ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143266 topics in this forum
-
கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்விற்கு எதிராக நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளராக மீண்டும் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாந்தர அதிகாரியான எம்.கே.எம். மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று வழங்கியவிசேட தீர்ப்பின் பிரகாரம் அவர் மீண்டும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக தான் ஏலவே பணியாற்றி வந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தான் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக அவர் திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்நிலையில், ஒரு மாத காலத்தின் பின்னர் குறித்த வழக்கிற்கான தீ…
-
- 0 replies
- 808 views
-
-
புலனாய்வு துறையில் அதிகளவு முஸ்லிம்கள் இருந்து, புலிகளை அழித்தொழிப்பதில் பெரும் பங்காற்றினர்புலனாய்வுத்துறையில் முஸ்லிம்கள் அதிகளவில் இணைந்து நாட்டுக்காகப் பாரியளவில் பங்காற்றியுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கண்டி மாவட்டத்தில் உடுநுவர எலமல்தெனியவில் “எலிய” அமைப்பினால் தொழிலதிபர் ஏ.எல்.எம். பாரிஸின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார் கண்டி மாவட்டத்தின் சகல பகுதிகளிலிருந்தும் பெருந்தொகையான முஸ்லிம்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பராளுமன்ற உறுப்பினர்களான மகிந்தானந்த அளுத்கமகே, கெஹலிய ரம்புக்வ…
-
- 40 replies
- 2.1k views
- 1 follower
-
-
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றத்துக்குப் பின்னர் நிறுவப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், அதன் ‘மங்கல’ வரவு – செலவுத் திட்டத்தை, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் இன்று (25) சமர்ப்பிக்கவுள்ளது. அடுத்த வருடத்தில் பல தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியகூறுகள் தென்படுவதால், மக்களுக்கு நிவாரணங்களை அள்ளி வழங்கக்கூடிய வகையில், இந்த வரவு – செலவுத் திட்டம் அமையலாமென, பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர். அதுமட்டுமன்றி, நாட்டில் வறுமையை ஒழிக்கும் வகையிலான திட்டங்களை கொண்டிருக்கும் வகையிலேயே, இன்றைய வரவு – செலவுத் திட்ட யோசனைகள் அமைந்திருக்குமென்றும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டுள்ள…
-
- 2 replies
- 1.5k views
-
-
எல்ரீரீஈ பயங்கரவாதத்திலிருந்து எமது தாய்நாடு விடுவிக்கப்பட்ட இராணுவ வெற்றியின் பத்து வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு இராணுவ நினைவு வருடத்தினை பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஆட்புல எல்லை மற்றும் இறைமையை பாதுகாப்பதற்காக உயிர்நீத்த, காணாமற்போன மற்றும் அங்கவீனமுற்ற இராணுவத்தினருக்கு தேசத்தின் கௌரவத்தினை செலுத்துவதற்கும் நினைவுகூருவதற்கும் ஒவ்வொரு வருடமும் இராணுவ நினைவு மாதம் பிரகடனப்படுத்தப்பட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இராணுவ வெற்றிக்கு பத்து வருடங்கள் பூர்த்தியடையும் இந்த 2019ஆம் ஆண்டில் இராணுவ நினைவு வருடத்தின…
-
- 2 replies
- 434 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) தனியார் மயப்படுத்தப்பட்ட லிபரல் கொள்கையுடைய வரவு செலவு திட்டத்தையே நிதி அமைச்சர் முன்வதுள்ளார். இந்த வரவு செலவு திட்டம் ஒன்று கனவு மாளிகையையே என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நிதி அமைச்சர் மங்கள சமரவீர பாரளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த வரவு செலவு திட்டம் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் கருத்தினை தெரிவிக்கும் போதே கட்சியின் ஊடகப்பேச்சாளர் விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில். இம்முறை வரவு செலவு திட்டம் மக்களுக்கு சகல விதத்திலும் நன்மையான ஒன்றாக அமையும் என ஆரம…
-
- 0 replies
- 275 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம் வசீம்) கடனிலிருந்து நாட்டினை எவ்வாறு மீட்டெடுப்பது, நாட்டின் வருவாயை எவ்வாறு அதிகரிப்பது, வேலைவாய்ப்புகளை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து எந்தத் திட்டங்களையும் முன்வைக்காத வரவுசெலவு திட்டத்தையே நிதி அமைச்சர் முன்வைத்துள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அதேபோல் இந்த வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு நன்மைகள் உள்ளதா என்பதை கூறுவதை விடவும் தீமைகள் இல்லை என்று கூறலாம். ஆனால் இந்த வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து நாம் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/51232
-
- 0 replies
