Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைத் தமிழர்கள் உரிய கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும்.. - இந்திய பிரதமர் நரேந்திர மோடி February 8, 2020 இலங்கையில் வாழும் சிறுபான்மையின தமிழ் மக்கள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் உரிய கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நான்கு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்று (08) புது டெல்லியில் அமைந்துள்ள ராஸ்டிரபதிபவனில் பாரத பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பின் பின்னர் இரு நாட்டு பிரதமர்களும் இணைந்து கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். இதன்போதே இந்திய பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கரு…

    • 19 replies
    • 1.3k views
  2. இந்திய பிரதமரை சந்தித்தார் பிரதமர் மகிந்த இந்தியாவுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பயணமான பிரதமர் மகிந்த ராஜபக்ஷ டெல்லியில் உள்ள ஐதரபாத் இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்தி மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நேற்று டெல்லியை சென்றடைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இந்திய மத்திய அமைச்சர் சஞ்சய் தோத்ரே வரவேற்றுள்ளார். டெல்லியை சென்றடைந்த சென்றடைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில், வாரணாசி, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு மகிந்த ராஜப…

  3. தமிழர்களின் அடிப்படை கோரிக்கைகளை ஏற்கக்கூடிய எந்த தரப்பினரும் எங்களுடன் இணைய முடியும் – சுரேஸ் by : Dhackshala தமிழ் மக்களுடைய அடிப்படை கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்த தரப்பினரும் தங்களுடன் இணைந்துகொள்ள முடியும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிவித்தல் விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைச்சாத்திடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்த அவர், “தமிழ் மக்களுடைய அடிப்படை கோரிக்கைகளான ச…

  4. பகிடிவதைக் குற்றச்சாட்டு: இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட மாணவனின் வீடு மீது தாக்குதல்! பகிடிவதைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழைய மாணவன் ஒருவருக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த மாணவனின் வீட்டுக்குச் சென்ற நால்வர், மாணவன் அங்கு இல்லாத சந்தர்ப்பத்தில் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து உடைத்துவிட்டுச் சென்றுள்ளனர் . இந்தச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10 மணியளவில் இடம்பெற்றது. வீட்டுக்குள் நுழைந்த நால்வர், மாணவனை அழைத்துள்ளனர். அவர் அங்கில்லாத நிலையில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த…

  5. சிறிய மற்றும் மத்தியதர கைத்தொழில் ஊக்குவிப்பு அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக, 1 பில்லியன் ரூபாய் நட்டயீடு கோரி, வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். மேற்படி அமைச்சில், நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துரைத்த அமைச்சர் விமல் வீரவன்ச, தன்னைப்பற்றி உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட்டமைக்கு எதிராகவே தான் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், அமைச்சர் விமல் வீரவன்ச தன்னைப்பற்றி போலியானக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் எனவும் அமெரிக்காவில் தான் வங்கிக் கணக்கொன்றை வ…

  6. ‘கூட்டமைப்புக்கும் த.தே.ம.முக்கும் தலை வலி’ -என்.ராஜ், செந்தூரன் பிரதீபன் மாற்றுத் தலைமை உருவாக்கத்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தலைவலியைச் சந்தித்துள்ளதாக, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - கட்டப்பிராயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் வழங்கிய ஆணைகளில் இருந்து விலகி, வேறு வழியில் தடம்மாறி சென்றதன் காரணமாகவே, புதிய கூட்டணி உருவாகியதாகவும் கூறினார். அத்துடன், புதிய கூட்டணி …

  7. சமூக ஊடகங்களும் செய்தித்தளங்களும் சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டும் -யாழ் பல்கலை மாணவர்கள் வேண்டுகோள் உள்நாட்டிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் யாழ் பல்கலைக்கழகம் அதிகமாக கவனம் பெறும் இடமாக காலங்காலமாக அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது.எனவே இங்கே இடம்பெறும் சிறிய தவறுகளும் உடனடியாக ஊடக வெளிகளில் படம்போட்டு காட்டப்படுகின்றன. அவ்வாறான ஒரு விடயமாகவே இந்த பகிடிவதை சம்பவமும் அமைந்திருக்கின்றது.குறித்த பகிடிவதை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மாணவர்கள் ஒழுக்காற்று அதிகாரிகளினால் பூரணமாக விசாரணை செய்யப்பட்டு குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.குறித்த விடயம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் திரிவுபடுத்தப்பட்ட கருத்துக்களும் சம்பவங்களும் தொடர்பில் சமூக ஊடக உரி…

