ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143232 topics in this forum
-
வவுனியா, செட்டிகுளம் பகுதியிலுள்ள முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் அங்கு டொல்பின் ரக வெள்ளை வானில் வருபவர்களால் தினசரி கடத்திச் செல்லப்படுவதாக பி.பி.சி.யின் சிங்கள சேவையான சந்தேசிய செய்தி வெளியிட்டிருககின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 404 views
-
-
யாழ்ப்பாணத்தில் முன்னாள் போராளிகளுக்கு இராணுவத் தளபதியினால் உதவித் திட்டம் வழங்கிவைப்பு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அரசாங்கத்திடம் சரணடைந்து, புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட 15 முன்னாள் போராளிகள் ஆகியோருக்கு உதவித் திட்ட நிதி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் தனியார் விடுதியில், கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவினால் குறித்த உதவித் திட்ட நிதி வழங்கி வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் முயற்சியின் பயனாக தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் தியாகேந்திரனின் நிதிப் பங்களிப்பில் 15 ம…
-
- 0 replies
- 117 views
-
-
ஞானசாரரின் இனவாதப் போக்கை சாதுரியமாக கையாண்டார் மனோ – அமைச்சர் திகாம்பரம் இனவாதம் என்பது இலங்கை நாட்டுக்கு புதிதல்ல. காலத்திற்கு காலம் வெவ்வேறு வடிவங்களில் அது இடம்பெற்றே வந்துள்ளது. அண்மைய ஆண்டுகளில் அதனை முன்னெடுத்துச் செல்லும் குழுவாக கலகொட அத்தே ஞானசார தேரர் எனும் பிக்கு தலைமையிலான குழுவினர் இயங்குகின்றனர். இது தனியே அவர் தலைமையிலான குழுவினரின் வேலை மாத்திரம் கிடையாது. இதற்குப் பின்னால் ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரலும் இனவாத அரசியல்வாதிகளும் கூட இருக்கின்றார்கள். அத்தகைய அரசியல் நிகழ்ச்சி நிரல் கொண்ட ஞானசாரதேரர் தம்மைச் சந்திக்க வந்த வேளை அரசியல்வாதி என்கின்ற அடிப்படையில் சாணக்கி…
-
- 0 replies
- 363 views
-
-
வவுனியாவில் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அங்கிருந்து வெளியே கொண்டு வருவதற்காக தமிழ்க் கட்சிகளைச் சேர்ந்த துணைப் படைக் குழுவினர் 5 தொடக்கம் 7 லட்சம் ரூபாய் வரை அறவிடுகின்றனர் என கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில வார ஏடான 'சண்டே ரைம்ஸ்' தெரிவித்துள்ளது. பெரும் தொகைப் பணம் செலவிடப்பட்டு முகாம் மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என்ற தகவல் குறித்து அந்த வார ஏடு நடத்திய புலனாய்வின்போது இந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளன. முகாமில் இருந்து வெளியே கொண்டுவரப்படும் மனிதர் வவுனியாவிற்குள்ளே விடப்படுவதாக இருந்தால் அதற்கான தொகை ஒரு லட்சம் ரூபாய். குறித்த நபரை முகாமில் இருந்து வெளியே கொண்டு வந்து அவரை கொழும்பு கட்டுநாயக்கா வானூர்தி நிலையம் வரை அழ…
-
- 0 replies
- 327 views
-
-
வட மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் குறித்து அடுத்த மாதம் விவாதம் வடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் குறித்து அடுத்த மாதம் விவாதம் ஒன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 93ஆவது அமர்வில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது. இவ் விடயம் தொடர்பில் ஊடகங்களின் முன்னால் பகிரங்க விவாதம் ஒன்றை நடாத்த முன்வருமாறு எதிர்கட்சித் தலைவர் தவராசா கோரிக்கை விடுத்தார். ஆத்துடன்இதுவரையில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் எதனை செய்யவில்லை என்றும் பட்டியல் படுத்த வேண்டும் என்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையிலேயே சபையின் செயற்பாடுகள் தொடர்பான வ…
-
- 0 replies
- 156 views
-
-
