ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143259 topics in this forum
-
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகே இருந்த வெடிகுண்டு மீட்பு! கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகே இருந்து சற்று முன்னர் வெடிகுண்டு மீட்டுக்கப்பட்டுள்ளது. பிவீசி குழாய் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள விமானப்படை குறித்த குண்டு உள்ளோரின் தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/கட்டுநாயக்க-விமான-நிலைய-4/
-
- 0 replies
- 647 views
-
-
புலிகள் காலத்தில்கூட இவ்வாறு தாக்குதல் நடத்தப்படவில்லை: பௌசி விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு போரின்போதுகூட, ஒரே நாளில் சுமார் 6 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகவில்லையென முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார். கொட்டாஞ்சேனை அந்தோனியார் ஆலய குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அங்கு சென்று நிலைமைகளை பார்வையிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சமய வழிபாடுகள் நடைபெற்ற இடத்தில் இவ்வாறு தாக்குதல் நடத்தியமை மிலேச்சத்தனமானதென குறிப்பிட்ட பௌசி, சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டுமென பௌசி வலியுறுத்தியுள்ளார். http://athavannews.com/புலிகள்-காலத்தில்கூட-இவ்/
-
- 8 replies
- 1.4k views
-
-
இலங்கை குண்டு வெடிப்பு: சீனா, போர்ச்சுக்கல், நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் 27 வெளிநாட்டினர் பலி. இலங்கையில் என்று அடுத்தடுத்து நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில், வெளிநாட்டவர்கள் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஈஸ்டர் திருநாளான இன்று, கொழும்பு உட்பட இலங்கையின் பல்வேறு பகுதிகளில், தேவாலயங்கள் மற்றும் வெளிநாட்டினர் அதிகம் தங்கியிருக்கக் கூடிய நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. பெரும்பாலான குண்டுவெடிப்புகள் தற்கொலைப் படையினரால் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.மாலை 6 மணி நிலவரப்படி, மொத்தம் 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. அதில் 207 பேர் கொல்லப்பட்டனர். 450 க்க…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை.. அரசு அவசர ஆலோசனை இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, நாளையும், நாளை மறுதினமும் அந்த நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பல்வேறு பகுதிகளில் 3 தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் அடுத்தடுத்து இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.இந்த குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 200-ஐ நெருங்கிக் கொண்டுள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போருக்குப் பிறகு நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. நாடு முழுக்க பதட்டமான சூழ்நி…
-
- 2 replies
- 1.2k views
-
-
“மட்டக்களப்பில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அரச செலவில் நல்லடக்கம்” மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உடலங்களை அரச செலவில் நல்லடக்கம் செய்வதற்கு அனர்த்தம் முகாமைத்துவ மத்திய நிலையம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் 3.00 மணியளவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அரசாங்க அதிபர் மா.உதயகுமார் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சம்பவமானது கவலையளிக்கின்றது. இவ்வாறு இறந்தவர்கள…
-
- 0 replies
- 527 views
-
-
கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார். கொச்சிக்கடை தேவாலய வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தான் பிராத்தனை செய்வதாகவும், பொது மக்கள் மிகுந்த அவதானத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்ய எதிர்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு உட்பட ஏனைய பிரசேதங்களில் இடம் பெற்றுள்ள குண்டு வெடிப்பு சம்பவம் வன்மையான கண்டிக்கத்தக்கது. புனிதமான தேவாலயங்களை மையப்படுத்தி வன்முறை சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமையான…
-
- 1 reply
- 1.2k views
-
-
நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டின் பாதுகாப்பிட்காக சமூக வலைத்தலங்களின் செயற்படுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் குறிப்பாக முகப்புத்தகம், வைபர் மற்றும் வட்ஸ்அப் ஆகிய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை நாட்டில் இன்று காலை முதல் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களில் 187 பேர் கொள்ளப்பட்டுள்ளதுடன் 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள தொடர் குண்டு வெடிப்பு சம்பங்களை மையப்படுத்தி போலியான தகவல்கள் பதிவேற்றப்படுகின்றமையினால் தற்காலிகமாக சமூக வலைத்தலங்களை முடக்க அரசாங்கத்தால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 746 views
-
-
தொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை! நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினையடுத்து ஜனாதிபதி பொதுமக்களுக்கு விசேட அறிக்கையொன்றினை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளதாவது, இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தினால் தான் ஆழ்ந்த கவலையில் ஆழ்ந்துள்ளதாகவும், எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இந்த சம்பம் தொடர்பான விசாரணைகளை முப்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விசாரணைகளுக்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விசாரணை முன்னெடுக்கப்படும் கால கட்டத்தில் பொறுமை மற்றும் அம…
-
- 0 replies
- 621 views
-
-
பிரதமர் ரணில் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம் கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பிரதமர் குறித்த பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திலும், நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயத்திலும் இரு பாரிய குண்டுவெடிப்பு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன இந்நிலையில் கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பில் பார்வையிட பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொச்சிக்கடை தேவாயலத்திற்கு செல்லவுள்ளதாக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார் http://www.virakesari.lk/article/54316
-
- 0 replies
- 530 views
-
-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது April 21, 2019 நாட்டின் இன்று பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஆறு பயங்கர குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று காலை 10 மணிமுதல் பண்டாரநாயக்க விமான நிலையத்தினுடைய பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கமைவாக விமான பயணிகள் தவிர ஏனையோர் விமான நிலைய வளாகத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டர்கள் எனவும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் விமானப் பயணங்களை மேற்கொள்கின்ற பயணிகள் உரிய காலத்திற்கு முன்னர் விமா…
-
- 0 replies
- 632 views
-
-
வட மாகாணத்தில் 37 ஆயிரம் தமிழ் மொழி பேசும் சிங்களவர்கள்- விமலரத்ன தேரர் வட மாகாணத்தில் தமிழ் பேசும் பௌத்தர்கள் 37 ஆயிரம் பேர் காணப்படுவதாக தான் மேற்கொண்ட தேடல் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக கண்டி சர்வதேச பௌத்த மையத்தின் சிங்கள பௌத்த நட்புறவுத் திட்டத்தின் துணைத் தலைவர் லக்சேகம ஸ்ரீ விமலரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாகவும், இவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கத்துக்கு தலையிடுமாறும் தேரர் கேட்டுள்ளார். இவர்களுக்கு சிங்கள மொழி அறிவு மிகவும் குறைவாக காணப்படுவதாகவும், இதனைக் கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தேரர் மேலும் கூறியுள்ளார். http://www.dailyceylon.com/181102
-
- 7 replies
- 949 views
-
-
நேர்காணல் Stephan Pushparajah - தர்மலிங்கம் சுரேஷ் - கலாநிதி சரவணபவன்
-
- 0 replies
- 399 views
-
-
அமெரிக்க குடியுரிமையை இழந்தார் கோத்தா? – கடவுச்சீட்டு ஒப்படைப்பு gotaஅமெரிக்க குடியுரிமையை துறக்க முடிவு செய்துள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, தமது அமெரிக்க கடவுச்சீட்டை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார். கடந்த புதன்கிழமை அமெரிக்க தூதரகத்துக்குச் சென்ற அவர், தமது அமெரிக்க கடவுச்சீட்டையும், அமெரிக்க குடியுரிமையைத் துறப்பதற்கான உறுதியுரை உள்ளிட்ட ஆவணங்களையும் சமர்ப்பித்தார். அமெரிக்க கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களில் கடந்த புதன்கிழமை கையெழுத்திட்டதை அடுத்து, கோத்தாபய ராஜபக்ச, குறைந்தபட்சம் தொழில்நுட்ப ரீதியாக, அமெரிக்க குடியுரிமையை இழந்து விட்டார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியி…
-
- 0 replies
