வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
மோடியை சந்தித்த பின்னர் அரசியலில் நுழைகிறார் அஜித்? Published by Rasmila on 2016-01-08 09:19:33 நடிகர் அஜித் விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கப் போவதாகவும், இந்த சந்திப்பிற்குப் பின்னர் அவர் அரசியலில் களமிறங்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தமிழ்நாட்டில் தனக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் அஜித். தற்போதைய சூழ்நிலையில் தான் நடிக்கும் படங்கள் தொடர்பான விழாக்களில் கூட அஜித் கலந்து கொள்வதில்லை. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியை அஜித் விரைவில் சந்திக்க இருப்பதாகவும், இந்த சந்திப்பிற்குப் பின்னர் அரசியலில் அவர் ஈடுபடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழ்ந…
-
- 0 replies
- 429 views
-
-
இளையராஜா ஒரு டி.வி நிருபரை பார்த்து “உனக்கு அறிவிருக்கா?” என்று கேட்டது பெரிய விஷயமாகிவிட்டது. நாடெங்கிலும் இந்த சம்பவத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் குரல்கள் ஒலித்து வருகிறது. பத்திரிகையாளர் சங்கங்கள் பல, “அப்படி கேட்டதற்கு இளையராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அறிக்கைகள் அனுப்ப, அப்செட் ஆகிவிட்டாராம் அவர். அவருக்கு பதிலாக அவரது மகன் கார்த்திக் ராஜா, “அப்பாவுக்கு எழுபது வயசுக்கும் மேலாகிவிட்டது. நெஞ்சுவலி காரணமாக ஆபரேஷனும் செய்திருக்கிறார். இந்த சம்பவம் அவரது மனதை வெகுவாக பாதித்திருக்கிறது. அதனால் இந்த விஷயத்தை இதோடு விட்டுவிடுங்கள்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். விட்ருவீங்களா? விட்ருவீங்களா? http://www.seithy.com/breifNews.php?newsID=148808&ca…
-
- 2 replies
- 578 views
-
-
சென்னை மழை வெள்ளப் பாதிப்புகளையும் சாதி, மதங்களை மறந்து மக்கள் உதவியதையும் காட்சிப்படுத்தி நடிகர் விக்ரம் புதிய பாடல் ஆல்பம் உருவாக்குகிறார். இதில் சூர்யா, கார்த்தி, ஜெயம்ரவி, பிரபுதேவா, ஜீவா, பரத், நடிகைகள் அமலாபால், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சென்னையில் கடந்த மாதம் வரலாறு காணாத மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்தனர். ஹெலிகாப்டர்களில் வந்து ராணுவத்தினர் போட்ட உணவுப் பொட்டலங்களுக்காக மக்கள் அல்லாடிய பரிதாபங்களை பார்க்க நேர்ந்தது. அடையாறு, கூவம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு வந்து நகரம் முழுவதையும் மிதக்க வைத்தது. அரசு துறையினர், தொண்டு நிறுவத்தினர், நடிகர், நடிகைகள், இளைஞர்கள் இரவு பகலாக நிவார…
-
- 0 replies
- 360 views
-
-
இசை தேடும் இசைப்புயல் ஏ,ஆர்.ரஹ்மான் ஹாலிவுட் படங்களை மட்டுமே தமிழன் பார்த்துக்கொண்டிருக்க, ஹாலிவுட்டின் மிகப்பெரிய விழா மேடையில் செம்மொழியாம் நம் தாய்மொழியில் பேசி தமிழர் நமக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் அள்ளிவந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் இன்று. மேற்கத்திய இசை, கர்நாடிக் சங்கீதம், ராப், கிளாசிக்கல் இசை என இசையின் ஒவ்வொரு பிரிவையும் தன் ரத்தநாளங்களில் கலந்து வைத்திருக்கும் ஒரு மேதை தான் இந்த அல்லா ரக்கா ரஹ்மான். ஏறாத மேடைகள் இல்லை, இவர் கையை அலங்கரிக்காத விருதுகள் இல்லை, இவரிடமிருந்து பிறக்காத இசையும் இல்லை. ‘சிநேகிதனே’ என்று உருகவைப்பார், ‘போராளே பொன்னுத்தாயி’யென்று அழவைப்பார், ‘மன மன மன மென்டல் மனதில்’ என குதூகலிப்பார், ‘காதல் ரோ…
