வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
தசாவதாரம் திரைப்படத்தின் மீது கருத்தியல் சார்ந்த காட்டமான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் பலர் சுட்டிக் காட்டும் ஒரு விடயம் "பூவராகன்" பாத்திரம். கமல் ஏற்ற பத்து வேடங்களில் ஒரு தலித் தலைவரின் வேடமாக பூவரகான் பாத்திரம் வருகின்றது. நிறைய புரட்சிக் கருத்துக்களைப் பேசிக் கொண்டே, கடைசியில் மேல்சாதியினருக்காக தன்னுடைய உயிரை அர்ப்பணிக்கிறது இந்தப் பாத்திரம். வராகம் என்றால் பன்றி என்று பொருள். தலித் தலைவர் ஒருவரின் பெயரை பன்றி என்று அர்த்தம் வருவதாகவும், உருவத்தை அழகற்ற விதத்திலும் கமல் உருவாக்கியதும், கடைசியில் அந்தப் பாத்திரத்தை மேல்சாதியினருக்காக உயிர்த் தியாகம் செய்வதாக சித்தரித்ததும் கமலுடைய பார்ப்பனிய முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் உய…
-
- 6 replies
- 3.5k views
-
-
தனுஷ் படத்திலிருந்து வடிவேலு நீக்கப்பட்டார். தனுஷ்-தமன்னா நடிக்கும் படம் ‘படிக்காதவன்’. சுராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் தனுஷ§டன் வடிவேலு முதன்முறையாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. நகைச்சுவை பகுதியில் வடிவேலு முதல் நாள் நடித்தார். அப்போது இயக்குனர் சுராஜ் கொடுத்த வசனத்தை விட சில வரிகளை கூடுதலாக சேர்த்து வடிவேலு பேசினாராம். ‘அப்படி பேசுவது நன்றாக இல்லை; நான் எழுதியதை மட்டும் பேசுங்கள்’ என்று இயக்குனர் சொன்னாராம். மேலும் ++ http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=212
-
- 2 replies
- 1.1k views
-
-
குசேலன் படம் திரைக்கு வருவதையட்டி ஜப்பான் ரசிகர்களை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். ஜப்பானில் ரஜினியின் முத்து படம் திரையிட்டபோது அங்கு அவருக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகியது. ரஜினியின் ஸ்டைலில் ஜப்பானியர்கள் பலர் மயங்கினர். டோக்கியோவில் 23 வாரங்கள் முத்து படம் ஓடி சாதனையும் படைத்தது. தொடர்ந்து அங்கு ரஜினி படங்கள் திரையிடப்படுகின்றன. சிவாஜி திரைக்கு வரும் நேரத்தில் ஜப்பானியர்கள் சென்னை வந்து ரஜினியை சந்தித்தனர். இப்போது தனது ஜப்பான் ரசிகர்களை சந்திக்க ரஜினி அங்கு செல்கிறார். மேலும் ++ http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=210
-
- 0 replies
- 544 views
-
-
தனுஷக்கு வரும் 28ம் தேதி 25வது பிறந்தநாள். அன்று படிக்காதவன் ஷ¨ட்டிங்கிற்காக ஐதராபாத் செல்வதால் சென்னையில் ரசிகர்கள் முன்னிலையில் நேற்று பிறந்தநாளைக் கொண்டாடினார். வீரவாள் பரிசளித்த ரசிகர்கள், ‘இளைய சூப்பர் ஸ்டார் வாழ்க என்று கோஷமிட்டனர். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=205
-
- 0 replies
- 740 views
-
-
சத்யம் திரைப்படப்பாடல் ஹரீஸ் ஜெயராஜ் இசையில் சாதனா சர்க்கத்தின் குரலில் அதே குரல் மீண்டும். . . .. . . . என் அன்பே நாளும் நீ இன்றி நான் இல்லை என் அன்பே யாவும் நீ இன்றி வேறு இல்லை நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் ஏங்கிப்போனதே . . . என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே http://www.tamilmp3world.com/Sathyam.html
-
- 0 replies
- 755 views
-
-
