ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143242 topics in this forum
-
யாழ்ப்பாண நகரில் வாழும், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும், இராணுவத்தின் 512ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதிக்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று 512ஆவது படைத்தளத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் 512ஆவது பிரிகேட் தலைமையகத்தின் உயர் இராணுவ அதிகாரிகள், மற்றும் யாழ்ப்பாண பிரதேசத்தில் வாழும் 50 இற்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் கலந்து கொண்டனர். இச் சந்திப்பின் போது உரையாற்றிய 512 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி நிலந்த, அதாவது நீங்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட சமூகமயமாக்கப்பட்ட பின்னர் நான் உங்களை அழைத்து சந்திக்க வேண்டிய தேவை இல்லை. எனினும் நாட்டின் இன்றைய சூழ்நிலை காரணமாக நான் உங்களை சந…
-
- 3 replies
- 1k views
-
-
யூ. எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக, அம்பாறையிலிருந்து இலங்கையின் சாய்ந்தமருது பிரதேசத்தில் அண்மையில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர்களின் பெயர்களும் விவரங்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் என்பவரின் தந்தை மற்றும் இரண்டு சகோதரர்கள், சாய்ந்தமருது சம்பவத்தில் உயிரிழந்தாக, பாதுகாப்பு தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் காத்தான்குடியைச் சேர்ந்வர்கள். …
-
- 0 replies
- 499 views
-
-
May 1, 2019 A பிரபல தீவிர மதப் போதகரான சாகிர் நாயக்கின் பீஸ் ரீவி (peacetv) என்ற கேபிள் தொலைக்காட்சி அலைவரிசையை நிறுத்துவதற்கு டயலொக், டெலிகொம் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதற்கமைய நேற்று (30) ம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கேபள் தொலைக்காட்சி அலைவரிசை நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் ஒளிபரப்பு செய்யப்படும் இந்த பீஸ் டிவி அலைவரிசையானது மத த…
-
- 0 replies
- 390 views
-
-
வழிபாட்டுத்தலங்கள், பாடசாலைகளுக்கு பாதுகாப்பு – வடக்கு பாடசாலைகளில் சிசிடிவி : May 1, 2019 வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகளுக்கு பாதுகாப்பை வழங்குமாறு காவல்துறை மா அதிபர் மற்றும் முப்படைகளின் தளபதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். கடந்த 21 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களை கருத்திற்கொண்டு இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து உள்ளூர் தீவிராவத அமை…
-
- 0 replies
- 330 views
-
-
கொலை செய்ய திட்டம் – மைத்திரி ரணில் மஹிந்தவிற்கு புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அரச புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையின் அரசியல் தலைவர்களை அடுத்த சில மாதங்களிற்கு ஒன்றாக பயணம் மேற்கொள்ளவேண்டாம் என அந்த எச்சரிக்கையை தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் குறித்து மீண்டும் தகவல்கள் கிடைத்துள்ள நிலையிலேயே அவர்கள் இந்த எச்சரிக்கையை அவர்கள் விடுத்துள்ளனர். அந்தவகையில் கத்தோலிக்க தேவாலயங்கள் ஆலயங்கள் உட்பட ஏனைய வழிபாட்டிடங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ள புலனாய்வ…
-
- 1 reply
- 517 views
-
-
தமது நாட்டவர்களை சிறிலங்காவை விட்டு வெளியேறுமாறு கோருகிறது சவூதி அரேபியா சிறிலங்காவில் உள்ள தமது நாட்டவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு, சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளது. சிறிலங்காவில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தை மேற்கோள்காட்டி, அந்த நாட்டின் அரச தொலைக்காட்சியான அல் எக்பாரியா இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் தற்போதைய நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, சவூதி அரேபிய நாட்டவர்களை சிறிலங்காவில் இருந்து வெளியேறுமாறு தூதரகம் கேட்டுக் கொள்வதாக, சவூதி அரேபிய தூதரகத்தின் கீச்சக குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் மற்றும் அதையடுத்து, நடத்தப்படும் தேடுதல்கள், விசாரணைகள், பாது…
-
- 0 replies
- 984 views
-
-