    • 11 replies
    • 1.3k views
  8. தீமையளிக்கக் கூட நினைக்காத தமிழ் சமூகம் இன்று தீமையை நோக்கிச் செல்கிறது- வடக்கு ஆளுநர் மற்றவர்களுக்குத் தீமையளிக்கக் கூட நினைக்காத எமது சமூகம் இன்று தீமையை நோக்கிச் செல்கிறது என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார். அத்துடன், யாழ். பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பகிடிவதை நடைபெற்றதாக வெளியான செய்திகள் தொடர்பாக தனக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். யாழில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவ்வாறு இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “வடக்கு மாகாண மக்களுக்கான சேவைகளை என்னால் மாத்திரம் தனியே முன்னெடுக்க முடியவில்லை. எல்லோருடைய ஒத்துழைப்ப…

  9. சீனாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மாணவர்களை இராணுவ முகாமிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்டு, தியத்தலாவை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 33 மாணவர்களும் 16ஆம் திகதி அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று தலைமை தொற்று நோயியல் நிபுணர் சுதாத் சமரவீர தெரிவித்தார். குறித்த 33 மாணவர்களும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி கெரோனா வைரஸ் பரவலின் மையமாக விளங்கிய சீனாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, இவ்வாறு தியத்தலாவை முகாமில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே மாணவர்களின் வெளியேற்றம் குறித்து கருத்து தெரிவித்த தொற்று நோயியல் நிபுணர் சுதாத் சமரவீர இவ்வாறு கூறினார். அத்துடன் 33 மாணவர்களும் கொரோனா தொற்…

  10. நான்கு மாவட்டங்களில் காட்டுத் தீ பரவல் சம்பவங்கள் அதிகரிப்பு – சுற்றுலாப்பயணிகளுக்கும் தடை! நான்கு மாவட்டங்களில் காட்டுத் தீ பரவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஜானக ஹந்துன் பத்திராஜ இதனைத் தெரிவித்துள்ளார். பதுளை, மொனராகலை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் காட்டுத் தீ பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திட்டமிட்டு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு எவரேனும் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். …

  11. பாலியல் ரீதியான பகிடிவதைக்கு எதிராக யாழில் போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ரீதியான வன்முறைகளுக்கு எதிராக பெண்கள் அமைப்பினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, பாலியல் வன்முறை மற்றும் பகிடிவதைக்கு எதிராக கோசமிட்டனர். ‘மகிழ்ச்சியான பல்கலைக்கழக வாழ்க்கையை மரணத்தில் முடிக்காதே’, ‘தற்கொலை சிந்தனையை தூண்டும் பகிடிவதை தேவைதானா’, ‘நாட்டிலும் வீட்டிலும் பெண்கள் சமத்துவ…

  12. யாழ்ப்பாண பொலிஸ் பிரிவின் புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவியேற்றார் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக மனோஜ் ரணகல பதவியேற்றார் மும் மத தலைவர்களிள் ஆசீர்வாதத்துடன் பதவியேற்பு நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.36 மணியளவில் இடம்பெற்றது. கொழும்பு மத்தி பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய மனோஜ் ரணகல, இடமாற்றலாகி யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவியேற்றுக்கொண்டார். இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கடமையாற்றியவர் தற்போது கொழும்புக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/யாழ்ப்பாண-பொலிஸ்-பிரிவின/

  13. விடுவிக்கப்பட்ட காணிகளை விரைவில் பயன்படுத்துங்கள் – வடக்கு ஆளுநர் பணிப்பு! by : Jeyachandran Vithushan விடுவிக்கப்பட்ட காணிகளை இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மக்கள் பாவனைக்கு உட்படுத்த வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் இதுகுறித்த அறிவிப்பை பிரதேச செயலாளர்கள் காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துமாறும் அவர் கூறியுள்ளார். ஆளுநர் செயலகத்தில், இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதேச செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதன்போது, யாழ். மாவட்டத்திலுள்ள மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, வீட்டுத்திட்டம், வீடமைப்பு என்பவற்றின் உண்மை நிலவரங்களை பிரதேச செயலாளர்களிடம் தனித்தனிய…

