வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
என்னை ஏன் கறுப்பாய் பெற்றாய்? வைரமுத்துவின் கேள்விக்கு தாயின் பதில் 3/23/2008 5:38:59 PM வீரகேசரி நாளேடு - சென்னை, என்னை ஏன் கறுப்பாய் பெற்றாய் என்று என் தாயிடம் கேட்டதற்கு, கரியில் பிறந்த வைரம் போல் வளர, வளர வைரமாவாய் என்றார் என் தாய் என கவிஞர் வைரமுத்து பதிலளித்தார். ஸ்ரீ கிருஷ்ணா சுவீட்ஸ் சார்பில் புகழ்பெற்ற புத்திரர்களைப் பெற்ற அன்னையர்களை கௌரவிக்கும் வகையில் ""தாய்மைக்கு வணக்கம்'' என்ற விழா சென்னையில் உள்ள நாரதகான சபாவில் நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள், பேச்சாளர் சுகிசிவத்தின் தாயார் கோமதி சுப்பிரமணியம், கெவின் கேர் தலைவர் சி.கே.ரங்கநாதனின் தாயார் ஹேமா சின்னி கிருஷ்ணன், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் தாயார் இந்திர…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழ் திரையுலகின் பழம்பெரும் வில்லன் நடிகரான எம்.என்.நம்பியார் 91 வயதைத் தொட்டுள்ளார். வில்லன் நடிப்பு என்றால் சட்டென்று நினைவுக்கு வருபவர் நம்பியார். வில்லத்தனமான சிரிப்பு, கனல் பறக்கும் வசனங்கள், இடி முழக்கமிடும் அவரது குரல், கட்டுமஸ்தான உடல் கட்டு, மின்னலென போடும் சண்டைகள், நிஜமாகவே மோசமான ஆளாக இருப்பாரோ என்று எண்ண வைக்கும் தத்ரூபமான நடிப்பு ஆகியவற்றால் தமிழ்த் திரையுலக ஹீரோக்கள் பலரையும் பல காலத்திற்கு 'நடுங்க' வைத்தவர் நம்பியார். எத்தனையோ ஹீரோக்களுக்கு வில்லனாக நம்பியார் நடித்திருந்தாலும், அவரும், எம்.ஜி.ஆரும் சேர்ந்தால் அதன் ஸ்டைலே தனி. இருவரும் பேசும் வசனங்களிலும், சண்டைக் காட்சிகளிலும் பொறி பறக்கும். இருவரும் இணைந்து நடித்த அத்தனை படங்களுமே சூப்பர…
-
- 7 replies
- 2.7k views
-
-
சென்னை : பிரபல கோலிவுட் சினிமா வில்லன் நடிகர் ரகுவரன் காலமானார். ஏழாவது மனிதன் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ரகுவரன் பல படங்களில் வில்லன் நடிகராக நடித்துள்ளார். நடிகை ரோகினியை இவர் திருமணம் செய்துள்ளார். சமீப காலமாக உடல்நல குறைவால் அவதி பட்டு வந்த இவர் சென்னை மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலையில் மிகவும் உடல்நலம் மோசமானதை அடுத்து அவர் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். ஆதாரம் தினமலர்
-
- 31 replies
- 9.1k views
-
-
எழுநூறு பேர் பங்குபெற்ற பாடல் காட்சி! நானூறு துணை நடிகர்கள், முன்னூறு கிராமியக் கலைஞர்கள், மொத்தமாக இவர்களை ஒன்று சேர்ப்பதே இமாலய சாதனை. ஒன்று சேர்த்ததுடன் ஒரு பாடலையும் எடுத்திருக்கிறார் இளவேனில், உளியின் ஓசை படத்தின் இயக்குனர். கோயில் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைக்க ராஜராஜசோழன் வருவது போலவும், அவரை சோழ குடிகள் பாடல் இசைத்து வரவேற்பது போலவும் காட்சி. நானூறு துணை நடிகர்களுடன் மதுரை பக்கமிருந்து முன்னூறு கிராமியக் கலைஞர்களையும் சென்னை ஃபிலிம் சிட்டியில் இதற்காக ஒன்றிணைத்திருக்கிறார்கள். கலா மாஸ்டர் நடனம் அமைக்க, பாரதிராஜாவின் ஆஸ்தான கேமராமேன் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய பாடலை படமாக்கினார் இளவேனில். பாடலின் தொகையறாவை முதல்வர் கருணாநிதி எழுதியிருக்கிறார்…
-
- 2 replies
- 1.5k views
-
-
