Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (ஆர்.விதுஷா) இராணுவத்தில் சரணடைந்தவர்களுக்கு எவ்வாறு அரசாங்கம் மரண சான்றிதழ்களை வழங்க முடியும் என கேள்வியெழுப்பி சமவுரிமை இயக்கம் எதிர்ப்பு ஆர்பாட்டத்தை இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நடத்தியது. இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் 50 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதுடன், சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டார்கள் எனின் கொன்றவர்கள் யார்? மரண சான்றிதழ்களை கொடுத்து சகல காணாமலாக்கப்பட்டவர்களையும் மறைக்கும் அரசாங்க திட்டத்தை எதிர்க்கின்றோம் என்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் அவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆர்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கானதேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வணபிதா சக்த…

  2. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தையல் பயிற்சி வழங்கப்பட்ட பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு, வாழைச்சேனை வேல்ட் விஷன் காரியாலயத்தில் இன்று (11) நடைபெற்றது. கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வறிய பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், வாழைச்சேனை வேல்ட் விஷன் நிறுவனத்தின் முகாமையாளர் எட்வின் ரணிலின் வழிகாட்டலில், இவை வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில், வேல்ட் விஷன் நிறுவனத்தின் வாழ்வாதார பொறுப்பாளர் அ.கிருஷாந்த், கல்குடா கிராம அதிகாரி க.கிருஸ்ணகாந்த், வேல்ட் விஷன் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்துகொண்டனர். இதன்போது, கிண்ணையடி, கண்ணிபுரம், நாசிவந்தீவு, பேத்தாளை, சுங்கன்கேணி, கல்மடு ஆக…

    • 0 replies
    • 431 views
  3. அம்பாறை – கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட குடியிருப்பில் இன்று (11) அதிகாலை 12.45 மணியளவில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டு தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் சிறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். மேலும் தாக்குதலினால் பாதிப்புக்குள்ளான இடத்தில் தரித்து நின்ற முச்சக்கர வண்டிக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை – என்றனர். இத்தாக்குதல் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை பெரும் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் குறித்த தாக்குதலுக்கு உள்ளான பகுதியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகர உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் சென்று பார்வையிட்டுள்ளார். இதேவேளை க…

  4. இதயம் சின்னத்திற்கு அனுமதி கிடைக்காது – சுசில் by : Yuganthini எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் இதய சின்னத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடைக்காதென இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் மேலும் கூறியுள்ளதாவது, “யானை சின்னத்திற்கும் இதய சின்னத்திற்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் உண்டு. மேலும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான பொதுக்கூட்டணி விவகார முரண்பாடுகள் இன்று எதிர்தரப்பில் சூடுப்பிடித்துள்ளன. அத்துடன் கட்சியின் முரண்பாடுகள் ஆளும் தரப்…

  5. கோட்டா – மஹிந்த – பசிலுடன் அவசர சந்திப்பை கோரும் சுதந்திரக் கட்சி! by : Jeyachandran Vithushan ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுடன் அவசர பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, இவர்கள் மூவருடனும் கட்சியின் சில உறுப்பினர்களுடனும் முக்கிய பிரச்சினை தொடர்பாக விவாதிக்க வேண்டியுள்ளது என கூறினார். மேலும் ஸ்ரீலங்கா பொதியான பெரமுனவுடனான பரந்துபட்ட கூட்டணி இறுதி செய்யப்பட வேண்டும் என சுதந்த…

  6. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புறக்கணிக்க பொதுஜன பெரமுன முயற்சி – தயாசிறி சாடல்! by : Jeyachandran Vithushan ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புறக்கணிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முயற்சித்ததாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டியுள்ளார். ஆனமடுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அவர், கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு வழிவகுத்த ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியின் பங்களிப்பை மதிப்பிட சில பிரிவுகள் முயற்சிப்பதாகவும் அவர் சாடினார். குறித்த ஒப்பந்தத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கூட்டணியின் தலைவராக இரு…

  7. கிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பு பொதுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என வேண்டுகோள் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் எதிர்கால நிலை கருதி எல்லாக் கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிட முன்வந்துள்ளனர் எனவே பொதுச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கிறோம் என கிழக்கு தமிழர் ஒன்றியத் தலைவர் ரி.சிவநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றினைந்து கிழக்கில் பொதுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட முன்வந்திருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் கூட்டமைப்பிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். கிழக்கு தமிழர் ஒன்றியம் எல்லா கட்…