  14. கடத்தி வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்ட, பொய்யான தகவல்களை வழங்கி தேசத்தை அசெளகரியபப்டுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் வீசா பிரிவின் பெண் ஊழியர் கானியா பனிஸ்டர் பிரான்சிஸ் குறித்த தொலைபேசி தரவுகளை மையப்படுத்திய விசாரணைகள் தொடர்வதாக சி.ஐ.டி. இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்தது. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பெற்றுக்கொள்ளப்பட்ட, சுவிட்சர்லாந்து தூதரகத்தின் வீசா பிரிவின் சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி கானியா பனிஸ்டர் பிரான்சிஸ், அவரது கணவர் மற்றும் அவரது மகளின் வகுப்பாசிரியையாக கடமையாற்றிருந்த ஆசிரியை ஒருவர் ஆகிய மூவரி…

    • 2 replies
    • 557 views
  15. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய கோட்டாபய ராஜபக்ச அமோக வெற்றி பெற்று ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றதில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய நாட்டிற்கு நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்திவருகின்றார். ஆனாலும் அவை அனைத்தும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரும்பாண்மையை பெற்றுக்கொள்வதற்காகவே முன்னெடுக்கப்படுகின்றன என ஒருசாரார் குற்றஞ்சாட்டிவருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதியாக கோட்டாபய பதவியேற்ற பின்னர் அரச அலுவலகங்களிற்கு தானே நேரில் சென்று கண்காணித்துவந்தார். அந்தவகையில் இன்றும் ஜனாதிபத…

    • 2 replies
    • 508 views
  16. -டி.விஜித்தா, சண்முகம் தவசீலன் நடைபெறவுள்ள இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், இன்று (11), நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது. அந்த வகையில், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலர், மாவட்டச் செயலகங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். முல்லைதீவு மாவட்டத்தில் இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர் இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேசச் செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 18 வயது முதல் 29 வயதுகிடைப்பட்ட இளைஞர், யுவதிகள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். இம்முறை, வடக்கில் உள்ள இளைஞர் கழகங்களை சாராத இளைஞர்கள் மற்…

  17. (ஆர்.விதுஷா) இராணுவத்தில் சரணடைந்தவர்களுக்கு எவ்வாறு அரசாங்கம் மரண சான்றிதழ்களை வழங்க முடியும் என கேள்வியெழுப்பி சமவுரிமை இயக்கம் எதிர்ப்பு ஆர்பாட்டத்தை இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நடத்தியது. இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் 50 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதுடன், சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டார்கள் எனின் கொன்றவர்கள் யார்? மரண சான்றிதழ்களை கொடுத்து சகல காணாமலாக்கப்பட்டவர்களையும் மறைக்கும் அரசாங்க திட்டத்தை எதிர்க்கின்றோம் என்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் அவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆர்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கானதேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வணபிதா சக்த…

  18. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தையல் பயிற்சி வழங்கப்பட்ட பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு, வாழைச்சேனை வேல்ட் விஷன் காரியாலயத்தில் இன்று (11) நடைபெற்றது. கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வறிய பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், வாழைச்சேனை வேல்ட் விஷன் நிறுவனத்தின் முகாமையாளர் எட்வின் ரணிலின் வழிகாட்டலில், இவை வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில், வேல்ட் விஷன் நிறுவனத்தின் வாழ்வாதார பொறுப்பாளர் அ.கிருஷாந்த், கல்குடா கிராம அதிகாரி க.கிருஸ்ணகாந்த், வேல்ட் விஷன் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்துகொண்டனர். இதன்போது, கிண்ணையடி, கண்ணிபுரம், நாசிவந்தீவு, பேத்தாளை, சுங்கன்கேணி, கல்மடு ஆக…

