Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் ஒருதலைப் பட்சமான செயற்பாட்டால் மக்கள் பாதிப்பு April 4, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி- பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜெயபுரம் பகுதி மக்களின் விவசாய காணிகளை துப்பரவு செய்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வனவள பாதுகாப்பு திணைக்களம் தொடர்ச்சியாக விளைவிப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி ஜெயபுர மக்கள் 1983ஆம் ஆண்டு குறித்த பகுதியில் குடியேற்றப்பட்ட போது அவர்களுடைய வாழ்வாதர செயற்பாடுகளுக்காக அரச காணிகள் வயல் நிலங்களாக வழங்கப்பட்டது. சில காலங்கள் காணிகளை துப்பரவு செய்து பயிற்செய்கைகளை மேற்கொண்ட போதும் யுத்தம் காரணமாக 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள…

  2. இலங்கை அமைச்சர் ஹக்கீமின் வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய கருத்து: தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீதரன் கண்டனம் 3 ஏப்ரல் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வந்து இலங்கை விவகாரத்தைக் கையாள்வது அரசியலமைப்புக்கு முரணானது என, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்த கருத்துக்கு தமிழ் தேசி…

  3. அம்பாந்தோட்டையில் மற்றொரு எண்ணெய் ஆலை – 14 பில்லியன் டொலர் முதலீடு அம்பாந்தோட்டையில் மற்றொரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் சிங்கப்பூரின் Sugih Energy International நிறுவனம் 14 பில்லியன் டொலரை முதலீடு செய்யவுள்ளதாக அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வணிக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், “ஏனைய சிங்கப்பூர் நிறுவனங்களால் முன்மொழியப்பட்டுள்ள ஏனைய திட்டங்களை விட இந்த முதலீடு மிகப்பெரியது. முதலாவது சிங்கப்பூர் நிறுவனம் அமைக்கவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நாளொன்றுக்கு 2 இலட்சம் பீப்பாய்களை மாத்திரம் உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டத…

    • 0 replies
    • 316 views
  4. பின்கதவு வழியாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த சிறிலங்கா அதிபர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்துக்குள் நேற்று பின்கதவு வழியாக நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டது. கொழும்பில் நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியை நடத்தினர். இதனால், நாடாளுமன்றச் சுற்றுவட்ட வீதி சிறிலங்கா காவல்துறையினரால் மூடப்பட்டது. இதனால், நாடாளுமன்றத்துக்குச் செல்லும் சிறிலங்கா அதிபரின் வாகன அணியின் பாதை மாற்றப்பட்டது. நாடாளுமன்ற முன்வாயில் வழியாக செல்ல முடியாததால், பின்வாயில் வழியாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்துக்குச் சென்றார். http://www.puthinappalakai.net/2019/04/04/news/37195

    • 0 replies
    • 312 views
  5. சிறிலங்காவில் சிறப்பு இறப்பர் வலயத்தை அமைக்கிறது சீனா சிறிலங்காவில் சிறப்பு இறப்பர் அபிவிருத்தி வலயம் ஒன்றையும், இறப்பர் கைத்தொழில் வலயம் ஒன்றையும், அமைப்பதில் சீன அரசாங்கம் முதலீடு செய்யவுள்ளது. சீனாவின் ஹய்னான் இறப்பர் அபிவிருத்தி வலயத்தில் இருந்து வந்திருந்த சிறப்புக் குழுவினர், இது தொடர்பாக சிறிலங்காவின் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசநாயக்கவுடன் நேற்று பேச்சுக்களை நடத்தியுள்ளனர். சீன குழுவுக்கு, ஹய்னான் மாகாணத்தின் வெளிவிவகார மற்றும் அனைத்துலக பொருளாதார உறவுகளுக்கான தலைவர் ஜிங்லீ ஹன் தலைமை தாங்கினார். இந்தப் பேச்சுக்களை அடுத்து, இறப்பர் வலயத்தை அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு இந்த மாத இறுதியில் சீன…

