Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இனம் , மதம் மற்றும் மொழி அல்லது வாழும் பிரதேசத்தை கவனிக்காது சமுதாயத்தில் அனைவருக்கும் சமமான பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமாயின் எவ்வித பேதங்களும் நாட்டில் ஏற்படாது. முன்வைத்துள்ள மக்கள் மயப்பட்ட பொருளாதார மாதிரியில்  இவ்விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டு  தயாரிக்கப்பட்டுள்ளது. என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்துறை சார்ந்தவர்களுடன் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம் பெற்ற  கலந்துரையாடலின் போது  ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பொருளாதார முன்னேற்றத்தின் பிரதிபலன்களை மக்கள் அனைவருக்கும் விசேடமாக வறிய மக்களுக்கு கிடைக்கப்பெறும்…

    • 1 reply
    • 1k views
  2. கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலும் இந்த வரைதல் செயற்பாடுகளை தன்னார்வலர்களாக இளைஞர்கள் முன்வந்து செய்தனர்.அது போல வடக்கிலும் அதற்கான அடித்தளம் போடப்படுகிறது.. யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் இந்த நடவடிக்கைகளை தமிழ் இளைஞர்கள் தாமாகவே முன் வந்து சுவரோவியங்கள் வரைவதற்கு சுவர்களை தூய்மைப்படுத்துதல் செயற்பாடுகளை செய்து வரைதலில் ஆர்வமுள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கவும் தயாராக உள்ளனர். இந்த முயற்சி நிறைய திறமையாளர்களை ஊக்குவிப்பதோடு சமூக பொறுப்புணர்வுள்ள இளைஞர் சமுதாயத்தையும் உருவாக்குகிறது.. அவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்க ஆர்வமுள்ளவர்கள் நீங்கள் செல்லும் வழியிலேயே இப்படியான நிகழ்வுகளை காணும் போது அவர்களோடு பேசி உங்கள் ஆதரவுகளை வழங்குதல் சிறப்பானது. …

    • 9 replies
    • 1.4k views
  3. யானைச் சின்னத்தில் ஓரணியில் களமிறங்குவதற்கு சஜித், ரணில் ஆலோசனை: ராஜித by : Dhackshala ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் யானைச் சின்னத்தில் ஒரே அணியில் போட்டியிடுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவது குறித்து ஆராயவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், “ஐ.தே.க வின் தலைவர் விக்ரமசிங்க…

    • 1 reply
    • 267 views
  4. வவுனியா மாமடு அக்ரபோதி பாடசாலையில் திடீர் சுகவீனமுற்ற 60 வரையிலான மணவர்கள்  வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இன்றையதினம் பாடசாலைக்கு சமூகமளித்திருந்த 5 மற்றும் 8 ஆம் தர மாணவர்களின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இதனை அவதானித்த பாடசாலை நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரையும் உடனடியாக மாமடு பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒரு தொகுதியினர் மாமடு பிரதேச வைத்தியசாலையிலும் 26 வரையிலான மாணவர்கள் வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றார்கள். மாணவர்களின் நிலமை மோசமாக இல்லை என்றும், காலையிலும், பிற்பகலிலும் வந்த மாணவர்கள் சிகிச்சை பெற்று வைத…

    • 0 replies
    • 236 views
  5. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச ரீதியான அறிக்கை தயாரிக்கும் பூர்வாங்க விசாரணைகளே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ,இதுவரை சர்வதேச விசாரணை இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே சர்வதேச விசாரணை நடைபெற்றுள்ளதாகவோ அல்லது விசாரணை முடிவடைந்துவிட்டதாகவோ யாராவது கூறுவார்களாயின் அது தவறு என்றும் அவ்வாறான சர்வதேச விசாரணை ,இனிமேல்தான் நடாத்தப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் ,இன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே ,இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் ,இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடைபெற்று முடிந்து விட்டதாக தமிழ் தேசிய…

