வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
இனி தங்கை வேடங்களில் நடிக்க மாட்டேன். ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்றார் சரண்யா மோகன்.இதுபற்றி அவர் கூறியதாவது: யாரடி நீ மோகினி, ஜெயம் கொண்டான் படங்களில் தங்கை வேடங்களில் நடித்தேன். இப்போது உருவாகி வரும் ஆறுமுகம் படத்திலும் பரத்தின் தங்கையாக நடித்திருக்கிறேன். இப்படம் நான் ஹீரோயினாக நடிப்பதற்கு முன்பு ஒப்புக்கொண்டது. இனிமேல் ஹீரோயினாகத்தான் நடிப்பேன். தமிழில் ஹீரோயினாக நடித்த முதல்படம் பஞ்சாமிர்தம். திரைக்கு வந்து நல்ல பெயர் பெற்று தந்தது. அடுத்து ‘அ ஆ இ ஈ’ படத்தில் நடித்தேன். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஈரம், வெண்ணிலா கபடி குழு படங்களில் ஹீரோயினாக நடிக்கிறேன். இரண்டுமே இரு மாறுபட்ட கதைக்களம். வெண்ணிலா கபடி குழு கிராமத்து பின்னணியில் உருவாகிறது. கல…
-
- 1 reply
- 1.5k views
-
-
விஜய்யுடன் ஒரு பாட்டுக்கு ஆட மறுத்தது ஏன் என்பதற்கு திவ்யா பதிலளித்தார். இதுகுறித்து திவ்யா கூற¤யதாவது:வாரணம் ஆயிரம் படத்தில் குடும்பப் பாங்கான வேடத்தில் நடித்ததாக பலரும் பாராட்டினார்கள். தொடர்ந்து வித்தியாசமான வேடங்களை ஏற்கவே விரும்புகிறேன். அடுத்ததாக காதல் டூ கல்யாணம் படத்தில் நடிக்கிறேன். மணிரத்னத்தின் உதவியாளர் மிலின்த் ராவ் இயக்குகிறார். ஆர்யாவின் தம்பி சத்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறேன். இது முழுக்க காமெடியான குடும்ப கதை. கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் வேடம். சிறிதும் கலாசார சம்பந்தமே இல்லாத இரு குடும்பத்தை சேர்ந்தவர்கள், காதலிக்கிறார்கள். இதன் விளைவுகளை யூமர் கலந்து இப்படம் சொல்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயஸ்ரீ நடிக்கிறார். மவுலி முக்கிய வேடம் …
-
- 0 replies
- 2.7k views
-
-
கஜினியின் கன்னா பின்னா ட்டால் குஷியாகியிருக்கிறார் அசின். இந்தியில் முதல் படமே வசூலில் பல சாதனைகள் புரிவதால், அடுத்து இவர் நடித்து வரும் லண்டன் ட்ரீம்ஸ் படத்துக்கு மவுசு கூடியுள்ளது. கஜினி ஷ¨ட்டிங்கின்போது இயக்குனர் முருகதாஸடன் ஆமிர்கான் காட்சிகளை பற்றி நிறைய விவாதிப்பார். அசினும் அது போலத்தானா? என கேட்டோம். நான் இயக்குனரின் நடிகை. இயக்குனர் என்ன சொல்லித் தர்றாரோ அதை மட¢டுமே கேட்பேன். எந்த விஷயத்துலேயும் தலையிடுறது கிடையாது. கஜினி படத்துக்கு மட்டுமில்ல, வேற எந்த படமா இருந்தாலும் சரி என்கிறார் அசின். தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த உங்களை, பாலிவுட்டில் புதுமுகம் என அடையாளப்படுத்துவது கஷ்டமா இல்லையா? கண்டிப்பா கிடையாது. தென்னிந்திய சினிமா வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தி படத்தில் கங்கனா நடித்துள்ள நிர்வாண காட்சியை நீக்க வேண்டும் என்று தணிக்கை குழு கூறி உள்ளது. தமிழில் ‘தாம் தூம்’ படத்தில் நடித்திருப்பவர் இந்தி நடிகை கங்கனா. இவர் இந்தியில் முகேஷ் பட் தயாரித்துள்ள ராஸ் படத்தில் நடித்துள்ளார். இதில் இவர் நிர்வாணமாக நடித்துள்ள காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தணிக்கை குழுவினர் இக்காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அக்காட்சியை நீக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து முகேஷ் பட்டுக்கும், தணிக்கை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இக்காட்சி படத்துக்கு முக்கியம். இதில் கங்கனா நிர்வாணமாக நடிக்கவில்லை. மெல்லிய ஆடை அணிந்துதான் நடித்திருக்கிறார். எனவே அனுமதித்து யு சான்றிதழ் தர வேண்டும் என்று முகேஷ் கூறினார…
