ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
நயினாதீவு கட்டுப்பாடு; சிங்களவர்களிற்கு ஒரு நீதி? தமிழர்களுக்கு ஒரு நீதி? நயினாதீவிற்கு செல்வதற்கு நடைமுறைப்படுத்தப்படும் அனுமதி பத்திரம் நடைமுறைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் நேற்று (22) இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா நிலவரம் காரணமாக, ஆலய திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பிற இடங்களில் இருந்து நயினாதீவிற்கு செல்ல வேண்டுமென்றால் ஊர்காவற்றுறை பொலிசாரிடம் அனுமதி பெறப்பட வேண்டும். பொலிஸ் அனுமதியில்லாதவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆலயத்தில் மக்களை கட்டுப்…
-
- 1 reply
- 427 views
-
-
வீட்டுக்கான அடிக்கல் நாட்டல் யாழ்ப்பாணம் – புங்குடுதீவு, ஜே-27 கிராம சேவகர் பிரிவில் போரால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்திற்கான புதிய வீடு நிர்மானிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ருவான் வணிகசூரியவால் இதற்கான அடிக்கல் நேற்று (22) நாட்டப்பட்டது. https://newuthayan.com/வீட்டுக்கான-அடிக்கல்-நாட/
-
- 0 replies
- 608 views
-
-
-
- 0 replies
- 585 views
-
-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் எவன்காட் நிறுவனத்தை தன்னிச்சையான முறையில் கையகப்படுத்தியதன் காரணமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து அதன் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் 17 பேருக்கு அழைப்பாணை வெளியிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவரத்ன உள்ளிட்ட 17 பேர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித்த சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க மற்றும் அனுர குமார திஸாநாயக்க ஆகியவர்கள்…
-
- 0 replies
- 282 views
-
-
47,430 விண்ணப்பங்கள் நிராகரிப்பு பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான 47,430 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்புக்காக 753,037 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். நாடளாவிய ரீதியில் 7 இலட்சத்து ஐயாயிரத்து 85 பேர் இம்முறை தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். தபால் மூல வாக்காளர்களில் அதிகமானவர்கள் குருநாகல் மாவட்டத்திலேயே தகுதி பெற்றுள்ளனர். http://www.tamilmirror.lk/செய்…
-
- 0 replies
- 558 views
-
-
இறக்குமதியை மட்டுப்படுத்தி உற்பத்தியை ஆரம்பியுங்கள் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியை மட்டுப்படுத்தியுள்ளதால் பல துறைகளில் உற்பத்திகளை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட வகையில் மக்கள்மயப்பட்ட பொருளாதாரத்திற்கான பாதை திறக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையை வெற்றிகொள்வது தொழிலதிபர்களுக்குள்ள தற்போதைய சவாலாகுமென்று ஜனாதிபதி குறிப்பிட்டார். கைத்தொழில் மற்றும் வர்த்தக முயற்சிகளின் அபிவிருத்திக்கான அனைத்து அமைச்சுக்களையும் ஒன்றிணைத்த வகையில் உருவாக்கப்பட்டுள்ள செயலணி மற்றும் பல்துறைசார் தொழிலதிபர்களுடன் நேற…
-
- 0 replies
- 488 views
-
-
வனவளத் திணைக்களத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்! வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சூரமோட்டை மக்கள் வனவள திணைக்களத்தின் அட்டூழியங்களை கட்டுப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சூரமோட்டை பகுதியில் போர்சூழல் காரணமாக 1980, 1990 காலப்பகுதியில் இடம்பெயர்ந்து இந்தியா உட்பட வேறுபகுதிகளிற்கு சென்ற மக்கள் மீண்டும் வந்து காடுகளாக கிடக்கும் தமது காணிகளையும், தமது பெற்றோர்கள் வசித்த காணிகளை பிள்ளைகளும் துப்புரவாக்கி தற்காலிகமாக கொட்டில்கள் அமைத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த காணிகள் தமக்குரியது என்று வனவள திணைக்களத்தால் நீண்டகாலமாக கூறப்படுவதுடன் மக்கள் மீள், குடியேறு…
-
- 0 replies
- 397 views
-
-
தமிழர் கிராமங்களை நெருக்கும் சிங்கள குடியேற்றங்கள்…! முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் தமிழர் கிராமங்களை அண்மித்து சிங்கள குடியேற்றங்கள் நகர்ந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக தமிழர்களின் பூர்வீக தோட்டச்செய்கை நிலமான, தொட்டகண்டல் குளம் பகுதியில் உள்ள 825 ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டு, சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. தற்போது குறித்த காணிகளில் பாரிய பங்களா ஒன்று சிங்கள மக்களால் நிறுவப்பட்டுள்ளதுடன், பாரிய அளவில் தோட்டச் செய்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடும் கண்டனத்தினைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு – கொக்குத்…
-
- 0 replies
- 570 views
-
-
தேர்தலுக்கு பின்னர் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு: ஜனாதிபதி பொதுத்தேர்தல் நிறைவடைந்ததும் முதல் கட்டமாக வேலையற்ற பட்டதாரிகள் தொழில் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான ப.சந்திரகுமார் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் ப.சந்திரகுமார் மேலும் கூறியுள்ளதாவது, “தொல்பொருள் மூலம் கிழக்கில் பௌத்த விகாரைகளை அரசாங்கம் அமைக்கப்போவதாக கூறி சிலர் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இன்று பெரும்பாலான மக…
-
- 0 replies
- 284 views
-
