Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம் – இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்துவதாக பிரசாரம் செய்து கடைகளில் விற்பனையாகும் மருந்துகளை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அரசாங்க ஆயுர்வேத வைத்தியர் சங்கத்தின் வைத்தியர் டெனிஸ்டர் எல்.பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வைரஸ் என்பது விஞ்ஞான துறை மற்றும் மருத்துவ துறைக்கு எப்போதுமே பாரிய சவாலான ஒரு விடயமாகும். எனினும் கொரோனாவை கட்டுப்படுத்துவதாக இலங்கையில் மருந்துகள் விற்பனையாகின்றன. கொரோனா போன்ற வைரஸை நுண்ணுயிர் கொல்லி மாத்திரைக…

  2. முல்லைத்தீவில்.. குடும்பஸ்தர் சுட்டுக்கொலை முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாங்குளம் பாலைப்பாணி பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள குளமொன்றுக்கு அருகிலிருந்து இன்று (வியாழக்கிழமை) அதிகாலை குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட குரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கும் பொலிஸார், உள்நாட்டு துப்பாக்கி மூலம் குறித்த நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். கிளிநொச்சி உதயநகர் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான ஜெயா என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்…

  3. "சிங்கள மொழி கி.பி. 6ம் 7ம் நூற்றாண்டுகளில் தான் வழங்கு மொழியாகப் பரிணமித்தது. அதற்கு முன்னர் சிங்களவர் என்று கூறப்படும் சிங்களமொழி பேசுபவர்கள் இந்த உலகத்திலேயே எங்கேயும் இருந்திருக்க முடியாது. ஏனென்றால் சிங்களவர் என்று நாம் அடையாளம் காணும் மக்கள் மொழிவாரியாகவே அவ்வாறு அடையாளப்படுத்தப்படுகின்றார்கள்" இவ்வாறு முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வாரம் ஒரு கேள்வி பதில் அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கேள்வி:- அத்துரலிய இரத்ன தேரர் நீங்கள் இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் கூறியுள்ளார். அது பற்றிய உங்கள் கருத்து எ…

  4. கடந்த ஆண்டு யாழ். டான் தொலைக்காட்சி, அந்த ஆண்டுக்கான டான் விருதை ஆறு திருமுருகனுக்கு வழங்கிய போது அந்த விருது வழங்கும் வைபவத்தில் எனக்கருகில் இருந்த ஒரு மூத்த சிவில் அதிகாரி ஒரு கருத்தைக் கேட்டார். “இந்த விருது ஆறு திருமுருகனுக்கு வழங்கப்படுகிறது. அவரை ஒரு சமயச் சொற்பொழிவாளராகத்தான் தமிழ் சமூகம் அதிகம் அறிந்து வைத்திருக்கிறது. ஆனால் அதற்கும் அப்பால் அவர் முதியோர் பராமரிப்பு, அனாதை சிறார்கள் பராமரிப்பு போன்ற துறைகளில் தமிழில் முன் உதாரணம் மிக்க பல செயல்களைச் செய்திருக்கிறார். இவற்றுக்கும் அப்பால் அவர் ஒரு காரியத்தையும் செய்திருக்கிறார். நாவற்குழியில் அவர் கட்டியிருக்கும் திருவாசக அரண்மனை தான் அது. அந்த அரண்மனையை வெறுமனே ஒரு மதம் சார் மண்டபமாக நாங்கள…

  5. விடுதலைப்புலிகளின் தலைவர் போன்று மீண்டும் போர்தொடுக்க முடியாது! Kalaimathy மொழியை அடிப்படையாக கொண்டு மோதல்களை உருவாக்குவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்க்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க, தேசிய ரீதியான தனித்துவங்களில் கை வைக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மேற்கொண்டது போன்று யுத்தம் செய்ய கூடிய நிலைமை நாட்டில் தற்போது இல்லை எ…

  6. ‘எதிர் அபிப்பிராயங்களை செவிமடுக்க தயார்’ எனது அரசாங்கம் எப்பொழுதும் எதிர் அபிப்பிராயங்களை பொறுமையுடன் செவிமடுக்கத் தயாராக உள்ளது. எனத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊடகங்களுக்கு இன்று முழுமையான சுதந்திரம் இருக்கின்றது. எந்த ஒருவரும் சுதந்திரமாக கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமையை நாங்கள் வழங்கியுள்ளோம் என்றார். சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற 72ஆவது சுதந்திர தின பிரதான வைபவத்தில் கலந்துகொண்டு நாட்டுமக்களுக்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கை ஒற்றையாட்சியுடைய அரசாக…

