ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143242 topics in this forum
-
ஈ.பி.டி.பி உறுப்பினர்களை சந்தித்த டக்ளஸ் வவுனியா மாவட்டத்தில் செயற்பட்டு வரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுடன் அக்கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவாநந்தா இன்று (02.09) கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விடுதி மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள், தமது கட்சியினால் முன்னெடுக்கப்படவேண்டிய விடயங்கள், எதிர்வரும் தேர்தலில் செயற்படுவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் கட்சி உறுப்பிர்களுக்கிடையிலான கருத்துப்பகிர்வுகளும் இடம்பெற்றிருந்தது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, வவுனியா மாவட்ட அமைப்பாளர் திலீபன், கட்சியின் பிரமுகர்கள், ஈ…
-
- 6 replies
- 1.2k views
-
-
வல்வெட்டித்துறையில் ‘ஆழிக்குமரன்’ ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் திறந்து வைப்பு வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘ஆழிக்குமரன்’ ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நீச்சல் தடாகத்தினை இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைத்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளார்கள் 2014 ஆம் ஆண்டு நிதி அமைச்சின் நிதி திட்டத்தின் கீ…
-
- 15 replies
- 1.6k views
- 1 follower
-
-
(இராஜதுரை ஹஷான்) சிறுவர் துஷ்பிரயோகம், போதைப்பொருள் பாவனையற்ற தேசம் நிச்சயம் உருவாக்கப்படும். உலக சந்தையில் அதிக கேள்வியில் உள்ள தொழில்வாய்ப்புக்களை அரசாங்கம் இளம் தலைமுறையினர் மத்தியில் அறிமுகப்படுத்தவில்லை. இதுவே இன்றைய தொழிலில்லா பிரச்சினைக்கு பிரதான காரணம் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன் எமது அரசாங்கத்தில் அனைத்து அடிப்படை பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும். நாட்டு மக்கள் சுயமாக பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதற்கு தேவையான செயற்திட்டங்கள் குறுகிய காலத்திற்குள் செயற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் தாதியர் சங்கத்தின் தேசிய மாநாடு கொழும்பில் உள்ள கண்காட்சி க…
-
- 2 replies
- 468 views
-
-
பலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா? தற்போதைய அரசாங்கம் தனது பதவிக்காலத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. பலாலி விமான நிலையம் பற்றிய செய்திகள் இப்போது ஊடகங்களில் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. இங்கிருந்து தென்னிந்திய நகரங்களுக்கு மாத்திரமன்றி, மத்திய கிழக்கு, அவுஸ்ரேலியா, சீனாவுக்கும் பயணங்களை மேற்கொள்ள முடியும் என்றும் செய்திகளில் கூறப்படுகிறது. வடக்கிலுள்ள மக்களின் நலன்கருதி, இந்த அபிவிருத்திப் பணி மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. பலாலி விமான நிலையத்தின் ஊடாக சர்வதேச விமான சேவைகள் இடம்பெறுவது, வடக்கில் உள்ள மக்கள…
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
படத்தின் கடந்த 35 வருடங்களாக இலங்கையுடன் மிகவும் நெருங்கிய உறவை பேணி வந்த அமெரிக்க பிரஜையான லுவிஸ் எலன், இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவராக இருக்கிறார். மாணிக்கக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள லுவிஸ் எலன், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இலங்கைக்கு வருகை தருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இலங்கையில் லுவிஸ் எலனுக்கு பல நெருங்கிய நண்பர்கள் இருக்கின்றனர். தனது வாழ்க்கை முன்னேற்றம் அடைவதற்காக இலங்கை வழங்கிய பாரிய ஒத்துழைப்புக்கு, நன்றிக் கடன் செலுத்தும் வகையில், லுவிஸ் எலன், இரத்தினபுரி வைத்தியசாலையின் சிறுவர் பிரிவிற்கான கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். இலங்கையிலுள்ள அவரது நண்பர்களின…
-
