வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
பீமா படத்தில் நான் சாவது போல நடித்தது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது. எனவே இனிமேல் இதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் திரிஷா. சீயான் விக்ரமும், திரிஷாவும் நடித்த பீமா படத்தில், திரிஷாவை சுட்டுக் கொல்வது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இது அவரது ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும், தோழியருக்கும், நட்பு வட்டாரத்திற்கும் பெரும் அதிருப்தியைக் கொடுத்து விட்டதாம். இப்படியெல்லாமா நடிக்க சம்மதிப்பது, இனிமேல் இதுபோல நடிக்கக் கூடாது என்று அனைவரும் திரிஷாவை வலியுறுத்தினார்களாம். குறிப்பாக அவரது அம்மா உமாவுக்கு திரிஷாவின் இறப்புக் காட்சியைப் பார்த்து அழுகையே வந்து விட்டதாம். இதனால் இனிமேல் இறப்பது போன்ற காட்சியில் நடிப்பதில்லை என்ற முடிவுக்க…
-
- 9 replies
- 1.9k views
-
-
யுகபாரதி இன்றைய இலக்கிய உலகில் தனக்கென ஒரு அடையாளத்தைப் பதித்துகொண்டுள்ள இளங்கவிஞர். மரபுக்கவிதைகளாகட்டும் , புதுக்கவிதைகளாகட்டும், இல்லை திரைப்படப் பாடல்களாகட்டும் - யாவுமே யுகபாரதிக்கு இயல்பாகவே கை வந்திருக்கிறது. தனது கவிதை தொகுப்புகளுக்கு இரண்டு முறை தமிழக அரசின் விருதுகளையும் குறள் பீடப் பாராட்டு இதழும் யுகபாரதி பெற்றிருக்கிறார். கல்கி வார இதழில் திரைப்படப் பாடல்கள், பாடலாசிரியர்கள் பற்றி அவர் ஆய்வு பூர்வமாக எழுதிவரும் கட்டுரைத் தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரது ஆளுமையைப் பிரதிபலிக்கும் அவரது நடைச்சிறப்பு அவரது வெற்றிக்குக் காரணம். இனி யுகபாரதியுடன் சிவ. ஜம்புநாதனின் நேர்முகம்: யுக பாரதி தங்களின் இயற்பெயரா? என் இயற்பெயர் பிரேம்குமார். நான் 13 வது வயதி…
-
- 0 replies
- 3.3k views
-
-
இந்த ஆண்டு கோடைகாலம் திரிஷாவின் காலமாக மாறியுள்ளது. காரணம், இந்த கோடை விடுமுறையில் திரிஷா நடித்துள்ள 3 படங்கள் தமிழிலும், தெலுங்கிலும் ரிலீஸாகின்றன. விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள குருவி, ராதாமோகனின் இயக்கத்தில் உருவாகியுள்ள அபியும் நானும், தெலுங்கில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் உருவாகியுள்ள புஜ்ஜிகாடு ஆகிய மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. தரணியின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் திரிஷா நடித்துள்ள குருவி அவருக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 1ம் தேதி உலகெங்கும் குருவி ரிலீஸாகிறது. அபியும் நானும் படத்தில் பிரகாஷ் ராஜுக்கு மகளாக நடித்துள்ளார் திரிஷா. இதில் திரிஷா கேரக்டருக்குத்தான் முக்கியத்துவம். எனவே இப்படத்தையும் அதிகம் எதிர…
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழ் சினிமாவில் இந்து கடவுள்களை கொச்சைபடுத்தி வருவதாக குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது இந்துத்வா அமைப்புகள். இது குறித்து பகிரங்கமாகவே பலமுறை எச்சரித்திருக்கிறார் இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன். இந்நிலையில் எரிகிற தீயில் பெட்ரோலை ஊற்றிய மாதிரி ஒரு காரியத்தை செய்திருக்கிறது புதிய திரைப்படத்திற்கான அழைப்பிதழ் ஒன்று. வணக்கம்மா என்ற படத்தின் அழைப்பிதழில், இராமனும், அனுமனும் சிறுநீர் கழிப்பது போன்ற படத்தை அச்சிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, வருகிற புதனன்று நடைபெறவிருக்கும் படத்துவக்க விழாவை முன்னிட்டு, சென்னை முழுவதும் இதே படத்தை பிரமாண்ட போஸ்டராகவும் ஒட்டப் போகிறார்களாம். படத்தின் தயாரிப்பாளர் அன்புத் தென்னரசன், கடவுள் மறுப்பு கொள்கை உடையவர். பெரியார் த…