-
- 20 replies
- 6.4k views
-
-
விஜயகாந்த் நடித்துள்ள ‘எங்கள் ஆசான்’ படத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. விஜயகாந்த், ஷெரீல் பிரிண்டோ நடித்துள்ள ‘எங்கள் ஆசான்’ படம் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இதை யுவ ஸ்ரீ கிரியேஷன் தயாரித்துள்ளது. இந்நிலையில், மெட்ரோ ஆடியோ நிறுவனத்தின் உரிமையாளர் காஜாமொய்தீன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘எங்கள் ஆசான்’ பட தயாரிப்பாளர் தங்கராஜ், எங்களிடம் வாங்கிய ரூ,49 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பி தர வில்லை, எனவே படத்தை திரையிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் அரி சங்கர் வாதிட்டார். வழக்கை நீதிபதி ஜெயபால் விசாரித்து, படத்தை திரையிட இடைக்கால தடை விதித்தார். இந்த வழக்கில் எங்கள் ஆ…
-
- 0 replies
- 1.2k views
-
-
சித்த மருத்துவத்தில் புகழ் பெற்றவர் பிரபு. சென்னையில் படிப்பு முடிந்து திரும்பும் ஒரே மகள் மோனிகாவுக்கு திருமணம் செய்ய எண்ணுகிறார். பாசமாக வளர்த்த மகளை பிரிய மனமில்லாமல் உள்ளுரிலேயே இருக்கும் ஹனீபாவின் மகன் அரவிந்துக்கு மணம் முடிக்க பேசுகிறார். திருமண தேதி முடிவு செய்தபிறகு தனிமையில் அரவிந்தை சந்திக்கும் மோனிகா, ஏற்கெனவே நவ்தீப்பை காதலித்ததாகவும், அவரிடம் கற்பை பறிகொடுத்ததாகவும் சொல்லி அதிர வைப்பதுடன் திருமணத்தை நிறுத்தச் சொல்கிறார். நமக்கு நிச்சயித்த தேதியிலேயே நவ்தீப்பை உனக்கு மணம் முடித்து வைக்கிறேன் என்று வாக்கு தருகிறார் அரவிந்த். சென்னை சென்று நவ்தீப்பை அழைத்து வருகிறார். அரவிந்தின் ரகசிய திட்டம் என்னவாகிறது என்பதே கிளைமாக்ஸ். நீக்குபோக்கு இல்லாத தெளி…
-
- 0 replies
- 1.2k views
-
-
பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா வேடத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. அவர் கூறியதாவது:பில்லா படத்தில் நயன்தாரா கவர்ச்சியாக நடித்திருந்தார். தெலுங்கில் அதே வேடம் எனக்கு தரப்பட்டுள்ளது. நானும் இதில் நீச்சல் உடையில் நடிக்கிறேன். அதனால் நயன்தாராவுக்கு போட்டியா எனக் கேட்கிறார்கள். போட்டி போட¢டு நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். பொங்கலுக்கு வெளியாகும் வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். இப்போது வேட்டைக்காரன் படத்தில் விஜய்க்கு ஜோடி சேர்ந்துள்ளீர்களே என்றெல்லாம் ஒப்பிடுகிறார்கள். அதையெல்லாம் நான் யோசிப்பதில்லை. ஒவ்வொரு நடிகைக்கும் ஓர¤டம் சினிமாவில் இருக்கிறது. எனக்கான இடத்தில் நான் இருக்கிறேன். என்னைப் பற்றி கிசு கிசு அதிகம் வெளியாவதை பற்றி எத…
-
- 0 replies
- 1.2k views
-
-
போக்கிரியை அடுத்து வில்லுவில் சேர்ந்திருக்கும் பிரபுதேவாவும், விஜய்யும் மாறி மாறி ஒருவரையொருவர் புகழ்ந்து தள்ளுகின்றனர். ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரித்திருக்கும் வில்லு நாளை மறுநாள் ரிலீஸாக இருக்கிறது. அதற்கு முன் பத்திரிகையாளர்களை நேற்று படக்குழுவினர் சந்தித்தனர். படத்தில் விஜய்க்கு டபுள் ரோலா? நீங்க ஒரு காட்சியில நடிக்கிறீங்களா? என பிரபுதேவாவிடம் கேள்விக்கணைகளை மாற்றி மாற்றி தொடுத்தார் ஒரு பத்திரிகையாளர். அவரின் கேள்விக்கு பதில் சொல்ல வந்த பிரபுதேவா, பல சுவாரஸ்யமான ஸ“னை எல்லாம் நீங்க சொல்றீங்களே இண்டர்நெட்ல வில்லு பாடல்காட்சியை வெளியிட்டது நீங்கதானா? என கேட்க நிருபர்களுக்கிடையே ஒரே சிரிப்பொலி கேட்டது. விஜய்யின் நடிப்பு, ரவிவர்மனோட ஒளிப்பதிவு, தேவிஸ்ரீ பிரசாத்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
