Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாற்றுத்திறனாளிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை - வடக்கு ஆளுநர் வடமாகாணத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாக கொண்டு கருவி மாற்றுத்திறனாளிகள் சமூக வள நிலையத்தினால் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திகளை வடமாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்கள் கொள்வனவு செய்வதற்கான பணிப்புரையை வழங்குவதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தீர்மானித்துள்ளார். நேற்று 26 காலை திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்திற்கான திடீர் கண்காணிப்பு விஜயத்தின்போது அம்மாச்சி உணவகத்தின் நுழைவாயில் பகுதியில் கருவி நிறுவனத்தின் உற்பத்திகளை விற்பனை செய்யும் மாற்றுத்திறனாளி ஒருவருரை சந்திக்கும் சந்தர்ப்பம் ஆளுநருக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கருவி மாற்றுத்திறன…

  2. முன்னாள் புலி உறுப்பினரை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தித்தது ஏன்? (எம்.எப்.எம்.பஸீர்) ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஆகி­யோரை கிழக்கில் வைத்து கொலை செய்ய, சதி செய்­த­தாக கூறப்­படும் விவ­கா­ரத்தில் சந்­தேக நப­ரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா சார்­பிலும் நேற்று பல முக்­கிய விட­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன. குறிப்­பாக இந்த விவ­கா­ரத்தில் முன்னாள் புலி உறுப்­பி­ன­ரான புஷ்­ப­ராஜை கிழக்கில் வைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தரப்பு சந்­தித்­த­தாக கூறப்­படும் நிலையில், அச்­சந்­திப்பு தொடர்­பி­லான தக­வல்கள் நேற்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்­வாவின் சட்­டத்­த­ரணி அஜித் பத…

  3. போராளிகளின் கோப்புகளை ‘மஹிந்த காண்பித்தார்’ - மாவை சேனாதிராஜா Editorial / 2019 மார்ச் 27 புதன்கிழமை, மு.ப. 08:00 Comments - 0 மகேஸ்வரி விஜயனந்தன் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதைத் தெளிவுப்படுத்த வேண்டும் எனக் கேட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கைது செய்யப்பட்ட போராளிகளின் முழு விவரங்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் காணப்பட்டன. அவற்றைத் தங்களுக்குக் காண்பித்தார் என்றார். 2011 மற்றும் 2012 ஆண்டுகளில், மஹிந்த, பஷில் ராஜபக்‌ஷர்களுடன் பலமுறை சந்திப்புகள் இடம்பெற்றன. இதன்போது, சிறையில் அடைக்கப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்டவர்கள், முன்னாள் போராளிகளின் விவரங்கள் அடங்கிய, ஏ…

  4. "கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்" (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) ஜனாதிபதி -பிரதமரை இணைத்துக்கொண்டு ஒரு தேசிய பொறிமுறையை அமைத்து கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அதுவே எம்மை சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுவிக்கும் என எதிர்க்கட்சி உறுப்பினர் மஹிந்த சமரசிங்க சபையில் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஒவ்வொரு தடவையும் அரசாங்கமாக நாம் ஜெனிவா சென்று அங்கு வாக்குறுதிகளை கொடுத்து, சர்வதேச பிரேரணைகளை ஏற்றுக்கொண்டு இலங்கை வந்து அனைத்தையும் மறந்துவிடுகின்றோம். முழுமையாக அனைத்தையும் கைவிட்டு ஒரு நாடாக செயற்பட முடியாது. இந்த பிரச்சினைகளை தீர்க்க ஒரு ச…

  5. தொண்டர் ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்ள அமைச்சரவை ஒப்புதல் ; விஜயகலா மகேஸ்வரன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவரது ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடக்கு – கிழக்கில் தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றுபவர்களை இலங்கை ஆசிரியர் சேவையின் 3ஆம் வகுப்பின் தரம் III இற்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பாக கல்வி இராஜங்க அமைச்சர் திருமதி. விஜயகலா மகேஸ்வரனின் வேண்டுகோளுக்கமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக…

  6. யாழ். குடாநாட்டின் நீர் பிரச்சினைக்கு தீர்வாக பாரிய திட்டம் – ஆளுநர் அறிவிப்பு யாழ்.குடாநாட்டின் நீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்கு வடமராட்சி களப்பில் இருந்து நீரை எடுப்பதற்கான பாரிய திட்டம் மிக விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வட. மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகன் தெரிவித்துள்ளார். இது யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி எனவும் அவர் கூறியுள்ளார். ஆளுநர் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், “இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் ஆறுகள், நதிகள் இல்லாத ஒரு மாவட்டம் யாழ்.மாவட்டம். இங்கு நிலத்தடி நீர் வற்றல் …