-
- 41 replies
- 8.7k views
-
-
முதல்வரிசை ரசிகர்கள் முதல் முதலமைச்சர்கள் வரை ஒரு நடிகரை ரசிப்பது என்பது சாதாரண விஷயமில்லை. முன்பு எம்.ஜி.ஆரை அப்படி ரசித்தார்கள். பிறகு ரஜினி. இப்போது அந்த இடத்தைப் பிடித்திருப்பவர் இளைய தளபதியாக வலம் வரும் விஜய்! சமீபத்தில் தெற்கு ஆஸ்ட்ரேலியப் பிரதமர் மைக் ரான் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தார். அப்போது சென்னையில் நடந்த தென்னிந்தியத் தொழில் வர்த்தகச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இருநாடுகளுக்கு இடையே தொழில், வர்த்தக உறவுகள் செழிக்க வேண்டும் என்றால் பண்பாட்டுப் பரிமாற்றம் இருக்க வேண்டும் என்றவர், சென்னையை வெகுவா…
-
- 3 replies
- 2k views
-
-
பிரபல்யமான "கொக்கு சைவக் கொக்கு" பாட்டைப் பாடிய பாட்டியார்.. தேனி குஞ்சரம்மா அவர்கள் மாரடைப்பால் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 75. -அவருக்கு எமது கண்ணீரஞ்சலிகள். ------------------ நாட்டுப்புறப் பாடகி தேனி குஞ்சரம்மா மரணம் ென்னை: பிரபல நடிகையும், நாட்டுப்புறப் பாடகியுமான தேனி குஞ்சரம்மா மாரடைப்பால் மரணம் அடைந்தார். பாரதிராஜாவின் கருத்தம்மா படத்தில் பாடகியாகவும், நடிகையாகவும் அறிமுகமானவர் குஞ்சரம்மா. அதன் பின்னர் ஏராளமான படங்களில் நடித்தும், பாடியும் இருக்கிறார். வெண்கலக் குரலில் இவர் பாடியுள்ள பல பாடல்கள் பிரபலமானவை. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு குஞ்சரம்மாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அன…
-
- 4 replies
- 2k views
-
-
தமிழ்சினிமா மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாடும் கன்னத்தை பிடித்து "கண்ணே.." என்று கொஞ்சலாம் விக்ரமை! வேறொன்றுமில்லை. தனது கண்களை தானம் செய்திருக்கிறார் விக்ரம். அதுமட்டுமல்ல, தனது ரசிகர்கள் சுமார் 1300 பேரையும் தன்னை போலவே கண்தானம் செய்ய வைத்திருக்கிறார். இதற்கான முறையான பத்திரத்தை ராமச்சந்திரா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்களிடம் ஒப்படைத்தார் அவர். இல்லாத ஒருவருக்கு கண் கிடைத்தால் அவர் எப்படியெல்லாம் சந்தோஷப்படுவார்? அங்கேயே, அதே மேடையிலேயே அந்த அனுபவத்தை பெற்ற இருவரை பேச வைத்து பார்ப்பவர்களின் கண்களை குளமாக்க செய்தார் விக்ரம். இப்படி ஒரு எண்ணம் அவருக்கு எப்படி தோன்றியது? காசி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு காட்சி. கண்பார்வையற்ற விக்ரமை கையை பிடித…
-
- 0 replies
- 857 views
-
-
தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாகும் காலம் இது. அந்த வரிசையில் பேரறிஞர் அண்ணாவின் கலையுலக வாழ்க்கையும் படமாகவுள்ளது. கடந்த காலங்களில் பாரதியார், காமராஜர், பெரியார் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் படமாகி கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்து படைத்தன. இந்த வரிசையில், அண்ணாதுரையின் வாழ்க்கையும் படமாகப் போகிறது. எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகிய இரு பெரும் அரசியல் இமயங்களுக்கு குருவாக விளங்கியவர் அண்ணா. பெரியாரின் முதன்மைச் சீடர்களில் ஒருவர். அண்ணாவின் வாழ்க்கையை, அண்ணாவின் கலை உலகம் என்ற பெயரில், ஏ.பி.முகன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே தீண்டத் தீண்ட என்ற படத்தை இயக்கியவர். அண்ணாவின் தத்துப் புதல்வரும், சமீபத்தில் மறைந்தவருமான டாக்டர் பரிமளம் ஏற்கனவே எழுதி வைத்த தி…
-
- 0 replies
- 925 views
-
-
சினிமாவுக்காக எனது வாழ்க்கையை தியாகம் செய்யப் போகிறேன். இதனால் கல்யாணமே பண்ணிக் கொள்ள மாட்டேன் என்று இயக்குநர், நடிகர் எஸ்.ஜே.சூர்யா அதிரடியாக அறிவித்துள்ளார். வாலி படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் சூர்யா. முதல் படத்திலேயே முத்திரை பதித்த எஸ்.ஜே.சூர்யா, குஷி, நியூ, அன்பே ஆருயிரே என தனது முத்திரையைப் பதித்தார். தொடர்ந்து நடிகராகவும் கலக்கினார். அவர் ஹீரோவாக நடித்த முதல் படம் நியூ. தொடர்ந்து கள்வனின் காதலி, அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்களில் நடித்தார். முதலில் நிலாவுடனும் பின்னர் மீரா ஜாஸ்மினுடனும் இணைத்து பலமாக கிசுகிசுக்கப்பட்டவர் சூர்யா. மீராவும் இவரும் ரகசியக் கல்யாணம் செய்து கொண்டதாகவும் கூட கூறப்பட்டது. ஆனால் இதை சூர்யாவே மறுத்து விட்டார். இந்த நிலையி…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஏறத்தாழ நாற்பது வயதாவது இருக்கும் நதியாவுக்கு. இப்போதும் நதியில் குளித்த மலர் போல ஜில்லென்று இருக்கிறார் அவர். மிகப்பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார் நதியாவின் கணவர். இரண்டு பெண் குழந்தைகள். வேண்டாம் வேண்டாம் என்று விலகினாலும், இந்த கேரக்டரில் நீங்கதான் நடிக்கணும் என்று பழியாக கிடக்கிறார்கள் இயக்குனர்கள். சென்னைக்கு வாரா வாரம் வந்து போக பிளைட். தங்குவதற்கு ஸ்டார் ஹோட்டல் என்று ஹீரோயின்களுக்கு இணையாக மதிக்கப்படும் நதியா, போடுகிற கண்டிஷன்கள் சில. அதில் முக்கியமானது கட்டிப்பிடிப்பது, ஆடை குறைப்பு இதெல்லாம் நஹி. எல்லாவற்றையும் விட, மாலை ஏழு மணிக்கு மேல் கதவை தட்டி, “எல்லா வசதியும் முறையாக இருக்கா. ஹிஹி...” என்று விசாரிக்கும் இயக்குனரோ, தயாரிப்பாளரோ இருந்தால், அடு…
-
- 0 replies
- 926 views
-
-
அரசியலோ ஆன்மீகமோ... சும்மா இருக்கும் ரஜினியைச் சீனுக்குள் நுழைப்பதில் கெட்டிக்காரர்கள் நமது பத்திரிகையாளர்கள். அப்படித்தான் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் டோனியிடமும் ஒரு கேள்வி கேட்டார் பத்திரிகையாளர் ஒருவர். ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் வரும் பதினெட்டாம் தேதி துவங்குகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட ஆறு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார் டோனி. மொகாலி அணியை ப்ரீத்தி ஜிந்தா தனது காதலருடன் சேர்ந்து வாங்கியுள்ளார். கொல்கத்தா அணியை வாங்கியிருப்பவர் ஷாரூக் கான். டெல்லி அணி தனது விளம்பரத் தூதராக அக்ஷய் கு…
-
- 6 replies
- 1.6k views
-
-