-
யாழில் விபத்து! ஒருவர் மரணம்! யாழ்.ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யாழ்.பல்கலைகழக பேருந்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார். https://newuthayan.com/யாழில்-விபத்து-ஒருவர்-மர/
-
- 0 replies
- 445 views
-
-
மல்கம் ரஞ்சித் அரசியலில் ஈடுபடுகிறார் – ஹரின் குற்றச்சாட்டு! பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசியலில் ஈடுபடுகின்றார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றம்சாட்டியுள்ளார். மெதிரிகிரியவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குற்றம்சாட்டினார். மேலும், ‘வரலாற்று ரீதியில் கத்தோலிக்கர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்த போதும் பயங்கரவாத தாக்குதலின் பின்னர் அந்த நிலைமை மாறியது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை கோட்டாபய ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக முன்வைப்பதற்கு பயன்படுத்தினார்கள். குறிப்பாக தாக்குதல்கள் இடம்பெற்று சில நாட்களிற்குள் தனியார் தொலைக்காட்சியொன்று அதற்கான பிரசாரத்தை ஆரம்பித்தத…
-
- 3 replies
- 724 views
-
-
பிரமதாஸவே ஆயுதம் கொடுத்தார்; ‘நானே சாட்சி’ - கருணா அம்மான் பா.நிரோஸ் தான் அம்பாறையில் கூறியிருந்த கருத்தை வைத்துக்கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர், தனக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருவதாக, முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். “தன்னைக் கைது செய்யுமாறு சஜித் கூறிவருகிறார். என்னை எப்படி கைதுசெய்ய முடியும்? நாட்டில் நிலவிய கொடிய யுத்தத்தை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நிறைவுக்கு கொண்டுவந்தவர்கள் நாங்கள்தான்” எனவும் தெரிவித்தார். அம்பாறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டிருந்த கருணா அம்மான் த…
-
- 3 replies
- 682 views
-
-
ஜனாதிபதியின் செயற்பாடு சிறுவர்களுக்கு ஒரு துரதிஸ்டமான முன்னுதாரணமாகும்- மங்கள by : Yuganthini ஜனாதிபதி, மத்திய வங்கியின் அதிகாரிகளை மோசமாக கண்டித்தமை, இலங்கையின் எதிர்கால சிறுவர்களுக்கு ஒரு துரதிஸ்டமான முன்னுதாரணமாகும் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,“ கடந்த 70 வருட இலங்கை வரலாற்றில் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அதிகாரிகளின் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் இதுவாகும் மத்திய வங்கியின் அதிகாரிகளை ஜனாதிபதி இழிவான முறையில் ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
மட்டு ரோட்டரிக் கழகத்தின் வைர விழா! மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் 60ம் ஆண்டு நிறைவின் வைரவிழா நேற்று (21) மாலை பயனியர் வீதியில் அமைந்துள்ள ரோட்டரி நிலையத்தில் ரோட்டரிக் கழகத்தின் நடப்பாண்டு தலைவர் வைத்திய கலாநிதி கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி. கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். (150) https://newuthayan.com/மட்டு-ரோட்டரிக்-கழகத்தின/
-
- 0 replies
- 342 views
-
-
அதிக விலைக்கு இறைச்சி விற்பனை சொய்தால் முறையிடவும்! மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் தோல் நீக்கப்பட்ட புரோயிலர் கோழி இறைச்சிகளை விற்பனை செய்த எட்டு வியாபாரிகளுக்கு எதிராக இன்று (22) சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண நுகர்வோர் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார். ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் மீராவோடை போன்ற பகுதிகளில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் தோல் நீக்கப்பட்ட புரோயிலர் கோழி இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்களால் நுகர்வோர் அதிகார சபைக்கு வழங்கப்பட்ட பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவா…
-
- 0 replies
- 280 views
-
-
ரயில்முன் பாய்ந்து குடும்பஸ்தர் தற்கொலை! வவுனியா – பெரியகட்டு 41வது மைல் கல்லுக்கு அண்மையில் இன்று (22) காலை ரயிலுக்கு முன்பாக பாய்ந்து குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் மன்னார் – எழுத்தூரில் வசிக்கும் ஆ.ரகுசங்கர் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இன்று காலை தனது காரை, ரயில் பாதையின் அருகில் நிறுத்திவிட்டு, மன்னார் சென்ற புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சடலம், மடு ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பறையநாளங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://newuthayan.com/புகையிரதத்தின…
-
- 2 replies
- 604 views
-
-
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு ஆலய வருடாந்த உற்சவம் நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் யாழின் பல பிரதேசங்களிலிருந்தும் பக்தர்கள் ஆலயத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழலில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆலய வளாகத்திற்குள் குவியும் பக்தர்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரும் முப்படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் சிலரும் முப்படையினரும் பாதணிகளை கழற்றாது ஆலயத்திற்குள் பிரவேசித்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இவர்களின் இந்த செயற்பாட்டை அவதானித்த பக்கதர்கள் ஆலயத்தின் தொன்மையையும் மதிப்பையும் சீர்குலைக்கும் வகையில் செயற்பட…