  7. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசாரணை மூலம் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் ஆவணம் யாரால் எழுதப்பட்டது என்பதை கண்டறிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் உதவியை நாடவுள்ளதாக வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்தவாரம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு (40/1) இற்கான இணை அனுசரணை வழங்குவது தொடர்பான தீர்மானத்தை அமெரிக்க முன்னாள் இராஜதந்திரியான சமந்தா பவரும், அமைச்சர் மங்கள சமரவீரவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஆனால் அதை எழுதியவர் யார் என்பது இன்றும் கேள்விக்குறியாகவே இந் நிலையிலேயே தகவல் அறியும் உரிமைச் சட்ட…

    • 3 replies
    • 1k views
  8. மன்னார் நானாட்டன் பகுதியில் 7வயதுச் சிறுமியைப் பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 40 வயதுடைய அயல் வீட்டு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று அறியமுடிகிறது. https://newuthayan.com/story/15/7-வயதுச்-சிறுமி-துஸ்பிரயோ.html

  9. உடப்பு கடலில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 33 பெரிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிடுகின்றனர். இந்த பொதிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. கைப்பற்றப்பட்ட பொதிகள் மீட்கப்பட்டு, கடற்படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன . இதன்போது, குறித்த பொதிகளிலிருந்து ஒரு தொகை புகையிலை கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிடுகின்றனர். சுமார் 33 பொதிகளில் பொதியிடப்பட்ட, சுமார் 1232.5 கிலோகிராம் எ…

  10. மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சேஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார் . வஜிராஷ்ரம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கியின் கொடுக்கல் வாங்கல் மோசடி நடவடிக்கையானது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்துக்து அமைய அவரை மையப்படுத்தியே இடம் பெற்றது என்பது அனைத்து தரப்பினரும் அறிந்த விடயம். பிணைமுறி மோடியாளர்கள் ஆட்சியில் இருக்கும் வரையில் முறையான ஒரு தீர்வு ஒருபோதும் கிடைக்கப்பெறாது. தலைமைறைவாகியுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந…

  11. கலையிழந்திருக்கும் கௌதாரி முனையினை களங்கமின்றி பாதுகாப்போம். March 26, 2019 பூநகரி, கௌதாரிமுனையில் சோழர் காலத்து மண்ணித்தலை சிவன் ஆலயம் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.விசேடமாக மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டு நில பரப்பிற்கும் கடல் பரப்பிற்கும் இடையிலான தூரமாக 2 கிலோ மீற்றர் அழகிய மணல் திட்டு பரப்பாக காணப்படுகின்றது. எனவே மண் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதோடு,ஒரு பெரிய நிலப்பரப்பு கடல் காவு கொள்ளும் நிலைமையினையும் நாம் தவிர்த்துகொள்ளலாம். விசேடமாக கண்டல் தாவரங்கள்,மணல் ம…

  12. March 26, 2019 பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள், சிவில் உரிமைகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே புதிய அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டு வருவதாக வியத்மக அமைப்பின் உறுப்பினரும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் பீடாதிபதியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ராஜா குணரத்ன தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, அதற்கு பதிலாக உருவாக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் பயங்கரவாத செயற்பாடுகளை அடக்கும் நோக்கத்தைக் கொண்டது அல்ல எனவும் மாறாக பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள், சிவில் உரிமைகள் அனைத்தையும் கட்…

  13. March 26, 2019 மனங்களில் மாற்றம் ஏற்படாதவரையில் இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை களைவது சாத்தியப்படாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி மாவட்ட இணைப்பாளர் திருமதி குமுதினி விதானகே தெரிவித்துள்ளார். கண்டியில் இண்ரர்நியூஸ் நிறுவனம் ஒழுங்கு செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான இன நல்லிணக்கம் மற்றும் பல்லின வாதம் தொடர்பான கருத்தரங்கிலேயே அவர் மேற்கண்டவாதறு தெரிவித்துள்ளார். நாம் மனித உரிமைகள் ஆணைக்குழு என்ற வகையில் பாரிய முயற்சி எடுத்தாலும், சட்டத்தால் எதனையும் சாதிக்க முடியாது எனத் தெரிவித்த அவர் தனி நபர் …

