Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வல்வை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. கடந்த 1989 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை வழைமை போல தொடங்கியது. ஒகஸ்ட் 2 ஆம் திகதி இச் சம்பவம் நடைபெற 3, 4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர். யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவே, அங்கிருந்து தப்பி வரவோ முடியவில்லை. வெறியாட்டம் முடிந்து இந்திய இராணுவம் முகாம்களுக்கு திரும்பிய பின் வல்வெட்…

    • 1 reply
    • 884 views
  2. (ஆர்.யசி) ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் நான் தயார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சரும்மான சஜித் பிரேமதாச, என்ன தடைகள் வந்தாலும் சவால்களை எதிர்கொண்டு களமறிங்குவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நான் பொறுப்பை கையிலெடுக்க தயார் என்பதை வெளிப்படையாக கூறிவிட்டேன். ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை ஆதரவும் அதுவாகவே அமைந்தது. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் வெளிப்படியாக நான் இதனைக் கூறினேன். இதில் பல தடைகள் வரும். அழுத்தங்கள் வரும் ஆனால் சவால்களை எதிர்கொள்ள இப்போது நான் …

    • 1 reply
    • 395 views
  3. வளரிளம் பருவ வயதை அடைந்துள்ள மாணவர்களில் ஏற்படும் எண்ணங்கள், நடத்தைகள், மனப்பாங்கு உள்ளிட்ட மாற்றங்களை சிறப்பாக எதிர்கொள்வதற்கும் ஆண், பெண் சமூகம் பற்றிய யதார்த்தத்தை புரிந்துகொள்வதற்கும் ஏற்புடைய வகையில் அவர்களுக்கு பாலியல் நடத்தைகள் தொடர்பான அடிப்படைக் கல்வியைப் போதிக்கும் நோக்கில் சுகாதார அமைச்சும், கல்வி அமைச்சும் இணைந்து 'ஏழாம் ஆண்டு எமது புத்தகம்' என்ற நூலை வெளியிடும் நிகழ்வு அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலைமையில் இன்று இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது. ஆரோக்கியமான இளைய தலைமுறையினரே நாட்டின் பெறுமதி வாய்ந்த வளம் என்ற அடிப்படையில் அவர்கள் அறிவையும், திறமையையும் முழுமையாகப் பெறுவதற்கும், சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்கும், நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயனுள்ள க…

    • 0 replies
    • 398 views
  4. படத்தின் காப்புரிமை Getty Images Image caption இந்தோனீசிய கடற்கரை ( கோப்புப் படம்) இந்தோனீசியாவின் தென் மேற்கு சுமத்ரா தீவுகள் பகுதியில் பெரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7.0 அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், 76 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வளி மண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவிக்கிறது. இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.33 அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. …

    • 1 reply
    • 461 views
  5. (நா.தனுஜா) முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் பெண்­களின் உரி­மை­க­ளுக்கும் கௌர­வத்­திற்கும் மதிப்­ப­ளித்து திருத்­தங்கள் மேற்­கொள்ள வேண்டும் என்று கடந்த காலங்­களில் தொடர்ச்­சி­யாக நாங்கள் வலி­யு­றுத்தி வந்­தி­ருக்கும் நிலையில், அப்­போது முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் உல­மாக்­களும் இஸ்­லா­மிய மத ­நி­று­வ­னங்­க­ளுமே இந்தத் திருத்­தங்­களை மேற்­கொள்­வதை இழுத்­த­டிப்புச் செய்து தடை­களை ஏற்படுத்தி வந்­தனர். இந்­நி­லையில் தற்­போது பேரி­ன­வா­தி­களால் பிர­யோ­கிக்­கப்­படும் அழுத்­தத்தின் விளை­வாக இஸ்­லா­மிய மதத்­திற்கு முர­ணான திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தையும் அதே­போன்று எவ்­வித திருத்­தங்­க­ளையும் மேற்­க…

    • 1 reply
    • 490 views
  6. சட்டவிரோத மணல்அகழ்விற்கும் காவல்துறையினருக்கும் நெருக்கமான தொடர்பா? மக்கள் சந்தேகம் August 2, 2019 கிளிநொச்சி ஊரியான் கனகராயன் ஆற்றுப்பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல்அகழ்விற்;கும் காவல்துறையினருக்கும் நெருக்கமான தொடர்புகள் இருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஊரியான் கனகரான் ஆற்றுப்;பகுதியிலும் ஊரியான் குளத்தின் கீழான வயல்நிலங்களிலும் கடந்த இரண்டு மாதங்களிற்கும் மேலாக சட்டவிரோதமணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இதனால் கடல் நீர் உட்புகுந்து விவசாய நிலங்கள் உவராகும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இடம்பெற்று வரும் மணல் அகழ்வை கட்டுப்படுத்த உரிய தரப்புக்கள்…