இயக்குநர் ராஜகுமாரனின் தாய், தேவயானி யின் மாமியார் கடிதம் மகனே ராஜகுமாரா! நீ நல்லா இருக்கியாப்பா? எத்தனை வருஷமாச்சு உன்னைப் பார்த்து! அம்மா, அம்மான்னு பாசமா இருப்பியே, இப்ப உன் குரலைக்கூட கேக்க முடியலையே! உனக்கு இரண்டாவதா பெண் குழந்தை பொறந்திருக்குதாமே! அந்த விவரம் கூட இப்பதான் தெரிந்தது! விவரம் தெரிஞ்சதும் பாசத்தோடு போன் பண்ணினேன். ஆனால் யாரோ மலையாளத்தில் இது மருந்துக் கடை, ராஜகுமாரன் வீடில்லைன்னுட்டாங்க. ஏம்ப்பா என்கூட பேசமாட்டியா? உனக்குப் பொறந்த இரண்டு பெண் குழந்தைகளையும் என் கண்ணுலயாவது காட்டக் கூடாதா? பேத்திகளைப் பாக்கணும்னு எனக்கும் ஆசை இருக்காதா? இன்னைக்கு யார் யாரோ புதுசு புதுசா சொந்தம் கொண்டாடிக்கிட்டு உன்னத் தேடி வரலாம். ஆனா வடை, போண்டா, முறுக…
-
- 1 reply
- 1.1k views
-
-
எதிர்பாராத திசையிலிருந்து பாய்ந்திருக்கும் ஏவுகணையால் கோலிவுட், டாலிவுட் என்று தென்னிந்திய சினிமா உலகம் விக்கித்து நிற்கிறது. தென்னிந்திய நடிக, நடிகைகள் 200 பேருக்கு அமெரிக்காவுக்கு வர நிரந்தரத் தடை விதித்திருக்கிறது அமெரிக்க அரசு. இதற்குக் காரணம் கவர்ச்சி நடிகை ஃப்ளோரா..! மும்பைப் பெண்ணான ஃப்ளோரா மாடல் அழகியாக இருந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 'கஜேந்திரா', 'குஸ்தி' ஆகிய படங்களில் நடித்திருப்பவர். தெலுங்கு சூப்பர் டூப்பர் ஹிட் ஆன 'நரசிம்ம நாயுடு' படத்தில் சுப்ரீம் ஸ்டார் பாலகிருஷ்ணாவுக்கு இவர்தான் ஜோடி. நாயகி வாய்ப்புகள் குறைந்து சிங்கிள் பாட்டுக்கும் கலை நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சிக் காட்டி ஆட ஆரம்பித்தார்.…
-
- 4 replies
- 2k views
-
-
வெள்ளித்திரை திரைப்படத்தை பார்த்தவர்களின் விமர்சனத்தை எதிர்பர்கின்றேன் நன்றி ராஜன் (நந்து)
-
- 0 replies
- 1k views
-
-
இசையுடன் ஸ்காலர்ஷிப்பும் தருகிறார் ரஹ்மான் -சென்னையில் ஒரு (இசை)மழைக்காலம்! இசை உலகத்திற்கு இயற்கை தந்த பரிசாகவே கருதப்படுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். உலகம் முழுக்க கிளை பரப்பியிருந்தாலும், தனது வேர்களை தமிழ்நாட்டில் பரவ விடுவதில் சந்தோஷம் காண்பவர் அவர். அதன் இன்னொரு வடிவமாக ஒரு மாபெரும் இசைப்பள்ளியை சென்னையில் நிறுவியிருக்கிறார் ரஹ்மான். இதுபற்றி பகிர்ந்து கொள்ள பத்திரிகையாளர்களை சந்தித்தார். கே.எம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த பள்ளி துவங்கும் முன்பாகவே 150 மாணவர்கள் சேர்ந்துவிட்டார்களாம். அதென்ன கே.எம்? இதற்கு அர்த்தம் இல்லை. ஸ்பிரிச்சுவலா இப்படி ஒரு பெயரை வைத்திருக்கிறேன் என்கிறார் புன்முறுவலோடு. முழுக்க முழுக்க இசையின் மேலுள்ள காதலாலும், அன்பினாலும்தான் இந…
-
- 0 replies
- 723 views
-
-
சினி மினி கிசு கிசு * குற்றாலத்தில் குளிக்க மினரல் வாட்டர் கேட்ட நடிகையின் கையில் தற்போது எந்த படமும் இல்லை. இதனால் இளம் நடிகர்களுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பி வாய்ப்பு கேட்டு வருகிறார். இதற்கு ஆர்ய நடிகரிடம் இருந்து மட்டும் ரிப்ளை வந்ததாம். * வம்பு நடிகருடன் காதல் வயப்பட்ட நயனம் இப்போதெல்லாம் நேரம் கிடைக்கும்போது கோவிலுக்கு சென்று வருகிறார். தற்போது அவர் நடித்து வரும் மோகினி பட சூட்டிங் அல்வா பேமஸ் ஊர்ல நடந்தது. படப்பிடிப்பு இடைவேளையில் அம்மணி அந்த ஊர் பிரபல கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுள்ளார். அந்த படத்தோட படப்பிடிப்பு நிறைவு நாளில் படத்தில் வேலை செய்த எல்லோருக்கும் தலா ஐயாயிரம் ரூபாய் பணம் வழங்கி விருந்து படைத்திருக்கிறார் புன்னியத்தை தேடியிருக்கிற…