  14. யாழ். அளவெட்டி பகுதியில் மரண சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் நகை , பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளது. யாழ்.அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் இடம்பெற்ற டிப்பார் - மோட்டார் சைக்கிள் விபத்தில் அளவெட்டி பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான நாகராசா நிதர்சன் (வயது 21) என்பவர் உயிரிழந்தார். அளவெட்டியில் உள்ள அவரது வீட்டில் பூதவுடல் வைக்கப்பட்டு மரண சடங்குக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இரண்டு மோட்டர் சைக்கிளில் வந்த நான்கு பேர் முகங்களை மறைத்து துணியால் கட்டியவாறு கைக் கோடரி , வாள் என்பவற்றுடன் வீட்டிற்க…

  15. இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் கிராமமொன்றில் இரவு நேரத்தில் சுமார் 2 அடி உயரமுள்ள குள்ள நபர்கள் நடமாடுவதாகவும், அங்குள்ள வயல்வெளி பகுதிகளில் இந்த நடமாட்டம் காணப்படுவதாகவும் பொது மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், கருணாதிலக் என்ற விவசாயி தனது தனது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களுக்கு காவலாக கடந்த பெப்ரவரி 2 ம் திகதியன்று வயல்வெளிக்கு சென்ற சமயத்தில், இளைப்பாறுவதற்காக அங்குள்ள மரத்தடியில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது, சுமார் இரண்டு அடி உயரமுள்ள, நீளமான தலைமுடிகளுடன், சிவப்பு நிறத்துடன் கூடிய முகம் மற்றும் உதடுகள் கொண்ட உருவம் தென்பட்டுள்ளது. கருணாதிலக் அதனை பார்த்து யார் நீ என்று கேட்டதற்கு, எந்த வ…

  16. குடியுரிமை துறப்பு குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் பேசவுள்ளார் கோத்தா சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இந்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிடடுள்ளன. கலிபோர்னியாவில் நடைபெறவுள்ள திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்கச் செல்லும் அவர், இந்தப் பயணத்தின் போது அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையைத் துறக்கும் ஆவணங்களை கடந்த 6ஆம் நாள் அமெரிக்கத் தூதரகத்தில் கையளித்துள்ளார். இந்த விண்ணப்பம் தற்போது அமெரிக்க அதிகாரிகளின் பரிசீலனையில் இருப்பதாக …

    • 0 replies
    • 332 views
  17. இராணுவ கூட்டுப்பயிற்சியில் கலந்துகொள்ள இந்திய படை இலங்கை வருகை இலங்கை மற்றும் இந்திய இராணுவம் பங்குகொள்ளும் கூட்டு இராணுவப் பயிற்சி இம் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து ஏப்பிரல் மாதம் 8 ஆம் திகதி வரை தியத்தலாவையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சி வருடாந்தம் இந்தியா மற்றும் இலங்கையில் ஒரு சுழற்சி முறையில் நடைபெறுகின்றது. மித்திர சக்தி – ஏ இந்தியாவின் புனே நகரில் நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியில் 120 இலங்கை இராணுவத்தினர் பங்குபற்றினர். இந்த வருடம் 11 அதிகாரிகள் உட்பட, 120 இந்திய இராணுவத் தொகுதியொன்று இலங்கை இராணுவத்துடன் இரண்டு வார கால பயிற்சியில் ஈடுபடுவதற்காக இந்திய விமானப்படை விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். …

  18. தமிழர்களை மழுங்கடிக்கவே பிரதமர் விரும்புகிறார் : சீ.யோகேஸ்வரன் நாட்டில் பெரும்பான்மையினர் சிறந்த வாழ்க்கையை வாழவேண்டும் எனவும் தமிழர்கள் மழுங்கடிக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருதுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். கிழக்கு அபிவிருத்தி செயலணியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயும் விசேட கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது அக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சீ.யோகேஸ்வரன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வாழைச்சேனை கடதாசி ஆலை 195…

  19. 8 இந்திய மீனவர்கள் விடுதலை : விடுதலையானவரில் ஒருவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டு இருவருட சிறைத் தண்டனை இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 8 மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றால் விடுவிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் சட்டமா அதிபரின் பணிப்புக்கு அமைவாக மீண்டும் கைதுசெய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்திய மீனவர்கள் 8 பேரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீரிகம தடுப்பு முகாமுக்கு இந்தியாவுக்கு கொண்டு செல்வதற்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். விடுவிக்கப்பட்ட மீனவர்களில் ஒருவர், இதே குற்றச்சாட…

