கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
· கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! ஏ இந்தியாவே…!எத்தனை கொடுமைகள் செய்துவிட்டாய் எங்கள் தமிழினத்திற்கு… எத்தனை வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும் காலில் விழுந்தும் கதறியும் கொளுத்திக் கொண்டு செத்தும் தீர்ந்தாயிற்று… எதுவுமே காதில் விழாத உங்களுக்கு இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்… பட்டினியால் சுருண்டு மடிந்த பிஞ்சிக் குழந்தைக…
-
- 1 reply
- 398 views
-
-
இந்தியாவையும் சீனாவையும் இழுத்து வந்து போட்டீர்-பா .உதயன் இந்து சமுத்திரத்தில் வந்ததொரு சீனக் கப்பல் இலங்கைக்கு வந்திருக்காம் சிக்கல் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இதனால விக்கல் அண்ணன் அமெரிக்காவும் அதனால முறுகல் பூகோள அரசியலில் இங்கே புதிதாய் கயிறிளுத்தல் போட்டி இனி என்ன நடக்கும் இந்து சமுத்திரத்தில் இந்த சிறிய தீவில் புகுந்து இருந்ததெல்லாம் அறுத்துக் கொட்டிப் போட்டு எல்லாப் பெருச்சாளிகளும் இப்போ இந்து சமுத்திரத்தில் கண்ணாம் தங்கள் பாதுகாப்பு என்று சொந்த நலன் போட்டி பட்டுப் பாதை திட்டம் என்று பாதி உலகை சுறுட்டிய சீனா இலங்கைக்கும் வந்து இருந்ததையும் சுருட்டிப் போட்டான் இது சீனாவின் இன்னும் ஓர் ஆசியக…
-
- 0 replies
- 398 views
-
-
சுதந்திரம் கறுப்புநாள் சுதந்திம் என்பது ஏது..!? சுதந்திரத்தால் வந்ததே கேடு..! வனவேடன் தருவானா..? மானுக்கு சுதந்திரம் சுதந்திரம் கேட்டால் பரிசாக தருவானே குண்டு..! குளத்து மீனுக்கு கொக்கு கொடுக்கலாம் சுதந்திரம் காட்டு முயலுக்கு வீட்டுநாய் கொடுக்கலாம் சுதந்திரம் சிங்கள ஆட்சி கொடுக்குமா..? தமிழர்க்கு சுதந்திரம் தமிழர் பிணம்தின்னும் இனவாதஆட்சி தந்திடுமா சுதந்திரம்..!? கடலலைக்கு தடைபோட நினைத்திடும் காவிமொட்யைர் ஆட்சி சுடுமணலுக்கு தடைபோட நினைத்திடும் சித்தாத்தர் ஆட்சி வரும் போர்குற்றமென்ற பெரும்புயலை தடுக்க நினைத்திடும் ஆட்சி பொங்கியெழும் உலக நீதிக்கனலில்; வெந்திட போகும் ஆட்சி..! கிழக்குதிக்கும் கதிரவரனை கையால் மறைக்க…
-
- 0 replies
- 395 views
-
-
-