    • 0 replies
    • 365 views
  6. கொழும்பு துறைமுகத்தில் ரஷ்ய போர்க்கப்பல் ரஷ்ய கடற்படையின் Gorshkov என்ற போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 136 மீற்றர் நீளம் கொண்ட Admiral Gorshkov வகையைச் சேர்ந்த இந்தப் போர்க்கப்பலில், 28 அதிகாரிகளும், 208 மாலுமிகளும் உள்ளனர். கொழும்பில் தரித்து நிற்கும் போது, சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து ரஷ்ய கடற்படையினர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர். இந்த ரஷ்ய போர்க்கப்பல் நாளை மறுநாள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது. http://www.puthinappalakai.net/2019/04/04/news/37199

    • 0 replies
    • 283 views
  7. தமிழரசுக் கட்சியின் உண்மைக்குப் மாறான அறிக்கை- கொழும்புத் தமிழச் சங்கம் கண்டனம் கட்சி உறுப்பினர் ஒருவர் மூலமாக சங்க நிர்வாகத்தில் தலையிட்டு அச்சுறுத்தல் எனவும் குற்றச்சாட்டு தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை வினயமாகவும் மன்றாட்டமாகவும் கேட்டுக் கொண்டதற்கு அமைவாகவே தந்தை செல்வா நினைவு நிகழ்வுக்கு மண்டபம் வழங்குவதை ரத்துச் செய்யும் கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக கொழும்புத் தமிழச் சங்கம் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கடித்தை தீய நோக்கிலும் அரசியல் லாபத்துக்காகவும் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை நாளேடுகளுக்கும் செய்தி இணைத்தளங்களுக்கும…

    • 0 replies
    • 307 views
  8. சிறிலங்கா இன்னும் அதிகம் செய்ய வேண்டும் – நோர்வே அமைச்சர் சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை ஏற்றுக் கொள்ளுகின்ற அதேவேளை, இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது என்று நோர்வேயின், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மரியன் ஹகென் தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்ட அவர், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். “சிறிலங்காவின் நல்லிணக்க செயல்முறைகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக, நோர்வே மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது. நாங்கள் அதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். கா…

    • 0 replies
    • 382 views
  9. காணாமல் போனோர் பணியகத்தை மூடத் தயாரா? – சிறிலங்கா அதிபருக்கு அமைச்சர் சவால் தனது அனுமதியின்றி 40/1 தீர்மானத்தில் கையெழுத்திடப்பட்டது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறுவாரெனின், ஜெனிவா தீர்மானத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான பணியகத்தை மூடுவதற்கு அவர் உத்தரவிட வேண்டும் என்று சிறிலங்கா அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “காணாமல் போனோருக்கான பணியகத்தை ஜெனிவா தீர்மானத்துக்கு அமைவாகவே உருவாக்கினோம். ஜெனிவா தீர்மானத்தில் இருந்து விலக வேண்டும் என்றால், காணாமல் போனோருக்கான பணியகத்தை தொடருவதில் அர்த்தமில்லை. அதனை கலைத்து விடுவது நல்லது. காணாமல் போனோர் தொடர்பாக, 15 ஆயிரம் முறைப்பாடு…

    • 0 replies
    • 335 views
  10. மின்சார நெருக்கடிக்கு அமைச்சர் ரவி மட்டும் காரணம் அல்ல- டளஸ் அழகப்பெரும மின்சார நெருக்கடி தொடர்பான பிரச்சினையை அமைச்சராகி 71 நாட்களை மட்டுமே கடத்தியுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது சுமத்துவது நியாயமற்றது என முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். மின்சார நெருக்கடிக்கு ஜனாதிபதி, பிரதமர் உட்பட இந்த அரசாங்கத்திலுள்ள சகலரும் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் அவர் கூறினார். சிங்கள, தமிழ் புத்தாண்டை இம்முறை நீர் மற்றும் மின்சாரம் என்பன இல்லாத நிலையில் இருளில்தான் மக்கள் கொண்டாட வேண்டியுள்ளனர். அரசாங்கம் இந்தப் பிரச்சினையை அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மீது மட்டும் சுமத்தப் பார்க்கின்றது. ஆனால், நாம் அதற்குத் தயார் இல்லையெ…

    • 0 replies
    • 339 views
  11. April 2, 2019 இலங்கை அரசாங்கம் ஜெனிவாத் தீர்மானத்தின் பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு அவற்றுக்குப் பதிலாக முன்வைக்கவுள்ள மாற்றுப் பொறிமுறைகள் என்ன? என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையின் சட்ட சமத்துவ மற்றும் பாரபட்சத்துக்கு எதிரான பிரிவின் தலைவர் மோனா ரிஷ்மாவி கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தின் பரிந்துரைகளை செயற்படுத்…