    • 5 replies
    • 890 views
  7. 2600 வருடங்களுக்கு முன்னரே கொரோனா வைரஸ் தொடர்பில் புத்த பெருமான் கூறிவிட்டார் என கலபொட அத்தே ஞானசார குறிப்பிட்டார். மத நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில், அன்னதானம் பெற சென்ற பிக்கு ஒருவருக்கு வித்தியாசமான உணவு தானமாக வழங்கப்பட்டிருந்ததை அவதானித்த புத்த பெருமான் அதனை உண்ணுவதை தடை செய்தார். குறித்த உணவு பாம்பு கறி என கூறியே புத்த பெருமான் அதனை தடை செய்தார். குறித்த உணவை உற்கொண்டால் ஒருவகை காய்ச்சல் வரும் என அவர் அன்றே கூறிவிட்டார். பாம்பு குதிரை வௌவால் பன்றி உள்ளிட்ட 10 வகையான மாமிசங்களை புத்த பெருமான் தடை செய்துள்ளார் https://www.madawalaenews.com/2020/02/2600.html

    • 1 reply
    • 738 views
  8. உடற்தகுதி பரிசோதனைக்கு சென்ற மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் - இளஞ்செழியன் காட்டம்..! முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான அரச வைத்தியசாலையில் உடற்தகுதி பரிசோதனைக்காக சென்ற பாடசாலை மாணவிகள் மீது உயர் பதவியில் உள்ள வைத்தியர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட விடயம் அம்பலமாகியுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான பீற்றர் இளஞ்செழியன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், கடந்த மாதம் 10ம் திகதி மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசலை ஒன்றிலிருந்து மாணவர்கள் உடற்தகுதி சோதனைக்கு சென்றுள்ளனர். இதன்போது மாவட்டத்தின் பொறுப்புவாய்ந்த வைத்தியசாலை ஒன்றில் பொறுப்புவாய்ந்த பதவில் உள்ள வைத்தியர் ஒருவர் குறித்த மாணவிகள…

  9. (இராஜதுரை  ஹஷான்) ;பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெறும் நோக்கில் அரசாங்கம் பொருளாதார ரீதியில் தற்போது முன்னெடுத்துள்ள தீர்மானங்கள் முற்றிலும் தவறானதாகும். இந்நிலைமை தொடர்ந்தால் அரசாங்கம் அடிப்படை செலவுகள் அனைத்தையும் குறைத்துக் கொள்ள நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் இன்று இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெறும் நோக்கில் பொருளாதாரம் ரீதியில் அரசாங்கம் எடுத்த தீர்மானங்களினால் இன்று நுகர்வோர், வியாபாரிகள் மற்றும் நடுத்தர மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளார்கள். ச…

    • 0 replies
    • 311 views
  10. 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி முறிகள் விநியோகம்! 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி முறிகள் விநியோகம் இன்று(புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று காலை 11 மணி வரை பிணை முறிகளை சமர்ப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் 7ஆம் திகதி அதற்கான கொடுப்பனவுகளை செலுத்த வேண்டுமெனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. http://athavannews.com/30000-மில்லியன்-ரூபாய்-பெறுமத/

  11. யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸிற்கான சிகிச்சைப் பிரிவு ஆரம்பம் யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸிற்கான சிகிச்சைப் பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கொனோரா வைரஸ் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் து. சத்தியமூர்த்தி தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் மத்தியில் எழுந்துள்ள பீதி தொடர்பாக இன்று (5) யாழ். போதனா வைத்தியசாலையில், வைத்திய நிபுணர்கள் மத்தியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கொரோனா வைரஸிற்கான சிகிச்சைப் பிரிவு யாழ். போதான வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், வைரஸ் இருக்குமோ என்ற சந்தேகத்திற்க…