கிளிநொச்சி உட்பட நாடெங்கும் மருத்துவ நிர்வாக சேவையில் புதிய நியமனங்கள் May 1, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நேற்று முன்தினம்(29-04-2019) சுகாதார அமைச்சினால் 146 புதிய மருத்துவ நிர்வாக சேவை நியமனங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நியமனங்கள் மூலம் இதுவரை வெற்றிடமாகக் காணப்பட்ட பிரதி மருத்துவ நிர்வாக சேவை (Deputy Administrative Grade)பதவிகள் சகலதும் நிரப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாடெங்கும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பிரிவுகளில் வினைத்திறனான சேவை வழங்கலை உறுதி செய்யும் நோக்குடன் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் சுகாதார ராஜாங…
-
- 2 replies
- 663 views
-
-
மக்களின் அபிலாசைகளை மதிக்காத தமிழ் அரசியல்வாதிகளை நீக்கம் செய்வோம் – யாழில் மே தின நிகழ்வு தமிழ் தேசியத்தையும் சமூக மாற்றத்தையும் முன்னிருத்தி மக்கள் சக்தியை உருவாக்குவோம், மக்களின் அபிலாசைகளை மதிக்காத தமிழ் அரசியல்வாதிகளை நீக்கம் செய்வோம் என வலியுறுத்தி 2019ஆம் ஆண்டுக்கான மே தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. இலங்கை ஆசிரியர் சங்கம், வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், புதிய அதிபர் சங்கம், வடமராட்சி கிழக்கு பிரதேச குழு ஆகியன இணைந்து இந்த நிகழ்வை நடத்தியிருந்தன. இதன்போது இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செ…
-
- 0 replies
- 609 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவின் வீட்டுக்கருகில் நடமாடியவர் கைது Editorial / 2019 மே 01 புதன்கிழமை, மு.ப. 10:30Comments - 0Views - எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலை- கால்டன் இல்லத்துக்கு சிறிது தூரத்தில் நடமாடிய நபரொருவர், நேற்றைய தினம் தங்காலை பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த குறித்த நபர், வீட்டாருடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் கொழும்பிலிருந்து தங்காலை வரும் பஸ்ஸில் ஏறி தங்காலைக்கு வருகைத் தந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார். இதேவேளை 51 வயதுடைய குறித்த சந்தேகநபர் முஸ்லிம் எனவும், இவரிடமிருந்து 2, 97,000 ரூபாய் பணத்தையும் மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்…
-
- 0 replies
- 266 views
-
-
பாதிக்கப்பட்ட சமூகங்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்கும் நிலை இன்று வரை உள்ளது May 1, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு உயர் மறைமாவட்டப் பேராயர் உட்பட பல தலைவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க பாதிக்கப்பட்ட சமூகங்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்கும் நிலை இன்று வரை உள்ளதுஎன மன்னார் சர்வமதப்பேரவை தெரிவித்துள்ளது. மன்னார் சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்ற அவசர கலந்துரையாடலை தொடர்ந்து,விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,, உயிர்ப்பு ஞாயிறு அன்று தேவாலயங்களிலும், நட்சத்திர விடுத…
-
- 0 replies
- 424 views
-
-
தெகிவளை விடுதிக் குண்டுத் தாக்குதல்தாரி ஜமீல் முகமட் அப்துல் லத்தீவ் சிரியாவில் பயிற்சி பெற்றவர்.. April 30, 2019 இலங்கையில் உயிர்த்தஞாயிறு தினத்தில் தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் ஒருவர் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினரிடம் பயிற்சி பெற்றார் என விசாரணைகளுடன் தொடர்புள்ளவர்கள் தெரிவித்ததாக வோல்ஸ்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. தெகிவளை விடுதியொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிற்கு காரணமான ஜமீல் முகமட் அப்துல் லத்தீவ் சிரியா சென்றமை தெரியவந்துள்ளது என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வோல்ஸ்ரீட் ஜேர்னல் சுட்டிக்காட்டியுள்ளது. லத்தீவ் 2014 இல் சிரியாவின் ரக்காவிற்கு சென்றார் அவ்வேளை ரக்கா ஐஎஸ் அமைப்பின் தலைநகரமாக விளங்கியது வெளிநாட்டு தீவிரவாதிகள் …
-
- 0 replies
- 448 views
-
-
முன்னாள் போராளிகள் விசாரணைக்காக அழைப்பு April 30, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ் நகரில் வசிக்கும் முன்னாள் போராளிகளை இன்று மாலை 4.00 மணிக்கு யாழ்.நகரத்தில் உள்ள கஜபாகு றெஜிமன்ட் முகாமிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஈஸ்ரர் தினத்தன்று இஸ்லாமிய தீவரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இதனையடுத்து நாடுமுழுவதும் சோதனை நடவடிக்கைகளும் கைதுகளும் நடைபெற்றுவருகின்ற நிலையில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது முன்னாள் போராளிகளின் விபரங்கள் படையினரிடம் ஏற்கனவே உள்ள நிலையில் முதலில் தொலைபேசியில் முன்னாள் போராளிகளுக்கு அழைப்பு எடுத்து…