-
- 2 replies
- 2.2k views
-
-
மேலும் புதிய படங்கள்நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. அவர் கொலைதான் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று சில்க் ஸ்மிதாவின் முதல் படத்தையும், கடைசிப் படத்தையும் இயக்கியவரான திருப்பதி ராஜா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதா என்ற மந்திரப் பெயர் ஏற்படுத்திய மாயாஜாலம் இன்றளவும் கூட சிலாகித்துப் பேசப்படுகிறது. அவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப இன்னும் யாரும் வரவிலலை என்பது திரையுலகின் தீர்ப்பு. மறக்க முடியாத பல படங்களிலும், கிளாமர் வேடங்களிலும், பாடல் காட்சிகளிலும், நடனங்களிலும் கலக்கியவர் சில்க். பத்து ஆண்டுகளுக்கு முன்பு திடீரென ஒரு நாள் தூக்கில் தொங்கினார் சில்க். ரசிகர்களின் மனதில் சோகம் தங்கியது, திரையுலகம் இனி இப்படி ஒரு நடிகையை …
-
- 3 replies
- 5.6k views
-
-
படங்களில் வில்லன் எவ்வளவு கெட்டவனாக நடித்தாலும் நமக்கு சில வில்லன்களை அவர்களின் நடிப்புக்காக பிடிக்கும். அவ்வாறு உங்களுக்கு பிடித்த வில்லன் நடிகர்களை இங்கு பகிர்ந்துக்கொள்ளுங்கள் எனக்கு நம்பியார் ஐ வில்லனாக பிடிக்கும். நிஜவாழ்க்கையிலும் அவர் மிக நல்லவர் என்று கேள்வி பட்டிருக்கிறேன்.அத்தோடு பிரகாஸ்ராஜையும் பிடிக்கும். இதோ சில வில்லன்கள். என் நினைவுக்கு எட்டியவரையில்: பி.எஸ்.வீரப்பா எம்.என்.நம்பியார் எம்.ஆர்.ராதா அசோகன் ஆர்.எஸ்.மனோகர் பாலாஜி ஜஸ்டின் கே.கண்ணன் (பழைய) சிறிகாந் எம்.ஆர்.ஆர்.வாசு ராதாரவி செந்தாமரை ரகுவரன் ஆனந்தராஜ் நாசர் பொன்னம்பலம் 'மகாநதி'சங்கர் பிரகாஸ்ராஜ்
-
- 23 replies
- 3.5k views
-
-
தனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் எழுத்தாளரை, அடியாட்களுடன் வந்து மிரட்டியதாக நடிகர் விவேக் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சினிமாவில் தான் நான் காமெடியன் நிஜத்தில் வில்லன் என்று மிரட்டல் வசனம் பேசி, வீட்டை காலி செய்யச் சொல்லி, ரகளையில் ஈடுபடுகிறார். எனவே, விவேக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நடிகர் விவேக்குக்கு சொந்தமான அப்பார்ட்மென்ட் வீடு சென்னை கே.கே., நகரில் உள்ளது. அந்த வீட்டில் சுப்ரஜா என்ற எழுத்தாளர் வாடகைக்கு இருக்கிறார். 2005ம் ஆண்டு மே மாதம் முதல் ஏழாயிரம் ரூபாய் வாடகை செலுத்தி வருகிறார். இவர் கே.கே., நகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:என் வீட்டின் உரிமையாளர் காமெடி…
-
- 0 replies
- 1k views
-
-
நடிகை புளோராவைப் போல விசா மோசடியில் ஈடுபட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த 200 நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலகினர் நிரந்தரமாக அமெரிக்கா செல்ல அந்த நாட்டுத் தூதரகம் தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பணம் பெற்றுக் கொண்டு பெண் ஒருவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக நடிகை புளோரா நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதேபோல ஏகப்பட்ட நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலகினர் பலரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அமெரிக்காவுக்கு அனுப்பிய விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த இப்படிப்பட்ட 200 பேர் நிரந்தரமாக அமெரிக்கா செல்ல அந்த நாட்டு அரசு அதிரடித் தடை வித…
