Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. யாழில் 'யாழ் தேவி' திரைப்படத்தின் இசைவெளியீடு இன்று; நடிகை பூஜா வெளியிடுகிறார் 2016-02-15 10:41:37 இலங்கைக் கலைஞர்களால் இலங்கையில் தயாரிக்கப்பட்டுவரும் 'யாழ்தேவி' முழு நீள திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் கிறீன் கிராஸ் ஹொட்டேலில் இன்று மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது. பிரபல தென்னிந்திய நடிகை பூஜா உமாசங்கர், இவ் விழாவில் யாழ் தேவி இசைத்தட்டை வெளியிடவுள்ளார். ராஜ்ஸ்டோன் புரொடக்ஷன் தயாரிப்பில் லோககாந்தன் இப் படத்தை இயக்குகிறார். சங்கர், கிரிஸ், நிரோஷா, மிதுனா உட்பட 50 இற்கும் அதிகமான கலைஞர்கள் இப் படத்தில் நடிக்கின்றனர். சுதர்ஷன் இசை அமைக்கிறார். பாட…

  2. திரை விமர்சனம்: ஜில் ஜங் ஜக் கடும் பெட்ரோல் தட்டுப்பாடு உள் ளிட்ட பெரும் பொருளாதார நெருக்கடி களைச் சந்திக்கும் 2020-ல் கதை நடக்கிறது. நிழலுலகில் ஓஹோவென்று ராஜ்ஜியம் நடத்தும் பெரிய தாதாக்களும் இதனால் தொழில் மந்தநிலையைச் சந்திக் கிறார்கள். தெய்வா (ஆர்.அமரேந்திரன்) என்ற போதைப்போருள் கடத்தல் மன்னன், தன் வசம் கடைசிக் கையிருப்பாகப் பல கோடி மதிப்பு கொண்ட கோகெய்ன் போதைப் பொருளை வைத்திருக்கிறான். அதை விற்க வியாபாரமும் பேசி முடிக்கிறான். போதைப் பொருளை ஒரு காரில் நூதனமான முறையில் ஒளித்துவைக்கவும் அதை ஹைதராபாத்தில் நடக்கும் பழம்பெரும் கார்களின் பேரணிக்கு வரும் சீனனிடம் கொடுத்துவிட்டுப் பணத்தைப் பெற்றுவரவும் திட்டமிடுகிறான்…

  3. ரகுவரன் : நிகழ மறுக்கப்பட்ட அற்புதம் - யமுனா ராஜேந்திரன் ய் நடிகர்களின் பாணியை நடிப்புக் கோட்பாடுகளை முன்வைத்து அனுமானிப்பது ஒரு வகை. பிறிதொரு முறை வேறுபட்ட நடிகர்களின் நடைமுறை நடிப்பை முன்வைத்துப் பேசுவது. இரண்டாவது அணுகுமுறையை முன்வைத்து ரகுவரன் எனும் நடிகரை அணுக விரும்புகிறேன். அமெரிக்க சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவிலும் கொடுமுடிகளைத் தொட்ட ஒரு நடிகன் மார்லோ பிராண்டோ. தேசிய விடுதலை யுகமான அறுபதுகளின் உச்சநிலை படைப்புகளின் பின் ஓரநிலையில் இருந்த இலத்தீனமெரிக்க சினிமாவை மீளவும் உலகின் உச்சநிலைக்குக் கொண்டு வந்து நிறுத்திய நடிகன் கேயல் கார்சியா பெர்னல். வேறு வேறு காரணங்களை முன்வைத்து இந்த இருவருடனும் ரகுவரனை ஒப்பிட்டுப்பேச விழைகிறேன். மார்…

  4. 10 மணித்தியாலம் தண்ணீாில் மிதந்தபடியே நடித்த ஹரிப்­பி­ரி­யா கன்­னட பட­வு­லகில் 30-க்கும் மேற்­பட்ட படங்­களில் நடித்த விஜ­ய­ ரா­க­வேந்­திரா தமி­ழுக்கு அறி­மு­க­மாகும் படம் ‘அதர்­வனம்’. இப்­ப­டத்தை ‘சிலந்தி’ படத்தை இயக்­கிய ஆதி­ராஜன் இயக்கி வரு­கிறார். விஜ­ய­ரா­க­வேந்­திரா, கன்­னட சூப்பர் ஸ்டார்­க­ளான சிவராஜ் குமார், புனித் ராஜ்­குமார் ஆகி­யோரின் மைத்­துனன் ஆவார். விஜ­ய­ரா­க­வேந்­திரா அறி­மு­க­மாகும் இந்த படத்தில் இவ­ருக்கு ஜோடி­யாக ஹரிப்­பி­ரியா நடிக்­கிறார். இந்த படத்தில் மாறு­பட்ட வேடத்­திலும், கவர்ச்­சி­யிலும், நடிப்­பிலும் ஹரிப்­பி­ரியா வெளுத்து வாங்­கி­யுள்­ளாராம். குறிப்­பாக…