- 187 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption சித்தரிப்புக்காக கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிபிட்டிய பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து காணாமல் போனதாக கூறப்படும் பெறுமதியான மாணிக்கக்கலை பொலிஸார் மீட்டுள்ளனர். பன்னிபிட்டிய - அரவ்வாவல பகுதியிலுள்ள மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டிலிருந்த, சுமார் 500 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல், கடந்த நவம்பர் மாதம் 5ஆம் திகதி காணாமல் போயிருந்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன்படி, பேலியகொடை குற்றத் தடுப்பு பிரிவு இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ம…
-
- 0 replies
- 246 views
-
-
வடமாகாணத்தின் அசமந்த போக்கின் காரணமாக தடைப்பட்டிருந்த டிப்ளோமா பட்டதாரிகளுக்கான நியமனங்களுக்கு, விண்ணப்பங்களை கோர வட மாகாணத்திற்கு, மத்திய அரசினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் தலைவரும் முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். வடமாகாண உடற்கல்வி ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்களுக்கான விண்ணப்பங்களும், பகுதி நேர ஆங்கில ஆசிரியர்களும் இவ் நடைமுறையின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே வேளை மீன்பிடிதுறைக்கான டிப்ளோமா பயின்ற கற்கை நெறியாளர்களும் இதன் மூலம் உள்வாங்கப்பட உள்ளதாகவும் அங்கஜன் …
-
- 0 replies
- 199 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் கம்பெரலிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி புனரமைப்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது என குற்றம் சுமத்தியுள்ள பொது மக்கள் குறித்த வீதி புனரமைப்பு பணிகள் தொடர்பில் மாவட்ட மட்ட உயரதிகாரிகளை கவனம் செலுத்துமாறு கோரியுள்ளனர். மேற்படி இத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் பல கிராமங்களில் வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் கீழ் ஒவ்வொரு மாவட்டச் செயலகங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் மாவட்டத்தில் சில வீதிகள்…
-
- 0 replies
- 151 views
-
-
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய நிகழ்ச்சித்திட்டம் நாளை நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். நாளை (06) முற்பகல் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெறும் கலந்துரையாடலின்போது இந்நிகழ்ச்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்காக விஞ்ஞான பூர்வமான முறைமைகளை பயன்படுத்துவது குறித்து இன்று (05) முற்பகல் பத்தரமுல்லை, வோட்டஸ் எர்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற நிபுணர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெர…
-
- 0 replies
- 191 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் என்றுமில்லாதவாறு யானைகளினால் வான் பயிர்கள் உட்பட பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று(04-03-2019) இரவு குறித்த பகுதிக்குள் நுழைந்த மூன்று யானைகள் இவ்வாறு பயன்தரும் மரங்களை சேதமாக்கியுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். யானைகளை துரத்த முற்பட்டபோது அவை தாக்க முற்பட்டதாகவும், கிராமத்தவர்களின் உதவியுடன் யானைகளை விரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். யானைகள் வளர்ப்பு யானைகள் போன்றே செயற்பட்டதாகவும், மக்கள் மத்தியில் பழகிய யானைகள் போலவே கா…
-
- 0 replies
- 249 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.செம்மணி மற்றும் அதனை அண்டிய வீதிகளில் ‘ஆவா 001 ராஜ்ஜியம் ‘ என கறுப்பு வர்ணத்தில் எழுதப்பட்டு உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழில்.ஆவா குழு எனும் பெயரில் இயங்கும் குழுவொன்று வாள் வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு வாள் வெட்டுக்களில் ஈடுபட்டு வந்தவர்கள் எனவும் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனவும் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரு…
-
- 0 replies
- 171 views
-
-
கிளிநொச்சி கண்ணகி நகர் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு March 5, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி கண்ணகி நகர் பகுதியில் பாவனைக்கு உதவாத வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்று(05-03-2019) விசேட அதிரடிப்படையினரால் குறித்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகி நகர் கழிவு நீர் செல்லும் ஆற்றுப்பகுதியில் வெடி பொருட்கள் இருப்பதை அவதானித்த கிராம மக்கள் அக்கராயன் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து அக்கராயன் காவல்துறை அதிகாரிகள் குழு நீதிமன்ற அனுமதியை பெற்று விசேட அதிரடிப்படையினர் மூலம் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் போது எல்எம்ஜி ரவைகள் ஒரு தொகுதி, மோட்டார் எறிகனை ஒன்று…