சூரியன் உதிக்கிறானோ இல்லையோ, குசேலன் பற்றிய செய்திகள் இல்லாமல் விடிவதில்லை தமிழர்களின் பொழுது. புளோரா நடிக்கிறார், சுஜா நடிக்கிறார் என்று நாளரு கவர்ச்சியும், பொழுதொரு அட்ராக்ஷனுமாக வளர்கிற குசேலன் பற்றி இன்னொரு புதிய செய்தி. நடிப்பாரோ, அல்லது நடிக்க மாட்டாரோ என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பாடல் காட்சியில் ரஜினியோடு ஆட சம்மதித்துவிட்டாராம் கமல். அதில்லாமல் ஒரு காட்சியில் நடிக்கவும் சம்மதித்திருக்கிறாராம். நடிகர் கமல்ஹாசனாகவே படத்தில் தோன்றுகிறார். இளமை ஊஞ்சலாடுகிறது படத்திற்கு பிறகு இருவரும் ஒன்று சேரும் படம் இது. இடையில் இருவரையும் சேர்ந்து நடிக்க வைத்துவிட எத்தனையோ தயாரிப்பாளர்கள் முட்டி மோதினாலும், தனித்தனியாக நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார்கள் இருவரும். வ…
-
- 2 replies
- 1.2k views
-
-
“உலகத்தை தமிழன் ஆளுவான்” -டென்மார்க் தமிழர் எடுக்கும் படம் “உலக நாடுகள் முழுவதும் ஈழத்தமிழர்கள் இருக்கிறோம். ஆனால் எங்களுக்கென்று சொல்லிக் கொள்ளதான் ஒரு நாடு இல்லை” கண்களில் கனவுகளும் ஏக்கங்களும் மின்ன பேச ஆரம்பிக்கிறார் கி.செ.துரை. ஆனால்இ உலகத்தையே ஒரு குடையின் கீழ் ஆளப்போகிறான் தமிழன். இது என் கனவு மட்டுமல்ல. திருமூலரும்இ திருவள்ளுவரும் கூட இதைதான் சொன்னார்கள் என்கிறார் துரை. டென்மார்க்கில் வசிக்கும் இந்த இலங்கை தமிழர்இ தனது கனவை திரைப்படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தின் பெயர் இளம் புயல். உலகத்தை தமிழால் வாழ வைப்போம் என்பதுதான் படத்தின் மையக்கரு. இன்டர்நெட் மூலம் உலகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வர பாடுபடும் ஒரு இளைஞன் ஒரு தனி தீவில் தனது திட்டத்தை செய…
-
- 10 replies
- 2.5k views
-
-
ஷ்ரியாவின் அம்மா ஸ்னேகா! இளையவர்களுடன் மட்டுமே நடிப்பது என்ற கொள்கையை ரஜினிக்காக முன்பு தளர்த்திய ஷ்ரியா, அடுத்து சரத்குமாருக்காகவும் தனது கொள்கையை தியாகம் செய்துள்ளார். ராதிகாவின் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் சரத்குமாருடன் இணைகிறார் ஷ்ரியா. இளம் தலைமுறையினருடன் மட்டுமே நடிப்பது என்ற கொள்கையுடன் பல நடிகைகள் உள்ளனர். அவர்களில் ஷ்ரியாவும் ஒருவர். இந்த நிலையில் ரஜினியின் சிவாஜி பட வாய்ப்பு அவரைத் தேடி வந்தபோது தனது கொள்கையைத் தளர்த்தி சிவாஜியில் நடித்தார். இப்போது தனது கொள்கையை மீண்டும் தளர்த்தி சரத்குமாருடன் இணையவுள்ளார். ராதிகாவின் ராடான் மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் சரத்குமாருடன் இணைந்து நடிக்கவுள்ளார் ஷ்ரியா. இதற்காக அவருக்கு…
-
- 4 replies
- 2k views
-
-
காக்கக் காக்கவுக்குப் பின் ஜீவனுக்குக் கிடைத்திருக்கும் அதிரடிப் பாத்திரம். படத்தின் முற்பகுதி முழுவதும் தன்னை ரவுடியாகவளர்த்த போலீஷ் காரனுக்காக கொலை செய்யும் கதாநாயகன் படத்தின் இறுதிப் பகுதியில் அந்தப் போலீஷ் காரனையே எதிர்த்து தனது காதலிக்காக உயிரை விடுவதுதான் கதை. இதில் பரிதாபம் என்னவென்றால் காதலியின் கைய்யாலேயே அவர் உயிரை விடுவதுதான். ஜீவனின் அலட்டிக் கொள்ளாத நடிப்பும், போலீசு ரவுடியாக வரும் வில்லனின் நடிப்பும் அபாரம். பல படங்களில் பார்த்த கதைதான். ஆயுதம் எடுத்தவன் அதனாலேயே சாவான் என்று மீண்டுமொருமுறை சொல்லியிருக்கிறார்கள். பரவாயில்லை !