  5. ' புலி இசை வெளியீட்டு விழா மன உளைச்சலை தந்தது' - டி.ஆர். வருத்தம்! 'புலி ' பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு பிறகு, தான் தொடர்ந்து மன உளைச்சலுக்குள்ளானதாக 'போக்கிரிராஜா' பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய டி. ராஜேந்தர், "கதாநாயகியை தொடாமலேயே 35 வருடங்கள் சினிமாவில் இருந்திருக்கிறேன். இதற்கு யாராவது விருது தருவார்கள் என்றால் இல்லை. எனக்கு அப்படி விருதும் தேவையில்லை. நான் விருதுக்காக அலைபவனும் அல்ல" எனக் கூறினார். ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் பி.டி. செல்வகுமார் தயாரிப்பில் 'போக்கிரி ராஜா' பட பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர், " 'புலி' பட இசை விழா வெளியீட்டு விழாவுக்கு பிறக…

  6. திரை விமர்சனம்: பெங்களூர் நாட்கள் ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா மூவரும் பள்ளி நாட்களில் இருந்து ஒன்றா கவே வளரும் உறவுக்காரர்கள். ஆர்யா பள்ளிப் படிப்போடு நிறுத் திக்கொண்டு பைக் ரேஸில் ஆர்வம் ஏற்பட்டு ஹைதராபாத் சென்றுவிடுகிறார். பிறகு ரேஸை விட்டுவிட்டு பெங்களூரில் தங்கி விடுகிறார். சாஃப்ட்வேர் இன்ஜினீ யரான சிம்ஹாவுக்கு பெங்களூரில் வேலை கிடைக்கிறது. எம்பிஏ படிப்பைத் தொடர வேண்டும் என்பது ஸ்ரீதிவ்யாவின் கனவு. அவரது பெற்றோரோ பெங்களூரில் வேலை பார்க்கும் ராணாவை ஸ்ரீதிவ்யாவுக்குத் திருமணம் செய்துவைக்கிறார்கள். பெங்களூரில் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா ஆகிய நால்வருக்கும் ஒவ்வொரு விதமான சிக்கல் நிகழ, அதை அவர்கள் எ…

  7. திரை விமர்சனம்: விசாரணை ஆந்திரப்பிரதேசம், குண்டூரில் சில் லறை வேலைகள் செய்து பிழைக் கிறார்கள் தமிழ் இளைஞர்களான பாண்டியும் (தினேஷ்) அவனது மூன்று நண்பர்களும். வாடகை வீடு எடுத்துத் தங்கும் அளவுக்கு வருமானம் இல்லாத அவர்கள், ஊரின் பொதுப் பூங்காவில் தங்கியிருக்கிறார்கள். அவர்களைக் கைதுசெய்து லாக்அப்பில் அடைக்கும் உள்ளூர் போலீஸ், அவர்கள் செய்யாத குற்றத்தைச் சுமத்தி அதை ஏற்றுக்கொள்ளச் சித்திரவதைகள் மூலம் நிர்ப்பந்திக்கிறது. இறுதியாக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படும் அவர்களுக்குத் தப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதே நீதிமன்றத் தில் சரணடைய வரும் பிரபல அரசியல் தரகரான கே.கே-வை (கிஷோர்) கைது செய்ய வரும் தமிழகக் காவல் அதிகாரியான முத்…

  8. கல்யாணத்துக்கு அப்புறம்.. நஸ்ரியாவின் உடல் எடை அதிகரித்துள்ளது. நஸ்ரியா குண்டாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதை பார்த்து பலரும் அவரை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்துள்ளனர். நஸ்ரியா குண்டானால் மற்றவர்களுக்கு என்ன? அது அவர்களுக்கு தேவையில்லாத விஷயம். பார்க்க எப்படி இருக்கிறோம் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்காதவர்கள் நானும், நஸ்ரியாவும் என்று பஹத் தெரிவித்துள்ளார். Read more at: http://tamil.filmibeat.com/heroines/nazriya-s-weight-gain-is-no-one-concern-fahad-038700.html#slide43141