-
- 1 reply
- 619 views
-
-
ஸ்ரீசுகவில் இருந்து விலகுகிறார் நிஷாந்த கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடு காரணமாக தாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார். காலியில் இன்று (22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் பாேதே அவர் இதனை தெரிவித்தார். https://newuthayan.com/ஸ்ரீசுகவில்-இருந்து-வில/
-
- 0 replies
- 488 views
-
-
சந்தர்ப்பங்கள் கிடைத்தபோது பயன்படுத்தாது இன்று மாயகண்ணீர் வடிப்பதில் அர்த்தம் இல்லை – தவராசா குற்றச்சாட்டு by : Jeyachandran Vithushan சந்தர்ப்பங்கள் கிடைத்தபோது பயன்படுத்தாது அசமந்தப் போக்காக இருந்துவிட்டு இன்று மாயகண்ணீர் வடிப்பதில் அர்த்தம் இல்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார். வடக்கின் தொல்பொருள் மற்றும் புராதன சின்னங்களை காப்பாற்றத் தவறியது வடக்கு மாகாணசபையே என்றும் அவர் சாடியுள்ளார். அண்மையில் வடக்கிலும் தொல்பொருள் மற்றும் புராதன சின்னங்களை அடையாளம் காண்பதற்கு செயலணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபஷவினால் கிழக்கு மாகாணத்திலுள்…
-
- 0 replies
- 404 views
-
-
எனக்கும் பிள்ளையானுக்கும்தான் போட்டி- ஹிஸ்புல்லாஹ் by : Yuganthini எதிர்வரும் பொதுத்தேர்தலில் எனக்கும் பிள்ளையானுக்கும்தான் (சிவனேசத்துரை சந்திரகாந்தன்) போட்டி நிலவுகின்றதென கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். பொதுத்தேரதல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ஹிஸ்புல்லாஹ் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மூன்று ஆசனங்களைப் பெறுவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் எஞ்சியுள்ள இர…
-
- 0 replies
- 425 views
-
-
பொதுத்தேர்தலில் கூட்டமைப்பு கடந்த காலங்களைவிட பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றும் – மாவை ஒகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களைவிட பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (சனிக்கனிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தேர்தலில் எந்த அரசாங்கம் அமையப்போகின்றது என்று தெரியாது. எனினும் எந்த அரசாங்கம் ஆட்சியமைகின்றது என்று பார்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த சந்தர்ப்பத்தில் தீர்மானிக்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறை பெரும்பான்மை பலத்துடன் வெற்ற…
-
- 3 replies
- 605 views
-
-
இளைஞனை கொன்ற இராணுவத்துக்கு எதிராக வீதி மறியல்! கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று (20) மாலை மணல் ஏற்றச் சென்ற கெற்பேலியை சேர்ந்த இளைஞன் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ-9 வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட இளைஞனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். https://newuthayan.com/இளைஞனை-கொன்ற-இராணுவத்துக/ முகமாலையில் இராணுவத்தால் இளைஞன் சுட்டுக்கொலை! கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று (20) மாலை 6.15 மணியளவில் மணல் ஏற்றிச் சென்ற வாகனம் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிாசூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த…
-
- 6 replies
- 1k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய பெருமை எனக்கே - விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது நானே. போர் நடைபெறுகையில் நாடாளுமன்றில் தமிழர்களின் குரல் ஒலிக்க வேண்டும் என சிவராம் கூறியதற்கிணங்கதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரிடம் கூறி நானே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினேன் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். பொத்துவில் – ஊறணியில் தேர்தல் பரப்புரையில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-“வடக்கு, கிழக்கில் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வியைச் சந்திக்கும். கொழும்பை மையமாக வைத்தியங்கும் சுமந்திரன் ரணிலின் முகவர். தமிழர…
-
- 5 replies
- 642 views
-
-
எலிக்காய்ச்சலினால் 12 பேர் உயிரிழப்பு! இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் எலிக்காய்ச்சலால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 2,800 பேர் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, அநுராதபுரம், இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை,பொலன்னறுவை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலேயே எலிக்காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. https://newuthayan.com/எலிக்காய்ச்சலினால்-12பேர/
-
- 0 replies
- 352 views
-
-
நவீன் திஸாநாயக்க போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் June 22, 2020 (க.கிஷாந்தன்) ஐக்கிய தேசியக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்திய நவீன் திஸாநாயக்கவே, அமரர் ஆறுமுகன் தொண்டமான், பழனி திகாம்பரம் ஆகியோர் மீது போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான முன்னாள் அமைச்சர் கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கொட்டகலையில் 21.06.2020 அன்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கிடைப்பதற்கு தொண்டமான் முட்ட…
-
- 0 replies
- 394 views
-