ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலுக்கு உள்ளான இரும்பக உரிமையாளர் 3 வாரங்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார். எனினும் சம்பவம் இடம்பெற்று 3 வாரங்களுக்கு மேலாகியும் கோப்பாய் பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (வயது -47) என்பவரே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் செம்ரெம்பர் 6ஆம் திகதி மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. அன…
-
- 21 replies
- 1.4k views
-
-
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக .முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். முள்ளியவளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2 மணியளவில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். சற்று நேரத்தில் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. உயிரை மாய்ப்பதற்கு முன்பாக தாயாருக்கு கடிதமொன்றை எழுதி வைத்துள்ளார். சிறு வயது முதல் தந்தை இன்றி தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து முல்லைதீவு பொலிஸா…
-
- 0 replies
- 249 views
-
-
தமிழ், முஸ்லிம் மக்கள் சஜித்திற்கு வாக்களிக்க வேண்டும் : விஜயகலா (நா.தனுஜா) யுத்தம் முடிவடைந்த பின்னரும் அரசாங்கத்திடம் மண்டியிட வேண்டிய நிலையிலிருந்த தமிழ், முஸ்லிம் சமூகம் நலமுடனும் கௌரவத்துடனும் வாழத்தகுந்த சூழலை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்தது. இந்நிலையில் இம்முறை தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் அனைத்தும் சஜித் பிரேமதாஸவிற்கே வழங்கப்படும் என்பதுடன், எமது வெற்றியும் உறுதியாகியிருக்கின்றது. எனவே வடக்கு, கிழக்கு மற்றம் மலையக தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி காலை 8 மணிக்கு முன்னரே வாக்குச்சாவடிகளுக்குச் சென்று தமது வாக்கை சஜித் பிரேமதாஸவிற்கு வழங்க வேண்ட…
-
- 1 reply
- 602 views
-
-
சிவாஜியை களமிறக்கிய பசிலின் திட்டம்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவே வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்சவை எதிர்த்து கடுமையான பிரசாரத்தை மேற்கொள்ளும் பொறுப்பை, பசில் ராஜபக்ச, சிவாஜிலிங்கத்திற்கு வழங்கியுள்ளதாகவும் சிவாஜியின் இந்த பிரசாரத்தினால், சிங்கள மக்களை தூண்டி அந்த சாதகத்தை கோத்தாபாயவுக்கு பெற்றுக்கொள்வதே இதன் நோக்கம் எனவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது. அத்துடன் சிவாஜிலிங்கம் 50 ஆயிர…
-
- 1 reply
- 323 views
-
-
பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கான பிணை ரத்து கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. பிணை உத்தரவு ரத்து செய்யப்பட்டமையினால் இவர்களை கைது செய்து, விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். சட்டமா அதிபர் தாக்கல் செய்த மீளாய்வு மனு தொடர்பான விசாரணையின் பின்னர் அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்தார்.(அ) http://www.dailyceylon.com/190576/
-
- 0 replies
- 348 views
-
-
கொலை அச்சுறுத்தல் – சிஐடியில் முறைப்பாடு Oct 09, 2019 | 2:20by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் கோத்தாபய ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த சிவில் செயற்பாட்டாளர்களான காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர ஆகியோர் தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று குற்ற விசாரணைப் பிரிவில் இவர்கள் இருவரும் தமக்கு கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தனர். சமூக ஊடகங்கள் வழியாக தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும், தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்படுவதா…
-
- 0 replies
- 1k views
-
-
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஒட்டகம் சின்னம் தேர்தல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முஸ்லிம்கள் தேசிய கட்சிகள் மீது நம்பிக்கை இழந்துள்ள நிலையில் இம்முறை தேர்தலில் ஹிஸ்புல்லாஹ்வுக்கு முஸ்லிம்களின் ஆதரவு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. https://www.madawalaenews.com/2019/10/blog-post_76.html
-
- 15 replies
- 1.8k views
-
-
விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் தொப்பியுடன் இளைஞர் கைது! வவுனியாவில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் புலிசின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா புதியபேருந்து நிலையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கடமையில் நின்றிருந்த வவுனியா பிராந்திய போதை தடுப்பு பொலிஸார் அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இளைஞரிடம் சோதனைகளை மேற்கொண்டனர். இதன்போது அவரிடமிருந்து விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பி மற்றும் சீருடையொன்றையும் (ரீசேட்) மீட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த சம்பவத்தில் 25 வயதுடைய யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவரே …
-
- 0 replies
- 374 views
-
-
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு, எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதியுடன் விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நிறைவடையவுள்ள நிலையில், இன்றுவரை 4 பேர் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருக்கின்றனர். இவர்களில் இருவர் புலம்பெயர் தமிழ்ப் பேராசிரியர்கள் ஆவர். ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த பேராசிரியர் கே. நிரஞ்சன, ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் சாம். தியாகலிங்கம் ஆகியோரே வெளிநாடுகளில் இருந்தவாறு யாழ். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருக்கின்றனர். இவர்களோடு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சேவையாற்றும் பேராசிரியர்கள் கலாநிதி எஸ். சிறி சற்குணராஜா,…
-
- 7 replies
- 1.5k views
-
-
இரட்டை குடியுரிமை: கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த 2 பேருக்கு கொலை மிரட்டல் கோத்தபாய ராஜபக்சேவின் இரட்டை குடியுரிமைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர்களான காமினி வியங்கொட, சந்த்ரகுப்த தெனுவர ஆகியோருக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாச, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் கோத்தபாய ராஜபக்சே உள்ளிட்ட 35 பேர் போட்டியிடுகின்றனர். முன்னதாக கோத்தபாய சட்டவிரோதமாக இலங்கை குடியுரிமை பெற்றிருக்கிறார்; அவரது அமெரிக்கா குடியுரிமை ஆவணங்களை மறைத்து மோசடி செய்தார் என ஒரு வழக்கு தொடரப்பட்டது. காமினி வியங்கொட, சந்த்ரகு…
-
- 0 replies
- 872 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனை மற்றும் கோரிக்கைக்கு அமைய, அனுராதபுரம் ' சந்த ஹிரு சேய' நினைவுத் தூபியில் வைப்பதற்காக தங்கத்தினாலான சமாதி நிலை புத்தர் சிலையை அமைக்க, யாழ். மாதகல் கடலில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகை தங்கத்தில் 8 கிலோவை கடற்படைக்கு வழங்கியதக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விஷேட விசாரணைகளில் மேலும் பல விடயங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. இந்த 8 கிலோ தங்கத்தை பயன்படுத்தி ஒரு புத்தர் சிலையும், இதற்கு மேலதிகமாக இலங்கை வங்கி வழங்கியுள்ளதாக கூறப்படும் மூன்றரை கிலோ தங்கத்தின் ஊடாக தங்க போதியொன்றும் அமைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நிதிக் குற்றப் புலனயவுப் ப…
-
- 1 reply
- 608 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குகிறார் தமிழ் வேட்பாளர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, தேர்தல் திணைக்களத்தில் அவர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன், கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். மேலும் டெலோ அமைப்பில், அவர் வகித்த அனைத்து பதவிகளையும் இதனால் சிவாஜிலிங்கம் இராஜினாமா செய்துள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் போட்டியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ஜனாதிபதித்-தேர்தலில்-களம/
-
- 39 replies
- 3.3k views
-
-
(நா.தனுஜா) ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் கண்டிக்கு விஜயம் மேற்கொண்டு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார். இன்று காலை 8 மணியளவில் கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாச, அங்கு இடம்பெற்ற பௌத்தமத அனுஷ்டானங்களில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாவிகாரைகளுக்குச் சென்று மல்வத்துபீட, அஸ்கிரியபீட மகாநாயக்க தேரர்களிடம் ஆசிபெற்றுக்கொண்டார். அத்தோடு ராமஞ்ஞ மற்றும் அமரபுர பீடங்களின் மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து சஜித் பிரேமதாச ஆசிபெற்றார். மேலும் மீரா…
-
- 2 replies
- 425 views
-
-