  9. இன்ப அதிர்ச்சியில் மாதவன்: 'இறுதிச்சுற்று' படத்தை பார்க்க மைக் டைசன் விருப்பம்! நடிகர் மாதவன் நடித்து வெளியாகி இருக்கும் இறுதிச்சுற்று தமிழ் படத்தை பார்க்கப்போவதாக குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இறுதிச் சுற்று படத்தை பற்றிய விமர்சனம் பிரபல ஆங்கில பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது. இதனை படித்த குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன், இந்த படத்தை பார்க்க விரும்புவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ''இந்த பாக்சிங் படத்தை நான் பார்க்க விரும்புகிறேன்'' என மைக் டைசன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அந்த ஆங்கில பத்திரிகை எழுதிய விமர்சனத்த…

    • 3 replies
    • 652 views
  10. இறுதிச் சுற்று - திரை விமர்சனம் பெண்களுக்கான குத்துச்சண்டைப் பயிற்சியாளராக ஹரியாணாவில் வேலை பார்ப்பவர் பிரபு (மாதவன்). குத்துச்சண்டைக் கூட்ட மைப்பின் தலைவருடனான முன்விரோ தத்தால் சென்னைக்கு இடமாற்றம் செய் யப்படுகிறார். வடசென்னை குப்பத் தில் உள்ள குத்துச்சண்டைப் பயிற்சி மையத்துக்கு வந்து சேர்கிறார். அங்கு பயிற்சி பெறும் பெண்களிடம் காணப் படாத இயல்பான திறமையையும் உத்வேகத்தையும் மீன் விற்கும் தடாலடிப் பெண்ணான ரித்திகா சிங்கிடம் (மதி) கண்டு வியக்கிறார். தன் அக்கா குத்துச்சண்டையில் வெற்றி பெற்று போலீஸில் சேர வேண்டும் என்பதுதான் மதியின் கனவு. ஆனால், மதியிடம் ஒரு சாம்பியனுக்கான கூறுகள் இருப்பதைக் கண்டு அவளுக்குப் பயிற்சி அளிக்…

  11. அம்மனுக்கு லீவு... பேய்க்கு ஓவர் டைம்! - ‘அரண்மனை-2’ விமர்சனம் ஆக்‌ஷனோ... ரொமான்ஸோ... பேய் படமோ.. எது எடுத்தாலும் எனக்கு அது காமெடி படம்தான் என்கிற சுந்தர்.சியின் செல்லுலாய்டு அரண்மனை. பயப்பட போனால் ஏமாற்றமும், சிரிக்க போனால் நிம்மதியும் கிடைக்கலாம். முதல் பாகம் ஹிட் என்பதால் கூடுதல் தைரியமும், குறைவான வேலையும் தேவைப்பட்டிருக்கிறது. ”ஆண்ட்ரியா நகரு நகரு... த்ரிஷா உட்காரும்மா.. ஹன்சிகா, நீ அப்படியே இரும்மா. வினய் ஸாரி... சித்தார்த் ஜி ஆவோ ஆவோ. சந்தானம் இல்லையா? அப்ப சூரி ஓகே!” - இவ்வளவுதான் மாற்றங்கள். அம்மன் சிலையை மறுபிரதிஷ்டை செய்ய கருவறையை விட்டு வெளியே எடுக்கிறார்கள். அந்த விடுமுறை நாளில் அம்மனுக்கு சக்தி இ…

  12. கனேடியத்தமிழ் சினிமாவில் பெண்கள் - கறுப்பி தென்னிந்தியா சினிமாவிற்கு கிடைத்திருக்கும் பரவலாக்கம், ஈழ, புலம்பெயர் சினிமாவிற்கு ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை. புலம்பெயர் சினிமா எப்போது அந்தந்த நாட்டு சினிமாத்துறைக்குள் தன்னை நுழைத்துக் கொள்கின்றதோ அப்போதுதான் அதற்கான நிரந்தர தளமும் கிடைக்கும். தென்னிந்திய தமிழ் சினிமாவின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதனால் அதில் ஆய்வுகளை நிகழ்த்துவது சுலபம், ஈழத்தமிழ் சினிமாவில் என்று பார்த்தால்கூட மிகவும் குறைந்த அளவிலேயே படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. எனது தலைப்பு புலம்பெயர் தமிழ் சினிமாவில் பெண்கள். புலம்பெயர் எனும் போது அதற்குள் அடக்கும் நாடுகள் பல, அங்கிருந்து எத்தனை முழுநீளத் திரைப்படங்கள் வெளிவந்திருக்க…

