ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
தமிழ்மக்கள் கற்றுக்கொண்ட பாடங்களுக்கு அமைய இனியாவது சிந்திக்க வேண்டும் என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (22) விடுத்துள்ள அறிக்கையில், “நடந்து முடிந்த ஜனாதிபதித்தேர்தல், தமிழ்மக்களுக்கு ஒரு படிப்பினையைத் தந்துள்ளது. 30வருடகால யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள், இறுதியுத்தம் நடந்த நேரத்தில் நடந்தேறிய அவலங்கள், தொடர்ந்து யுத்தம் நடந்து முடிந்து 10வருடங்ளுக்கு மேலாகியும் எமது மக்களின் அபிலாசைகள், எதிர்பார்ப்புகள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் போன்றவற்றில் நாம் கண்ட பலாபலன்கள் என்ன? ஏன் எதுவும் முறைப்படி நடக்கவில்லை! இனியாவது சிந்திப்போமா? “எமது மக்களின் நியாயமான கோரிக்…
-
- 2 replies
- 1k views
-
-
#sponsoredTexta79a97b399b44f0644434446d51c12f2-wrap { width: 728px; position: relative; display: inline-block; max-width: 100%; } #sponsoredTexta79a97b399b44f0644434446d51c12f2 { padding-left: 0; position: absolute; top: 0; right: 0; height: 18px; border-width: 1px 1px 1px 0; background: #f8eded; border-radius: 0 0 0 0; z-index: 2; } #ad_tag_placeholder-sponsoredTexta79a97b399b44f0644434446d51c12f2 { z-index: 1; position: relative; } #sponsoredTexta79a97b399b44f0644434446d51c12f2:hover { padding-left: 10px; border-radius: 0 0 0 10px; border-width: 1px; } #sponsoredTexta79a97b399b44f0644434446d51c12f2:hover .text-sponsore…
-
- 2 replies
- 776 views
-
-
’சஜித்துக்கு ரணில் இடமளிக்க வேண்டும்’ - இரா.சம்பந்தன் பொன்ஆனந்தம் “சஜித் பிரமேதஸ என்பவர் நாட்டில் தெரிவான இளம் தலைவர். அவர் மக்களின் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஒருவர். எனவே முன்னாள் பிரமதர் ரணில் விக்கிரமசிங்க, சஜித்துக்கு வழிவிட்டு, அவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு இடமளிக்க வேண்டும் என்றுக் கேட்டுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரமான இரா.சம்பந்தன், அதேவே, ஜனநாயக மரபாகும் என்றும் வலியுறுத்தினார். எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, தற்போதைய அரசாங்கத்தின் நிலைவரம் குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர், நாட்டில் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்கள் த…
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
-க. அகரன் “தலை முழுகுற அளவுக்கு நிலைமைகள் மாறும்” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வொன்று, இன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இப்பொழுது தேர்தல் முடிந்திருக்கிறது. இந்த நாட்டிலே இரண்டு சமூகங்கள் வேறு வேறு நிலைப்பாட்டை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒன்று பெரும்பான்மை இனத்தை சார்ந்த ஒருவருக்கு தமிழ் சமூகம் தேசிய இனம் வாக்களித்தது. “அதே நேரத்திலே பெரும்பான்மை இனத்தை சார்ந்த ஒருவருக்கு சிங்கள தேசம் வாக்களித்தது. நாங்கள…
-
- 0 replies
- 569 views
-
-
ஏப்ரல் 21 தாக்குதல்: மூன்று விடயங்களை முன்னெடுக்க ஜனாதிபதி பேராயரிடம் உறுதி கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு சுயாதீன குழு ஒன்றை நியமித்து அதன் விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் உறுதியளித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (21) கொழும்பு பேராயர் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேராயர் ஜனாதிபதியை கேட்டுக…
-
- 0 replies
- 287 views
-
-
புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் 6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முன்பாக அவர்கள் இன்று (வியாழக்கிழமை) பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி 6 மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் விபரம், மேல் மாகாணம் – டொக்டர் சீதா அரபேபொல மத்திய மாகாணம் – லலித் யு கமகே ஊவா மாகாணம் – ராஜா கொல்லூரே தென் மாகாணம் – டொக்டர் வில்லி கமகே வடமேல் மாகாண – ஏ.ஜே.எம் முஸம்மில் சப்ரகமுவ மாகாணம் – டிகிரி கொப்பேகடுவ 6 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளபோதிலும் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்படவி…
