Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. திரை விமர்சனம்: காஸி நான்கு போர்களைச் சந்தித்துள்ள இந்தியாவில் போர் குறித்த படங்கள் மிகவும் குறைவு. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது சங்கல்ப் ரெட்டி இயக்கியுள்ள ‘காஸி’ முக்கியத்துவம் பெறுகிறது. 1971-ம் ஆண்டு நடந்த போருக்கு முந்தைய காலகட்டம். கிழக்கு பாகிஸ் தானில் நடக்கும் மக்கள் போராட்டத்தின் மீது பாகிஸ்தான் அரசு கடுமையான ஒடுக்குதலை நிகழ்த்துகிறது. எந்த நேரமும் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல். இந்தச் சமயத்தில் இந்தியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியில் பாகிஸ்தான் அதிரடித் தாக்குதல் நடத்தவிருக்கிறது என்னும் செய்தி கடலோரக் காவல் படைக்குக் கிடைக்கிறது. பாகிஸ்தானின் திட்டத்தைக் கண்டறிந்து அதை …

  2. என்னருமை தோழி - புதிய தொடர் என்னருமை தோழியே..! பல நாட்கள் என்னிடம் நீங்கள் கூறியிருந்த சேதிகளை இதுவே அம்மாவின் நியதிகள் என்று பறைசாற்ற போகின்றேன்.. இன்னுயிர் தோழியே.... அன்றொரு நாள் உங்கள் வாழ்க்கை சரிதத்தை இயற்ற நான் அனுமதிகோரி நின்றபோது நீங்கள், ‘‘அதற்கான நேரம் வரும்.. நீதான் அதை எழுதுவாய்..'' என்றீர்கள். இதோ அந்த நேரமும் அமைந்துவிட்டது. ஆனால்.. வாசிக்கத்தான் நீங்கள் இல்லை! நான் கோரிய அனுமதியை அன்றே வழங்கியிருந்தால், யாரும் அறிந்திராத உங்களது மென்மையான இதயத்தினை உமக்குள் நீங்கள் ஒளிந்திருந்த.. குதூகல கோமளத்தின் சிறப்புகளை உங்கள் பார்வையிலே…

  3. விருதுகள் வென்ற பிரபல பாடகர் மரணம் தன்னுடைய ஜாஸ் மற்றும் பாப் பாடல்கள் மூலம் புகழ் பெற்ற பாடகர் Al Jarreau, உடல்நல குறைவு காரணமாக இரண்டு வாரமாக மருத்துவமனையில் இருந்த நிலையில், நேற்று காலமானார். அவருக்கு வயது 76. Al Jarreau வின் மேனேஜர் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். 7 முறை கிராமி விருதுகள் வென்றுள்ள அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். http://tamil.adaderana.lk/news.php?nid=87909

  4. சி3 (சிங்கம்3) விமர்சனம்நடிகர்கள்: சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன், சூரி, ரோபோ சங்கர், அனூப் சிங், இமான் அண்ணாச்சி ஒளிப்பதிவு: ப்ரியன் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன் இயக்கம்: ஹரி இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று பெயருக்கு போட்டுக் கொண்டு, முந்தைய பாகத்துக்கு சம்பந்தமே இல்லாமல் படமெடுத்து வைப்பார்கள். ஆனால் ஹரி அதில் ரொம்ப தெளிவானவர். உண்மையிலேயே முந்தைய பாகங்களின் தொடர்ச்சியாக சிங்கம் 3-ஐ எடுத்திருக்கிறார். விசாகப்பட்டணத்தில் போலீஸ் கமிஷனர் மர்மமாகக் கொல்லப்படுகிறார். அதை விசாரிக்க தமிழக போலீசின் உதவியை ஆந்திரா நாட, நம்ம துரைசிங்கம் சூர்யாவை அனுப்பி வைக்கிறார்கள். அவர் வி.பட்டணத்தில் இறங்கியதுமே பின் தொடர ஆரம்பிக்கி…

