Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காலாவதியானது அவசரகாலச் சட்டம் Aug 23, 2019 | 3:03by கி.தவசீலன் in செய்திகள் சிறிலங்காவில் கடந்த ஏப்ரல் 22ஆம் நாள் தொடக்கம் நடைமுறையில் இருந்து வந்த அவசரகாலச்சட்டம் நேற்றுடன் காலாவதியாகியுள்ளது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களை அடுத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், நாடாளுமன்ற ஒப்புதலுடன், அவசரகாலச்சட்டத்தை, சிறிலங்கா அதிபர் மாதம் தோறும் நீடிப்புச் செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஜூலை 22ஆம் நாள் நீடிப்புச் செய்து வெளியிடப்பட்ட அவசரகாலச்சட்ட அரசிதழ் அறிவிப்பு நேற்றுடன் காலாவதியானது. அவசரகாலச்சட்டத்தை…

  2. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பிராந்திய கூட்டுறவு மற்றும் நட்புறவு ஆகியவற்றை மேம்படுத்துவதே இலங்கையின் விருப்பம் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஆணையர் மேஜர் ஜெனரல் ஷாஹித் அகமது ஹஸ்மத், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த 20ஆம் தேதி சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தார். இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறி…

  3. சீனா வழங்கிய ‘பராக்கிரமபாகு’ – சிறிலங்கா கடற்படையில் இணைவு Aug 23, 2019by கார்வண்ணன் in செய்திகள் சிறிலங்காவுக்கு சீனாவினால் கொடையாக வழங்கப்பட்ட P 626 என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், ஆணையிட்டு கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது. எஸ்எல்என்எஸ் பராக்கிரம என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் போர்க்கப்பலை ஆணையிட்டு இயக்கி வைக்கும் நிகழ்வு நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் இடம்பெற்றது, இந்தப் போர்க்கப்பலின் கட்டளை அதிகாரியான கப்டன் நளீந்திர ஜெயசிங்க, சிறிலங்கா அதிபரிடம் இருந்து போர்க்கப்பலுக்கான ஆணையை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர், க…

    • 0 replies
    • 403 views
  4. ஐக்கியதேசிய கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச வேட்பாளராக நிறுத்தப்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவிற்கு ஆதரவளிக்கவேண்டிய நிலையேற்படலாம் என தமிழ்தேசியகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் என ஆங்கில செய்தி இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சஜித்பிரேமதாசா ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டால் நாங்கள் ஜேவிபிக்கு ஆதரவளிக்கவேண்டிய நிலையேற்படலாம் என அவர் தெரிவித்தார் என குறிப்பிட்ட இணையம் தெரிவித்துள்ளது. ஐக்கியதேசிய கட்சியின் பிரதித்தலைவர் தமிழ்மக்கள் வடக்கில் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் குறித்து வெளிப்படையாக தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை என தமிழ்தேசியகூட்டமைப்பின் நாடாளுமன்ற உற…

    • 1 reply
    • 475 views
  5. தமிழர் வரலாற்றுச் சின்னமான மந்திரிமனையை உரிமை கொண்டாடுவதற்குயாரையும் அனுமதிக்க முடியாதெனவும் அது தமிழர்களின் வீர வரலாற்றை கொண்ட பொக்கிஷம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பாராளுமன்றில் சுட்டிக்காட்டினார். நேற்று முன்தினம் புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறுதெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் நல்லூர் பகுதியில் உள்ள தமிழர் வரலாற்று மரபுரிமைச் சின்னமான நல்லூர் மந்திரி மனையை அபகரிக்கும் நோக்கில் பெரும் பான்மை இனத்தவர் ஒருவரால் யாழ் கந்தர் மடப்பகுதியில் அமைந்துள்ள காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தை நாடியுள்ளதாக அறியக்கிடைத்தது. சட்டநாதர் சிவன் கோயிலின் பரம்பரை ஆதீன கர்த்தாக்களின் நிலப்பகுதியாக குறித்த மந்திரிமன…