"ஒட்டாவா வீதியில் காலை பொழுதில்" "ஒட்டாவா வீதியில் காலை பொழுதில் ஓட்டா வாழ்வை கொஞ்சம் சிந்தித்தேன் காட்டின் நடுவே கேம்ப் போட்டு காட்டாத வாழ்வை கனவு கண்டேன்" "கேட்காத இனிமை காதில் ஒலித்தது வாட்டாத நிலவு வானத்தில் ஒளித்தது மொட்டு விரிந்து வாசனை தந்தது பாட்டா சொல்லி தேவதை வந்தது" "சுட்டி பொண்ணு புன்னகை சிந்தி பாட்டி கையை மெல்ல பிடித்து வட்ட மிட்டு வானத்தில் இருந்து கூட்டி வந்து இன்பம் பொழிந்தது" "மெட்டி ஒலி காற்றோடு கலக்க முட்டி மோதி நிமிர்ந்து நடந்து பொட்டக் குட்டி பாட்டி பெயரில் லூட்டி அடிச்சு அட்டகாசம் போடுது" "கட்டு மரமாக வாழ்வில் மிதந்து ஆட்டி படைத்த நினைவுகளை எறிந்து குட்டி பாட்டி மழலையில் மகிழ்ந்து …
-
- 2 replies
- 394 views
-
-
மார்கழிப் பொழுதினில் பூக்குதோர் வாழ்வு மரியாளின் மடியிலே தவழ்கிறான் ஜேசு அடிமையின் விலங்கினை அறுத்திட பாலகன் அவதாரம் எடுத்து இங்கு வருவானே தூதன் தேவனின் வருகையால் தெருவெங்கும் பாட்டு தெரியுதோர் விளக்கு ஒன்று வானதில் பாரீர் கவிதையாய் எங்குமே பூக்களாய் பூக்குதே காலை புலர்கையில் தெரியுதோர் வெளிச்சம் பூக்களே பூக்களே புனிதனை பாடு புனித மரியாளின் மடியிலே பூக்களை தூவு குருவியும் குயில்களும் கூடியே பாடுது குறை ஒன்றும் இல்லை இனி மனிதர்க்கு என்றே வானத்து நிலவிலே பூக்களாய் சொரியுதே தேவன் வருகிறான் என்று வெளிச்சத்தை கொளுத்துதே கடலினுள் அலைகளும் கவிதைகள் எழுதுதே கர்த்தரின் வரவினை கரையிலே வரையுதே எங்குமே சமத்துவம் எல்லோர்க்கும…
-
- 2 replies
- 389 views
-
-
அதிகாரத் திமிர் ஒன்று அடங்கிப்போனதின்று-பா.உதயன் அதிகாரத் திமிர் ஒன்று இடிந்து விழுந்தது இலங்கைத் தீவில் இன்று இனவாதத்தின் இன்னும் ஒரு முகம் எரிந்து வீழ்ந்தது வீரம் பேசிய கோத்தா வீட்டுக்கு போய் விட்டார் தோல்வியை சுமந்தபடி பேரினவாதத்தின் போர் முகம் ஒன்று போன இடம் தெரியவில்லை சர்வாதிகார ஆட்சி ஒன்று சரிந்து விழுந்திருக்கிறது பசியோடு கிடந்தவனுக்கும் உரிமைக்காய் போராடியவனுக்கும் தொலைந்து போன மக்களுக்கும் நீதி கிடைத்தது போல் இருந்தது இன்றைய நாள் கூட நின்றவனுக்கும் கூடிக் குடிச்சவனுக்கும் முண்டு கொடுத்தவனுக்கும் போலிச் சோஷலிசக்காரனுக்கும் அபிவிருத்தி என்று அந்த மக்களை ஏமாத்தியவனுக்கும் திருடர்…
-
- 0 replies
- 389 views
-
-
இனி என்ன வாழ்க்கை என்ற சோகம் ராகம் வேண்டாமே விடுதலை தீயினை அணைத்திடும் துரோக எண்ணங்கள் வேண்டாமே உணர்வுகள் அழுவதால் வசந்தங்கள் விடியாதே உறவினை இழந்ததால் உறவுகள் முடியாதே நம்பிக்கை ஒன்றே வாழ்வை வெல்லும் நாணயம் ஆகிறதே கண்ணீரைத் துடை மனமே புதுக் காலம் இசை மனமே வெல்லும் நெஞ்சை உருவாக்கு வெற்றி வாழ்வை அரங்கேற்று !!!! (நன்றி முகநூல்)
-
- 0 replies
- 387 views
-