-
- 0 replies
- 630 views
-
-
2 கோடி ரூபா பெறுமதியான அபின் மீட்பு! யாழ்ப்பாணம் வடரமாட்சி, தொண்டமனாறு பகுதியில் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான அபின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. “வடமராட்சி தொண்டமனாறு – கெருடாவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான இருவர் நடமாடியபோது, அவர்கள் பொலிஸார் வருவதைக் கண்டதும் பொதி ஒன்றை போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். இதையடுத்து குறித்த பொதியினை மீட்டெடுத்த பொலிஸார் அதிலிருந்து ஒன்றரைக் கிலோ கிரேம் அபின் போதைப்பொருளை மீட்டுள்ளனர் மீட்கப்பட்ட அபின் போதைப்பொருளின் பெறுமதி 2 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/55068
-
- 0 replies
- 617 views
-
-
வெள்ளை ஆடைவாங்க செல்ல பயன்படுத்திய வேன் சாரதி உட்பட வேனை வாடகைக்கு வழங்கிய மூவர் கைது ; வேனும் மீட்பு தற்கொலைக் குண்டு தாரிகள் கல்முனையில் கடை ஒன்றில் ஆடைவாங்க செல்வதற்காகப் பயன்படுத்திய வேன் சாரதி மற்றும் வேனை வாடகைக்குக் கொடுத்த 3 பேரை இன்று செவ்வாய்க்கிழமை காலை (30) மட்டு மாவட்ட புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். அத்தோடு குறித்த வேனையும் மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.டி. கீத்த வத்துர தெரிவித்தார். பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ்.சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் நேற்று திங்கட்கிழமை (29) இரவு தற்கொலைக் குண்டு …
-
- 0 replies
- 545 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர் ) உயிர்த்த ஞாயிறன்று தொடர் தற்கொலை தாக்குதல்களை நடத்தி 250 பேருக்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவுகொண்ட பயங்கரவாத தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் அனுசரணைப் பெற்ற மொஹம்மட் சஹ்ரானின் தேசிய தெளஹீத் ஜமாத் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழுவின் அனைத்து தொடர்புகளும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் இடம்பெறும் சிறப்பு விசாரணைகளிலேயே இந்த தொடர்புகள் குறித்து முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுவிட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். …
-
- 0 replies
- 875 views
-
-
உயிர்ப்பு ஞாயிறு படுகொலைகள் நியுசிலாந்து கிறைஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கான பழிவாங்கல்தான் என்று இலங்கையின் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கூறியிருந்தது நினைவிருக்கலாம். ஆனால், தமது நாட்டில் நடந்த சம்பவம் ஒன்றிற்கான பழிவாங்கலாக இலங்கைக் குண்டுவெடிப்புகளை காட்டியது தொடர்பாக நியுசிலாந்து அரசு இலங்கையைக் கண்டித்திருக்கிறது. இதுபற்றி நியுசிலாந்து பிரதி பிரதமர் கருத்துக் கூறுகையில், “ இப்படி கூறுவதற்கு அவர்களிடம் எந்த ஆதாரங்களும் இல்லை. நிபுணர்களின் கருத்துப்படி இத்தாக்குதலுக்கான ஏற்பாடுகள் நியுசிலாந்துத் தாக்குதல் நடைபெறுவதற்கு பல மாதங்களுக்கு முன்னமே நடைபெற்றிருக்கின்றன”. “இது மிகவும் கீழ்த்தரமான செயற்பாடு. உங்களின் பாதுகாப்புத்துறையில் உள்ள ஓட்டைகளை மறைப்பதற்காக,…
-
- 12 replies
- 886 views
- 1 follower
-
-
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை ராஜபக்சக்கள் மேற்கொண்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கி வடக்கு மக்கள் வாக்களிப்பதனை தவிர்க்கச் செய்தவர்கள் ராஜபக்சக்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவிதமாக இந்த தாக்குதல்களின் பின்னணியிலும் ராஜபக்சக்கள் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப காலங்களில் இந்த தௌஹீத் ஜமாத் அமைப்பு உருவாவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டமை, இந்த அமைப்பின் சில புலனாய்வுப் பிரிவு என்ற அடிப்படையில் அரசாங்கத்தின் சம்பளம் பெற்றுக் கொண்டமை என்பன குறித்து விசாரணை செய்ய…
-
- 0 replies
- 684 views
-
-
தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவரான சஹ்ரானின் நெருங்கியவரும் அவரின் தம்பியுடன் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டவருமான அப்துல் கபூர் முகமது ரிஸ்வின் (வயது 38) கைதுசெய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணையடுத்து வவுணதீவு விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி மாரசிங்க தலைமையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் மட்டு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர். இன்று காலை காத்தான்குடி 2 ஆம் பிரிவு ரெலிகோம் வீதி ஏ.எச்.எம். பௌசி மாவத்தையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். …