  12. தவறுகள் தொடர்பான பொறுப்புக்கூறல் இல்லாது இலங்கையில் அமைதி ஏற்படாது – பிரித்தானியா இலங்கையில் இடம்பெற்ற தவறுகள் தொடர்பான நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் இலங்கையில் நிலையான அமைதி ஏற்படாது என பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கப்பட்டது. இதன்போது, கரேத் தோமஸ் என்ற உறுப்பினர் பாரிய மனித உரிமை மீறல் குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்த தவறும் இலங்கை மீது எடுக்கும் நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்தபோதே பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் ஜெர்மி ஹன்ட் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த …

  13. April 3, 2019 சிறைச்சாலைகளில் போதைப்பொருள் உள்ளிட்டவைகளைக் கட்டுப்படுத்தப்படுமாக இருந்தால் நாட்டில் 75 வீதமான குற்றச்செயல்களைத் தடுக்க முடியும் என யாழ்ப்பாண சிறைச்சாலையின் பிரதம சிறை காவலர் என். பிரபாகரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஏப்ரல் 3 போதையற்ற நாடு எனும் தொனிப்பொருளிளான சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் சிறைச்சாலை வளாகத்தில் இன்று காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் பிரதம காவலர் என்.பிரபாகரன் தெரிவிக்கையில், “நாம் இன்றைய தினம் போதைப் பொருளை ஒழிப்போம்…

  14. அமைச்சரவைக்கு நான் வரமாட்டேன்: ஜனாதிபதி Editorial / 2019 ஏப்ரல் 03 புதன்கிழமை, மு.ப. 09:43 Comments - 0 அமைச்சரவைக்கு நான் வரமாட்டேன்: ஜனாதிபதி இலங்கை மின்சார சபை மற்றும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு கிடையிலான பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரையிலும், அமைச்சரவைக் கூட்டங்கள் தான் பங்கேற்க மாட்டேன் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்யைய அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்சார சபைக்கு எதிராக, பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, வழக்குத் தாக்கல் செய்துள்ளமை தொடர்பில், கருத்துரைத்த ஜனாதிபதி, அரச நிறுவனமொன்று மற்றுமொரு அரச நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் தெரி…

  15. (எம்.எப்.எம்.பஸீர்) பாதாள உலகத் தலைவன் மாகாந்த்துரே மதூஷ் தன்னை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம் எனக்கோரி மேன் முறையீடு செய்துள்ளார். இந்திய சட்டத்தரணிகள் சிலர் ஊடக இந்த மேன்முறையினத் டுபாய் மேல் நீதிமன்றத்தில் முன் வைத்துள்ளதாக அறிய முடிகின்றது. இந்த நிலையில் அது தொடர்பில் தீர்மானிக்கும் வரை மாகாந்துரே மதூஷ் நாடு கடத்தப்பட வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளதாக டுபாய் தகவல்கள் தெரிவிக்கின்றன. டுபாயில் தனக்கு உள்ள சொத்துக்கள், அங்கு தான் பார்த்த வேலைகள், துபாயின் பொருளாதாரத்துக்கு தான் வழங்கும் பங்களிப்பு மற்றும் இலங்கையில் தனக்கு உள்ள உயிர் அச்சுறுத்தல் …

  16. வடமாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளினால் ஆர்ப்பாட்டம் வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து இன்று காலை 9 மணி முதல் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இதுவரை வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், 2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கென நிதி ஒதுக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துமே இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/53235

  17. மன்னார் மனித புதைகுழி – எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன மன்னார் மனித புதைகுழியில் மேலதிகமாக அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்படாமல் காணப்பட்ட மனித எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீரென முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மனித புதைகுழியானது சிறிய அளவில் அகலப்படுத்தப்பட்டு மீண்டும் பாதுகாப்பாக மூன்று மாத காலப்பகுதிக்கு மூடப்பட்டுள்ளது. இந்த மூன்று மாத காலப்பகுதிக்குள் பேராசிரியர் ராஜ் சோம தேவவினால் மன்னார் மனித புதைகுழி தொடர்பாக அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. இந்த சீரமைக்கும் பணியில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ, பேராசிரியர் ராஜ் சோம தேவ உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்…