- 427 views
-
-
தமிழ் தேசிய வாதத்தை மௌனிக்க இடமளிக்க மாட்டோம்! தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்ய தாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அன்னை பூபதியின் 31 ஆவது நினைவுத் தினம் யாழில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “தமிழ் தேசிய வாதத்தை மௌனிக்க இடமளிக்க மாட்டோம். அதை மறக்க விடமாட்டோம். அப்போதைய சூழலில் போராட்டத்தை இனவழிப்பின் ஊடாக மௌனிக்க செய்ததோடு, மக்களுக்கு போராட்டத்தின் மீது வெறுப்பு ஏற்படும் வகையில் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தமிழ் அரசியலி…
-
- 0 replies
- 611 views
-
-
தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – April 18, 2019 தாய்மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை நடக்கும் என்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயாராக இருப்பதாக ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு தெரிவித்தார். வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் ; மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …
-
- 6 replies
- 1.2k views
-
-
வடக்கு- கிழக்கில் தமிழ் ஊடகத்துறையின் சுதந்திரம்- முல்லைத்தீவில் விசாரணையின் பின்னர் தமிழ் ஊடகவியலாளர் பொலிஸாரால் கைது இலங்கைக் கடற்படை அதிகாரியின் பொய்யான முறைப்பாடென ஊடகவியலாளர்கள் குற்றச்சாட்டு வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றும் சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் இன்று சனிக்கிழமை இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவில் உள்ள இலங்கை அரசின் கோட்டாபய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு மேற்கொண்ட பொய்யான முறைப்பாட்டில் தவசீல்ன் கைது செய்யப்பட்டுள்ளதாக சக ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வடக்கு கிழக்கில் இலங்கைப் படையினரால் காண…
-
- 1 reply
- 635 views
-
-
இந்நிலையில் சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர்கள், தமது பிரதேச செயலக பிரதேசத்தை, கல்முனை மாநகரசபைக்கு முற்றிலும் வெளியே பிரித்தெடுத்து முழுமையான நகரசபையாக்க கோரி போராடுகிறார்கள். இந்நிலையில் கல்முனை வடக்கு தமிழ் சமூக தலைவர்கள் தமது உப பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த கோரி போராடுகிறார்கள். ஒரே இனத்தை சேர்ந்த முஸ்லிம் மக்கள், தனி நகர சபைக்காக போராடும் போது, சகோதர இனத்தை சார்ந்த தமிழ் மக்கள், தமது உப பிரதேச செயலகம், முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர வேண்டும் என போராடுவதில் என்ன தவறு இருக்கின்றது என இந்த கல்முனை வடக்கு தமிழர்களின் போராட்டத்தை எதிர்க்கும் அரசியல்வாதிகள் நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும் தர்க்கரீதியாக எடுத்து கூற வேண்டும். …
-
- 0 replies
- 1k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவப் பெருவிழாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ எழுச்சிப் பாடல்களை நாதஸ்வர இசையில் மீட்டியதாக தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடார்ந்த மகோற்சவப் பெருவிழா நடைபெற்றிருந்த நிலையில் நேற்று தீர்த்தத் திருவிழா மற்றும் இந்திர விழாவுடன் கொடியிறக்கம் நடைபெற்றது. குறித்த ஆலயத்தில் சப்பரம், தேர் உள்ளிட்ட பெரும் விழாக்களின் போது தவில் நாதஸ்வரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எழு…
-
- 0 replies
- 756 views
-
-
April 20, 2019 ஜனாதிபதி மைத்திரி, எதிர்க்கட்சி தலைவர் மகிந்த கூட்டணி ஒன்றிணைந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வீழ்த்த சதிசெய்தபோதே கட்சியாக தாம் விழித்துக்கொண்டதாகவும், இனியும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வீழ்த்த முடியாது எனவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் நகர்வுகள் குறித்தும், மீண்டும் கூட்டணி அரசாங்கம் அமைக்கும் வாய்ப்புகள் உள்ளதா என்ற கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனித்துவிட்டார், கூட்டணி அரசாங்கம் அமைக்கும் நோக்கம் ஐக்கிய தேசிய கட்சிக்கு இல்லை, தாம் கூட்டணி அரசாங்கத்தை குழப்பவி…
-
- 0 replies
- 737 views
-
-