-
- 2 replies
- 3.7k views
-
-
திரை விமர்சனம் - மாலை நேரத்து மயக்கம் பெற்றோரின் விருப்பத்துக்காக விருப்பமில்லாத திருமண உறவில் சிக்கிக்கொள்கிறார் மனோஜா (வாமிகா). இவரது கணவன் பிரபு (பாலகிருஷ்ணா) கூச்ச சுபாவம் கொண்டவர். நாகரிகம், நாசூக்கு அறி யாதவர். ஆனால் தன் மனைவி மீது உயிராக இருக்கிறார். மனோஜாவோ பிரபுவை வெறுத்து ஒதுக்குகிறார். இவர் களது திருமணம் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தால் முறிந்துபோகிறது. பிரிந் தவர்கள் சேர்ந்தார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை. கீதாஞ்சலி செல்வராகவனின் இயக் கத்தில் வந்திருக்கும் இப்படம், அம்மா வும் மகளும் பேசிக்கொள்வதை இயல் பாகக் காட்சிப்படுத்தியபடி தொடங்கு கிறது. பிறகு, திருமண முறிவின் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறது. பிடிக்காத த…
-
- 0 replies
- 518 views
-
-
இந்தியாவின் உயரிய விருது பெற்ற இளம்பெண்ணின் வீரக்கதை 23 வயதான ஒருவர் என்ன செய்து கொண்டிருப்பார். வேலை தேடிக்கொண்டு, பெற்றோரிடம் திட்டு வாங்கி கொண்டு, நண்பர்களுடன் ஊரைச் சுற்றி பொழுதைக் கழித்து கொண்டிருப்பார். ஆனால் நீர்ஜா பானோட்டின் கதை சற்று மாறுபட்டது. கல்யாணம் ஆகி இரண்டே மாதத்தில், வரதட்சணைக் கொடுமையால் மீண்டும் வீட்டிற்கு வந்தவர் அதோடு முடங்கிவிடவில்லை. பேன் ஆம் விமான நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி எடுக்க மையாமி சென்றவர் திரும்பி வந்தது விமான குழு நிர்வாகி எனப்படும் பர்ஸராக. ஆனால் இவற்றை விடப் பெரிது,அவர் செய்த மாபெரும் விஷயம் தன் உயிரைப் பொருட்படுத்தாமல் 350 பயணிகளின் உயிரை காப்பாற்றப் போராடினார். எல்லா நாட்களையும் போல தனது…
-
- 0 replies
- 450 views
-
-
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘கதகளி’ : - பொங்கலன்று வெளியாகிறது! [Sunday 2016-01-03 00:00] பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கதகளி’. பொங்கல் பண்டிகையன்று வெளியாகிறது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஷால் மாஸ் ஹீரோ இமேஜை தவிர்த்துவிட்டு, கதாபாத்திரமாக நடித்துள்ளாராம். அதுவும், இப்படத்தில் இரண்டாம் பாதியில் இடம்பெற்ற பாடல்களை, கதைக்கு ஒத்துவரவில்லை என்று விஷாலே எடுக்க சொல்லிவிட்டாராம். அந்த அளவுக்கு இப்படம் ஒரு நாவலைப் போல அமைந்துள்ளதாக கூறினார். கதகளி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் விஷால், இயக்குநர் பாண்டிராஜ் , இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா…
-
- 0 replies
- 985 views
-
-
2015-ன் டாப் 10 வில்லன்கள்! ஒரு படத்தின் ஹீரோ, ஹீரோவாகத் தெரிய வேண்டுமென்றால் கண்டிப்பாக அந்தப்படத்தில் வில்லன் மிக வலிமையானவனாக இருந்தால் மட்டுமே நடக்கும். கடந்த வருடம் நம் மனதில் தனி இடம் பிடித்த வில்லன்கள்... http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/57124-2015-top-10-villans.art