-
- 0 replies
- 854 views
-
-
தெலுங்கில் செல்வராகவன் இயக்கிய, ஆடவரி மாட்லகு அர்த்தலே வேருலே படத்தின் ரீ-மேக், யாரடி நீ மோகினி. அப்பா ரகுவரன். மகன் தனுஷ். தறுதலையாக திரியும் மகனை திட்டுகிறார் ரகுவரன். அவன் பொறுப்பானவனாக மாறி, இனி நீ வேலைக்குப் போக வேண்டாம் என்று கூறும்போது, கல்லால் அடிக்கிறார். மகனுக்கு காதல் தோல்வி ஏற்படும்போது, சேர்ந்து தண்ணி அடித்து சோகத்தை பகிர்ந்து கொள்கிறார். கூடவே அடிகட் ஆகாதே என அட்சைஸும் செய்கிறார். எந்த விதிமுறைக்குள்ளும் அடங்க மறுக்கும் இந்த உறவு சிறிய புன்னகையுடன் நம்மை ஈர்க்கிறது. ரகுவரனின் வசன உச்சரிப்பு சர்க்கஸ் சிங்கம் மாதிரி. ரகுவரனின் சாட்…
-
- 1 reply
- 1.8k views
-
-
Vantage Point - ஆரம்பம் புள்ளியில் இருந்து ஒரு பார்வை என்னும் படம் இந்த வருடம் மாசியில் வெளியாகியிருக்கிறது. இது நிகழ்கால உலக சூழ்நிலையைக் மய்யமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் பற்றி வரலாற்று மாநாடு ஒன்று ஸ்பெயின் நகரான சலமன்கா இல் நடக்கிறது. அதற்கு வந்த அமெரிக்க சனாதிபதியை கொலைசெய்யத முயற்சிக்கப்படுகிறது. இந்தக் கொலை முயற்சிக்கு கிட்டத்தட்ட 23 நிமிடங்களிற்கு முன்னர் நடந்த சம்பவங்களை இதில் சம்பந்தப்பட்ட பலதரப்பினரது பார்வை கண்ணோட்டம் அவதானிப்புகள் மூலம் பல கோணங்களில் காட்டுவது தான் படத்தின் முக்கிய பாகம். இதில் சம்பந்தப்பட்ட தரப்புகளாக 1) ஒரு தொலைக்காட்சி செய்திச் சேவையின் தயாரிப்பாளர் எவ்வாறு தனது களத்தில் உள்ள ஒளிப்…
-
- 4 replies
- 1.2k views
-
-
30 படங்கள் வரை நடித்து முடித்து விட்ட பாலிவுட் ஸ்டார் தியா மிர்ஸா, இன்னும் தனக்குப் பிடித்த, தனது கனவு ரோல் வரவில்லை என்று ஏக்கம் தெரிவிக்கிறார். பாலிவுட்டின் கனவுக் கன்னிகளில் ஒருவரான தியா மிர்ஸா நடித்துள்ள கிரேஸி 4 பெரும் எதிர்பார்ப்பை பாலிவுட்டில் ஏற்படுத்தியுள்ளது. ராகேஷ் ரோஷனின் இயக்கத்தில் உருவாகியுள்ள கிரேஸி 4 படத்தில் ரித்திக் ரோஷன் கெட்ட ஆட்டம் போட்டுள்ளார். படத்தில் தியாவுக்கும் சூப்பர் ரோல். கிரேஸி 4 படத்தில் தியா இருப்பது பற்றி முதலில் படு ரகசியமாக வைத்திருந்தாராம் ராகேஷ் ரோஷன். இதுகுறித்து தியா கூறுகையில், நான் படத்தில் நடித்திருக்கிறேன் என்பதை சர்ப்ரைஸ் ஆக வைத்திருந்தார் ராகேஷ் ரோஷன். படம் பார்க்க வருபவர்கள் திடீரென என்னைப் பார்த்து ஆச்சரியமடைய வேண…
-
- 0 replies
- 779 views
-
-
கேரள அரசின் சிறந்த நடிகை விருது பெற்றுள்ள மீரா ஜாஸ்மின், தமிழில் பரத்துடன் நடித்துள்ள நேபாளியிலும், மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்துள்ள ஒரு படத்திலும் நெருக்கமான முத்தக் காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளாராம். இந்தக் கோடை காலம் நிச்சயம் மீராவுக்கு எப்படி இருக்குமோ, ஆனால் அவரது ரசிகர்களுக்கு ஜில் ஜில் கோடையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழில் பரத்துடன் இணைந்து நடித்த நேபாளி படமும், மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள இனதே சிந்தாவிஷ்யாயம் என்ற படமும் ஒரே நேரத்தில் திரைக்கு வருகின்றன. இதில் விசேஷம், இரு ஹீரோக்களுடன் மீரா படு நெருக்கமாக நடித்துள்ளதுதான். குறிப்பாக முத்தக் காட்சிகளில் படு நெருக்கம் காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார…