  13. ஆங்ரி ஏஞ்சல்... ஆவ்ஸம் மேடி..! - இறுதிச் சுற்று 'நாக்-அவுட்' விமர்சனம் தமிழில் வெளிவந்த 'ஸ்போர்ட்ஸ் சினிமா'க்களை நாக்-அவுட் செய்திருக்கும் இறுதிச் சுற்று! குத்துச் சண்டை வெற்றியையே தன் வெறியாகக் கொண்டு அஸோசியேசன் அரசியலால் ஒலிம்பிக் கனவு தகர்ந்து போனாலும் ஒரு வெற்றிகரமான, முரட்டுக் கோச்சாக இருக்கிறார் மாதவன். நேர்மையாக இருக்க நினைக்கும் எல்லோருக்குள்ளும் பொங்கி வழிகிற ரௌத்திரம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிற காரணத்தினால் மீண்டும் அஸோசியேஷ‌ன் தலைமையினால் டெல்லியிலிருந்து, ஒரு சவாலோடு சென்னைக்கு தூக்கி அடிக்கப்படுகிறார். அந்தச் சவால் "அங்கிருந்து ஒரு சாம்பியனைக் கொண்டு வா பார்கலாம்' என்பதே. சென்னையில் ஜுனியர் கோச்சாரா…

  14. பாகு­ப­லிக்கு 6 விரு­துகள்; சிறந்த வில்­ல­ன் அர­விந்­­சாமி Published by Rasmila on 2016-01-27 09:16:18 சர்­வ­தேச இந்­திய திரைப்­பட அகா­டமி நடத்­திய' ஐபா உற்­சவம்’ விழாவில் பாகு­பலி திரைப்­ப­டத்­துக்கு 6 விரு­துகள் கிடைத்­துள்­ள­தோடு கடந்த வரு­டத்தின் சிறந்த வில்லன் நடி­க­ராக அர­விந்சாமி தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். இவ் விழா நேற்­று­முன்­தினம் ஹைத­ரா­பாத்தில் ஆரம்­ப­மா­கி­யது. இதில் தமிழ், தெலுங்கு, மலை­யா­ளத்தில் வெளி­யான ‘பாகு­பலி’ சிறந்த திரைப்­ப­ட­மாக தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது. இத்­தி­ரைப்­ப­டத்தில் நடித்த சத்­யராஜ், ரம்­யா­கி­ருஷ்ணன் ஆகி­யோரும் விருது பெற்­றனர். ‘தனி ஒருவன்’ திரைப்­ப­டத்தில் நடித்த ஜெயம் ரவிக்கு சிறந்த நடி­க­ருக்­கான விரு…

  15. இந்த வருடமாவது டைட்டானிக் நாயகனுக்கு விருது உண்டா? முழுமையான ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்! உலகஅளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விருதான ஆஸ்கார் விருதுக்கான நாமினேஷன் பட்டியல் வெளியாகியுள்ளது. மொத்தம் 24 பிரிவுகளில் வழங்கப்படும் இவ்விருது, வரும் பெப்ரவரி 28ம் தேதி, கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட்டில், டோல்பை திரையரங்கில் நடைபெறவுள்ளது. இதனை அமெரிக்காவின் எபிசி தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது.இந்தியாவில் ஸ்டார்மூவீஸ் சேனலில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இவ்விருது வழங்கும் நிகழ்ச்சியினை இரண்டாவது முறையாக தொகுத்து வழங்க உள்ளார் நடிகர், காமெடியன், வாய்ஸ் ஆர்டிஸ்ட், டைரக்டர், எழுத்தாளர், தயாரிப்பாளர் எனப் பன்முகங்களைக் கொண்ட கிரிஸ் ராக், முன்னதாக 2005ல் நடைபெற்ற 77வ…

  16. நடிகர் ரஜினிகாந்த், மயில்சாமி அண்ணாதுரை, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சானியா மிர்சா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேப்போன்று மயில்சாமி அண்ணாதுரை, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சானியா மிர்சா உள்ளிட்டோருக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. பத்ம விபூஷண் நடிகர் ரஜினிகாந்த் (கலை - சினிமா), டெல்லியை சேர்ந்த யாமினி கிருஷ்ணமூர்த்தி (கலை - பரதநாட்டியம்…