கோபிசந்த் தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். 27 வருட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் நடிக்கும் இப்படம் குறித்து அவர் கூறியதாவது: தமிழில் நடிக்க வந்த புதிதில், தெலுங்கில் 5 படங்களில் அடியாள் வேடத்தில் நடித்தேன். சோபன்பாபு மற்றும் சுமன் ஹீரோவாக நடித்தனர். இப்போது 27 வருடத்துக்குப் பிறகு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறேன். சிவா இயக்கும் அப்படத்தில், கோபிசந்த் ஹீரோ. அவருக்கு தந்தையாக நடிக்கிறேன். கனமான வேடம் என்பதால் ஒப்புக்கொண்டேன். இப்போது தமிழில் ‘சங்கமித்ரா’, நவ்தீப்புடன் பெயரிடப்படாத படம், ‘பேட்டை முதல் கோட்டை வரை’ படங்களில் நடித்து வருகிறேன். ‘பொள்ளாச்சி மாப்ளே’ படம் விரைவில் ரிலீஸாகிறது. இவ்வாறு சத்யராஜ் கூறினார். -தினகரன் http://cinemaseithi.com/index.ph…
-
- 0 replies
- 1.2k views
-
-
கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற ஆப்தமித்ரா (தமிழில் சந்திரமுகி) படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் பி.வாசு. இதுபற்றி அவர் கூறியதாவது:கடந்த 4 வருடத்துக்கு முன்பு கன்னடத்தில் ஆப்தமித்ரா படத்தை இயக்கினேன். விஷ்ணுவர்தன் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் ஒரு வருடத்துக்கும் மேலாக ஓடி சாதனை படைத்தது. பின்னர் அதேபடத்தை தமிழில் சந்திரமுகி என்ற பெயரில் இயக்கினேன். ரஜினிகாந்த் நடித்தார். இந்நிலையில் ஆப்தமித்ரா படத்தின் 2-ம் பாகத்துக்கான ஸ்கிரிப்ட்டை உருவாக்கி வந்தேன். அப்பணி முடிந்தது. இதையடுத்து வரும் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. விஷ்ணுவர்தனே மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் சந்திரமுகி 2ம் பாகம் வருமா? என்கிறார்கள். முதலில் கன்னடத்தை முடிக்கிறேன். பிறக…
-
- 0 replies
- 961 views
-
-
சினிமாவில் யாரிடமும் ஆலோசனை கேட்க மாட்டேன் என்றார் நயன்தாரா. இதுகுறித்து அவர் கூறியதாவது: சினிமாவில் எனக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்கிறேன். யாருடைய ஆலோசனைகளையும் கேட்பதில்லை. என் மானேஜரிடம் மட்டுமே கலந்தாலோசிப்பேன். இந்த கேரக்டர் செய்யவேண்டாம், கிளாமராக நடிக்காதே போன்ற அட்வைஸ்களை மற்றவர்கள் சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன். அது என் தனிப்பட்ட பிரச்னை. தொடர்ந்து கிளாமருக்குத்தான் முக்கியத்துவமா என்கிறார்கள். அப்படியில்லை. கதையையும், உடன் நடிக்கும் ஹீரோ மற்றும் நிறுவனத்தை பொருத்தது அது. நான் நடிக்க வேண்டும் என்று நினைக்கிற போது நல்ல கேரக்டர்கள் கிடைப்பதில்லை. பெரிய ஹீரோ, பேனரிலிருந்து கிளாமராக நடிக்கச் சொல்லி கேட்கும் போது, அதை எப்படி மறுப்பது?…
-
- 4 replies
- 1.3k views
-
-
