ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143647 topics in this forum
-
இலங்கையில் பசு வதைக்கு தடை - அமைச்சரவை அனுமதி இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கையில் பசு வதையை தடை செய்வது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பில் வௌியிடப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் நிலவும் நாடு என்ற ரீதியில் இலங்கை கிராம மக்களின் ஜீவனோபாய அபிவிருத்திக்காக கால்நடை வளத்தின் மூலம் கிடைக்கும் பங்களிப்பு பாரியதாகும். பசு வதை அதிகரித்ததன் காரணமாக பாரம்பரிய விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது தேவையான கால்நடை வளம் போதுமானது இல்லை என்பதும், இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்காக வெளிநாட்டுக்கு செல்லும் பெரும் தொகையிலான அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தி கிராம …
-
- 43 replies
- 4.9k views
-
-
ஐ.எஸ். குறித்து எச்சரித்தும் நல்லாட்சி அரசு கண்டுகொள்ளவில்லை – விஜயதாச by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/09/Wijeyadasa.jpg ஐ.எஸ். அமைப்பில் இலங்கையர்களின் ஈடுபாடு குறித்து தான் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தால், பயங்கரவாத தாக்குதல்கள் தடுத்திருக்கலாம் என விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியிருந்த அவர், குறித்த தாக்குதலை தடுப்பது மட்டுமன்றி ஐக்கிய தேசிய கட்சியின் அழிவு மற்றும் அதிகார இழப்பு ஆகியனவற்றை தவிர்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற …
-
- 0 replies
- 374 views
-
-
ரணில் வெளியிட்ட அறிக்கை பொய்யானது- அநுர by : Yuganthini http://athavannews.com/wp-content/uploads/2020/09/anura.jpg ஊழலுக்கு எதிரான செயலகம், (ஏ.சி.சி.எஸ்) தேசிய செயற்குழுவின் (என்.இ.சி) அனுமதியுடன் நிறுவப்பட்டது என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிக்கை பொய்யானது என நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணையகத்தின் முன் நேற்று (திங்கட்கிழமை) சாட்சியமளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அநுர குமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, …
-
- 0 replies
- 595 views
-
-
புலனாய்வு பிரிவுக்கு தெரியாமல் குண்டுகள் வெடித்ததா? உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வெளிநாட்டு புலனாய்வு பிரிவு ஏற்கனவே வழங்கிய தகவலைகளை தவிர வேறு புலனாய்வு தகவல்களை பெற்றுக்கொள்ள இலங்கை புலனாய்வு பிரிவு தவறியதாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட போது நாட்டின் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய பூஜித் ஜயசுந்தர, நேற்று (29) ஐந்தாவது முறையாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் அளித்தார். இதன்போது அரச மேலதிக சொலிசிட்டர் நாயகம் முதலாவதாக அவரிடம், ´உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரே இரவில் திட்டமிடப்படவில்லை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? என வினவினார். ´ஐயா, சஹ்ரானும் அவ…
-
- 0 replies
- 576 views
-
-
இலங்கை பல தேசங்களைக் கொண்ட நாடென்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: கஜேந்திரகுமார் வலியுறுத்து Bharati September 30, 2020இலங்கை பல தேசங்களைக் கொண்ட நாடென்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: கஜேந்திரகுமார் வலியுறுத்து2020-09-30T12:30:27+05:30 இலங்கை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, பல தேசங்களைக் கொண்ட நாடென்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார். சமூக நீதிக்கான தேசிய இயக்கம் , 20ஆம் திருத்தத்திற்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான கட்சிகளை இணைத்து, அந்த அமைப்பு இன்று கொழும்பிலுள்ள ஜானகி ஹோட்டலில் நடாத்திய ஊடக சந்திப்பில…
-
- 0 replies
- 678 views
-
-
கொடுத்த வாக்குறுதியை நாமல் நிறைவேற்றவில்லை ; ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பல வீட்டுத்திட்டங்கள் நிதிகள் கிடைக்கப்பெறாததால், இடை நடுவே நிறுத்திவைக்கப்ட்டுள்ளன. இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களுக்கான, உதவிகளை ஆறு மாதங்களுக்குள் பெற்றுத்தருவதாக நாமல் ராஜபக்ஷ வாக்குறுதியளித்திருந்தார்.தற்போது ஆறுமாதங்கள் கடந்த நிலையிலும் குறித்த வாக்குறுதியை நாமல் ராஜபக்ச நிறைவேற்றவில்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 29.09.2020 நேற்று இடம்பெற்ற நிலையில் அங்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை…
-
- 0 replies
- 557 views
-
-