நீராவியடி விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை ஏன் மீறினோம்? – பொலிஸார் விளக்கம் இன முரண்பாட்டை தடுப்பதற்காகவே நீதிமன்றத் தீர்பை கவனத்தில் கொள்ளவில்லை என முல்லைத்தீவு பொலிஸார் மனித உரிமை ஆணைக்குழு விசாரணையில் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணி பகுதியில் நீதிமன்றத்தின் கட்டளையை மீறி பௌத்த பிக்குவின் சடலத்தை எரியூட்டியமை மற்றும் பொது மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அடாவடி தொடர்பாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்தமாதம் 25 ஆம் திகதி முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. பிள்ளையார் ஆலய நிர்வாகிகளும், தமிழர் மரபுரிமை பேரவையினரும் இணைந்து குறித்த முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தனர். குறித்…
-
- 2 replies
- 456 views
-
-
பிரபாகரனாலேயே தமிழர்களின் பெருமையை உலகம் கண்டது – பாரதிராஜா தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனாலேயே தமிழர்களின் பெருமை உலக அளவில் போற்றப்பட்டதாக தென்னிந்தியாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா தெரிவித்தார். பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் நோக்கில் இலங்கை வந்துள்ள அவர், மட்டக்களப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார். மேலும் கூறிய அவர், “பெரும் கலைஞர்கள், அறிஞர்கள் எல்லாம் தமிழ் நாட்டில் பிறந்து தமிழைப் பற்றி சொன்னார்கள். அகநானூறு, புறநானூறு எல்லாம் கூறினார்கள். அப்போது கூட தமிழர்கள் உலக அளவில் கவனிக்கப்படவில்லை. என்றைக்கு பிரபாகரன் தலையெடுத்து நின்றானோ அன்றுதான் தமிழர்கள் பெருமை கொண்டனர். …
-
- 1 reply
- 479 views
-
-
கிளியின் கழுத்தைத் தவிர மற்றெல்லாம் தெரிகிறது அகண்ட பாரதத்திலிருந்து பாகிஸ்தானைப் பிரித்தெடுத்து அதனைத் தனிநாடாக்கிய பெருமை ஜின்னாவையே சாரும். மகாத்மாகாந்தியுடன் இணக்கப்பாட்டை செய்து கொண்டு பாகிஸ்தானைத் தனி நாடாக்கி தனது இலக்கை ஜின்னா அடைந்து கொண்டார். இத்தனைக்கும் ஜின்னா கடுமையான இருதய நோயாளியாக இருந்தார். எனினும் தனது கடுமையான இருதய நோய் பற்றி அவர் வெளியில் எதுவும் கூறவில்லை. இதற்குக் காரணம் தனக்கு இருதய வியாதி இருப்பதை அறிந்தால் பாகிஸ்தானைப் பிரிப் பதைக் காலம் கடத்துவார்கள். தன் மரணத்துக்குப் பின்னர் பாகிஸ்தான் என்ற தனிநாட்டுக்கு இடமில்லாமல் போகும். ஆகையால், தான் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக ஜின்னா காட்டிக் கொண்டார்…
-
- 1 reply
- 1.5k views
-
-
ரத்ன தேரர் - ஹிஸ்புல்லா ஒரே நோக்கத்தின் இருவேறு முனைகள் : துஷார இந்துநில் Published by R. Kalaichelvan on 2019-10-08 15:09:42 (எம்.மனோசித்ரா) சிங்கள பௌத்த வாக்குகளை பிளவடையச் செய்யும் வகையில் செயற்படும் அத்துரலியே ரத்ன தேரரும், முஸ்லிம் வாக்குகளை பிளவடையச் செய்யும் வகையில் செயற்படும் ஹிஸ்புல்லாவும் ஒரே நோக்கத்தின் கீழ் வெளிவேறாகச் செயற்படுகின்றனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் அமரசேன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், அத்துரலியே ரத்ன தேரர் கோதாபயவிற்கு ஆதரவளிப்பதற்காக ஐ…
-
- 1 reply
- 368 views
-
-
எமது ஆட்சிக்காலத்திலும் வீடுகளுக்கு வெள்ளை வேன் வந்தது -பிரதமர் Published by J Anojan on 2019-10-08 14:20:30 (நா.தனுஜா) எமது ஆட்சிக்காலத்திலும் உங்களுடைய வீட்டிற்கு வெள்ளை வான் வந்தது. ஆனால் அதன் இருபக்கத்திலும் 'சுவசரிய' என்று எழுதப்பட்டிருக்கும். நாட்டின் சுகாதாரத்துறையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். ஓய்வூதியக் கொடுப்பனவு போன்ற மேலும் பல விடயங்களுக்கு அதிகளவு நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு எமது பொருளாதாரம் மேலும் வளர்ச்சியும், உறுதியும் அடைய வேண்டும். நாட்டின் பொருளாதாரம் ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாறுவதுடன், பொருளாதார வளர்ச்சி வேகம் 4.5 வீத…
-
- 0 replies
- 427 views
-
-
ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சபாநாயகர் விசேட வேண்டுகோள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சூழல் மீதான தங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வழி, பொலிதீன், பிளாஸ்டிக், பட்டாசுகள் மற்றும் பாரிய பதாகைகளை தவிர்த்து சூழல் நேய கொள்கையொன்றை கடைபிடிப்பதன் மூலம் முன்னுதாரணமாக திகழ்வதாகும் என அவர் தெரிவித்துள்ளார். சபாநாயகரின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தி பதிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ) 2019-10-08 Editor 02 …