    • 0 replies
    • 1k views
  6. மறவன்புலவு, தனங்கிளப்பு ஊடாக சக்தி வாய்ந்த காந்தப்புலக் கோடு-மக்களின் பெறுமதியான காணிகள் குறைந்த விலையில் வாங்க தனியார் நிறுவனம் திரைமறைவில் முயற்சி யாழ்ப்பாணம் மறவன்புலவு மற்றும் தனங்கிளப்பு ஆகிய இடங்களில் அதிசக்தி வாய்ந்த காந்தப்புலக் கோடு ஊடறுத்துச் செல்வதாகவும் இப் பிரதேசத்தில் காற்றாலை அமைப்பதாகக் கூறி குறித்த இடத்தை எதிர்காலத்தில் வெளிநாடொன்றிற்கு விற்பனை செய்வதற்கான முயற்சி திரைமறைவில் மேற்கொள்ளப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. சாவகச்சேரிப் பிரதேச செயலாளர் பிரிவுக் குட்பட்ட மறவன்புலவுப் பிரதேசத்தில் 4 காற் றாலைகள் அமைப்பதற்காக ஏறக்குறைய 12 ஏக்கர் காணி பணம் கொடுத்து கொள்வனவு செய்யப்பட்டதாக அறிய முடிகிறது. அதேபோன்று தனங்கிளப்பிலும் 4 காற்றா…

    • 0 replies
    • 351 views
  7. பளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது…. August 23, 2019 பளை வைத்திய சாலை வைத்திய அதிகாரி, வைத்தியர் எஸ். சிவரூபனுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டி பளை வைத்திய சாலை வைத்திய அதிகாரி வைத்தியர் சி.சிவரூபனை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வைத்தியரை பயங்கரவாத தடுப்பு பிரிவனர் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்நிலையில் வைத்தியருடன் தொடர்பை பேணிய குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த மூவரை நேற்றைய தினம் பயங்கரவாத தட…

    • 1 reply
    • 679 views
  8. பலாலிக்கான விமான சேவை – இந்தியாவின் ‘அலையன்ஸ் எயர்’ ஆர்வம் சிறப்புச் செய்தியாளர்Aug 23, 2019 | 5:24 by in செய்திகள் பலாலி விமான நிலையத்தில் இருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவைகளை நடத்துவதற்கு, இந்தியாவின் அலையன்ஸ் எயர் நிறுவனம், விருப்பம் வெளியிட்டுள்ளதாக, சிறிலங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ”பல இந்திய விமான நிறுவனங்கள் பலாலி விமான நிலையத்துக்கான சேவைகளை ஆரம்பிக்க ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. அதில் அலையன்ஸ் எயர் நிறுவனமும் ஒன்று” என, சிறிலங்கா சிவில் விமானசேவை அதிகார சபையின், விமான போக்குவரத்து மற்றும் பொருளாதார ஒழுங்கமைப்பு பணிப்பாளர் ரேஹான் வன்னியப்பா தெரிவித்தார். எயர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனம், இந்தியா…

  9. முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் நடிப்பது ஏன்? August 23, 2019 இந்திய கிரிக்கெட் முன்னாள் அணித்தலைவர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரின் வாழ்க்கை ஏற்கனவே திரைப்படங்களாக வந்தன. கபில்தேவ் உலக கோப்பையை வென்றதை வைத்து ‘83’ என்ற பெயரில் படம் தயாராகிறது. இதுபோல் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை கிரிக்கெட் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கையையும் படமாக எடுக்கின்றனர். இதில் முரளிதரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும் சிங்களவர்கள் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடி…

  10. ஐ.தே.கவிற்குள் பாரிய பிளவு – மஹிந்த அணி! ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது என மஹிந்த அணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘முழு நாட்டையும் முரண்பாட்டுக்குள் தள்ளிய ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்று பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. நாட்டை கட்டியெழுப்புவதாக பொய் கூறி ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம், நாட்டை அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியான நெருக்கடிக்கு உள்ளா…

  11. Published by Priyatharshan on 2019-08-23 06:39:47 இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா விடயத்தில் நம்பகமான முறைப்பாடுகள் இருக்கின்றன. நீதிமன்ற விசாரணையின் மூலமாக நல்லதொரு முடிவு வரக்கூடியதாக இருக்க வேண்டும். நீதிமன்றம் தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஆனால் அது சவேந்திர சில்வா விடயத்தில் நடக்கவில்லை என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கூறியிருக்கிறார். கொழும்பு டெய்லி மிரர் பத்திரிகைக்கு நேற்று வியாழக்கிழமை நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் தூதுவர் அலைனா, தற்சமயம் முறைப்பாடுகளே இருக்கின்றன. அவை பாரதூரமானவையா? நம்பகத்தன்மையானவையா? அல்லது இல்லையா என்பது வேறு விடயம். சவேந்திர சில்…