  8. வெளிநாட்டு கல்வியால் பில்லியன்கள் இழப்பு – கல்வி அமைச்சர் உயர் கல்வியைத் தொடர்வதற்காக இலங்கையர்கள் வெளிநாடு செல்வதால் ஆண்டு தோறும் சுமார் 50 பில்லியன் ரூபாயை இழக்க நேரிடுவதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் குணவர்தன, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேருவதற்காக ஆண்டுதோறும் 20,000 மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என கூறினார். உயர்கல்வியை முடித்த பின்னர் பல்வேறு சலுகைகளை வழங்குவதன் மூலம் பல மோசடியாளர்களும் வணிகர்களும் மாணவர்களை குறிவைப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும் நாட்டில் உள்ள பல்கலைக்கழக அமைப்பை மோசடி செய்பவர்களாலும், ஊதியம் பெற்…

  9. தனிப்பட்ட நபர்கள் தலையிட வேண்டாம்: ஜனாதிபதி உத்தரவு அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் தலையீடு செய்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரால் அனைத்து அமைச்சுகள் மற்றும் செயலகங்களுக்கு 07 ஆம் திகதியிடப்பட்ட சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறானவர்கள், கடிதம் அல்லது தொலை பேசி அழைப்பு உள்ளிட்ட எந்தவொரு வழிகளிலும் அரசாங்க செயற்பாடுகள் தொடர்பில் ஆணைகள் வழங்கக்கூடாது என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப…

  10. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சில மாவட்டங்களில் சஜித் தலைமையிலான கூட்டமைப்பில் இணைந்தும், சில இடங்களில் தனித்தும் போட்டியிட உள்ளதாக முன்னாள் அமைச்சரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியூதீன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் தேர்தலில் எமது கட்சியை பொறுத்த வரை சில மாவட்டங்களில் இணைந்தும் சில இடங்களில் தனித்தும் போட்டியிடும் நிலை இருக்கிறது. இது தொடர்பாக அனைத்து கூட்டு கட்சிகளுடனும் கலந்துரையாடி எமது கட்சிக்கும் பாதிப்பில்லாமல். மற்றவர்க்கும் பாதிப்பில்லாமல் சரியான ஒரு முடிவினை தேர்தலின் முன்னர் எமது கட்சி எடுக்கும்.…

  11. சி.வி.யின் தலைமையில் புதிய கூட்டணி உதயம் வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரில்கோ விருந்தினர் விடுதியிலேயே குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வடக்கு முன்னாள் முதலமைச்சருமான விக்கினேஸ்வரன் தலைமையில் புதிய அணியொன்று உருவாக்கும் முயற்சிகள் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்தன. விக்கினேஸ்வரன் எனினும் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட இழுபறி நிலைமைகளால் அது குறித்தான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தக் கூட்டணிக…

    • 10 replies
    • 1.5k views
  12. எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையில் ஒரு கூட்டணி தேர்தலில் கட்சியாக போட்டியிடுவதற்கு தேவையான ஆவணங்களை தேர்தல்கள் ஆணையகத்தில் சமர்ப்பித்துள்ளது. அதன்படி சஜித் தலைமையிலான புதிய கூட்டணி 'தேசிய அமைதி கூட்டணி' என பெயரிடப்பட்டுள்ளதுடன், அதன் சின்னமாக இதயமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கூட்டணியின் பொதுச் செயலாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/75310

  13. அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எஃப்.ரகுமானின் நடத்தை கோலங்கள் மற்றும் அவரின் அதிகார துஷ்பிரயோகங்கள் அண்மைக்காலங்களாக சட்டரீதியாக அல்லாமல் பசுதோல் போர்த்திய புலியாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையில் கடமையாற்றும் விசேட தர தாதிய உத்தியோகத்தர் ஆர்.தேவாமிர்ததேவி குறிப்பிட்டுள்ளார். கல்முனை பெண்களின் உரிமை செயற்பாட்டாளரும், கல்முனை மாநகர உறுப்பினருமான பஸீரா றியாஸ் தலைமையில் இன்று கல்முனை பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வைத்திய அத்தியட்சகரின் நடத்தை கோலங்களும், அதிகார துஷ்பிரயோகங்களும் அண்மைக்காலங்களாக தன்னை தாக்குகின்றது. சட்டரீதியாக அல்லாமல் …