சின்னம்மா திலகம்மா நில்லு நில்லு . . ஏ.ஆர்.ரகுமானின் இசையில் மீண்டும் ஒரு இனிய பாடல் சக்கரகட்டி என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற பென்னி டயால் மற்றும் சின்மயின் குரலில் பாடல் சற்று வித்தியாசமான இசையில் மிளிர்கிறது. . . குசேலனில் கிடைக்காத வாய்ப்பை இந்த பாடலில் மிக நேர்த்தியாக செய்திருக்கின்றார். . . வெயிலாய் தொட்டானே சூடு சூடாய் மழையாய் தொட்டானே கோடு கோடாய் . . http://www.tamilmp3world.com/Sakkarakatti.html
-
- 5 replies
- 2.1k views
-
-
தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்களில் ஒருவரும், நகைச்சுவை நடிப்புக்கு தனி இலக்கணம் வகுத்தவருமான நடிகர் நாகேஷ் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்தி பரவியதையடுத்து அவரது ரசிகர்களும் திரையுலகமும் அதிர்ச்சியடைந்தது. தமிழ்த் திரையுலகம் கண்ட மிகப் பெரும் நடிகர்களில் ஒருவர் நாகேஷ். நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல், நாயகன், குணச்சித்திரம், வில்லன் என பல தரப்பட்ட கேரக்டர்களில் கலக்கியவர். இன்று பிற்பகலில் நாகேஷ் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் பரவியது. தட்ஸ்தமிழுக்கும் அந்த தகவல் வந்து சேர்ந்தது. இதையடுத்து நாகேஷ் வீட்டை தொடர்பு கொண்டு விசாரித்தோம். நாகேஷ் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது உண்மைதான். ஆனால் மற்றவர்கள் சொல்வது போல் எதுவும் இல்லை. விரைவில் அவர் தேறி விடுவார்…
-
- 6 replies
- 2.4k views
-
-
நடிகை கோபிகாவுக்கும் டப்ளின் வாழ் டாக்டர் அஜிலேஷூக்கும் நேற்று திருச்சூரில் நிச்சயதார்த்தம் நடந்தது. கேரள மந்திரிகள் ராஜேந்திரன் மற்றும் விஸ்வநாதன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விரைவில் தம்பதிகளாகப் போகும் கோபிகாவையும்-அஜிலேஷையும் வாழ்த்தினார்கள். நடிகைகள் பாவனா, சம்விர்தா, ரம்யா நம்பீசன், சம்யுக்தா, நடிகர் பிஜூ மேனன் ஆகியோர் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டனர். சிவப்பு மற்றும் மஞ்சள் நிற காக்ரா சோளியில் தகதகவென மின்னிய கோபிகா, திரைப்படங்களில் பார்ப்பதை விட அழகாக, மகிழ்ச்சிப் புன்னகையுடன் காணப்பட்டார். மணமக்கள் வைர மோதிரம் மாற்றி திருமணத்தை நிச்சயம் செய்தனர். நாளை மறுதினம் எர்ணாகுளத்தில் உள்ள புனித தாமஸ் சர்ச்சில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. ஜூலை 20-ம்…
-
- 29 replies
- 4.6k views
-
-
நடிகை ஐஸ்வர்யாராய்க்கு திருமணத்திற்கு பிறகும் ஏராளமான பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அவர் தமிழில் ரஜினிக்கு ஜோடியாக ரோபோவில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். விரைவில் இதன் படிப்பிடிப்பு தொடங்க இருக்கிறது இந்த நிலையில் ஐஸ்வர்யாராய் சாஸ் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிரபல ஹாலிவுட் நடிகர் மெரில் ஸ்ட்ரிப் நடிக்கிறார். இப் படத்தில் ஐஸ்வர்யாராய் விபசார அழகியாக நடிக்கிறார். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=195
-
- 8 replies
- 2.4k views
-
-
