Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவில் இயற்கை அரண்கள் எனும் தன்னார்வ தொண்டு அமைப்பின் உறுப்பினர்களால் இன்றைய தினம் சிரமதானப் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் அ.த.க பாடசாலையில் குறித்த சிரமதானப் பணிகள் காலை 08.30 மணி முதல் இடம்பெற்றது. கொரோனா அச்சம் காரணமாக கடந்த பல நாட்களாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், குப்பை கூழங்களாக இருந்த பாடசாலைச் சூழலை சுத்தம் செய்யும் செயற்பாட்டை இந்த அமைப்பு முன்னெடுத்திருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள இயற்கை வளங்களை பாதுகாத்து இயற்கையின் இருப்பை பேணுதல் என்ற தொனிப்பொருளில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, இயற்கை விவசாயம் மற்றும் வீட்டுத் தோட்டங்க…

  2. பிரதமரை சந்தித்த வட மாகாண ஆளுநர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் வட மாகாண ஆளுநர் எஸ். எம் சார்ள்ஸ் ஆகியோருக்கிடையில் சந்திப்பு இன்று (29) முற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகளின் பின்னர் வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கையினை வழமைக்கு கொண்டு வருதல் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளது. அத்துடன், சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டுக்குள் பிரவேசிப்பவர்களை தடுத்து நிறுத்துவது தொடர்பிலும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், வடக்கில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொ…

  3. பணிப்புறக்கணிப்பை கைவிட்ட தபால் ஊழியர்கள் கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர்கள் முன்னெடுத்த பணிபுறக்கணிப்பு, இன்று (29) வாக்குறுதியை அடுத்து கைவிடப்பட்டுள்ளது. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் தபால்மா அதிபரால் இது தொடர்பில் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. தபால் வாக்கு சீட்டுகள் விநியோகத்தை காரணமாக கொண்டு நேற்று (28) நள்ளிரவு முதல் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டனர். இதற்கு முன்னர் குறித்த நடவடிக்கை, கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது அது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது. https://new…

  4. வைத்தியசாலையின் கழிவு நீர்ப் பிரச்சினையால் மக்கள் சிரமம்! கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் கழிவு நீர், வைத்தியசாலைக்கு வெளியே விடப்படுவதனால் இது தங்களது குடிநீர் நிலைகளை மாசுபடுத்துகிறது எனவும், அதனால் துர்நாற்றம் வருகிறது எனவும் வைத்தியசாலை சூழலில் வசிக்கின்ற மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து கழிவு நீரை ஆற்றுக்குள் விடப்பட்டு வருகிறது. இந்த நீரானது ஆறு ஊடாக கிளிநொச்சி குளத்தை வந்தடைகிறது. கிளிநொச்சிக் குளத்திலிருந்தே குடிநீருக்கு நீர் பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், வைத்தியசாலையிருந்து வெளியேறுகின்ற கழிவு நீரில் வைத்தியாசாலையின் இராசயனங்கள் அடங்கியிருக்கலாம். எனவே, அவற்றை…

  5. வாக்கு கேட்டு வீடு விடாக பிரச்சாரம் செய்யச் செல்லும் த.தே.ம.முன்னணியினர் தமிழ் மக்களால் விரட்டப்பட்டும் சம்பவங்கள் பரவலாக யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் இடம்பெற்று வருகின்றன. இதோ ஒரு சம்பவம்: வாக்கு கேட்டு வீட்டுக்கு செல்லும் த.தே.மக்கள் முன்னணி வேட்பாளரும், ஆதவாளரும் விரட்டப்படும் காட்சி: பிரச்சாரம் செய்யச் சென்ற குறித்த த.தே.ம.முன்னணியினருக்கு இவ்வாறான விளக்கமொன்றை இளைஞரொருவர் வழங்குகிறார். அதேபோன்று தான் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் கோட்டாபய தான் வந்திருக்கிறார். நீங்கள் கடந்த தேர்தலில் வாக்கு போடக்கூடாது என்றீர்கள்.. இந்த நிலையில் உங்களுக்கு ஒரு விடயம் தெரிந்திருக்க வேண்டும், இந்த முறையும் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்றால் கோட்டபாய தான் …

    • 7 replies
    • 957 views
  6. யாழ் மறை மாவட்டத்தின் முதலாவது ஆயருக்கு சிலை திறப்பு! யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தின் முதலாவது ஆயரான இத்தாலியை சேர்ந்த ஒரசியோ பெத்தாசினியின் உருவச்சிலை இன்று (27) யாழ் ஆயர் இல்லத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த உருவச்சிலையினை யாழ் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது குறித்த சிலையை வடிவமைத்த சிற்பக் கலைஞர்கள் இருவர் ஆயரினால் கெளரவிக்கப்பட்டனர். சிலை திறப்பு நிகழ்வில் யாழ் மறைமாவட்ட குருக்கள் பலரும் கலந்து கொண்டனர். https://newuthayan.com/யாழ்-மறை-மாவட்டத்தின்-மு/

