ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம்! by : Benitlas எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பேருந்துகளையும் சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், தனியார் பேருந்துகளின் சேவைகளையும் ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்…
-
- 1 reply
- 495 views
-
-
மூன்று கிலோ கிராம் வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது துசித குமார தர்காநகர் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், மூன்று கிலோ கிராம் நிறையுடைய வல்லப்படைகளை, மோட்டார் சைக்கிளில் கொண்டுச்சென்றவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வித்தியாலய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். பின்னர் சந்தேக நபரின் வீட்டைச் சோதனை செய்தபோது, ஒரு தொகை சட்டவிரோத சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு 200 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வீட்டை சோதனையிட்டபோது, கலகம் ஏற்படுத்திய மேலும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். http://www.tamilmirror.lk/மேல்-மாகாணம்/மனற-கல-கரம-வலலபபடடயடன-ஒரவர-கத/95-251401 h…
-
- 4 replies
- 1k views
-
-
அமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் சோதனையை ஏற்க மறுத்தமை குறித்த தகவல்கள் ஏமாற்றமளிக்கின்றன – நாமல்! by : Benitlas விமான நிலையத்தில் அமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் சோதனையை ஏற்க மறுத்தமை குறித்த தகவல்கள் ஏமாற்றமளிக்கின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போது ஒத்துழைப்பும் முன்னரை விட அதிகமாக மரியாதையும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் சர்வதேச தோற்றுநோய் பரவலின் பிடியில் உள்ள இவ்வேளையில் வியன்னா பிரகடனத்தை விட ஒத்துழைப்பும், உயிர்களை காப்பாற்றுவதற்காக நாடொன்று பின்பற்றும் கட்டமைப்பை மதிப்பதுமே முக்கியமானது என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த இராஜ…
-
- 2 replies
- 581 views
-
-
முல்லையில் குடும்பஸ்தரை காணவில்லை! முல்லைத்தீவு – பாலிநகர், வவுனிக்குளம் என்னும் முகவரியை சேர்ந்த தனம் ஸ்டோர் உரிமையாளருமாகிய பாலசுந்தரராஜா பிரபாகரன் (பிரபா ) என்பவரை கடந்த 03.06.2020 புதன்கிழமையிலிருந்து காணவில்லை என உறவினர்கள் பொலிஸில் முறையிட்டுள்ளனர். யாரேனும் இவரை கண்டால் பாலிநகர், வவுனிக்குளம் என்ற முகவரிக்கோ அல்லது 0766602122, 0778027498, 0778860893 என்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறும் கோரியுள்ளனர். https://newuthayan.com/முல்லையில்-குடும்பஸ்தர/
-
- 0 replies
- 494 views
-
-
சிறுமி துஷ்பிரயோகம்; தாய் உட்பட மூவர் கைது! அம்பாறை – ஆலையடிவேம்பு, கண்ணகிபுரம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று நீதிவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது மூவரையும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 19 வயதுடைய இளைஞன், அவருடைய தந்தை மற்றும் சிறுமியின் தாய் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். https://newuthayan.com/சிறுமி-துஷ்பிரயோகம்-தாய/
-
- 0 replies
- 536 views
-
-
எமது கட்சி குறித்த அநாமதேய செய்திகளையும் வதந்திகளையும் நம்பவேண்டாம். தொழிலாளர் தேசிய முன்னணியை பிளவுபடுத்துவதை இலக்காகக் கொண்டு காலத்துக்குக் காலம் கட்டுக்கதைகளாக செய்திகளை வெளியிடுவதன் மூலம் ஒரு குழு இயங்கி வருவதை அவதானிக்க முடிகிறது. இணையத்தில் வருகிறது என்பதற்காக அதில் வெளிவரும் அநாமதேய செய்திகளை நம்பி குழப்பமடையாமல் கட்சி செயற்பாட்டாளர்கள் தமது பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறு தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரான முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்துக்கும் அதன் பொதுச் செயலாளரான முன்னாள் பாராள…
-
- 1 reply
- 530 views
-
-
24 மணிநேரத்தில்1,490 பேர் கைது ஊரடங்கு சட்டத்தை மீறிய 1,490 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த காலப்பகுதியில் 498 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 70,042 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த காலப்பகுதியில் 19,856 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 25,942 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் த…
-
- 0 replies
- 373 views
-
-