  14. யாழில் வாள்வெட்டு – 3 பேர் காயம்: மூவர் கைது யாழ். இளவாலை- சாந்தை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் மூவர் காயமடைந்த நிலையில், தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து, சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸாா் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் வசித்து வரும் நபரின் வளர்ப்பு நாயை அயலவர்கள் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து கேட்கச் சென்ற நாயின் உாிமையாளருக்கும் அயல் வீட்டினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாய்த்தா்க்கம் முற்றிய நிலையில், அயல் வீட்டிலிருந்தவா்கள் நாயின் உ…

  15. ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை 103 முறைப்பாடுகள் பதிவு ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 103 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்நிலையில், முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் நேற்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, அட்மிரல் D.K.P. தசநாயக்க உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் குழுவால் 4 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்நிஷாந்த டி சில்வா ஆகியோரால் பொய்யான சாட்சிகள் வழங்கப்பட்டு கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்காக சதி முயற்சி முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்து இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டத…

  16. காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை நாடளாவிய ரீதியில் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கைகளை விரைவில் நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காணி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அடையாளம் காணப்பட்ட மொத்த நில அலகுகளின் எண்ணிக்கை 14 மில்லியன் என்பதுடன், அவற்றில் 10 வீத காணிகளின் அளவீட்டு நடவடிக்கைகள் கடந்த வருடம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எனவே, மீதமுள்ள 90 வீதமான காணிகளின் அளவீட்டுப் பணிகளை விரைவில் நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதற்கு தேவையான வசதிகள் உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். …

  17. காணாமல் போனவர்கள் தொடர்பாக மதிப்பாய்வு செய்யவுள்ள ஐ.நா நிபுணர் குழு! by : Jeyachandran Vithushan இலங்கை உட்பட 32 நாடுகளில் உள்ள வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பான 530 க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக ஐ.நா.சபையின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான செயற்குழு இம்மாதம் 10 முதல் 14 வரை ஜெனீவாவில் தனது 120 ஆவது அமர்வை நடத்துகின்றது. வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்களின் உறவினர்கள், அரச அதிகாரிகள், சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து தனிப்பட்ட மற்றும் வலிந்து காணாமல் போனவர்களின் தொடர்ச்சியான நடைமுறை பற்றிய தகவல்களை இந்த குழுவில் உள்ள 5 நிபுணர்கள் கேட்டறிந்து கொள்ளவுள்ளனர். மேலும் வலுக்கட்டாயமாக காணாமல் போவதிலிருந்து அனைத்து …

  18. -சுப்பிரமணியம் பாஸ்கரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கிளிநொச்சி வளாகத்தில், பகடிவதையில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில், எட்டு மாணவர்களுக்கு, இன்று (10) முதல், பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/வன்னி/பகடிவதை-எண்மருக்கு-இடைக்காலத்-தடை/72-245246 ‘சம்பந்தப்பட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்’ -எஸ்.நிதர்ஷன் யாழ்ப்பாணப் பல்கலைகழகக் கிளிநொச்சி வளாகத்தில், பகடிவதையில் ஈடுபட்டவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணப் பல்கலைகழகக் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகடிவதை தொடர்பில் தாம் கவனமா…

    • 4 replies
    • 1.1k views
  19. யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது பகிடிவதை அல்ல பாலியல் சித்திரவதை -வரதராஜப்பெருமாள் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது பகிடிவதை அல்ல. அது பாலியல் சித்திரவதை என வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.அத்துடன் பல்கலைக்கழகங்களில் பகிடி வதை நடப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என மேலும் தெரிவித்துள்ளார். இதுவொரு பாலியல் சித்திரவதை என்றே கூறவேண்டும். இதன் காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினை அவமானத்தின் சின்னமாக சித்தரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயலை பகிடிவதை என்று சொல்லவே முடியாது. அது பாலி…

  20. யாழ் பல்கலைக்கழக காவாலிகள் மாணவிகள் மீது காம வெறி!! தற்கொலைக்கு முயன்ற மாணவி!! யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளனர். குறித்த மாணவர்கள் க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு சேரவுள்ள மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களை வாங்கி மிகக் கேவலமான முறையில் உரையாடி வருகின்றனர். இரண்டாம் இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள இணைப்பை அழுத்தி வாசியுங்கள்…. https://vampan.net/?p=12584 இவர்களின் தொல்லை தாங்காது மாணவி ஒருவர் பயத்தின் காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த …