  7. வெளியூர் பழ வியாபாரிகளால் உள்ளூர் வியாபாரிகள் பாதிப்பு! யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெளி மாவட்ட பழ வியாபாரிகள் பழ விற்பனையில் ஈடுபட்டு வருவதால் உள்ளூர் பழ வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர். மாநகர சபை எல்லைக்குள் பழ விற்பனையில் ஈடுபடுவதற்கு மாநகர சபைக்கு நாளாந்தம் 110 ரூபா செலுத்தி வருகின்றோம். ரம்புட்டான், அன்னாசி, மங்குஸ்தான் போன்றவை குறிப்பிட்ட பருவங்களில் மாத்திரம் கிடைக்கக் கூடியவை. அவற்றை நாம் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வந்து சிறிய இலாபம் வைத்து விற்பனை செய்கிறோம். இவற்றை வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் கொண்டு வந்து மாநகர சபைக்கு உட்பட்ட வீதியோரங்களில் வைத்து விற்கின்றனர். இதனால் எமது…

    • 1 reply
    • 502 views
  8. முகக்கவசத்தில் தோன்றிய விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட முகக் கவசங்கள் பிரச்சார கூட்டங்களின் போது விநியோகிக்கப்பட்டு வருகின்றது. நேற்று (28) யாழ்ப்பாணத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் இந்த முகக்கவசங்கள் கட்சி ஆதரவாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தெற்கில் பொதுஜன பெரமுன கட்சியினர் தமது கட்சி இலட்சனை பொறித்த முகக்கவசங்களை விநியோகிக்கும் நிலையில், யாழ் தேர்தல் மாவட்டத்திலும் முகக்கவசங்கள் ஊடாக பிரச்சார நடவடிக்கைளை முன்னெடுக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/முகக்கவசத்தில்-தோன்றிய-வ/

    • 1 reply
    • 572 views
  9. ரூ.100 கோடி’ யஸ்மின் சூக்காவிடம் நட்ட ஈடு கோரி கடிதம்..! உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிடம் 100 கோடி ரூபா நட்ட ஈடு கோரி, இலங்கையின் தேசிய உளவுத் துறை பிரதானி மேஜர் ஜெனரால் துவான் சுரேஷ் சலே கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த நட்ட ஈட்டை செலுத்தாவிடின் 14 நாட்களில், யஸ்மின் சூக்காவுக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக குறிப்பிட்டே, சட்டத்தரணி பஹன் வீரசிங்க ஊடாக அவர் இந்த நட்ட ஈடு கோரும் கடிதத்தை அனுப்பியுள்ளார். கடந்த மே (22), தேசிய உளவுத் துறை பிரதானியான சுரேஷ் சலே மற்றும் மேலும் நான்கு இரானுவத்தினர் பிரிகேடியர் தரத்தில் இருந்து மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டனர். அது தொடர்பில் கடந்த ஜூன் (01) விஷே…

    • 3 replies
    • 713 views
  10. 20 ஆசனங்கள் கிடைக்கும் என்பது கூட்டமைப்பின் பகல் கனவு – சிவாஜி by : Vithushagan காட்டிக் கொடுத்தும் சோரம் போயும் அரசியல் செய்யும் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சி அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ”நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றை இலக்கத்திலேயே ஆசனங்களை கைப்பற்றும். ஏனெனில் தமிழ் மக…

    • 1 reply
    • 389 views
  11. மட்டக்களப்பில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நேயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வி. குணராஜசேகரம் அறிவித்துள்ளார். அந்த வகையில், ஜுன் 12 ஆம் திகதி தொடக்கம் ஜுன் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 20 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். டெங்குத் தொற்றுக்கு ஆளாகிய அனைவரும் சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர். இறப்புக்கள் எதுவும் சம்பவிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவ…

  12. 2019’ சாதாணதர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்! கல்வி பொதுத்தராதர சாதாணதர பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசோதனை செய்வதற்கான விண்ணப்பங்களை ஜூலை மாதம் 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தபால் ஊடாக அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. https://newuthayan.com/2019-சாதாணதர-பரீட்சை-எழுதிய/