கிழக்கில் 13 சிறுவர் இல்லங்கள் இயங்கவில்லை கொரோனா நெருக்கடியால், கிழக்கு மாகாணத்தில் இயங்கிவந்த 52 சிறுவர் இல்லங்களில், 13 இல்லங்கள் மூடப்பட்டுள்ளனவென, சிறுவர் நன்னடத்தை, சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் திருமதி றிஸ்வானி றிபாத் தெரிவித்தார். இதனால் கிழக்கு மாகாணத்தில் 1,350 சிறுவர்களிருந்த இடத்தில் தற்போது 400 பேரே உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். சமகால கொரோனா நெருக்கடி நிலையில், கிழக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களின் நிலைவரம் தொடர்பாக, அவர் மேலும் கருத்துரைக்கையில், “நாங்கள் சிறுவர் இல்லங்கள் என அவற்றை அழைப்பதில்லை. மாறாக சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் எனத்தான் அழைக்கின்றோம். “மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 இல்லங்களும் திர…
-
- 0 replies
- 407 views
-
-
கர்ப்பிணிப் பெண் குண்டினை வெடிக்கச் செய்தது எப்படி?: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சாட்சியத்தில் வெளியான தகவல்கள் இதோ..! (எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் ஒரு சம்பவமான, தெமட்டகொடை - மஹவில கார்டன் வீட்டில், மேல் மாடியில் இருந்த அறையில், மாபிள் தரை மீது குண்டினை வைத்து அதன் அருகே அமர்ந்தவாறு தனது பிள்ளைகளையும் அனைத்துக்கொண்டு, கர்ப்பிணிப் பெண்ணான தற்கொலை குண்டுதாரி குண்டினை வெடிக்கச் செய்திருக்க வேண்டும் என பிரதான பொலிஸ் பரிசோதகர் அஜித் பிரியந்த பேதுரு ஆராச்சி ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளித்தார். தற்போது டாம் வீதி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இருக்கும் அவர், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்…
-
- 0 replies
- 409 views
-
-
கடத்தப்பட்ட மகனை தேடிய தந்தை மரணம் வவுனியாவில் வைத்து கடத்தப்பட்ட தனது மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் இன்று காலை மரணமடைந்துள்ளார். வவுனியா கூமாங்குளத்தில் வசிக்கும் சின்னச்சாமி நல்லதம்பி (வயது71) என்ற தந்தையே இன்றைய தினம் அவரது வீட்டில் உள்ள மரமொன்றில் ஏறியபோது கீழே வீழ்ந்து இறந்துள்ளார். வவுனியாவில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 1204 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இவரது மகனை 2008 ஆம் ஆண்டு வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக வைத்து இனந்தெரியாதோர் கடத்திச்சென்றிருந்தனர். இந்நிலையில், தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர் 1200 ஆவது நாளன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்…
-
- 0 replies
- 520 views
-
-
திருட்டில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது! குருநாகல் – பொல்ஹாவெலவில் இரண்டு வீடுகளில் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சந்தேகநபர் கடந்த பெப்ரவரியில் பனலிய மற்றும் பொல்கஹவெல ஆகிய பிரதேசங்களிலுள்ள இரு வீடுகளுக்குள் நுழைந்து தங்க நகைகளை திருடியுள்ளதாகவும் குறித்த நகைகளின் பெறுமதி சுமார் 2 இலட்சம் ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருடப்பட்ட நகைகளைத் தேடி பொலிஸார் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேக நபர் குற்றமொன்றுக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட கேகாலையை சேர்ந்த பொலிஸ் அதிகாரியாவார் https://newuthayan.com/திருட்டில்-ஈடுபட்ட-முன்ன/
-
- 0 replies
- 384 views
-
-
ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது – ஜனாதிபதி! ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொசன் பௌர்ணமியினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இந்த விடயத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இலங்கை தேசத்திற்கு பௌத்த சமயத்தின் செய்தியை சுமந்து வந்த அரஹத் மகிந்த தேரரின் வருகையை நினைவுகூர்ந்து மிகுந்த பக்தியுடன் சமயக் கிரியைகளில் ஈடுபடுவது எமது நாட்டு மக்கள் பல்லாயிரம் வருடங்களாக பேணி வரும் வழக்கமாகும். தேரர் அவர்கள…
-
- 0 replies
- 660 views
-
-
அனைத்து உயிரினங்களும் நலம் பெறட்டும் – பிரதமர்! முழு உலகும் மீண்டும் தம்மை சுயவிசாரணை செய்துகொள்ள வேண்டும் என்பதே கொவிட் – 19 தொற்று எடுத்துக்கூறும் முக்கிய பாடமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொசன் பௌர்ணமியினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இந்த விடயத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தேசத்தை நாகரீகமடையச் செய்த, தேசத்தை முதிர்ச்சியடையச் செய்த, தேசத்தை முன்னேற்றிய, தேசத்தைப் பாதுகாத்த புத்தமதத்திற்கு அடிப்படையாக அமைந்த புனித பொசொன் போயா தினம் இம்முறை இரண்டாயிரத்து முன்னூற்றி இருபத்தியெட்டாவது தடவை பிறக்கிறது. இந்தியாவின் அசோகப் பேரரசரின் ஆசிர்வாதத்துடன் வருகை தந்த மகிந்த தேரர் தலைம…