-
- 1 reply
- 990 views
-
-
இந்திர விழா படத்தில் சூடான ஆட்டம் போடுவதாக இருந்த மாளவிகாவுக்குப் பதில், சொர்ணமால்யா அந்த கேரக்டரில் நடிக்கவுள்ளார். கே.ராஜேஷ்வர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இயக்கும் படம் இந்திர விழா. ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கிறார். ஹாட் ஸ்டார் நமீதா படு கிளாமராக நாயகியாக வலம் வருகிறார். கூடவே மாளவிகாவையும் புக் செய்திருந்தார் ராஜேஷ்வர். படத்தில் மாளவிகாவுக்கு முக்கியமான கேரக்டர். கிளாமரான பாடலும் இருந்தது. இந்த நிலையில் திடீரென மாளவிகா கர்ப்பமாகி விட்டதால் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தான் விலகவில்லை என்றும், 3 மாதங்களுக்கு ஆடக் கூடாது என்று டாக்டர்கள் சொல்லியுள்ளதால் அதன் பின்னர் வந்து நடித்துக் கொடுப்பேன் என்று மாளவிகா விளக்கியிருந்தார். இரு…
-
- 0 replies
- 959 views
-
-
தனுஷின் காட்டில் இனி ஹிட் மழைதான் போலிருக்கிறது. பில்லா படத்திற்கே என்.எஸ்.சி என்று சொல்லப்படுகிற பரந்த ஏரியாவில் 72 தியேட்டர்கள்தான் போடப்பட்டதாம். ஆனால், யாரடி நீ மோகினி படத்திற்காக அதைவிட அதிக தியேட்டர்கள் போடப்பட்டுள்ளது. மேற்படி ஏரியாவில் தினமும் 400 காட்சிகள் வீதம் ஓடிக் கொண்டிருக்கிற இந்த படத்தை குருவி வெளியாகவிருக்கும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் 'அப் டு க்ளாஸ்' என்று சொல்லப்படுகிற ஒப்பந்தத்தில் திரையிட்டிருக்கிறார்கள். அதாவது படத்திற்கு வரவேற்பு இல்லையென்றாலும், குருவி வெளியாகிற வரை யாரடி நீ மோகினியை தியேட்டரிலிருந்து எடுக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன். ஆனால் இவர்கள் யோசித்தது போல் இல்லாமல் படத்திற்கு பெரும் வரவேற்பு கி…
-
- 0 replies
- 895 views
-
-
கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்த யானா குப்தா இந்தியில் பாடியுள்ள முதல் இசை ஆல்பம் வெளியாகியுள்ளது. செக் நாட்டைச் சேர்ந்த யானாவி்ன் இந்த ஆல்பத்தை இங்கிலாந்தை சேர்ந்த பஞ்சாபி பாடகர் டாக்டர் ஜீயஸ் தயாரித்து வெளியிட்டுள்ளார். 'பேக் அண்ட தி இன்ஃபிளூயன்ஸ்' என்ற இந்த ஆல்பத்தில் 2 பாடல்களை யானா குப்தா பாடியுள்ளார். தமிழில் அந்நியன் திரைப்படத்தில் விக்ரமுடன் 'காதல் யானை', மன்மதன் படத்தில் சிம்புவுடன் 'தத்தை தத்தை' பாடல்களுக்கு படுகவர்ச்சியாக விறுவிறுப்பு டான்ஸ் ஆடி ரசிகர்களை சுண்டி இழுத்தவர் யானா குப்தா. இந்திப் படங்களிலும் பல பாடல்களுக்கு டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார். இந்த புதிய இசை ஆல்பத்தில் 2 பாடல்களையும் யானா குப்தாவே எழுதியது குறிப்பிடத்தக்கது. கோமாளித்தனமான ச…
