ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
குடியுரிமையைத் துறக்கும்... இறுதி ஆவணத்தை பெற்றுவிட்டார் கோட்டாபய : உதய கம்மன்பில அமெரிக்க குடியுரிமையைத் துறக்கும் இறுதி ஆவணத்தை கோட்டாபய ராஜபக்ஷ கடந்து மே மாதமே பெற்று விட்டாரென பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உதய கம்மன்பில மேலும் கூறியுள்ளதாவது, “கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை துறப்பு தொடர்பான இறுதி ஆவணத்தை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கடந்த மே மாதமே அனுப்பி விட்டது. அந்தவகையில் எதிர்வரும் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும், அமெரிக்க குடியுரிமையைத் துறந்தவர்களின் பட்டியலில், அவரது பெய…
-
- 2 replies
- 492 views
-
-
பிரபாகரன் காலத்தில் கூட அச்சப்பட வில்லை - மஹிந்த ராஜபக்ஷ Published by J Anojan on 2019-07-26 12:26:36 (இராஜதுரை ஹஷான்) அரசியல் தலைவர்களின் அதிகார போட்டித்தன்மையினால் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது. இதன் தாக்கத்தை நாட்டு மக்களே இன்று எதிர்க் கொண்டுள்ளார்கள். மத அனுஸ்டானங்களில் ஈடுப்படவும் முக்கிய பண்டிகைகளை கொண்டாடவும் முடியாத அச்ச நிலை தற்போது காணப்படுகின்றது. பிரகாகரனின் காலத்தில் கூட நாட்டு மக்கள் இவ்வாறான நிலைமைக்கு தள்ளப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர…
-
- 2 replies
- 541 views
-
-
July 25, 2019 யாழில். சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வைரவர் ஆலயம் ஒன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டு வந்த அயலவரான முதியவர் ஒருவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள மாவிளந்தையடி ஞான வைரவர் கோவில் நேற்று புதன்கிழமை இரவு இனம் தெரியாத கும்பல் ஒன்றினால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலயத்தில் இருந்த வைரவர் சிலை உள்ளிட்ட விக்கிரங்களையும் அக்கும்பல் களவாடி சென்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில…
-
- 5 replies
- 1.2k views
-
-
July 25, 2019 குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபி இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரசவ மற்றும் பெண்ணியல் நோய் தொடர்பிலான வைத்தியராக கடமையாற்றி வந்த இவர் முறையற்ற விதத்தில் சொத்து சேகரித்தமதாக கைது செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த வழக்கு கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபரான வைத்தியரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு நீதிவான் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார். …
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கையிலுள்ள தமிழ் மக்களை சிங்கள மக்களுக்கு அடிமைகளாக மாற்றியது சிங்களத் திரைப்படங்கள் என சிங்கள தரப்பினரே இன்று குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். 1970 தொடக்கம் 1980ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் வெளியான சிங்களத் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்கள் அடிமைகளாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள அரசியல்வாதிகள் சிலர் தற்போது தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் ஊடகவியலாளர்களை நேற்றிரவு (24) நட்பு ரீதியில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். இந்த சந்திப்பின்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.…
-
- 3 replies
- 1.2k views
-
-
50 ரூபா விவகாரம்; அமைச்சர் நவீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டனில் ஆர்ப்பாட்டம் பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த சம்பத்துடன் 50 ரூபா மேலதிக கொடுப்பனவை இணைக்குமாறு வலியுறுத்தி ஹட்டனில் இன்று புதன் கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். ஹட்டன் நகரில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக பிற்பகல் 3 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள்,பொது மக்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டபலர் கலந்து கொண்டிருந்தனர். தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழுத்தத்துக்கு அமைவாக, 50 ரூபா நாளாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் இணங்கியுத…
-
- 1 reply