-
காத்திருப்பேன் மச்சான் கண் உறங்காமல் -பா.உதயன் 🌺 வழி நெடுக மல்லிகைப் பூக்கள் மச்சாள் உனக்கு பறிச்சு வரவா பார்த்து பல பூவாய் பறிச்சு வாடா பவளம் உனக்காக பார்த்து இருப்பாள் கடைகள் முழுக்க காப்பு வளையல் கண்ணம்மா ஒரு சோடி வேண்டி வரவா கைக்கு அளவாக வேண்டிவா மச்சான் காஞ்சிபுர சேலைக்கு சோடாய் இரண்டு காலுக்கு இரண்டு கால் சலங்கை கண்ணம்மா உந்தன் காலுக்கு அளவாய் மேளத்தின் தாளத்துக்கு ஆடும் உன் அழகுக்கு வெள்ளிக் கொலுசு கொண்டு நான் வாறேன் மச்சான் உனக்காய் பார்த்து இருப்பேன் பனம் பலகாரம் சுட்டு நான் வைப்பேன் அடுத்த வீட்டு மாமிக்கு மணக்க மணக்க ஆறு ஏழு கறியோட சோறும் சமைப்பேன் பச்சை நிறத்தில சேலை இரண்டு பவளம் உனக்காய் கொண்டு…
-
- 0 replies
- 384 views
-
-
ஆலன் என்ற சிரியா அகதிக் குழந்தை ஒன்றை ஒரு நாள் அலை கடல் தின்றது தெரியுமோ. ஏன் அவன் இங்கு வந்தான் என்றும் எதற்காக அவன் பிறந்த நாட்டில் வாழ முடியவில்லை என்றும் எவன் தான் கதைத்தான். எவன் தான் இவர்களை கடலினில் தேடினான். ஆனால் பணம் படைத்தவர்களுக்கோ அமெரிக்கர்களுக்கோ ஐரோப்பியர்களுக்கோ ஏதும் துன்பம் நடந்தால் உடனே முழு ஊடகங்களும் அதனோடு முழு உலகமும் பேசும். எத்தனை பாகுபாடுகளைக் கொண்ட சமத்துவமும் நீதியும் இல்லாத உலகம் இது. நாங்க மனுசங்க தான்ரா-பா.உதயன் எங்கள் தலையிலும் குண்டுகள் விழுந்தன எத்தனை மனிதர்கள் இறந்தனர் தெரியுமோ உங்கள் கடலிலும் அகதிகள் இறந்தனர் எத்தனை அகதிகள் இறந்தனர் தெரியுமோ ஏழைகள் இறந்தனர் எவருக்கும் தெரியுமோ எத்தனை குழ…
-
- 4 replies
- 384 views
-
-
'இன்றைய ஆசிரியர் நிலை' "கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உயிர்பெறுவது போல கரும் பலகையில் கற்பிப்பவனே ஆசான்!" "மக்களின் அறியாமை நீக்கி அறிவுவேற்றும் மகத்தான இப்பணியே ஆசிரியர் அறப்பணி மகிழ்வுடன் வரவேற்று அறிவினை பகிர்ந்து மனசோர்பு அற்று அர்ப்பணிப்பவன் ஆசிரியர்!" "கவிதையை கவிஞனைப் போல் வாசித்து கணித சிக்கலை இலகுவாக போதித்து கருத்துக்களை சிறிதாக சிறப்பாக பதித்து கலக்கம் போக்கி மனிதனாக்குபவன் ஆசிரியர்!" "ஆசான் இன்று ஒருவருமான தொழிலாகி ஆயிரமாண்டுகளாக சேவை செய்ததை மறந்து ஆச…
-
- 0 replies
- 380 views
-
-