-
- 12 replies
- 1.2k views
-
-
வறுமை நிலையிலுள்ள திறமையானவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் – ஜனாதிபதி அதிரடி! In இலங்கை November 22, 2019 8:23 am GMT 0 Comments 1459 by : Benitlas முக்கிய நியமனங்களின் போது திறமையானவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்கள் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, ’13 ஆவது அரசியல் யாப்பிற்கு இணங்க வரையறுக்கப்பட்ட அமைச்சரவை எண்ணிக்கைக்கு அமைவ…
-
- 0 replies
- 344 views
- 1 follower
-
-
பொதுத் தேர்தலிலும் மொட்டுவுடன், கை இணைகிறது… November 22, 2019 எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (21) இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்லில் பெற்ற முன்னேற்றம் மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அரசாங்கத்தை கொண்டு நடத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதிக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை நாடாளுமன்ற…
-
- 1 reply
- 434 views
- 1 follower
-
-
கோட்டாபயவை விமர்சித்ததாக சர்வதேச செய்தி நிறுவனத்துக்கு எதிர்ப்பு – கொழும்பில் ஆர்ப்பாட்டம் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவை விமர்சித்தமை குறித்து சர்வதேச செய்தி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம், இன்று (வியாழக்கிழமை) கொழும்பு-7, பௌத்தாலோக மாவத்தையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக நடைபெற்றது. இதன்போது பிரித்தானிய தூதரகத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்போது, சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவரை ‘தமிழ் இன ஒழிப்புக்கு காரணமான இராணுவத் தலைவர்’ என விபரித்தமைக்கு நடவடிக்கை எடுக்கக் கோ…
-
- 0 replies
- 627 views
-
-
ஜனாதிபதியை சந்தித்தார் சீன தூதுவர்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இலங்கைக்கான சீன தூதுவர் H.E. Cheng Xueyuan இற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, சுமூகமான முறையில் ஜனாதிபதியுடன் சீன பிரதிநிதிகள் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி ஹியூ வெய் மற்றும் அரசியல்துறை பிரதானி லோ ச்சோங் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். http://athavannews.com/ஜனாதிபதியை-சந்தித்தார்-ச/
-
- 0 replies
- 233 views
-
-
சமஷ்டி கோரிக்கைக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர் : சரத் வீரசேகர Published by R. Kalaichelvan on 2019-11-21 15:48:33 (செ.தேன்மொழி) நாட்டு மக்கள் சமஷ்டி கோரிக்கைக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஒருமித்த நாட்டையே தாம் விரும்புவதாக மக்கள் தமது வாக்குகளின் மூலம் நிரூபித்துள்ளனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைஸ் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். அத்தோடு தாய்நாட்டை இழக்க வேண்டி ஏற்பட்ட தருணத்திலேயே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதனை காப்பாற்றியுள்ளார் என்றும் கூறியுள்ளார். மேல்மாகாண அழகியல் நிலையத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, தாய்நாட்டை பாதுகாப்பதற்காக…
-
- 1 reply
- 377 views
-
-
யட்டியாந்தொட்டை கனேபொல தோட்ட மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தின் உண்மையை தெரிந்துக் கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு விஜயம் செய்துள்ளது. ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கேகாலை மாவட்டம் யட்டியாந்தொட்டைகனேபொல தோட்டம் மேற்பிரிவு லயன் குடியிருப்பினுள் நுழைந்த சிலர் தோட்ட மக்கள் மீது (18) தாக்குதல் மேற்கொண்டனர். இந்நிலையில் குறித்த சம்பவத்தின் உண்மையை தெரிந்துக் கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு நேரடி விஜயம் ஒன்னினை இன்று (21) மேற்க் கொண்டு மக்களிடம் நிலமையை ஆராய்ந்து அறிக்கை ஒன்றினை பெற்றுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு யட்டியாந்தோட்டையில் உள்ள தமிழர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். கேகாலை, யட்டியாந்தோட்டை கனேபொல தோட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை மக்களாகிய இந்திய வம்சாவழியை சேர்ந்த மலையக மக்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு அவர்களின் வீடுகளில் இருந்த பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளதோடு மிகந்த வேதனையும் அடைந்துள்ளனர். மதுபோதையினால் இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையே இதற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். தற்போது குறித்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப் பகு…