  17. ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் நடிகர் தனுஷ் தமிழ், இந்தி திரையுலகைத் தொடர்ந்து ஹாலிவுட்டில் உருவாக இருக்கும் படத்தில் அறிமுகமாக இருக்கிறார் தனுஷ். 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் தனுஷ். 'காதல் கொண்டேன்', 'திருடா திருடி', 'ஆடுகளம்', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்தவர். தற்போது நடிகனாக மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இந்தியில் 'ராஞ்சனா (Raanjhanaa)' படத்தின் மூலமாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அமிதாப் பச்சனுடன் இணைந்து பால்கி இயக்கத்தில் 'ஷமிதாப்' படத்தில் நடித்தார். தற்போது ஹாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் தனுஷ். …

  18. நடிகை ஊர்வசியின் சகோதரி கல்பனா திடீர் மரணம்! பிரபல திரைப்பட நடிகையும், நடிகை ஊர்வசியின் சகோதரியுமான கல்பனா திடீரென மாரணடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழில் நடிகர் கமல்ஹாசனின் பம்மல் கே சம்பந்தம், பாக்யராஜுயுடன் சின்னவீடு மற்றும் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை கல்பனா (51). சின்னவீடு இவருக்கு தமிழில் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்த படம். தெலுங்கு படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த கல்பனாவுக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். குழந்த…

  19. ஈழத்தில் நடந்த உண்மையை எடுத்து சொல்லும் யாழ் படம்: - பிப்ரவரி மாதம் 26ம் தேதி வெளியீடு! [Saturday 2016-01-23 21:00] புதுமுக இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட உருவாகியுள்ள திரைப்படம் யாழ்.பல தமிழ் அமைப்புகள் மற்றும் ஈழம் சார்ந்த மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு எதிர்ப்பார்ப்புக்குள்ளாக்கிய படம். நீண்ட போராட்டத்துக்கு பிறகு வருகிற பிப்ரவரி மாதம் 26ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.மேலும் இப்படத்தில் நடிகர் வினோத் கிஷ்ணன், மிஷா மற்றும் பாலுமகேந்திராவால் பெரிதும் பாராட்டப்பட்ட சஷி நடித்துள்ளார். ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய திரைப்படமாக வந்துள்ளது, இதில் இடம் பெற்றுள்ள சிவாய நம பாடல் நல்ல வரவேற்பை பெற்றது குறிப…

  20. ஆஸ்கரை வெல்லுமா இந்த அமேசான் காட்டின் கதை?! ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டி சூடுபிடிக்க துவங்கிவிட்டது. வழக்கம்போல, உலகின் பல பகுதிகளில் இருந்து, பல கலைப்படைப்புகள் ஆஸ்கரை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் முதன்முறையாக கொலம்பிய சினிமா ஒன்று ஆஸ்கர் இறுதிப்பட்டியலுக்கு தேர்வாகியிருக்கிறது. கொலம்பிய நாட்டில் இருந்து முதல்முறையாக ஒரு இயக்குநர், சினிமா ஆர்வலர்களால் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறார் ஒரே படைப்பில் அத்தனை பேரையும் கவனிக்க வைத்த அந்த இயக்குனர் சிரோ கியூரா. அமேசான் காடுகள் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது என்னவாக இருக்கும் ? சிலருக்கு அரியவகை மூலிகைகள் கிடைக்குமிடம் என தோணலாம். சிலருக்கு ‘உலகின் நுரையீரல்’ என அழைக்கப்படும் அதன் பெ…

  21. தன்னம்பிக்கையைத் தூண்டும் 3 உலகத் திரைப்படங்கள்..!! எல்லோருக்கும் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும். வரலாற்றில் நம் பெயரும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் சிறு தோல்வி ஏற்பட்டாலே நாம் முடங்கி போய் விடுகிறோம். ஆனால் விடாமுயற்சியுடன் நம் இலக்கை நோக்கி பயணித்தால் எந்த ஒன்றாலும் நம்மை தோற்கடிக்க முடியாது. நம்மால் சாதிக்க முடியும் என்பதை நம் மனதுக்குள் விதைக்கிற உணமைக் கதையை அடிப்படையாக வைத்த படங்கள் இதோ உங்களுக்காக. 1. தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ் ஒரு காலத்தில் சாப்பிட உணவில்லாமல், தங்குவதற்கு வீடு இல்லாமல் ரயிலிலும், லிப்ட்டிலும், என கிடைக்கும் இடத்தில் எல்லாம் தங்கி, விடா முயற்சியுடன் வாழ்க்கையோடு போராடி இன்றைக்கு பல மில்லியன் டால…

