத்து பொது நலத்தை நாடிய புண்ணிசீலர்கள் மக்களிற்காகவும் தாய் மண்ணிற்காகவும் விதையாகி எம்முள்ளே நினைவாகி நிலையான…
-
- 6 replies
- 1.3k views
-
-
முதல் முதலாக நீ என்னை எழுத்துக்கூட்டி வாசித்து முடித்தபோது எல்லாக் கவிதைகளைப் போலவும் நானும் உன் வாழ்த்துக்காய் காத்திருக்க முன்னமே "என்றும் நீ எனக்குப் பிடித்த கவிதையாக இருந்துவிட முடியாது ஏனெனில் எழுத்துப் பிழைகள் அதிகம் நிறைந்த கிறுக்கலாய் இருக்கிறாய்" என நீ கூறிவிட்டு என்னை கசக்கி எறிந்த இடம் இன்றும் என்னை கண்ணீரால் கவி எழுத வைக்கிறது -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 1.3k views
-
-
காதலோடு நான் . . .01 வானத்து நிலவோ வடித்தெடுத்த பொற்குடமோ கானமயிலோ கவர்ச்சிமிகு தேவதையோ தங்கப்பதுமை ஒன்று தரணியில் வந்ததுவோ கோபுரக் கலசமொன்று கோதையாய் மாறியதோ வானவில்லொன்று நிமிர்ந்து இன்று பெண்ணானதோ கம்பன் காணமறந்த காவியப் புதல்வியோ எண்ணிலடங்கா வார்த்தைகளால் இழைத்துப்பின்னிய கவிதையோ கோதை இவள் யாரோ ? கோமகன் மகள்தானோ ? கோவலனை கொள்ளை கொண்ட மாதவி இவள் தானோ ? கண்ணெதிரே தோன்றியதும் கவிதை மழை கொட்டுகின்றதே பனித்துளி வீழ்ந்து புல்நுனி மருகுவதுபோல் பவளக்கொடி பார்வையினால் பாவிமனம் பற்றுகின்றதே ! பிரம்மனின் கைவண்ணத்தில் பிறந்த பொற்கொடியை புவியிலே வடித்துவைத்த சிற்பிகள் யாரோ ? அந்தரத்தில் பறக்கவைத்து அற்ப…
-
- 4 replies
- 1.7k views
-
-
நீ சிந்திய சிரிப்புகளையெல்லாம் சேமித்துவைத்திருந்தேன் இரண்டுவருடசேமிப்பை எடுத்துப்பார்க்கிறேன். எதிலுமே என் பெயரில்லை என் பக்கத்தில் நின்றவர்களை பார்த்து சிரித்தது பல என் முன் நின்றவர்களுக்காய் சில பின் நின்றவர்களுக்காய் சில எவரையோ எண்ணியபடி எனை பார்த்து சிந்தியவை சில எல்லாவற்றையும் கழித்தபோது எஞ்சியவை எனக்காக சில ஏளன புன்னகைகள் என் மனக்காயங்களுக்கு-அவை மருந்தா, திராவகமா தெரியவில்லை ஆனாலும் அள்ளி அள்ளி பூசிக்கொள்கிறேன். இதயதில் உன் பெயரையும் உயிரில் உன் முகவரியையும் சுமந்தபடி! சிலம்பூர் யுகா, துபாய் [yughas@yahoo.com]
-
- 3 replies
- 1.3k views
-