-
- 1 reply
- 960 views
-
-
ஒருதலை ராகம் என்ற படத்தின் மூலம் புதிய மாற்றத்தையே தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியவர் சகலகலா வல்லவரான டி.ராஜேந்தர். பருத்தி வீரன் படத்தைப் பார்த்த பிறகு, இனி நல்ல படங்களை மட்டுமே தரவேண்டும் என்ற உணர்வு தனக்கு ஏற்பட்டதாக வெளிப்படையாகத் தெரிவித்தார் ராஜேந்தர். இதன் விளைவு, பிரமாண்ட செட், அடுக்குமொழி வசனங்கள், ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் எம்பிக் குதிக்கும் சண்டைகள் எதுவும் இல்லாத இயல்பான சினிமா ஒன்றை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். அந்தப் படத்துக்கு ஒருதலைக் காதல் என்று தலைப்பும் வைத்துள்ளாராரம். இதுகுறித்து சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ராஜேந்தர் கூறியதாவது: லட்சுமி மூவி மேக்கர்ஸ், சிம்பு சினி ஆர்ட்ஸுடன் இணைந்து புதிய படம் தயாரிக்கவுள்ளது. `ஒ…
-
- 0 replies
- 785 views
-
-
புத்தரின் மனைவியாக ஐஸ்வர்யா! மேலும் புதிய படங்கள்புத்தரின் கதை படமாகிறது. புத்தா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் இளவசர் சித்தார்த்தனின் மனைவி வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளார். ஆங்கிலம் மற்றும் இந்தியில் உருவாகும் புத்தாவில், ஐஸ்வர்யா ராய், சித்தார்த்தனின் மனைவி யசோதரா வேடத்தில் நடிக்கவுள்ளார். பாரீஸைச் சேர்ந்த இந்திய இயக்குநர் பான் நளின் இப்படத்ைத இயக்கவுள்ளார். ஜோதா அக்பர் படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்புக்குக் கிடைத்த வரவேற்பையும், இதுபோன்ற கேரக்டர்களில் அவர் அட்டகாசமாக பொருந்துவதாலும், புத்தர் பட வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது. இந்தியாவில் பிறந்த இளவரசர் சித்தார்த்தன் பின்னர் உலக வாழ்க்கையைத் துறந்து, நிர்வாணம் பெற்று, உலகம் போற்றும் கெளதம பு…
-
- 13 replies
- 2.7k views
-
-
இளையராஜா (கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.} இளையராஜா பின்னணித் தகவல்கள் பிறப்பு ஜூன் 2 1943 (வயது 64) தொடக்கம் தமிழ்நாடு, இந்தியா தொழில் திரையிசையமைப்பாளர் இசையமைப்பாளர் இசைக்கருவிகள் பாடகர், கிட்டார், கீபோட்/ ஆர்மோனியம்/ பியானோ இசைத்துறையில் 1976 -- present இளையராஜா ( Ilayaraaja ) (பி. ஜூன் 2, 1943) என்ற பரவலாக அழைக்கப்படும் ராசய்யா, இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற தமிழ்த் திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1970 களின் பிற்பகுதியில் அறிமுகமானார். இதுவரை 800 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழக நாட்டுப்புற இசை, கருநாட…
-
- 1 reply
- 1.8k views
-
-
தோட்டா! webdunia .com போலீஸ் அதிகாரி ரவுடியை உருவாக்குகிறார். அந்த ரவுடி ஒரு போலீஸை உருவாக்குகிறான். பிஸ்டல் அளவுக்கு கையடக்க கதை. அதில் காதல், சென்டிமெண்ட், ஆக்சன் கலந்து தோட்டாவாக சீறிவிட முயன்றிருக்கிறார் இயக்குனர் செல்வா. ஜீவனுக்காகவே உருவாக்கப்பட்டது போல் கச்சிதமாக பொருந்துகிறது தோட்டா எனும் ரவுடி கதாபாத்திரம். போலீஸ் அதிகாரியாக வரும் சம்பத்ராஜ் விரல் நீட்டும் ஆளின் உயிர் எடுக்கும் வேலை ஜீவனுடையது. அலட்டலே இல்லாமல் செய்திருக்கிறார். உணர்ச்சிகளை அதிகம் வெளிப்டுத்தாத ஜீவனின் முகமே தோட்டா கதாபாத்திரத்தின் ஜீவன். போலீஸ் அதிகாரி படுக்கைக்கு அழைக்கும் போது பதறுவதும், ஜீவன் ரவுடி என்பது தெரிந்ததும் உள்ளுக்குள்ளே கதறுவதுமாக ப்ரியாமணிக்கு நடிக்க…