  6. (ஆர்.விதுஷா) ஐக்கிய தேசியக்கட்சிக்குள் பிளவு  ஏற்படவில்லை. மாறாக மக்கள் விரும்பிய புரட்சியே இடம் பெற்றுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா சிங்கள பௌத்தனாகவும் அனைத்து இன மதத்தவர்களையும் நேசிக்க; கூடிய ஒரு நல்லவராகவும் இருக்க கூடியவரின் கைகளுக்கு அதிகாரம் செல்வதே நாட்டு மக்களின் விருப்பாக  இருந்தது எனவும் அந்த மாற்றமே இப்பொழுது கட்சிக்குள் இடம் பெற்றுள்ளதாகவும்  குறிப்பிட்டார். நுகேகொடையில்  ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினுடைய வாசஸ்தலத்தில் இன்று இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது , ஐக்கிய …

    • 0 replies
    • 190 views
  7. இலங்கை சம்பந்தமாக ஐ.நா சபை வெளியிட்ட சில அறிக்கைகளையே ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட குற்றங்கள் சம்பந்தமாக நடாத்தப்பட்ட சர்வதேச, சுயாதீன விசாரணைகளின் அறிக்கைகள் என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றப் பார்க்கின்றார் சுமந்திரன். இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது. இன்று (05) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளனர். இலங்கை சம்பந்தமான விசேட சர்வதேச குற்றவியல் மன்றமொன்றைக் கோராமலும் அல்லது இலங்கையை சர்வதேச குற்றவியல் மன்றத்திற்குப் பாரப்படுத்துமாறு கோராமலும், ஐக்கிய நாடுகளாலும் மற்றையோராலும் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கைகளை வைத்து ஊடக அறிக்கைகளின் படி சுமந்திரன் சர்வதேச விசாரணையானது முடிவடைந்துவிட்டது என்று தமிழர்களை நம்பவைக்கப் ப…

  8. மஹர பள்ளிவாசலை ஒப்படைக்க உத்தரவு மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் அமைந்­துள்ள ஜும்ஆப் பள்­ளி­வாசலை, மீளவும் உரிய பள்ளிவாசல் நிர்வாக சபையினரிடம் ஒப்படைக்குமாறு, அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா, சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். குறித்த பள்ளிவாசல் விவ­கா­ரம் தொடர்பில், முன்னாள் நாடாளு­மன்ற உறுப்­பி­ர் பைஸர் முஸ்­த­பா தலை­மையிலான குழுவினர், கடந்த வாரம் நீதி அமைச்சில், நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வாவைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இக்கலந்துரையாடலில், மஹர சிறைச்­சாலை வளாக ப…

    • 0 replies
    • 301 views
  9. இலங்கையில் இறுதிப்போரின் போது நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய சர்வதேச நீதிமன்றில் இலங்கையை முன்நிறுத்தி விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐ.நா. பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் இன்று  ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இச் சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் இறுதிப்போரின் போது நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கைகள் தொ…

    • 0 replies
    • 292 views
  10. ’600 ரூபாய்க்கு குறைவாக எந்தவொரு மரகறிகளும் இல்லை’ மரக்கறிகளின் விலை அதிகரித்து செல்வதன் காரணமாக பொதுமக்கள் கடும் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். கிலோகிராம் ஒன்று 600 ரூபாய்க்கு குறைவாக எந்தவொரு மரகறிகளும் தற்போது இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Ads by AdStudio …

  11. விமான நிலையத்துக்கு வருவோர்க்கு முக்கிய அறிவித்தல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு பயணிகளுடன் வரும் நபர்களுக்கு நாளை (06) காலை முதல் அனுமதி வழங்கப்படும். அதன்படி, விமான பயணிகள் உள்நுழையும் மற்றும் வெளியேறும் வரவேற்பு பகுதிக்கு பயணியுடன் ஒருவர் செல்ல முடியும். இதற்கான அனுமதிசீட்டினை 30 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய முடியும். அதனை வழங்கும் பகுதி நாளை காலை திறக்கப்படும். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பயணிகளுடன் ஏனையோர் வருவது தடைசெய்யப்பட்டிருந்தது. http://www.tamilmirror.l…

    • 0 replies
    • 293 views
  12. தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் – முக்கிய தகவலினை வெளியிட்டார் மஹிந்த தேசப்பிரிய! பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் முதலாம் திகதியில் இருந்து 1000 ரூபாய் சம்பளத்தினை வழங்க முடியுமா என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கருத்து வெளியிட்டுள்ளார். ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளார். ‘பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்படுகிறது. கடந்த அரசாங்க காலத்திலும் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்குமாறு கோரி புறக்கோட்டையிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு வருடங்களில் அதனை வழங்க…