    • 2 replies
    • 2.2k views
  5. குளியல் தொட்டியில் கணவருடன் சேர்ந்திருக்கும் படத்தை வெளியிட்ட சன்னி லியோன் குளியல் தொட்டியில் கணவருடன் சேர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டு சன்னிலியோன் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இந்தி நடிகைகள் தங்களை விளம்பரப்படுத்துவதற்காகவும், மார்க்கெட் பிடிப்பதற்காகவும் விதம் விதமான யுக்திகளை பயன்படுத்துகிறார்கள். சமீபத்தில் இலியானா தண்ணீர் தொட்டியில் நிர்வாணமாக படுத்து போஸ் கொடுத்து இருந்தார். அதை இணையதளத்திலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். முன்பு ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் ஒ…

  6. தமிழ்த் திரையுலகத்தில் இந்த வாரம்… அஜித்தின் 'விவேகம்' பட முதல் பார்வை வெளியீடு, மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் 'காற்று வெளியிடை' படத்தின் 'அழகியே…' பாடல் வெளியீடு, ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடிப்பில் 'போகன்' படத்தின் வெளியீடு, சந்தானம் நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' படத்தின் டிரைலர் வெளியீடு என இந்த வாரத்தில் தமிழ்த் திரையுலகத்தில் சில முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. காற்று வெளியிடை - அழகியே…பாடல் வெளியீடு இயக்குனர் மணிரத்னம் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இருவரது கூட்டணியில் உருவாகியுள்ள 'காற்று வெளியிடை' படத்தின் 'அழகியே…' என்ற பாடல் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. வைரமுத்து, மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப…

  7. திரை விமர்சனம்: எனக்கு வாய்த்த அடிமைகள் ஐடி துறையில் வேலை செய்யும் கிருஷ்ணா (ஜெய்), சக ஊழிய ரான திவ்யாவை (ப்ரணிதா) காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் கிருஷ்ணாவை உதறித் தள்ளும் திவ்யா, வேறொருவரை விரும்புகிறார். இதில் மனமுடையும் கிருஷ்ணா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார். சாகும் முன் தனது உயிர் நண்பர்களான ரமேஷ் (கருணாகரன்), மொய்தீன் (காளி வெங்கட்), சௌமி நாராயணன் (நவீன்) ஆகிய மூவருக்கும் தகவல் தருகிறார். பதறும் நண்பர்கள் கிருஷ்ணாவைத் தேடிப் புறப்படுகிறார்கள். அந்த முயற்சி யில் ஆளுக்கொரு பிரச்சினையில் மாட் டிக்கொள்கிறார்கள். அவற்றிலிருந்து அவர்களால் வெளியே வர முடிந்ததா? கிருஷ்ணாவைக் கண்டுபிடித்துக் காப் பாற்ற மு…

  8. போகன் விமர்சனம். கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையை மையமாக வைத்து 90களில் சின்ன வாத்தியார் என்று ஒரு படம் வந்தது. அதற்கடுத்து வந்துள்ள படம் போகன். ஜெயம் ரவி ஒரு டெர்ரர் போலீஸ் ஆபீசர். அவர் அப்பா நரேன் வங்கி மேனேஜர். அதே ஊரில் செம ஜாலி வாழ்க்கை வாழ்கிறார் அரவிந்த்சாமி. வசிய சக்தி கைவரப் பெற்றவர். ஒரு நகைக் கடை வாசலில் காரை நிறுத்தி உற்றுப் பார்க்கிறார்... கடை சிப்பந்தி மொத்தப் பணத்தையும் கொண்டு வந்து கொட்டிவிட்டுப் போகிறார். அப்படி ஒரு சக்தி. ஜெயம் ரவிக்கும் ஹன்சிகாவுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. முன் பின் தெரியாத ரவியை எப்படி திருமணம் செய்வது என யோசிக்கிறார் ஹன்சிகா. ஆனால் ரவியின் நல்ல குணம் புரிந்து மணக்க சம்மதிக்கிறார். அந்த சூழலில் அரவிந்த்சாமி, ஜெயம் ரவிய…