- 605 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியொருவர் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை சந்தித்தமை தொடர்பில் பாராளுமன்றத்திலும் வௌியிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரத்திற்கான உரிமைகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி Clément Nyaletsossi Voule நாட்டின் பிரதம நீதியரசர் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகள் சிலரை சந்திப்பதற்கு மேற்கொண்ட முயற்சி தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று (24) வாதப் பிரதிவாதம் ஏற்பட்டது. நீதிபதிகளை சந்திப்பது தொடர்பான விடயங்களைக் குறிப்பிட்டு வௌிவிவகார அமைச்சிற்கு அனுப்பப்பட்ட கடிதமொன்றை சபையில் சமர்ப்பித்து எதிர்க்கட்சியினர் நேற்று கேள்வி எழுப்பியிருந்தனர். இதனையடுத்து, சபாநாயகர…
-
- 0 replies
- 324 views
-
-
July 25, 2019 ஊரெழு அம்மன் ஆலயத்தின் மணிக்கூட்டு குளவிக் கூடு கலைந்து குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது. ஊரெழுவைச் சேர்ந்த ஐயாத்துரை அருந்தவராஜா (வயது-63) என்ற முதியவரே உயிரிழந்தார். சம்பவத்தையடுத்து ஆலயத்திலிருந்த பக்தர் இடைய குழப்ப நிலை …
-
- 0 replies
- 748 views
-
-
தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில் அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் சம்மதித்துக்கொள்ள இருந்த சந்தர்ப்பத்தை சுமந்திரனே இல்லாமலாக்கினார் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா அதற்கான பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையைில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிடார். புதிய அரசியலமைப்பு தயாரிப்பு நடவடிக்கையில் அதிகார பகிர்வு, தேர்தல் முறை திருத்தம் போன்றவற்றுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அங்கிகரித்து…
-
- 0 replies
- 501 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுதி போர் நடைபெற்ற ஆனந்தபுரம் பகுதியில் வாழ்கின்ற அனைத்து குடும்பங்களும் குடிநீரினை பணம்கொடுத்து பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 250 வரையான குடும்பங்கள் வாழ்கின்ற இந்த கிராமத்தில் மக்களின் காணிகளில் உள்ள கிணறுகளின் நீரினை குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது குறிப்பாக உவர்நீராகவும் காவிபடிந்த நீராகவும் இவை காணப்படுவதால் மக்கள் பணம் கொடுத்தே நீரினை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். ஆனந்தா என்ற நீர்விநியோக அமைப்பினால் லீற்றர் ஒரு ரூபாவிற்கு நீர்விநியோகம் செய்துவருவதாக ஆனந்தா அமைப்பின் தலைவர் ராஜா திருமேனி தெரிவித்துள்ளார். 1959 ஆம் ஆண்டு குடியேற்றத்திட்டமாக உருவாக்கப…
-
- 0 replies
- 701 views
-
-
தன்னை ஓவியமாக வரைந்த இளைஞனுக்கு அரச வேலை வழங்கிய சஜித் முல்லைத்தீவு - சப்தகன்னிமார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அறநெறிப் பாடசாலையினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாச இருவருக்கு அரச வேலை வாய்ப்பை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் . குறித்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாசவினை ஓவியமாக வரைந்து அமைச்சரிடம் கையளித்த முல்லைத்தீவு குமுளமுனை கிராமத்தை சேர்ந்த பாலகாந்தன் பிரசன்னா என்ற இளைஞனின் திறமையை பாராட்டி தேசிய வீடமைப்பு அதிகாரசபையில் வேலை வாய்ப்பை வழங்கியதோடு மேலும் குறித்த சப்த கன்னிமார் அறநெறிப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் பட்டதாரி யுவதி ஒருவருக்கும் குறித்த அரச வேலை வாய்ப்பினை வழங்க நடவடிக்கைகள…
-
- 1 reply
- 596 views
-
-
அரசியல் தீர்வு விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் மூன்று பிரிவுகளாக பிரிந்து தமிழினத்தை பந்தாடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்று வருகின்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு பொறிக்கப்பட்டது. அதற்கமைய அதற்கான நகர்வுகளையும் கூட்டமைப்பு முன்னெடுத்திருந்தது. எனினும் அ…
-
- 0 replies
- 383 views
-
-
தன்னாட்சி, தட்சார்பு, தன்னிறைவு என்ற கோட்பாடுகளுக்கு ஏற்பவே தான் செயற்பட்டு வருவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முஸ்லிம் மயமாக்கல் தொடர்பில் அத்துரலிய ரத்தன தேரர் தனக்கு கூறியவற்றை அவர் இவ்வாறு விபரித்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பலவிதமாக பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. சுமார் 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. கிழக்கு மாகாணத்தில் ஒன்பதினாயிரம் தமிழ் பெண்கள், இஸ்லாத்திற்கு ம…
-
- 9 replies
- 2k views
- 1 follower
-
-
வீதிக்கு ஊடகவியலாளரின் பெயரை சூட்ட கோரிக்கை கரவெட்.டி தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட செட்டிததுறை வீதிக்கு சிரேஷ் தமிழ் ஊடகவியலாளரான அமரர் ஐ.நடேசனின் பெயரை சூட்டுமாறு கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு 8 ஆம்மாதம் 26 ஆம் திகதி அரச வர்த்தகமாணி வெளியீட்டில் 8ம் வட்டாரமும் நெல்லியடிக் கிராம அலுவலர் பிரிவு ஜே./376 இல் ஏழாவது வீதியாக செட்டித்துறை வீதி காணப்படுகின்றது. குறித்த பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அமரர் ஐ.நடேசன் இறைவரித்திணைக்களத்தில் பணியாற்றியதுடன் நாடறிந்த தமிழ் சிரேஷ்ட ஊடகவியலாளராக பணியாற்றினார். அமரர் ஊடகவியலாளராக பணியாற்றிய நிலையில் 2014 ஆம்ஆண்டு 5 ஆம் மாதம் 31 ஆம் திகதி கிழக்கில் துப்பாக்க…