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு... 10 ஆயிரம் ரூபாய் நிவாரணப் பொதி! சுகாதாரத் துறையினரின் ஆலோசனையின்பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் பொதிகளையே இவ்வாறு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு அமைய செயற்படுமாறு, பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும்,…
-
- 0 replies
- 334 views
-
-
திரு.கி.சிவாஸ்கரனை முதன்மை வேட்பாளராகக் கொண்ட சுயேட்சைக்குழு இல.8, ஜம்புக்காய் சின்னத்தில் வடமாகாணசபைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. தற்பொழுது எமதுகுழு போட்டியிலிருந்து விலக முடிவு செய்துள்ளது. வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றிபெறுவது உறுதி என்பதை அரசாங்கம் உள்ளிட்ட சகலரும் உணர்ந்துள்ளமையை மக்கள் சந்திப்பினூடாகவும், ஊடக அறிக்கைகளின் மூலமும் அறிந்துகொண்டுள்ளோம். இந்நிலையில் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கும் அரசியல் தீர்விற்கும் இடையூறாக இல்லாமல் கூட்டமைப்பின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில் நாம் தேர்தலில் இருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளோம். நடைபெறவுள்ள தேர்தல் உள்நாட்டிலும் சர்வதேசரீதியிலும் …
-
- 0 replies
- 505 views
-
-
மக்கள் நெஞ்சில் கனன்று கொண்டிருந்த பெரு நெருப்பு, காணொளி காட்சிப் பதிவு ஒன்றினுாடாக வெடித்துக் கிளம்பியுள்ளது. கால நீட்சியில், அவையாவும் மறக்கப்பட்டு விடுமென்று பேரினவாதம் எண்ணத் தலைப்படலாம். ஆனாலும் இனப்படுகொலைகள் ஏற்படுத்திய கொடூர வடுக்கள், விடுதலை உணர்வினை உயிர்ப்புடன் வாழவைக்கிறது. தேசிய நல்லிணக்கமானது, இனத்துவ அடையாளங்களையும், பூர்வீக இனமொன்றின் அரசியல் பிறப்புரிமையினையும் சரணாகதியடையச் செய்து உருவாக முடியாது. ஜனநாயகப் பூச்சுக்களால், தேசிய இனத்தின் அடியழித்தல் நிகழ்த்தப்படுவதை, கண்டும் காணாதது போல் நாடகமாடுபவர்கள், தேசியமென்பதும் அதற்கான விடுதலைப் போராட்டமென்பதும், மறுபார்வையற்ற போக்கில், ஸ்தாபிதம் உருவாக்கிய குருட்டுத்தனமென்று விளக்கமளிக்கிறார்கள். இந…
-
- 0 replies
- 544 views
-
-
தென்னிலங்கை பேரனர்த்தம் 6 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை எனக்கு அறிக்கை கிடைத்திருந்தது..! நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் சம்பந்தமாக அறிக்கைகள் எனக்கு ஆறு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை கிடைக்கின்றது. இந்த இக்கட்டான நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்க்க முடியாமையையிட்டு நான் வருந்துகின்றேன் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் நேற்று செய்த பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் அப்பதிலில் தெரிவித்துள்ளதாவது, சுகயீனமுற்…
-
- 0 replies
- 210 views
-
-
முன்னாள் புலி உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வு வழங்குவதற்கென வவுனியாவில் நடத்தப்பட்டு வரும் புனர்வாழ்வு நிலையங்கள் கிழக்கு மாகாணத்துக்கு மாற்றப்பட உள்ளனஎன்று தெரியவருகிறது. இதற்காக கிழக்கு மாகாணத்தில் சுமார் 20 புனர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றும் தெரியவருகிறது. நீதி மற்றும் சட்டமறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொடவை மேற்கோள் காட்டி மேற்படி தகவல்கள் வெளிவந்துள்ளன. கிழக்கில் அமைக்கப்பட இருக்கும் இப்புனர்வாழ்வு முகாம்களுக்கு அருகில் வயல்கள், தோட்டங்கள், தொழில்நுட்ப பயிற்சி நிலையங்கள் ஆகியனவும் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது. http://www.parantan.com/
-
- 0 replies
- 782 views
-
-