  7. August 2, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn முல்லைத்தீவு உண்ணாப்பிலவு றோமன் கத்தேலிக்க பாடசாலையில், தரம் 7 இல் கல்வி கற்று வரும் தீர்த்தக்கரை சிலாவத்தையினை சேர்ந்த 12 வயதுடைய சீனு என்ற இ. லிந்துசியா என்ற மாணவி கடந்த 29.07.19 அன்று உயிரிழந்துள்ளமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற…

    • 1 reply
    • 543 views
  8. (எம்.எப்.எம்.பஸீர்) வைத்தியர் ஷாபி விவகார விசாரணைகளுக்கு இடையூறுகள் ஏற்படலாம் என்ற சந்தேகத்தில், குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் மற்றும் குருணாகல் பொலிஸ் அத்தியட்சர் மஹிந்த திஸாநாயக்க ஆகியோரை இடமாற்றம் செய்ய தேசிய பொலிஸ் ஆணைக் குழு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுமதி வழங்கியுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் கோரிக்கையை ஆராய்ந்தே தேசிய பொலிஸ் ஆணைக் குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. அதன்படி குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் திகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் குருணாகல் பொலிஸ் அத்தியட்சர் மஹிந்த திஸாநாயக்க கிளிநொச்சி…

  9. 1 Min Read August 2, 2019 போலி இலக்கத் தகடுகளைப் பொருத்தியவாறும் தலைக்கவசத்துக்கு செலோ ரேப் ஒட்டி மறைத்தவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். நல்லூர் ஆலய பின் வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நண்பரை ஏற்றுவதற்காக வந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 2) பிற்பகல் 3 மணியளவில் நல்லூர் ஆலய பின் வீதியில் துர்க்கா மணிமண்டபத்துக்கு முன்பாக இடம்பெற்றது.வீதியால் பயணித்த ஐஸ்கிறீம் வானுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இ…

  10. அலி ரொஷான் உள்ளிட்ட 8 பேருக்கு பிணை In இலங்கை August 2, 2019 5:59 am GMT 0 Comments 1491 by : Yuganthini சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபட்ட ´அலி ரொஷான்´ என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 8 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. நீதிபதிகள் விக்கும் களு ஆராய்ச்சி, தம்மிக கணேபொல மற்றும் அடிய படபெந்தி ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையிலேயே குற்றவளிகள் ஒவ்வொருவருக்கும் 25,000 ரூபாய் ரொக்கப் பிணையும் 50 இலட்ச…

    • 1 reply
    • 431 views
  11. புலம்பெயர்ந்தோர் அமைப்பின் இலங்கைக்கான தலைவருக்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு In இலங்கை August 2, 2019 8:40 am GMT 0 Comments 1180 by : Yuganthini சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைவர் சரத் டாஷ்க்கும் (Sarat Dash) வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனம…

    • 1 reply
    • 314 views
  12. வங்காள விரிகுடாவில் தாழமுக்க நிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! In இலங்கை August 2, 2019 9:34 am GMT 0 Comments 1044 by : Litharsan வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் தாழமுக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் எதிர்வரும் சில தினங்களில் காற்றின் வேகம் அடிக்கடி 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் கடல் பிரதேசம் அடிக்கடி கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், புத்தளத்தில் இருந்து மன்னார் மற்…

  13. எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளத் தயார் – ரிசாட் In இலங்கை August 2, 2019 2:50 am GMT 0 Comments 1434 by : Benitlas நான் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்ட பின்னரும் எதிர்கால அரசியலுக்காக சிலர் என் மீது பழி சுமத்தி பேசுகிறார்கள். ஆனால் எத்தகைய சவால்களையும் நான் எதிர்கொள்ளத் தயார் என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி அதில் குளிர்காய்கின்ற ஒர…

  14. எம்மை கேட்காமல் வேட்பாளரை அறிவிப்பது தவறு: மஹிந்த அமரவீர In இலங்கை August 2, 2019 2:46 am GMT 0 Comments 1326 by : Yuganthini எமது கட்சி உறுப்பினர்களிடம் ஆலோசனை எதனையும் நடத்தாமல், ஜனாதிபதி வேட்பாளரை பொதுஜன பெரமுன அறிவிக்க நினைப்பது தவறென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளரைக் களமிறக்குவதற்…