"புரியாத புதிர் அவள் ??" "நிலா ஒளியில் காய்ந்து கனா கடலில் மிதந்து நலமா என கேட்டு நங்கை இவள் வந்தாள்!" "பலா பழம் சுவைத்து கானா பாட்டு பாடி சுகமா என கேட்டு சுந்தரி இவள் வந்தாள்!" "நெருங்கி வந்து இருந்தாள் நெஞ்சம் குளிர கதைத்தாள் குறும்பாய் சில செய்தாள் மறுத்தால் முறைச்சு பார்த்தாள்!" "சுருங்கி சிணுங்கி குழைவாள் கொஞ்சம் விலத்தி இருப்பாள் வெறுப்பாய் நான் பார்த்தாள் நறுக்காய் அவள் சிரிப்பாள்!" "மனம் திறந்து பேசுவாள் கள்ளம் கபடம் இல்லை சொல்ல எதோ வருவாள் நாணி கோணி போயிடுவாள்!" "சினம் கொண்டு முறைப்பாள் உள்ளம் அவளுக்கு கொதிக்கும் கொல்ல அவளுக்கு தோன்றும் கூனிக் குறுகிக் போயிடுவாள்!" "சந்த…
-
- 0 replies
- 379 views
-
-
காலைப் பொழுதொன்றில் கூவும் குயிலொன்று-பா.உதயன் 🌺 காலைப் பொழுதொன்றில் கூவும் குயிலொன்று யாரை அழைக்கிறது ஒரு கீதம் கேட்கிறது வானம் திறந்திங்கு மழைகள் பொழிந்திங்கு பூக்கள் மலர்கின்றதே பூமி வாசல் திறக்கின்றதே காலைக் கனவொன்று என் வாசல் வரை வந்து காதில் ஏதோ சொல்கிறது ஒரு கவிதை பிறக்கிறது யாழில் சுரம் ஒன்று தானாய் வந்திங்கு காதில் விழுகின்றது கல்யாணி ராகம் இசைக்கின்றது கடலும் நதியும் ஏதோ காதல் கதை பேசி வந்து கரையில் தவழ்கின்றது காலம் மெல்ல விடிகின்றது பாடும் பறவை எல்லாம் வானில் பறந்து அங்கு வாழ்வை வரைகின்றது வசந்தம் தெரிகின்றது வானம் திறக்கையிலே காலைப் பறவை வந்து பாடி ஏதோ சொல்லி நான் தொலைத்த கவிதை ஒன்றை கையில் தந்து போகின்றது…
-
- 0 replies
- 378 views
-
-
கிட்டு உன் பெயர் சொன்னபோதே சட்டென வாயெடுத்து மாமா என்று சொல்லும்-உன் இறப்பின் பின் பிறப்பெடுத்த மழலைகளும். நீ மரணித்துப்போன மனித பிறப்பல்ல, மண்டியிடாத மனிதராய் விடுதலை வாழ்வை வாழ கற்றுக்கொடுத்த வரலாற்று பிறவி, வரலாறுகளை வாரி வாரி கற்றுக்கொண்டாய்-உன் வாழ்வை எமக்கு வரலாறாய் வழி காட்டிவிட்டாய். எங்கள் விடுதலை போருக்கு நீ ஒற்றை பனைமரம். காற்றை கிழித்த சன்னங்கள் சொல்லும்-உன் களங்களின் வீரத்தை, கழுத்தில் தொங்கிய புகைப்பட கருவி சொல்லும்-உன் கலைகளின் காவியத்தை, போரியல் மரபுகளுள் போராடிய போர்மகனே எதிரி சொல்வான்-உன் அன்பான அரவணைப்பை, கிட்டண்ணா கிட்டண்ணா என்று சொல்லி கட்டப்பொம்மனையே மறந்து போனோம், மண்ட…
-
- 0 replies
- 376 views
-
-
அகழிகள் சுற்றிப் படர்ந்த கோட்டையின் மதில்களுக்கப்பால் சிம்மாசனத்தில் நீ! மானுட நேயமேதும் சுவாசத்தில் கலக்காமலிருக்க நரமாமிசம் தின்னும் முதலைகளை மிதக்கவிட்டிருகிறாய் எச்சரிக்கை முயற்சியாக... நானாய் இறங்கி மீனாய் மாறி நானாகவே கரையேறுகிறேன் நாக்கில் சொட்டும் நீரோடு பின் தொடருமவற்றின் பசி தீருமுன் வாயிலைத் திறந்துவிடு வாழ்க்கை என்பதன் அர்த்ததைக் கற்பித்துவிட்டு இரையாகிப் போகிறேன் என்றேனுமொரு நாள் தெளிவுற்ற நீ உப்பரிகையில் என்னை நினைத்து கண்ணீர் சிந்தலாம் வந்தேறிய நோக்கத்தை வரலாற்றில் வரவு வைத்துவிட்டு கூட்டுக்குள் உடல் சுருக்கிக் கொள்ளும் என் கவிதை! http://kayalsm.blogspot.fr/2012/11/blog-post_30.html