அராலி மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட தினமாகிய நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மேற்படி ஆதரவாளர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஸ் அணி கட்சியிலிருந்து வலி.மேற்கு பிரதேச சபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் அண்மையில் அந்த உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்துவிட்டு சிராஸீடன் இணைந்துகொண்டவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்தே மேற்படி உறுப்பினர்கள் தாக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கும் மேற்படி கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கும் இ…
-
- 0 replies
- 244 views
-
-
கோவிட் -19 வைரசால் பாதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ராஜா வைத்தியர் எலியந்த வைட் சிறிது நேரத்திற்கு முன்பு காலமானார். சில வாரங்களுக்கு முன்பு வைரஸால் பாதிக்கப்பட்டதால், கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைட் சிகிச்சை பெற்று வந்தார். அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட மருத்துவர் ஆவர் . மறைந்த ஒயிட், சமீபத்தில் இலங்கையில் இருந்து கோவிட் -19 ஐ ஒழிக்கும் சடங்கின் ஒரு பகுதியாக, ஆறுகளில் கலவை நிரப்பப்பட்ட பானைகளை எறிந்தார், இவரை பின்பற்றி முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரும் சடங்கின் ஒரு பகுதியாக இதைச் செய்தனர். - Dailymirror.lk
-
- 1 reply
- 394 views
-
-
மாகாண சபைக் கட்டடம் 12 ஆம் திகதி கையளிப்பு; சம்மதித்தார் வடக்கு ஆளுநர் வடக்கு மாகாண சபைக் கட்டடத்தை எதிர்வரும் 12 ஆம் திகதி தம்மிடம் கையளிப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி சம்மதித்துள்ளார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடக்கு ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறிக்கும் மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுக் காலை வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் இடம் பெற்றது. இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சந்திப்புத் தொடர்பாக "உதயனு'க்குத் தெரிவித்ததாவது: வடக்கு மாகாண சபையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடினோம். இத…
-
- 0 replies
- 414 views
-
-
6 இளைஞர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தால் 10 ஆண்டு கடூழியச்சிறைத்தண்டனை வவுனியாவில் 6 பேர் கொண்ட இளைஞர் குழுவினருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் 10 வருட கடூழியச்சிறைத்தண்டனையும் தலா 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்துமாறு தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு வவுனியா பூந்தோட்டம் பகுதிக்குச் சென்ற முச்சக்கரவண்டியினை வழிமறித்த பொலிசார் மேற்கொண்ட விசாரணையின்போது முச்சக்கரவண்டியில் பயணம் செய்த 6 இளைஞர்களை சோதனையிட்டபோது வாள்கள், கத்திகள், பொல்லுகள், கைக்குண்டு என்பனவற்றுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணைகள் இடம்பெற்றதையடுத்து பிணையில் செல்ல அனுமதிவழங்கப்பட்டது. …
-
- 0 replies
- 190 views
-
-
வடக்கில் 680 ஆரம்ப பாடசாலகளை உடன் ஆரம்பிக்க நடவடிக்கை! September 30, 2021 வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உள்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள என்று வடமாகாண ஆளுநர் திருமதி சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ் தெரிவித்தார். வடமாகாணத்தில் வெளிமாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தனியான பேருந்து சேவையை வழங்கவும் அனுமதி பெறப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், கல்வி அமைச்சுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையே இடம்பெற்ற கூட்டத்தில் 200 மாணவர்களுக்கு உள்பட்ட தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையான ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்ட…
-
- 0 replies
- 239 views
-
-
ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் இலங்கை மக்களை பயமின்றி வாழ அழைத்தார் கொழும்பு, October 7, 2009: “ அமைதியும், செழுமையும் ஒன்றோடொன்று இணைந்தது. அதனால் அமைதியானது உங்கள் இருதயத்திலும், குடும்பத்திலும் இருக்கட்டும். பின்பு செழுமை தானாக வந்தடையும். நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் உங்களிடம் இருந்தால் அமைதி வந்துசேரும்", என்று சண்டைக்குப் பின்னல் மக்களின் இதயத்தையும் மனதையும் இனப்பதர்க்காக இரண்டுநாள் ஸ்ரீ லங்கா பயணம் சென்றுள்ள பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்கள் கூறினார். அவருடைய ஐந்தாவது கட்ட செயலாக ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் கொழும்பில் உள்ள மிகப் பெரிய உள்விளையாட்டு அரங்கில் 10,௦௦௦க்கும் மேற்ப்பட்ட மக்களுடன் தியானம், பிரார்த்த…
-
- 1 reply
- 717 views
-
-
இலங்கை வந்து தடுப்பு முகாம்களில் வதைபடும் மக்கள் நிலை பற்றி தவறாக அறிக்கைகள் விட்ட தமிழ் நாடு நாடாளுமன்ற குழு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை சந்தித்தது. பருவ மழைக்கு முன்பு முகாமில் உள்ள தமிழ் மக்களை மீழ் குடியேற்றம் செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டனராம். அத்துடன் தாம் தயாரித்த தடுப்பு முகாம்கள் தொடர்பான அறிக்கையினையும் கொடுத்தனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 290 views
-
-
தமிழருக்கான தீர்வைக் குழப்பும் செயற்பாடுகள் திரைமறைவில் எச்சரிக்கிறார் விக்ரமபாகு கருணாரட்ண தமிழ்த் தேசியப் பிரச்சினைக் கான தீர்வைக் குழப்பும் நோக்குடன் திரைமறைவில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டில் சம உடைமையைக் கொண்டு வரப்போகின்றோம் என்று கூறுகின்ற புதிய சமவுடமைவாதிகளாகத் தம்மைக் கருதுகின்றவர்கள் தமிழ் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கத் தயாராக இல்லை. இவர்களுடன் கைகோர்த்துச் செயற்பட எத்தனிக்கும் தமிழ்த் தேசியச் சக்திகள் இவ்விடயத்தில் தமிழ் மக்களுக்கு என்ன பதிலைக் கூறப்போகிறார்கள். எனவே பேரினவாத சக்திகள் மீண்டும் அர…
-
- 0 replies
- 416 views
-
-
இலங்கை வருகின்றார்... இந்திய கோடீஸ்வரர், கவுதம் அதானி – ஜனாதிபதியை சந்திக்க திட்டம் இந்திய அதானி குழுமத்தின் தலைவர் கௌவுதம் அதானி இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருவதற்கு அவர் திட்டமிட்டுள்ளதாக உயர்மட்ட அதிகாரிகளை மேற்கோளிட்டு இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகளை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒரு மாதத்திற்கு முன்னர் கைச்சாத்திடப்பட்டது. இந்நிலையில் இலங்கையின் துறைமுகங்கள், மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடர்பான திட்டங்களில் முதலிடுவதற்கு அதானி ஆர்வம் க…
-
- 7 replies
- 1k views
-
-
அரசாங்கம் 80-90 ஆயிரம் மக்களை தாம் மீழக்குடியேற்றியுள்ளதாகவும் இன்னமும் 190 ஆயிரம் பேர்தான் தடுப்பு முகாம்களில் இருப்பதாக கூறுகின்றது. ஆனால் எம்மால் அதனை உறுதி செய்ய முடியவில்லை என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையம் பி.பி.சி க்கு இன்று தெரிவித்துள்ளது. இன்னமும் முகாம்களுக்கு செல்வதற்கான தடைகள் இருப்பதாகவும். நடமாட்ட சுதந்திரம் மறுக்கப்படுவதாகவும் கூறும் ஐ. நா மீழக்குடியேறும் மக்கள் மத்தியில் ஏக்கம் இருப்பதாகவும் கூறியுள்ளது. எனினும் மகிந்த அவர்கள் சர்வதேசத்தின் நெருக்கடி தொடர்ந்தும் அதிகரித்து வருவதனால் மக்களை விடக்கூடிய சாத்தியங்கள் அதிகரிப்பதாக பி.பி.சி செய்தியாளர் கூறியுள்ளார். http://www.eelanatham.net/news/important
-
- 2 replies
- 639 views
-
-