- 0 replies
- 518 views
-
-
சஜித்தை வேட்பாளராக அறிவிக்காவிட்டால் பதவி துறக்கத் தயாராகும் அமைச்சர்கள்! ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை, இந்த மாத இறுதிக்குள் அறிவிக்காவிட்டால், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைவரும் கூட்டாக பதவி விலக தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹெஷா விதானகே தெரிவித்துள்ளார். ஐ.தே.க.யில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஹெஷா விதானகே மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை அறிவிக்கும் விடயத்தை, கட்சி தொடர்ந்து பிற்போட்டு வருகின்றது. ஆகையால் சஜித்தின் ஆதரவாளர்களான அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் …
-
- 2 replies
- 637 views
-
-
-எஸ்.நிதர்ஷன் இந்து, பௌத்த, கலாசார பேராவையால், அச்சுவேலியில், இன்று (02), 2ஆம் மொழி கற்கை நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தினதேரர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, கற்கை நிலையத்தைத் திறந்து வைத்தார். இந்துக் கலாசாரப் பேரவையின் வடமாகாண தலைமைக் காரியாலயமாக இந்த நிலையம் விளங்கும் என்பதுடன், எதிர்வரும் காலத்தில் வடமாகாணத்தில் உள்ள ஏனைய மாவடங்களிலும், இந்த நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிலையத்தில் சிங்களம், ஆங்கில மொழிக் கற்கைநெறிகளை, மாணவர்கள் இலவசமாகக் கற்கமுடியும். இதுவரை காலமும் குறித்த நில…
-
- 0 replies
- 468 views
-
-
நேரடியாக தமிழ் மக்களுடைனேயே பேச்சு – ஜே.வி.பி. தமிழ அரசியல் கட்சிகளுடன் பேரம்பேசி தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஆகவே தமிழ அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விடவும் தமிழ் மக்களுடன் நேராடியாக பேசி இணக்கம் காணவே தாம் விரும்புவதாகவும் கூறினார். தேர்தலில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அதன் பிரகாரம் விரைவாக வடக்கு கிழக்கில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கபடும் என கூறிய அவர், தேசிய அரசியல் கொள்கையின் பிரகாரம் இந்த வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். …
-
- 2 replies
- 445 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் (30) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய ஜனாதிபதி மைத்திரி யாழ்ப்பாணத்தில் நடந்த பொது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் தமிழ் மக்களை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஏமாற்றிவிட்டது எனப் பகி ரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் தமிழ் மக்கள் அதீத கவனம் செலுத்துவர் என்பது உண்மை. அதேநேரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தமிழ் மக்களின் விடயத்தில் கரு சனை கொண்டிருக்கவில்லை என்ற மனக் கிலேசம் இருக்கவே செய்கிறது. அரசியல்கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கவில்லை. அதிலும் குறிப்பாக ஆனந்தசுதாகரன் என்ற தமிழ் அரசியல் கைதியின் பிள்ளைகள் தங்கள் தாயை…
-
- 4 replies
- 847 views
-
-
யாழ். புத்தகத் திருவிழா அடுத்த வருடம் பிரமாண்டமாக நடத்த முடிவு – ஆளுநர் யாழ். புத்தகத்திருவிழா அடுத்த ஆண்டும் இதேபோன்று மிகப் பிரமாண்டமாய் நடத்தப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று வடக்கின் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற யாழ். புத்தகத் திருவிழாவின் இறுதி நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வட மாகாண ஆளுநரின் எண்ணக்கருவிற்கு அமைய, இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019’ கடந்த 27ஆம் திகதி ஆரம்பமானது. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற யாழ். புத்தகத் திருவிழாவின் இறு…
-
- 0 replies
- 398 views
-
-