-
- 0 replies
- 578 views
-
-
2015-ன் நட்சத்திரம்: மர்ம வசீகர ‘மாயா’ ஜால நாயகி! தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை இந்த ஆண்டின் வெற்றியாளர்களில் முதல் இடம் சந்தேகமில்லாமல் நயன்தாராவுக்குத்தான். ‘தனி ஒருவன், ‘மாயா’, ‘நானும் ரவுடி தான்’ என்று மூன்று வெற்றிப் படங்கள்! முதல் வரிசைக் கதாநாயகர்களோ (ஜெயம் ரவியைத் தவிர) இயக்குநர்களோ தயாரிப்பாளர்களோ அடைந்திராத வெற்றி இது. நயன்தாராவின் வெற்றி இந்தத் திரைப்படங்களின் வெற்றிக்கு வெளியிலும் இருக்கிறது என்பதுதான் உண்மை. சமீபத்தில் சேலத்தில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு நயன்தாரா சென்றபோது அவரைக் காண்பதற்குத் திரண்ட கூட்டத்தின் அளவுக்கு வேறு எந்தக் கதாநாயகிக்கும் திரண்டிருக்குமா என்பது சந்தேகமே. இவ்வளவு ஏன், முன…
-
- 4 replies
- 677 views
-
-
அழகான பேய்கள் 2015ஆம் ஆண்டை வழியனுப்பி வைத்துவிட்டு புதிய ஆண்டை வரவேற்றுக்கொண்டிருக்கும் நிலையில் வருட ஆரம்பத்திலேயே தமிழ் சினிமாவை அழகான பேய்கள் ஆக்கிரமிக்க போகின்றன. அதாங்க தமிழ் சினிமாவின் அண்மைய டிரென்டான பேய் திரைப்படங்கள் வரிசையில் இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் சுந்தர் சியின் அரண்மனை 2 வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தில் இரண்டு அழகான பேய்கள்... சாரி... அழகான நடிகைகள் பேய்களாக நடித்துள்ளன. சுந்தர்.சியின் திரைப்படங்கள் என்றாலே, ஒரே திருவிழா கூட்டமாகத் தான் இருக்கும். அரண்மனை 2 திரைப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது. சித்தார்த் ஹீரோவாக இருந்தாலும், த்ரிஷா, ஹன்சிகா ஆகியோருக்கு தான், கதையில் …
-
- 2 replies
- 392 views
-
-
2015-ன் டாப் 10 தெறி பன்ச்கள்! 2015ல் 206 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் தெறி வைரல் அடித்த டாப் 10 பன்ச்கள் இது... http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/57061-2015-top-10-movie-dialouge.art
-
- 0 replies
- 911 views
-
-
2015-ல உங்ககிட்ட நிறைய எதிர்பார்த்துட்டோம் பாஸ்! இந்த வருடம் கோலிவுட்டில் வெள்ளிக்கிழமை வெளியாகி, சனிக்கிழமை சரண்டர் ஆன படங்களின் எண்ணிக்கையும் அதிகம். புதுமுகம், லோ பட்ஜெட், நட்சத்திர பட்டாளம், ஹை பட்ஜெட் என எந்த வேறுபாடுமின்றி படங்களை வரவேற்றான் தமிழக ரசிகன். ஒவ்வொரு படத்திற்குமான அவனது எதிர்பார்ப்புகள் அப்படங்களின் வெற்றிகளுக்கு பெரிதும் உதவின. அதேசமயம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத படங்கள் அடி வாங்கின. அப்படி பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி ரசிகர்களைத் திருப்திபடுத்தாத படங்களில் சில இங்கே... குறிப்பு: பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் பற்றிய அலசல் அல்ல இது! மாரி 'செஞ்சிருவேன் செஞ்சிருவேன்'னு சொல்லி ரசிகர்களை செமத்தியா செஞ்சிட்டா…
-
- 0 replies
- 862 views
-
-