    • 0 replies
    • 297 views
  12. (எம்.மனோசித்ரா) வடக்கு மற்றும் கிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளது. காணி விடுவிப்புடன் தொடர்புடைய விடயதானங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சின் கீழ் உள்ளடங்குகின்றன. எனவே தான் இவ்விடயம் தொடர்பில் அவரை சந்திக்கவிருப்பதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இந்த சந்திப்பு நாளை மாலை 6 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இதில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். https://www.virakesari.lk/article/63215

    • 0 replies
    • 309 views
  13. திருக்கோணமலை நகரின் அடையாளமாகவும், உள்நாட்டு வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளை கவருகின்ற மற்றும் அழகு சேர்க்கும் வகையிலும் காணப்படும் மான்களைப் பாதுகாப்பதற்காக திருகோணமலை நகரசபையும், ரொட்றிக் கழகமும் இணைந்து மான்களுக்கு தண்ணீர் தாங்கியுடன் கூடிய கொட்டில் ஒன்று அமைக்கப்பட்டது. எனினும் மான்கள் தற்போது நகரின் பல பகுதிகளிலும் தனித்து நிற்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளதுடன். அவற்றுக்குப் போதிய பாதுகாப்பில்லை. மான்களின் குட்டிகளை அவ்விடத்திலுள்ள நாய்கள் வேட்டையாடி உண்கின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலமை நீடிக்குமாயின் திருகோணமலை நகரிலுள்ள மானினம் அருகிவிடும். எனவே இதனை பாதுகாக்கும் பொருட்டு மான்…

  14. August 22, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn மக்களுக்காக அவசர உதவிக்கு இருக்கின்ற அவசர காவற்துறை சேவை தமிழ் மக்களுக்கு பாரபட்சமாக செயல்படுகிறதா என்ற ஐயப்பாடு எழுகின்றது என அம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகளின் ஒருங்கிணைப்பாளர் வடிவேல் சசிதரன் தெரிவித்தார். நேற்று புதன்…

  15. (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) நாட்டின் பாதுகாப்பை மாத்திரம் கருத்திற்கொண்டு ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்யவேண்டும் என்றால் நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தலாம். அதன் மூலம் சிறந்த பாதுகாப்பை ஏற்படுத்தலாம் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று மக்கள் வங்கி(திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் பல ஆட்சித்தலைவர்களின் காலம் இருந்தது. ஆனால் எதிர்வரும் காலம் மக்களின், விவசாயிகளின் காலமாக ஏற்படுத்தவேண்டும். அதற்கான சந்தரப்பம் எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலின் மூலம் கிடைக்கின்றது. அதற…

    • 0 replies
    • 323 views
  16. Editorial / 2019 ஓகஸ்ட் 22 வியாழக்கிழமை, பி.ப. 01:43 -மு.தமிழ்ச்செல்வன் கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கை மீது இருந்த சர்வதேசத்தின் அழுத்தம், தற்போது இல்லையென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்தார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மை செயலாளரும் அமைதி, நல்லிணக்கத்துக்கான ஆலோசகருமான அமி ஓ பிரின், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான மு. சந்திரகுமார் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, சந்திரகுமாரின் கிளிநொச்சி அலுவலகத்தில், இன்று (22) நடைபெற்றது. இதன்போதே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொ…

    • 0 replies
    • 727 views
  17. ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம் ) மக்கள் வங்கியின் நற்பெயரை பாதுகாத்து மேலும் வலுப்படுத்தும் நோக்கிலே வங்கியின் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்கின்றோம். மாறாக மக்கள் வங்கியை விற்கப்போவதாக எதிர்க்கட்சியினர் தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று மக்கள் வங்கி(திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மக்கள் வங்கி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வங்கி நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும் திட்டத்திலே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. ஆனால் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சி பிழை…

    • 0 replies
    • 250 views
  18. புதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்? ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி வேட்பாளர் விடயம் குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது குழப்பான நிலை ஏற்பட்டுள்ளது. சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் ஐக்கிய கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், சஜித்திற்கு பதிலாக தாம் அல்லது சபாநாயகர் கரு ஜயசூரியவை களமிறக்குவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதன்காரணமாக ஐக்கிய தேசியின் கட்சியின் தலைமை மீது கடும் அதிருப்தியுள்ள சஜித் பிரேமதாஸவை புதிய பிரதமராக நியமிப்பதற்…

    • 1 reply
    • 765 views
  19. புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் 23 ஆவது இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/62932