-
- 0 replies
- 373 views
-
-
பெண்ணிற்கு இலக்கணம் வகுத்தவன் அழுது கொண்டிருக்கிறான் ! பெண்ணையே தெய்வமென போற்றியவன் துடித்துக் கொண்டிருக்கிறான் ! பெண்ணையும் அவளின் அங்கங்களையும் விழி தராசுகளில் எடைபோட்டு களவாடப் பார்க்கும் கள்வர்களின் கைகளில் எப்போது தீப்பிடிக்கும்? நடந்தால் சிரித்தால் குனிந்து எதையாவது எடுத்தால் கூட போக உணவு கிட்டிய மகிழ்ச்சியில் ஓர் ஆணினம். இந்தியப் பெண்கள் அறிவில் - அழகில் வல்லவர்கள் தாம்! ஆனால்... நெறிதவறா சிற்பங்கள்! ஒவ்வொரு பெற்றோரும் பெண்ணைப் பிரசவித்து கூடவே ஒரு நெருப்பு வளையத்தையும் இட்டே வளர்க்கின்றனர்... பெண்ணினம் அடிமை என்பது பழையது ! பெண்ணினம் போர் வாள் என்பது புதியது ! ஓர் ஆணின் வாழ்வை விடவும் பெண்…
-
- 0 replies
- 341 views
-
-
"என் பிறந்த நாளுக்கு மனதில் உதித்தது" "அழகான வாழ்வு முடிவுக்கு பயணிக்குது அன்பான இதயங்களை எண்ணிப் பார்க்குது அதிகாரம் செலுத்திய காலமும் உண்டு அறிவு கொண்டு உணர்ந்ததும் உண்டு!" "ஆரம்பித்த எதுவும் முடிவு காணுமே ஆத்திரம் குறைத்தால் வாழ்வு சிறக்குமே ஆசை கொண்டு ஈடுபட வேண்டும் ஆணவம் துறந்து செயல்பட வேண்டும்!" "இன்பம் துன்பம் நீயே தேடியது இருப்பதைக் கொண்டு வழியை அமை இதயம் திறந்து வரவேற்க பழகு இல்லாத ஒன்றுக்கு ஏங்குவதைத் தவிர்!" "ஈசன் ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே ஈகை என்பது வறியவர்க்கு கொடுப்பதே ஈடிகை எடுத்து எதோ எழுதுகிறேன் ஈமஅழல் வானுறஓங்கி எரியும் வரை!" "உயர்ந்த நோக்கம் மனதில் எழுக உரிமை கெடாமல் ஒப்பந்தம் செய்க …
-
- 2 replies
- 335 views
-
-
ஹெர்மன் ஹஸ்ஸி- கவிதை தமிழில் மொழிபெயர்ப்பு : பேராசிரியர் மு. விஜயகுமார் ஜெர்மன் எழுத்தாளர். நோபல் பரிசு பெற்றவர். (1970) தலைப்பு: நிலைகள் நிலைகள் ஒவ்வொரு பூக்களும் தோன்றி மறைதல் போல இளமையும் மறைகிறது வாழ்வின் நிலைகளில். ஒவ்வொரு ஒழுக்கத்திலும் உண்மையை அறிகிறோம் மலரின் பருவங்கள் நிலையானதல்ல ஏனெனில் வாழ்க்கை ஒவ்வொரு வயதிலும் உள்ளது வருந்தாமல் தைரியமாக எதிர்கொள்ளுங்கள் பழைய உறவுகள் மறக்காமல் புதிய ஒளியைக் கண்டுபிடிங்கள் எல்லாத் தொடக்கமும் ஒரு மாயசக்தியாக வழிநடத்துகிறது. அதுவே நம்மைப் பாதுகாத்து உதவுகிறது அமைதியாக நெடுந்தூரப் பயணத்தைத் தொடங்குங்கள். வீட்டு நினைவுகள் நம்மைத் தடுக்கிற…