-
- 0 replies
- 258 views
-
-
உத்தரவை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – கன்னியா வழக்கில் இளஞ்செழியன் உத்தரவு திருகோணமலை – கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் புதிய கட்டுமானங்களை அமைப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கன்னியா வெந்நீர் ஊற்று பகுதிக்கு செல்வோருக்கு மாத்திரம் அனுமதி சீட்டுக்களை விநியோகிப்பதற்கு தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு அனுமதி அழிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் சார்பில் கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி தாக்கல் செய்யப்…
-
- 1 reply
- 361 views
-
-
அனுரவின் சொந்த ஊரில் இன்று முதலாவது பிரசாரக் கூட்டம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான ஜாதிக ஜன பலவேகய கூட்டணியின் வேட்புமனுத் தாக்கலின் பின்னர் நடைபெறும் முதலாவது பிரசாரக் கூட்டம் தம்புத்தேகமவில் இன்று (8) இடம்பெறவுள்ளதாக ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். எமது நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற கருப்பொருளின் கீழ் இக்கூட்டணியின் தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. அக்கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திஸாநாயக்கவின் சொந்த ஊர் தம்புத்தேகம என்பது குறிப்பிடத்தக்கது. (மு) http://www.dailyceylon.com/190482/
-
- 0 replies
- 250 views
-
-
சுவரொட்டிகளை ஒட்டவேண்டாம் என தடுத்த யாழ். மாநகர உறுப்பினருக்கு மிரட்டல் – நள்ளிரவில் சம்பவம் தேர்தல் விதிமுறைகளை மீறி தனது வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என தடுத்த யாழ்.மாநகர சபை உறுப்பினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவின் ஆதரவாளர்களே இவ்வாறு மிரட்டி நள்ளிரவில் வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்டிச் சென்றுள்ளதாக யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் த.ரஜீவின் ஆதரவாளர்களே இவ்வாறு அடாவடியில் ஈடுபட்டதாகவும் அவர்கள் வெள்ளை நிற ஹயஸ் ரக வாகனத்தில் வந்தே சுவரொட்டிகளை ஒட்டி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் …
-
- 0 replies
- 649 views
-
-
வரலாற்றில் முதல் முறையாக ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடையில்! ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஒரே மேடையில் நாட்டு மக்களுக்கு தமது கொள்கைகளை விளக்கவுள்ளனர். பெப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இந்த கூட்டம் இன்று (சனிக்கிழமை) மாலை ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் பிரதான வேட்பாளர்கள் மூவரும் இங்கு உரையாற்றுவதாக பெப்ரல் அமைப்புக்கு அவர்கள் வாக்குறுதியளித்துள்ளனர். இதுதொடர்பாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கருத்து வெளியிடுகையில், “நாட்டின் சிறந்த ஜனாதிபதியை தெரிவுசெய்ய மக்களுக்கு ச…
-
- 5 replies
- 906 views
-
-
(ஆர்.யசி) ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினூடாக தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதில் பொதுஜன பெரமுனவினர் கடும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ இருவருமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரனுடன் தனித்தனியே பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்துள்னர். இந்நிலையில் மஹிந்த, கோத்தபாய , பசில் ராஜபக் ஷவினர் வெகு விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேசுவதற்கும் திட்டமிட்டுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுடன் நேற்று முன்தினம் தொலைபே…
-
- 14 replies
- 786 views
- 1 follower
-
-
(நா.தனுஜா) ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் சஜித் பிரேமதாசவிற்கும் தனக்குமிடையில் கொள்கை ரீதியில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பினும், அவருக்கு மதிப்பளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழுவில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த கோத்தாய ராஜபக்ஷ, ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாழ்த்துத் தெரிவிக்கும் புகைப்படத்தை அவருடைய உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருப்பதுடன், அதன் கீழ் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார். 'இன்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாத…
-
- 1 reply
- 328 views
-