  12. விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் குடியேறுவதற்கு ஆர்வம் காட்டவில்லையெனக் குற்றஞ்சாட்டிய யாழ்ப்பாணம் மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய, எனினும் மேலதிக காணிகளை விடுவிக்குமாறு கோருகின்றனரெனவும் அதிருப்தி வௌியிட்டார். சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில், வறியக்கோட்டுக்குட்பட்ட 100 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு, பலாலி பாதுகாப்புக் கட்டளைத் தலைமையகத்தில், இன்று (02) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/விடுவிக்கப்பட்ட-காணிகளில்-மக்கள்-குடியேறுவதற்கு-ஆர்வம்-காட்டவில்லை/71-244893

    • 6 replies
    • 784 views
  13. .counter{ position: absolute; top: 25px; right: 25px; font-size: 50px; z-index: 200; text-decoration: none; } COPE மற்றும் COPA உறுப்பினர்கள் நியமனம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு மற்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுக்களுக்கான (கோப்) உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 24 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழு, 119 (1) நிலையியற் கட்டளைக்கு அமைய அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு 16 உறுப்பினர்களை நியமித்தது. இவ்வாறு …

    • 0 replies
    • 366 views
  14. ’ஆயுதங்களை கையளிக்குமாறு இராணுவம் எச்சரிக்கை’ அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்புக் காலத்தில் இராணவத்திலிருந்து விலகிச் சென்றவர்கள் ஆயுதங்களை மீளக் கையளிக்க முடியுமெனத் தெரிவித்த இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க, ஆயுதங்களை கையளிக்காதோர் கைதுசெய்யப்படுவர் எனவும் எச்சரிக்கை விடுத்தார். கொழும்பிலுள்ள இராணுவ ஊடக மய்யத்தில், இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், இம்மாதம் 5 ஆம் திகதி முதல் 12 திகதி வரையான பொது மன்னிப்புக் …

    • 0 replies
    • 497 views
  15. கொரோனா சந்தேகம் ; பதுளை வைத்தியசாலையில் யுவதி அனுமதி -பாலித ஆரியவன்ஸ பதுளையில் கொரோனா வைரஸ் தொற்று என்று சந்தேகிக்கப்படும் அறிகுறிகளுடன் யுவதியொருவர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவின் யுன்ஹாய் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் குறித்த யுவதி சில தினங்களுக்கு முன்பே இலங்கையை வந்தடைந்துள்ளார் என எமது செய்தியாளர் தெரிவித்தார். மொனாராகலையைச் சேர்ந்த இவர், பதுளை வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/மலையகம்/கரன-சநதகம-பத…

    • 0 replies
    • 498 views
  16. துறைமுகங்களின் ஊடாக கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை கொழும்பு துறைமுகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து துறைமுகங்களிலிருந்தும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெற்றிகரமான திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.எம்.ஆனல்ட் தெரிவிக்கையில், அவுஸ்திரேலியாவில் இருந்து பயணத்தை ஆரம்பித்த நிலையில், தாய்லாந்தில் இருந்து வந்த கப்பல் ஒன்று நேற்று (04) சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தனிமைப்படுத்தல் சுகாதார ஊழியர்களால் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் தொடர்பில் பாரியளவிலான முன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். …

    • 0 replies
    • 437 views
  17. சீனாவின் மூன்று பிரதேசங்களுக்கான விமான சேவைகள் குறைப்பு கொழும்பில் இருந்து சீனாவின் மூன்று பிரதேசங்களுக்கான விமான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பயணிகளின் பயணங்கள் குறைவடைந்துள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=125394

    • 0 replies
    • 308 views
  18. பூஜித் ஜயசுந்தரவுக்கும் பிணை கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தனக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்து முன்வைக்கப்பட்ட சீராய்வு மனு மீதான விசாரணையின் போது, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, கொழும்பு மேல் நீதிமன்றத்தால், இன்று முற்பகல் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருவரும் விளக்கமற…

    • 0 replies
    • 225 views
  19. மஹிந்த அரசு தமிழர்களை காணாமல் ஆக்கியதற்கு விமல் வீரவன்ச சாட்சி- செல்வம் எம்.பி. by : Litharsan மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தமிழர்கள் வகை தொகையின்றி காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதற்கு விமல் வீரவன்சவே சாட்சியென வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அண்மையில் காணாமல் போனவர்களை மண்ணுக்குள் தோண்டிப் பார்க்குமாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “தமிழர்களின் ஆறாத வடுவாக உள்ள காணாமால் ஆக்கப்பட்டோர் விடயத்திற்கு தீர்வு காணாமல், தொடர்ந்துவரும் அரசாங்கங்கள் ஏமாற்றி வருகின்றன. இந்ந…