-
- 17 replies
- 1.2k views
-
-
டீ.ஏ.ராஜபக்ஷ வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஜனாதிபதி? டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன. http://athavannews.com/டீ-ஏ-ராஜபக்ஷ-வழக்கிலிருந/
-
- 8 replies
- 848 views
-
-
(செ.தேன்மொழி) நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஊழல் மோசடிகள் இன்றி நாட்டை முன்னேற்றுவார் என்றும் கூறியுள்ளார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் இதுவரையிலும் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிகளை விட இவர் மிகவும் மாறுபட்ட பண்புகளை கொண்டவராக காணப்படுகின்றார். வழம…
-
- 2 replies
- 946 views
-
-
இலங்கையின் மிக அனுபவம் மிக்க, முன்னணி குற்றங்கள் தொடர்பிலான மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளரான தற்போதைய சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர அந்த பதவியில் இருந்து நீக்கி, தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நீண்டகாலமாக சி.ஐ.டி.யின் குற்றப் புலனாய்வாளராக கடமையாற்றி வரும் ஷானி அபேசேகர, சி.ஐ.டி. பொறுப்பதிகாரியாக, உதவி பொலிஸ் அத்தியட்சராக, பொலிஸ் அத்தியட்சராக, பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றியிருந்த நிலையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக தரமுர்த்தப்பட்ட பின்னர் கடந்த 2017 ஆம் அண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி சி.ஐ.டி.யின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தமையு…
-
- 3 replies
- 897 views
-
-
ரணில் மீது குற்றஞ்சுமத்த முடியாது - ஹிருணிகா பிரேமசந்திர Published by J Anojan on 2019-11-21 16:48:32 (நா.தனுஜா) ரணில் விக்கிரமசிங்க மீது நான் குற்றஞ்சுமத்த மாட்டேன். ஏனெனில் அவர் சிறந்ததை செய்யவேண்டும் என்று கருதினாலும், அவருடன் இருப்பவர்கள் அதற்கு வாய்ப்பளிக்காமல் சுயநல நோக்கில் செயற்படுகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் ஹருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். அத்துடன் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கும் தீர்மானத்தை ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட போதும், அவருடன் இருந்த சிலர் அதனை விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பு வொக்ஷோல் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் …
-
- 2 replies
- 714 views
-
-
நா.தனுஜா) இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் பெருமளவிற்கு அமைதியானதாகவும், நம்பகத்தன்மை மிகுந்ததாகவும் இருந்த அதேவேளை இலங்கை சமூகத்தில் ஒன்றிணைவும், சகல தரப்பினரையும் அரவணைக்கும் போக்கும் இல்லாமை விசனத்துக்குரியதாக இருக்கின்றது என்று ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்கு வந்திருந்த பொதுநலவாய கண்காணிப்பாளர் குழுவின் தலைவர் புரொஸ்பர் பாணி தெரிவித்திருக்கிறார். கானா நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சரான பாணி தலைமையிலான கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தி, தங்களது பூர்வாங்க அறிக்கையை வெளியிட்டனர்…
-
- 1 reply
- 441 views
-
-
(ஆர்.யசி) எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை பாராளுமன்றத்தில் சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது. இது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தீர்க்கப்பட வேண்டிய உட்கட்சி விவகாரம், இதனை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பேச அவசியமில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ள கட்சியில் பாராளுமன்றக் குழுத் தலைவரே எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளப்படுவார் எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் இன்று காலை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது. அடுத்த பாராளுமன்ற அமர்வுகளை கூட்டும் காலம், அடுத்ததாக ஆளும் மற்றும் எதிர் கட்சிகளின் ஆசன ஒதுக்கீடுகள் குறித்து…