    • 4 replies
    • 517 views
  13. இலங்கை சிறுவர்கள் ஒன்றிணைந்து கின்னஸ் சாதனை சிறுவர்களுக்கான பிரபல சிறுகதை எழுத்தாளர் சிபில் வெத்தசிங்க நாடளாவிய ரீதியில் உள்ள 20,000 சிறுவர்களுடன் ஒன்றிணைந்து கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார். உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ´மந்திர பளிங்கு´ என்ற சிறுவர் கதை ஒன்றை எழுதி அவர்கள் இவ்வாறு உலக சாதனை படைத்துள்ளனர். சிறுவர்களின் கற்பனைத் திறன், படைப்பாற்றலைப் பயன்படுத்தி எழுத்து, சித்திரம் வரைதல் மற்றும் கவிதை எழுதல் போன்ற திறன்களின் ஊடாக இக்கதை பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. சிறுவர்களின் படைப்பாற்றல், கற்பனைத்திறன் மற்றும் திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த கதை எழுதப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=126460

    • 1 reply
    • 309 views
  14. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகள் – அமைச்சரவையில் ஆலோசனை by : Dhackshala இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய தொழில்நுட்ப கொங்ரிட் பெனல்களினாலான நிரந்தர வீடுகளை நிர்மாணித்தல் தொடர்பாக அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் களைக்கப்பட்டதன் பின்னர் காபாந்து அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக புதிய தொழில்நுட்ப நிலையான குறைந்த செலவு (ஒரு வீட்…

    • 0 replies
    • 320 views
  15. மேரி ஜெமஸ்டிடா - யாழ் மாநகர சபை முதல்வர் சந்திப்பு ஐக்கிய நாடுகளுக்கான அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான விவகார பணிப்பாளர் மேரி ஜெமஸ்டிடா இன்றையதினம் யாழ் மாநகர சபை முதல்வர் இ.ஆனல்ட்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு யாழ் மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது அரசியல் விவகாரங்கள் மற்றும் யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலை குறித்தும் அதிகமாக பேசப்பட்டதாக மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார். -யாழ். நிருபர் பிரதீபன்- http://tamil.adaderana.lk/news.php?nid=126449

    • 0 replies
    • 209 views
  16. இந்த ஆட்சியாளர்கள் பேசியபடி எதுவுமே நடைபெறவில்லை! இரட்டிப்பு சுதந்திரம் என்றார்கள் அதுவும் இல்லை - ஸ்ரீநேசன் தமிழ் தேசியகீதம் மறுப்பு, தமிழர் திருநாள் தடுப்பு, கொலையாளிகளுக்கு பொது மன்னிப்பு, தமிழ் அரசியற் கைதிகளுக்கு இல்லை இவை தானா இந்த ஆட்சியின் இரட்டிப்புச் சுதந்திரமா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் கேள்வி எழுப்பினார். பொதுத்தேர்தல் விடயதானங்கள் தொடர்பில் மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (05) காலை இடம்பெற்ற இளைஞர்களின் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் அரங்கில் பல்வேறு கரு…

  17. கூட்டமைப்பின் தலைமைத்துவம் விலக வேண்டும் என உறவுகள் போராட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோர் அரசியலிலிருந்து வெளியேறி இளையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று (புதன்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று மதியம் 12.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள், எங்கள் ப…

  18. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் 64 உறுப்பினர்கள் ஓய்வூதியத்தினை இழந்துள்ளனர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 64 பேர் ஓய்வூதியத்தினை இழந்துள்ளனர்.தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டால் மட்டுமே அனைத்து உறுப்பினர்களுக்கும் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அவர்கள் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், இந்த ஓய்வூதியங்களைப் பெற அவர்களுக்கு உரித்தில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் ஓய்வூதியத்தை இழந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் வெளியாகியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உதய கம்மன்பில பிரசன்ன ரனதுங்க காஞ்சன …