-
- 0 replies
- 404 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புபட்ட சிலர் அப்போது நடத்தப்பட்டதை விட பெரிய, புதிய தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி சேவை (REUTERS.COM) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும், தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களை கைது செய்வதில் மிகச்சிறப்பான முன்னேற்றத்தை காண முடிந்துள்ளது. ஆனால் இந்த கதை முடிவடைந்துவிட்டது என நான் இன்னமும் கருதவில்லை. இன்னமும் பல தாக்குதல்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என நாங்கள் கருதுகின்றோம். அத்துடன் இன்னமும் தாக்குதல் நடக்க கூடிய பேராபத்து காணப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன…
-
- 0 replies
- 723 views
-
-
துருக்கியை தளமாக கொண்டு இயங்கும் (Fethullahist Terror Organization (FETO) தீவிரவாத குழுவின் 50 உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டு அமைச்சுக்கு துருக்கி தூதுவர் தகவல் வழங்கியுள்ளதாக அப்போதய வெளிநாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கடந்த 2017 , 2018 காலப்பகுதியில் இது தொடர்பில் மூன்று தடவைகள் துருக்கி தூதரகம் தங்கள் அமைச்சுக்கு அறிவிருத்தல் வழங்கியதாக கூறிய அவர் அது விடயமாக பாதுகாப்பு தரப்பிற்கு பெக்ஸ் மூலம் அறிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதே நேரம் இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை முழுவீச்சில் நடத்தாமையை தொடர்ந்து துருக்கி தூதுவர் நேரடியாக பாத…
-
- 0 replies
- 550 views
-
-
(எம்.மனோசித்ரா) நாட்டில் ஊடுறுவியுள்ள தீவிரவாத்தை அழிப்பதற்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்குவதே சிறந்த தீர்வாக இருக்கும் என ஐ.தே.க அமைச்சர்கள் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்தியதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் இடம்பெற்றபோது இன்னொரு இராணுவ தளபதிக்கு இதனைத் தொடர்வதற்கு இடமளிக்…
-
- 1 reply
- 655 views
-
-
April 30, 2019 யாழ்ப்பாண ஊடகங்கள் யாழ்ப்பாணத்திலே வாழும் முஸ்லிம் மக்கள் குறித்து இழிவான முறையிலும், பொறுப்பற்ற வகையிலே செய்திகளை வெளியிடுவது குறித்து நேற்று யாழ்ப்பாணத்திலே இடம்பெற்ற சர்வமதங்களையும் உள்ளடக்கியவர்களின் ஒரு கூட்டத்திலே ஒரு முஸ்லிம் மனிதர் தனது கருத்துக்களையும், ஆதங்கத்தினையும் வெளியிட்டார். அவருடைய கருத்துக்களை துளசி முத்துலிங்கம் ஆங்கிலத்திலே பதிவு செய்திருந்தார். துளசி முத்துலிங்கத்தின் பதிவின் தமிழாக்…
-
- 1 reply
- 532 views
-
-
நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குல் சம்பவங்களை அடுத்து அதிவணக்கத்திற்குரிய பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் குண்டு துளைக்காத கார் வழங்கப் பணிக்கப்பட்டது. எனினும் பேராயர் அந்தக் காரை வாங்க மறுத்துள்ளார். “நான் பயப்படவில்லை. எனது பாதுகாவலர் கடவுளே. மக்களுக்கும் , நாட்டுக்குமே பாதுகாப்பு வழங்குங்கள்” என்று தெரிவித்துள்ளார். https://newuthayan.com/story/17/பிரதமர்-வழங்கிய-காரை-ஏற்.html
-
- 0 replies
- 386 views
-
-
புர்காவுக்கு தடை குறித்த அறிவிப்பு ஸ்ரிக்கர்!! நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமையை அடுத்து முகத்தை மூடியவாறு அணியும் புர்காவுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து இளைஞர் அமைப்பினால் பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் புர்கா அணிய தடை என்ற ஸ்டிக்கர்களை ஒட்டப்பட்டு வருகின்றன. https://newuthayan.com/story/15/பர்தாவுக்கு-தடை-குறித்த.html
-
- 0 replies
- 455 views
-
-
சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவியதாக சந்தேகிக்கும் வேன் ஒன்றினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மரதங்கடவொல, இகல புளியம்குளம் பகுதியில் வைத்து குறித்த வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.250-5680 என்ற இலக்கத்தை உடைய வேன் ஒன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வேன் கெகிராவ பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/55037
-
- 0 replies
- 435 views
-