"உணர்வு ரீதியான படங்களுக்கு ஏன் இசையமைப்பதில்லை?" என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு, டைரக்டர் அமீர் கேள்வி விடுத்தார். சின்ன மாப்பிள்ளை, அரவிந்தன், மாணிக்கம், ராசய்யா உள்பட பல படங்களை தயாரித்த டி.சிவா, அம்மா கிரியேஷன்ஸ் சார்பில், `சரோஜா' என்ற புதிய படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது. விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டு `சரோஜா' படத்தின் பாடல்களை வெளியிட்டார். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=194
-
- 0 replies
- 843 views
-
-
16 மணி நேரம் படமாக்கப்பட்ட முதலிரவுக் காட்சி! வியாழன், 10 ஜூலை 2008( 20:17 IST ) எதிலுமே ஒரு பர்பக்சனை எதிர்பார்ப்பவர்கள் நம் இயக்குநர்கள். தான் நினைக்குற விஷயம் கிடைக்கிற வரை திருப்தியடைவதில்லை. ஒரு சண்டைக் காட்சியாகட்டும், பாடல் காட்சியாகட்டும் டேக் மேல் டேக்காக எடுத்து தனக்கு ஓகே ஆன பிறகுதான் விடுவார்கள். டைரக்டர் ஹரி மட்டும் இதற்கு விதிவிலக்கானவரா என்ன? இவர் இயக்கிவரும் 'சேவல்' படத்துக்காக ஒரு முதலிரவுக் காட்சியை 16 மணி நேரம் எடுத்து படமாக்கியுள்ளார். படத்தில் பரத் - பூனம் பாஜ்வா ஜோடி. இரண்டாவது ஜோடியான சிம்ரனுக்கும் பிரேமுக்கும் எடுக்கப்பட்ட முதலிவுக் காட்சிதான் 16 மணி நேரம் பிடித்துள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கிய ஷ¥ட்டிங் மறுநாள் அ…
-
- 16 replies
- 5.8k views
-
-
பார்ப்பனர்களை அப்பாவியாக சித்தரிக்கின்ற அரசியலுக்கு துணை போகின்ற கமல்ஹாசன் இந்துத்துவத்தின் இன்னொரு அரசியலுக்கும் தசாவதாரத்தின் மூலம் துணை போகின்றார். பாபர் மசூதி பிரச்சனைக்குப் பின் நடைபெற்றுவரும் இந்த அரசியலை சற்று சுருக்கமாகப் பார்ப்போம். “அறை எண் 305இல் கடவுள்” படத்தில் ஒரு காட்சி வரும். பிரகாஸ்ராஜ் ஒவ்வொரு மதத்தினதும் கடவுளின் வடிவத்தில் தோன்றுவார். இந்து மதத்தின் முறை வருகின்ற போது அங்கே விஸ்ணுவின் வடிவத்தில் பிரகாஸ்ராஜ் தோன்றுவார். இதுதான் அந்த அரசியல். சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தமிழ் சினிமாவின் பக்திப் படங்களைப் பார்க்கின்ற போது விஸ்ணு ஒரு துணைப் பாத்திரமாகத்தான் இருந்தார். இரண்டு மூன்று வசனங்களுக்கு மேல் அவருக்கு இருக்காது. தெலுங்கிலிருந்த…
-
- 2 replies
- 1.7k views
-
-
ரஜினியைப் போன்ற உயர்ந்த குணமுள்ள உத்தம மனிதனை என் வாழ்நாளில் கண்டதில்லை. அவருக்கு கோயில் கட்டி கும்பிடணும் என்று நெகிழ்கிறார் வைகைப் புயல் வடிவேலு. இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தின் தோல்விக்குப் பிறகு எந்தப் பத்திரிக்கையாளரிடமும் பேசுவதில்லை என முடிவெடுத்திருந்த வடிவேலு, ஒரு வழியாக தன் கோபத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, மீடியாக்களிடம் பேசத் தொடங்கியுள்ளார். குசேலன் படப்பிடிப்பு முடிந்த பிறகு, அந்தப் பட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது: குசேலன் படத்துல நான் நடிக்கக் காரணமே அண்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். அவரைப் பத்தி ஒரே வார்த்தையில சொல்லணும்னா... மனிதருள் மாணிக்கம். சந்திரமுகி படத்தைவிட இந்தப் படத்துலதான் அண்ணன் ரஜினியின் அருமைகளைத் தெரி…
-
- 6 replies
- 3.2k views
-
-