  9. சமந்தா - நாக சைதன்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது! (படங்கள்) விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறியுள்ளார்கள். இந்நிலையில் இருவருக்கும் நேற்று ஹைதராபாத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சமந்தாவும் நாக சைதன்யாவும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். இந்த நிகழ்வில் இரு குடும்பங்களின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். இதுகுறித்த அறிவிப்பை நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜுனா ட்விட்டர் வலைத்தளத்தில் அறிவித்தார். …

  10. 'அது ஏன் என்னையவே எப்பவும் வைச்சு செய்றீங்க!' வதந்தி பற்றி அனிருத் #VikatanExclusive 3 படம் தொடங்கி ஏகே 57 வரையிலான பயணம், காதல் சர்ச்சை, கல்யாண கிசுகிசு, பீப் சாங் பரபரப்பு, தனுஷ் உடனான மோதல், வேர்ல்ட் டூர் என எல்லாம் பேசுகிறார். படத்துக்குப் படம் மெருகேறிக் கொண்டிருக்கிற அவரது இசையைப் போலவே அனிருத்தின் பேச்சிலும் அத்தனை நிதானம்... பக்குவம்... "3 படத்தில் அறிமுகமானபோது, இன்றைய இந்த இடத்தை, வளர்ச்சியை எதிர்பார்த்தீங்களா?" ''எட்டாவது படிக்கிறபோதே எனக்கு மியூசிக் டைரக்டராகணுங்கிற கனவு இருந்தது. 30, 35 வயசுக்குள்ள அது நடக்கணும்னு நினைச்சேன். ஆனா காலேஜில ரெண்டாவது வருஷம் படிக்கிறபோதே நடக்கும்னு யோசிக்கலை. ஒரு படம்.... ஒரு மணி நேரத்துல எல்லா…

  11. பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு பத்ம விபூஷன் விருது. பாரத ரத்னாவை அடுத்து இந்தியா வழங்கும் இரண்டாவது அதி உயர் விருதான பத்ம விபூஷன் விருது பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐந்து தசாப்தங்களாக கர்னாடக இசை உலகிலும் பின்னணிப் பாடலிலும் தன்னிகரற்ற கலைஞராக விளங்கும் ஜேசுதாசுக்கு வழங்கப்பட்டிருக்கும் இவ் விருது, அவரது மிக நீண்ட கால இசைப் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இந்தியத் தேசிய விருதுகளை ஏழு தடவை பெற்ற கே.ஜே.ஜேசுதாஸ் ஆயிரக் கணக்கான பாடல்களை இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். 77 வயதானஜேற்சுதாஸ் தனது இசை வாழ்வை 1961 இல் ஆரம்பித்தவர். ஜேசுதாஸ் பத்மசிறீ விருதை 1975இலும் பட்மபூஷன் விருதை 2002 இலு…

  12. திரை விமர்சனம்: அதே கண்கள் சொந்தமாக உணவகம் நடத்திவரும் பார்வை யற்ற இளைஞர் வருண் (கலையரசன்). அவரது தோழியான பத்திரிகையாளர் சாதனா (ஜனனி) அவரை ஒருதலையாகக் காதலிக்கிறார். வருணோ இரக்க குணம் கொண்ட தீபாவை (ஷிவதா) காதலிக்கிறார். ஒருநாள் உணவகம் முடிந்து வீடு திரும்பும்போது சாலை விபத்தில் சிக்குகிறார். அந்த விபத்தின் மூலம் பதினைந்து வயதில் பறிபோன பார்வை, வருணுக்கு திரும்பவும் கிடைத்துவிடுகிறது. பார்வை கிடைத்துவிட்டாலும் காதலி காணாமல் போயிருப் பதைக் கண்டு பதற்றமடையும் வருண், அவரைத் தேடிச் செல் கிறார். அவருக்குக் காதலி கிடைத் தாரா? சாதனாவின் ஒருதலைக் காதல் என்னவானது ஆகிய கேள்விகளுக்கு விறுவிறுப்பாகப் பதில் த…