புத்தாண்டில் எட்டுப்படங்கள், தமிழ்சினிமாவின் அதிரடிப்பாய்ச்சல் 2016ம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1ம் தேதி வெள்ளிக்கிழமை வருவதால் பல படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் புத்தாண்டிற்கு தமிழில் எட்டுப் படங்கள் வெளியாகவிருக்கின்றன. நீயா நானா ஆண்டனி தயாரிப்பில் “அழகுகுட்டிச்செல்லம்”, சந்தானம் நடிப்பில் “வாலிபராஜா”, செல்வராகவன் எழுத்தில், கீதா செல்வராகவன் இயக்கும் “மாலைநேரத்துமயக்கம்”, சிம்ரன் நடிப்பில் “கரையோரம்”,சமுத்திரக்கனி, சக்தி நடிப்பில் “தற்காப்பு”, “நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க”, “கோடைமழை”, “பேய்கள் ஜாக்கிரதை” உள்ளிட்ட எட்டுப் படங்கள் ரீலீஸாகவிருக்கின்றன. பொங்கல்வரை ஓடினால் போதும் என்கிற மனநிலைய…
-
- 0 replies
- 465 views
-
-
2015 வருடத்தின் தெறி ஹிட் 15 பாடல்கள் இந்த வருட தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் ட்ரெய்லர் மற்றும் டீசர்கள் மட்டுமல்லாது பாடல்களும் வைரல் களத்தில் இறங்கியது. சிறந்த பாடல் என்பதையும் தாண்டி யு ட்யூப் வியூவ்ஸ், ஃபேஸ்புக் ஷேர்ஸ், ஆக்டிவ் நெட்டிசன்களின் ரிவ்யூ என பல இத்யாதிகளே ஒரு பாடலின் வெற்றியை முடிவு செய்தன. அப்படி 2015ம் வருடம் வைரல் ஹிட் லிஸ்ட்டில் வரும் முக்கியமான 15 பாடல்கள் இங்கே.. மெர்சலாயிட்டேன்: (படம்- ஐ) இந்த வருட தமிழ் சினிமாவின் முதல் வைரல் மெர்சலாயிட்டேன் சாங் ப்ரோமோ. ’ஐ’ படத்தில் ரஹ்மான் இசையில் அனிருத் பாடியதென்பது வேற லெவல் எதிர்பார்ப்பைக் கிளப்ப தியேட்டரில் பாட்டின் விஷுவல்ஸை பார்த்தவுடன் நம் அனைவரின் கண்களிலும் இதயம் பூத்து குலுங்கியது…
-
- 0 replies
- 577 views
-
-
தற்காப்பு படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. இதில் நடிகை நமீதா, இயக்குனர் ஆர்.பி.ரவி, தயாரிப்பாளர் செல்வமுத்து மற்றும் என்.மஞ்சுநாத், நடிகர்கள் சக்திவேல் வாசு, அஜய் பிரசாத், பொன்னம்பலம், பவன்குமார், மலேசியாவை சேர்ந்த முன்னாள் இணை ஆணையர் பெராக், டத்தோ ஏ.பரமசிவம், டொக்டர் ராஜாமணி செல்வமுத்து, TGV பிக்சர்ஸின் மேலாளர் சங்க்ஷா குவாங்(CHUNG SHYH KWONG ஆகியோர் பங்குபற்றினர். இதில் நடிகை நமீதா பேசும்போது ‘’தற்காப்பு என்பது தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்வது. தற்காப்பு ஆண்களை விட பெண்களுக்கு இன்றைய சூழலில் மிக அவசியம். நான் மொடலிங்கில் நுழையும்போது ‘நீங்க பெரிய பிசினஸ்மேனோட பொண்ணு. ஏன்மா இந்த ஃபீல்டுக்குள்ளலாம் வர்றே?’ என்ற ரீதியில் கேள்விகள் வ…
-
- 0 replies
- 655 views
-
-
கவர்ச்சியற்ற நாயகிகளும் செக்ஸியான நாயகர்களும் ஆர். அபிலாஷ் Bangalore Daysஇல் சக்கரநாற்காலியில் வரும் ஊனமுற்ற பெண்ணாக பார்வதி மேனன் பெண்களை செக்ஸியாக காட்டுவதற்கு ஆரம்பத்தில் தமிழ் சினிமா வெகுவாக மெனக்கெட்டிருக்கிறது. ஐம்பதுகளின் கறுப்பு வெள்ளை படங்கள் கூட விதிவிலக்கு அல்ல. தொண்ணூறுகள் வரை தமிழகம் ஆடையை பொறுத்தமட்டில் கட்டுப்பெட்டியாகவே இருந்தது. எண்பதுகளில் ஈரத்தில் ஒட்டின ஆடையுடன் மழைநடனம் இன்றைய டாஸ்மாக் பாடல் போல அத்தியாவசிய அங்கமாய் இருந்தது. தொண்ணூறுகளில் பெண் தொப்புள் மீது அசட்டு காதல் ஒளிப்பதிவாளர்களுக்கு இருந்தது. பெரிய திரையில் நாயகியின் தொப்புள் சில நொடிகள் குளோசப்பாய் வருகையில் எப்படி இருக்கும் என நினைத்தால் இன்று குமட்டல் எடுக்கிறது. இன்று த…