'லாடம்' படத்துக்காக ஒரு முத்தக் காட்சியில் நடிக்க 7 டேக்குகள் வாங்கினாராம் நடிகை சார்மி. காதல் அழிவதில்லை படத்தில் சிம்புவின் நாயகியாக அறிமுகமானவர் சார்மி. அந்தப் படம் சுமாராகப் போனாலும், கோலிவுட்டில் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டதில் ரொம்பவே அப்செட்டாகி ஆந்திர பூமியில் செட்டிலாகி விட்டார். இன்று தெலுங்கின் பிரபல ஹீரோக்கள் அனைவரோடும் ஜோடி போட்டு விட்ட சார்மிக்கு ஒரே ஒரு பெரும்குறை. தமிழில் கிளிக் ஆகவில்லையே என்று. அந்தக் குறையைத் தீர்க்கும் விதத்தில் தயாராகிக் கொண்டிருக்கிறது லாடம். பிரபு சாலமன் இயக்கும் இப்படத்தின் ஹைலைட்டே சார்மியின் கவர்ச்சிதான். தெலுங்கிலும் இந்தப் படம் ஒரே நேரத்தில் வெளியாவதால், கவர்ச்சியின் எல்லையை இன்னும் கொஞ்சம் விஸ்த…
-
- 0 replies
- 807 views
-
-
ஒரு பாட்டுக்கு 13 மாதங்கள்! வியாழன், 10 ஜூலை 2008( 20:46 IST ) வருடக் கணக்கில் படம் எடுக்கும் இயக்குநர்கள் நம் தமிழ்த் திரையுலகில் உண்டு. கமல், பாலா, ஷங்கர், அமீர் என நீளும் இப்பட்டியலில் இயக்குநர் கலாபிரவுவையும் சேர்த்துவிடலாம். இவர் இயக்கி வெளிவர இருக்கும் 'சர்க்கரை கட்டி' படத்தில் ஒரு பாடலுக்கு 13 மாதங்களாய் கிராஃபிக்ஸ் பண்ணியுள்ளார்களாம். பாக்யராஜ் மகள் சாந்தனு ஹீரோவாக, வேதிகா ஹீரோயினாக நடிக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மானின் மியூசிக்கிற்காக பல மாதங்கள் காத்திருந்து, இசைப் புயலின் இசையமைப்பில்தான் படம் வரவேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்து கலாபிரபு சற்றும் பின்வாங்கவில்லையாம். இயக்குநரின் அன்பான காத்திருப்புக்கு நன்றி சொல்லும் வித…
-
- 0 replies
- 868 views
-
-
தமிழ் ரசிகர்களின் நமீதா மோகம் தலை கால் புரியாத அளவுக்குப் போய் விட்டது... அதாவது கோயில் கட்டும் அளவுக்கு. ஏற்கெனவே குஷ்புவுக்கு திருச்சிக்கு அருகே கோயில் கட்டி தங்கள் ரசிப்புத் திறனை உலகுக்கே பறைசாற்றியவர்கள் தமிழ் ரசிக மகா ஜனங்கள். அது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பின் அடையாளம் என அகமகிழ்ந்து போனார் குஷ்பு. மூன்று காலப் பூஜையெல்லாம் கூடச் செய்தார்கள். கோயிலுக்கு நேரில் வாங்க தெய்வமே, என ரசிகர்கள் வைத்த கோரிக்கையை மட்டும் கவனமாக நிராகரித்துவிட்டார் குஷ்பு (காணிக்கை தராத வெத்துக் கோயிலுக்குப் போறதுல என்ன லாபம்?!). இப்போது கவர்ச்சி வெடிகுண்டு நமீதா முறை. ஏற்கெனவே இவருக்குக் கோயில் கட்ட ஒரு கூட்டமே அலைந்து கொண்டிருந்தது. ஆனால் 'என்கு கோயில் வேணாம்.. நெஞ்லே எடம்…
-
- 2 replies
- 1.3k views
-
-
காதலுக்காக போராடும் இளைஞன்:முனியாண்டி (திரைவிமர்சனம் ) பொன்வண்ணன், தாரா தம்பதியரின் மகன் பரத், விலங்கியல் மூன்றாமாண்டு படிக்கிறார். ஊர் பெரிய புள்ளி ‘சங்கர் குரு’ ராஜாவின் மகள் பூர்ணாவை, கல்லூரியில் பார்த்ததுமே காதல் கொள்கிறார். இருவரும் ஒரே ஜாதி என்பதால், காதல் ஒர்க்கவுட் ஆகும் என்று நினைக்கிறார். இதற்கிடையே ராஜாவுக்கும், இன்னொரு ஊர் பெரிய புள்ளிக்கும் ஜாதி மோதல் உண்டாகிறது. அதன் எதிரொலி, கல்லூரி தேர்தலில் மாணவர்களிடையே கலவரமாகிறது. பெரிய புள்ளிகள் ஒருவரை ஒருவர் வீழ்த்த வலை விரிக்கின்றனர். ஒரு சந்தர்ப்பத்தில், ‘நான் உன்னை காதலிக்கவே இல்லை’ என்று அணுகுண்டு போடுகிறார் பூர்ணா. உடைந்து போன பரத், அவரை தென்னந்தோப்புக்கு வரவழைத்து, தோழிகள் மத்தியில் செருப்பால் அறைகிறா…