கால நேர சூழ்நிலைகளை கவனத்திற் கொண்டு புத்தி சாதூரியமாக செயற்படுங்கள்… September 2, 2019 முஸ்லிம் பெண்களுக்கு ஜம்இய்யத்துல் உலமாவின் வேண்டுகோள்! முகத்திரை அணிந்து பொது இடங்களுக்குச் செல்வதால் ஏற்படும் அசெளகரியங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கால நேர சூழ்நிலைகளை கவனத்திற் கொண்டு புத்தி சாதூரியமாகவும், அவதானத்தோடும் நடந்து கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அனைத்து முஸ்லிம் பெண்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையில் செயலாளர் அஷ்ஷைக் எச்.உமர்தீன் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டில் நாடைபெற்ற துன்பியல் நிகழ்வைத் தொடர்ந்து நாட்டில் அசாதார நிலை காணப்பட்டதுடன், அவசரகால சட்டமும் அமுல் செய்யப்பட்டது…
-
- 0 replies
- 454 views
-
-
தனிக் குடும்ப தீர்மானத்தை விட ஐ.தே.க. தீர்மானம் சிறந்தது- சம்பிக்க ஒரு தனிப்பட்ட குடும்பம் தேனீர் அருந்திக் கொண்டு நாட்டின் கொள்கையை தீர்மானிப்பதை விடவும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் புத்திஜீவிகள் பலரும் இருந்து தீர்மானம் ஒன்றுக்கு வருவது சிறந்தது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அக்கட்சிக்குள் நெருக்கடி நிலைமை இல்லை. கடந்த 31 ஆம் திகதி வேட்பாளர் குறித்து அறிவிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கூறியிருந்தார். இருப்பினும், அதனை அறிவிப்பதற்கு இன்னும் காலம் தேவையாக உள்ளதாக அவர் பின்னர் அறிவித்துள்ளார். அடுத்த வாரத்துக்குள் வேட்பாளர் குறித்து தீர்வொன்றை அக்கட்சி முன்வைக்கும் எ…
-
- 0 replies
- 304 views
-
-
அவுஸ்ரேலிய போராட்டங்களை நிராகரிக்கும் டட்டன்- நாடு கடத்துவதில் விடாப்பிடி சிறிலங்காவுக்கு தமிழ்க் குடும்பம் ஒன்றை நாடு கடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவுஸ்ரேலியாவின் பல்வேறு நகரங்களிலும் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. நடேசலிங்கம் – பிரியா தம்பதிகள் மற்றும் அவர்களின் 4 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளை நாடுகடத்துவதில் அவுஸ்ரேலிய அரசு விடாப்பிடியாக உள்ளது. கடந்த சனிக்கிழமை தனி விமானத்தில் ஏற்றப்பட்ட இந்தக் குடும்பத்தினரை, சிறிலங்காவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. விமானம் புறப்பட்ட பின்னர் நீதிபதி ஒருவர் தொலைபேசி மூலம் பிறப்பித்த உத்தரவினால் அந்த விமானம் மீண்டும் டார்வினுக்குத் திருப்பப்பட்டது. இதையடுத்து, அந…
-
- 0 replies
- 367 views
-
-
கோத்தாவுடன் மோதுகிறார் ரணில்? தேசிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளராக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே போட்டியிடக் கூடும் என, கட்சியின் மூத்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கட்சித் தலைவர் போட்டியிட மறுத்தால் அல்லது பரப்புரை மேற்கொள்ள முடியாமல் பலவீனமான நிலையில் இருந்தால் தவிர, கட்சியின் தலைவரே அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஐதேகவின் யாப்பில் கூறப்பட்டுள்ளது எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் மத்தியில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், ரணில் விக்ரமசிங்கவுக்கே ஆதரவு கிடைக்கும் என்றும் தனது பெயரை வெளியிட விரும்…
-
- 0 replies
- 408 views
-
-
Monday, September 2, 2019 - 6:00am அவதானமாக நடக்குமாறு உலமா சபை கோரிக்கை சட்ட மாஅதிபரின் ஆலோசனையை நாடுகிறது பொலிஸ் முகத்திரை(புர்கா,நிகாப்)அணிந்துபொது இடங்களுக்குச் செல்வதால் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்த்து கொள்ளுமாறும் காலநேர சூழ்நிலைகளைக் கவனத்தில் கொண்டு புத்திசாதுரியமாகவும் அவதானத்தோடும் நடந்துகொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து முகத்தை மறைக்கும் நிகாப் மற்றும் புர்க்கா என்பவற்றுக்கு அரசாங்கம் தடைவிதித்திருந்தது. அவசர கால சட்டம் நீடிக்கப்படாத நிலையில் முகத்திரை தடை நீக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந் நிலையில் முகத்திரை அணிந்து காலிமுகத்திடலுக்கு சென்ற நான்கு பெண…