சிறிலங்கா அரசுக்கான ஆதரவு – 26ஆம் நாள் முடிவெடுக்கிறது தமிழ் அரசு கட்சி சிறிலங்கா அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு அளிப்பதா என்பது குறித்து இலங்கைத் தமிழ் அரசு கட்சி வரும் 26ஆம் நாள் முடிவெடுக்கவுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்துக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கிய போதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் தோல்வியடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையிலேயே, இதுகுறித்து ஒரு முடிவு எடுக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது. வரும் 26ஆம் நாள் தொடக்கம் 28ஆம் நாள் வரை இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்த …
-
- 1 reply
- 584 views
-
-
மேல் மாகாண சபையின் அதிகாரம் நாளை முதல் ஆளுநர் வசம் மேல் மாகாண சபையின் பதவிக்காலம் நாளையுடன் (21) நிறைவடைவதாகவும், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் வடக்கு, கிழக்கு, வடமேல்,மத்திய, வடமத்திய,தெற்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய ஏழு மாகாணங்களின் பதிக்காலம் முடிவடைந்துள்ளன. மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமை காரணமாக இம் மாகாணங்கள் தற்போது ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் காணப்படுகின்றன. இவற்றுள் கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்கள் 2017 ஆம் ஆண்டுடனும் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள் 2018 ஆம் ஆண்டுடனும் தென் மாகாணம் 2019 ஆம் ஆண்டுடன…
-
- 0 replies
- 332 views
-
-
கோட்டாபய முடியுமானால் மீண்டும் அமெரிக்கா வரட்டும்- யஸ்மின் சூகா முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்காவுக்கு வந்த வேளை அவருடைய பயணம் தொடர்பில் கண்காணிப்புச் செய்தவர்கள் இருந்ததாக ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரி யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார். இதனால், முடியுமானால் மீண்டும் ஒருமுறை அமெரிக்காவுக்கு வருகை தருமாறு தான் அவரிடம் கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவில் கோட்டாபய ராஜபக்ஸ வழக்குக்குள் சிக்கிக் கொண்டதற்கு அவரின் பெருமைத் தனமே காரணமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிராக கலிபோர்னியா நீதிமன்றத்தில் ரொய் நிறுவனத்துடன் யஸ்மின் சூகாவும் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார் என…
-
- 0 replies
- 555 views
-
-
ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம் April 19, 2019 யாழ்ப்பாணத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை மோதிய வாகனம் தப்பிச் சென்றுவிட்டது என கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புலம்பெயர் சமுகத்துடன் இன்று முற்பகல் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்பதற்காக பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்கு பயணித்த வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. எனினும் ஊடகவியலாளரிடம் வாக்குமூலம் எடுக்கப்படாத்தால் விபத்தா தாக்குதலா? என்று கூற முடியவில்லை. இந்தச் சம்பவம் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரிக்கு அண்மையில் இன்று முற்பகல் இடம்பெ…
-
- 1 reply
- 722 views
-
-
தமிழ் மக்களின் அழிவுக்கு பிரபாகரன் காரணம் அல்ல-வீ.ஆனந்தசங்கரி தமிழ் மக்களின் அழிவுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் காரணம் அல்லவென்றும் அப்போதைய அரசியல் தலைமைகளே காரணம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குற்றஞ்சாட்டியுள்ளார். கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தான் கண்ட தலைமைத்துவ பண்பு கொண்டவர்களில், பிரபாகரன் நல்லதொரு தலைமைத்துவ பண்பு கொண்டவர் என தெரிவித்துள்ளார். அவரின் கீழ் உள்ளவர்கள் செய்த அத்தனை தவறுகளையும் தானே ஏற்றுக்கொண்டார் என்றும் குறிப்பிட்டுள்ளா…
-
- 1 reply
- 461 views
-
-
தமிழரசுக் கட்சியின் இளைஞரணி மாநாடு – தலைவராக கிழக்கு இளைஞன் தெரிவு இலங்கை தமிழரசுக் கட்சியின் வடக்கு கிழக்கு பகுதியினை சேர்ந்த இளைஞர் அணி மாநாடும் நிர்வாகத் தெரிவும் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகின்றது. இதன்போது, இளைஞரணியின் தலைவராக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கிருஸ்ணப்பிள்ளை சேயோன் தெரிவுசெய்யப்பட்டதோடு செயலாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுப்பிரமணியம் சுரேன் தெரிவுசெய்யப்பட்டார். அத்துடன் பொருளாளராக வவுனியாவைச் சேர்ந்த சிவலோகநாதன் சிவதர்சன் தெரிவானார். இம்மாநாட்டில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ்.சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்தர…
-
- 0 replies
- 644 views
-