-
- 0 replies
- 755 views
-
-
ஒரு வழியாக நடிப்புக்கு முழுக்குப் போடுகிறார் கோபிகா. இனிமேல் மலையாளம் உள்பட எந்த மொழிப் படத்திலும் அவர் நடிக்க மாட்டாராம். வெள்ளித்திரைதான் அவருக்கு தமிழில் கடைசிப் படமாம். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த கோபிகா, சேரனின் கண்டுபிடிப்பு. ஆட்டோகிராப் மூலம் நடிகையான கோபிகா, அதன் பின்னர் தமிழிலும், மலையாளத்திலும் மளமளவென வளர்ந்து முன்னணி நடிகையானவர். சமீப காலமாக அவர் தமிழை விட மலையாளத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் கோபிகா நடிப்புக்கு முழுக்குப் போடுகிறார். அவருக்கு கல்யாணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனராம். இதற்காக மலையாளத்திலேயே நல்ல மாப்பிள்ளையாக தேடிக் கொண்டுள்ளனராம். ஆனால் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து வ…
-
- 9 replies
- 2.1k views
-
-
இலங்கை இனப் போரை கதைக் கருவாகக் கொண்டு, பிரபாகரன் என்ற பெயரில் எடுக்கப்பட்ட படத்திற்கு சென்சார் வாரியம் அனுமதி கொடுத்து விட்டதால் அந்தப் படம் விரைவில் ரிலீஸாகிறது. இலங்கையைச் சேர்ந்தவர் துஸ்கரா பெரீஸ். சிங்கள இயக்குநரான இவர் பிரபாகரன் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்தப் படம் இலங்கை இனப் போர் குறித்த கதைப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இனப் போர், அதனால் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் சந்தித்து வரும் துயரங்கள், சிரமங்கள், இந்தப் பிரச்சினை தீராமல் நீண்டு கொண்டிருப்பதற்கு யார் காரணம், பிரச்சினையின் மூல வேர் என்ன என்பது குறித்து இப்படத்தில் அலசியுள்ளாராம் பெரீஸ். விடுதலைப் புலிகளின் இயக்கத்தில உள்ள ஒரு தற…
-
- 1 reply
- 1.1k views
-
-
கலையை ரசிக்க வேண்டும் கலைஞர்களை மதிக்க வேண்டும் -பாம்பே ஜெயஸ்ரீயின் பேட்டி -எம்.சாந்தி- `வசீகரா என் நெஞ்சினிற்க...' என்ற பாடல் மூலம் பல உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பின்னணிப் பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ அண்மையில் இலங்கை வந்திருந்த போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடனான நேர்காணல் இதோ.... கேள்வி: எப்படி இந்தத் துறையில் வந்தீர்கள், எத்தனை வயதிலிருந்து இசையை கற்று வருகிறீர்கள், எத்தனை வருடங்களாக இத்துறையில் இனிதே தடம் பதித்து வருகிறீர்கள் என்பதைப் பற்றிச் சொல்லுங்கள்? பதில்: நான் 3 வயதிலிருந்தே இசையை பயில ஆரம்பித்து விட்டேன். எனது அப்பா சுப்பிரமணியம், அம்மா சீதா சுப்பிரமணியம் இருவருமே சங்கீத ஆசிரியர்கள். சிறுவயதிலே கற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டதால் பாடசாலைகளிலு…
-
- 1 reply
- 1.8k views
-
-
கந்தசாமி படப்பிடிப்பில் பரபரப்பு! விக்ரம், ஸ்ரேயா நடிக்கும் கந்தசாமி படப்பிடிப்பின் போது வேப்ப மரத்தில் பால் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பே சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. கலைப்புலி தாணுவின் வி.கிரியேஷன்ஸ் தயாரிக்கும் பிரமாண்ட படம் கந்தசாமி. சுமார் ரூ. 40 கோடி செலவில் உருவாகிவரும் இந்தப் படத்தில் விக்ரம்-ஸ்ரேயா ஜோடியாக நடிக்கின்றனர். திருட்டுப் பயலே படத்தை இயக்கிய சுசி கணேசன் இப்படத்தை இயக்குகிறார். இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக விரைவில் கந்தசாமி குழு மெக்ஸிகோ செல்லவிருக்கிறது. அதற்கு முன் சென்னையில் எடுக்க வேண்டிய சில காட்சிகளுக்காக திரைப்பட நகரில் கடந்த சில தினங்களாக படப்பிடி…