-
- 0 replies
- 356 views
-
-
11இளைஞர்கள் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டமை, கோத்தபாயவுக்கும் தெரியும்…. March 5, 2019 கொழும்புக்கு அண்மித்த பகுதியில் பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரனாகொட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவையும் இந்த விவகாரத்தில் சிக்கவைத்துள்ளார். வசந்தகரனாகொட தான் கைதுசெய்யப்படுவதை தவிர்ப்பதற்காக நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவில் கோத்தாபய ராஜபக்சவிற்கும் இந்த விவகாரம் குறித்து தெரியும் என குறிப்பிட்டுள்ளார். 11 தமிழ் இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட விடயம் எவ்வாறு இடம்பெற்றது என தனது மனுவில் குறிப்பிட்டுள்ள வசந்தகரனாகொட கொழும்பில் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்பட…
-
- 0 replies
- 426 views
-
-
வட மாகாண பாடசாலைகளில் நிறுவனங்களின் புத்தகங்கள் ,வெளியீடுகள் விற்பனை செய்ய தடை – GTN வடக்கு மாகாண பாடசாலைகளில் நிறுவனங்களின் புத்தகங்கள் ,வெளியீடுகள் நேரடியாக விற்பனை செய்யப்படுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பான சுற்றறிக்கை கல்வி சார்ந்த சகல உயர் அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: வடக்கு மாகாண பாடசாலைகளில் பல்வேறு நிறுவனங்களின் வெளியீடுகள் ,புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறன. இது பாடசாலைகளில் அதிகமா நடைபெ…
-
- 0 replies
- 318 views
-
-
வரவு செலவுத்திட்டத்தில் வறிய மக்களை மேம்படுத்தும் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன March 5, 2019 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை நிதிஅமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கபடவுள்ள நிலையில் இந்த வரவு செலவுத்திட்டம் வறுமை நிலையில் உள்ள மக்களை மேம்படுத்துவது தொடர்பான பல திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இம்முறை வரவு செலவுத்திட்டம் பொதுமக்களின் ஆலோசனைகளை பெற்று தயாரிக்கப்பட்டதாகவும் வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதம் நாளை புதன்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வரவு செலவுத்திட்ட பாராளுமன்ற குழுநிலை விவாதங்க…
-
- 0 replies
- 286 views
-
-
சட்டபூர்வமான புலனாய்வு செயற்பாடுகளையே முன்னெடுத்தோம் – என்கிறார் கோத்தா போரின் இறுதிக்கட்டத்தில் தனது கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகள் அனைத்தும் சட்டபூர்வமானவையாகவே இருந்தன என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் “எலிய” அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய செயற்பாடுகளை ஒழிப்பதற்கு அப்போது, பல புலனாய்வு அமைப்புகள் பணியாற்றின. அந்த காலத்தில் சிறிலங்கா புலனாய்வு அமைப்புக்களின் செயற்பாடு மற்ற நாடுகளில் இருந்து வேறுபட்டதாக இருக்கவில்லை. சிலர் கூறுவது போன்று, எமது அரசாங்கத்தில், வெ…
-
- 1 reply
- 459 views
-
-
இன்று கொழும்பு வருகிறார் நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மரியன் ஹகென் இரண்டு நாட்கள் பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார். இந்தப் பயணத்தின் போது அவர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நிதியமைச்சர் மங்கள சமரவீர, உள்ளிட்டோரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காணாமல் போனோருக்கான பணியகம், மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக மற்றும் வணிகப் பிரதிநிதிகளையும் நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்தித்துப் பேசவுள்ளார். அத்துடன் வடக்கிற்கும் இவர் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளார். http://www.puthinappalakai.net/2019/03/0…
-
- 0 replies
- 250 views
-
-
சிறிலங்காவில் திரவ எரிவாயு மின் திட்டங்கள் – கண்வைக்கும் சீனா சிறிலங்காவின் மின் விநியோக கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு, திரவ எரிவாயு மின்உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு உதவத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் மின்சக்தி மற்றும் வணிக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்த சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான், இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளார். சிறிலங்காவில் எரிவாயு மின்நிலையங்களை அமைப்பது குறித்து இந்தச் சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அம்பாந்தோட்டையில் எரிவாயு மின்நிலையம் ஒன்றை சீனாவின் உதவியுடன் அமைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், சீனாவின் பிரதான மின் நிலையங்களைப் பார்வையிடு…