-
- 0 replies
- 925 views
-
-
கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் மர்மயோகி படத்தில் நடிக்கவில்லை என்றார் ஸ்ரேயா. இதுகுறித்து அவர் கூறியதாவது: கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது நடிகைகளின் ஆசை. எனக்கும் அந்த ஆசை உள்ளது. மர்மயோகி படத்தில் அவர் ஜோடியாக நடிப்பதாக இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக உள்ளதால் அதில் நடிக்க முடியவில்லை. மேலும் புதுப் படங்கள் எதையும் ஒப்புக்கொள்ள முடியாத நிலையில் உள்ளேன். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=175
-
- 0 replies
- 907 views
-
-
திரண்ட புஜங்களும், தொங்குகிற பூணூலும், ஆவேசப் பார்வையுமாக ரங்கராஜ நம்பி ஒரு பக்கம். நடப்பதற்குக்கூட நவீன கருவிகள், கையில் செல்பேசி, பறக்கும் பைக் என விஞ்ஞானி கோவிந்த ராமசாமி ஒருபக்கம். என்ன சொல்ல வருகிறார் கமல்? படத்திற்கான விளம்பரம் தொடங்கிய நாளிலிருந்து தொடங்கிவிட்டது சந்தேகம். பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் பின்னர் (படத்தைப் பார்க்காமலேயே) வைணவர்கள் மனம் புண்படும் படி இருக்கிறது என்று வழக்குப் போட்டு விட்டார்கள் வைகுண்டதாசர்கள். இப்படி சர்ச்சைகள் சூழப் பிறந்த தசாவதாரம் படத்தை பார்க்காமல் நாமும் அரைகுறைத் தனமாக பேசக்கூடாது என்பதால் முதலில் கதை... கிருமி கண்ட சோழன் கோவிந்த ராமசாமியும், (விளக்கம் படத்தில் காண்க) சக விஞ்ஞானிகளும் கூடி விளையாடிய க்ஷடி ளுலவோநவஉ ஆயுத வ…
-
- 0 replies
- 1.6k views
-
-
'ஆச்சி'க்கு அமெரிக்க மரியாதை! மேலும் புதிய படங்கள்'ஆச்சி' மனோரமாவுக்கு அமெரிக்க பல்கலை. டாக்டர் பட்டம் 'ஆச்சி' ..! மக்கள் திலகம், நடிகர் திலகம் மாதிரி தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் நிரந்தரமாய் ஒட்டிக் கொண்ட இனிய அடையாளப் பெயர். நவரச நாயகியாக வலம் வரும் மனோரமாவுக்கு திரையுலகம் வைத்த செல்லப் பெயர்தான் 'ஆச்சி'. அந்த 'ஆச்சி' நடிக்க வந்து 50 ஆண்டுகள் ஆகப்போகிறது! இன்று அந்த மகா நடிகைக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்துள்ளது. காரைக்குடிக்குப் பக்கத்தில் பள்ளத்தூர் என்ற கிராமத்தில் 1943-ல் பிறந்த கோபிசாந்தா தனது 12வது வயதில் ஒரு நாடகக் குழுவில் நடிப்பைத் தொடங்கினார். பள்ளத்தூர் பாப்பா என செல்லமாக அழை…
-
- 10 replies
- 2.2k views
-
-
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாய்த்தர்க்கம் ராதிகா ஓர் சிங்களப் பெண் - பாலு ; என் தந்தை ஓர் பச்சைத் தமிழன் - ராதிகா 7/6/2008 5:46:56 PM - சென்னை, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நடிகை ராதிகாவுக்கும் மற்றொரு தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தக்க நேரத்தில் பொலிஸார் தலையிட்டு தடுத்ததை அடுத்து பெரும் மோதல் தவிர்க்கப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிலிம் சேம்பரில் நேற்று நடைபெற்றது. செயலாளர் பதவிக்கு போட்டிடும் கேயார், நடிகை ராதிகா ஆகியோர் அதன் பின்னர் வாக்களித்தனர். நடிகை ராதிகா வாக்களித…
-
- 0 replies
- 863 views
-
-