துயிலும் இல்லங்களை அபகரிப்பின் போராட்டம்; தமிழ்க் கூட்டமைப்பும் சிவில் சமூகமும் எச்சரிக்கை "தமிழின விடுதலைக்காகப் போராடி - தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த தமிழ் உறவுகளான மாவீரர்களின் துயிலும் இல்லங்களில் படையினரின் ஆக்கிரமிப்பு தொடருமானால் தமிழ் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவர். இதை யாராலும் தடுத்துநிறுத்த முடியாது.'' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் சிவில் சமூகமும் கடும் கொதிப்புடன் கருத்துத் தெரிவித்துள்ளன. "மாவீரர் துயிலும் இல்லங்களில் அஞ்சலி செலுத்துவது தமிழ் மக்களின் உரிமை. இதைத் தடுத்துநிறுத்துவது அநாகரிகமானது. இது மிகப்பெரும் மனித உரிமை மீறல்; காட்டு மிராண்டித்தனமான செயல்'' என்றும் அவை குமுறியுள்ளன. கிளிநொச்சி கனகபுரம், முழங்காவில் மற்றும் முல்லைத்…
-
- 2 replies
- 439 views
-
-
எனது அமைச்சை ஜனாதிபதி கேட்டால் கொடுக்கத் தயார் : சாகல ரத்நாயக்க அழுத்தங்கள் இன்றி நான் சுயாதீனமாகவே சட்டம் ஒழுங்கு அமைச்சின் கடமைகளை முன்னெடுக்கின்றேன். ஜனாதிபதி என்னிடம் இருந்து அமைச்சைப் பொறுப்பேற்று வேறு அமைச்சுப் பொறுப்பில் என்னை கடமை செய்யுமாறு பணிப்பாரானால் அது தொடர்பில் எனக்கு ஆட்சேபணை இல்லை. அந்த அமைச்சிலும் இதே போன்று சிறப்பாக சேவைகளை முன்னெடுப்பேன் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற சார்க் நாடுகளின் சட்டம் ஒழுங்கு அமைச்சர்களின் கூட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக்வியலாளர் சந்திப்பில் கலந்துகொன்டு ஊடக்வியலாளர்களின் கேள்விக்கு…
-
- 0 replies
- 238 views
-
-
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை, திருமலை மனித உரிமை அமைப்பின் தலைவர் அருட்தந்தை யோகேஸ்வரன் அடிகளார் இரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளதாக ''திவயின'' என்ற சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தற்போது புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அந்தப் பத்திரிகை செய்தி கூறுகிறது. இதுகுறித்து அந்தப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளதாவது, திருகோணமலை மனித உரிமை அமைப்பின் தலைவர் அருட்தந்தை யோகேஸ்வரன் அடிகளார், முன்னாள் விடுதலைப் புலி போராளிகளை இரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த இரகசிய சந்திப்பு குறித்த அருட்தந்தையின் வீட்டில் நடந்துள்ளது. இந்தச் சந்திப்பு குறித்து புலனாய்வுப் பிரிவினர் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில், பொது…
-
- 0 replies
- 1.1k views
-
-
துன்னாலையில் பொலிசார் அதிகாரத்தை மீறி உள்ளார்கள் – தனிப்பட்ட குரோதங்களை முன் வைத்து பிரிவுகளை ஏற்படுத்துவது நல்லதல்ல – சி.வி எமது தனிப்பட்ட குரோதங்கள் முரண்பாடுகளுக்காக பிரிவுகளை ஏற்படுத்துவது நல்லதல்ல , அதனால், மாற்று தலைமைக்கு இடமே இல்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டு இருந்த கனேடிய உயர்தானிகர் ஷெல்லி வைட்டிங் வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில்…
-
- 2 replies
- 685 views
-
-
தமிழனுக்கு அகதி என்று பேர்! வீழ்ந்துகிடக்கும் பெருங்கனவாகக் கண் முன்னால் கிடக்கிறது வன்னிப் பெருநிலம். தமிழீழ நிலப்பரப்பு சூனியத்தால் சூழப்பட்டு இருக்கிறது. முள்வேலி முகாம்களுக்குள் மக்கள் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் சூழலில் இலங்கை முகாம் ஒன்றில் இருந்து தமிழகம் வந்திருக்கும் சிலரைச் சந்திக்க முடிந்தது. அவர்கள் சொல்லும் உண்மையின் வார்த்தைகள் இவை… ”முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு இருந்த மூன்று லட்சம் வரையிலான மக்களில் சரிபாதியினரை அரசு வெளியேற்றி இருக்கிறது. மீதமிருக்கும் முகாம் மக்களையும் இலங்கை அரசு வெளியேவிட்டு தான் ஆக வேண்டும். ஏனென்றால், இலங்கைத் தீவானது பொருளாதார நிலைமைகளில் முற்றுமுதலாகச் சீர்குலைந்து கிடக்கிறது. சிங்கள மலைப் பாம்பு ஒரு பெரும் இரையை விழ…
-
- 0 replies
- 737 views
-