  15. கண்டி மாவட்டத்தில் கால்பதிக்கும் ஜனநாயக மக்கள் முன்னணி! In இலங்கை August 2, 2019 2:39 am GMT 0 Comments 1262 by : Benitlas ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் செயற்பாடுகளை கண்டி மாவட்டத்தில் மேலும் பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய கண்டி மாவட்டத்திலுள்ள பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் பிரதேச வாரியாக கட்சி அலுவலகங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை(சனிக்கிழமை) நாவலப்பிட்டிய, புஸல்லாவை, பன்விலை, தெல்தோட்டை ஆகிய பகுதிகளில் உப அலுவலகங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன. இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், ‘ஜனநாயக மக்கள் முன…

  16. வரலாற்று சிறப்புமிக்க தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பம்! In ஆன்மீகம் August 2, 2019 9:09 am GMT 0 Comments 1086 by : Benitlas 121 வருடங்கள் பழமை வாய்ந்த மன்னார் – தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தலைமன்னார் பங்குத்தந்தை அருட்பணி அகஸ்டின் புஸ்பராஜ் தலைமையில் கொடியேற்றம் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதில் அதிகளவான பக்த அடியார்கள் பங்கேற்றிருந்தனர். தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெறவுள்ள நவநாள் வழிபாடுகளைத் தொடர்ந்து 10ஆம் திகதி லோறன்சியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நிறைவு பெறவுள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி…

  17. மட்டக்களப்பில் மினி சூறாவளி ; இரு வீடுகள் சேதம், பல மரங்கள் முறிந்தன மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் மினி சூழல் காற்றினால் இரண்டு வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் பிரதேசத்தில் பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ள சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இந்த திடீர் மினி சுழற் காற்று நேற்று மாலை 5 மணி தொடக்கம் சுமார் அரைமணிவரை வீசியதினால் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆயித்தியமலை தெற்கு ஒலிமடு கிராமத்தில் ஒரு வீட்டின் கூரையான சீற்றை தூக்கு வீசியுள்ளதுடன் அங்கு வீட்டின் குடியிருப்பாளர்கள் இருந்தபோதும் அவர்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதேவேளை நெடியமடு 6 ஆம் கட்டை பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றின் தகரத்திலான கூரை தூக்கி வீசி…

  18. நாமல் சின்ன பையன் - மாவை சேனாதிராஜா August 2, 2019 தோ்தல் வந்தவுடன் வடக்கிற்கு வந்து மக்கள் மத்தியில் பொய்களை கூறிவரும் நாமல் ராஜபக்ஸவுக்கு தமிழா்களின் வரலாறு தொியாது. அவா் ஒரு சிறு பையன் என பாராளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா கூறியுள்ளாா். யாழில் நேற்று நடைபெற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதுவும் செய்யவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறுகின்றார். உண்மையில் அவருக்கு எமது வரலாறு தெரியவில்லைபோல் இருக்கின்றது. அவர் ஒரு சின்னப் பையன். புதிய அரசமைப்பு உருவாக்கத்தின்போது நாடு பிளவுபடப் ப…

  19. யாழ்ப்பாணத்துக்கு மற்றொரு ரயில்! [Thursday 2019-08-01 07:00] கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இன்று முதல் புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 4081 என்ற இலக்க ரயில் நாளாந்தம் கொழும்பு கோட்டையில் காலை 8.50 ற்கு புறப்பட்டு யாழ். ரயில் நிலையத்தை மாலை 6.31 ற்கு சென்றடையும். இதேபோன்று 4087 இலக்க ரயில் நாளாந்தம் கொழும்பு கோட்டையில் மாலை 7.15ற்கு புறப்பட்டு யாழ். ரயில் நிலையத்தை மறுநாள் காலை 4.20 மணிக்கு சென்றடையும். இன்று முதல் தலைமன்னார் ரயில் நிலையம் வரையில் செல்லும் 4087 என்ற இலக்க தபால் ரயில் பிற்பகுதியில் பயணிகளின் வசதிகருதி 3 ரயில் பெட்டி…