இரண்டு வருட பிரிவுக்கு பிறகு சிம்பு, நயன்தாராவும் திடீரென்று சந்தித்து மனம் விட்டு பேசினர். சிம்புவும், நயன்தாராவும் கடந்த 2 வருடத்துக்கு முன்பு காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். வல்லவன் படத்தில் சிம்புவுடன் நெருக்கமாக நடித்தார் நயன்தாரா. இதையடுத்து இவர்களுக்குள் நெருக்கம் அதிகமானது. திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டு, ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகள் சுமத்தி பேட்டி அளித்தனர். மேலும்........ http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=168
-
- 0 replies
- 1.1k views
-
-
கமல்ஹாசன் தன்னை திராவிட கழகத்தை சேர்ந்த ஒருவராக பிரகடனப்படுத்தியிருப்பவர். அதனாலேயே அவரால் பல விமர்சனங்களில் இருந்து தன்னை காத்துக் கொள்ள முடிகிறது. பகுத்தறிவுவாதிகளும் “எம்மவர்” என்ற பாசத்தோடு கமல் என்ன செய்தாலும் அதற்கு அவர்களே ஒரு சமாதானத்தையும் சொல்லி விட்டு போய் விடுகிறார்கள். பார்ப்பனர் அல்லாத இயக்குனரான சங்கரை ஒரு பார்ப்பனியவாதியாக இனங்காண முடிந்த இவர்களுக்கு கமலைப் பற்றி ஒரு சிறு சந்தேகம் கூட வரவில்லை என்பது ஆச்சரியமான விடயம்தான். தமிழ் சினிமாவில் பார்ப்பனர்களை மிகவும் அப்பாவிகளாக காட்டுகின்ற ஒரு வழக்கம் பல ஆண்டுகளாகவே நிலவி வருகின்றது. பார்ப்பன சமூகத்தை சேர்ந்த தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தொடக்கி வைத்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது. பார்ப்பனர்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
உதாவாக்கரை என்று அப்பாவால் பட்டம் கட்டப்பட்ட பிள்ளை தலையெடுத்து குடும்பத்தைக் காப்பாற்றும் அரதப்பழசானக் கதையுடன் கொஞ்சம் காமெடி - செண்டிமெண்ட் கலந்து எடுக்கப்பட்டப் படம் தான் பாண்டி. கண்டிப்பான பள்ளி ஆசிரியர் நாசர். அவரது மனைவி சரண்யா. ஸ்ரீமன், லாரன்ஸ் மற்றும் மூன்று பெண்கள் குடும்பத்தின் இளைய வாரிசு லாரன்ஸ். தன் சண்டியர்தனமான நடவடிக்கைகளால் நாசரால் வெறுக்கப்படும் லாரன்ஸ் மலை போல நம்புவது அம்மா சரண்யாவை மட்டும். ஒரு கட்டத்தில் மகளின் திருமணத்திற்காக கடனாக வாங்கிய பணம் காணாமல் போக - பழி லாரன்ஸ் மீது விழுகிறது. நாசர் லாரன்ஸை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். தங்கைகளின் திருமணத்தை நடத்தவும், தனது அம்மா ஆசைப்பட்டபடி சொந்தமாக ஒரு வீடு கட்டுவதற்காகவும் கிடைக்கும் வேலையை ஒத்த…
-
- 0 replies
- 930 views
-
-
தசாவதாரம் - பலராலும் பல விதமாக விமர்சிக்கப்பட்டு விட்டது. என்னுடைய பங்கிற்கும் தசாவதாரம் படத்தைப் பார்த்த பொழுது, பார்த்து முடித்த பின்பு எனக்கு ஏற்பட்ட சிந்தனைகளை பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன். கமல் மீது எனக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் உண்டு. தம்மைப் முற்போக்குவாதிகளாக காட்டிக் கொள்கின்ற பார்ப்பனர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின்பு தம்முடைய உண்மையான பார்ப்பனிய முகத்தை காட்டி விட்டுப் போயிருக்கின்ற வரலாற்றுப் பதிவுகள் கமலைப் பார்க்கின்ற பொழுது நினைவிற்கு வந்து தொலைக்கும். ஆரம்பத்தில் முற்போக்குச் சிந்தனைகளோடு கதைகளை தந்த சுஜாதா கடைசியில் திரைப்படத்துறைக்குள் காலடி எடுத்து வைத்த பொழுது பார்ப்பனிய சக்திகளுடன்தான் கைகோர்த்துக் கொண்டார். பார்ப்பன சங்கத்தில் மு…
-
- 0 replies
- 1.4k views
-