  13. தனுஷ் பட நாயகியை கடித்து குதறிய நாய்கள்: மருத்துவமனையில் அனுமதி தனுஷ் படத்தில் நடித்த பருல் யாதவ் வாக்கிங் சென்ற போது நாய்கள் கடித்து குதறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த முழு செய்தியை கீழே பார்க்கலாம். மும்பையைச் சேர்ந்தவர் நடிகை பருல்யாதவ். இவர், தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான டைரக்டர் கஸ்தூரிராஜாவின் `டிரீம்ஸ்' என்ற படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக நடித்து உள்ளார். மேலும் `புலன் விசாரணை-2' படத்திலும் கதாநாயகியாக நடித்தவர். இதேபோல மலையாளத்தில் புல்லட், கிருத்தியம், பிளாக் டாலியா என்பது உள்பட பல படங்களிலும், கன்னட…

    • 1 reply
    • 422 views
  14. நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் பரபரப்பு ஏற்படுத்திய இலியானா இலியானா பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் நிர்வாண புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம். ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இலியானா. இவர் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில், இலியானாவுக்கு கடந்த சில வருடங்களாக எந்த சினிமா வாய்ப்பும் இல்லை. எனவே, தனது காதலருடன் நாடு நாடாக பயணம் சென்று பொழுதை கழித்து வருகிறார். இவரது காதலர் புகைப்படக் கலைஞர் என்பதால் அவ்வப்போது கிளாமர் உடைகளை இவர் அ…

  15. ஜல்லிகட்டு அரசியல் பரிதாபங்கள் நன்றி : மெட்ராஸ் சென்ட்ரல் டிஸ்கி : சூனா பானா பாத்திரத்தை செதுக்கிய விதம் மிக அருமை!!

  16. நாட்டாமை படத்தில் மிக்சர் சாப்பிட்டவர் யார் தெரியுமா? சென்னை: நாட்டாமை படத்தில் பெண் பார்க்கும் காட்சியில் மிக்சர் சாப்பிட்டவர் யார் என்பதை தெரிவித்துள்ளார் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மிக்சர் சாப்பிட்டது யார் என்ற செய்தி நாட்டுக்கு ரொம்ப முக்கியமா என்று நீங்கள் நினைக்கலாம். பிரபலம் ஒருவர் ஜல்லிக்கட்டு தொடர்பாக எதுவும் செய்யாமல் மிக்சர் சாப்பிடுவது போன்ற மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. நாட்டாமை படத்தில் வரும் மிக்சர் சாப்பிடும் காட்சியை வைத்து தான் இத்தனை மீம்ஸுகளும். ட்விட்டரில் வேறு மீம்கள் போட்டுத் தாக்குகிறார்கள். …

  17. டிஜிட்டல் மறு பதிப்பு: இளம் ரசிகர்களுக்கு கிடைத்த வாய்ப்பா? காலஞ்சென்ற தமிழக முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப் படத்தின் டிஜிட்டல் மறுபதிப்பு நேற்று செவ்வாய்க்கிழமைதமிழகத்தில் உள்ள சில திரைஅரங்குகளில் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்பட்டது. மீண்டும் வெளியாகிறது ஆயிரத்தில் ஒருவன்' திரைப் படத்தின் டிஜிட்டல் மறுபதிப்பு எம்ஜிஆரின் 100-வது பிறந்த நாள் தொடக்க விழாவையொட்டி, சென்னையில் சில திரையரங்களிலும் மற்றும் கோவையில் சில திரையரங்குகளிலும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாவது மறு பதிப்பு செவ்வாயன்று வெளியாகியுள்ளது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நடிப்பில், 19…