-
- 0 replies
- 364 views
-
-
த பினான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கான அறிவிப்பு….! த பினான்ஸ் நிறுவனத்தின் அனைத்து வைப்பாளர்களுக்கும் எதிர்வரும் 07ஆம் திகதி முதல் இழப்பீடு வழங்க தீரமானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்தள்ளது. அதன்படி அனைத்து வைப்பாளர்களுக்கும் 06 இலட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் இது குறித்த மேலதிக விடங்களை 011 23 98 788, 011 24 77 261 என்ற இலங்கை மத்திய வங்கியின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தியும் மற்றும் 011 24 81 594 , 011 24 81 320 என்ற மக்கள் வங்க…
-
- 0 replies
- 610 views
-
-
சொன்னதை செய்ய தவறினால் இந்த அரசை தோற்கடிப்பேன் – சஜித் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் நாட்டு மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்காமல் இருக்குமாயின் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், மக்களின் ஆசிர்வாதத்துடன் வெற்றி பெற்று தற்போதைய அரசாங்கத்தை தோல்வியடைய செய்வோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும், ‘தற்போதைய அரசாங்கத்திற்கு கடந்த வருடம் நவம்பர் மாதக்காலப்பகுதியில் இந்நாட்டு மக்கள் மீது அதிகமான அக்கறை இருந்தது. இந்த அக்கறை கடந்துள்ள இந்த ஏழு மாதகாலத்தில் இருப்பதாக தெரியவில்லை. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையில்…
-
- 0 replies
- 324 views
-
-
நாவற்குழியில் இளைஞர்கள் 10 பேர் கைது! யாழ்ப்பாணம் – நாவற்குழிப் பகுதியில் ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் இளைஞர்கள் 10 பேரை சாவகச்சேரி பொலிசஸார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞர்கள் நாவற்குழி பகுதியிலுள்ள மைதானம் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் இன்று (04) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட 10 பேரும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜராக திகதியிடப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். https://newuthayan.com/நாவற்குழியில்-இளைஞர்/
-
- 0 replies
- 307 views
-
-
நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான பொறுப்பை மத்திய வங்கியே ஏற்றுக்கொள்ள வேண்டும் மத்திய வங்கியின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான பொறுப்பை மத்திய வங்கியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தி பினேன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிலைமை குறித்து அவரி மாளிகையில் இன்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை கூறினார். இதன்போது மத்திய வங்கியின் ஆளுநர் டப்பிள்யூ.டீ.லக்ஸ்மன், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல மற்றும் அமைச்சர்கள் பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர் மத்திய வங்கியின் கீழ் உள்ள நிதி நிறுவனங்கள் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைவதாக…
-
- 5 replies
- 845 views
-
-
ஆபத்து முடிவிற்கு வந்துவிட்டது : ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி தகவல் கொரோனா காரணமாக சமூகத்திற்குள் ஏற்பட்டிருந்த ஆபத்து முடிவிற்கு வந்துள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பொதுமக்களிற்கு புதிதாக நோய் பரவுவதை தடுப்பதற்காக அதிகாரிகள் திட்டமொன்றை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸை முற்றாக ஒழிப்பதற்கான சிறந்த தந்திரோபாயத்தை உருவாக்கியுள்ள நாடு இலங்கை என்பதால் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப விரும்புகின்றனர். வெளிநாடுகளில் சிக்கியுள்ள அனைவரையும் நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து இலங்கை உறுதியாகவுள்ளது என்றார். அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறு…
-
- 3 replies
- 861 views
-
-