  20. வடக்கு கிழக்கு மக்களிடம் ஐ.நா. கண்காணிப்புடன் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ; எம்.கே.சிவாஜிலிங்கம் இந்த நாட்டில் ஒருமித்து வாழ்வதா? அல்லது தனித்து வாழ்வதா? என வடக்கு கிழக்கு மக்களிடம் ஐ.நா. கண்காணிப்புடன் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகத்தின் செயற்பாடு தமிழர்களுக்கு பாரிய தோல்வியைக் கொடுத்துள்ளதுடன், யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் தமிழா்கள் நீதியை எதிர்பார்க்கும் அவலம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் சிந்திக்க மறந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இத…

  21. போர்க்கப்பலில் பணியாற்றுவதற்காக 110 கடற்படையினர் சீனா பயணம்? இலங்கை கடற்படைக்கு சீனா வழங்கவுள்ள போர்க்கப்பலில் பணியாற்றுவது குறித்து சிறப்பு பயிற்சிகளை பெறுவதற்காக 110 கடற்படையினரை சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். குறித்த கடற்படையினரை இம்மாத இறுதிக்குள் சீனாவுக்கு அனுப்பவுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த போர்க்கப்பல் இவ்வாண்டு இறுதிக்குள் கொண்டுவரப்படுமெனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கடற்படையில், 2015ஆம் ஆண்டு வரை Tongling என்ற பெயரில் இணைத்துக் கொள்ளப்பட்ட Jangweil வகையைச் சேர்ந்த ஏவுகணைப் போர்க்கப்பலே இலங்கை கடற்படைக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்…

  22. பாலித ஆரியவன்ச கலப்பு நீதிமன்றக் கோரிக்கை, மீண்டுமொரு கறுப்பு ஜூலையைத் தோற்றுவிக்க வழிவகுக்குமென்று எச்சரித்துள்ள டிலான் பெரேரா எம்.பி, இலங்கைப் பிரஜை என்ற நிலைப்பாட்டிலிருந்து செயற்படுமாறு சுமந்திரன் எம்.பிக்கு அறிவுறுத்தியுள்ளார். பதுளை ஹாலி-எலயில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கையில் யுத்தக்குற்றம் இடம்பெற்றதாகத் தெரிவித்து, வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருப்பதாகச் சுட்டிக்காட…

  23. மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 130 ஆவது இடம்! உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 130 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு இன்றைய தினம்(புதன்கிழமை) இந்த பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பின்லாந்து இரண்டாவது தடவையாகவும் முதல் இடத்தினைப்பிடித்துள்ளது. உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை நோர்டிக் நாடுகள் பெற்றுள்ளன. நாட்டில் வாழும் மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைத் தரம், ஆயுட்காலம், சமூக ஒத்துழைப்பு மற்றும் இலஞ்ச ஊழல் ஆகிய விடயங்களைக் கருத்திற்கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/மகிழ்ச்சியான-நாடுகளின்-ப/

    • 16 replies
    • 1.8k views
  24. அடிப்படைத் தேவைகளுக்கு போராட வேண்டிய நிலை - வீட்டுத்திட்ட நிதியை வழங்குமாறு வவுனியாவில் ஆர்ப்பாட்டம் போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் நிறைவடைகின்ற போதிலும் எவ்வித பலனுமில்லை தமிழர் தாயகப் பகுதிகளில் இன அழிப்பு போர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், போரினால் வீடுகளை இழந்து நிர்க்கதியாகியுள்ள மக்கள் வீட்டுத்திட்டம் வழங்குமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், வவுனியா - பாரதிபுரத்தில் வீட்டுத்திட்டத்துக்கான நிதி வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். வவுனியா � பாரதிபுரத்தில் கடந்த…

    • 0 replies
    • 203 views
  25. நாட்டில் கடந்த முப்பது வருடகாலமாக தொடர்ந்த யுத்தமானது ஒரு இனத்தின் உரிமைக்கான போராட்டமாக முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், யுத்த முடிவில் அது பல பாதக விளைவுகளையும் ஏற்படுத்தி இருந்தது. இதனை நடுநிலையாக சிந்திக்கும் எவரும் மறுதளிக்க முடியாது. அத்துடன் யுத்தம் முடிந்த பிற்பாடு அந்த யுத்தம் ஏற்படுத்தி சென்ற பாதகமான வடுக்கல் இன்று வரை தொடர்வது கவலையளிக்கின்றது. அந்தவரிசையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, வெள்ளைக்கொடி விவகாரம், இராணுவ அத்துமீறல்கள், காணி அபகரிப்புகள், மனித உரிமையை மீறும் இராணுவத்தின் செயற்பாடுகள் எனத் தொடரும் பட்டியலில் இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் எனும் தலைப்பும் ஒன்றாகும். இக் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வை போராட்டங்கள் மூலமும், …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.