  20. வவுனியா பஸ் நிலைய சோதனை சாவடியை அகற்ற நடவடிக்கை வவுனியா பஸ் நிலைய வாயிலில் அமைந்துள்ள சோதனை சாவடியை விரைவாக அகற்றுவதாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு. வவுனியா மாவட்டஅபிவிருத்தி குழு கூட்டம் நேற்று மதியம் 2 மணியளவில் வவுனியா மாவட்டசெயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது வவுனியா பஸ் நிலைய வாயிலில் அமைக்கபட்டுள்ள பொலிஸ் சோதனை சாவடியால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை சந்திப்பதாக தனியார் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார். இது தொடர்பாக மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் ஒருங்கினைப்பு குழுவால் விளக்கம் கோரப்பட்டது. குறித்த சோதனை சாவடியை விரைவாக அகற்றுவது தொடர்பாக நடவடிக்கையினை எடுப்பதாக ப…

  21. மரண தண்டனை வழங்குவதை எதிர்ப்பவர்கள் சிறந்ததோர் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித்திட்டத்தையே எதிர்ப்பவர்களாவர் - ஜனாதிபதி போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு எதிராக வீதியில் இறங்கியிருக்கும் அனைவரும் சிறந்ததோர் நாட்டை கட்டியெழுப்பும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு எதிரானவர்கள் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு குற்றங்கள் போன்ற பாரிய குற்றங்களுக்கு பின்னால் போதைப்பொருளே இருப்பதாகவும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு தீர்மானித்தது எதிர்கால தலைமுறைக்காக சிறந்ததோர் நாட்டை கட்டியெழுப்புவதற்காகவாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (01) முற்பகல் பண்டாரவளை நகர மண்டப கேட்போர்கூடத்தில்…

  22. அபிவிருத்திகுழு கூட்டத்தில் முரண்பட்டுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வவுனியா அபிவிருத்திகுழு கூட்டத்தில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் முரண்பட்டுக்கொண்ட சம்பவம் இடம்பெற்றது. வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் சிவனை வழங்கச்செல்லும் வழியில் படிகள் அமைப்பதற்கு அனுமதி கோரி வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கருத்து தெரிவித்திருந்தார். இதன்போது வனவளத்திணைக்களத்தினர் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினர் குறித்த படிக்கட்டுகளை அமைப்பதற்கு பொலிஸார் மூலம் தொடர்ந்தும் தடைவிதித்துவருவதாகவும் அதன் பிரகாரம் படிக்கட்டுகளை அமைக்கமுடியாதுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்ததுடன் தற்போது கயிற்றின் உதவியுடனேயே மலை உச்சிக்கு சென்று வழிபட வேண்டியுள்ளதாக தெரிவித்தார். …

  23. வடக்கு இளைஞர்களே 2 மாதம் பொறுமையாக இருங்கள்: மகிந்தானந்த நாட்டில் அமையவுள்ள எமது புதிய அரசாங்கத்தினால் வடக்கிலுள்ள இளைஞர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அதற்கு இளைஞர்கள் அனைவரும் இரண்டு மாதங்கள் பொறுமையாக இருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிசொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மகிந்தானந்த மேலும் கூறியுள்ளதாவது, “கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமான விளையாட்டு வீரர்கள் உள்ளனர். இங்கிருந்துதான் தர்ஸினி என்ற வீராங்கனையும் தெரிவானார். அவர் இப்போது உலக…

  24. தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர வேறு எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துக்கொள்ள தயார் என தமிழர் விடுதலை கூட்டணி தெரிவித்துள்ளது. கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். அதேநேரம், எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளர் மலையக மக்களுக்கு உதவக் கூடியவராக இருக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் விஷேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு வடக்கிற்கு வருகை தரும் அரசியல்வாதிகள் வரலாறு தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாக இலங…

  25. பாக்கிஸ்தானை சேர்ந்த சுற்றுலாப்பயணியொருவர் உரிய ஆவணங்களை வைத்திருந்த போதிலும் சிறிலங்கா அதிகாரிகள் தன்னை நாடு கடத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தானை சேர்ந்த சுற்றுப்பயண காணொளி புளொக்கரான ஹஸ்னைன் மன்சூர் என்பவரே முகநூலில் சிறிலங்காவில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தினை பதிவு செய்துள்ளார். பாக்கிஸ்தானை சேர்ந்த 2000ற்கும் அதிகமானவர்கள் சுற்றுலாப்பயண விசாவில் இலங்கை வந்து அடைக்கலம் கோரியுள்ளனர் என தெரிவித்த சிறிலங்கா அதிகாரிகள் தன்னை திருப்பியனுப்பினர் என தெரிவித்துள்ளார். அதிகாரிகள் தன்னை மலேசியா செல்லும் விமானத்தில் அனுப்பபோவதாக தெரிவித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்காவில் தங்கியிருப்பதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருந்தபோதிலும் அத…

    • 0 replies
    • 533 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.