-
- 0 replies
- 824 views
-
-
உலகம் சுற்றும் நமிதா! பொறாமையில் பொசுங்கிக் கொண்டிருக்கிறார்கள் சக நடிகைகள். பத்து படம் நடித்தும் பொள்ளாச்சியை தாண்டாத நடிகைகளுக்கு மத்தியில் படத்துக்குப் படம் வெளிநாடு பறந்தால் பொறாமை புகையத்தானே செய்யும். நாம் சொல்வது நமிதாவை. அழகிய தமிழ் மகனில் நமிதாவுக்கு இரண்டே வசனம். ஆயினும் ஒரு முழு பாடல் காட்சிக்காக வெளிநாடு அழைத்துச் சென்றனர். பில்லாவில் நாலு வசனம். நாற்பது நாள் மலேசியாவில் தங்க வைத்தனர். வரப்போகும் பெருமாளிலும் இதே கதைதான். ஆனாலும் மொரீஷியஸ் அழைத்துச் சென்று ஆட வைத்தனர். இப்போது இந்திர விழாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்…
-
- 0 replies
- 1.4k views
-
-
'ஜெயம்', 'எம்,குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', 'உனக்கும் எனக்கும்' படங்களுக்குப் பிறகு ஜெயம் ரவியை வைத்து அவரது அண்ணன் ராஜா இயக்கியிருக்கும் படம், 'சந்தோஷ் சுப்பிரமணியம்'. தெலுங்கு 'பொம்மரிலு' படத்தின் ரீ-மேக்கான இதில் ஜெயம் ரவியின் அப்பாவாக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். அம்மா கீதா. இவர்களுடன் கவுசல்யா, சந்தானம், பிரேம்ஜி அமரன் ஆகியோரும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாதிதின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகி உள்ளன. வரும் பன்னிரெண்டாம் தேதி படம் வெளியாகிறது. அதற்குமுன் தணிக்கைச் சான்றிதழுக்காக சென்சார் உறுப்பினர்களுக்குப் படம் போட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் டீசன்டான பேமிலி என்டர்டெயின்மெண்ட் என இயக்குனர் ராஜாவை பாராட்டியதோடு படத்துக்கு அனைவரும் பா…
-
- 0 replies
- 783 views
-
-
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் தமிழ்சினிமாவில் பாரதிராஜா விதைத்த மண்வாசனை கமழ்ந்து கொண்டே இருக்கும். சினிமாவில் மட்டுமன்றி சீரியலிலும் இதனை சாத்தியப்படுத்த களமிறங்கிவிட்டார் இயக்குனர் இமயம். தெக்கித்திப்பொண்ணு பாரதிராஜா இயக்கும் நெடுந்தொடர் இது. கலைஞர் தொலைக்காட்சியில், வரும் தமிழ் புத்தாண்டு முதல் ஒளிபரபாகவுள்ள இத்தொடருக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ரத்னகுமார் கதைக்கு தேன்மொழி, சிவாஜி, ரோஸ்முகிலன் ஆகியோர் வசனம் எழுதுகின்றனர். நெப்போலியன், வாகை சந்திரசேகர், ரஞ்சிதா, சொர்ணமால்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்தொடர் குறித்து இன்று நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டார் பாரதிராஜா :- மூணு கிராமத்தைச் சேர்ந்த, மூன்று குடும்பங்களில் நடக்கும் கதைதான் இது. தலைமுற…
-
- 0 replies
- 758 views
-