-
- 0 replies
- 464 views
-
-
களனி ரஜமஹா விகாரையின் அறங்காவலர் சபையின் தலைவர் பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த விகாரையின் அறங்காவலர் சபையின் தலைவர் பதவியிலிருந்து ரணிலை நீக்குவதற்கு களனி ரஜமஹா விகாரையின் பெரும்பான்மையினரின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/63840 14 . 08. 2019 - வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோரை ஏமாற்றிய ரணில் (பிரதமர் - சிறிலங்கா ) Ranil should resign from UNP leadership: Upul Jayasuriya Former Bar Association of Sri Lanka (BASL) President Upul Jayasuriya on behalf of United Lawyers Association urged Prime Minister Ranil …
-
- 0 replies
- 281 views
-
-
தற்போது சம்பந்தன் ஐயாவின் காலத்தில் அவருடைய அனைத்து முயற்சிகளும் தோல்வி கண்டுள்ளன. அவருடைய விட்டுக்கொடுப்புக்களை அரசு மதிக்கவில்லை. அவருடைய இராஜதந்திர நகர்வுகள் வெற்றிபெறவில்லை. தன்னை தென்னிலங்கை தலைவர்கள் அனைவரும் ஏமாற்றிவிட்டார்கள் என்பதை அவர் உணர்ந்துள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த செவ்வியில் அவர் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு, யார் ஜனாதிபதியாக வந்தாலும் அவர்களால் நாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டே வந்திருக்கின்றோம். தமிழர்களுக்கான தேசிய விடுதலை அங்கீகாரம் ச…
-
- 0 replies
- 529 views
-
-
லண்டனில் வசிக்கும் மதன் என்னும் நபர் யாழ்ப்பாணம் வந்து காணியை பார்த்து வீட்டைக்காணவில்லை என அதிர்ச்சியடைந்து தற்கொலைக்கு முயன்ற சோக சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் நடந்த சம்பவங்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்ட மதன் என்பவரின் சகோதரன் (தம்பி) தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு அண்ணனிடம் மன்னிப்பு கேட்டதுடன், உங்களுக்கு தெரியாமல் எனது காணியில் கட்டிய வீட்டை உங்கள் பெயருக்கு மாற்றித்தருகிறேன் என கூறியுள்ளார். மேலும் எனது காணிக்கு பதிலாக வேறொரு காணியை அல்லது காணிக்கான பணத்தை தனக்கு வழங்குமாறும் தெரிவித்திருக்கின்றார். தம்பியின் திடீர் மனம் மாற்றத்தினால் மதன் மற்றும் குடும்பத்தினர் தற்போது நின்மதியடைந்துள்ளதாக தெரி…
-
- 7 replies
- 908 views
-
-
155 நாள்கள் நடைபெற்ற ஆய்வில் 325 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் கார்பன் டேட்டிங் அறிக்கையின்படி, அவை கி.பி 1499 முதல் கிபி 1719 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை என்று கணக்கிடப்பட்டது. மனித உரிமை மற்றும் ஜனநாயகத்துக்கான ஜெனிவா உச்சி மாநாடு கடந்த மார்ச் மாதம் 26 அன்று நடந்தது. அதில் கலந்துகொண்ட பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களில் தமிழகத்தைச் சேர்ந்த தடயவியல் மருத்துவர் சேவியர் செல்வ சுரேஷும் ஒருவர். 1990 முதல் 2009 வரை இலங்கைப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த மன்னார் புதைகுழிகளின் மர்மம் குறித்தான தனது ஆய்வுகள் குறித்து உச்சி மாநாட்டில் மருத்துவர் சேவியர் செல்வ சுரேஷும் பேசியிருந்தார். மன்னார் பகுதியில் 2013 டிசம்பர் 20-ம் நாள் குடிநீர்த் திட்டத்திற…
-
- 1 reply
- 769 views
-
-
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்கள் 20 பேரிடம் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். “முறைப்பாடுகளின் அடிப்படையில் சுமார் 45 பவுண் தங்க நகைகள் நேற்றைய தினம் திருடப்பட்டுள்ளன. அவற்றில் தாலிக்கொடி மூன்றும் 17 சங்கிலிகளும் அடங்குகின்றன. ஆண்கள் மூவரும் தமது தங்கச் சங்கிலியைப் பறிகொடுத்ததாக முறையிட்டுள்ளனர்” என்றும் பொலிஸார் தெரிவித்தனர். ஆலயத்துக்கு வருகை தந்த பக்தர்களிடம் வெளிவீதியில் வைத்து இந்தத் திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், தங்க நகைகளைப் பறிகொடுத்த சிலர் பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யாது சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. நல்லூர…