சினிமாவின் வயது நூறையும் தாண்டிவிட்டது! இன்று உலகின் பொழுதுபோக்கு சாதனங்களில் முதல் இடத்தில் இருப்பதும் சினிமாதான்! இந்தச் சினிமாதான் இன்று தமிழ் கலாச்சாரங்களை அழிக்கும் புதிய நோயாக உருமாறியிருக்கின்றது!. இப்பொழுது உருவாகின்ற சினிமாக்கள் எல்லாம் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு தமிழர் சமுதாயத்தை அழித்தே தீருவோம் என சபதமெடுத்து செயல்படுவதைப்போலவே வெளிவருகின்றன!. இந்தக் குற்றச்சாட்டு எங்கோ ஒரு மூலையில் இருந்து எழுந்தது அல்ல? தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வின்மீது அக்கறையுள்ளவர்களால் நாலா பக்கங்களில் இருந்தும் குவிந்தவண்ணமே இருக்கின்றது. முன்னர் வந்த திரைப்படங்களில் இப்படியான கலாச்சாரச் சீரழிவுகள் இருக்கவே இல்லை. இப்பொழுதுதான் மேலை நாட்டு நாகரீகங்களைப் பின்பற்றி ஆடை…
-
- 2 replies
- 1.5k views
-
-
விரைவில் ரிலீஸாகும் ‘வில்லு’, ‘நான் கடவுள்’ படங்களை தொடர்ந்து ‘படிக்காதவன்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது, சென்ஸார் போர்டு. கதை, திரைக்கதை, வசனம் எழுதி சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ், தமன்னா ஜோடி. காமெடிக்கு விவேக். வில்லனாக சுமன். உதவாக்கரை என்று குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட ஒரு இளைஞன், எப்படி வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்கு வருகிறான் என்ற கருவை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. -தினகரன் http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=472
-
- 0 replies
- 1.1k views
-
-
மோகன்லால், ஜீவா நடித்த ‘அரண்’ படத்தை இயக்கிய மேஜர் ரவி, தற்போது மலையாளப் படம் இயக்கி வருகிறார். இதையடுத்து தமிழில் அவர் இயக்கும் படத்துக்கு, பிரபலமான பழைய படத்தின் பெயர் வைக்கப்படுகிறது. இதில் அர்ஜுன் ஹீரோ. சுந்தர்.சி பாபு இசையமைக்கிறார். ‘சரித்திரம்’ படத்தை தயாரிக்கும் ஐ.டி.ஏ பிலிம்ஸ் எஸ்.என்.ராஜா, இதை தயாரிக்கிறார். பிப்ரவரியில் ஷ¨ட்டிங். -தினகரன் http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=473
-
- 0 replies
- 1.1k views
-
-
நடிகர் வடிவேலு குற்றவாளிகளை அடையாளங்காட்டினார் நடிகர் வடிவேலு வீடு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் ஆதரவாளர்கள் பதினைந்து பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளிகளை அடையாளங்காட்டுவதற்காக வடிவேலு அழைக்கப்படிருந்தார். வழக்கு சம்பந்தமான முதல் விசாரணையில் குற்றவாளிகளை அடையாளங்காட்டினார் வடிவேலு. ஆனால் குற்றவாளிகளில் ஐந்து பேர் மட்டுமே இன்று விசாராணைக்கு வந்தனர். விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷ் உட்பட பலர் வரவில்லை. இதனால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 2k views
-
-
என்னை கவனிப்பதைவிட நான் நடிக்கும் படங்கள் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றார் திவ்யா.அவர் கூறியதாவது:என் வாழ்வில் பல முறை கடுமையான கட்டங்களை கடந்திருக்கிறேன். விளம்பரங்களுக்கு போஸ் கொடுக்க கேட்டு நிறைய வாய்ப்புகள் வருகிறது. தேர்வு செய்துதான் ஒப்புக்கொள்கிறேன். என்னை கவனிப்பதைவிட நான் நடிக்கும் படங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். எவ்வித எதிர்மறை கேள்விகளுக்கும் இனி பதில் அளிக்கப்போவதில்லை. ஏதாவது ஒரு கருத்தை சொன்னால் அதை ஊதி பெரிதாக்கி விடுகிறார்கள். கதையே கேட்காமல் நட்புக்காகவும். மரியாதைக்காகவும் ஒப்புக்கொண்ட சில படங்கள் தோல்வியாக அமைந்தது. அதைப்பற்றி பேசுகிறவர்கள், 2008ல் பெரிய ட்டான எனது படங்களைப்பற்றி பேச தயங்குவது ஏன்? தமிழில் Ôபொல்லாதவன்Õ வெற்றிக்கு…