    • 1 reply
    • 553 views
  22. ஆஸ்கர் விருதுகளில் இனப் பாகுபாடு சர்ச்சை: வில் ஸ்மித் புறக்கணிப்புக் குரலால் பரபரப்பு 73-வது கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சியில் மனைவியுடன் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் | படம்: ஏ.எஃப்.பி. ஆஸ்கர் விருது தெரிவுப் பட்டியலில் அமெரிக்காவின் சிறுபான்மை இனத்தவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் அடுத்த மாதம் (பிப்ரவரி) ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என ஹாலிவுட் திரை நட்சத்திரம் வில் ஸ்மித் அறிவித்துள்ளார். ஏபிசி என்ற தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் வில் ஸ்மித் பேட்டியளித்தார். அப்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஏற்கெனவே, வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட், இயக்குநர…

  23. நடிகை அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மா திருமணம் டெல்லியில் நேற்று நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர். மலையாளம், தெலுங்கில் ஒருசில படங்களில் நடித்த அசின் (30), தமிழில் 2004-ல் வெளிவந்த ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தில் அறிமுகமானார். ‘சிவகாசி’, ‘வரலாறு’, ‘போக்கிரி’ உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், ‘கஜினி’ படத்தின் இந்தி ரீமேக் படத்தில் நடித்ததன் மூலம் இந்தியில் வாய்ப்புகள் அதிகரித்தது. இதற்கிடையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவுக்கும் (40), அசினுக்கும் நட்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் சம்மதம் கிடைத்ததை அடுத்…

    • 6 replies
    • 462 views
  24. கதகளி - திரை விமர்சனம் இயக்குநர் பாண்டிராஜ் இயக் கத்தில் விஷால், கேத்ரீன் தெரசா நடித்திருக்கும் ‘ஆக்‌ஷன் - த்ரில்லர்’ திரைப்படம் ‘கதகளி’. கடலூர் தாதா தம்பாவுடன் (மது சூதன் ராவ்) ஏற்படும் பிரச்சினையால் ஊரைவிட்டுச் செல்கிறான் அமுதன் (விஷால்). அதற்குப் பிறகு, நான்கு ஆண்டுகள் அமெரிக்காவில் வேலை செய்துவிட்டு, தன் காதல் திருமணத் துக்காக ஊருக்குத் திரும்பிவரு கிறான். அமுதனின் காதலி மீனுக்குட்டி (கேத்ரீன் தெரசா). திருமணத்துக்கு நான்கு நாட்கள் இருக்கும்போது தாதா தம்பாவை யாரோ கொன்று விடுகிறார்கள். அந்தக் கொலைப் பழி அமுதன் மீது விழுகிறது. திருமண வேலைக்காகச் சென்னைக்குச் சென்றிருக்கும் அமுதனைக் காவல் துறை உடனடியாகக் கடலூருக்கு வர…

  25. கெத்து - திரை விமர்சனம் இயற்கை எழில் சூழ்ந்த குமுளியில் கதை நடக்கிறது. கதை குமுளிக்கு வருவதற்கு முன் இஸ்ரோ விஞ்ஞானி ஒருவரைக் கொல்வதற்கான சர்வதேசச் சதி பற்றிய காட்சி அரங்கேறுகிறது. விஞ்ஞானியைக் கொல்லும் பொறுப்பை விக்ராந்த் ஏற்றுக்கொள்கிறார். குமுளியில் உள்ள பெண்கள் பள்ளியில் உடற்கல்வி ஆசிரிய ராகப் பணியாற்றுகிறார் சத்யராஜ். சாந்தமே உருவான அவரது மகன் உதயநிதி ஒரு நூலகர். மகள் தீபிகா, மனைவி பிரகதி ஆகியோ ருடன் அமைதியான வாழ்க்கையை நடத்திவரும் சத்யராஜ் துணிச்சலா னவர். பள்ளிக்கு அருகில் நடத்தப் படும் ஒரு ‘பார்’, கல்லூரி மாணவி களுக்குப் பெரும் தொல்லையாக அமைய, அவர் காவல்துறையில் புகார் கொடுத்துவிடு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.