-
- 24 replies
- 5k views
-
-
http://i265.photobucket.com/albums/ii215/k...n_070423_f3.jpg சிம்ரன் வருத்தம் ரஜினி காந்த் படத்தில் நடிக்க இரு முறை வாய்ப்பு வந்தும் நடிக்க முடியாமல் போனது வருத்தம் தருவதாக சிம்ரன் கூறியுள்ளார். சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்த வேடத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் சிம்ரன்தான். சில காட்சிகளிலும் நடித்தார். ஆனால் திடீரென கர்ப்பமாக இருப்பதாக கூறி விலகிக் கொண்டார். இதனால் ஜோதிகா அந்த வேடத்தில் நடித்து அசத்தி விட்டார். இந்த நிலையில் ரஜினியின் குசேலன் படத்திலும் சிம்ரனுக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் இந்த முறை பசுபதிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கூறியதால் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார் சிம்ரன். இருப்பினும் டிவியில் பிசியாகி விட்…
-
- 18 replies
- 5k views
-
-
மஸ்தானா நடன போட்டியில் இடம் பெற்ற விபத்து. 02 Feb 2008 http://eelamtube.com/view_video.php?viewke...fe977004015c619
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழ் சினிமாவை கலக்கிய "காதல் மன்னன்" ஜெமினி கணேசன் அவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் காலமானபோது எழுத வேண்டும் என்று நினைத்து தவறிப்போன பதிவு இது! மிஸ்ஸியம்மா முதல் அவ்வை சண்முகி வரை தனக்கென வளர்த்துக் கொண்ட ஒரு பாணியை வைத்து, ஜெமினி தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர். அவர் ஏற்று நடித்த மென்மையான (காதல்!) வேடங்களுக்கு, அவருக்கே உரிய ஸ்டைலில் மெருகேற்றி தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அழியாத் தடங்களைப் பதித்தவர் "காதல் மன்னன்" என்றால் அது மிகையில்லை! பேசும்படம் என்ற சினிமா இதழ் தான், ஜெமினி கணேசனுக்கு 'காதல் மன்னன்' என்ற பட்டம் வழங்கியது! அவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன் பிலிம்·பேர் அவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது மும்பையில் வழங்கியபோது, அவையினர் அ…
-
- 1 reply
- 1.2k views
-
-
தொப்பி ஜெயமோகன் எஸ்.ராமகிருஷ்ணன், கலாப்ரியா, நாஞ்சில்நாடன் ஆகியோர் நடுவே என்ன ஒற்றுமை? கலாப்ரியா எப்போதுமே ஆழமான மனச்சோர்வுடன் இருப்பார். விசேஷ நாட்களில் சோர்வு இன்னும் அதிகமாகும். ஆனால் எஸ்.ராமகிருஷ்ணனை நான் திருவண்னாமலையில் முதலில் பார்த்தபோது குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தார். ”ஏன் சார் அப்டி சிரிக்கிறார்?”என்று ரகசியமாக பவா செல்லத்துரையிடம் விசாரித்தேன். ”அவர் அப்டித்தாங்க சிரிப்பாரு…” என்றார். ”அது சரி…ஆனா எதுக்கு சிரிக்கிறார்?” அவர் ”அதாங்க நானும் சொன்னேன்,அவரு அப்டித்தான் சிரிப்பாரு”. பிறகு நான் சந்திக்கும்போதெல்லாமே எஸ்.ராமகிருஷ்ணன் குலுங்கிக் குலுங்கித்தான் சிரித்துக் கொண்டிருந்தார். அவரது சரீர அமைப்பே அதற்கு வாகாகத்தான் வடிவம் கொடிருக்க…
-
- 0 replies
- 1k views
-