    • 32 replies
    • 5.4k views
  20. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் கலப்பு நீதிமன்ற விசாரணைக்கான கால நீடிப்பை ஐ.நா உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதுடன் இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு சென்று போர்க்குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள அத்தனை பேரையும் உடனடியாக விசாரிக்க சர்வதேசம் களத்தில் இறங்க வேண்டும் என முன்னாள் பாராளுமனற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இராணுவத்தளபதியின் நியமனம் தொடர்பில் இன்று ஊடகங்களைச் சந்தித்து கருத்துக்களை வெளியிடும்போது இவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட முக்கிய இராணுவ அதிகாரியான சவேந்திர சில்வாவிற்கு தற்போதைய கூட்டு அரசாங்கம் இராணுவத…

    • 0 replies
    • 350 views
  21. ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க உதவுங்கள் – பிரதமர் ஜனநாயக தேசிய முன்னணிக்கான யாப்பை உடனடியாக நிறைவு செய்து கையளிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவுருத்தல் வழங்கியுள்ளார். இணக்கப்பாடு எட்டப்பட்டு ஒரு வார காலம் கடந்துள்ள நிலையிலும் கூட்டணிக்கான யாப்பை நிறைவு செய்ய முடியாதுள்ளமை கவலையளிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். எனவே உடனடியாக கூட்டணிக்கான யாப்பை நிறைவு செய்து ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கான சூழலை உருவாக்கிதாருங்கள் எனவும் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார். ஜனநாயக தேசிய முன்னணியை ஸ்தாபிப்பதற்கான யாப்பு குறித்து கலந்துரையாடுகயிலேயே பிரதமர் ரணில் …

    • 0 replies
    • 344 views
  22. (எம்.மனோசித்ரா) அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் நாளை காலை 8 மணிமுதல் 24 மணித்தியால வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடபடவுள்ளனர். சுகாதாரத்துறையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவற்றை இரு வாரங்களில் நிவர்த்தி செய்து தருமாரும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அண்மையில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் தற்போது இரண்டு வாரங்கள் கடந்திருந்தும் அரசாங்கத்தினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமையின் காரணமாகவே நாளைய தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், எனினும் அவை தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் ம…

  23. கொழும்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த படகு சேவை! கொழும்பு நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கொம்பெனித்தெரு முதல் கோட்டை வரையான பகுதியில் உள்ள வாவியில் பயணிகள் படகு சேவையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைத்தார். இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த படகு சேவையில் ஒரு மாதத்திற்கு இலவசமாக பயணிக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது. இந்த படகு சேவையின் ஊடாக குறித்த தூரத்தை 9 – 10 நிமிடங்களில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த படகு சேவை அனைத்துவித பாதுகாப்புடனும் இலங்கை கடற்படையுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவி…

  24. யாழ்ப்பாணத்தில் 5G அதிதுரித இணைய சேவைக்கான மின்காந்த அலைக்கற்றை கோபுரங்கள் நிறுவப்படுவதற்கான தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த சேவையால் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் குறித்த அச்சமும் மிகவேகமாக பரவி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதி, வலிகாமம் தெற்கு பகுதியில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் ஒன்று உயரம் குறைந்த தொலைபேசி கம்பங்களை நாட்டி வருகிறது. இது 5G தொழில்நுட்ப சேவையை ஆரம்பிக்கும் நோக்கிலேயே இந்த கம்பங்கள் நாட்டப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது. இதனால் இச்சேவைக்கான மின்காந்த அலைவரிசை மனித உயிர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச அளவில் மருத்துவர்கள்…

  25. யாழ்ப்­பா­ணம், கோண்­டா­வில் பகு­தி­யில் அமெ­ரிக்க நாட்­ட­வர் ஒரு­வ­ரி­டமிருந்து பணம் பறிக்­கப்­பட்­டுள்­ளதாக கோப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பா­ணத்­துக்கு அமெ­ரிக்க நாட்­ட­வர் ஒரு­வர் சுற்­றுப்­ப­ய­ணம் வந்­துள்­ளார். அவர் நேற்று மதி­யம் கோண்­டா­வில் பகு­தி­யில் சென்றுள்ளார். அப்­போது மோட்டார் சைக்கிளில் அவ­ரைப் பின்­தொ­டர்ந்து சென்ற இளை­ஞர்­கள் இரு­வர் அவ­ரி­டம் இருந்து 300 டொல­ரைப் பறித்­துக் கொண்டு தப்­பி­யோ­டி­யுள்ளதாக கூறப்­ப­டு­கின்­றது. அதை­ய­டுத்து அந்த அமெ­ரிக்க நாட்­ட­வர் கோப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­துள்­ளார். முறைப்­பாட்டை அடுத்­துப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.