-
- 0 replies
- 326 views
-
-
அமெரிக்காவின் கொல்லைப் புறமாக மாறும் சிறிலங்கா சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அமெரிக்காவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளனர் என்றும், இதனால், அமெரிக்காவின் கொல்லைப் புறமாக சிறிலங்கா மாறும் என்றும் ஜேவிபி தெரிவித்துள்ளது. ஜேவிபியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில், “இதுபோன்ற அடிபணிவு பாதுகாப்பு உடன்பாடுகளில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்காவின் அரசாங்கங்களுக்கு அதிகாரமில்லை. எனவே, அரசாங்கம் உடனடியாக இந்த முயற்சியை நிறுத்த வேண்டும். அதிகாரபூர்வமாக ஒரு இராணுவத் தளம்…
-
- 0 replies
- 660 views
-
-
திருப்பதிக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, துலாபாரம் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தார். திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க இந்தியாவுக்கு விஜயம் செய்த பிரமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பதிக்கு அருகிலுள்ள ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் சென்றடைந்தார். அங்கிருந்து நேரடியாக திருமலைக்கு வந்தபோது அவருக்கும் அவரது பாரியாருக்கும் தேவஸ்தான அர்ச்சகர்கள் ஆலய பாரம்பரிய முறைகளில் வரவேற்பு அளித்தனர். அத்துடன் இன்று காலை, வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்வதற்கு முன்னர் ரணில், துலாபாரம் எனப்படும் சடங்கை நிறை…
-
- 11 replies
- 1.6k views
- 1 follower
-
-
அதிகாரப்பகிர்வு குறித்து ஆராய விசேட குழு Editorial / 2019 மார்ச் 01 வெள்ளிக்கிழமை, மு.ப. 09:28 Comments - 0 அதிகாரப்பகிர்வு தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய உடனடி நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, நால்வர் கொண்ட அணியொன்று நியமிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (28) மாலை, ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் பிரதானிகளது கலந்துரையாடலின் போதே, இந்தக் குழு நியமிக்கப்பட்டதென, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன், தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். நேற்றை இந்தக் கூட்டத்தில், புதிய அரசமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக…
-
- 0 replies
- 305 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் 25 இலக்கத் தகடுகள் மீட்பு Editorial / 2019 மார்ச் 04 திங்கட்கிழமை, பி.ப. 03:13 Comments - 0 செ.கீதாஞ்சன் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் 25 வெவ்வேறு இலக்கத் தகடுகள் நேற்று (03) மீட்கப்பட்டுள்ளன. வருடாந்த சிவராத்திரி திருவிழா வழிபாட்டுக்காக நேற்று (03) முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் ஆலயவளாகம் ஒன்றில் பொதுமக்களால் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது குறித்த ஆலயவளாகப் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் 25 வெவ்வேறு இலக்கங்களுடன் தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதேச மக்கள் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். முள்ளிவாய்க்காலில் இறு…
-
- 0 replies
- 403 views
-
-
திருக்கேதீஸ்வரம் கோயில் வழமைக்கு திரும்பியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்துக்களால் மஹா சிவராத்திரி விரதம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் அமைக்கப்பட்ட வளைவு மத வன்முறையாளர்களால், நேற்று உடைத்து நொறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த தாராறு மக்கள் மத்தில் அச்சத்தையும் குழப்ப நிலையையும் தோற்றுவித்திருந்தன. எனினும் தற்போது கோயில் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் சுமூகமான நிலை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மேலும் சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் கோயிலில் இன்று இரவு விசேட வழிபாடுகள் இட…
-
- 3 replies
- 1.2k views
-
-
‘காணாமலாக்கப்பட்டவர்களின் இறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது’ எஸ்.நிதர்ஷன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காணாமலாக்கப்பட்டவர்களின் இறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுமாறு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவரும் முன்னாள் மாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இறுத்திக் கட்ட யுத்தம் இடம்பெற்ற கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த போது அவர்களின் காணி உறுதிப்பத்திரங்கள் பலவும் தொலைந்து விட்டன. அதேநேரம் அவர்களில் அதிகமானவர்களது காணிகள் போமிற் காணிக…
-
- 0 replies
- 240 views
-