-
- 1 reply
- 3.8k views
-
-
ஷூட்டிங் போனா..நடி நடி...வீட்டுக்குப் போனா படி படி- பசங்க-2 சுட்டீஸுடன் ஒரு ஜாலி சந்திப்பு! ஒரு மரம் நிலத்தில் வளர்வதற்கும் தொட்டியில் வளர்வதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது.பரந்து விரிந்து வளர வேண்டிய மரம் போன்றவர்கள் தான் குழந்தைகள்.அவர்களை தொட்டிகளில் அடைத்து போன்சாய்களாய் மாற்றிச் சுருக்கிக் கொண்டிருக்கிறோம்.குழந்தைகளை குழந்தைகளாய் வளரவிடுங்கள்.இந்த ஒன்லைன் பேரண்ட்டைல் மெசேஜ் தான் பசங்க- 2. இயக்குநர் பாண்டிராஜ் இதற்கு முன்னதாக இயக்கிய ’பசங்க’ திரைப்படம் நடுத்தர வர்க்கக் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.பசங்க-2 இன்னும் ஒருபடி மேலே இருக்கும் உயர்நடுத்தர வர்க்கக் குழந்தைகளின் வாழ்க்கை முறையையும் கல்வியாலும…
-
- 0 replies
- 667 views
-
-
1:49 AM IST பதிவு செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 25,2015, 1:49 AM IST மும்பை, நடிகை அசின் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை மணக்கிறார். இவர்கள் திருமணம் ஜனவரி 23–ந் தேதி நடக்கிறது. திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு அசின் விலகுகிறார். தமிழ் படங்கள் ஜெயம் ரவி ஜோடியாக எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அறிமுகமானவர் அசின். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்தார். விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்றோருடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அசின் நடித்த ‘கஜினி’ படம் வசூலில் சாதனை படைத்தது. இந்த படம் அமீர்…
-
- 4 replies
- 673 views
-
-
தென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்குத் தள்ளிய நேர்த்தியான படைப்புகள்! தென்னிந்திய சினிமாவைப் பொறுத்த வரையில், இந்த வருடம் சுமார் 500 படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் படங்களுக்கான வரவேற்பும், வெற்றி வீதமும் கலவையாகவே இருந்தது. காஞ்சனா 2, பிரேமம், படாஸ், காக்கா முட்டை உள்ளிட்ட படங்கள் வெளிவந்து வெற்றிபெற்று, அனைவரையும் ஆச்சரியப்படுத்தின. அதே நேரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகி கவலையையே தந்தன. தமிழகத்தில் 2015-ல் வெளியான சுமார் 200 படங்களில், 10 முதல் 15 படங்களே பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டடித்தன. இதுகுறித்து நம்மிடம் பேசிய சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை, "…
-
- 0 replies
- 326 views
-
-
புகழ்பெற்ற கிறிஸ்மஸ்கால திரைப்படமான ஹோம் அலோனுக்கு 25 ஆண்டுகள் பூர்த்தி வரலாற்றின் மிகச்சிறந்த கிறிஸ்மஸ் கால திரைப்படங்களில் ஒன்றான “ஹோம் அலோன்” திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஹோம் அரோனில் மேக்காலே கல்கின் 1990 நவம்பர் 16 ஆம் திகதி ஹோம் அலோன் திரைப்படம் வெளியாகியது. அமெரிக்க தம்பதியொன்று நத்தார் விடுமுறையில் பாரிஸ் நகருக்கு செல்லும்போது தவறுதலாக தமது 7 வயது மகனை தனியாக வீட்டில் விட்டுவிட்டு சென்றபோது அச்சிறுவன் இரு திருடர்களிடமிருந்து தன்னையும் வீட்டையும் பாதுகாத்…
