ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142953 topics in this forum
-
வர்த்தகமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு இம்மாதத்தில் வவுனியா பல்கலைக்கழகமாக மாறும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்தார். யாழ் பல்கலைகழக வவுனியா வளாகத்தில் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகத்தனை திறந்து வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். இதன் போது மேலும் தெரிவிக்கையில், வவுனியா பல்கலைக்கழகம் தொடர்பாக வன்னி மக்களிற்கு விரைவில் ஒரு நற்செய்தி கிடைக்க இருக்கின்றது. இவ்விடயம் சென்ற அரசில் இருக்கின்ற அமைச்சர்களாலும் தொடர்ச்சியான சந்திப்புக்களாலும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடைய முயற்சியினாலும் இதற்குரிய அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அதில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக வர்த்தகம…
-
- 3 replies
- 779 views
-
-
யாழ்.மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபர் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார் புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள கணபதிப்பிள்ளை மகேசன் முன்னதாக மட்டக்களப்பு வாழைச்சேனை, வவுணதீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக பதவி வகித்துள்ளார்.அத்துடன் கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் பதில் உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளதோடு, உணவு ஊக்குவிப்பு வாரியத்தின் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். இந்நிலையில் யாழ்.மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் இன்று திங்கட்கிழமை காலை தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.(15) http://www.samakala…
-
- 9 replies
- 766 views
-
-
-செ.கீதாஞ்சன் கொழும்பில், சட்டப் புத்தகங்களைச் சுமந்தவர்களே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பலவீனத்துக்குக் காரணமானவர்களென, வடக்கு மாகாண சழபயின் முன்னாள் உறுப்பினர் எஸ்.மயூரன் தெரிவித்தார். முல்லைத்தீவில், நேற்று (15) நடைபெற்ற டெலோ கட்சியின் மாவட்ட அலுவலகத் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், கூட்டமைப்பு பலவீனமடைந்து செல்வதற்கு, தமிழீழ விடுதலை இயக்கம் காரணமில்லையெனத் தெரிவித்தார். சட்டப் புத்தகங்களைச் சுமந்தவர்களும் எழுதியச் சட்டங்களை வாசித்தவர்களுமே. இன்று வடக்கில் தமிழ்மக்களுக்காக கதைத்துக்கொண்டிருக்கின்றார்களெனவும், இதை பார்ப்பதற்குக் கேவலமாக இருப்பதாகவும் கூறினார். http://w…
-
- 4 replies
- 995 views
-
-
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச தனது ருவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்நின்று செயற்பட்ட தளபதிகளில் ஒருவராவார். அந்தவகையில் நாடு என்ற ரீதியில் நாம் அவருக்கு ஆதரவாக செயற்பட வேண்டும்” என சஜித் பதிவேற்றியுள்ளார். இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளது. அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் இவ்விடயம் தொடர்பான அறிவித்தலை நேற்று முன்தினம் விடுத்…
-
- 26 replies
- 2.1k views
-
-
(எம்.மனோசித்ரா) ' நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு ' தேசிய கொள்ளைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்படும் வெகுசன ஊடகக் கொள்கையின் படி வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்காக நாடு முழுவதிலிருந்தும் அனைத்து வெகுசன ஊடகவியலாளர்களின் தகவல்களையும் சேகரிக்க தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதற்காக கடந்த ஆண்டு அல்லது இவ்வாண்டு அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஊடகவியலாளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்ட வெகுசன ஊடகவியலாளர்களிடம் இருந்து மாத்திரம் தகவல்கள் திரட்டப்படவுள்ளன. இதற்காக தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் www.media.gov.lk இணையதளம் ஊடாக பதிவிறக்கம் செய்து கொள்ள அல்லது அமைச…
-
- 1 reply
- 318 views
-
-
நாளை நடைபெறவுள்ள காதலர் தினத்தை முன்னிட்டு, யாழ்.நகரில் திடீரென முளைத்த ‘காதல் பரிசுக் கடைகளில்’ இளைஞர், யுவதிகள் கூட்டம் அலைமோதியது. யாழ் வைத்தியசாலை வீதியில் அமைக்கப்பட்ட இவ்வாறான அங்காடி ஒன்றில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காதல் பரிசுகளை இளையோர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றதை அவதானிக்க முடிந்தது. “காதலையும் வியாபாரமாக்கி விட்டார்களே” என இதனை அவதானித்த பலரும் விசனமடந்தனர். https://newuthayan.com/யாழ்-நகரில்-சூடுபிடித்த/
-
- 29 replies
- 2.6k views
-
-
இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தாபய தெரிவு செய்யப்பட்ட பின்னர் காணாமல்போகச்செய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் அவர்களிற்கு ஆதரவாக செயற்படும்மனித உரிமை செயற்பாட்டாளர்களிற்கு எதிரான படையினரினதும் புலனாய்வு பிரிவினரினதும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச மனிதஉரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வடகிழக்கின ஆறு பகுதிகளில் காணாமல்போனவர்களினது குடும்பத்தவர்களின் சார்பில் செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்தின் கண்காணிப்பு நடவடிக்கையும் மிரட்டல்களும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சமீபத்தை சந்திப்பொன்றிற்கு முன்னதாக காணாமல்போனவர்களின் தாய்மார்க ள் ஒவ்வொருவரிற்கும் ஆகக்குறைந்த…
-
- 1 reply
- 413 views
-
-
MCC ஒப்பந்ததம் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் தொடர்பான பேராசிரியர் லலிதசிறி குனருவன் தலைமையில் இக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. http://www.tamilmirror.lk/செய்திகள்/MCC-ஒபபநதம-அறகக-ஜனதபதயடம-கயளபப/175-245661