  18. “குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே எனக்கு ஆண் தேவை”: பிரியங்கா சோப்ரா சொல்கிறார் “நான் எதற்கும் பயப்பட மாட்டேன். குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே எனக்கு ஆண் தேவை” என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறினார். இந்தி பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. இவர் ஒரு படத்துக்கு ரூ.9 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. பிரியங்கா சோப்ராவின் படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் குவித்து வருகின்றன. இதனால் 34 வயதான பிறகும் மார்க்கெட்டில் இருக்கிறார். தற்போது ஹாலிவுட் படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிற…

  19. செல்லாநோட்டு, அவிழும் வேட்டி - இது ஏ.ஆர்.ரஹ்மானின் 2017 ’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடல் 1990களின் ஆரம்பத்தில் கலக்கிய , ஏ.ஆர்.ரஹ்மானின் பிரபல பாடலான ’டேக் இட் ஈசி ஊர்வசி’ என்ற பாடலின் மாற்றி அமைக்கப்பட்ட வரிகளுடன் நவீன இசையில் எம் டிவி நிறுவனம் மீண்டும் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தன்னுடைய பிறந்தநாளன்று ரசிகர்களுடன் முகநூல் நேரலையில் உரையாற்றினார் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்தாண்டு இறுதியில் ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளமான முகநூல் மூலம் தனது ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். MTV India அதில் தான் இசை அமைத்த பாடல் ’டேக் இட் ஈஸி ஊர்வசி’ என்ற பாடலில் வரும் சரணங்களை தற்காலத்திற்கு ஏற்றார் போல மாற்ற விரும்புவதா…

  20. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘ராவணன்’ படப் பாடலுக்கு மறுவடிவம் தந்த சுருதி ஹாசன் மணி ரத்தினம் இயக்கத்தில் முன்னர் வெளியான ‘ராவணன்’ இந்திப் படத்தில் இடம்பெற்ற ’ரஞ்சா, ரஞ்சா’ என்ற பாடலுக்கு நடிகை ஷ்ருதி ஹாசன் தற்போது மறுவடிவம் தந்து பாடியுள்ளார். மணி ரத்தினம் இயக்கத்தில் முன்னர் வெளியான ‘ராவணன்’ இந்திப் படத்தில் இடம்பெற்ற ’ரஞ்சா, ரஞ்சா’ என்ற பாடலுக்கு நடிகை சுருதி ஹாசன் தற்போது மறுவடிவம் தந்து பாடியுள்ளார். எம்.டி.வி. தயாரித்துள்ள ’ராயல் ஸ்டாக் பேரல் சீசன் சிக்ஸ்’ இசை நிகழ்ச்சிக்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இந்தப் …

  21. பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை கிடைத்துள்ளது பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு தொடர் சிகிச்சையின் பலனாக கண் பார்வை கிடைத்துள்ளது. கேரளாவை சேர்ந்த பாடகி வைக்கம் விஜலட்சுமிக்கு பிறவியிலே பார்க்கும் திறன் இல்லை. இருப்பினும் அவர் தனது இனிய குரலில் பாடல்கள் பாடி அசத்தி வருகிறார். என்னமோ ஏதோ படத்தில வரும் புதிய உலகை புதிய உலகை, குக்கூ படத்தில் கோடையில் மழை போல, வீர சிவாஜியில் சொப்பன சுந்தரி நான் தானே , உள்பட சுமார் 40 பாடல்களை பாடியுள்ளார். அவருக்கும் கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோ{க்கும் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் நடைபெற உள்ள மகிழ்ச்சியில் இருக்கும் விஜ…