திருமலை எண்ணெய் குதங்களை மீள ஒப்படைக்குமா இந்தியா? ஆரம்பமானது பேச்சு திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய்க் குதங்களை மீளவும் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். “திருகோணமலை எண்ணெய்க் குதங்களை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அது குறித்து இப்போது பேசுவது பொருத்தமில்லை. இது பேச்சுவார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஒத்துழைப்புடன் செயற்படுகிறது. இந்திய தூதர…
-
- 2 replies
- 651 views
-
-
20வது அரசியலமைப்பை சவாலுக்கு உட்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்பியும் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதேவேளை இது தொடர்பில் இதுவரை ஆறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன்படி மேலும் கொள்கை மாற்றங்களுக்கான மையம் சார்பில் பாக்கியசோதி சரவணமுத்து, சட்டத்தரணி நாகந்த கொடித்துவக்கு, அனில் காரியவசம் ஆகியோரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். https://newuthayan.com/20வது-திருத்தத்துக்கு-எதி-2/
-
- 8 replies
- 1.2k views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தமது கடமையைச் செய்யவில்லை; ஜெனீவாவில் நிஷா பீரிஸ் குற்றச்சாட்டு – காணொளி நான்கு ஆண்டுகளுக்குமுன் காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் உருவாக்கபட்டது. ஆனால் இந்த அலுவலகம் தனது கடைமையைச் செய்யாததால் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது” என ‘பாலம்’ அமைப்பின் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரையாற்றிய நிஷா பீரிஸ் குற்றஞ்சாட்டினார். ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14 ஆம் திகதி ஆரம்பமாகி ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது . ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை இடம்பெற இருக்கும் இக்கூட்டத் தொடரில் இரண்டாவது வாரத்தில் ஐ.…
-
- 0 replies
- 309 views
-
-
13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020 சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கையின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது கட்டாயமானதென இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார். காணொளி தொழில்நுட்பத்தினூடாக இருநாட்டு பிரதமர்களுக்கும் இடையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பாரத பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவியேற்றதன் பின்னர் அரச தலைவர் ஒருவருடன் இடம்பெற்ற முதலாவது காணொளி கலந்துரையாடல் இதுவாகும். வலய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலின்…
-
- 13 replies
- 2.4k views
-
-
திலீபனுக்காக கையொப்பம் இட்டவர்கள் புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்தவர்களே - டக்ளஸ் பகிரங்க சவால் சுயலாப அரசியலுக்காகவே திலீபன் நினைவுகூரப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். அவ்வாறான தேவை தனக்கு இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், “திலீபனை நினைவுகூருவது தொடர்பாக தற்போது பேசி வருகின்ற அரசியல் தலைவர்கள் சுயநல அரசியல் நோக்கங்களுக்காக பேசுகின்றார்களே தவிர, எவரும் உளப்பூர்வமாக பேசவில்லை. இந்த அரசியல் தலைவர்களை இதுதொடர்பான பகிரங்க விவாத்திற்கு வருமாறு அழைக்கின்றேன். குறிப்பாக ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்ற அ…
-
- 4 replies
- 680 views
-
-
நல்லிணக்க விஜயமாக யாழ்ப்பாணத்தினை வந்தடைந்துள்ள பௌத்த குருமார்கள் மஹாகருண பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு சுற்றுலா மேற்கொண்ட பௌத்த குருமார்கள், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நல்லிணக்க விஜயமாக யாழ்ப்பாணத்தினை வந்தடைந்தனர். குறித்த குழுவினர் இனங்களுக்கு இடையில் நல்லுறவு மற்றும் சமாதானத்தினை வலிறுத்தும் வண்ணம் பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வின் ஒரு அங்கமாக கடந்த 30வருட காலத்தில் யுத்தத்தின் பால் பாதிக்கப்பட்டு வறுமைக்கு கோட்டின் கீழ் வாழும் 275 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வைத்தனர். குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார மற்றும் உயர் அதிகாரிகளும் இணைந்திருந்தனர். மேலும் உதவி வழங்க…
-
- 6 replies
- 921 views
-
-
இணைய வழிக் கலந்துரையாடல் (Zoom Meeting) புதிய இந்தியா குழுமம் (New India Forum) அமைப்பின் அனுசரணையுடன் ''இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் இன்றைய நிலையும் இந்தியாவின் பங்கும்'' என்ற தலைப்பில் எதிர் வரும் ஞாயிற்றுக் கிழமை, ஒக்ரோபர் 4ம் திகதி இந்திய நேரம் 5.00 பிப (5.00 pm) அளவில் இணைய வழிக் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வுக்கு தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் தலைமை தாங்குவார். வடமாகாணமுன்னைநாள் முதலமைச்சரும், ஓய்வு பெற்ற நீதியரசருமான கௌரவ விக்கினேஸ்வரன் அவர்களும் இலங்கைக்கான இந்தியாவின் முன்னைநாள் துணைத் தூதுவர் திரு நடராஜன் அவர்களும் சிறப்புரைகளை வழங்குவர். Zoom id - 813 8895 9933.