  13. முல்லை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு: அமைச்சர் டக்ளஸ் by : Litharsan முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வு காணப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கடற்றொழிலாளர்கள் சார் கலந்துரையாடல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவத்தார். குறித்த கலந்துரையாடலில், வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தலை தடை செய்தல், அனுமதிக்கப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி தொழிலில் ஈடுபட அனுமதித்தல், வெளிமாவட்ட மீனவர்களைக் கட்டுப்ப…

    • 0 replies
    • 417 views
  14. ஒரே தினத்தில் இலங்கை வங்கியின் 3 கிளைகள் புதிய இடங்களில் திறப்பு - கே.எல்.ரி. யுதாஜித் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் மூன்று கிளைகள், நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடத் தொகுதிகளுக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தன. இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண பொது முகாமையாளர் திருமதி. குமுதினி யோகரட்ணத்தினால் இந்தக் கிளைகள் திறந்து வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, ஆரையம்பதி ஆகிய கிளைகளும் அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் கிளையும், இவ்வாறு புதிய முகவரிகளில் திறந்து வைக்கப்பட்டன. …

    • 0 replies
    • 435 views
  15. வசந்த கரன்னாகொட ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையில் முன்னாள் கடற்படை தளபதி எட்மிரல் ஒப் த பீல்ட் வசந்த கரன்னாகொட இன்று (29) அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். இன்று அவரை ஆணைக்குழுவுக்கு அழைத்துள்ளதாக ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். கொழும்பில் 11 இளைஞர்களை கடந்தியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தம்மை பழிவாங்கும் நோக்கில் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வசந்த கரன்னாகொட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார். இது தொடர்பில் …

    • 0 replies
    • 417 views
  16. ராஜித மற்றும் சம்பிக்க கப்பம் பெற்றதற்கான ஆதாரம் இருக்கிறது- விஜயதாச by : Yuganthini முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் அவன்காட் நிறுவனத்திடமிருந்து பெருந்தொகையான பணத்தை கப்பமாக பெற்றுள்ளார்கள் என முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவ்விடயங்கள் தொடர்பான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது ராஜித சேனாரத்ன 2கோடி ரூபாயும் சரத் பொன்சேகா 3.5 கோடி ரூபாயும் சம்பிக்க ரணவக்க 35 இலட்சமும் அவன்காட் நிறுவனத்திடமிருந்து கப்பம் பெற்றுள்ளனர் என விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். ஆனால் விஜயத…

    • 0 replies
    • 443 views
  17. புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியமைக்கான காரணத்தை வெளியிட்டது ஐ.தே.க by : Yuganthini இந்திய இராணுவத்தினரைத் தோற்கடிக்கும் நோக்கிலேயே விடுதலைப்புலிகள் அமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் ஆயுதங்கள் வழங்கப்பட்டன என ஐ.தே.க.வின் முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அரசியல் அரங்குகளில் வெவ்வேறு விதமாக பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குருநாகல் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், அதற்கு பதிலளிக்கும் வகையில் இவ்வாறு குறிப்பிட்டுள…

    • 0 replies
    • 242 views
  18. அதிரடியாக அதிரடிப்படை கைப்பற்றிய 12 துப்பாக்கிகள்! கொழும்பு – ஹோமாகமை, பிட்டிபன பகுதியில் அதிரடி படையினர் முன்னெடுத்த தேடுதலில் ரி-56 தாக்குதல் துப்பாக்கிகள் 12 கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை பொலிஸார் சற்றுமுன் தெரிவித்துள்ளனர். https://newuthayan.com/அதிரடியாக-அதிரடிப்படை-கை/

  19. தமிழீழ விடுதலை புலிகளின் அனுதாபிகள், ஆதரவாளர்களை தீவிரமாக கண்காணிக்கிறோம்..! அவர்கள் புலிகளுக்கு ஒக்சிசன் வழங்க முயற்சிக்கிறார்கள்.! தமிழீழ விடுதலை புலிகளின் அனுதாபிகளும், ஆதரவாளர்களும் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பதாக கூறியிருக்கும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா, அவர்கள் தொடர்பில் தொடர்ந்து மிக அவதானமாக இருக்கிறோம் இன்னும் இருக்க வேண்டியிருக்கிறது. எனவும் கூறியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், நாட்டிலிருந்து விடுதலைப்புலிகளை முற்றாக தோற்கடித்து துடைத்தெறிந்துள்ளோம். ஆனால் அவர்களின் ஆதரவாளர்களும் அனுதாபிகளும் இன்னமும் செயற்படுகின்றனர். வெளிநாடுகளில் அவர்கள் தொடர்ந்…