  18. ‘சித்திரை மாத உறுதிமொழி’ – அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு போதையிலிருந்து விடுதலைப்பெற்ற நாட்டிற்கான ‘சித்திரை மாத உறுதிமொழி’ மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதையிலிருந்து விடுதலைப்பெற்ற நாட்டிற்காக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழியெடுக்கும், ‘சித்திரை மாத உறுதிமொழி’ நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (புதன்கிழமை) காலை சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும்…

  19. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிரந்தர சட்டமாக்க முயற்சி - மஹிந்த குற்றச்சாட்டு 29 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைBUDDHIKA WEERASINGHE இலங்கையில் அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சரத்துக்களை நிரந்தரமான சாதாரண சட்டமாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள்…

  20. யாழ்ப்பாணம் வேலணை பிரதேசத்தில் மீண்டும் மாடுகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக அறுக்கப்படும் செயற்பாடு அதிகரித்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு தேவைகளுக்காக தீவகத்துக்கு வருபவர்கள் மாடுகளை களவாடிச் செல்கின்றனர்.தாம் வரும் கனரக வாகனங்களில் அவற்றை கொண்டு செல்கின்றனர். இவை தவிர மாடுகள் களவாடப்பட்டு இறைச்சி ஆக்கப்பட்டு அதன் தோல் ,எலும்புகள் பொது இடங்கள் , பற்றைகளில் வீசப்படுகின்றன. மாடுகள் களவாடப்படுவது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டாலும் அவர்கள் சில நாள் கள் விசாரணை செய்து விட்டு அப்படியே விட்டு விடுவார்கள் என்று மக்கள் குறை கூறுகின்றனர். https://newuthayan.com/story/16…

    • 1 reply
    • 602 views
  21. வவுனியா மாவட்டத்தில் இந்த வருடத்துக்குள் எலிக்காச்சலால் பாதிக்கப்பட்ட 31 பேர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று அறியமுடிகிறது. எனவே எலிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். https://newuthayan.com/story/14/வவுனியாவில்-அபாயம்-31-பேரு.html

  22. யாழ்ப்பாண வர்த்தகர்களின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் பண்டிகைக் காலங்களில் விபாயாரத்தை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். எனவே வெளிமாவட்ட வர்த்தகர்களை வடக்குக்குள் இந்தக் காலப் பகுதிக்குள் வருகை தர அனுமதிக்க வேண்டாம் என்று யாழ்ப்பாண வணிகர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் வர்த்தகர்கள் வீதிகளிலும், வேறு பிரதேசங்களிலும் நிரந்தரமாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வடபகுதி வர்த்தகர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க ஏதுவான நடவடிக்கைகளை உரியவர்கள் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வி…

  23. கலப்பு பொறிமுறையை சீ.வி.விக்னேஸ்வரன் தொடா்ந்தும் வலியுறுத்தினால் அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். என கூறியிருக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளா் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், சுமந்திரனுக்கும் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் வித்தியாசம் இல்லை என்றார். இன்று மாலை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து கூறும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாu;. இதன்போது மேலும் அவா் கூறுகையில், ஸ்ரீலங்கா அரசு தொடா்புபடும் எந்தவொரு விசாரணைப் பொறிமுறையும் தமிழ் மக்களுக்கு நீதியை தராது. கலப்பு பொறிமுறை என்றால் கூட அதில் ,இலங்கை அரசு தொடர்ப…

  24. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வீட்டு வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு வசிக்கும் சிறுமி உள்பட சகோதரிகள் மூவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார். அத்துடன், இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவரான இளைஞனின் தாயார் தானும் தாக்குதலுக்குள்ளாகியதாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் பிறிதொரு வழக்கைத் தாக்கல் செய்யவுள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர். …

  25. April 2, 2019 சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல தயாராக இருந்ததாக தெரிவித்து 11 இளைஞர்கள் புத்தளம் களப்பு அருகில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது புத்தளம் காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெண் ஒருவர் உட்பட குறித்த 11 பேரும் கடல் மார்க்கமாக பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வதற்கு ஆயத்தமான நிலையில், வான் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.