    • 0 replies
    • 272 views
  20. மத்ரஸாக்களை பதிவு செய்யும் நடவடிக்கைக்குப் பொறுப்பாக இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருப்பது முஸ்லிம் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடாகும். மத்ரஸா பதிவு நடவடிக்கைகள் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் ஊடாகவே மேற்கொள்ளவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். நாட்டில உள்ள குர்ஆன் மத்ரஸாக்கனை பதிவுசெய்யும் நடவடிக்கைக்கு பொறுப்பாக ராணுவ அதிகாரி ஒருவரை நியமித்திருப்பது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குர்ஆன் மத்ரஸாக்கள், அரபுக் கல்லூரிகளை மீளப் பதிவு செய்து முழுமையான மறுசீரமைப்பொன்றை மேற்கொள்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப…

  21. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் பேரவைக்கு 14 உறுப்பினர்கள் நியமமனம் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு வெளிவாரியாக 16 உறுப்பினர்கள் நியமிக்கப்படவேண்டிய நிலையில் இம்முறை 14 உறுப்பினர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகம் வன்னி பல்கலைக்கழகம் என்று உருவாக்கப்படவுள்ள நிலையில் அந்த வளாகத்தின் மூன்று உள்வாரி உறுப்பினர்கள் நீங்கலாக, உள்வாரி உறுப்பினர்கள் 13 பேர் என்ற அடிப்படையில் பேரவைக்கு வெளிவாரியாக 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வாழ்நாள் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர் எஸ்.மோகனதாஸ், உதவிக் கல்விப் பணிப்பாளர் பஞ்சநாதன் சுதர்சன், கலாநிதி ஆறு. திருமுருகன், வெளிநாட்டு தூதரக மூன்றாம் நிலைச் செயலர் விதுர்சன் வின்சன்ற் ராஜாரா…

  22. இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கான பொது மன்னிப்புக் காலம் அறிவிப்பு! இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கான பொது மன்னிப்புக் காலம் இன்று(புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகின்றது. ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த பொது மன்னிப்புக் காலம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இராணுவத்தை விட்டு தப்பியோடியவர்களுக்கு, இன்று முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் மீள இணைவதற்கும், சட்டரீதியாக விலகிச் செல்வதற்கும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவ்வாறு இராணுவத்தில் இணைய வருபவர்கள் தேசிய அடையாள அட்டை, சார…

  23. தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் விசனம் by : Dhackshala தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை தமிழர்களை புறக்கணிக்கும் நடவடிக்கையாகும் என இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு, வரலாற்று ரீதியாக சிங்களம் மாத்திரம் போதும் என்ற கொள்கை எமது நாட்டை எவ்வாறு அழித்திருந்தது என்பதை கடந்த காலத்தில் உணர்ந்திருந்தும் அந்த தவறை மீண்டும் செய்து விடக்கூடாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்படுவதை எதிர்த்து இன்று (செவ்வாய்க்கிழமை) பொரளை சுற்றுவட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதத்தை இசைக்கும் வகையில் இலங்கை ம…

    • 8 replies
    • 1.3k views
  24. கோட்டா அழைப்பு விடுத்தும் ஏன் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை – காரணத்தை வெளியிட்டார் சம்பந்தன்! by : Jeyachandran Vithushan தமிழர்களையும், தமிழ் மொழியையும் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை நாம் ஆதரிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் தாம் கலந்துகொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் 72ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைக் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார் இருப்பினும் நாம் கலந்துகொள்ளவில்…

    • 7 replies
    • 1.9k views
  25. பல்கலைக்கழகத்தில் பறந்த கறுப்பு கொடிகள் அகற்றப்பட்டன -எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன் யாழ். பல்கலைக்கழக வாயிலில் கட்டப்பட்டிருந்த கறுப்பு கொடிகள் மற்றும் பதாகைகள் என்பன பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களால் அகற்றப்பட்டுள்ளன. இலங்கையின் 72ஆவது சுதந்திர தினம் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், சுதந்திர தினத்தினை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரயிருந்தனர். அத்துடன் இன்றைய தினம் போராட்டங்களையும் நடத்தினர். இந்நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் இன்றைய தினம…

    • 1 reply
    • 341 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.