-
- 0 replies
- 334 views
-
-
உலகே மாந்தநேயம் இழந்தாயே!-மா.பு.பாஸ்கரன் – யேர்மனி. Posted on December 29, 2024 by சமர்வீரன் 33 0 அன்பின் மொழியில் பேசுங்கள் ஆண்டவன் மொழியில் சிந்தியுங்கள் என்று கூறிடும் மேற்கும் கிழக்கும் உன் வசதிக்கேற்ப நியாயங்களை நினைத்தவாறு வளைத்தபடி நீள்வளமாகக் கிடப்பதுமேன்? காஸா மனித வேட்டையை வேடிக்கைபார்க்கின்ற சிந்தனையை மாற்றிடும் போக்கைக் காண்பாயா மூன்று வாரமேயான குழந்தை சிலா(SILA) குளிரில் வாடியே இறந்ததை அறியாது மருத்துவமனைக்கு கொண்டு போனதும் மரணம் பற்றி அறிந்து கொண்டதும் தாயின் மனதையும்; தந்தையின் நிலையையும் விபரிக்க வார்த்தைகள் ஏதும் உண்டா? உலகுக்கென்ன ஆறாந்தலைமுறை ஆயுதங்களுக்…
-
- 0 replies
- 328 views
-
-
எம்.ஜி.ஆரும் இந்திரா காந்தியும் இருந்திருந்தால் இப்போது ஈழத்தில் வாழ்ந்திருப்போம்! Last Updated : இன்னும் உயிருடன் இருக்கின்றன மருதாணி மரங்கள் மற்றும் சில பூவரச மரங்கள் பாதி நிழலை வைத்திருக்கிறது மருத மரம் சாம்பல் சுவடுகளின் மேலாய் புதிய கூடாரம் நாட்டப்பட்டிருக்கிறது வானத்தின் காயம் ஆறிவிடும் என்று அம்மா நம்புவதைப்போல மீண்டும் வீடு வளரும் என்று தங்கை நம்புகிறாள் காணி நிலத்தில் மீண்டும் பாடல்கள் முளைக்கின்றன -தீபச்செல்வன் கவிஞர். தீபச்செல்வன் ( 1983 ) ஈழத்தின் வன்னிப் பிரதேசத்தில் பிறந்தவர். போரின் பூமிக்குள்ளேயே வளர்ந்து வாழ்ந்து வருபவர். 2005ஆம் ஆண்டில் முதல் கவிதை பிரசுரமானது. கண்முன்னால் நடந்த கொடூரங்களை எல்லாம…
-
- 0 replies
- 325 views
-
-
"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே" "ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே செத்த பிணங்களும் எழும்பி பார்க்குது சொத்தை மனமும் பூரிப்பு கொள்ளுது பித்தம் ஏறி என்காலும் தொடருது!" "ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே ஒளிரும் அவள் பல் அழகில் ஒடிந்து நானும் காதல் கொள்ள ஒப்புதல் கேட்டு மனம் கெஞ்சிநிற்குது!" "வித்தை பல உடலால் காட்டி கத்தை கத்தையாக காதல் எறிந்து முத்தம் பல இதழால் தந்து ஒத்தையடிப் பாதையில் அத்தமக போகிறாள்!" "ஒழிந்து ஓடி ஆடிப் பாடி ஒற்றை காலில் சலங்கை கட்டி ஒய்யாரமாய் வரம்பில் விழாமல் நடந்து ஒத்தையடிப் பா…