  20. இரு மடங்காக அதிகரித்துள்ள உப்பு பாவனை! இலங்கையின் தினசரி உப்பு உட்கொள்ளும் அளவு இரு மடங்காக அதிகரித்துள்ளதாக பொரள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ஐந்து கிராம் உப்பு மட்டுமே தேவைப்படுகிறது. இருப்பினும், இன்றைய இலங்கையர்கள் 13 கிராம் உப்பை உட்கொள்கிறார்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆராய்ச்சியில் நாடு முழுவதிலுமிருந்து 850 பேர் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களின் சிறுநீர் மாதிரிகளில் உள்ள உப்பின் அளவைக் கொண்டு இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதிக உப்பு நுகர்வு உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள…

  21. மலையக மக்களை எவரும் சீண்ட முடியாது: நான் இருக்கிறேன்- திகாம்பரம் மலையக மக்களை, தான் இருக்கும்வரை எவரும் சீண்ட முடியாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். கடந்த நான்கரை வருடங்களில் மக்களை எவரும் சீண்டவில்லை எனவும் சேவைகளைச் செய்துகாட்டிவிட்டே அவர்களிடம் வாக்குக் கேட்டுவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொத்மலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “நான் அமைச்சரான பின்னர் நான்கரை வருடங்களில் எவ்வாறான சேவைகளை முன்னெடுத்துள்ளேன் என்பது மக்களுக்குத் தெரியும். மலையக மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார…

  22. எழுத்தாணிக்கான அலுவலகம் திறப்பு ஊடகத்துறை, இலக்கியத்துறை, சமூகசேவைகள் எனும் மூன்று பிரிவுகளில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் திருகோணமலை எழுத்தாணி கலைப் பேரவை, தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தை, திருகோணமலை மின்சார நிலைய வீதி நேற்று (27) திறந்து வைத்தது. இந்த விழாவில் அதிதிகளாக திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர் திருமதி ஜீவிதன் சுகந்தினி, திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் கோணேஸ்வரன், திருகோணமலை நகராட்சி மன்றத்தின் உப தலைவர் கா.கோகுல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணரும் தளமாகவும், ஊடக மாநாடுகள் நடத்தவும் இவ்அலுவலகம் …

  23. மீண்டும் நாளைய தினம் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளது! கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் 105 நாட்களுக்கு பின்னர் நாளைய தினம் (29) மீளவும் திறக்கப்படவுள்ளது. இதன்படி பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் சேவையாளர் மாத்திரம் நாளைய தினம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும். நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகள் மீள திறக்கப்படுவதால் நாளைய தினம் முதல் கட்டமாக மாணவர்களை தவிர்த்தே பாடசாலை செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் எதிர்வரும் 6ம் திகதி இரண்டாம் கட்டமாக மாணவர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/மீண்டும்-நாளைய-தினம்-பாட/

  24. கோத்தாபய மீதான தமிழ் மக்களின் பயத்தை நீக்குவது உறுதி – ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கான சிறுபான்மை மக்களின் ஆதரவு அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக அக்கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் திலக ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அம்பாறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘அம்பாறையில் பொதுஜன பெரமுனவை ஆதரிக்க பெரும்பாலான மக்கள் முன்வந்துள்ளனர். அந்தவகையில் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியாக போட்டியிடுகின்ற என்னை, நாடாளுமன்றம் அனுப்புவதன் ஊடாக சிறுபான்மை மக்களாகிய உங்களுடைய பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்றால் இனம் தெ…

  25. பாலம் அமைத்து தருவோம் என அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் புஸ்வானமாகிவிட்டது..! மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல்கள் வரும்போது பொய்வாக்குறுதிகளை நாடாளுமன்ற தேர்தல் அபேட்சகர்கள் மக்களுக்கு அளிப்பது சர்வ சாதாரணமான விடயம். இதற்கு ஒரு சான்று மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குறுமன்வெளி மண்டூர் படகுத்துறை பாலமேயாகும். பாலம் அமைத்து தருவோம் என நான்கு தசாப்தகாலமாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் புஸ்வானமாகிவிட்டது. நான்கு தடவைகள் பாலத்திற்கான அடிக்கற்கள் நாட்டப்பட்டன. அடிக்கற்கள் நாட்டப்பட்ட இடமே தெரியாமல் போய்விட்டது. ஆனால் இம்முறை மக்கள் தெளிவாக உள்ளனர். திடமான கொள்கை கட்சி மாறாத உறுதி பொய் அற்ற வாக்குறுதி அபிவிருத்தி தொழில் வாய்ப்பு மக்களோடு மக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.