-
- 0 replies
- 459 views
-
-
கன்னியா வெந்நீரூற்று விவகாரம்: பொலிஸாரே தவறிழைத்திருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பொலிஸாரினால் தவறு ஏற்பட்டிருந்தால் அதுதொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி சம்பந்தமான அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். அத்துடன் பிரபாகரன் மேற்கொண்ட அழிவுகளை இந்த பிரச்சினையுடன் சமம்படுத்த முடியாது என எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடா மஹிந்த அமரவீர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கம்பெனிகள் திருத்தச் சட்டமூல மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் …
-
- 0 replies
- 409 views
-
-
யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாணவர்களிடையே மோதல் யாழ்ப்பணம், பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் தொழில் நுட்பபீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒன்பது பேர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள பொறியியல்பீட வளாகத்தில் தொழில் நுட்பப்பிரிவின் முதலாம் வருட மற்றும் இரண்டாம் வருட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒன்பது மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.vi…
-
- 0 replies
- 431 views
-
-
யாழ். நிதி நிறுவனத்தில் மோசடி ; பெண் உத்தியோகத்தர் விசாரணைகளில் தலையீடு செய்வதாக எப்.சி.ஐ.டி குற்றச்சாட்டு “யாழ்ப்பாணத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றால் தனிநபர் ஒருவருக்கு சுமார் 11 கோடி ரூபா முற்பணம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வழக்கில் மூன்றாவது சந்தேக நபரும் அந்த நிறுவனத்தின் உத்தியோகத்தரான பெண் விசாரணைகளில் தலையீடு செய்கின்றார். அத்துடன், அவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் அவரது கணக்கிலிருந்த பல மில்லியன் ரூபா பணம் உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன” இவ்வாறு வழக்கு விசாரணைகளை முன்னெடுக்கும் பெரும் நிதி மோசடிகள் விசாரணைப் பிரிவினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்தனர். மூன்றாவது சந…
-
- 0 replies
- 283 views
-
-
பயங்கரவாதிகளால் ஈஸ்டர் தாக்குதலைப் போன்று 40 தாக்குதல்களை நடத்தியிருக்க முடியும்! – ஷானி அபேசேகர புத்தளத்தில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் பயங்கரவாதிகளுடையவை எனும் பட்சத்தில், அவர்கள் ஈஸ்டர் தாக்குதல்களைப் போன்று 30 தொடக்கம் 40 தாக்குதல்களை நடத்தியிருக்க முடியும் என குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர தெரிவித்தார். அத்தோடு உயர்மட்ட புலனாய்வு அதிகாரிகள் தங்கள் முகங்களை பொதுமக்களிடமிருந்து மறைக்கக்கூடாது என்றும் இரகசிய கள நடவடிக்கைகளில் ஈடுபடும் புலனாய்வாளர்கள் மட்டுமே அவ்வாறு மறைத்துக்கொள்ள வேண்டிய தேவையுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) சாட்சிய…
-
- 0 replies
- 354 views
-
-
கல்முனை விவகாரத்தில் ஓகஸ்ட் 5ற்குள் பிரதமர் தீர்வு வழங்க வேண்டும் – ரவூப் கல்முனையில் தோன்றியுள்ள நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கு எந்த தரப்புக்கும் பாதிப்பில்லாத வகையில் தீர்வுகாண வேண்டிய பொறுப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அத்தோடு, ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கத்துவக் கட்சிகள் கூட்டணியில் கைச்சாத்திடும் நிகழ்வு எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவிருப்பதால், அதற்கு முன்னர் பிரதமர் நல்லதொரு முடிவை அறிவிப்பார் என நாம் நம்புகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார். சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை வழங்குவது குறித்து கட்சிப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) ரவூப் ஹக…
-
- 0 replies
- 317 views
-
-
பிள்ளையானைச் சந்தித்தார் மனோ Editorial / 2019 ஜூலை 21 ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 11:45 Comments - 0 ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுக் கடந்த மூன்று வருடங்களாகச் சிறைவாசம் அனுபவித்துவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனை, மட்டக்களப்புச் சிறைச்சாலையில் அமைச்சர் மனோ கணேசன் இன்று (21) காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அரசியல் நலன் விரும்பிகளும் நண்பர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே பிள்ளையானைச் சந்தித்ததாக அமைச்சர் மனோ கணேசன், தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, பொதுவான நடப்பு அரசியல் சம்பந்தமாகவும் கடந்த கால, எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பி…