-
- 2 replies
- 717 views
-
-
அரசியல் பழிவாங்கல் குறித்த விசாரணைகள் ஆரம்பம்! 2015ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி வரை இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இன்று(திங்கட்கிழமை) முதல் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரட்னவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழு தமது அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது. இதற்கமைவாக ஆணைக்குழுவிற்கு எதிர்வரும் 20ஆம் திகதி வரை முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும். கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவின் ஊடாக சாட்சியங்கள் தற்போது பதிவு செ…
-
- 2 replies
- 564 views
-
-
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் சகோதரரான முத்தையா பிரபாகரன் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் தான் போட்டியிட உள்ளதாக முன்வைக்கப்படும் தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், மலையக சமூகத்தின் மீது அக்கறை கொண்டே தனது சகோதரர் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தால் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாமல் போயுள்ளமை வருத்தத்துக்குரியதென தெரிவித்துள்ள அவர், அதற்காக ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் புதிய வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். http://www.tam…
-
- 0 replies
- 432 views
-
-
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு தீர்வு
-
- 0 replies
- 320 views
-
-
இருபத்திரெண்டாக காணப்படுகின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பத்தாகா குறைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தேசியத்தில் பேரினவாத சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் இருபத்திரெண்டு உறுப்பினர்களை பத்தாக குறைத்து பின்னர் அதனை அடுத்த தேர்தலில் ஆறாக மாற்றுவதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. இந்த சதி குறித்து நாம் …
-
- 0 replies
- 335 views
-
-
(இராஜதுரை ஹஷான்) இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்டுள்ள தடையினை ஆளும் தரப்பினர் பொதுத்தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என்று ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். சிறந்த அரசாங்கத்தை உருவாக்க தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேனவால் ஒருபோதும் குறிப்பிடமுடியாது. நல்லாட்சியின் நோக்கத்தை இவரே இல்லாதொழித்தார் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு …
-
- 0 replies
- 412 views
-
-
சவேந்திர சில்வா விவகாரம்: இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா விதித்துள்ள தடை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக விளக்கமளிக்க இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தூதரை இன்று முற்பகல் வெளிவிவகார அமைச்சுக்கு வருமாறு தான் அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இராணுவத்தளபதி மற்றும் பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா மற்றும…
-
- 2 replies
- 526 views
-
-
சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருக்கும் தடையானது எமது நாட்டின் கெளரவம் மற்றும் இறையாண்மைக்கு விடுக்கும் அச்சுறுத்தலாகும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார். அத்துடன் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடந்த அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர மற்றும் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஆகியோரே காரணமாகும். யுத்தக்குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்க தீர்மானித்தது. அதற்கான ஆவணத்தில் மங்கள சமரவீர கைச்சாத்திட்டிருந்தார். ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமையவே மங்கள சமரவீர இதனை மேற்க…
-
- 0 replies
- 242 views
-
-
யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது- சுரேஷ் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளது என்பதை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளது என தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் காணப்படும் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கல்முனையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் கூறுகையில், “ஐக்கிய நாடுகள் சபையில் மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு, இலங்கையில் யுத்தம் நடைபெற்ற நிலையில் அப்போது இடம்பெற்ற மனித உரிமை விடயங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜெனிவா…
-
- 3 replies
- 466 views
-
-
ஏ.எச்.ஏ. ஹுஸைன், கே.எல்.ரி.யுதாஜித் மத்திய அரசாங்கம், மாகாண சபை என்கின்ற அலகை வெறுமனே பெயரளவில் வைத்துக் கொண்டு, அதிகாரப் பகிர்வு, நிதியொதுக்கீடுகளை வெகுவாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக, மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன், பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் மேயர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், மட்டக்களப்பு மாநகர சபைக்கான விஜயமொன்றை, நேற்று (11) மேற்கொண்டார். இதன்போது, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், உள்ளூராட்சி சபைகளுக்கு மத்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப் பெறும் ஒத…
-
- 3 replies
- 763 views
-
-
மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சி.வி.சரியாக பயன்படுத்தவில்லை- மஹிந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், அந்த மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சரியாக பயன்படுத்தாமல் மீள திருப்பி கொடுத்து விட்டாரென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, நேற்று (சனிக்கிழமை) அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டார். இதன்போது 13வது அரசியல் சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உங்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறாரே என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளத…
-
- 6 replies
- 893 views
-
-
இலங்கை இராணுவத் தளபதிக்கு எதிரான தடைக்கு ‘பேர்ள்’ அமைப்பு வரவேற்பு இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவினுள் நுழைய அந்நாட்டினால் தடை விதிக்கப்பட்டமையை பேர்ள் அமைப்பு வரவேற்றுள்ளது. பேர்ள் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொறுப்புக்கூறல் விடயத்திலும் அரசியல் சீர்த்திருத்தத்திலும் தக்கவைக்கத்தக்க முன்னேற்றங்களை வலியுறுத்த ஐக்கிய அமெரிக்கா இலங்கையுடனான அரச உறவை பலப்படுத்த வேண்டும். மேலும் ஐக்கிய அமெரிக்க அரசானது போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏனைய இலங்கை அலுவலர்களுக்கு எதிராகவும் தடைகளைக் கொண்டுவர வேண்டும். குற்றவாளிகளுக்கு …
-
- 1 reply
- 524 views
-
-
விடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்தோடு உருவாகிய கூட்டமைப்பு தமிழரின் உரிமைகளை அடகு வைக்காது- செல்வம் எம்.பி. விடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்தோடு உருவாகிய கூட்டமைப்பு தமிழரின் உரிமைகளை யாருக்கும் அடைமானம் வைக்காது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளமை தமிழருக்கான காலம் கனிந்திருப்பதற்கான ஒரு செய்தி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு விழா வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் உரையாற்றுகையில், “எ…
-
- 5 replies
- 573 views
-
-
ரெலோவின் பொதுக்கூட்டத்தில் இளைஞர்கள் சிலர் குழப்பம்: ஒருவர் காயம் – இருவர் கைது வவுனியாவில் இடம்பெற்ற ரெலோவின் 50ஆவது ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் இளைஞர்கள் சிலரிடையே ஏற்பட்ட குழப்பத்தால் ரெலோ உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) 50ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்த கூட்டத்தில், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.…
-
- 1 reply
- 413 views
-
-
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்ப காலம் நிறைவு புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்ப காலம் நிறைவடையவுள்ளது. அதற்கமைய குறித்த காலம் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் கோரப்பட்டிருந்தது. 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் கீழ், 2009ஆம் ஆண்டின் 58 இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலும் இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இந்நிலையில், புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக இதுவரையில் 77க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் …
-
- 0 replies
- 304 views
-
-
காலக்கெடுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது- ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை அறிவிப்பு by : Litharsan யுத்தத்திற்குப் பிந்திய நிலைமாறுகால நீதி நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்கான வெளிப்புற காலக்கெடுக்கள் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இலங்கை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இடம்பெற்ற பகிரங்கக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஐ.நா.விற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சேனுக்கா செனவிரட்ன இதனைத் தெரிவித்துள்ளார். நிலைமாறுகால நீதி தொடர்பான நடவடிக்கைகளைப் பூர்த்திசெய்வதற்காக விதிக்கப்படும் வெளிப்புற காலக்கெடுக்கள் நல்லிணக்க முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படு…
-
- 6 replies
- 1.2k views
-
-
மாங்குளத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு -சண்முகம் தவசீலன் மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து, இன்று (12) மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில், புனர்வாழ்வு வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நிலையில், குறித்த வைத்தியசாலையை நிர்மாணிபதற்காக, வைத்தியசாலை நிர்மாணிக்கப்படும் காணியில், துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக திடீரென அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மனித நேயக் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள…
-
- 10 replies
- 1.7k views
- 1 follower
-
-
இணையத்தள நிதி மோசடி – பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை இணையத்தள நிதி மோசடிகளினால் ஏமாந்துவிடாது, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வலியுறுத்தியுள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளம் ஊடாக பல நிதி மோசடிச் சம்பவங்கள் பாதிவாகியுள்ளதாக இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் ராஜீவ் யாசிரு குருவிடேஜ் குறிப்பிட்டுள்ளார். இணையத்தளமூடான வர்த்தக செயற்பாடுகள் தொடர்பான போர்வையில் இத்தகைய மோசடிக்காரர்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது. ஒரு சேவையை வழங்குவதற்கு முன்னர் தமது வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிடுமாறு மோசடிக்காரர்கள் வலியுறுத்தி, நிதி மோசடிச் செயலில் ஈடுபடுவதாகவும் குருவிடேஜ் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இவ்வாறான இணையத…
-
- 0 replies
- 326 views
-