-
- 0 replies
- 444 views
-
-
’20 ஆவது திருத்தத்தில் பிரதமருக்கான அதிகாரம் குறையாது’ நாட்டின் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகளை கொண்ட தொடர்மாடி குடியிருப்புகளை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிலவும் வீடுகளுக்கான நெருக்கடி நிலைக்கு தீர்வாக இவ்வாறு தொடர்மாடி குடியிருப்புகளை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்…
-
- 1 reply
- 500 views
-
-
மக்களுக்கு வாழவே முடியாத இந்நிலையில், அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்து பயனில்லை- சஜித் by : Yuganthini மக்களுக்கு வாழவே முடியாத இந்த காலத்தில், அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்து பயனில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொலன்னறுவை இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிலிருந்து இந்த அரசாங்கத்தால் தப்பித்துக் கொள்ள முடியாது. நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக மனித வளமும், யானை வளமும் அழிவடைந்து வருகிறது. இந்த இரண்டு வளங்களையும் ஒரு சரியான திட்டமிடலின் ஊடாக மட்டுமே காப்பாற்ற முடியும். இதற்கு துரிதமாக தீர்வொன…
-
- 0 replies
- 502 views
-
-
20ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஸ்தாபிக்க, சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லப்போவதில்லை- அரசாங்கம் by : Yuganthini 20ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஸ்தாபிக்க, சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லப்போவதில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவையின் முடிவுகளை வெளியிடும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதயகம்மன்பில இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக உதயகம்மன்பில மேலும் கூறியுள்ளதாவது, “20ஆவது திருத்தச்சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தும் யோசனை அரசாங்கத்திடம் கிடையாது. சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதாயின், அதற்க…
-
- 0 replies
- 406 views
-
-
ஹர்த்தால் தனித் தமிழீழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் அழுத்தமே.! வடக்கு – கிழக்கில் மேற்கொள்ளப்படும் ஹர்த்தால் தனித் தமிழீழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் பாரிய அழுத்தம் என மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் இன்று மேற்கொள்ளப்பட்டு வரும் ஹர்த்தால் நடவடிக்கை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மட்டக்களப்பு நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் ஈழவாதியான திலீபனை நினைவு கூருவதற்காக இவ்வாறு கடைகள், அரச நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக நான் நினைக்கின்றேன். எமது நாட்டில் சட்டம் அமுல்படுத்தப்படுமாயின் …
-
- 4 replies
- 658 views
-
-
இலங்கையில் நாளொன்றுக்கு 100 உயிர்களைக் காவுகொள்ளும் இதய நோய்! இலங்கையில் இதயம்சார் நோய் காரணமாக நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பதாக இதயம்சார் நோய் விஷேட தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், உலகளாவிய ரீதியில் வருடமொன்றுக்கு 17 மில்லியன் பேர் உயிரிழப்பதாகவும் அந்தப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. குணப்படுத்தக் கூடிய இந்நோயிலிருந்து பாதிக்கப்படுபவர்களை பாதுகாக்கும் நோக்கில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக வருடாந்தம் செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி சர்வதேச இதய தினம் கொண்டாடப்படுகிறது. தொற்றா நோய்களால் உலகலாவிய ரீதியில் 83 சதவீத மரணம் ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் மரணத்திற்கு பிரதான காரணியாக இருப்பது இதயம் மற்றும் இரத்த குழாயுடன் தொடர்ப…
-
- 1 reply
- 565 views
-
-
நாட்டில் அன்றாடம் 64 இலங்கையர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள சுகாதாரத் துறை, நாளொன்றுக்கு 38 உயிரிழப்புகள் பதிவாகுவதாகவும் கூறியுள்ளது. 2008 முதல் இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது மற்றும் இலங்கை புற்று நோயாளர்களில் 16 சதவீதம் பேர் வாய்வழி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் ஜானகி விதானபதிரண தெரிவித்தார். மேலும், புற்றுநோய் நோயாளிகளை அடையாளம் காண நாட்டின் அனைத்து முக்கிய வைத்தியசாலையிலும் விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். https://www.virakesari.lk/article/90892