  22. ரிலீஸுக்கு முன் 85 கோடி வசூலித்த பைரவா விஜய் நடித்துள்ள பைரவா படம் இன்னும் இரண்டு தினங்களில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளிவரவுள்ளது. டிக்கெட் ரிசர்வேஷன் தொடங்கி ஏற்கனவே முதல் வாரத்திற்கான டிக்கெட்டுகள் பெரும்பாலான திரையரங்குகளில் விற்று தீர்ந்துவிட்டது. இந்நிலையில் படம் வெளியாவதற்கு முன்பே பைரவா 85 கோடி ருபாய் அளவிற்கு வசூலித்துவிட்டதாக நம்பத்தகுந்த தகவல் வந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 55 கோடி, மற்ற மாநிலங்களில் 30 கோடி ஆகமொத்தம் 85 வசூலிட்டியுள்ளது பைரவா. http://tamil.adaderana.lk/kisukisu/?p=17604 SHARE OR SAVE THIS POST FOR LATER USAGE

    • 0 replies
    • 285 views
  23. 3 லிட்டர் தண்ணீர், 2 மணி நேர டயட், ஆயுர்வேதக் குளியல்..! கீர்த்தி சுரேஷ் சீக்ரெட் அடுத்தடுத்த ஹிட். அதுவும் மாஸ் ஹீரோக்களுடன். செம பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் பியூட்டி சீக்ரெட்ஸை பகிர்ந்துகொள்கிறார், அவர் அம்மா மேனகா! ''கீர்த்தி இப்போ கோலிவுட்டின் செல்ல ஹீரோயின். அம்மாவுக்கு சந்தோஷமா?" ''நிச்சயமா. மேனகாவோட பொண்ணு கீர்த்தின்னு சொன்ன பலரும் இப்போ, கீர்த்தியோட அம்மா மேனகான்னு சொல்றதைக் கேட்டு ரொம்பவே பெருமைப்படுறேன். நான் தமிழ்ல நடிச்ச 'ராமாயி வயசுக்கு வந்துட்டா' படம் ரிலீஸ் ஆனப்போ, என் அப்பா என்னைக் கார்ல கூட்டிட்டுப்போய், பல தியேட்டர் வாசல்களிலும் இருந்த என்னோட கட் அவுட், போஸ்டரை எல்லாம் பார்த்து ரசிச்சாரு. ஆனா, அப்போ எனக…

  24. பிரபல இந்தி நடிகர் ஒம் புரி காலமானார் ஓம்புரி | கோப்பு படம் இந்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிரபலமான நடிகர் பத்மஸ்ரீ ஒம் புரி காலமானார். அவருக்கு வயது 66 இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டிஷ் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ஒம் புரி. இந்தியாவில் உருவான படங்கள் மட்டுமன்றி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தயாரான படங்களிலும் நடித்துள்ளார். வெள்ளிக்கிழமை (ஜனவரி 6) காலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால காலமானார். அவருக்கு வயது 66. இவருடைய மறைவு இந்தி திரையுலக நட்சத்திரங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைத்தளத்தில் அவருடைய மறைவு ஈடுசெய்ய முடியாதது என்று …

  25. ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் சிறப்புப் பதிவு: அதிக கவனம் பெறாத சிறந்த பாடல்கள் கோப்புப் படம்: தி இந்து பிசினஸ் லைன் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாள் அன்று அவருக்கான சிறப்புப் பதிவு போடாதவர்கள் இன்னும் 30 நாளைக்கு ஏடிஎம் வாசலில் காத்திருக்கக் கடவது என சமூக ஊடக நல் உள்ளங்கள் சிலர் சாபம் விட தயாராக இருப்பதால் அவரது இசையில் அதிக கவனம் பெறாத ஆனால் சிறந்த பாடல்கள் சிலவற்றின் பட்டியல் இதோ. ரஹ்மானின் ரசிகர்களாக மட்டுமல்லாமல் பக்தர்களாக இருக்கும் பலருக்கு இந்த பட்டியலில் இருக்கும் எல்லா பாடல்களும் தெரிந்திருக்கலாம். எல்லா பாடல்களுமே ஹிட் தானே என்று தோன்றலாம். அவர்கள் பொங்கியெழுந்து வாதிடுவதற்கான தளம் இதல்ல. குறிப்பிட்ட அந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.