-எஸ்.என்.நிபோஜன் மாவீரர்களின் நினைவுகூரலை, அரசாங்கம் வன்முறை மூலம் தடுக்க நினைப்பதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். வனவளத் திணைக்களத்தினரால் அடாத்தாகப் பிடிக்கப்பட்டுள்ள தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தை, இன்று (04) பார்வையிட்டு, அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இது தற்போது ஓர் அரச காரணியாகுமெனவும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில், 101ஆம் இலக்கத்தை உடைய இந்தப் பகுதி, அரச காரணியாக ஒதுக்கப்பட்டுள்ளதெனவும் கூறினார். அரச காணியை வனவளத் திணைக்களம் தன்னுடையதென அடையாளப்படுத்துவதாக இருந்தால், கிராம அலுவலர், பிரதேச செயலாளர் ஆகியோரின் அனுமதியுடனே இவ…
-
- 0 replies
- 431 views
-
-
எப்.முபாரக் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் செவ்வியை முழுமையாக பார்வையிடாமலும் தெளிவான மொழிபெயர்ப்பை பெறாமலும் சுமந்திரன் அவர்கள் மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பது பொருத்தமற்றது என மூதூர் பிரதேச சபையின் உப தவிசாளர் சி.துரைநாயகம் (20) தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் சமூக வலைத்தள ஊடகம் ஒன்றிற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் வழங்கப்பட்ட செவ்வி தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலைப்பாடு குறிப்பிட்ட செவ்வியை முழுமையாக பார்வையிடாமையினாலும், தவறான மொழிபெயர்ப்புடன் கூடிய குறிப்பிட்ட சில கேள்விகளுக்கான பதில்களில் உள்ள தெளிவற்ற புரிதலின் காரணமாக ஏற்பட்டுள்ளன. …
-
- 43 replies
- 4.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துக்களுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்று ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. கே.பியைப் போன்று அர்ஜுன மகேந்திரனையும் அழைத்துவருவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறினாலும் அது சாத்தியமாகாது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரான சட்டநிபுணர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது பேசிய அவர், கே.பி என்கின்ற குமரன் பத்மநாதனை அழைத்துவந்த முறை எமக்கு நன்றாகத் தெரியும். இது சூழ்ச்சி மூலமாக இடம்பெற்றத…
-
- 0 replies
- 467 views
-
-
டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை நாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறித்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் காலப்பகுதியில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்பட்டபோதிலும் தற்போது அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. http://athavannews.com/டெங்கு-மற்றும்-எலிக்-காய/
-
- 6 replies
- 542 views
-
-
உழவியந்திர விபத்தில் நபர் ஒருவர் உட்பட 30 கோழிகளும் பலி! கிளிநொச்சி – முறிப்பு பகுதியில் நேற்று (03) இரவு உழவு இயந்திரத்தின் மட்காட்டில் இருந்து பயணித்தவர் தவறி சில்லுக்குள் விழுந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 8ம் வாய்க்கால் பகுதியை சேர்ந்த நல்லதம்பி யோகேஸ்வரன் (41) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். இதேவேளை உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்தவர் சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் வீடொன்றின் வேலியை உடைத்துக் கொண்டு கோழி கூட்டின் மீது மோதியுள்ளது. இதன்போது கூட்டிலிருந்த 30 கோழிகளும் இறந்துள்ளன. சம்பவத்தை அடுத்து சாரதி தப்பியோடியுள்ளார். உழவு இயந்த…
-
- 0 replies
- 372 views
-
-
திங்கட்கிழமை முதல் 100 கண்காணிப்பாளர்கள் தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக சுமார் 100 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவால் தேர்தல் தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், மற்றுமொரு பகுதியினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என, அதன் இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க கூறியுள்ளார். http://www.tamilm…
-
- 2 replies
- 433 views
-
-
குமாரன் பத்மநாதனை அழைத்து வருவதில் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி! தண்டிக்கப்படாததன் பின்னணி என்ன? தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துக்களுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்று ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. கே.பியைப் போன்று அர்ஜுன மகேந்திரனையும் அழைத்துவருவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறினாலும் அது சாத்தியமாகாது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரான சட்டநிபுணர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது பேசிய அவர், கே.பி என்கின்ற கு…
-
- 0 replies
- 409 views
-