-
- 6 replies
- 1.5k views
-
-
மனோவால் முடியுமென்றால் ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முடியவில்லை - வரதராஜப் பெருமாள் கேள்வி அரசியல் கைதிகளின் விடுதலை தெடர்பில் மனோ கணேசனால் கொடுத்திருக்கின்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமாக இருந்தால் 13 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஏன் நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றது. ஏன் அவர்கள் சென்று அந்த வாக்குறுதியை அளிக்கவில்லை. மேலும், அமைச்சரவைப் பத்திரம் போடுவது இருக்கட்டும், பிரதமர் இது தொடர்பாக என்ன கூறுகின்றார். அவருடைய சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சர் என்ன கூறுகின்றார். நீதியமைச்சர் என்ன கூறுகின்றார். அவர்கள் எவருமே இது சம்பந்தமாக வாய் திறக்கவில்லை. ஆகவே மீண்டும் தமிழ் அரசியல் கைதிகள் ஏமாற்றப்படப் போகின்றார்கள். என தமிழர் சமூக ஜனநா…
-
- 4 replies
- 734 views
-
-
இந்தியா, சீனா உள்ளிட்ட 46 நாடுகளுக்கு சுதந்திர வருகை நுழைவு விசா இந்தியா, சீனா உள்ளிட்ட 46 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சுதந்திர வருகை நுழைவு விசா வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டம் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்று இன்று (புதன்கிழமை) அமைச்சரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை, 39 நாடுகளுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. எனினும், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து குறித்த திட்டம் இடைநிறுத்தப்பட்டது. ஏற்கனவே, இந்தத் திட்டத்திற்குள் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. எனினும், தற்போது இந்தியா,…
-
- 1 reply
- 538 views
-
-
ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக, எவ்வித சாட்சிகளும் கிடைக்கவில்லை என குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தெரிவித்தார். அத்தோடு பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னர் பெறப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருப்தியடையவில்லை எனவும் அவர் கூறினார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இன்று முன்னிலையாகி சாட்சியம் வழங்கியபோதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தாக்குதலுக்கு முன்னர் உளவுத்துறை தகவல்களைப் பெற்றுக்கொண்டேன். அவ்வாறு பெறப்பட்ட அந்த தகவல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டன. தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தல…
-
- 3 replies
- 767 views
-
-
பெரும்பான்மை இனம் என்ற ஒரே காரணத்துக்காக சிங்கள ஆட்சியாளர்களும் பெளத்த பீடங்களும் பேரினவாதிகளும் தமிழ் மக்களைப்படுத்தும் பாடு கொஞ்சமல்ல. தமிழ் இனத்தை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவதற்கான நடவடிக்கைகள் நடந்தன எனும் போது இலங்கையில் தமிழ் மக்கள் படும் துன்பம் எத்தகையது என்பதை எவரும் புரிந்து கொள்வர். இந்த நீரோசை இன்னமும் முடிந்த பாடில்லை. தங்கள் சொந்த நிலத்தில் வாழ முடியாத நிலையிலேயே தமிழ் மக்கள் உள்ளனர். இதுதவிர, இப்போது பெளத்த விகாரைகளை வடக்குக் கிழக்கில் அமைக்கின்ற முயற் சியில் சிங்கள ஆட்சியாளர்களும் பெளத்த பீடங்களும் மும்முரமாக உள்ளன. அதிலும் குறிப்பாக தமிழ் மக்களின் தொன்மை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து ஆலயங்கள் அமைந்துள்ள …
-
- 1 reply
- 693 views
-
-
பௌத்த பிக்கு மீது தமிழர் சுடுநீர் ஊற்றியிருந்தால் தமிழர்கள் நிம்மதியாக இருந்திருக்க முடியுமா? - சார்ள்ஸ் நிர்மலநாதன் கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இந்துக்களின் பிரதம குருவான தென்கயிலை ஆதீனம் மீது பொலிஸார் முன்னிலையிலே காடையர்களினால் சுடுநீர் ஊற்றப்பட்டது தொடர்பில் எந்த விசாரணையும் இதுவரை இடம்பெறவில்லை. ஆனால் பௌத்த பிக்கு ஒருவர்மீது தமிழர் சுடுநீர் ஊற்றியிருந்தால் இந்த நாட்டில் தமிழர்கள் நிம்மதியாக இருந்திருக்க முடியுமா என சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் கேள்வி எழுப்பினார். அத்துடன் தமிழர்களுக்கு இந்தத் அநியாயம் செய்தாலும் கேட்பதற்கு யாரும் இல்லை என்ற இறுமாப்பிலேயே இவ்வாறு செய்கின்றனர். பிரபாகரன் இருந்திருந்தால் இவ்வாறு சுடுநீர் ஊற்றியிருப்பீர்களா?. தெ…
-
- 0 replies
- 426 views
-