-
- 0 replies
- 1k views
-
-
விஜய், நயன்தாரா நடிக்கும் படம் 'வில்லு'. பிரபுதேவா இயக்கியுள்ள இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. படத்தை தணிக்கை குழுவினர் நேற்று முன்தினம் பார்த்தனர். சில காட்சிகளுக்கு கட் கொடுத்துவிட்டு யு/ஏ சர்டிபிகேட் வழங்கியுள்ளனர். இதில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் விஜய். -தினகரன் http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=470
-
- 0 replies
- 1.5k views
-
-
அபியும் நானும் குண்டு குழிகள் நிறைந்த கோலிவுட் நெடுஞ்சாலையில், நின்று நிதானமாக நடை போடுபவர் ராதாமோகன். காட்டுக் கூச்சல்களுக்கு நடுவிலும், ராதாமோகன் பேசும் 'மொழி'யில் எப்போதும் இருக்கும் ஒரு தாலாட்டின் அழகு! அப்படி ஒரு தாலாட்டுதான் அபியும் நானும்... 'குழந்தை பிறக்கும் போதே கூடவே ஒரு அப்பாவும் பிறக்கிறான். ஆனால் குழந்தைகள் வளர்ந்துவிடுகின்றன. அப்பா மட்டும் அப்படியே வளராமலே இருக்கிறான்'. க்ளைமாக்சில் வரும் இந்த வசனங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். தனது பெண் குழந்தை மீது இவர் வைத்திருக்கும் அளவு கடந்த பாசம்தான் கதை. முன்று வயது குழந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒரு பிச்சைக்காரனையே வீட்டுக்குள் சேர்த்துக் கொள்ளும் பிரகாஷ்ராஜ், அவள் வளர்ந்து பெர…
-
- 5 replies
- 2k views
-
-
சூர்யா நடிக்கும் படத்துக்கு ‘ஆதவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அயன்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதையடுத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘ஆதவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சூர்யா ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்கள் ஏற்கனவே ‘கஜினி’ படத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து மிஷ்கின் இயக்கும் ‘முகமூடி’ படத்தில் சூர்யா நடிக்கிறார். http://www.cinemaseithi.com/
-
- 0 replies
- 1.2k views
-
-
பெர்லின் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் முதன்முறையாக தமிழ் குறும்படம் இடம்பெறுகிறது.பிரதீபன் என்பவர் இயக்கி உள்ள குறும்படம் ‘என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்’. இலங்கையில் போரினால் தமிழ் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை கருவாக கொண்ட இப்படத்திற்கு சி.ஜே. ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராகவா அர்ஸ் எடிட்டிங் செய்துள்ளார். இந்த படம் பிப்ரவரி மாதம் நடைபெறும் பெர்லின் திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் பங்கேற்கிறது. தென்னிந்திய படம் ஒன்று இங்கு போட்டி பிரிவில் பங்கேற்பது இதுவே முதல்முறை. http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=458 -தினகரன்
-
- 0 replies
- 1.4k views
-
-