  21. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் அவருடைய குழுவினரும் வட மாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸூடன் கலந்துரையாடியுள்ளனர். இன்று நண்பகல் ஆளுனர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது வடக்கில் மேம்படுத்தப்படவேண்டிய ஏற்றுமதித்துறை, சுற்றுலாத்துறை, விருந்தோம்பல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான கற்கைநெறிகள். தாதியர்களுக்கான சர்வதேச தரத்திலான கற்கைநெறி, என்பன தொடர்பில் பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டன. அடுத்த 5 வருடத்திற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆர்வத்தை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆவலுடன் வெளிப்படுத்தினார். குறிப்பிட்ட துறைகளில் முன்னெடுக்கக்கூடிய திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து சாத்தியப்படக் கூடியவற்றை விரைந்து செ…

    • 0 replies
    • 377 views
  22. பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்கள், மீண்டும் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. பகிடிவதை குறித்து ஆராய்வதற்காக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நியமித்த குழு இதற்கான நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளது. இந்த குழு தமது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான மாணவர்கள், பகிடிவதை காரணமாக தமது பல்கலைக்கழக கல்வியை இடையிலேயே நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையிலேயே குறித்த மாணவர்கள் அனைவரும் மீண்டும் தங்களது கல்வியை தொடருவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/sri…

    • 0 replies
    • 440 views
  23. -எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி - தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணிக்குப் பின்புறமாக உள்ள காணியில் வசித்து வரும் மக்களை, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் துணையுடன் இராணுவத்தினர், இன்று (10) வௌியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இதனால், அப்பகுதி மக்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவத்தைக் கேள்வியுற்று ஸ்தலத்துக்கு வருகைந்த கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா, அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார். இதன்போது கருத்துரைத்த அப்பகுதி மக்கள், இந்தக் காணியில், தாங்கள் 1996ஆம் ஆண்டில் குடியேறி வாழ்ந்து வந்த போது, மாவீரர் துயிலுமில்ல பாதுகாப்பு காரணங்களுக்காக, தாம் அப்பகுதியில் இருந்து தற்காலிகமாக வௌியேறிதாகத் தெரி…

  24. -சுப்பிரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன், நடராசா கிருஸ்ணகுமார் கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில், புதையல் தோண்ட முற்பட்ட இராணுவ உயரதிகாரி உட்பட்ட 21 பேரை, விசேட அதிரடிப்படையினர், இன்று (09) கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்படவர்களிடம் இருந்து புதையல் தோண்டுவதற்கான பூஜை பொருள்கள், ஸ்கானர் இயந்திரம் உள்ளிட்ட பல பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைதுசெய்யப்படவர்களில் 5 இராணுவ அதிகாரிகளும் 5 இராணுவ வீரர்களும், 13 சிங்களவர்களும் 3 தமிழர்களும் உள்ளடங்குகின்றனரென, தர்மபுரம் பொலிஸார் கூறினர். http://www.tamilmirror.lk/வன்னி/இராணுவ-அதிகாரிகள்-உட்பட-21-பேர்-கைது/72-245178

    • 0 replies
    • 343 views
  25. நல்ல அரசியல் தலைமைத்துவமே நாட்டுக்குத் தேவை.! “சிங்களவரோ, தமிழரோ, முஸ்லிமோ எவராயிருந்தாலும் பாகுபாடு காட்டாத நல்ல அரசியல் தலைவனே நாட்டுக்குத் தேவை” என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் போக்கு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்களின் மனப்பாங்குகளும் அதன் மூலமாக அவர்களது செயற்பாடுகளுமே நாட்டை பாகுபாட்டின் மூலம் சீரழித்துள்ளதென சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த அரசியல் தலைவர்களின் வழிநடத்தல்களை புறந்தள்ளிவிட்டு, எதிர்கால இளம் அரசியல் தலைவர்கள் இனவாதம், மதவாதம், மொழி பேதம் கடந்து நாட்டை ஒருமைப்பாட்டின் தளமாகக் கட்டியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மதிப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.