-
- 1 reply
- 605 views
-
-
இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த எரிபொருள் விலைச்சூத்திரத்தை இரத்துச்செய்ய நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுரைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் எரிபொருட்களில் விலை மாற்றம் இனிமேல் முன்னெடுக்கப்பட மாட்டாது என தெரிவிப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/எரபரள-வலசசததரம-இரதத/175-241316
-
- 0 replies
- 452 views
-
-
ரணில் பதவி விலகியதும் இடைக்கால பிரதமராக பதவியேற்கிறார் மஹிந்த? பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக கொண்ட இடைக்கால அரசாங்கம் பதவியேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கமைய இந்த அரசாங்கம் இன்று (புதன்கிழமை) மாலை அல்லது நாளை காலை பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, கம்மன்பில, மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, நிமால் சிறிபாலடி சில்வா உள்ளிட்டவர்கள் அமைச்சு பதவியை ஏற்கவுள்ளனரென்றும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக நீடித்த இழுபறியின் பின்னர், பிரதமர் பதவியை துறக்க ரணில் விக்கிரமசிங்க நேற்று முடிவு செய்தார். நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்து தன…
-
- 20 replies
- 1.3k views
-
-
அரசியல் பழிவாங்கல், கடத்தல், தொந்தரவுகள் ஏற்படும் என பீதி அடைய வேண்டாம்… November 21, 2019 நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் முன்னரிலும் பார்க்க எதிர்வரும் நாட்களில் மிகவும் எச்சரிக்கையாகவும் அவதானத்துடனும் செயல்படுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்கிரமரட்னவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதுதொடர்பாரபாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு: அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால் எந்தவொரு அரசியல் பழிவாங்கல், கடத்தல் அல்லது தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என மக்கள் மத்தியில் எந்தவிதமான தேவையற்ற…
-
- 3 replies
- 620 views
-
-
சிங்களஅரசு தான் மாறியிருக்கிறது சிங்கள அரசாங்கம் மாறவில்லை. எனவே தெற்கிலிருந்து நீதியான தீர்வு வரும் என்று நம்ப முடியாத நிலையில் சர்வதேசத்திடமிருந்தே தீர்வினை பெறவேண்டிய நிலையில் இருக்கிறோம் என வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1005 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்தனர். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர், தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், ஜனநாயக ரீதியிலே புதிய ஜனாதிபதியாக கோத்தாபய தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நாமும் ஜனநாயக முறையிலேயே சுதந்திரமானதும், பாதுகாப்பானதுமான தீர்வுக்காக தெருவில் இருந்து தொடர்ந்து போராட…
-
- 8 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலை இம்முறை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முன்வைத்து பிரச்சாரம் செய்திருந்தார்கள். ஆனால் யாழ் மாவட்டத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்ததைவிட 0.22 வீதம் அதிகமாக இம்முறைத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள். கடந்த(2015) தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 66.28 வீதமானவர்கள் வாக்களித்திருந்தார்கள். ஆனால், தேர்தல் பகிஸ்கரிப்பு பிரச்சாரம் த.தே.மக்கள் முன்னணியினரால் பலமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், இம்முறை 66.5 வீதம் மக்கள் யாழ் மாவட்டத்தில் வாக்களித்துள்ளார்கள். த.தே.ம.முன்னணியினரின் தேர்தல் புறக்கணிப்பு கோரிக்கையை யாழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்…
-
- 10 replies
- 1.8k views
- 1 follower
-
-
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்ற வழக்கிலிருந்து விடுதலை 5 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionகோட்டாபய ராஜபக்ஷ (கோப்புப்படம்) பாரிய நிதி மோசடி தொடர்பில் தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணைகளிலிருந்து இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விடுவிக்க மேல் மாகாண மூவரடங்கிய விசேட நீதிமன்றம் இன்று (வியாழக்கி…
-
- 1 reply
- 467 views
- 1 follower
-