-
- 13 replies
- 1.5k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அநாகரிகமாக நடந்துகொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கும் இடையில் நேற்று முன்தினம் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு தொடர்பாக முல்லைத்தீவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் பேசிய சாந்தி சிறிஸ்கந்தராஜா; “காணி விடுவிப்பு தொடர்பாக கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி அழைத்ததற்கமைய பெரும் எதிர்பார்ப்புடன் அவரை சந்திக்க சென்றோம். …
-
- 2 replies
- 520 views
-
-
கொடூர பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை… September 1, 2019 பல்கலைக்கழக மாணவர்களை சித்திரவதைக்கு உள்ளாக்குவோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2018 – 2019 ஆம் கல்வி ஆண்டிற்காக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் சித்திரவதைக்கு உட்படுத்தும் அல்லது அவ்வாறான செயற்பாட்டுடன் தொடர்புபடும் மாணவர்களையும், இந்தச் செயற்பாட்டிற்கு ஒத்தாசை வழங்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் யாராக இருப்பினும் அவர்களையும் உயர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக, உயர் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம்.ரி.கே. மாயாதுன்னே தெரிவித்துள்ளார். கொடூர பகிடிவதையில் …
-
- 6 replies
- 595 views
-
-
(எம்.மனோசித்ரா) நாட்டின் தேசிய கடன் பிரச்சினையை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லப் போவதில்லை எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மாறாக 5 வருடத்திற்குள் நாட்டில் அனைத்து கடன்களையும் சரி செய்து நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவேன் என்றும் கூறினார். குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். நான் கால்வாய் புனரமைப்பவன் இல்லை. நாட்டைக்கட்டியெழுப்புவபன். அதுவே என்னுடைய இலக்கு. எனவே நாட்டைக் கட்டியெழுப்ப விரும்பும் அனைவரும் எம்முடன் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன். இனவாதத்தை தூண்டிவிட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற நாம் முயற்சிக்கவில…
-
- 0 replies
- 433 views
-
-
-எஸ்.நிதர்ஷன் ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டுமெனத் தெரிவித்த நவசமசமாஜ கடசியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, ஏனெனில் வாக்களிப்பு குறைந்து இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பாரிய கலவரம் வெடிக்குமெனவும் எச்சரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஜனாதிபதித் தேர்தலில், இன வாதம், மத வாதம், பாசிச வாதம் போன்றவற்றைக் கொண்டு வெற்றி பெற ஒவ்வொரு கட்சிகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இதனால் நாடு மிக மோசமான நெருக்கடிக்குள் செல்லப் போகிறதெனவும் கூறினார். எனவே, வடக்கு - கிழக்கு தமிழ் ம…
-
- 0 replies
- 359 views
-
-
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதியை வழங்குவதற்காக இலங்கைக்கு வெளியே பொறிமுறையை அமைக்குமாறு நான்கு புலம்பெயர் அமைப்புக்கள் சர்வதேச சமுகத்திடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. சர்வதேச காணாமலாக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் பேரவை, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், கனேடிய தமிழ் காங்கிரஸ், அமெரிக்க தமிழர் செயற்பாட்டு குழு ஆகிய நான்கு புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் 900நாட்களுக்கு அதிகமாக தமது வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கும் தாய்மார்கள் உள்ளிட்ட உறவினர்களுக்கு நாம் பூரண ஆதரவினை வழங்குகின்றோம். அத்துடன் புலம்…
-
- 0 replies
- 215 views
-