    • 0 replies
    • 430 views
  19. அம்பாறை – கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட குடியிருப்பில் இன்று (11) அதிகாலை 12.45 மணியளவில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டு தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் சிறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். மேலும் தாக்குதலினால் பாதிப்புக்குள்ளான இடத்தில் தரித்து நின்ற முச்சக்கர வண்டிக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை – என்றனர். இத்தாக்குதல் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை பெரும் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் குறித்த தாக்குதலுக்கு உள்ளான பகுதியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகர உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் சென்று பார்வையிட்டுள்ளார். இதேவேளை க…

  20. இதயம் சின்னத்திற்கு அனுமதி கிடைக்காது – சுசில் by : Yuganthini எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் இதய சின்னத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடைக்காதென இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் மேலும் கூறியுள்ளதாவது, “யானை சின்னத்திற்கும் இதய சின்னத்திற்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் உண்டு. மேலும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான பொதுக்கூட்டணி விவகார முரண்பாடுகள் இன்று எதிர்தரப்பில் சூடுப்பிடித்துள்ளன. அத்துடன் கட்சியின் முரண்பாடுகள் ஆளும் தரப்…

  21. கோட்டா – மஹிந்த – பசிலுடன் அவசர சந்திப்பை கோரும் சுதந்திரக் கட்சி! by : Jeyachandran Vithushan ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுடன் அவசர பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, இவர்கள் மூவருடனும் கட்சியின் சில உறுப்பினர்களுடனும் முக்கிய பிரச்சினை தொடர்பாக விவாதிக்க வேண்டியுள்ளது என கூறினார். மேலும் ஸ்ரீலங்கா பொதியான பெரமுனவுடனான பரந்துபட்ட கூட்டணி இறுதி செய்யப்பட வேண்டும் என சுதந்த…

  22. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புறக்கணிக்க பொதுஜன பெரமுன முயற்சி – தயாசிறி சாடல்! by : Jeyachandran Vithushan ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புறக்கணிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முயற்சித்ததாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டியுள்ளார். ஆனமடுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அவர், கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு வழிவகுத்த ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியின் பங்களிப்பை மதிப்பிட சில பிரிவுகள் முயற்சிப்பதாகவும் அவர் சாடினார். குறித்த ஒப்பந்தத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கூட்டணியின் தலைவராக இரு…

  23. கிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பு பொதுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என வேண்டுகோள் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் எதிர்கால நிலை கருதி எல்லாக் கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிட முன்வந்துள்ளனர் எனவே பொதுச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கிறோம் என கிழக்கு தமிழர் ஒன்றியத் தலைவர் ரி.சிவநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றினைந்து கிழக்கில் பொதுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட முன்வந்திருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் கூட்டமைப்பிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். கிழக்கு தமிழர் ஒன்றியம் எல்லா கட்…

  24. வெளிநாட்டு கல்வியால் பில்லியன்கள் இழப்பு – கல்வி அமைச்சர் உயர் கல்வியைத் தொடர்வதற்காக இலங்கையர்கள் வெளிநாடு செல்வதால் ஆண்டு தோறும் சுமார் 50 பில்லியன் ரூபாயை இழக்க நேரிடுவதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் குணவர்தன, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேருவதற்காக ஆண்டுதோறும் 20,000 மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என கூறினார். உயர்கல்வியை முடித்த பின்னர் பல்வேறு சலுகைகளை வழங்குவதன் மூலம் பல மோசடியாளர்களும் வணிகர்களும் மாணவர்களை குறிவைப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும் நாட்டில் உள்ள பல்கலைக்கழக அமைப்பை மோசடி செய்பவர்களாலும், ஊதியம் பெற்…

  25. தனிப்பட்ட நபர்கள் தலையிட வேண்டாம்: ஜனாதிபதி உத்தரவு அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் தலையீடு செய்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரால் அனைத்து அமைச்சுகள் மற்றும் செயலகங்களுக்கு 07 ஆம் திகதியிடப்பட்ட சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறானவர்கள், கடிதம் அல்லது தொலை பேசி அழைப்பு உள்ளிட்ட எந்தவொரு வழிகளிலும் அரசாங்க செயற்பாடுகள் தொடர்பில் ஆணைகள் வழங்கக்கூடாது என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.