நடிகைதானே… இவர்களுக்கென்ன மரியாதை வேண்டியிருக்கிறது…’ இதுதான் நடிகைகளைப் பற்றிய பலரது மனநிலை. தங்களைப் பற்றிய எத்தனையோ அசிங்கமான செய்திகளைப் படித்தாலும் அதற்கெல்லாம் கொஞ்சமும் வருந்தாமல் அல்லது அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பொழுதுபோக்குத் துறையில் சிரிப்போடு வலம் வருவதும் ஒரு சவால்தான். இன்று தென்னிந்தியாவின் முன்னணி நடிகை த்ரிஷாவுக்குப் பிறந்த நாள். நிச்சயம் சக நடிகர் நடிகைகளுக்கு அமர்க்களமாக அவர் இரவு விருந்து கொடுத்திருப்பார் என்றாலும், அதற்கு முன் அவர் செய்த ஒரு நல்ல காரியம் அனைவரையும் நெகிழச் செய்தது. மாலை 4 மணிக்கு மேல் அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு வந்த த்ரிஷா, அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் ஏராளமான குழந்தைகளுடன் சேர்…
-
- 0 replies
- 1.9k views
-
-
"இலங்கையில் நடைபெறும் கொடிய போரினால் ஈழத் தமிழர்கள் படும் அவலங்களையும், காஷ்மீர் மாநில மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர்கள் முன்வந்தால் அதை அதை நான் ஒரு ரூபா கூட வாங்காமல் இலவசமாக இயக்கத் தயாராகவுள்ளேன்." - இவ்வாறு ஈழத் தமிழர் ஆதரவாளரும் தென்னிந்தியத் திரைப்பட இயக்குநருமான அமீர் உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:- இலங்கையில் நடைபெறும் இன அழிப்புப் போரினால் ஈழத் தமிழர்கள் சொல்லெண்ணாத் துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இவர்களின் உண்மையான முகத்தை வெளியுலகிற்கு கொண்டுவர இது ஒரு நல்ல சந்தர்ப்பம். அதேபோல் காஷ்மீர் மாநிலத்திலும் மக்கள் பெரும் துன்ப துய…
-
- 2 replies
- 2.3k views
-
-
ராசு மதுரவன் இயக்கும் படம் ‘மாயாண்டி குடும்பத்தார்’. இதில் தருண்கோபி, பொன்வண்ணன், சீமான் உட்பட 10 இயக்குனர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஹீரோயின்களாக பூங்கொடி, தமிழரசி அறிமுகமாகின்றனர்.இப்படத்தில
-
- 1 reply
- 2.2k views
-
-
தமிழில் கவர்ச்சி மோகம் விரைவில் மாறும் என்றார் டைரக்டர் விக்ரமன். அவர் கூறியதாவது:பொள்ளாச்சியை தொடர்ந்து மூணாறு, மற்றும் கேரள பகுதிகளில் மரியாதை படப்பிடிப்பு முடிந்து இப்போது காரைக்குடியில் நடக்கிறது. Ôவானத்தை போல, சூர்ய வம்சம் படத்துக்கும், மரியாதைக்கும் துளியும் சம்பந்தம் இருக்காது. குடும்பத்தில் மூத்த அண்ணனாக வானத்தை போலபடத்தில் அமைதியாக வருவார் விஜயகாந்த். இப்படத்தில் கம்பீரமான தந்தையாக வருகிறார். எல்லா இளைஞர்களுக்கும் இந்த அப்பாவை பிடிக்கும். கதையுடன் நகைச்சுவையும் இணைந்து வரும். நாயகி மீரா ஜாஸ்மின், ரமேஷ் கண்ணா, ஹீரோ விஜயகாந்த் என எல்லா கேரக்டர்களுமே காமெடியில் கலக்குவார்கள். இப்போதெல்லாம் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் படங்கள்தான் ஓடுகிறது என்கி…
-
- 0 replies
- 1.1k views
-
-
அசின் அளவுக்கு கிளாமராக நடிப்பேன் என்றார் பூனம் பஜ்வா.தெனாவட்டு ஹீரோயின் பூனம் பஜ்வா கூறியதாவது:தெலுங்கில் 4, கன்னடத்தில் ஒன்று என 5 படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் நடித்த தெனாவட்டுதான் நான் நடித்து கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்ற படம். எனது சொந்த ஊர் புனே. ஆனாலும் தென்னிந்திய படங்களில் குறிப்பாக தமிழில் பிரபலமாக வேண்டும் என்பதுதான் ஆசை. ஹீரோவுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள்தான் தமிழில் அதிகம் என்பதை புரிந்திருக்கிறேன். எல்லா ஹீரோக்களுடனும் நான் நடிப்பேன். அதேநேரம் நடிப்பை வெளிப்படுத்தும் படங்களுக்கும், ஹீரோயினை மையமாக வைத்த கதைகளுக்கும் முன்னுரிமை தருவேன்.¨ நீங்கள் கிளாமராக நடிப்பீர்களா? என்கிறார்கள். கிளாமராக நடிக்கும் நடிகைகளை பற்றி நான் விமர்சிக்க …
-
- 0 replies
- 1k views
-