-
- 2 replies
- 290 views
-
-
சிம்பு - அனிருத்தின் பீப் விவகாரம் அடங்கும் முன்பே, இன்னொரு ஆபாச சர்ச்சை. இது இரு நடிகைகள் தொடர்பானது. நடிகைகள் பூஜா, பார்வதி மேனன் ஆகிய இருவரும், தங்கள் உடல் அழகை ஆபாச வார்த்தைகளால் சமூக வலைத்தளத்தில் வர்ணித்த ரசிகர்கள் மீது 2 பேருக்கு ஆவேசமாக பாய்ந்து பதிலடி கொடுத்துள்ளனர். பூஜா, ‘நான் கடவுள்' படத்தில் நடித்து பிரபலமானவர். பார்வதி மேனன், ‘சென்னையில் ஒருநாள், மரியான், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்துள்ளார். பூஜாவின் பேஸ்புக்கில் ரசிகர் ஒருவர் புகுந்து நீங்கள் பிங்க் நிற ஆடையில் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறீர்கள் என்று கருத்து பதிவிட்டு விட்டு தொடர்ந்து அவரது முன்னழகைப் பற்றி ஆபாசமாக எழுதியுள்ளார். …
-
- 0 replies
- 394 views
-
-
2015 - நிஜமும் நிழலும்: வாகை சூடிய திரைப்படங்கள்! காக்கா முட்டை பாகுபலி தனி ஒருவன் ஜனவரி 2ம் தேதி வெளியான ‘திரு.வி.க பூங்கா' உள்ளிட்ட 3 படங்களில் ஆரம்பித்து தற்போது வெளியாகியிருக்கும் ‘பசங்க 2' உள்ளிட்ட 3 படங்களோடு 2015-ல் மொத்தம் 204 படங்கள் வெளியாகியிருக்கின்றன. இவற்றில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமே லாபம் என சொல்லக்கூடிய படங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றன. ‘தங்கமகன்', ‘பசங்க 2' மற்…
-
- 1 reply
- 1.7k views
-
-
முதல் பார்வை: பசங்க 2 - கவனத்துக்குரிய 'ஹைக்கூ' உலகம்! 'பசங்க', 'மெரினா' படங்களை இயக்கிய பாண்டிராஜ் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்துக்குப் பிறகு யு டர்ன் அடித்து மீண்டும் குழந்தைகளை மையமாக வைத்து ஒரு படம் இயக்கியுள்ளார் என்றால் எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இருக்குமா? படத்தைத் தயாரித்ததோடு, நடிப்பிலும் தன் பங்களிப்பு செய்த சூர்யா, சின்ன இடைவெளிக்குப் பிறகு அமலாபாலின் நல்வரவு என்ற இந்த காரணங்களே கதாபாத்திரம் படம் பார்க்கத் தூண்டியது. 'பசங்க 2' எப்படி? நிஷேஷ், தேஜஸ்வினி என்ற இரு சுட்டிகளும் துறுதுறு சுறுசுறுவென்று ஜாலியாக பிடித்ததை மட்டும் செய்கிறார்கள். இவர்களை சமாளிக்க முடியாமல் பள்ளிக்கூடங்கள் திண்டாடுகின்றன…
-
- 1 reply
- 1.2k views
-
-
2015 ல் முத்திரை பதித்த அறிமுக இயக்குநர்கள்! 2015, தமிழ் படங்களுக்கு வெற்றியும், தோல்வியும் நிறைந்த ஆண்டு. முன்னணி ஹீரோக்களின் படங்கள் கூட சுமாராக போக, இளம் ஹீரோக்களின் பல படங்கள் வெற்றி கண்டன. குறிப்பாக, லோ பட்ஜட் படங்கள், அதிக அளவு வசூலை பெற்றன. கமர்ஷியல் திரைப்படங்கள் மட்டுமின்றி, சமூகம் சார்ந்த திரைப்படங்களும் வெளியாகி, விருதுகளையும் பெற்றன. இந்த ஆண்டு, இருநூற்றுக்கும் அதிகமான தமிழ் படங்கள் வெளிவர, அதில் கால்வாசிக்கும் அதிகமான திரைப்படங்கள், அறிமுக இயக்குநர்களால் இயக்கப்பெற்றவை. முதல் படத்திலேயே, தங்கள் திறமையை நிரூபித்து, சாதித்தும் காட்டிய அறிமுக இயக்குனர்கள் சிலர் இங்கே… மணிகண்டன் – காக்கா முட்டை 2015 - ம் ஆண்டின் மிகச்சிறந்த தி…
-
- 0 replies
- 662 views
-
-