-
- 0 replies
- 339 views
-
-
தற்கொலை குண்டுதாரியான சாரா தப்பியமைக்கு பொலிஸ் உப பரிசோதகரே காரணம்- சி.ஐ.டி ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான புலஸ்தினி (சாரா) தப்பித்தமைக்கு பொலிஸ் உப பரிசோதகர் நாகூர்தம்பி அபூபக்கர் காரணமென நிரந்தர சாட்சி ஒன்றின் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. இதனடிப்படையிலேயே சந்தேகநபரான உப பரிசோதகர் நாகூர்தம்பி அபூபக்கரை, அக்கரைப்பற்றிலுள்ள அவரது வீட்டில்வைத்து, கடந்த 13ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர். நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதலில் சாரா என்ற குண்டுதாரி உயிரிழந்து விட்டதாக கூறப்பட்ட போதிலும், அதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. அதாவது குறித்த…
-
- 4 replies
- 864 views
-
-
ஆசிரியர்களினது விபரங்களை திரட்டும் பொலிஸார் – அரசாங்கம் உளவியல் யுத்தத்தில் ஈடுபடுகின்றது என தொழிற்சங்கம் குற்றச்சாட்டு பொலிஸார் ஆசிரியர்களினது விபரங்களை திரட்டிவருகின்றனர் என இலங்கை ஆசிரியர் சேவை என்ற தொழிற்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. ஆசிரியர்களின் விபரங்கள் தொழிற்சங்க ஈடுபாடுகள் அவர்களது அரசியல் தொடர்புகள் குறித்த விபரங்களை பொலிஸார் அதிபர்கள் ஊடாக திரட்டுகி;ன்றனர் என தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சேவை பொலிஸார் ஆசிரியர்களையும் அதிபர்களையும்அச்சுறுத்துகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது. இலங்கை ஆசிரியர் சேவையின் பிரதம செயலாளர் மகிந்த ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார். இவ்வாறான ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வியமைச்சின் செயலாளரிடம…
-
- 0 replies
- 322 views
-
-
தமிழ் தேசியக் கட்சிகள் தொடர்ச்சியாக ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் - சிவாஜிலிங்கம் அறைகூவல் (எம்.நியூட்டன் ) தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் தேசியக் கட்சிகள் தொடர்ச்சியாக ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டிய தேவையை நாங்கள் உணர்கின்றோம் எனத் தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் நாங்கள் ஒற்றுமையாக பயணிப்போம் என்பதை உரிமையுடன் கூறிக் கொள்கிறோம் எனத் தெரிவித்தார் ஐனநாயக அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு மக்களின் ஒற்றுமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் இனத்தின் விடுதலைக்…
-
- 0 replies
- 346 views
-
-
சாணக்கியன் உள்ளிட்ட அறுவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2019/12/R.Sanakiyan.jpg தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட ஆறு பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்களை எதிர்வரும் 02ஆம் திகதி காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் ஊடாக அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர…
-
- 1 reply
- 584 views
-
-
இலங்கைக்கு பெருமளவு ஆயுததளபாடங்களை வழங்க இந்தியா திட்டம்-பாதுகாப்பு தேவைகளுக்காக 50 மில்லியன் டொலர் கடனையும் வழங்குகின்றது இலங்கையின் பாதுகாப்புதுறைக்கு 50மில்லியன் கடனை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது என இந்தியாவின் எகனமிக்ஸ் டைம்ஸ் இந்தியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்து சமுத்திரபிராந்தியத்திலும் வங்களாவிரிகுடாவிலும் சீனாவின் அபிலாசைகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த பகுதியில் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்காக இரு நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வருப்படுத்துவதற்கு சனிக்கிழமை உச்சிமாநாட்டில் தீர்மானித்துள்ள நிலையிலேயே இந்தியாவின் இலங்இலங்கை பாதுகாப்பு துறையை நோக்கி இந்த சைகை அமைந்துள்ளது என எகனமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. கடனடிப்…
-
- 2 replies
- 466 views
-
-
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம். இவ்வாறு 10 தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார். இன்றைய முழு அடைப்புப் போராட்டத்தின் நிறைவில் இன்று மாலை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையில் தமிழர் தேசத்தின் தமிழின விடுதலை வரலாறு 70 ஆண்டுகளுக்கும் மேலானது. பல இலட்சம் தமிழ் மக்கள் இனக்கலவரங்களினாலும், போரிலும், போர்க்காலத்திலும், போராட்டங்களிலும் தம் உயிநீத்துள்ளன…
-
- 0 replies
- 473 views
-