  19. போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை இன்னும் நிறைவுக்கு வரவில்லை – சிவாஜிலிங்கம் by : Jeyachandran Vithushan இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச ரீதியான அறிக்கை தயாரிக்கும் பூர்வாங்க விசாரணைகளே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த சிவாஜிலிங்கம் இதுவரை சர்வதேச விசாரணை இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார். ஆகையினால் சர்வதேச விசாரணை நடைபெற்றுள்ளதாகவோ அல்லது விசாரணை முடிவடைந்துவிட்டதாகவோ யாரேனும் கூறுவார்களாயின் அது தவறு என்றும் அவ்வாறான சர்வதேச விசாரணை இனிமேல்தான் நடாத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இ…

  20. கூட்டமைப்பு மீண்டும் மக்கள் ஆணையை கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது – சுரேஷ்! கடந்த கால தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், மீண்டும் தங்களுக்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கோருவதானது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கொழும்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேரம் பேசுவதற்காக 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை…

  21. ஆர்.மகேஸ்வரி / 2020 மார்ச் 04 , மு.ப. 12:10 - 0 - 24 பழைய பெட்டிகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் ஐ.தே.க எனும் பெரும் ரயில், பழைய எஞ்ஜினால் இன்னமும் இழுக்க முடியாது என்பதை நாட்டு மக்கள் நன்றாகப் புரிந்து வைத்துள்ளனரெனத் தெரிவித்த அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், ஆகவேதான், அந்த ரயிலுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியெனும் பெட்டிகளுடன், சஜித் எனும் புதிய எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என்றார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில், பழைய ரயிலில் காணப்படும் சில குறைப்பாடுகளால், தேரர்க…

  22. கடந்த இரண்டு கூட்டங்களில் சுமந்திரன் பல பொய்களை சொல்கிறார். பொய்யை பல முறை சொல்வதால் அது உண்மையாகி விடும் என அவர் வழக்கமாக செயற்படுவதை போல இந்த பொய்களை சொல்கிறார். கஜேந்திரகுமார் ஆசனங்களிற்காகவே வெளியேறினார் என சுமந்திரன் சொல்வது பொய். அந்த சம்வங்கள் நடந்தபோது, சுமந்திரன் இந்த அரசியலிலேயே இருக்கவில்லை. நடந்த சம்பவங்களிற்கு நான் ஒருவனே சாட்சியாக இருக்கிறேன் என பல உள்வீட்டு தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார் மூத்த சட்டத்தரணி ந.காண்டீபன். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். நேற்று (1) வடமராட்சி மாலுசந்தியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், ஆசனங்களிற்காகவே கஜேந்திரகுமார் தரப்…

    • 2 replies
    • 1.2k views
  23. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும் – இரா.சம்பந்தன் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெற்று பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும். இதுவே எமது இலக்கு. இதற்கு எமது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இந்தத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். அதனால் தரமான வேட்பாளர்களை நாங்கள் களமிறக்குகின்றோம். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கும் உரிய இடம் வழங்கப்பட்டிருக்கின்றது. வடக்கு, கிழக்கு எங்கும் எமது தேர்தல் பரப்புரைகள் முன்னெடுக்கப்படும். கிராமங்கள் தோறும் சென்று எமது நிலைப்பாடுகளை மக்களிடம் தெரிவிப்போம் என நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்…

  24. யுத்த காலத்தின்போது ஒரு அரசியல் தீர்வு தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் பல்வேறு உறுதி மொழிகளை வழங்கியிருந்தது. நீண்டகாலமாக நிலவும் இந்த பிரச்சினைக்கு தீர்வினை காணும் நோக்கில் அந்த வாக்குறுதிகள் மதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் அவர்கள் நேற்றைய தினம் (03.03.2020) தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பின் போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் பேசப்பட்ட விடயங்கள் வருமாறு, நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன், கடந்த தேர்த…

    • 4 replies
    • 477 views
  25. காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு by : Dhackshala காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவில் எதிர்வரும் 8ஆம் திகதி மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி சரோஜினி அழைப்பு விடுத்தார். வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், “வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட ஆரம்பித்து எதிர்வரும் மார்ச் மாதம் 8ம் திகதி மூன்று வருடங்களை நிறைவு செய்யவுள்…

    • 2 replies
    • 254 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.