-
- 0 replies
- 321 views
-
-
அனுராவின் அலை இன்னும் வருகுதாம் அள்ளிப் போக வாக்கை கண்டீர் என்னென்னமோ தாறம் என்று ஏமாற்றும் வித்தை பாரும் வடக்கையும் கிழக்கையும் இரண்டா பிரிச்சுப் போட்ட வந்து இப்போ என்ன கதை சும்மா பொய்கள் சொல்ல வேண்டாம் அண்ணன் தம்பி என்று சொல்லி இப்ப என்ன சமத்துவக் கதை அப்போ எல்லாம் என்ன செய்தீர் நாங்கள் பட்ட துன்பம் கண்டும் கூட ஆமியோடு சேர்ந்து இருந்து எங்கள் இருப்பை எல்லாம் தொலைத்தனீங்கள் அகதியாக்கி எம்மை அலைந்து திரிய கலைத்தனீர்கள் இனவாதப் பேய்களோட நீங்கள் இருந்ததெல்லாம் உண்மை தானே சோசலிசம் கொம்யூனிசம் என்று கொள்கை எல்லாம் சொல்லிறியள் அங்க அது ஒன்றும் இல்லை என்று அறிந்தவனும் தெரிந்தவனும் அறிவர் உண்மையான சோஷலிசவாதி ஒடுக்கப்படுபவன் உரிமைக்காய் குரல் கொடுப்பான் …
-
- 0 replies
- 319 views
-
-
மாவீரர் தினம் 2012 எதிரி புலத்தில் களத்தில் மாணவர்கள் நேற்று அழித்தோம் இன்று உருவாக்கினோம் ஆண்கள் மேல் தடை பெண்கள் விளக்கால் உடை கைப்புலிகளை அழித்து உணர்வுப்புலிகளை உசுப்பித்து உலகத்திற்கும் சிங்களத்திற்கும் வெல்ல முடியாது தமிழன் விடுதலை உணர்வை !!!!!!!
-
- 0 replies
- 316 views
-
-
வருமானம் தருகின்ற உணவுகளில் செரிமானம் தராத பரோட்டாவே முதலிடம்! சிலர் பரோட்டா என்பர் சிலர் புரோட்டா என்பர் இதில் எது சரியென்று தெரியாது ஆனால் இவ்வுணவே சரியில்லை என்பதுதான் உண்மை! இது பண்டை காலத்து உணவல்ல... அண்டை நாட்டு உணவு! வயிற்றை நிரப்பி வாழ் நாளை குறைக்கும்! சுண்டி இழுக்கும் அண்டிப் போகாதே! இப்போதெல்லாம் எமதர்மன் மாடு மீது வராமல் மைதா மாவுமீது வருகிறான்... எச்சரிக்கை!!! 😋 😋.... 🙂 படித்ததில் பிடித்தது.
-
- 1 reply
- 314 views
-
-
"சிலுவையை மீண்டும் சுமப்போம்!" "உன்னைக் காட்டி கொடுத்தான் ஒருவன் சிலுவையில் நீ நின்றாய்! அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன் சிலகாசுக்கு விலை போனான்!" "அன்று முளைத்த இந்த வஞ்சகன் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான் சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்!" "உன்னைக் நேசித்த உன் தொண்டர்கள் சிலுவையை தோலில் சுமந்தனர்! அன்னை பூமி முழுவதும் உன் சிந்தனையில் வழி காட்டினர்!" "அன்று கண்ட மனித நேயம் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று நாம் உரிமையாய் வாழ சிலுவையில் எம்மை அறைகிறோம்!" "உன்னைக் கண்டதால…
-
-
- 2 replies
- 276 views
-